Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: ஆணாக நடித்து பெண்ணையே மணந்த பெண்!

 
 
masala_2939151f.jpg
 

இந்தோனேஷியாவில் வசிக்கும் 40 வயது சுர்வதி, ஆள் மாறாட்டக் குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கிறார். சுர்வதியைக் குற்றவாளி என்று கண்டுபிடித்தவர் அவரது மனைவி ஹெனியாடி. தன் பெயர் முகம்மது எஃபென்டி சாபுட்ரா என்றும் தான் ஒரு போலிஸ் அதிகாரி என்றும் கூறியிருக்கிறார் சுர்வதி. இவரது அமைதியான குணத்தை நம்பி, 25 வயது ஹெனியாடியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். தான் ஓர் ஆண் என்பதைக் காட்டிக்கொள்ள, திருமணத்தன்று ஏராளமான மனிதர்களை உறவினர்களாக நடிக்க வைத்திருக்கிறார்.

சில மாதங்களிலேயே ஹெனியாடிக்கு இவர் மீது சந்தேகம் வந்துவிட்டது. விரைவிலேயே தன் கணவர் ஒரு பெண் என்பதை அறிந்துகொண்டார். ‘‘ஒருநாள் அவர் வெளியே சென்றிருந்தபோது, அறையைச் சோதனை செய்தேன். அவரது அடையாள அட்டை கிடைத்தது. அதில் சுர்வதி, பெண் என்று இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன். போலியான ஆவணங்களை அளித்து, திருமணம் செய்திருக்கிறார்.’’ என்று வருந்துகிறார் ஹெனியாடி. தவறான தகவல்கள் கொடுத்து ஏமாற்றிய குற்றத்துக்காக, சுர்வதி கைது செய்யப்பட்டார். தன்னுடைய முதல் திருமணத்தால் ஏமாற்றமடைந்திருக்கிறார் சுர்வதி.

அவருக்கு 17 வயதில் ஒரு குழாந்தை இருக்கிறது என்பதைத் தவிர, வேறு எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. தற்போது 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தோனேஷிய கிராமங்களில் வசிக்கும் சுர்வதி, பலவிதங்களில் ஏமாற்றப்பட்டும் பாதிக்கப்பட்டும் இருக்கலாம். அந்தப் பாதிப்பு தன்னை ஓர் ஆணாக நடந்துகொள்ள தூண்டியிருக்கலாம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

எந்தத் தைரியத்தில் இப்படி ஏமாற்றத் துணிகிறார்கள்?

பிரிட்டனைச் சேர்ந்தவர் 37 வயது அடேல் டிவோன்ஷைர், ஸ்கூபா டைவர். 2013-ம் ஆண்டு தண்ணீர்ப் புகாத ஃபூஜி கேமராவை, கடலில் தொலைத்துவிட்டார். 500க்கும் மேற்பட்ட அரிய படங்கள் அந்த கேமராவுக்குள் இருந்தன. உழைப்பு வீணாகிவிட்டதை நினைத்து அடெலுக்கு மிகுந்த வருத்தம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, 600 கி.மீ. தொலைவில் அடெலின் கேமரா கண்டெடுக்கப்பட்டிருக்கிறது! லார்ஸ் மோஸ்பெர்க், ஸ்வீடன் கடற்கரையில் ஒதுங்கியிருந்த கேமராவைக் கைப்பற்றியிருக்கிறார். ‘‘சிவப்பு நிறத்தைப் பார்த்தவுடன் அருகில் சென்றேன். அழகான பிளாஸ்டிக் கேமரா. அழுத்திப் பார்த்தேன். வேலை செய்தது. கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, ஆராய்ச்சியாளர் ஒருவரால் எடுக்கப்பட்டிருப்பது புரிந்தது. சுமார் 500 படங்கள் இருக்கும். ஜூலை 2013 கடைசியாகக் காட்சிகள் பதிவாகியிருந்தன.

வீடியோவில் கேட்ட குரலை வைத்து, அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்று முடிவு செய்தேன். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உரியவரிடம் சேர்க்க நினைத்தேன். ஃபேஸ்புக்கில் சில படங்களை வெளியிட்டேன். சில மணி நேரத்தில் விடை கிடைத்துவிட்டது. அடெலிடம் சில கேள்விகள் கேட்டு, உறுதி செய்துகொண்டேன். பிறகு கேமராவை ஒப்படைத்துவிட்டேன்’’ என்கிறார் லார்ஸ் மோஸ்பெர்க். ‘‘ நான் சேகரித்த அரிய படங்கள் அனைத்தும் கிடைத்துவிட்டன!’’ என்று மகிழ்கிறார் அடெல்.

ஸ்காட்லாந்தில் தொலைந்த கேமரா, ஸ்வீடனில் கிடைத்திருக்கிறது.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆணாக-நடித்து-பெண்ணையே-மணந்த-பெண்/article8874291.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: தீப்பந்த மீன்பிடிப்பு!

 
 
masala_2940345f.jpg
 

நூறு ஆண்டுகளாக தைவான் மீனவர்கள் வித்தியாசமான முறையில் மீன்களைப் பிடித்து வருகிறார்கள். இரவில் பெரிய மூங்கில் குச்சியில் கந்தக அமிலத்தை ஊற்றி, நெருப்பு வைக்கும்போது மிகவும் பிரகாசமாக எரிகிறது. கந்தக அமிலம் நீரில் விழுந்து நெருப்பையும் புகையையும் உண்டாக்குகிறது. வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மத்தி மீன்கள், நீரை விட்டு மேலே எழும்புகின்றன. அப்போது வலைகளை வீசி மீன்களைப் பிடித்துவிடுகிறார்கள் மீனவர்கள். கந்தக அமிலத் தீயை வைத்து மீன் பிடிக்கும் வழக்கம் தைவான், ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உருவானது. இன்று ஜின்ஷன் துறைமுகத்தில் மட்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் 300 படகுகளில் தீப்பந்தத்தைப் பயன்படுத்தி மீன்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்று 3 படகுகளில் மட்டுமே மீன்களைப் பிடித்து வருகிறார்கள்.

ஓர் இரவில், 6 மணி நேரத்தில் ஒவ்வொரு படகும் 3,200 கிலோ முதல் 3,600 கிலோ மீன்களைப் பிடிக்கும். இன்றும் தைவான் அரசு இந்த மீன்பிடிப்புக்கு ஊக்கம் அளித்து வருகிறது. ஓர் இரவில் ஒவ்வொரு குழுவுக்கும் 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனாலும் இந்த மீன்பிடிப்பு அழிந்துகொண்டே வருகிறது. ஆண்டு முழுவதும் மத்தி மீன்கள் கிடைப்பதில்லை. மே முதல் ஜூலை வரையிலான 3 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. தீப்பந்த மீன்பிடிப்பை அரசு சுற்றுலாவாக மாற்றிவிட்டது. ஆனால் இந்த மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். இளைய தலைமுறையினர் நவீன கருவிகளைக் கொண்டு மீன் பிடிப்பதையே விரும்புகின்றனர். அதனால் வெகுவிரைவில் தீப்பந்த மீன்பிடிப்பு மறைந்து விடும் என்கிறார்கள்.

ஆச்சரியம் தரும் தீப்பந்த மீன்பிடிப்பு!

இத்தாலியின் கலெக்டோ ஃபாவா மலையில் ராட்சச இளஞ்சிவப்பு முயல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு கால்களையும் நீட்டியபடி முயல் ஒன்று படுத்திருக்கிறது. கண்களையும் வாயையும் பார்க்கும்போது இறந்த முயல் போன்று தோற்றம் அளிக்கும். ஆனாலும் முயலைப் பார்த்தால் புன்னகை தானாகவே வந்துவிடும். வியன்னாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலர் இந்த முயலை உருவாக்கியிருக்கிறார்கள். 200 அடி நீளமும் 20 அடி தடிமனும் கொண்டது. வைக்கோலை உள்ளே வைத்து, மேலே மென்மையான தண்ணீர்ப் புகாத துணியால் தைத்திருக்கிறார்கள். 2005-ம் ஆண்டு முயல் உருவாக்கப்பட்டது. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் முயல் மீது ஏறி விளையாடுகிறார்கள், நடக்கிறார்கள்.

“கலைப் படைப்புக்காக முயலை நாங்கள் உருவாக்கவில்லை. மலை ஏறி வருகிறவர்கள், முயலிடம் வந்து இளைப்பாற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கினோம். ஒருவேளை நாங்கள் கண்ணாடி பெட்டிக்குள் முயலை வைத்திருந்தால் இன்னும் பல காலத்துக்கு முயல் நிலைத்திருக்கும். ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை. இயற்கையான வானிலை காரணமாக இந்த முயல் எவ்வளவு காலம் இருக்குமோ அதுவரை இருக்கட்டும். இதை இனி பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லை. 2025-ம் ஆண்டு தானாகவே அழிந்து, மறைந்துவிடும்” என்கிறார் கெலிடின் என்ற கலைஞர்.

அழிந்து வரும் ராட்சச முயல்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தீப்பந்த-மீன்பிடிப்பு/article8879609.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மிஸ் தன்னம்பிக்கை!

 
masala_2942247f.jpg
 

நைஜீரியாவில் வசிக்கிறார் 19 வயது ரஹ்மா ஹருனா. பிறக்கும்போதே அரிய குறைபாட்டால் கால்கள் இல்லை. தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை ரஹ்மா பிளாஸ்டிக் வாளிக்குள்ளேயே கழித்து வருகிறார். கால்கள் இன்றி பிறந்தாலும் ரஹ்மா ஆரோக்கியமாகவே இருந்தார். 6 மாதங்களில் ஒரு காய்ச்சல் வந்தது. வளர்ச்சியை அப்படியே தடுத்துவிட்டது. கைகளின் இயக்கமும் முடங்கிப்போனது. “வளர்ச்சியும் இல்லை. கால்களும் இல்லை. இன்று வரை வயிற்று வலி இருந்துகொண்டே இருக் கிறது. ஒவ்வொரு விஷயத் துக்கும் அடுத்தவர்களின் உதவி ரஹ்மாவுக்குத் தேவைப்படுகிறது.

ஆனால் அவள் எதைப் பற்றியும் கவலைப்பட்டு நாங்கள் பார்த்ததில்லை. உலகின் மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறாள்’’ என்கிறார் அவரது அம்மா. “என் 10 வயது தம்பி முதல் வீட்டில் உள்ள அனைவரும் எனக்கு உதவி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச் செல்கிறார்கள். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதில் எனக்கு அளவற்ற சந்தோஷம். 15 ஆண்டுகள் மருத்துவத்துக்காக எங்கள் சக்திக்கு மீறி செலவு செய்துவிட்டோம். காரணமும் தெரியவில்லை, சிகிச்சையும் கிடைக்கவில்லை.

சமீபத்தில் எனக்கு நன்கொடையாக ஒரு சக்கர நாற்காலி கிடைத்தது. என்னைத் தூக்கிச் செல்பவர்களுக்கு இது உதவியாக இருக்கிறது. நான் ஒரு மளிகைக் கடை ஆரம்பிக்க வேண்டும். என்னிடம் எல்லோரும் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். இத்தனை அன்பானவர்கள் இருக்கும்போது என்னால் எதையும் செய்ய முடியும்’’ என்கிறார் ரஹ்மா ஹருனா.

மிஸ் தன்னம்பிக்கை!

லண்டனில் வசிக்கும் லியாம் பியர்ஸ், கடந்த 10 ஆண்டுகளாக தக்காளியால் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட்டு வந்திருக்கிறார். 2 வயதில் லியாம் வாயில் ஒரு பட்டாணி சிக்கிக்கொண்டது. அன்று முதல் அவர் எந்தக் காய்கறிகளையும் சாப்பிடவில்லை. ஒரு வாரத்துக்கு 3 தக்காளி ஜூஸ் பாட்டில்களைக் காலி செய்வார். பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்வார்கள் என்பதால், தனியாக மதிய உணவைச் சாப்பிடுவார். தினமும் இரவில் தக்காளியால் செய்யப்பட்ட கால் கிலோ நொறுக்குத் தீனியைச் சாப்பிடுவார். சூப், ரொட்டி என்று எந்த உணவாக இருந்தாலும் தக்காளியில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தக்காளி மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தாலும் லியாமுக்கு வேறு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. லியாமை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். உணவுகளைப் பார்த்துப் பயம் ஏற்படும் ஒரு குறைபாட்டால் லியாம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. மருத்துவர் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறை காய்கறிகளைச் சாப்பிட்டிருக்கிறார் லியாம். “என் வாழ்நாளில் 500 லிட்டர் தக்காளி ஜூஸ் குடித்திருப்பேன் என்கிறார் மருத்துவர். நான் காய்கறிகளைச் சாப்பிடுவதை என் நண்பர்களிடம் தெரிவித்தேன். ஒருவரும் நம்பவில்லை. கேரட், உருளைக் கிழங்கு என்று ஒவ்வொன்றையும் கொடுத்து என்னைப் பரிசோதித்தனர். வேகமாக முன்னேறி வருகிறேன் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் லியாம்.

தக்காளியால் வளர்ந்த சிறுவன்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மிஸ்-தன்னம்பிக்கை/article8885566.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐபோன்களை சுத்தியலால் உடைக்கும் சீனர்கள்!

 
 
masala_2943604f.jpg
 

தென்சீனக் கடல் பிரச்சினையில் சீனாவுக்கு எதிராக, பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. சீன மக்கள் தங்களின் ஆதரவை நாட்டுக்குத் தெரிவிக்க சில வழிகளைக் கையாண்டு வருகிறார்கள். அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கேஎஃப்சி போன்றவற்றைப் புறக்கணித்து வருகிறார்கள். ஆப்பிள் ஐபோன்களை சுத்தியலால் உடைக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சீனாவில் வேகமாகப் பரவி வருகின்றன.

