Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: டால்பின்களை வதைக்கலாமா?

 

masala_3025955f.jpg
 

இந்தோனேஷியாவில் டால்பின்களை வைத்து, சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்டத்துக்குப் புறம்பாக 72 டால்பின்களைப் பிடித்து, பயிற்சி அளித்து, சர்க்கஸில் பயன்படுத்தி வருகிறார்கள். குளோரின் கலந்த தண்ணீர்த் தொட்டியில்தான் டால்பின்கள் சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்தவுடன் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் தண்ணீருடன் அடைக்கப்பட்டு, அடுத்த நகருக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சிறிய டப்பாவுக்குள், மோசமான சாலைகளில் பயணிக்கும் டால்பின்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகின்றன. தொடர்ந்து 30 மணி நேரம்கூட டால்பின் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், அவற்றுக்கு ஓய்வே கிடைப்பதில்லை.

நிகழ்ச்சி முடிந்தவுடன் மக்கள் டால்பின்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புவதால், அவற்றைத் தரையில் வைத்து போஸ் கொடுக்கச் சொல்கிறார்கள். இப்படிப் பல இன்னல்களைச் சந்திக்கும் டால்பின்கள் விரைவிலேயே மரணமடைந்து விடுகின்றன. ஜகர்தாவைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பு, சட்டத்தின் துணையோடு பல டால்பின்களை மீட்டிருக்கிறது. மீண்டும் அவற்றைக் கடலில் சேர்த்திருக்கிறது. என்னதான் சட்டம் எல்லாம் இருந்தாலும் இன்றும் 3 சர்க்கஸ் கம்பெனிகள் டால்பின்களைப் பயன்படுத்தி வருகின்றன.

அன்பாகப் பழகும் டால்பின்களை வதைக்கலாமா?

ஹங்கேரியைச் சேர்ந்த அரசியல்வாதி சேனட் ஜிடி. அடிப்படைவாத தேசிய யோபிக் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். அவரது கட்சி யூதர்களையும் ரோமானியர்களையும் கடுமையாக எதிர்த்து வந்தது. ஹங்கேரியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இவர்களையே குற்றம் சுமத்தியது. துணை ராணுவ குழுக்களை அமைத்தது. நாஜிகளைப் போல சீருடைகள் அணிவிக்கப்பட்டு, யூதர்களுக்கு எதிரான எதிர்ப்புகளைப் பிரச்சாரம் செய்துவந்தது.

ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன், தான் ஓர் யூதர் என்று சேனட் ஜிடி கண்டுகொண்டதிலிருந்து, தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டார்! ‘திடீரென்று நான் பொய்யான வாழ்க்கை வாழ்வதாகத் தோன்றியது. நான் யார் என்ற தேடல் தீவிரமானது. கடைசியில் என்னுடைய பாட்டியைக் கண்டுபிடித்தேன். அவர் யூதர். எங்கள் குடும்பத்தில் ஹிட்லரின் வதைமுகாமில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரே மனிதர் இவர்தான்.

அவரது தோளில் வதைமுகாம் எண், டாட்டூவாகக் குத்தப்பட்டிருந்தது. வதைமுகாம் குறித்து நிறைய விஷயங்கள் அறிந்தபோது அதிர்ந்துபோனேன். இரண்டாம் உலகப் போரில் மட்டும் 5,50,000 ஹங்கேரி யூதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் யூத எதிர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். அவர்கள் என்னைச் சமாதானம் செய்தார்கள். கட்சியை விட்டு வெளியேறினேன். இந்த 4 ஆண்டுகளில் ஒரு யூதனாக என் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்டேன். என் பெயரை ஹீப்ரு மொழியில் டோவிட் என்று வைத்துக்கொண்டேன்.

யூதர்களாக இருந்த ஒரே காரணத்தால், எவ்வளவு உயிர்களை இழந்திருக்கிறோம்! நான் இதுவரை யூத எதிர்ப்பாளனாக இருந்ததற்கு, இனிமேலாவது பிராயச் சித்தம் தேட வேண்டும். என்னுடைய 30 வயதுவரை வேறொரு மனிதனாக இருந்தேன். 4 ஆண்டுகளாக இன்னொரு மனிதனாக மாறியிருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளில் நிலவும் யூத எதிர்ப்புகளுக்கு எதிராகப் போராடுவதே இனி என் வாழ்நாள் லட்சியம்’ என்கிறார் சேனட் ஜிடி.

அடிப்படைவாதம் ஆபத்தானது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-டால்பின்களை-வதைக்கலாமா/article9156976.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: பர்ஸையும் பதம் பார்த்துவிடும் மிளகாய்!

 

 
masala_3027144f.jpg
 

உலகிலேயே மிகக் காரமான, விலை உயர்ந்த மிளகாய் அஜி சரபிடா. பட்டாணி அளவுக்கு உருண்டையாகவும் ஆரஞ்சு வண்ணத்தில் பழம் போன்றும் காட்சியளிக்கிறது. காட்டு மிளகாய் என அழைக்கப்படும் இதன் தாயகம் பெரு நாடு. மிகச் சமீபத்தில்தான் இது வணிக ரீதியாக விற்பனைக்கு வந்திருக்கிறது. பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உச்சபட்ச காரத்துடன் இருக்கிறது. பழச்சுவையுடன் கூடிய காரம் என்பதால் சாஸ் போன்ற சுவையைத் தருகிறது. மிளகாயைக் காய வைத்து, தூளாக்கித்தான் உணவுகளில் பயன்படுத்தி வருகிறார்கள். மிளகாய்களிலேயே அதிக மதிப்பு மிக்கதாக இருக்கும் அஜி சரபிடா, 5 நட்சத்திர உணவகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பெரு நாட்டைத் தவிர, வேறு எங்கும் கிடைக்காது. ஒரு கிலோ விலை ரூ.16 லட்சம் முதல் ரூ.23 லட்சம் வரை. நறுமணப் பொருட்களில் வெனிலா, குங்குமப்பூ அளவுக்குச் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது.

