Jump to content

மீண்டும் ஒரு முறை எரிக்க நினைக்கிறது .அரை டவுசர் வானரங்களூடாக


Recommended Posts

 

 இந்த விடுமுறையில்  நாட்டுக்கு சென்ற பொழுது சந்தித்த சிலரில் சில இளைஞர்களுடன் பேசிய பொழுது கேள்வி பட்ட விசயம் இவ்வளவுத்துக்கு இப்படி சற்றும் சத்தமில்லாமால் ஊடுருவிட்டார்கள் சற்று ஆச்சரியமாக இருந்தது .பக்கமாக பக்கமாக ஆய்வு கட்டுரைகள் நடத்தும் இவர்கள் கூட ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை .இதே போல 80 களிலும் 83 இன கலவரத்துக்கு முன்னே  சில வியாபர ஏஜன்ட் வடிவத்தில் இருந்த வெறும் சதாரணர்களே இந்த ஆள் பிடித்து தரும் படி கேட்ட சம்பவம் அங்கங்கே நடை பெற்று கொண்டு இருந்தது ..அந்த நேரம் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்று நம்ப மறுத்த விடயம் ..பின்னர் ஆனால் சந்திரகாசன் ஆள் பிடிக்க ஆளாக செய்யபட்ட பின் தான் ஆங்கில ஊடகங்கள் பரவலாக வெளியிட்டன.

 

இது புலானாய்வுதுறையினர்..  இவர்கள்  இந்த நாட்டு புலானய்வு துறையினரின் ஏஜனட்டுக்கள்  என்று நன்கு பிரபலமானவர்கள் நன்கு மக்களால் மதிக்க தக்கவர்கள் கூட அந்த நாட்களிலே சிலரால் அங்குமிங்கும் குற்ற சாட்டப்பட்டிருந்தார்கள் ..அது அரை குறை வதந்திகள் போல தோற்றமளித்தாலும் உண்மை இல்லாமலும் இல்லை.ஏன் உந்த சந்திரகாசனின் தந்தையார்  தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற வேண்டும் என்று மலர்ந்து அருளிய தமிழ் மக்களின் தந்தை செல்வநாயகத்தையே அமெரிக்க ஏஜன்ட் சிஜஏ என்று இடதுசாரிகள் சிலர் அழைத்தனர் .இலங்கையில் சிங்கள தமிழ் பேதமின்றி அந்த காலம் இருந்த இடதுசாரிகளின் எழுச்சியை அடக்க செல்வநாயகம் தேவைபட்டார் என்ற கூறுவோரும் உளர்.

 

தமிழாராய்ச்சி மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்த பொழுது ரகளை நடந்தது தெரிந்த விடயமே ,பொலிசார் உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவராக இருந்த ஜனார்த்தனே  தேடி வந்த பொழுது நடந்த விடயமே .அந்த நாட்களில் இளைஞர்கள் மத்தியில் ஹீராவாக இருந்தார் .அப்பொழுது சிலர் இவரை சிஜஏ ஏஜன்ட் என்று அழைத்தனர் .அதை பலர் நம்ப மறுத்தனர் ..பிற்காலத்தில் அவரது  நடத்தை மூலம் ஜீரோவாக போன பொழுது அந்த ஏஜன்ட் என்று உறுதி செய்ய வைத்து கொண்டார். முன்பு  இந்திய அரசாங்கத்தில் இருந்த பகுகுணா என்ற அமைச்சர் பகிரங்கமாக சோவியத்தின் கேஏஜிபி ஏஜன்டாக இருந்தார்..இந்திராகாந்தி காலத்தில் சோவியத் சார்பு  நிலை இருந்தது தெரிந்த விடயம் . அவரது மகன் சஞ்சய் காந்தி நடைபெற படுத்த வேண்டுமென கூறிய ஜந்து அம்சத்திட்டம்  அமெரிக்க சார்பு நிலை போல தோன்றியது. அந்நேரம் ஒரு விமான விபத்து நடந்த்து சஞ்சய் காந்தி அதில் இறந்தார்..அது விபத்தில் இல்லை சோவியத் ஏஜன்ட்களின் சதியே என்று கூறுவோர் உளர்..இந்திரா காந்தி ஆட்சியின் பொறுப்பில் இருந்தாலும்  இந்த உளவு ஸ்தாபனங்களின் நடவடிக்ககைகளை கட்டுபடுத்த முடியாமால் இருந்தார்

 