“நீங்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்றால் உடனே பொருட்களைப் புறக்கணியுங்கள். தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் நாடுகளின் பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள். அந்த நாடுகளுக்குப் பயணம் செல்லாதீர்கள். நீங்கள் ஐபோனை உடைக்கவில்லை என்றால் உண்மையான சீனர்களே இல்லை’’ என்றெல்லாம் இணையதளத்தில் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்து உத்வேகம் கொண்ட சிலர், தங்கள் ஐபோன்களையும் உடைத்து, வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிடுகின்றனர். அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி நிறுவனம், ‘மக்கள் தங்கள் சொந்தப் பொருட்களை தேசப்பற்று என்ற பெயரில் உடைப்பது பகுத்தறிவற்ற செயல்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. அதற்குப் பிறகு உடைக்கும் செயல் குறைந்து வருகிறது.

நாட்டாமை தீர்ப்பை மாத்து..!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத் தலைநகரில் கண்களுக்குப் புலப்படாத கொடை வள்ளல் ஒருவர் இருக்கிறார். ஏழை மக்களின் குறைகளைத் தீர்த்து வருகிறார். இதுவரை 34 லட்சம் ரூபாய் வரை ஏழை மக்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 2013-ம் ஆண்டு மே மாதம்தான் முதன் முதலில் ஏழைகளுக்கு ஒருவர் உதவி வருகிறார் என்ற விஷயம் வெளியில் தெரிய வந்தது. நகரின் பல்வேறு கடைகளில் இருந்தும் 100 டாலர்களுக்கு உரிய பொருட்கள் ஏழைகளின் வீடுகளுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

உணவுப் பொருட்கள், துணிகள், குழந்தைகளுக்கான பால் பவுடர், நாப்கின், புத்தகங்கள், நோட்டுகள் என்று அவரவர் தேவையைப் பொறுத்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. சிலருக்கு மின்கட்டணம், பள்ளிக் கட்டணம், வாடகை, தங்கும் விடுதி கட்டணம், மருத்துவக் கட்டணம் போன்றவற்றுக்காக டாலர்களாகவும் அனுப்பப்படுகின்றன. இந்த டாலர்களில் ‘பென்னி’ என்ற பெயரில் கையெழுத்துகள் இருக்கின்றன. கேபி லைன் என்ற பத்திரிகையாளர் பென்னியைத் தேடிக் கிளம்பினார். “ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை பென்னியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். 26 கடைகளில் பொருட்கள் வாங்கப்பட்டு, தேவைப்படும் மக்களுக்கு அனுப்பப்படுகிறது. 8 நிகழ்ச்சிகளில் ஏழைகளுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பென்னி யார், எங்கே இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்கிறார். பிரிட்டானி மெடினா, ‘’பென்னி மக்களின் அன்பை ஏராளமாகப் பெற்றிருக்கிறார். எனக்கு ஒரு பரிசு வந்தது. திறந்து பார்த்தபோது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கிறிஸ்துமஸுக்கு குழந்தைகளுக்கு ஏதாவது வாங்க வேண்டும், ஆனால் எப்படி வாங்குவது என்று கவலையில் இருந்தேன். இதை அறிந்து எனக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தது. மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாடினோம்’’ என்கிறார். பென்னியிடமிருந்து பயன்பெற்றவர்கள் சொல்லும் கணக்கின்படி 34 லட்சம் ரூபாய் இதுவரை செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால் இதைவிட மிக அதிகமாகச் செலவாகியிருக்கும் என்கிறார்கள்.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஐபோன்களை-சுத்தியலால்-உடைக்கும்-சீனர்கள்/article8889879.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அசத்தலான டாட்டூகள்!

 

tatoo_2944632f.jpg
 

சீனாவில் வசிக்கும் சாங் பெய்லன் ‘எலாங் பள்ளத்தாக்கின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். மரங்கள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து, ‘கலைக் கிராமம்’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கிராமம் பண்டைய சீன நாகரிகத்தை உலகத்துக்குச் சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. கி.மு.3-ம் நூற்றாண்டில் எலாங் பள்ளத்தாக்கு அரசியலிலும் நாகரிகத்திலும் சிறப்புற்று விளங்கியது. பழங்கால கலாச்சாரங்கள் இங்கே தோன்றி, மற்ற இடங்களில் பரவியதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இன்றோ அதற்கான எந்த ஓர் அடையாளமும் இந்தப் பள்ளத்தாக்கில் இல்லை. “நான் அமெரிக்கா சென்றபோது, மலையில் அமைக்கப்பட்டிருந்த க்ரேஸி ஹார்ஸ் நினைவுச் சின்னத்தைப் பார்த்தேன். இவர் பூர்வகுடி அமெரிக்க வீரர். அதுபோன்ற ஒரு கலைப் படைப்பை எலாங் பள்ளத்தாக்கில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 1996-ம் ஆண்டு பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்தேன். 2 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை வாங்கினேன். பழங்கால நாகரிகங்களைப் பற்றிப் படித்தேன். க்ரேஸி ஹார்ஸ் நினைவுச் சின்னத்தைப் போலவே இது அமைய வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் பகுதியில் சுரங்கத் தொழிலாளர்களும் கட்டிடத் தொழிலாளர்களும் அதிகம் இருந்தனர். அவர்களிடமிருந்து கற்களை வாங்கினேன். என்னுடைய முயற்சியைப் புரிந்துகொண்டு பலரும் உதவ முன்வந்தனர். அருகில் இருக்கும் கிராம மக்களின் பங்களிப்பை மறக்கவே முடியாது. அவர்கள் இன்றி, கலைக் கிராமம் சாத்தியமே இல்லை. 20 ஆண்டுகளில் முழுக்க முழுக்க கற்களால் அமைக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்ட கலைக் கிராமத்தை உருவாக்கிவிட்டோம். இது சீனாவின் நுவோ நாகரிகத்தைப் பிரதிபலிக்கிறது. இன்று பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. நான் நினைத்தது போலவே ஏராளமானவர்கள் வருகிறார்கள். சீனர்களின் பழங்கால நாகரிகத்தை அறிந்துகொள்கிறார்கள். இதுபோலவே இன்றைய நாகரிக கிராமத்தை அடுத்த 20 ஆண்டுகளில் அருகில் அமைக்க இருக்கிறேன்’’ என்கிறார் சாங் பெய்லன்.

உங்கள் பணி தொடரட்டும் சாங் பெய்லன்!

நியுஸிலாந்தைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஸ்டீவ் பட்சர். ஹைபர் ரியாலிஸ்டிக் டாட்டூகளைப் போடுவதில் நிபுணர். அழகான ஓவியங்களை அப்படியே மனித உடல்களில் டாட்டூவாக வரைந்துவிடுகிறார். உலகம் முழுவதும் ஸ்டீவ் பட்சருக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். டாட்டூ போட்டுக்கொள்வதற்குக் காத்திருக்கிறார்கள். விலங்குகள், பறவைகள், பூக்கள், மனித உருவங்கள் என்று எதை வேண்டுமானாலும் அற்புதமாக வரைந்துவிடுகிறார் ஸ்டீவ். வியர்வை, கண்களில் நீர் போன்றவற்றையும் மிகத் துல்லியமாக வரைவது இவரது தனிச் சிறப்பு. “நான் சாதாரண டாட்டூ கலைஞராகத்தான் இருந்தேன். டாட்டூவுக்காக ஒரு பள்ளி ஆரம்பித்தபோது, என் நண்பர் ஓர் ஓவியத்தைக் கொடுத்து, அதேபோல வரைந்து பார்க்கச் சொன்னார். நிறையப் பயிற்சி செய்தேன். என் நண்பர்களின் கைகளில் வரைந்து பார்த்தேன். தொழில் முறையாக ஆக்லாந்து நகர வீதியில் வரைய ஆரம்பித்தேன். இன்று இந்த ஓவியங்கள் என்னை எங்கோ உயரத்தில் கொண்டு வைத்துவிட்டன.’’ என்கிறார் ஸ்டீவ்.

அசத்தலான டாட்டூகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அசத்தலான-டாட்டூகள்/article8893751.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஓவியப் பெண்!

 
 
masala_2396595f.jpg
 

இத்தாலியைச் சேர்ந்த ஓவியர் மார்கோ க்ராஸ்ஸி. மிலன் நகரில் அவருடைய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அங்கிருந்த எந்த ஓவியமும் ஓவியமாகவே தெரியவில்லை! நிஜ பெண்ணைப் புகைப்படம் எடுத்தது போல அத்தனை தத்ரூபமாக வரைந்திருந்தார். அவர் வரைந்ததை வீடியோவில் பார்த்தவர்கள் மட்டுமே ஓவியம் என்று நம்புகிறார்கள்.

“என்னுடைய ஓவியத்துக்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துகிறேன். விலையுயர்ந்த கற்கள், மண்பாண்டங்கள், கண்ணாடிகள் போன்றவற்றில் ஒளி உள்வாங்கி, எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைக் கூர்மையாகக் கவனிக்கிறேன். இவற்றை என் ஓவியங்களில் பிரதிபலிக்கிறேன்’’ என்கிறார் மார்கோ க்ராஸ்ஸி.

ஆஹா! ஒரு பெண் நேரில் நிற்பது போலவே இருக்கிறது!

திரைப்படங்களில் காட்ஸிலாவைக் கண்டதும் மக்கள் அலறியடித் துக்கொண்டு ஓடுவார்கள். ஆனால் அதே காட்ஸிலாவிடம் மக்கள் ஆசையாக ஓடி வரும்படிச் செய்திருக்கிறது ஜப்பானில் உள்ள ஷின்ஜுகு தங்கும் விடுதி. விடுதியின் வாயிலில் சிவப்புக் கண்களு டனும் கோரைப் பற்களுடனும் காட்ஸிலா மிகப் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருக்கிறது. விடுதியின் உள்ளே சென்றால் மேஜை விரிப்பு, சாப்பிடும் தட்டு, சுவர்கள் என்று எங்கும் காட்ஸிலா படங்கள் இடம்பெற்றுள்ளன.

அறைகளுக்குள் மிகப் பெரிய காட்ஸிலா பாதம் செதுக்கப்பட்டிருக்கிறது. படுக்கையில் இருந்து அகன்ற ஜன்னல் வழியே பார்த்தால் வெளியே நிற்கும் காட்ஸிலா நன்றாகத் தெரியும். ஜப்பானியர்கள் காட்ஸிலாவை அதிகம் விரும்புவதால், இந்த விடுதி யில் தங்குவதற்குப் படையெடுக்கிறார்கள். வேலை நாட்களில் ஒரு நாள் வாடகை 21 ஆயிரம் ரூபாய். விடுமுறை நாட்களில் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அகன்ற ஜன்னலில் படுக்கையிலிருந்து காட்ஸிலாவைப் பார்க்க இன்னும் கூடுதல் கட்டணம்!

ஒரு காட்ஸிலா மீது இவ்வளவு ஆர்வம் இருக்க முடியுமா!

ஜார்ஜியாவில் வசிக்கிறார் 33 வயது சிக்விடா ஹில். இவருடைய 10 வயது மகன் மிகவும் மோசமாக நடந்துகொண்டான். அம்மா சொல்வதைக் கேட்பதில்லை. பேசுவதில்லை. பள்ளியிலும் நல்ல பெயர் கிடையாது. வீட்டுப் பாடங்களையும் செய்வதில்லை. தன் மகனை நினைத்து மிகவும் கவலைப்பட்டார் ஹில். ஒருநாள் பொறுக்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார். காவலர்கள் வந்து மகனை பிடித்துச் சென்றனர். முதலில் சிரித்தவன், பிறகு அழுதுகொண்டே சென்றான்.

5 நிமிடங்களுக்குப் பிறகு அவனை வீட்டில் கொண்டுவந்து விட்டனர். அந்த நிமிடத்திலிருந்து மகனின் செயல்கள் முற்றிலும் மாறிவிட்டதாக மகிழ்கிறார் ஹில். அருகில் இருந்தவர்கள் ஹில்லின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையினரிடம் உண்மையிலேயே புகார் அளிக்கவில்லை. இது ஒரு நாடகம் என்று விளக்கம் அளித்தார் ஹில். தன்னுடைய நாடகத்துக்கு உள்ளூர் காவல்துறை ஒத்துழைத்ததும், தன் மகன் திருந்தியதும் மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்கிறார் ஹில்.

ஐயோ… இந்த டெக்னிக்கை யாரும் பயன்படுத்தாதீங்க…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஓவியப்-பெண்/article7175878.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாய் - பூனை கூட்டணி!

 

 
 
masala_2395656f.jpg
 

அமெரிக்காவில் வசிக்கும் மார்க் டெய்லர் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர். விலங்குகளையும் பறவைகளையும் வித்தியாசமான கோணங்களில் படம் பிடிப்பதில் வல்லவர். இவரது புகைப்படங்கள் நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிகையின் அட்டையை அலங்கரித்துள்ளன.

பிரபல நிறுவனங்களின் காலண்டர்களிலும் இடம்பெற்றுள்ளன. மார்க் டெய்லரின் சமீபத்திய புகைப்படங்கள் எல்லோரையும் பிரமிக்க வைக்கின்றன. எதிரிகளான பூனையும் நாயையும் ஒன்று சேர்த்து, அன்பைப் பரிமாறிக்கொள்ளும் விதத்தில் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

எதிரிகளை நண்பர்களாகக் காட்டும் இந்த அற்புதமான விஷயத்தை எளிய பின்னணியில் படம் பிடித்திருக்கிறார். நாய் - பூனை, வாத்து - முயல், எலி-முயல் என்று விநோதமான நட்புக் கூட்டணி எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அடடா! அட்டகாசமான புகைப்படங்கள்!

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கூட கீழ்த் தளங்களில் உள்ளவர்களுக்கும் மேல் தளங்களில் உள்ளவர்களுக்கும் வித்தியாசங்கள் காட்டப்படுகின்றன. பணம் படைத்தவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலேயே மிகச் சிறந்த தளத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இந்த ஏற்ற, தாழ்வுகளைக் குறைக்கும் விதத்தில் புதிய கட்டுமானப் பணியை உருவாக்கியிருக்கிறார் தைவானைச் சேர்ந்த டிசைனர் ஷின் குவோ.

