Jump to content

இறுதிப் போரில் இந்திய இராணுவம் பங்கேற்கவில்லை! - என்கிறது இராணுவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா  தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல தகவல்களை கருணா  அண்மையில் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல தகவல்களை கருணா அண்மையில் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

   

அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பாக கருணா வெளியிட்ட கருத்தை முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா உடனடியாக மறுத்திருந்தார். குறித்த நேர்காணலில் இந்தியப்படையினரின் ஒரு பிரிவு வவுனியாவில் நிலைகொண்டிருந்ததாகவும், ரேடார் நடவடிக்கைகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அவர்களே மேற்கொண்டதாகவும் கருணா தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகவும் தற்போது ராணுவ அதிகாரிகள் கடுமையான மறுப்பை வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் தொடர்பாக கருணா வெளியிடும் தகவல்கள் அனைத்தும் பொய் எனவும், இந்தியப் படையினர் ஒருபோதும் வவுனியாவில் நிலைகொண்டிருக்கவில்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ராணுவத்தினரை மேற்கோள்காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=139889&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...தமிழரசு! நலம் தானா?

இந்தியா மஞ்சள் வேட்டிக்கு 'நீலம்' போட வேண்டிய நேரம் சரியா அமைஞ்சிட்டுது!

நாங்களும் நெத்தியில நாமம் போட வேண்டிய  நேரமும் வந்திட்டுது!:love:

Link to comment
Share on other sites

கருணாவின் செவ்வியை கேட்கவில்லை. ஆனால் இரசாயன ஆயுதத்தை நேரடியாகவோ அல்லது பின்னிருந்தோ களத்தில் நின்று செய்தது இந்திய இராணுவமே என்பது ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். மகிந்தவுக்கு அடிக்கடி மின்சார நாற்காலியைப் பற்றி பேசும் தைரியத்தை வழங்குவதும் போரில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பு என்கிற விடயம்தான். 

இப்போது ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப் போகிறது. ஆகவே பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் படத்தில் 'குருசேத்திரப் போர்க்களத்தில்' கர்ணன் இறந்து விட .....அர்ச்சுனன் கர்ணனைத் தான் கொன்று விட்டதாகப் புலம்புகின்றார்!

அப்போது.. கிருஷ்ணன் கூறுகின்றான்!

அர்ஜுன , தனியொருவனாக  உன்னால் அவனைக் கொன்றிருக்க முடியுமா?

உனக்கு முன்னே பல பேர் அவனைக் கொன்று விட்டார்கள்!

நீ செத்த பாம்பை அடித்து விட்டு... நான் தான் கொன்றேன்..நான் தான் கொன்றேன் என்று வீணே அரற்றுகிறாய்!

இலங்கை இராணுவமும் அந்த அர்ஜுனனைப் போலத் தான் !<_<

Link to comment
Share on other sites

புலிகளின் வெற்றியே இப்படி ஒரு விம்பத்தை தம்மை பற்றி கட்டிஎழுப்பினதுமாத்திரம் அல்லாமல் மக்களையும் நம்பவைத்து கடைசியில் தாங்களும் அந்த விம்பத்தை நம்ப தொடங்கிவிட்டார்கள் .

பாவம் அப்பாவி மக்கள் கடைசியில் அவர்கள் தான் இதனால்  பலியானார்கள் .

மகிந்த அரசு என்ன செய்தது என்று போர் பற்றி தெரிந்தவர்களுக்கு விளங்கும் .

அத்திவாரம் இல்லாத அந்த கோட்டை நாலு தட்டுடன் உடைந்துவிழும் என்று பலருக்கு தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வெற்றியே இப்படி ஒரு விம்பத்தை தம்மை பற்றி கட்டிஎழுப்பினதுமாத்திரம் அல்லாமல் மக்களையும் நம்பவைத்து கடைசியில் தாங்களும் அந்த விம்பத்தை நம்ப தொடங்கிவிட்டார்கள் .

பாவம் அப்பாவி மக்கள் கடைசியில் அவர்கள் தான் இதனால்  பலியானார்கள் .