தங்கள் நாட்டு நலன் எதிர்காலத்தில் பாதிக்கபட கூடாது என்ற எண்ணத்தில் இந்த உளவு ஸ்தாபனங்கள் நிகழ் காலத்தில் தங்கள் சொந்த செலவில் தங்கள் தங்களுக்கே சூனியம்  செய்வித்து விடுவதுண்டு .தோற்றத்தில் இந்திய அதிகாரவர்க்கம் தமிழ்நாட்டில் உள்ள தேசிய இயக்கங்களுக்கு எதிரானது போது இருந்தாலும் மறுபுறத்தில் றோ போன்றவை சீமான் போன்ற இயக்கங்களை மறைமுகமாக ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.இந்த அரை குறை இயக்கங்களை ஊக்குவிப்பது  தனது நலனுக்கு நல்லது .சரியான புரட்சிகர அமைப்பு உருவாகுவதை தடுக்கலாம் என. இதைத்தான் இவர்கள் இலங்கையிலும் செய்தார்கள் ...கொழுந்து விட்டு எரியும் பிரச்சைக்குள் நுழைந்தார்கள் ,,,எண்ணெய் ஊற்றினார்கள் ..புகைந்து எரிய விட்டார்கள்  முள்ளிவாய்க்கல் வரை  கொண்டு சென்று அழித்தார்கள்...பல சதாப்த்த்துக்கு சரியான விடுதலையை பற்றி கனவிலும் கூட  யோசிக்க வைக்காத  அளவுக்கு தமிழர்களை கொண்டு சென்று வெற்றி கொண்டுள்ளார்கள்

 

தெரிந்தும் தெரியாமாலோ இந்த இந்திய நலனுக்காக பலியாகி இவ்வளவுத்துக்கும்  பிறகும் இன்றும் இந்தியாவை மீட்பர்களாக கருதி பக்கம் பக்கமாக  ஆய்வுகட்டுரை எழுதுவோர் உளர்..இதே இவர்கள் 80களில்   இந்தியாவை மீட்பவர்களாக தங்கள் புத்திஜீவ கெட்டித்தனத்தால் நிறுவி கொண்டிருந்தவர்கள்...அதே சிலர் இன்றும் அதே கெட்டிதனத்துடன் இந்திய விசுவாசத்தை நிறுவ பக்கமாக பக்கமாக சமூக வலைதளங்களில் எழுதி கொண்டிருக்கிறார்கள்.

 

இந்தியா ஒரு பொழுதும் தமிழர்களின் நலன்களில்  கவனம் செலுத்த போவதில்லை ,இந்தியா இந்த பிராந்தியத்தை எப்பொழுதும் ஒரு கொதிநிலையில் வைத்திருக்க விரும்புவதே சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன்

 

இப்பொழுது புதிய வடிவத்தில் ஆள் பிடிப்பு நடத்தி சிறு குழுக்களாக தராதரத்துக்கு அமைய  வெவ்வேறு வடிவங்களில் இந்தியாவிற்க்கு கொண்டு சென்று தங்கள் கொள்கை விளக்க  பயிற்சி அளிக்கிறது. இப்பொழுது இந்த நடவடிக்கைகளில் இப்பொழுது மும்முரமாக இறங்கி இருப்பது  காந்தியை கொலை செய்த அரை காய்ச்சட்டை ஆர் எஸ்   எஸ் அமைப்பினர்.. பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் வகுப்பினர் மத்தியில் அவர்களின் வறுமையை பயன் படுத்தி குறிப்பாக யாழ் மட்டகளப்பு மலையக மக்கள் மத்தியில் இவர்களின் நடவடிக்கை தீவிரமாக உள்ளது ...இந்தியாவில்  உயர் கல்வி படிப்பதற்கு உதவி செய்வதன் மூலமாக அவர்களை கவர்ந்து இழுத்து ,அதன் மூலம் தங்கள் கொள்கைகளையும் செலுத்தி மூளை சலவை செய்து இலங்கைக்கு திருப்பி விட்டு உள்ளனர். .இவர்களில் ரொம்ப படித்தவர்கள் , பெரும் அதிகாரிகள் மட்டத்தில் உள்ளோரும் அடங்குபவராம்.