சான்ஃபிரான்சிஸ்கோ அகாடமிக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 27 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் மேலும் கீழும் நகர்கின்றன. குடியிருப்பே 360 டிகிரிக்குச் சுழல்கிறது. கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மேல் தளத்துக்குச் சென்றுவிடுவார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் கீழ்த் தளத்துக்கு வருவார்கள். இதன் மூலம் எல்லோருக்கும் எல்லா தளங்களிலும் வசிக்கும் வாய்ப்பு சமமாகக் கிடைக்கும். நகரின் நான்கு திசைகளை ரசிக்கவும் முடியும்.

ராட்டினத்தில் வீடு!

பெய்ஜிங் நகரில் ஒரு திரையரங்கத்துக்குக் கூட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காக `இலவச ஷு பாலிஷ்’ போடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஷு பாலிஷ் செய்வதற்காக ஸியாவோ ஜியா என்ற மாடலும் வரவழைக்கப்பட்டார். டிக்கெட்களில் தள்ளுபடி, உறுப்பினர் கார்டுகளில் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டதால் எதிர்பார்த்ததை விட மக்கள் குவிந்துவிட்டனர். வயதான பெண்கள் ஒவ்வொருவரும் 1 டஜன் ஷுக்களை பாலிஷ் செய்வதற்காகக் கொண்டு வந்திருந்தனர்.

தனி ஒருவராக ஷு பாலிஷ் போட்டுச் சோர்ந்து போனார் ஸியாவோ ஜியா. ஒருகட்டத்தில் புழுக்கம் அதிகமானதால், மயங்கி விழுந்துவிட்டார். “ஆன்ட்டிகள் எல்லாம் டஜன் கணக்கில் பாலிஷ் போட ஷுக்களைக் கொண்டு வந்தாலும் அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதைவிடக் கடினமான பணிகளை அவர்கள் வீடுகளில் செய்துகொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார் ஸியாவோ ஜியா.

ஐயோ… பாவம் ஜியா…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாய்-பூனை-கூட்டணி/article7172974.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: இலக்கை முடிக்காத ஊழியர்களுக்கு பாகற்காய் சாப்பிடும் தண்டனை!

 

 
masala_2946831f.jpg
 

சீனாவின் சோங்க்விங் பகுதியைச் சேர்ந்த லேஷங் டெகரேஷன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், இலக்கை முடிக்க முடியாத ஊழியர்க ளுக்கு வாரம்தோறும் பாகற்காய் சாப்பிடும் தண்டனையை அளித்து வருகிறது. பாகற்காய் தண்டனை குறித்த படங்கள் இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுவரை 40 ஊழியர்கள் தாங்கள் பாகற்காய் சாப்பிடும் தண்டனையை அனுபவித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். “பாகற்காயை மென்று விழுங்குவது போல ஒரு கொடுமையான செயல் வேறு இல்லை. சாப்பிட முடியாமல் துப்பினாலும் தண்டனை அதிகரிக்கும்” என்கிறார் ஓர் ஊழியர்.

“முன்பெல்லாம் உட்கார்ந்து எழுந்திருப்பது, அலுவலகத்தை 3 முறை வலம் வருவது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்த தண்டனைகளை ஊழியர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் அதைவிட கொடூரமான தண்டனையை இப்பொழுது அளித்து வருகிறார்கள்” என்கிறார் ஒரு பெண் ஊழியர். “நாங்கள் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காக எவ்வளவோ செய்திருக்கி றோம். ஆனால் திறமை இல்லாத ஊழியர்களால் உற்பத்தியையும் விற்பனையையும் அதிகரிக்க முடியவில்லை.

ஊக்கப்படுத்துவதைவிட தண்டனை அளிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும். சக ஊழியர்களுக்கு முன்பு பாகற்காய் சாப்பிடும்போது அவமானத்தில் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்” என்கிறார் நிறுவனத்தின் மேலாளர். ஆனால் நிர்வாகம் நினைத்தது போல பாகற்காய் தண்டனை பெரிய பலனைக் கொடுக்கவில்லை. 50% ஊழியர்கள் வேலையை விட்டுச் சென்றுவிட்டனர். தண்டனையை கேள்விப்படும் புதியவர்கள், வேலையில் சேர மறுக்கிறார்கள்.

நாகரிக காலத்தில் இப்படியும் ஒரு தண்டனையா?

அமெரிக்காவின் நியு ஜெர்சியில் வசிக்கிறார் 36 வயது காட்டியா பேஜ். Lipoedema என்ற நீண்ட நாள் குறைபாட்டின் காரணமாக, காட்டியாவின் கால்கள் அசாதாரணமான அளவுக்கு பெரி தாகிவிட்டன. அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ இயலவில்லை. இப்படியே இருந்தால் விரைவில் காட்டியா மரணமடைந்துவிடக்கூடும் என்கிறார்கள். “நான் மிகவும் புத்திசாலி. ஆரோக்கியமான உணவு பழக்கம் கொண்டவள். அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு, என் கால்கள் பருத்துவிட்டதாகச் சொல்லும்போது நோயைவிட வலியாக இருக்கிறது. இது ஒரு அரிய வகை குறைபாடு. கால்களில் மட்டும் அளவுக்கதிகமாக கொழுப்பு சுரக்கிறது. சின்ன வயதில் இருந்தே கால்கள் பெரிதாக ஆரம்பித்துவிட்டன.

ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 20 வயதுக்கு மேல் மருத்துவத்தை நாடினோம். பெரிய அளவில் மருத்துவமும் இல்லை, நோயும் குணமாகவில்லை. என் குறைபாட்டை அறிந்தும் ஒருவர் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னார். ஓராண்டுக்கு முன்னால் என் பிரச்சினை திடீரென்று அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு காலும் 4 அடி அகலத்துக்கு பருத்துவிட்டன. நகரவே முடியவில்லை.

மருத்துவர்களைப் பார்த்தோம். தற்போது என் கால்கள் சற்று எடை குறைய ஆரம்பித்துள்ளன. விரைவில் நான் நடமாடும் அளவுக்கு முன்னேறிவிடுவேன். என் காதலரை மணப்பேன்” என்கிறார் காட்டியா பேஜ். “மிகவும் ஒத்துழைப்பு கொடுக்கிறார். மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார். அதனால் நீண்ட காலம் ஆனாலும் பிரச்சினையை ஓரளவு சரி செய்ய வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் காட்டியாவின் மருத்துவர்கள்.

விரைவில் உங்கள் கால்கள் நடமாடட்டும் காட்டியா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இலக்கை-முடிக்காத-ஊழியர்களுக்கு-பாகற்காய்-சாப்பிடும்-தண்டனை/article8900309.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வெயிலிலும் உருகாத ஐஸ்க்ரீம்!

 

 
masala_2947924f.jpg
 

சுட்டெரிக்கும் கோடையிலும் கைகளில் உருகி வழியாத ஐஸ்க்ரீம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ‘கேஸ்ட்ரோனட்’ என்ற பெயரில் உருகாத ஐஸ்க்ரீம் வந்துவிட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயது ராப் காலிங்டன் இந்த ஐஸ்க்ரீமை உருவாக்கியிருக்கிறார். “அஸ்ட்ரானட் ஐஸ்க்ரீம் என்பது உறைய வைக்கப்பட்ட, உலர வைக்கப்பட்ட ஐஸ்க்ரீம். சிறுவனாக இருந்தபோது விண்வெளி அருங்காட்சியகங்களில் உள்ள கடைகளில் இந்த ஐஸ்க்ரீம்களை சுவைத்திருக்கிறேன். செயற்கைப் பொருட்களைக்கொண்ட, விலை குறைவான ஐஸ்க்ரீம் இது. சூரியன் எவ்வளவு சுட்டெரித்தாலும் இந்த ஐஸ்க்ரீம் உருகாது. இப்போது நான் இயற்கை உணவுகளைத்தான் விரும்புகிறேன்.

இயற்கையான முறையில் அஸ்ட்ரானட் ஐஸ்க்ரீமை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். வேலையை விட்டுவிட்டேன். மூன்றரை வருடங்களில் அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா என 20 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்தேன். விதவிதமான அஸ்ட்ரானட் ஐஸ்க்ரீம்களை சுவைத்தேன். அந்த அனுபவத்தில் ‘சூப்பர் ப்ரீமியம் ஆர்கானிக் ஐஸ்க்ரீம்’ ஒன்றை உருவாக்கிவிட்டேன். தண்ணீரை வெளியேற்றி, காற்றை புகுத்துவதுதான் இந்த கேஸ்ட்ரோனட் ஐஸ்க்ரீம்.

இதைப் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டி தேவை இல்லை. தற்போது நியுயார்க் நகரில் மட்டுமே விற்பனையை ஆரம்பித்திருக்கிறேன். எதிர்காலத்தில் சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லும் திட்டமும் இருக்கிறது. மெக்ஸிகன் சாக்லேட் சிப், மின்ட் சாக்லேட் சிப், குக்கீஸ்-க்ரீம் போன்ற 3 சுவைகளில் கிடைக்கின்றன. 2 பார்களைக் கொண்ட ஒரு பாக்கெட்டின் அறிமுக விலை ரூ.400” என்கிறார் ராப் காலிங்டன்.

ஆஹா! வெயிலிலும் உருகாத ஐஸ்க்ரீம்!

உலகம் முழுவதும் போகிமான் கோ விளையாட்டு வேகமாக பரவி வருகிறது. நடந்துகொண்டே விளையாடக்கூடியது இது. ஆரம்பத்தில் சுவாரசியப்படுத்திய போகிமான் கோ, இன்று அதிக அளவில் விபத்துகள் நடப்பதற்குக் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்பெர்பேங்க், இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. “விளையாட்டில் அடிமையாகிவிட்டவர்கள் புறச் சூழல்களைப் பொருட்படுத்துவதில்லை.

அதனால் பலரும் மோசமான விபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள். சாலையைக் கடக்கும்போது கவனிக்காமல் வாகனங்களில் மோதிவிடுகிறார்கள். படிகளில் உருண்டு விழுகிறார்கள். மருத்துவமனைக்கு அதிகம் செலவு செய்கிறார்கள். எங்களிடம் போகிமான் கோ அப்ளிகேஷனை இலவசமாக பெற்றுக்கொண்டு, இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் போகிமான் கோ விளையாட்டின் மூலம் ஏற்படும் இழப்புக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை 50 ஆயிரம் ரூபாய் வரை அளிக்கிறோம். அதற்குரிய சாட்சிகளைப் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணத்தை வைத்து, பாதிப்பிலிருந்து மீண்டு விடலாம். போகிமான் கோ மோசமான விளையாட்டு, ஒருவேளை நீங்கள் அதை விளையாடியே ஆக வேண்டும் என்றால் உங்களுக்கு இன்சூரன்ஸ் தேவைப்படலாம் என்றுதான் விளம்பரம் செய்கிறோம்” என்கிறார் ஸ்பெர்பேங்க் தலைவர் மாக்ஸிம் செர்னின்.

குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடறது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வெயிலிலும்-உருகாத-ஐஸ்க்ரீம்/article8905348.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நடனமாடும் ராணுவ வீரர்கள்!

 

 
masala_2949136f.jpg
 

தென்கொரியாவையும் வடகொரியாவையும் பிரிக்கும் பகுதியைப் பாதுகாப்பது இரண்டு நாடுகளுக்குமே மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. இதனால் ராணுவ வீரர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் சோர்ந்து போய்விடுகின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தென்கொரிய அரசாங்கம், வாரம் ஒருமுறை பாலே நடனம் கற்றுக் கொடுத்து வருகிறது. கனமான ராணுவ ஷூக்களை அணிந்த கால்கள், மென்மையான பாலே ஷூக்களை அணிந்தபடி நடனமாடுகின்றன. “அரசாங்கம் என்னை அணுகியபோது, ராணுவ வீரர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று யோசித்தேன்.

நம்பிக்கை இல்லாமல்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இதோ பாலே வகுப்பு ஆரம்பித்து ஓராண்டு ஆகிறது. ஆரம்பத்தில் கற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் பாலே வகுப்பு புத்துணர்வு ஊட்டுவதாகச் சொன்னார்கள். எனக்கு நம்பிக்கை வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நடனத்தைக் கற்றுக்கொண்டார்கள். எனக்கும் ராணுவ வீரர்களுக்கும் மகிழ்ச்சியான நேரமாக மாறிவிட்டது” என்கிறார் பாலே நடனக் கலைஞர் லீ ஹையாங் ஜோ. “வடகொரிய எல்லையில் பாதுகாப்புப் பணி மிகவும் கடினமானது. பாலே நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகு மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுவிட்டேன். சக வீரர்களிடம் நட்பு பாராட்டத் தொடங்கிவிட்டேன்” என்கிறார் 23 வயது ராணுவ வீரர் கிம் ஜூ ஹையோக்.

நடனமாடும் ராணுவ வீரர்கள்!

இங்கிலாந்தில் வசிக்கும் ஹன்னா, 2 வாத்துகளை வளர்த்து வருகிறார். தினமும் 3 வேளை வாத்துகளைக் குளிக்க வைக்கிறார். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வாத்துகளுக்கு டயாபர் மாற்றுகிறார். சமையலறை, படுக்கையறை, தோட்டம் என்று வாத்துகள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன. “எனக்கு பாப்பி, பீச் வாத்துகளை சேர்த்து 3 குழந்தைகள். பிறந்த 10 வாரங் களில் என்னிடம் வந்து சேர்ந்தன. என்னை அம்மாவாகவே ஏற்றுக் கொண்டன. ஒரு நாளைக்கு டயாபருக்கே 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. எங்களுடன் அமர்ந்து இரண்டும் டிவி பார்க்கின்றன. நாய், பூனை போன்ற விலங்குகள்தான் பொதுவாக இப்படி அன்பாக இருக்கக்கூடியவை. பறவைகள் இப்படி இருப்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது!” என்கிறார் ஹன்னா.