மகிந்த அரசு என்ன செய்தது என்று போர் பற்றி தெரிந்தவர்களுக்கு விளங்கும் .

அப்போ  முரளிதரனுக்கு ஒன்றும் தெரியாதா??

அவர் சொல்வதை நீங்களே நம்பாவிட்டால் பாவம் அவர் என்ன செய்வார்??

Link to comment
Share on other sites

அப்போ  முரளிதரனுக்கு ஒன்றும் தெரியாதா??

அவர் சொல்வதை நீங்களே நம்பாவிட்டால் பாவம் அவர் என்ன செய்வார்??

எந்த புலியும் உண்மை சொன்னதாக சரித்திரம் இல்லை .ஒன்றும் தெரியாத வாலுகளும் அதை நம்பி ஒற்றைகாலில் நிற்பது அதை பிட வேடிக்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த புலியும் உண்மை சொன்னதாக சரித்திரம் இல்லை .ஒன்றும் தெரியாத வாலுகளும் அதை நம்பி ஒற்றைகாலில் நிற்பது அதை பிட வேடிக்கை .

சரி  நீங்க  சொல்லுங்க  அரிச்சந்திரரே..

இந்திய ராணுவம் பங்கெடுத்ததா? இல்லையா?

அரிச்சந்திரன் பக்கத்த வீடு மட்டும் தான் என்று சொல்லப்படாது....tw_dizzy:

Link to comment
Share on other sites

நான் அறிந்த வரையில் வேறு எந்த நாட்டு இராணுவமும் போரில் நேரடியாக பங்குபற்றவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரை இந்திய இராணுவம் போரில் நேரடியாக பங்குபற்றியுள்ளது.

நான் 80 களில் வெளிநாட்டிற்கு ஓடிவரவில்லை, 

Link to comment
Share on other sites

போர் முடிவிற்கு சில நாட்களின் முதல் நடேசன்  தமிழ் நெற் இற்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார் .

அப்பவும் இந்தா பார் அடியை என்பது போலதான் அவர் பேட்டி இருந்தது .LTTE பிறகு என்று ஒரு கேள்விக்கே இடம் இல்லையென்றார் .இதே போல இளந்திரையனும் இராணுவம் மன்னார் வந்தால் நாம் மடுவில் நிற்போம் என்றார் .கடைசி நாள் சூசை கத்தியது இப்பவும் காதில் கேட்குது .பிறகு வெள்ளை கொடி பிடித்ததும் அனைவரும் அறிந்தது .

போரின் மற்ற பக்கம் அறியாமல் இருந்தார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது தலைவரால் அவரவர் முடிவை எடுங்கள், "சண்டைபிடிக்கிறதெண்டால் சண்டை பிடியுங்கோ  சரண்டைகிறதெண்டால் சரண்டையுங்கோ" என்று சொல்லப்பட்டதோ அன்றே புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. 

அதன் பிறகு நடைபெற்றதெல்லாம் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட முடிவு. 

இதுதான் எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் வேறு எந்த நாட்டு இராணுவமும் போரில் நேரடியாக பங்குபற்றவில்லை .

ஐயா

இப்ப கூட இல்லை என்று உங்களால் சொல்லமுடியவில்லை

ஒரு பாதுகாப்புக்கு நானறிந்தவரையில் என்று தான் எழுதுகின்றீர்கள்

அப்படியென்றால் அது நிச்சயமற்றது

இதையே நானறிந்தவரையில் இந்தியராணுவம் பங்கு பற்றியது என நான் எழுதினால்

பொய்

புரட்டு

கற்பனை

பிம்பம்

வாலுகள் என்கிறீர்கள்..

எந்த அடிப்படையில்....?

உங்களது நானறிந்தவரையில் என்ற உத்தரவாதத்திலா.......??

இது எவ்வளவு காதில் பூச்சுற்றல்....

Link to comment
Share on other sites

எழுதும் போது கொஞ்சம் அறிவு பூர்வமாக எழுதிவந்தால் பிரச்சனை வராது .யாழில் பிரச்சனயே அதுதான் .அநேகம் கொமடி பீசுகள் உலாவும் இடம் .இப்ப கூட இடையில் ஒருவர் வந்து போகின்றார் .

