Jump to content

அமைச்சரவை பதவியேற்பில் சில சுவாரசியங்கள்...


Recommended Posts


அமைச்சரவை பதவியேற்பில் சில சுவாரசியங்கள்...
 
05-09-2015 04:48 AM
Comments - 0       Views - 594

article_1441372899-65.jpgதேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது.

இந்த வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12.11க்கு ஆரம்பமாகி 13.42க்கு நிறைவுக்கு வந்தது. இந்த பதவியேற்பு வைபவத்தில் இடம்பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்...

வருகை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் 12.10க்கு வருகைதந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 12.11க்கு வருகைதந்தார். 12.12க்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் 12.15க்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று உறுதிமொழி செய்துகொண்டனர்.

நீண்டநேரம் பதவிப்பிரமாணம்

பதவிப்பிரமாணம் செய்துகொள்வதற்காக ஜனாதிபதிக்கு முன்பாக சென்ற உறுப்பினர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிப்பிரமாண கையேட்டிலிருந்தவற்றை அவசர அவசரமாக வாசித்தனர். எனினும், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஏனைய உறுப்பினர்களை விட சில நிமிடங்கள் எடுத்து  நிதானமாக தெளிவாக வாசித்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

தமிழ் மொழியில் உறுதிப்பிரமாணம்

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்  மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் ஆகிய மூவரும் தமிழ் மொழியில் உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

உறுதிப்பிரமாணத்தை வாசிக்காதவர்

ஜனாதிபதியின் செயலாளருக்கு முன்பாக இருந்த கோவையை எடுக்கும் உறுப்பினர்கள் அதிலிருக்கும் தங்களுக்குரிய விடயதானத்தை வாசித்ததன் பின்னர், அதில் கையொப்பமிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பர். அதன் பின்னர் ஜனாதிபதி கையளிக்கும் ஆவணத்தை பெற்றுக்கொள்வர்.

எனினும், பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சந்திம வீரக்கொடி, கோவையிலிருந்தவற்றை வாசிக்காமல் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இதனை அவதானித்த ஜனாதிபதி, கியவுவே நெத என்று சிங்களத்தில் கேட்டார் (வாசிக்கவில்லையா)அதன் பின்னரே அவர், உறுதிப்பிரமாணத்தை வாசித்தார்.

கலந்துரையாடலை ஆரம்பித்த அமைச்சர்

அமைச்சர்களாக நேற்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 42 உறுப்பினர்களில் சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பார்த்து வணக்கம் செலுத்தினர், சிலர் தலையை மட்டும் அசைத்துவிட்டு சென்றனர் இன்னும் சிலர் புன்முறுவல் பூத்தனர்.

ஆனால், தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் மட்டும் பிரதமரிடம் ஏதோ கலந்துரையாடிவிட்டு வந்தார்.
சுட்டிக்காட்டிய செயலாளர்

ஆவணத்தில் எவ்விடத்தில் கையொப்பமிடவேண்டும் என்பது தொடர்பில் தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சற்று தடுமாறிவிட்டார். ஹரினுக்கு முன்பாக இருந்த ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ அபயகோன், கையொப்பம் இடவேண்டிய இடத்தை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் அவர் கையொப்பம் இட்டார்.

ஆங்கிலத்தில் உறுதிப்பிரமாணம்

பெரும்பான்மையின உறுப்பினர்கள் சிங்கள மொழியிலும் சிறுபான்மையின தமிழ் உறுப்பினர்கள் தமிழ்மொழியிலும் உறுதிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எனினும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்  ரவூப் ஹக்கீம், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர்  ஹாசீம் மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சர் அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் ஆகியோர் ஆங்கில மொழியில் உறுதிப்பிரமாணத்தை வாசித்தனர்.

கைக்கூப்பி வணக்கிய அமைச்சர்

ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட தயா கமகே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருந்த மேசையின் மீது தன்னுடைய கோவையை வைத்துவிட்டு  பிரதமருக்கு வணக்கம் செலுத்தினார். வேறு எந்தவொரு அமைச்சரும் இவ்வாறு வணக்கம் செலுத்தவில்லை.

இருவர் சுணக்கம்

அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்ச்சி நிரலில் பிரகாரம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவியேற்பதற்காக ரவூப் ஹக்கீம் 13.16க்கு அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் பிரசன்னமாய் இருக்கவில்லை.
எனினும், 13.41க்கு மண்டபத்துக்கு வருகைதந்த அவர், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு பின்னர் அமைச்சர் அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்காக இவ்விருவரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன் பதவிப்பிரமாண வைபவம் நிறைவுற்றது.

 

- See more at: http://www.tamilmirror.lk/153421/அம-ச-சரவ-பதவ-ய-ற-ப-ல-ச-ல-ச-வ-ரச-யங-கள-#sthash.1ACDl3KL.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.