டயாபர் வாத்துகள்!

நியுயார்க் நகரின் சுரங்கப் பாதைகளிலும் ரயில்களிலும் மிகப் பெரிய செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு வந்திருக்கிறது. செல்லப் பிராணிகளின் உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கைகளுக்கு அடக்கமான சிறு பிராணிகளை அழைத்துச் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. செல்லப் பிராணிகளைப் பிரிய மனமில்லாதவர்கள் பெரிய விலங்குகளையும் பையில் போட்டு, தோளில் மாட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். செல்லப் பிராணிகளை நடக்க வைத்து அழைத்துச் செல்வதுதான் குற்றமே தவிர, பையில் எடுத்துச் செல்வது குற்றமில்லை என்கிறார்கள்.

கட்டுப்பாட்டை மீறுவதற்கு எத்தனையோ வழிகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நடனமாடும்-ராணுவ-வீரர்கள்/article8910134.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: தேவை சில ஆயிரம் கிரஹாம்கள்!

 

 
masala_2950885f.jpg
 

கிரஹாமைப் பார்ப்பவர்கள் முதலில் முகம் சுளிப்பார்கள், பிறகு ஆச்சரியமடைவார்கள். கிரஹாம் மனிதன் சாயலாக இருந்தாலும் மனிதன் அல்ல. பாட்ரிசியா பிசினினி என்ற கலைஞரால் செதுக்கப்பட்ட விநோதமான மனித உருவம். சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வுக்காக இந்த கிரஹாமை உருவாக்கியிருக்கிறார் பாட்ரிசியா. ஹெல்மெட் போன்ற தலையும் காணாமல் போன கழுத்துமாக ஒருவித அச்சத்தைத் தருகிறது இந்த உருவம்.

“இன்று சாலைப் பாதுகாப்பு குறித்து பெரிதாக யாரும் அக்கறை கொள்வதில்லை. வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பொறுப்பற்றவர்களாக நடந்துகொள்கிறார்கள். இதனால்தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. வேகம் என்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாக மாறி வருகிறது. அதிவேகம் சிலவேளைகளில் கட்டுப்பாட்டை இழந்து பெரிய விபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேபோல நடந்து செல்பவர்கள் மொபைல் போனில் பேசிக்கொண்டோ, ஐபோனில் விளையாடிக் கொண்டோ சாலைகளைக் கடக்கிறார்கள். ஒருவேளை விபத்தில் சிக்கி, உயிர் பிழைக்க நேர்ந்தால், நீங்கள் கிரஹாமைப் போலத்தான் இருப்பீர்கள் என்பதைச் சொல்வதற்காகத்தான் இந்தச் சிலையை வடிவமைத்திருக்கிறோம். சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டும்போதும் சாலைகளைக் கடக்கும்போதும் கிரஹாம் கண் முன் வந்து, தவறு செய்யவிடாமல் பாதுகாப்பார்” என்கிறார் ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து விபத்து பிரிவின் தலைவர் ஜோய் கலாஃபியோர்.

மெல்போர்ன் ராயல் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் கிரஹாமை உருவாக்க, பாட்ரிசியாவுக்கு உதவி செய்திருக்கிறார்கள். “விபத்து ஏற்பட்டால் கபாலம் முன்னோக்கி நகர்ந்துவிடும். உடல் தூக்கி வீசப்படும்போது பின் மண்டையும் நொறுங்கும். கழுத்துப் பகுதி காணாமல் போகும் என்பதால் இப்படி வடிவமைத்திருக்கிறோம்” என்கிறார் மருத்துவர் கென்ஃபீல்ட். ஆகஸ்ட் 8 முதல் ஆஸ்திரேலியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக கிரஹாம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

நம்ம நாட்டுக்குத் தேவை சில ஆயிரம் கிரஹாம்கள்!

சீனாவின் டோங்யாங் நகரில் சிறுநீரில் ஊற வைக்கப்பட்ட முட்டைகளை மக்கள் சாப்பிடுகிறார்கள். சிறுவர்களின் சிறுநீரில் ஊறவைக்கப்பட்ட முட்டைகளைச் சாப்பிட்டால் வலிமை அதிகரிக்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், வெப்பத்தால் வரும் நோய்களைத் தடுக்கும் என்று சீன மக்கள் நம்புகிறார்கள். முதலில் முட்டைகளை சிறுநீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு ஒரு பானை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வெந்த முட்டைகளின் ஓடுகளை உடைத்து, முட்டையை மீண்டும் சிறுநீரில் ஊற வைக்க வேண்டும். இவற்றுடன் சில மூலிகைகளை சேர்க்க வேண்டும். வெளிர் மஞ்சளாக முட்டை மாறும். மஞ்சள்கரு பச்சையாக மாறிவிடும். உப்பு கரிக்கக்கூடிய இந்த முட்டைகளை மருந்தாக நினைத்து சாப்பிடுகிறார்கள். “சீன மருத்துவத்தில் இப்படி ஒரு விஷயமே இல்லை. சிறுநீரைக் குடித்தால் எந்த சத்தும் கிடைக்காது. சாதாரணமாக முட்டைகளை வேக வைத்துச் சாப்பிட்டாலே சத்துகள் கிடைக்கும்” என்கிறார் சீன மருத்துவரான ஜாங் யுமிங்.

விநோதமான நம்பிக்கைகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தேவை-சில-ஆயிரம்-கிரஹாம்கள்/article8915150.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கட்டிப்பிடி வைத்திய விடுதி!

 
masala_2392831f.jpg
 

உலகிலேயே மிக நட்பான உணவு விடுதியில் காலை, மதிய உணவுகளுடன் கட்டிப்பிடி வைத்தியமும் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் டிம் ஹாரிஸ்தான் இந்த நட்பு விடுதிக்குச் சொந்தக்காரர். 2010-ம் ஆண்டிலிருந்து உணவு விடுதியை நடத்தி வருகிறார். இதுவரை 19 ஆயிரம் கட்டிப்பிடிகளை நிகழ்த்தியிருக்கிறார். “கலோரி இல்லாத, சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய ஒரே மெனு கட்டிப்பிடித்தல்தான்.

இங்கே சாப்பிட வருகிறவர்களுக்கு இலவசமாக இந்தச் சேவையை அளிக்கிறேன். இதன் மூலம் எனக்கும் மகிழ்ச்சி, என் வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சி’’ என்கிறார் டிம். அமெரிக்காவிலேயே டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட ஒருவர் நடத்தும் உணவு விடுதி இதுதான். 26 வயது டிம் உணவு விடுதியை நடத்துவதுடன் பல்வேறு திறமைகளையும் பெற்றிருக்கிறார்.

நன்றாகப் படகு செலுத்துவார், பிரமாதமாக மீன் பிடிப்பார். சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றிருக்கிறார். “என் குறை தெரியாமல் வளர்த்து, பல திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய என் தந்தைதான் என் ரோல் மாடல்’’ என்கிறார் டிம். இந்த உணவு விடுதியில் சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.

நீங்களும் மற்றவர்களுக்கு ரோல் மாடல்தான் டிம்!

சிலியைச் சேர்ந்த பெர்னர்டா கலார்டோ என்ற பெண் இறந்த குழந்தைகளைத் தத்தெடுக்கிறார்.குப்பைகளில் தூக்கி எறியப்படும் இறந்து போன குழந்தைகளை எடுத்து, இறுதிச் சடங்கு செய்து, அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்கிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு செய்தித் தாளில் ஒரு குழந்தை குப்பையில் வீசப்பட்ட செய்தியைப் படித்தார் கலார்டோ. இதுபோன்று கைவிடப்பட்டு இறந்து போகும் குழந்தைகளுக்கு இறுதிச் சடங்கு செய்வது சிலி நாட்டில் அத்தனை எளிதான காரியம் இல்லை. குழந்தையைத் தத்தெடுத்தால்தான் இறுதிக் காரியம் செய்ய முடியும்.

அதனால் இறந்த குழந்தைகளைத் தத்தெடுத்து முறையாக அடக்கம் செய்கிறார். ஒவ்வொரு குழந்தையையும் தத்தெடுத்து பெயரும் சூட்டுகிறார். “விருப்பம் இல்லாமல் குழந்தை பெற்றுவிட நேர்ந்தால் குழந்தைக்காகக் காத்திருப்பவர்களிடம் தத்து கொடுத்துவிடுங்கள். ஓர் உயிரை இப்படி மோசமாகக் கொல்வதோ, தூக்கி எறிவதோ கொடூரமான காரியம். குடும்பத்தினராலேயே பாலியல் பலாத்காரத்துக்குப் பலியாகும் பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு விடுகின்றனர்’’ என்கிறார் கலார்டோ. இவரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர். 17 வயதில் அந்தக் கொடுமை நிகழ்ந்தபோது அவரது நண்பர்கள்தான் அவரையும் குழந்தையையும் காப்பாற்றினார்கள்.

அற்புதமான தாய்!

அமெரிக்காவைச் சேர்ந்த பீ வீ பம்ஸ் என்ற நிறுவனம் குழந்தைகளுக்கான ஷூக்களை வடிவமைத்திருக்கிறது. இந்தப் பிரத்யேக ஷுக்களில் ஹீல்ஸ் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. `உங்கள் குழந்தைகளின் முதல் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் எங்களுடையதாக இருக்க வேண்டும்’ என்று விளம்பரம் செய்கின்றனர். ஒன்று, இரண்டு வயது குழந்தைகளுக்கு ஹீல்ஸுடன் கூடிய ஷூக்கள் மிகவும் ஆபத்தானவை.

நடை பயில ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு நடையே ஒரு சவாலாக இருக்கும். அதில் ஹீல்ஸ் ஷூ போட்டுக்கொண்டு நடப்பது தேவையில்லாதது. குழந்தையிலேயே பாலினப் பாகுபாட்டை இந்த ஷூக்கள் வலியுறுத்துகின்றன என்கிறார்கள் பெற்றோர்கள். ஷூ தயாரித்த நிறுவனமோ, அம்மா ஃபேஷனுடன் இருக்கும்போது ஏன் குழந்தையும் ஃபேஷனுடன் இருக்கக்கூடாது என்கிறது. பலத்த எதிர்ப்புக் கிளம்பினாலும் இதுவரை ஆயிரம் ஷுக்கள் விற்பனையாகிவிட்டன என்கிறார்கள்.

சே… ஃபேஷன் மோகத்துக்கும் ஓர் அளவில்லையா…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கட்டிப்பிடி-வைத்திய-விடுதி/article7164282.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாராசூட் இல்லாமலே பறக்கும் ஸ்கை ட்ரைவிங் வீரர்!

 

 
masala_2952485f.jpg
 

தொழில்முறை ஸ்கைடைவராக இருக்கிறார் 42 வயது லூக் ஐகின்ஸ். 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட், விங்சூட் இல்லாமல் பறந்து வந்து உலக சாதனை நிகழ்த்த இருக்கிறார்! இதுவரை யாருமே இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டதில்லை. 12 வயதில் ஸ்கைடைவ் செய்ய ஆரம்பித்த லூக், தன் வாழ்நாளில் 18 ஆயிரம் முறை பாராசூட் மூலம் ஸ்கைடைவ் செய்திருக்கிறார். மிகக் கடினமான, ஆபத்தான ஸ்டண்ட்கள் செய்யும்போது, ஒருவர் கூடவே பாராசூட் உடன் பின்தொடர்வார். இப்படி 30 தடவை ஆபத்தான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் லூக். ஆனால் இந்த முறை தனியாக குதிக்க இருக்கிறார். ஒரு விளையாட்டு மைதானத்தில் பெரிய வலையைக் கட்டியிருக்கின்றனர்.

தரையில் இறங்காமல், வலையில் குதித்து உயிர் தப்ப வேண்டும். ‘‘30 வருடங்களாக ஏராளமான சாதனைகளை நிகழ்த்திவிட்டேன். இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பாராசூட் இன்றி குதிக்கும் முயற்சி தோன்றியது. ஒரு சின்ன தவறு நிகழ்ந்தாலும் மரணம் நிச்சயம். என் மனைவியையும் மகனையும் சம்மதிக்க வைத்திருக்கிறேன். தினமும் 1000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்துப் பயிற்சி எடுத்தேன். 34 முறை குதித்து, பயிற்சி எடுத்த பிறகு இனி தவறு நிகழ வாய்ப்பில்லை என்று தோன்றியது. எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்.

எனக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை. 25 ஆயிரம் அடியில் இருந்து பார்க்கும்போது மைதானம் ஒரு புள்ளியாகத் தெரிந்தது. கொஞ்சம் தவறவிட்டாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அதனால் மைதானத்தில் விளக்குகளை ஒளிர வைத்திருக்கிறோம். அந்த விளக்கு வெளிச்சத்தை வைத்துச் சரியாக வலையில் இறங்கப் போகிறேன்’’ என்கிறார் லூக் ஐகின்ஸ்.

பத்திரமாகச் சாதனை படைக்க வாழ்த்துகள் லூக்!

ரஷ்யாவில் உள்ள ஆல்வி கேஸ் ஸ்டேஷன் வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. பெண்களுக்கான நீச்சல் உடையிலும் குதிகால் உயரமான செருப்புகளுடனும் கேஸ் ஸ்டேஷனுக்கு வருபவர்களுக்கு முழு டேங்க் கேஸ் இலவசம். ஆரம்பத்தில் இந்த அறிவிப்பைக் கண்டவர்கள், மோசமான விளம்பர உத்தி என்றனர். ஆனால் நீச்சலுடையில் ஏராளமான பெண்கள் கேஸ் ஸ்டேஷனை நோக்கி வர ஆரம்பித்துவிட்டனர். இதைப் பார்த்த ஆண்களில் சிலரும் பெண்களின் நீச்சலுடையை அணிந்துகொண்டு, கேஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்.