இந்திய இராணுவம் நேரிடியாக வந்தது என்றால் அதை சொல்லும் நீங்கள் தான் அதற்கு ஆதாரத்தை நீங்கள் தான் வைக்கவேண்டும் .அதைவிட்டு வராததற்கு ஆதாரம் கேட்டால் ? 

என்ன எழுதுகின்றேன் என்று தெரிந்து எழுதுங்கள் இல்லாவிட்டால் நேரம் சுத்த வேஸ்ட் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lankan News Photo From : LTTE targeted the Indra II Radar system at the airbase

இந்த படம் கிளிநொச்சில் எடுக்கபட்டது 
இலங்கை இரணுவ தளத்தில் இருந்து என்னால் எடுக்க பட்டது.

இது என்ன ?
இது என்ன ஒப்பந்த அடிப்படையில் வெளியில் போகும் ?

என்பதெல்லாம் சாதாரண  ஆறு அறிவு இருப்பவர்களுக்கு புரிய கூடியது. 

இது இந்திரா 2 
இந்திர 1 வவுனியாவில் வைத்து கரும்புலிகளால் தாக்கபட்டது. 

(தயவு செய்து ஆறறிவும் செயற்பாட்டில் இல்லாதவர்கள் இது பற்றி மேற்கொண்டு (எனது கருத்து பற்றி) விவாதிக்காதீர்கள். நீலத்திட்கும் சிகப்ப்பிட்கும் உள்ள வித்தியாசத்தை நாய்களுக்கு விளங்க படுத்த கூடிய அறிவு மட்டும் எனக்கு இருந்தால் .... நான் உலகு அறிந்த மிருக வைத்தியராக இருப்பேன். அப்படி இல்லை எனும்போதே எனது அறிவு பற்றாகுறை புரிய வேண்டும். பெரிய மனது பண்ணி எனது கருத்து பற்றி விவாதிக்காதீர்கள்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வுனியாவில் தாக்கபட்டதும் இந்திரா 2 தான் ...
நான் எதோ வேறு ஞாபகத்தில் 1 என்று எழுதிவிட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால்..ஐநா பணியாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு மக்களை குறி வைத்து நடத்தப்பட்ட எறிகணை மற்றும் ராக்கெட் தாக்குதல்கள். அதனை புலிகளே செய்திருக்க முடியாது என்பது உலகத்திற்கு வெளிச்சம். அந்த வகையில்.. கருணா கும்மான் எடுத்து விட்ட குற்றச்சாட்டு என்பது இந்திய படைகளின் மீதான குற்றச்சாட்டாக அமையின் அது போர்க்குற்றமாக நிரூபணமாகும். ஆக.. சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று போனால் அசோகச் சக்கரத்தின் அசிங்கம் மீண்டும் ஒரு முறை உலக அரங்கில் பிரதிபலிக்கும். வெறுமனவே சிங்கள வாளேந்திய சிங்கம் மட்டுமன்றி அசோகச் சக்கரமும் சேர்ந்து அசிங்கப்படும் நிலையில்.. ஹிந்திய ஆளும் வர்க்கம் சர்வதேச விசாரணை.. போர்க்குற்ற விசாரணை என்பதை.. கடும் தொனியில் எதிர்க்க வகை செய்யும் முறையில் தான் கருணாவை குளற வைத்துள்ளது சிங்களம். 

ஏலவே புகழ்விரும்பி.. ஊடகமாக உள்ள புதிய தலைமுறை புகழ் தேடி..சிங்களத்தின் ஊது குழலாக மாறி இருக்கும் நிலையில்.. கருணா கும்மான் அதன் முன்னால் ஆஜராக்கப்பட்டமை காலம் கணித்து நகர்த்தப்பட்ட சிங்களத்தின் ஓர் நகர்வாகும். 

