Jump to content

மலசலகூட குழிக்குள் லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள்


Recommended Posts

மலசலகூட குழிக்குள் லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள்
மலசலகூட குழிக்குள் லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள்

மொரட்டுவ பிரதான தபால் நிலையத்தின் கைவிடப்பட்ட மலசலகூட குழிக்குள் இருந்து ஒருதொகை கடிதங்கள் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் வான் அஞ்சல்கள், சாதாரண கடிதங்கள், தபாலட்டைகள் மற்றும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களது பரப்புரை கடிதங்கள் என்பனவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன, தபால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அங்கிருந்து குறித்த கடிதங்களை மீட்டுள்ளனர்.இந்நிலையில், இது தொடர்பில் மொரட்டுவ பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளர் மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் அங்கிருந்து சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

http://www.onlineuthayan.com/news/84

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த தமிழர்களால் பண நோட்டுக்களை உள்ளே வைத்து அனுப்பப்பட்ட கடிதங்களாக இருக்கலாம்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.