‘‘ஒரு டேங்க் கேஸ் ஒரு வாரத்துக்குத் தாராளமாக வரும். 5 நிமிடங்கள் சிரிக்கிறார்கள் என்பதற்காக, இலவசமாகக் கிடைக்கும் ஒரு டேங்க் கேஸை இழக்க நான் விரும்பவில்லை’’ என்கிறார் ஓர் ஆண் வாடிக்கையாளர். ‘‘ஜூலை 21 அன்று இந்தத் திட்டத்தை ஆரம்பித்தோம். வயது, பாலினம் எதுவும் குறிப்பிடாததால் ஆண்கள், முதிய பெண்கள், குழந்தைகள் நீச்சல் உடைகளுடன் வர ஆரம்பித்துவிட்டனர். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. எப்பொழுதும் வரிசையில் மக்கள் இருந்துகொண்டே இருக்கின்றனர்’’ என்கிறார் கேஸ் ஸ்டேஷன் நிர்வாகி.

இப்படி எல்லாம் ஒரு விளம்பரம் அவசியமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பாராசூட்-இல்லாமலே-பறக்கும்-ஸ்கை-ட்ரைவிங்-வீரர்/article8920980.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: செல்ஃபி அங்கிள்!

 

 
masala_2391764f.jpg
 

சீனாவின் ஷென்யாங் நகரைச் சேர்ந்தவர் டெங் ஜியாஸி. இவர் டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார். உலகிலேயே மிக அதிகமான செல்ஃபிகளை எடுத்தவர் இவராகத்தான் இருப்பார் என்கிறார்கள். தன்னுடைய டாக்ஸியில் ஏறும் வாடிக்கையாளர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்று கோரிக்கை வைக்கிறார். சம்மதிப்பவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்.

இதுவரை 30 ஆயிரம் செல்ஃபி படங்களை எடுத்திருக்கிறார் டெங். தினமும் 80 வாடிக்கையாளர்கள் இவரது டாக்ஸியில் ஏறுகிறார்கள். இவர்களில் 20 பேராவது செல்ஃபி எடுப்பதற்கு ஒப்புக்கொள்கிறார்கள். `’என்னுடைய பேச்சையும் செயலையும் பார்த்துவிட்டு, வாடிக்கையாளர்கள் கட்டணத்தை விட அதிகமாகப் பணம் தருவார்கள். ஆனால் நான் அதைப் பெற்றுக்கொள்ள மாட்டேன்.

உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைத்தால் போதும். அதற்குப் பதிலாக செல்ஃபி கோரிக்கையை மட்டும் வைப்பேன்’’ என்கிறார் டெங். வாடிக்கையாளர்களில் சிலர் மீண்டும் இவர் டாக்ஸியில் ஏறும்போது, தாங்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். டெங் அங்கிள் என்று அன்புடன் அழைக்கிறார்கள். இதை விட வேறு என்ன வேண்டும் என்கிறார் டெங்.

செல்ஃபி அங்கிள்னு பேரை மாத்திடலாம்!

தனக்கென்று ஓர் ஐரோப்பிய நாட்டை உருவாக்கியிருக்கிறார் 31 வயது விட் ஜெட்லிகா. 3 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட பகுதி, செர்பியாவுக்கும் குரொவேஷியாவுக்கும் இடையில் இருக்கிறது. செக் குடியரசைச் சேர்ந்த ஜெட்லிகா ஓர் அரசியல்வாதி. தன்னுடைய லட்சியத்தை செக் குடியரசில் நிறைவேற்ற முடியவில்லை என்று, இந்தப் பகுதியை வாங்கி `லிபர்லேண்ட்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இந்த நாட்டுக்கு என்று தனிக்கொடி, தனி ராணுவம், தனி அரசாங்கம் என்று திட்டமிட்டிருக்கிறார். இதற்காக நிறைய நன்கொடைகளையும் பெற்று வருகிறார். லிபர்லேண்டில் குடியேறுவதற்காக ஏராளமானவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். முதலில் 5 ஆயிரம் பேர் குடியேற்ற உரிமையைப் பெற இருக்கிறார்கள். 35 ஆயிரம் மக்கள் வரை இங்கே வசிக்கலாம் என்கிறார் ஜெட்லிகா.

நானே ராஜா… நானே மந்திரி…

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசிக்கிறார் 20 வயது கிறிஸ்டியன். அவருடைய முகத்தில் மகனின் படத்தை டாட்டூவாக வரைந்து வைத்திருக்கிறார். கடந்த ஜூலை மாதம் மகன் பிழைக்க மாட்டான் என்பதை அறிந்தவுடன் ஒரு தந்தையாக கிறிஸ்டியனுக்கு அந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

மகன் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கன்னத்தில் படத்தை டாட்டூ குத்திக்கொண்டார். பார்ப்பவர்கள் அத்தனை பேரும் கிறிஸ்டியனின் செயலுக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். எதைப் பற்றியும் கிறிஸ்டியன் கவலைப்படவில்லை. டாட்டூ போட்டுக்கொண்ட சில நாட்களில் மகனை இழந்துவிட்டார்.

அன்பான அப்பா…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-செல்பி-அங்கிள்/article7161575.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: விரைவில் தும்மலில் இருந்து விடுபடட்டும் குழந்தை...

 

lisa_2953536f.jpg
 

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் லிசா மச்சென்பர்க், ஹிப்னோதெரபிஸ்ட். ஆழ்நிலை தூக்கத்தின் மூலம் பதற்றம், வலி போன்றவற்றை குணமாக்குவதோடு, குழந்தைகளை கையாள்வதற்கும் இந்தக் கலையை பயன்படுத்தி வருகிறார். இதற்கு ‘Hypno Parenting’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். “தொடக்கத்தில் என் குழந்தைகளிடம்தான் இந்தக் கலையை செய்து பார்த்தேன். குழந்தைகளுக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நின்றது. தலைவலி, வயிற்று வலி என்று எப்பொழுதும் ஏதாவது வலியைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். என்னுடைய ஹிப்னோ தெரபியால் அதுவும் மறைந்தது. அடம் பிடிக்கும் குழந்தைகள், சொல் பேச்சைக் கேட்காத கணவர் என்று என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஹிப்னோ தெரபி மூலம் அருமையான மனிதர்களாக மாற்றிவிட்டேன். எங்கள் வீடே அற்புதமாக இருக்கிறது” என்கிறார் லிசா. 17 வயது ரேனா, “எங்க அம்மா கொடுக்கும் ஹிப்னோ தெரபி மூலம் நாங்கள் அனைவருமே அதிகப் பயன் அடைந்திருக்கிறோம். பல நோய்கள் குணமாகியுள்ளன. மன அழுத்தம் வருவதில்லை. தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது” என்கிறார். ஹிப்னோ தெரபி சிறந்த பெற்றோர்களை உருவாக்கும் கருவி என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை. ஆனால் நம்பிக்கையுடன் செய்யும்போது சில பலன்கள் கிடைக்கவே செய்கின்றன என்கிறார்கள். “சண்டை, குழப்பம் நிலவிய குடும்பங்களில் ஹிப்னோ தெரபிக்கு பிறகு அமைதி திரும்பியிருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பல குழந்தைகளின் கல்வித்திறன் அதிகரித்திருக்கிறது. 23 ஆண்டுகளில் 1,000 குழந்தைகளுக்கு ஹிப்னோ தெரபி அளித்திருக்கிறேன். ஒருமணி நேரத்துக்கு 8,400 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன். பெற்றோருக்கு ஹிப்னோ தெரபியை கற்றுக் கொடுக்கிறேன். அவர்கள் வீட்டில் தங்கள் குழந்தைகளுக்கு செய்துகொள்ளலாம். குழந்தைகளை எல்லா விதங்களிலும் சிறந்தவர்களாக வளர்க்கும்போது, எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் உருவாகும். நாட்டில் அமைதி நிலவும்” என்கிறார் லிசா.

வசியப்படுத்துவதைவிட இயல்பாகக் குழந்தைகளைக் கையாள்வதுதானே சிறந்தது… இயற்கையானது…

ங்கிலாந்தில் வசிக்கிறார் ஈரா சக்ஸேனா. ஒருமுறை தும்ம ஆரம்பித்தால் அவரால் நிறுத்தவே முடிவதில்லை. ஒரு நிமிடத்தில் 10 முறை ஆக்ரோஷமாக தும்முகிறார். “3 வாரங்களுக்கு முன்பு ஒருநாள் காலை இந்த விசித்திர தும்மல் ஆரம்பித்தது. என் மகளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. எத்தனையோ மருத்துவர்களை பார்த்துவிட்டோம். காரணமும் புரியவில்லை, சிகிச்சையும் கிடைக்கவில்லை. இன்று ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முறை தும்மும் அளவுக்கு வந்துவிட்டாள். பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தூங்கும்போது மட்டும் தும்மல் வருவதில்லை. அந்த வகையில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம். இதுவரை ஈராவுக்கு எந்தவிதமான அறுவை சிகிச்சைகளும் செய்ததில்லை. தொடர்ந்து மருந்துகளும் கொடுத்ததில்லை. என்ன அலர்ஜி என்றே புரியவில்லை. தூங்கி எழுந்தவுடனே தும்மல் வர ஆரம்பித்துவிடுகிறது. மிகவும் சோர்ந்து விடுகிறாள். சில நேரம் 25 நிமிடங்களுக்குக் கூட விடாமல் தும்முகிறாள். பல மருத்துவ முறைகளை முயற்சி செய்து, இறுதியில் ஹோமியோபதிக்கு வந்திருக்கிறேன். இதிலாவது என் மகளின் பிரச்சினை சரியாக வேண்டும்” என்கிறார் ஈராவின் அம்மா.

விரைவில் தும்மலில் இருந்து விடுபடட்டும் குழந்தை…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விரைவில்-தும்மலில்-இருந்து-விடுபடட்டும்-குழந்தை/article8924576.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசலா: நவீன குகை மனிதன்!

 

 
kugai_2955852f.jpg
 

அர்ஜென்டினா காடுகளில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார் 79 வயது பெட்ரோ லூகா. தாகம் எடுத்தால் ஓடைகளில் வரும் நீரைப் பருகுகிறார். பசி எடுத்தால் வேட்டையாடுகிறார். பெரிய குகையில் வாழும் லூகாவுக்கு 2 ஆடுகளும் 11 சேவல்களும்தான் துணை.

"ஆடுகளும் சேவல்களும் பகல் முழுவதும் காடுகளில் சுற்றிவிட்டு, இரவில் குகைக்குத் திரும்புகின்றன. குகையில் நெருப்பை மூட்டி, புகையை உண்டாக்குவேன். கொடூர விலங்குகள் நெருப்பைக் கண்டவுடன் விலகிச் சென்றுவிடுகின்றன. எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. மாதம் ஒருமுறை நகருக்குச் சென்று, தேவையானப் பொருட்களை வாங்கி வருவேன். காட்டுக்குள் வெகு தூரம் நடந்தால்தான் குகைக்கு வர முடியும். அதனால் பெரும்பாலும் மனிதர்கள் வருவதில்லை.

எப்போதாவது சுற்றுலாப் பயணிகள், ஆராய்ச்சியாளர்கள் வந்து செல்கிறார்கள். சிறிய ரேடியோ ஒன்றுதான் என்னிடம் இருக்கும் ஒரே தொழில்நுட்பக் கருவி. இங்கே சிக்னல் கிடைக்காததால் அதுவும் வேலை செய்யாது. அதிகாலை 3 மணிக்கே சேவல்களும் காகங்களும் எழுப்பிவிடுகின்றன. கடுமையான குளிரை என்னால் இந்த வயதிலும் சமாளிக்க முடிகிறது. கால்நடையாகவே ஐரோப்பா முழுவதும் சுற்றி வரலாம் என்று நினைப்பேன். ஆனால் நடுவில் இருக்கும் கடலை எப்படிக் கடப்பது என்று விட்டுவிட்டேன். கடினமான வாழ்க்கையாக இருந்தாலும் இந்தக் குகை வாழ்க்கைதான் எனக்குப் பிடித்திருக்கிறது" என்கிறார் லூகா.

நவீன குகை மனிதன்!

*

ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் உலகம் முழுவதும் கருதப்படும் காய்களில் ஒன்று வெங்காயம். வெங்காயத்தின் அற்புதமான சுவைக்காக ஏராளமாகக் கண்ணீர் விடவேண்டியிருக் கிறது. சமையலறைகளில் கண்ணீர் விடும் காட்சிக்கு முடிவு கட்டி யிருக்கிறது ஜப்பானிய நிறுவனம். ஹவுஸ் ஃபுட்ஸ் க்ரூப் கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை முதல் முறை உலகத்துக்கு அறிமுகம் செய்திருக்கிறது. இந்த வெங்காயத்தின் பெயர், ‘ஸ்மைல் பால்’. வெங்காயங்களை உரிக்கும்போதும் நறுக்கும்போதும் கண்ணீர் வராது,

முகத்தில் புன்னகைத் தவழும் என்பதால் இந்தப் பெயர். 20 ஆண்டுகளாகச் செய்த ஆராய்ச்சிகளின் பலனாக இந்த வெங்காயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வெங்காயத்தை நறுக்கும் போது அதிலுள்ள உயிரணுக்கள் சேதமடைந்து, எளிதில் ஆவியாகின் றன. இவை நம் கண்களைத் தாக்கி, கண்ணீரை வரவழைக்கின்றன. வெங்காயத்தின் சுவைக்கோ, ஆரோக்கியத்துக்கோ பாதிப்பு இல்லாமல், கண்ணீர் வரவழைக்கும் நொதிகளின் சக்தியை மட்டும் குறைத்திருக் கிறார்கள். 2002-ம் ஆண்டு இந்த ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டு, வியாபார ரீதியில் கண்ணீர் வரவழைக் காத வெங்காயங் களை உருவாக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தனர்.