போர்க்களத்தில் நின்று புலம்பெயர்ந்துள்ள போராளிகளே நேரடியாக இந்திய இராணுவ பிரசன்னைத்தை உறுதி செய்துள்ள நிலையில்.. இது ஒன்று தற்செயலான குற்றச்சாட்டல்ல. இந்திய இராணுவத்தை காப்பது போல அறிக்கை விட்டு.. இந்தியா மீது கருணா கும்மானை கொண்டு செலுத்தப்பட்ட அழுத்தத்தை சிறீலங்கா.. சமாளிக்க ஒரு அறிக்கையை இப்படி விட்டுக் கொள்கிறது. மேலும் யுத்த வெற்றியும் முழு பெருமையையும் அது தனதாக்கி சிங்கள மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை குறைக்காமலும் பார்த்துக் கொள்ள விரும்புகிறது. அவ்வளவும் தான் இங்குள்ள இராணுவ அரசியல். tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் மண்மோகன் சிங் சிலோனுக்கு போகேக்கை தன்ரை பாதுகாப்புக்கெண்டு 1500 ஆமியையும் கூட்டிக்கொண்டு போவவரல்லோ.....அந்த ஆமியளை திருப்பி கூட்டிக்கொண்டு போகேல்லை எண்டொரு கதையும் அப்ப அடிபட்டதெல்லோ!!!!!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டையில் நின்று அடிபட்டவன் சொல்லுறான் தான் கண்டேன் என, இவை 30 வருசமாய் வெளிநாட்டில் கொட்டை போட்டு விதைச்சுப் போட்டு இல்லை என்டினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பு செய்தவனே பல தரம் சொல்லிப்போட்டான்  ராசா பாகிஸ்தான், சீனா இவ்வாறு பல நாடுகளின் உதவியுடன் தான்,  தன் போரை வெற்றி கொள்ள முடிந்தது  என்று. சிங்களவனை பாராட்டவும், தமிழனை தூற்றவும் சிலர் அவசரம் காட்டுகினம் . அப்படியே சிங்களவன்தான் கெட்டிக்காரன் என்றால் ஏன் இவ்வளவு காலம் போர் நீண்டது. எப்பவோ வெற்றியை அடைந்திருக்கலாமே? ஏன் தொண்டர் நிறுவனங்களை வெளிய அனுபினவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமே பங்கு பற்றவில்லை......புலிகள் தங்களுக்குள் அடிபட்டதனால் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தது என அறிக்கை விட்டாலும் நாம் நம்பவேணும்....

Link to comment
Share on other sites

வாந்தி எடுப்போரும், மாற்றுக் கருத்தாளர்களும், புலிப்பினாமிகளும் எழுதும் தமிழைக் கண்டு மயங்கியதுண்டு. பெரும் அறிஞர்களாக அவர்களை எண்ணியதும் உண்டு. அவர்களை ஏனையோர் சீண்டும்போதுதான் அவர்கள் சினத்தினால் தங்களை அறியாமலே தங்களை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். கூழ்ப்பானைக்குள் வீழ்ந்து மிதக்கும் பல்லிகள். 

Link to comment
Share on other sites

அடி அந்த மாதிரி என்ன செய்வது .

செவ்வாயில் இருந்து வேற்றுகிரகவாசிகள் தான் வந்தார்கள் என்று கதை போகும்.

எந்த தமிழன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டான் .இன்று சுரேசை பார்த்தாலே அது விளங்கும் . 

Link to comment
Share on other sites

சீனாவின் உதவியில்லாமல் இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினால் வெற்றிப்பெற்றிருக்கமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா.

 இலங்கையில் நடந்த சில குற்றங்களுக்கு இங்கே இருந்து ஊக்கம் கொடுக்கப்பட்டதோ என்கின்ற சந்தேகம் இருக்கின்றது என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவி தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

இது எல்லாம் என்ன   என்ற  என்ரை வெண்ணை 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சவனும் சொல்லுறான் அடிவாங்கினவனும் சொல்லுறான், இவை 30 வருசமாய் வெளிநாட்டில் கொட்டை போட்டு விதைச்சுப் போட்டு, விடுப்பு பார்த்திட்டு  இல்லை என்டினம். 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.