அப்படி ஒரு உயர்கல்வி படித்த இளைஞர் சொன்ன ஒப்புதல் வாக்கு மூலம்  இது

 

தமிழர்கள் எப்பொழுதும்  இந்திய விசுவாசிகள் அல்லது இந்தியாவின் நண்பர்கள் என்று தெரிந்து வைத்து கொண்டு புதிய நரி தந்திரத்தை இப்படி மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகிறது..தமிழர்கள் என்று போராடாமால் இந்துக்கள் என்று  ஒன்று படுவீர்கள் என்றால் உங்கள் பிரச்சனையில் தலையிட்டு தீர்வை பெற்று தருவோம் கூறியுள்ளார்கள் ..பெளத்தம் ஜென் போன்ற மதங்கள் போன்றவை இந்து மத்த்தின் கூறுகள் தான் அவர்கள் உங்கள் எதிரிகள் அல்ல

உண்மையான எதிரிகள்  முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தான் என்று ஓதியுள்ளது

 

இதில் உள்ள ஒரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால்..இலங்கை அதிகார மட்டதினால் உருவாக்கப்பட்டது பொது பல சேனா என்று கூறிக்கொண்டாலும்  அவற்றை வளர்த்தெடுத்தது இந்து ஏஜன்டுகளால் தானாம் ..முஸ்லிம்களின் மேல் இவ்வளவு கடுமையை செலுத்தியது மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை பெற்று கொண்டது இந்தியா  ஒன்று ஆட்சி மாற்றம் ..

 

பெளத்த கடும் போக்களாருக்கும் இந்து பற்றாளர்க்கும் ஒரு இணக்கத்தை ஏற்படுவதன் மூலம் தமிழர் பிரச்சனை தீர்க்காலம் என்று ஒரு கணக்கு சமன்பாட்டை இவர்கள் முன் நிறுவியுள்ளது. தமிழர் தலைமைத்துவத்தில் இந்த கிறிஸ்தவ பாதிரியாரின் ஆதிக்கம் அன்று தொட்டு இன்று இவரையும் ஏன் இருக்கிறது . பெரும்பான்மை இந்துக்கள் நீஙகள் இதை இல்லாமால் செய்ய வேண்டியது உங்கள் கடமை என்று கூறியுள்ளது.

தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களில் படித்தவர்கள் கூட இந்த அமைப்புக்காக இந்தியா சென்று அவர்கள் வகுப்புகளில் பங்கேற்றி அமைப்பாகி திரும்புகிறார்களாம். இதை இலங்கையின் அதிகார வர்க்கம் அறிந்திருந்தும்  இவர்களின் அதிகார செல்வாக்கு எதிராக செயல்பட முடியாத படி கையறந்த நிலையில் நிற்கிறார்களாம்

 

இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களான சவுத் புளக் போன்றவை தற்போதய நிலையில் தமிழர்களுக்கு நல்ல அதிகாரங்கள் கொண்ட தீர்வை கொடுக்க விரும்பவில்லை  என்பது தங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை  என்றும்

 

நீங்கள் தமிழர்கள் என்ற வடிவத்தில் இருந்து இந்துக்கள்  என்று முற்றும் முழுதாக மாறி போராடும் பொழுது எதிர்காலத்தில் சவுத்புளக்கில் உள்ள அதிகாரிகள் மட்டத்தில் மாற்றத்தை உருவாக்கி உங்களுக்கான தீர்வை பெற்று தருவோமென கூறி  இருக்கிறது

ஆனால் அந்த இளைஞர்கள் சொன்னார்கள் ...அவர்கள் தங்களுக்கு உதவி செய்வதால் ஏதாவது நேரத்தில் விசுவாசமாக இருப்பார்கள் என்று  நம்புகிறார்கள் . ஆனால் நாங்கள் அவர்களை பயன்படுத்துகிறோமென்று

 

இப்படித்தான் போராட்ட ஆரம்பித்திலும் தமிழ்  இளைஞர்கள் கூறினார்கள் இவர்களை பயன் படுத்து கிறோம் என்றோம்

ஆனால் இவர்களை பயன்படுத்தி முடித்து வைத்தது யாரென்று சொல்லி தெரிய வேண்டுமோ

 

எப்பொழுதும் இந்தியா தமிழர்களை கொதிநிலை நிலையிலையே  வைத்திருக்க விரும்புகிறது

தங்கள்  நலன் எப்பொழுதாவது பாதிக்கபடின் பயன் படுத்துவதற்க்கு

 

இலங்கையை மீண்டும் எரிக்க நினைக்கிறது  இந்த அரை டவுசர்  வானரங்களூடாக

 

http://sinnakuddy.blogspot.co.uk/2015/09/blog-post.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமாணயம்,விஷ்ணு க்கு அதிக கோவில்கள் ,ஆஞ்சநேய வழிபாடு போன்றவை தாயகத்தில் பர‌வி வருவத‌ற்கும் முக்கிய காரண‌ம் இந்த அரை டவுசர்  வானரங்களாக இருக்குமோ

Link to comment
Share on other sites

புத்தன் சார் ..அவங்கள் தான் ...சிவனுக்கும் விஸ்ணுக்கு  பிறந்த ஜயப்பன் கோயிலும் இப்ப யாழில் ஏராளம் ..ஏன்..ஏன் எப்படி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.