தற்போது பரிசோதனை முறையில் 500 கிலோ வெங்காயங்களை, ஜப்பானிய கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இந்த வெங்காயங்களை நறுக்கும்போதோ, பச்சையாகச் சாப்பிடும்போதோ கண்ணீர் வரவில்லை. சாதாரண வெங்காயங்களை விட 3 மடங்கு விலை அதிகம். இந்த வெங்காயங்களை மக்கள் எப்படி அங்கீகரிக் கிறார்கள் என்பதை வைத்தே, இவை உலகச் சந்தைக்கு வருவது குறித்து தீர்மானிக்க முடியும் என்கிறது ஹவுஸ் ஃபுட்ஸ் க்ரூப்.

அட, சிரிக்க வைக்கும் வெங்காயங்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசலா-நவீன-குகை-மனிதன்/article8931919.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: துடுப்புப் போடுவதையும் படிகளில் ஏறுவதையும் இணைத்து விளையாட்டு

 

 
masala_2957102f.jpg
 

சிம்ஜிம் புதிய வீடியோ கேம். துடுப்புப் போடுவதையும் படிகளில் ஏறுவதையும் இணைத்து உருவாக்கப்பட்ட விளையாட்டு. சிம்ஜிம் விளையாடினால் மொத்த உடலுக்கும் பயிற்சி கிடைத்துவிடும். சிகாகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சிம்ஜிம் விளையாட்டை உருவாக்கியிருக்கிறது. மலைப் பிரதேசத்தில் நடப்பது சிரமமாக இருக்கும் அல்லவா? அதேபோல திரையில் மலைப் பிரதேசத்தில் செல்லும்போது கால்களுக்கு அதிக சக்தி கொடுத்து மிதிக்க வேண்டும். கனமான பொருட்களைத் தூக்குவது சிரமம். அதுவே ஒரு நெம்புகோல் இருந்தால் எளிதாகத் தூக்கிவிடலாம்.

இந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்து, கைகளுக்கும் விளையாட்டுகளை உருவாக்கியிருக்கிறார்கள். சிம்ஜிம் திரையில் இந்த விளையாட்டு மூலம் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன, நேரம் போன்றவை காண்பிக்கப்படுகின்றன. சிம்ஜிம் கருவியின் விலையை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சிம்ஜிம் ஸ்டுடியோவில் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம். நீண்ட தூரம் நடந்து செல்லும் போகிமான் கோ விளையாட்டைவிட, சிம்ஜிம் சிறந்தது என்கிறார்கள்.

டூ இன் ஒன் சிம்ஜிம்!

தென் அமெரிக்காவின் மிக ஆபத்தான போதை மருந்து கடத்தல்காரர்களில் ஒருவர் ஜார்விஸ் சிம்மெனெஸ் பாவோ. 8 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டு, டாகும்பு சிறையில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து ஜார்விஸ் தப்பிக்க இருக்கிறார் என்ற செய்தியால் பராகுவே காவல்துறை அவரது அறையைச் சோதனை செய்யச் சென்றது. அறையைப் பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

அது ஒரு சிறை அறையாகத் தெரியவில்லை. நவீன ஆடம்பர வீடாகக் காட்சியளித்தது. 3 அறைகள் கொண்ட பெரிய வீடு. குளிர்சாதன வசதி, நவீன குளியலறை, அட்டகாசமான சமையலறை, நூலகம், டிவிடிகள், மிகப் பெரிய டிவி, சோபா, நாற்காலிகள், இன்டர்நெட் இணைப்பு, செல்போன் என்று அத்தனை வசதிகளும் இருந்தன. சிறைக் கைதிகள் விரும்பினால், கட்டணத்தைச் செலுத்திவிட்டு, ஆடம்பர அறைகளில் தங்கிக்கொள்ளலாம் என்ற வசதி அந்தச் சிறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை கொடுத்த அறிக்கைக்குப் பிறகு, ஜார்விஸ் சொகுசு அறையில் இருந்து வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

அவர் வசித்த சொகுசு அறை இடிக்கப்பட்டுவிட்டது. ஜார்விஸ் சிறையில் சொகுசாக வாழ்ந்த செய்தி, பராகுவே நீதித் துறையை அசைத்துப் பார்த்திருக்கிறது. ஜார்விஸின் வழக்கறிஞர் லாரா அகாசுசோ, ‘’என் கட்சிக்காரர் சொகுசு அறைக்காக ஏராளமானவர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார். சட்டத்துறையைச் சேர்ந்த 6 வல்லுநர்கள், 6 சிறை இயக்குநர்களுக்குப் பணம் கொடுத்தே, இந்த வசதியைப் பெற்றிருக்கிறார். ஜார்விஸைக் குறை சொல்வதை விட்டு, அவர்களை விசாரிக்க வேண்டும்’’ என்கிறார்.

அனைவர் மீதும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சக கைதிகளோ, ஜார்விஸ் மிக அன்பான மனிதர் என்று புகழ்கிறார்கள். சிறையில் உள்ள கால்பந்து மைதானத்தையும் நூலகத்தையும் சீரமைத்துக் கொடுத்திருக்கிறார். சமையல் கலைஞர்களை நியமித்து, சுவையான உணவுகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

அதிநவீன ஆடம்பரச் சிறை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-துடுப்புப்-போடுவதையும்-படிகளில்-ஏறுவதையும்-இணைத்து-விளையாட்டு/article8937071.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஆன்லைன் அன்பு!

 
masala_2958264f.jpg
 

ஹாலந்தில் வசிக்கிறார் 41 வயது பீட்டர் சிர்க். 26 வயது ஸாங் என்ற சீனப் பெண் ஆன்லைன் மூலம் பீட்டருக்கு அறிமுகமானார். நண்பர்களாக பழகிய இவர்கள் காதலர்களாக மாறினர். 4,500 மைல்கள் தூரத்தில் இருக்கும் ஸாங்கை நேரில் சந்திக்க முடிவு செய்து விசா வாங்கினார் பீட்டர். தான் நேரில் சந்திக்க வருவதாக ஸாங்குக்கு தகவல் கொடுத்தார். சீனாவின் சாங்ஷா விமான நிலையத்தில் ஆவலுடன் இறங்கிய பீட்டர், ஸாங்கைத் தேடினார். அவர் வரவே இல்லை.

ஆன்லைனில் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. ஆனாலும் ஸாங் வருவார் என்று விமான நிலையத்திலேயே காத்திருந்தார் பீட்டர். ஒரே இடத்தில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அமர்ந்திருந்தார். அவரது உடல்நிலை மோசமானது. பத்தாவது நாள் அவரை மருத்துவமனையில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவரிடம் விசாரித்தபோது, விஷயத்தைச் சொன்னார். அவரைப் படம் பிடித்து, காதல் தோல்வி என்று இணையத்தில் செய்தியை வெளியிட்டனர். சீன பத்திரிகையாளர்கள் சிலர் பீட்டருக்கு உதவும் எண்ணத்தில் ஸாங்கைத் தேடிச் சென்றனர்.

அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்காக பக்கத்து நகருக்கு சென்றிருப்பது தெரிந்தது. “பீட்டர் பயணம் குறித்து என்னிடம் தெரிவித்தது உண்மைதான். ஆனால் நான் விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். பல ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து நிற்பார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் பழக ஆரம்பித்து 2 மாதங்கள்தான் ஆகின்றன. காதலின் முதல் படியில்தான் இருக்கிறோம். அதற்கே பீட்டர் இவ்வளவு அன்பு செலுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவே இல்லை.

நானும் சர்ஜரிக்காக ஆன்லைன் பக்கம் வரவில்லை. பீட்டர் மீது இப்போது இன்னும் அன்பு அதிகரித்திருக்கிறது. எங்கள் காதலைத் தொடர்வோம். நான் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு, நிச்சயம் பீட்டரை சந்திப்பேன்” என்கிறார் ஸாங். பீட்டரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, ஹாலந்துக்கே அனுப்பி வைத்து விட்டனர்.

பீட்டரின் அன்பைப் புரிந்துகொள்ளுங்கள் ஸாங்!

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் வசிக்கிறது 5 மாத ஹெர்மன் பூனை. பெரிய கண்களைப் பார்க்கும்போது அச்சம் ஏற்படும். “ஹெர்மனுக்கு பிறந்ததில் இருந்தே பெரிய கண்கள். இதனால் இமைகளை மூட முடிவதில்லை. தூங்கும்போதுகூட கண்களைத் திறந்தபடியேதான் தூங்கும். நான் பூனைகளைத் தத்தெடுக்கும் அமைப்புக்கு சென்றபோது, பார்த்த உடனே என்மீது தாவிக் குதித்துவிட்டது ஹெர்மன்.

பார்க்க அச்சம் தருவதாக இருந்தாலும் மிகவும் அன்பானது, சாதுவானது. என்னுடைய ஷூக்களை வைத்து விளையாடுவது என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு குறைபாட்டின் காரணமாகவே ஹெர்மனின் கண்கள் பெரிதாக இருக்கின்றன, அறுவை சிகிச்சை செய்தால் சரியாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஹெர்மனால் அந்த கஷ்டத்தைத் தாங்க முடியுமா என்று யோசிக்கிறேன்” என்கிறார் உரிமையாளர் ஷிர்லி.

இமைக்காத பூனை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆன்லைன்-அன்பு/article8941113.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விமான உணவு விடுதி!

 
masala_2960055f.jpg
 

சீனத் தொழிலதிபர் லி லியாங், ஒரு விமானத்தை உணவு விடுதியாக மாற்றியிருக்கிறார்! வுஹான் நகரில் போயிங் 737 விமானம், சீனாவின் முதல் விமான உணவு விடுதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. “சென்ற ஆண்டு விமானத்தை வாங்கினேன். 4 மாதங்களில் இந்தோனேஷியாவுக்கும் வுஹான் நகருக்கும் 8 முறை சென்று வந்தது.

விமானத்தின் பாகங்கள் பலவற்றை மாற்ற வேண்டியிருந்தது. அதற்கு ஏராளமாக பணம் தேவைப்பட்டது. அப்போதுதான் விமானத்தை உணவு விடுதியாக மாற்றிவிடலாம் என்ற யோசனை உதித்தது. இது சாதாரண உணவு விடுதியாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். நிறைய செலவு செய்து, பிரமாதமான உணவு விடுதியாக மாற்றிவிட்டேன். இரவு உணவு ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. காக்பிட் பகுதியில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் இதைவிட இரு மடங்கு அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்’’ என்கிறார் லி லியாங்.

விமானத்தில் உணவு என்றால் விலை குறைவாகவா இருக்கும்?

ஜப்பானைச் சேர்ந்த ரிசா ஹிராகோ, புகழ்பெற்ற மாடல். ஃபேஷன் பிராண்ட்களுக்கும் இசை வீடியோக்களுக்கும் மாடலாக இருந்து வருகிறார். சமீபத்தில் ரிசா வெளியிட்டிருக்கும் படங்கள் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன. 45 வயது ரிசா, 18 வயது பெண்ணைப் போல அவ்வளவு இளமையாக இருக்கிறார்!

“ஆரோக்கியமான வாழ்க்கை முறையால்தான் நான் இவ்வளவு இளமையாக இருக்கிறேன். ஆரோக்கியமான, சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுகிறேன். வீட்டில் தயாரிக்கும் பழச் சாறுகளையும் தேநீரையும் மட்டுமே பருகுகிறேன். பாதாம் பால், பாதாம் வெண்ணெய், தேன், வாழைப்பழம் போன்றவை என் விருப்பமான உணவுகள். ரசாயனம் கலக்காத இயற்கையான அழகுப் பொருட்களைதான் பயன்படுத்துகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்கிறார் ரிசா.

45 வயதிலும் அசத்தும் மாடல்!

ப்ளோரிடாவைச் சேர்ந்த சார்லஸ் வியாண்ட் சாகசக்காரர். கடந்த ஜனவரி மாதம் முதலைகளுடன் சேர்ந்து நீச்சலடித்தார். எல்லோரும் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, எந்தவிதத் தீங்கும் இன்றி, பத்திரமாக வெளியே வந்தார். தற்போது ஆடைகள் இன்றி, தேனீக்களுடன் 45 நிமிடங்கள் நின்று, அடுத்த சாகசத்தை அரங்கேற்றி இருக்கிறார். “சாகசம் செய்வது என்றால் அத்தனை சந்தோஷமாக இருக்கும். 45 நிமிடங்கள் தேனீக்களுடன் இருந்தேன்.

சில தேனீக்கள் என் உடலிலும் முகத்திலும் ஊர்ந்தன. ஆனால் ஒரு தேனீ கூட என்னைக் கொட்டவில்லை. உண்மையில் நானே இதை எதிர்பார்க்கவில்லை. 100 தேனீக்களிடமாவது கடி வாங்கப் போகிறோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பத்திரமாகத் திரும்பி வந்தேன். 45 நிமிடங்களும் எந்த நேரமும் கடிக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே இருந்தது பெரிய அவஸ்தையாக இருந்தது. முதலைகளுடன் நீந்தியபோது கூட நான் இவ்வளவு அச்சப்படவில்லை. சின்னஞ்சிறு தேனீக்களைக் கண்டுதான் அஞ்சினேன். எல்லாம் நல்லவிதமாக முடிந்தது’’ என்கிறார் சார்லஸ் வியாண்ட்.

சார்லஸுக்கு பொழுதுபோக்கே சாகசம்தானோ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விமான-உணவு-விடுதி/article8946932.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வண்ணத்துப்பூச்சிகளின் காவலர்!

