Jump to content

மார்ச் மாதம் உள்ளூராட்சித் தேர்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
உள்ளூராட்சி தேர்தல், எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், மத்திய மாகாண சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தல், எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், மத்திய மாகாண சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

   

புதிய முறைமையில் தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், தொகுதிவாரி மற்றும் மற்றும் விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நவம்பர் அல்லது ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என பல்வேறு வகையிலான ஊகங்கள் வெளியாகியிருந்தன.

ஒரே நாளில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும் நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் அடிப்படையில் பெரும்பாலும் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. புதிய தேர்தல் முறையின்படி 335 உள்ளூராட்சி மன்றங்களுக்குள் 25 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 271 பிரதேச சபைகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=139883&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.