 

 
 
masala_2961463f.jpg
 

டிம் வாங் வட அமெரிக்க வண்ணத்துப்பூச்சி கள் (California pipevine swallowtail) மிக அற்புதமான உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. நகரங்களில் ஏற்படும் அபரிமிதமான முன்னேற்றங்களால் சான் பிரான்ஸ்சிஸ்கோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் அழிந்து வருகின்றன. தனி ஒரு மனிதனாக பைப்வைன் ஸ்வாலோடெயில் வண்ணத்துப்பூச்சிகளின் அழிவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார் டிம் வாங். நீர்வாழ் உயிரியலாளராக இருக்கும் டிம் வாங், தன்னுடைய ஓய்வு நேரங்களை வண்ணத்துப்பூச்சிகளுக்காகவே செலவிட்டு வருகிறார். ‘‘சின்ன வயதில் இருந்து வண்ணத்துப்பூச்சிகள் மீது ஆர்வம் அதிகம். கம்பளிப்பூச்சியில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாறும் மேஜிக் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

விடுமுறை நாட்களில் வண்ணத்துப்பூச்சிகளைத் தேடிக் கிளம்பிவிடுவேன். அவற்றின் வாழ்க்கை முறையை அனுபவத்தில் அறிந்துகொண்டேன். பைப்வைன் வண்ணத்துப்பூச்சிகள் அழிந்து வருகிற தகவல் என்னைத் துயரத்தில் ஆழ்த்தியது. ஏதாவது செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டேன். கலிபோர்னியா பைப்வைன் இலைகளைத்தான் இந்த வண்ணத்துப்பூச்சிகள் உண்டு வளர்கின்றன. பல இடங்களில் இந்தச் செடிகளைத் தேடி அலைந்தேன். இறுதியில் ஒரு தாவரவியல் பூங்காவில் கண்டுபிடித்து, சில கிளைகளைப் பறித்து வந்தேன். என் தோட்டத்தில் இந்தச் செடிகள் நன்றாக வளர்ந்தன. வண்ணத்துப்பூச்சிகளைத் தோட்டத்தில் விட்டேன். விரைவில் இந்தச் செடிகளை நாடி ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வர ஆரம்பித்துவிட்டன. அவை மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி, முட்டைகளை இட்டன.

முட்டைகளில் இருந்து லார்வா வெளியேறி, பைப்வைன் இலைகளைத் தின்று பியூபாவாக மாறின. பியூப்பா தங்களைச் சுற்றிக் கூடுகளைக் கட்டிக்கொண்டன. 4 வாரங்களுக்குப் பிறகு கூடுகளை உடைத்துக்கொண்டு வண்ணத்துப்பூச்சிகளாக வெளிவந்தன. இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. வெற்றிகரமாக வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதற்காகச் சூழலியலாளர்கள் பாராட்டுகிறார்கள். ஏற்கெனவே இதுபோன்ற திட்டங்களைப் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டபோது, அவை தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஆனால் நான் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டேன். மனிதர்களின் செயல்களால்தானே இவை ஆபத்தான நிலையில் இருக்கின்றன. அதை மனிதர்களே சரி செய்வதுதானே முறை’’ என்கிறார் டிம் வாங்.

வண்ணத்துப்பூச்சிகளின் காவலர்!

பிரிஸ்பேனைச் சேர்ந்த ஹோலி ஹோட்சனுக்கு 12 வார கர்ப்பத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தையின் வயிற்றில் துளை உருவாகி, குடல் வெளியே வந்திருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் குழந்தை பிறந்தால் பல சிக்கல்கள் உருவாகலாம், இயல்பான குழந்தையாக வளர வாய்ப்பில்லை என்றனர். ஆனால் ஹோலி ஹோட்சனுக்கும் அவரது கணவருக்கும் கருக்கலைப்புச் செய்ய விருப்பம் இல்லை. மருத்துவர்களின் எச்சரிக்கையைப் புறந்தள்ளினர். ஏழாவது மாதத்திலேயே பிறந்த குழந்தையின் குடல் முழுவதும் வெளியில் இருந்தது. ‘‘இந்தக் காட்சியைக் கண்டபோது உடைந்து போனேன். அழுகையும் கோபமும் வந்தது. எல்லோரும் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டிருக்கலாம் என்றனர்.

கணவர் என்னைத் தேற்றினார். எல்லாக் குழந்தைகளையும் போல என் குழந்தையும் அழகாக இருந்தது. சிரித்தது. 8 வாரங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம், குடல் வயிற்றுக்குள் வைக்கப்பட்டது. இன்று 7 மாதக் குழந்தையாக எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறான் டெடி. மருத்துவர்கள், உறவினர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கி, ஆரோக்கியமாக இருக்கிறான்’’ என்று மகிழ்கிறார் ஹோலி ஹோட்சன்.

இனி குறையொன்றும் இல்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வண்ணத்துப்பூச்சிகளின்-காவலர்/article8952070.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: எளிய வாழ்க்கைக்கு ஏராளமாகச் செலவு செய்ய வேண்டுமா?

 

malai_2962641f.jpg
 

சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் 6,463 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது நல் ஸ்டெர்ன் தங்கும் விடுதி. குறைவான பொருட்களைக் கொண்டு எளிமையான வாழ்க்கை என்ற நோக்கத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. ஆல்ப்ஸ் மலையில் திறந்தவெளியில் படுக்கையை அமைத்திருக்கிறார்கள். தரை இருக்கிறது. சுவர்கள் இல்லை. கழிப்பறை இல்லை. திறந்தவெளியில் 360 டிகிரி கோணத்தில் ஆல்ப்ஸ் மலையின் அழகைக் கண்டு ரசிக்கலாம். ‘‘இயற்கைக்கு எந்தவிதத்திலும் தீங்கு இழைக்காமல், மிகக் குறைவான பொருட்களைக் கொண்டு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்தத் தங்கும் விடுதியை ஆரம்பித்திருக்கிறோம். பெரிய படுக்கை, 2 விளக்குகள், 2 நாற்காலிகள், சிறிய மேஜை மட்டுமே இங்கே வைத்திருக்கிறோம். அருகில் இருக்கும் மரத்தால் ஆன சிறிய வீட்டில் இருந்து உணவுகளைத் தயாரித்து, வழங்குகிறோம். ஒரு இரவுக்கு 18 ஆயிரம் ரூபாய் கட்டணம். மோசமான வானிலை என்றால் எந்த நேரத்திலும் விடுதியை மூடிவிடுவோம். ஆகஸ்ட் வரை தங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். பிரமாதமாகத் தொழில் போய்க்கொண்டிருக்கிறது’’ என்கிறார் நிறுவனர் டேனியல் சார்போன்னியர். ‘‘திறந்தவெளி தங்கும் விடுதி வித்தியாசமான அனுபவங்களைத் தருகிறது. ஆல்ப்ஸ் மலையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. சாப்பிடவோ, குடிக்கவோ என்ன கேட்டாலும் தருகிறார்கள். கழிவறை வசதி இல்லை என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கழிவறைக்காக 10 மைல் தூரம் பயணிக்க வேண்டும் என்பதுதான் இந்த விடுதியில் இருக்கும் ஒரே குறை’’ என்கிறார் வாடிக்கையாளர் ஆக்னஸ்.

எளிய வாழ்க்கைக்கு ஏராளமாகச் செலவு செய்ய வேண்டுமா?

ங்கிலாந்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஜின் டப் உணவு விடுதிக்குள் நுழையும்போதே, அலைபேசிகளைப் பயன்படுத்த முடியாது என்று கூறிவிடுகிறார்கள். யாருடனாவது பேச வேண்டும், மெயில்களைப் பார்க்க வேண்டும், குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. இங்கே எவ்வளவு நேரம் தங்கியிருக்கிறீர்களோ, அவ்வளவு நேரமும் அலைபேசிகள் இணைப்பின்றிதான் இருக்க வேண்டும். ‘‘மனிதர்கள் நேருக்கு நேர் பேசுவதை மிகவும் குறைத்துவிட்டனர். போன்களின் மூலமே உரையாடல்கள் நடத்தப்படுகின்றன. தொழில்நுட்பத்துக்கு அடிமையாகி, மனிதர்கள் தங்கள் இயல்புகளை இழந்து வருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் இப்படி ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறோம். நண்பர்கள், உறவினர்களுடன் வந்து மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்ள வேண்டும். அதற்காகவே அலைபேசிகளுக்கான சிக்னல்களை விடுதிக்குள் தடை செய்திருக்கிறோம். அவசரமாகப் பேச வேண்டும் என்றால் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு தொலைபேசியை வைத்திருக்கிறோம். முதலில் யோசிப்பவர்கள் ஒருமுறை இப்படிச் சாப்பிட்ட பிறகு, எங்களைப் புரிந்துகொள்கிறார்கள். அடிக்கடி வருகிறார்கள். ஆரம்பித்த ஒரே மாதத்தில் எங்கள் விடுதி பிரபலமாகிவிட்டது’’ என்கிறார் விடுதியின் நிறுவனர் டெய்லர்.

கஷ்டமான விஷயம் என்றாலும் நல்ல விஷயம்தான்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-எளிய-வாழ்க்கைக்கு-ஏராளமாகச்-செலவு-செய்ய-வேண்டுமா/article8955435.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இடுக்கண் களையும் நட்பு!

 

 
masala_2390271f.jpg
 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிக்கிறார்கள் ஸி ஸுவும் ஸாங் சியும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸாங்குக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, நடக்க முடியாமல் போய்விட்டது. அன்றிலிருந்து மூன்று ஆண்டுகளாக ஸாங்கை முதுகில் தூக்கிக்கொண்டு வீடு, பள்ளி என்று எங்கும் செல்கிறார் ஸி.

19 வயது ஸாங்கை தினமும் குறைந்தது 12 தடவையாவது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குத் தூக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. தூக்குவதோடு, ஸாங்கின் உடைகளைத் துவைக்கிறார், அவருக்கு உணவு கொண்டு வந்து தருகிறார், ஒவ்வொரு முறையும் கழிவறைக்குச் செல்ல உதவி செய்கிறார் ஸி.

கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சின்ன சலிப்பைக் கூட காட்டாமல் அன்போடு உதவி செய்து வரும் ஸியை ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை பாராட்டுகிறார்கள். ஸியை ரோல் மாடலாகக் கொண்டாடுகிறார்கள். ஸாங்கும் ஸியும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள்.

3 ஆண்டுகளில் இதுவரை ஒரு வகுப்பைக் கூட இருவரும் தவிர்த்ததில்லை. இருவருக்கும் இடையே இருக்கும் பொறாமையற்ற அன்பை சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்த அதிசயமாகப் பார்க்கிறார்கள்.

இடுக்கண் களைவது நட்பு!

அரசாங்கத்தில் முறையிட வேண்டும் என்றால் அதி காரிகள், அரசியல்வாதிகளிடம் பெட்டிஷன் கொடுப்பது வழக்கம். வெனிசுலாவில் வித்தியாசமான முறையில் ஒரு பெண் தன் கோரிக்கையை வைத்தார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவரது தலையை நோக்கி ஒரு மாம்பழம் வந்தது. அவரது காதை உரசிய மாம்பழத்தை கையில் பிடித்தார் மதுரோ. அதில் `என்னைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்று எழுதி, தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

மதுரோ அந்த எண்களுக்குத் தொடர்புகொண்டார். மர்லெனி ஆலிவோ என்ற பெண், தான் வீட்டுப் பிரச்சினையில் சிக்கியிருப்பதாகவும், விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மாம்பழத்தை வீசியதாகச் சொன்னார். மர்லெனியின் செயல் நாகரிகமாக இல்லாவிட்டாலும், அவரது பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக அரசாங்கக் குடியிருப்பு ஒன்றை ஒதுக்கிக் கொடுத்துவிட்டார் மதுரோ. பேருந்து ஓட்டுனராக இருந்த மதுரோ, அதிபரான பிறகும் அடிக்கடி பேருந்துகளில் பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து வருகிறார். மர்லெனி எந்தவித மோசமான எண்ணத்துடனும் மாம்பழம் வீசவில்லை, அவரது பிரச்சினை தீர இப்படிச் செய்துவிட்டார். அவரை விட்டுவிடலாம் என்றவர், மாம்பழம் பழுத்த பிறகு தானே சாப்பிடப் போவதாகவும் சொல்லிவிட்டார் மதுரோ.

இங்கே எல்லாம் இப்படி நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது…

அன்பான மனிதர்கள் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்வது மிகத் துயரமான விஷயம். அவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், துணிகள், கடிதங்கள் போன்றவற்றைப் பத்திரப்படுத்தி, அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொள்வது வழக்கம். பிரான்ஸைச் சேர்ந்த கடியா தன் தந்தை இறந்தபோது நிலைகுலைந்து போனார். அவரது அப்பா பயன்படுத்திய வாசனை திரவியம் சட்டைகளிலும் தலையணை உறைகளிலும் அப்படியே இருந்தது. அதை நுகரும்போது தன் அப்பாவுடன் இருப்பது போலவே உணர்ந்தார் கடியா.

கலான் வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்திடம் சென்று, தன் தந்தையின் வாசத்தை நிரந்தரமாக அனுபவிக்கும் விதத்தில் ஏதாவது செய்து தரும்படிக் கேட்டார். அந்த நிறுவனம் ஆராய்ச்சியில் இறங்கியது. நிறைய தோல்விகளுக்குப் பிறகு அந்த நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டது. அன்பானவர்கள் பயன்படுத்திய துணிகளைக் கொண்டு சென்றால், 4 நாட்களில் சிறிய பெட்டியில் வாசனை திரவியத்தை நிரப்பிக் கொடுத்துவிடுகிறார்கள். இது அப்படியே இறந்தவர்கள் பயன்படுத்திய வாசனையாக இருக்கிறது. ரூ.38 ஆயிரம் கட்டணம். மனிதர்கள் மட்டுமில்லை நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளின் வாசனையைக் கூட இப்படிக் கொடுக்க முடியும் என்கிறார்கள்.

அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இடுக்கண்-களையும்-நட்பு/article7157512.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் உயரமான திருமணம்!

 

 
masala_2389256f.jpg
 

பிரிட்டனில் மிக உயரமான இடத்தில் ஒரு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கிறிஸ் புல் உயரமான இடங்களில் கயிறுகளைக் கட்டி நடக்கும் கலைஞர். 15 வருடங்களாக இந்தக் கலையை நிகழ்த்தி வருகிறார். அவரிடம் 4 வருடங்களாக நடக்கும் பயிற்சியை எடுத்து வந்தவர் போபே பேக்கர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். வழக்கமான திருமணமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர். ஹோல் கேவ்ஸ் என்ற மலைப் பகுதிக்குச் சென்றனர். 80 அடி உயரத்தில் கயிறுகளைக் கட்டினர்.

திருமணத்துக்கு 100 விருந்தினர்கள் வந்திருந்தனர். மெகாபோன் மூலம் திருமணச் சடங்கு நடைபெற்றது. அனைத்தையும் கயிற்றில் நின்றபடியே இருவரும் செய்து முடித்தனர். மோதிரங்களையும் மாற்றிக்கொண்டனர்.

பிரிட்டனில் இதுவரை இப்படி ஓர் உயரமான இடத்தில் திருமணம் நடைபெறவில்லை என்பதும் கயிறுகளில் நடக்கும் கலைஞர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டதும் சாதனையாக மாறிவிட்டது! சந்தோஷத்தில் மிதக்கிறது இந்த ஜோடி.

திருமணமே ரிஸ்க் என்று சொல்பவர்கள் மத்தியில் ரிஸ்க் ஆன இடத்திலிருந்து ஒரு திருமணம்!

உலகின் மிகப் பெரிய கண்ணாடிப் பாலம் சீனாவில் திறந்துவிடப்பட்டிருக்கிறது. மிகவும் த்ரில்லான அனுபவத்தை இந்தப் பாலம் தருகிறது என்கிறார்கள். சோங்க்விங் மலைப் பகுதியில் 87.5 அடி நீளத்துக்கு, 2,350 அடி உயரத்தில் இந்தக் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை அரிஸோனாவில் அமைக்கப்பட்டிருக்கும் க்ராண்ட் கேன்யன் பாலம்தான் இந்தச் சிறப்பைப் பெற்றிருந்தது. தற்போது அந்தச் சாதனையைச் சீனா முறியடித்துவிட்டது. 2014 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாலத்தின் பணிகள் தற்போது நிறைவடைந்து, பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. 36 கோடி ரூபாய் செலவில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

அடேங்கப்பா! பார்க்கும்போதே மெய் சிலிர்க்குது!

இங்கிலாந்தில் வசிக்கிறார் கர்டிஸ் எல்டன். 3 வயதில் இருந்தே பியானோ வாசித்து வருகிறார். தற்போது 11 வயதில் டிரினிடி பல்கலைக்கழகத்தில் இசையில் பட்டம் பெற்றுவிட்டார். 2011-2014 ஆண்டுகளில் நடைபெற்ற திறமையாளர்கள் போட்டியில் வெற்றி பெற்று, `மினி மொஸார்ட்’ என்ற சிறப்பையும் பெற்றுவிட்டார். தினமும் இரண்டு மணி நேரம் மேற்கொண்ட பயிற்சியும் அம்மா செய்து கொடுத்த பாஸ்தாவும்தான் தன்னுடைய வெற்றிக்குக் காரணம் என்கிறார் கர்டிஸ். கடந்த ஆண்டு ஸ்பெயினில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சியை 2 ஆயிரம் பேர் ரசித்தனர். ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஆட்டோகிராஃப் வாங்கிச் சென்றனர்.

மினி மொஸார்ட்டுக்கு ஒரு பூங்கொத்து!

சீனாவின் ஹெங்ஷுய் நகரில் பல அடுக்கு மாடி கொண்ட ஒரு பள்ளியில் இரும்புக் கம்பிகளைப் பாதுகாப்புக்காக அமைத்திருக்கிறார்கள். கடந்த 6 மாதங்களில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலையைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தக் கம்பிகள் போடப்பட்டிருக்கின்றன. தரையில் அடர்த்தியாகச் செடிகள் வளர்க்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை குதித்தாலும் பெரிய ஆபத்து நேர்ந்துவிடாது என்கிறார்கள். இந்தப் பள்ளியில் கட்டுப்பாடுகள் அதிகம்.

காலை 5.30க்கு எழுந்தால் இரவு 10 மணிக்குத்தான் படுக்கைக்குச் செல்ல இயலும். சாப்பிடுவதற்கு, கழிவறைக்குச் செல்வதற்கு எல்லாம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக மதிப்பெண் வேண்டும். அதற்காகவே மாணவர்களிடம் கடுமை காட்டுவதாகப் பள்ளி நிர்வாகம் சொல்கிறது. பெற்றோரும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சக மாணவர்களிடம் கூட சகஜமாகப் பேச முடியாமல் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஏதோ ஒரு நேரம் விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்து விடுகிறார்கள்.

உயிர் இருந்தால்தானே உயர் படிப்புக்குச் செல்ல முடியும்… கடுமையை விட்டு அன்பைக் காட்டுங்க…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-உயரமான-திருமணம்/article7153642.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: போகிமான் படையெடுப்பு!

 

 
masala_2966209f.jpg
 

பெல்ஜியத்தில் உள்ள சிறிய கிராமம் லிலோ. இங்கே 35 குடும்பங்கள் வசிக்கின்றன. மிக மிக அமைதியான, அதிகம் பிரபலமாகாத இடம். போகிமான் கோ அறிமுகமானதில் இருந்து இந்த கிராமத்தின் 7 தெருக்களும் மிகவும் பரபரப்பாக இருக்கின்றன. ஒருபக்கம் போகிமான் பயிற்சி கொடுப்பதற்காக பயிற்சியாளர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் போகிமான் விளையாடுபவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அதனால் இரவு, பகல் எந்த நேரமும் தெருக்களில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.

“போகிமான் கோ விளையாடுவதற்கு எங்கள் கிராமம் வசதியாக இருக்கிறது. அதனால் கிராமத்தை நோக்கி ஏராளமானவர்கள் படையெடுக்கிறார்கள். முன்பெல்லாம் வருமானமே இருக்காது. இப்பொழுது என் கடையில் வியாபாரம் அபாரமாக இருக்கிறது” என்கிறார் கடைக்காரர் மர்லீன் டி டேன்.

ம்… உலகமே போகிமான் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது!

சீனாவின் யுலின் நகரில் 2 ஓட்டுநர்கள் வித்தியாசமான முறையில் லைசென்ஸ் பிளேட்டை மறைத்துக்கொண்டு சென்றதை, போக்குவரத்து கேமராக்கள் காட்டிக் கொடுத்துவிட்டன. டிரைவர் ஒருவர் மெதுவாக வாகனத்தை ஓட்டுகிறார், வாகனத்தின் முன்பகுதியில் லைசென்ஸ் பிளேட்டை மறைத்துக்கொண்டு ஒருவர் உட்கார்ந்தபடி பயணிக்கிறார். எதிரில் வரும் மனிதர்களுக்கோ, கேமராக்களுக்கோ நம்பர் பிளேட் தெரியவே இல்லை. குறிப்பிட்ட தூரம் தாண்டிய பிறகு, டிரக்கில் ஏறிக்கொண்டு அந்த மனிதர் சென்றுவிட்டார். இந்த இரு ஓட்டுநர்களையும் போக்குவரத்துக் காவலர்கள் பிடித்துவிட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. உயிரைக் கையில் பிடித்தபடி, ஆபத்தான நிலையில் நம்பர் பிளேட்டை மறைத்துக்கொண்டு பயணம் செய்த படங்கள் இணையத்தில் வெளியாகி, பரபரப்பாகிவிட்டன.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கும் பால் டோனோவன் (69), கல்லறையைச் சேதப்படுத்திய குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறார். “2014-ம் ஆண்டு மார்ச் மாதம் என் அப்பாவின் கல்லறை மீது, ஆரஞ்சு வண்ணத்தில் ஜான் என்று எழுதப்பட்டிருந்தது. அப்பொழுதே புகார் கொடுத்தேன். கல்லறையைச் சுத்தம் செய்தேன். மீண்டும் ஏப்ரல் மாதம் அதே வண்ணத்தில் பெயர் எழுதப்பட்டிருந்தது. டிசம்பர் மாதம் கல்லறை முழுவதும் கறுப்பு பெயிண்ட் கொட்டப்பட்டிருந்தது. என்னால் தாங்கவே முடியவில்லை. மீண்டும் காவல் துறையில் புகார் செய்தேன். கல்லறைக்கு அருகில் கேமராவை வைத்து குற்றவாளியைப் பிடித்து விட்டனர்” என்கிறார் மாத்யுவின் மகள். காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, “நானும் மாத்யுவும் நண்பர்கள். 56 ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றுவிட்டான் மாத்யு. இதனால் அவன் மீது எனக்கு கடும் கோபம் வந்தது. அவனைத் தேடி வந்தபோது இறந்து 2 ஆண்டுகளாகிவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால் எனக்குள் இருந்த கோபம் மட்டும் குறையவே இல்லை. அதனால்தான் அவன் கல்லறையைச் சேதப்படுத்தினேன்” என்றார் டோனோவன். வழக்கை விசாரித்த நீதிபதி, 2 ஆண்டுகள் காவல் துறையின் கண்காணிப்பில் டோனோவன் இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

காலம் காயத்தை ஆற்றும் என்பது உண்மை இல்லையோ?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-போகிமான்-படையெடுப்பு/article8967719.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மராத்தானில் பதக்கம் பெற்ற நாய்குட்டி

 

ulaga_masala_2965044f.jpg
 

கோபி பாலைவனத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார் பிரிட்டனைச் சேர்ந்த 41 வயது டியான் லியோனார்ட். இவருடன் சின்னஞ்சிறு நாய் ஒன்றும் ஓடி வந்து, பதக்கம் பெற்றதில் டியான் உலகம் முழுவதும் பிரபலமானார். “7 நாட்கள் பாலைவன மாரத்தான் போட்டிக்கு வந்தேன். முதல் நாள் எங்கிருந்தோ ஒரு 18 மாத நாய்க்குட்டி, என்னுடன் சேர்ந்து ஓடி வந்தது. இரண்டாம் நாளும் நாய்க்குட்டி என்னுடன் ஓடி வர எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. இருவரும் அன்பால் நெருங்கிவிட்டோம். நாய்க்கு கோபி என்று பெயர் சூட்டினேன்.

எனக்கு முன்னால் ஓடிச் சென்று, கூடாரம் அருகில் கோபி காத்திருக்கும். என்னைப் பார்த்ததும் மீண்டும் ஓட்டத்தை ஆரம்பித்துவிடும். தனியாக ஓடுவதைக் காட்டிலும் இப்படி ஒரு துணையுடன் ஓடியது மிகவும் உற்சாகத்தை தந்தது. பாலைவனங்களின் நடுவே நீர்நிலைகள் குறுக்கிடும்போது மட்டும் கோபியை நான் தூக்கிக்கொண்டு ஓடுவேன். 6 கட்டங்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 4 கட்டங்கள் வரை கோபியும் ஓடி வந்தது. அதாவது 125 கி.மீ. தூரம் ஓடியது. 5, 6 கட்டங்கள் மிகவும் கடினமானவை. 52 டிகிரி வெயில் என்பதால், கோபியை நான் ஓடிவர அனுமதிக்கவில்லை.

ஆனாலும் என்னைக் காரில் பின்தொடர்ந்தது. எங்கிருந்து கோபி வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. 6 மைல்களுக்கு அப்பால்தான் கிராமங்கள் இருக்கின்றன. எவ்வளவு அன்பு, எவ்வளவு புத்திசாலித்தனம்! முன்பின் பார்க்காத, எதையும் செய்யாத என்னிடம் இவ்வளவு அன்பு வைக்க ரொம்பப் பெரிய மனம் வேண்டும். நான் மாரத்தான் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தேன். கோபியுடன் சேர்ந்துதான் வெள்ளிப்பதக்கம் பெற்றேன். கோபியை விட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை. கோபியை ஸ்காட்லாந்துக்கு எடுத்துச் செல்வது மிகக் கடினமான பணி. நிறைய பணம் தேவைப்படும். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. கோபி பிரபலமாகிவிட்டதால், மருத்துவம், ஸ்காட்லாந்துக்கு கொண்டு செல்லும் செலவுகளுக்காக 4.5 லட்சம் நன்கொடை கேட்டேன். 24 மணி நேரத்தில் 7.5 லட்சம் ரூபாய் குவிந்தது. சட்ட சிக்கல்கள் தீர்ந்து, கோபியை ஸ்காட்லாந்துக் கொண்டு வருவதற்கு 5 மாதங்களாகிவிட்டன. நானும் என் அருமை தோழியும் மீண்டும் ஒன்று கூடிவிட்டோம்” என்கிறார் டியான் லியோனார்ட்.

மாரத்தானில் ஓடி, பதக்கமும் பெற்றுவிட்டதே இந்த நாய்க்குட்டி!

அமெரிக்காவின் டாலஸ் நகரில் மிகப் பெரிய ஏலம் நடத்தப்பட்டது. இதில் அரிய சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகம் ஒன்று சுமார் 6.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. 1938-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த இந்த காமிக்ஸ் புத்தகம், 10 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் உலகம் முழுவதும் 100 பிரதிகளாவது இருக்கும் என்கிறார்கள். 1998-ம் ஆண்டு இந்தப் புத்தகத்தை ஒரு வியாபாரியிடமிருந்து 17 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். “78 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்த காமிக்ஸின் கதையும் படங்களும் அற்புதமாக இருக்கின்றன. அட்டைகூட பளிச்சென்று இருக்கிறது. பல கோடிகளுக்கு ஏலம் போவதற்கு தகுதியான புத்தகம்தான்” என்கிறார் காமிக்ஸ் மற்றும் காமிக் ஆர்ட் இயக்குநர் லோன் ஆலன்.

அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மராத்தானில்-பதக்கம்-பெற்ற-நாய்குட்டி/article8963554.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.