நாக்கை மட்டுமல்ல, பர்ஸையும் பதம் பார்த்துவிடும் மிளகாய்!

ஸ்வீடனில் இயற்கை எழில்மிக்க பகுதியில், பழங்கால வாழ்க்கையை வாழ்வதற்காக தங்கும் விடுதிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. அடர்ந்த காட்டின் நடுவே, மரத்தால் கூடாரம் அமைத்து, அதன்மேல் மண்ணால் மூடி, குகை போல அமைத்திருக்கிறார்கள். இதில் 2 கட்டில்கள், விறகு அடுப்பு, உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். குகைக்கு வெளியே நெருப்பை மூட்டி, உணவை சமைத்துக்கொள்ள வேண்டும். அருகில் இருக்கும் நீரூற்றில் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். மின்சாரம், குழாய் நீர், நவீனக் கழிப்பறைகள் என்று எதுவும் இங்கே கிடையாது. பொழுதுபோக்குவதற்கு 1 கி.மீ. தூரத்தில் கடல் இருக்கிறது. மொத்தத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியும். நவீன வாழ்க்கையில் இருந்து சற்று விலகி, வித்தியாசமாக சில நாட்கள் வசிக்க விரும்புகிறவர்களுக்காகவே கோலார்பின் இகோ லாட்ஜ் ஹோட்டல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமக்கு நாமே… காட்டு வாழ்க்கை!

சீனாவில் சிசுவான் நார்மல் பல்கலைக்கழகத்தில் 16 இளம் ஆசிரியர்களை நியமித்திருக்கிறார்கள். மாடல் போன்று தோற்றமுடைய இவர்கள் பாட்டு, நடனம், நாடகம், ஆங்கிலம் போன்ற படிப்புகளுக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் படங்களை வெளியிட்டு, மாணவர்களைச் சேர்த்து வருகிறது பல்கலைக்கழகம். “நாங்கள் கல்வித் திறனை மட்டும் பார்த்து வேலை கொடுக்கவில்லை. அவர்களின் அழகு, ஒல்லியான உடல்வாகு, பழகும் பாங்கு போன்றவற்றை வைத்துதான் தேர்வு செய்திருக்கிறோம். நாங்கள் நினைத்தது போலவே ஏராளமானவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். முன்பு இருந்ததைவிட மாணவர்களின் கற்கும் திறன் அதிகரித்திருக்கிறது. அக்கறையாகப் பாடங்களைக் கவனிக்கிறார்கள்” என்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

மோசமான வழிமுறை…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பர்ஸையும்-பதம்-பார்த்துவிடும்-மிளகாய்/article9161669.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: டூ இன் ஒன் கார்!

 

masala_3028799f.jpg
 

வாகனங்களில் இருந்து கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிட்டது துருக்கியைச் சேர்ந்த லெட்விஷன் நிறுவனம். சிவப்பு பிஎம்டபிள்யு கார், கண் முன்னால் ஒரு ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. முழுமையான கார், ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒவ்வொரு பகுதியாக மாற்றம் அடைந்து, இறுதியில் பிரம்மாண்டமான அன்டிமோனாக உருவெடுத்து நிற்கிறது. தலை, கை, விரல்கள், கால்கள் என்று ஒவ்வொன்றையும் அசைத்து, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இன்னும் நடக்கும் அளவுக்கு இந்த அன்டிமோன் முன்னேற்றமடையவில்லை. தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த காரை சாதாரணமாக ஓட்டிச் செல்லவும் முடியும். தேவையானபோது அன்டிமோனாக அவதாரம் எடுக்க வைக்கவும் முடியும். 30 ஆண்டுகால ஆராய்ச்சியில் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தை, வாகனத்தில் இருந்து உருவாக்கிக் காட்டும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. 12 இன்ஜினீயர்கள், 4 தொழில்நுட்ப வல்லுனர்கள் சேர்ந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். வெவ்வேறு வித கார்களில் 4 கதாபாத்திரங்களைத் தற்போது உருவாக்கி வருகிறார்கள். இந்த ரோபோ கார் விற்பனைக்கு வந்தால், வாங்குவதற்குப் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

டூ இன் ஒன் கார்!

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷயரில் வசிக்கிறார் 65 வயது மைக்கேல் அம்ப்ரே. தொடர்ந்து சில வாரங்களாக அவருக்கு வரும் கடிதங்கள் எல்லாம் மாயமாகி வருவதை நினைத்து, மிகவும் கவலையடைந்தார். ஐந்தாவது வாரம், கடிதங்கள் காணாமல் போகும் ரகசியத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்ற முடிவோடு, ஒரு கேமராவை வாயிலில் பொருத்தினார். அன்று வீடியோவில் பதிவான காட்சிகளைக் கண்டு அதிர்ந்து போய்விட்டார். தபால்காரர் அஞ்சல் பெட்டியில் கடிதங்களை வைத்துவிட்டுப் போன, பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பெண் வருகிறார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கடிதங்களை எடுக்கிறார். சட்டைக்கு அடியில் ஒளித்துக்கொண்டு வேகமாகச் சென்றுவிடுகிறார்.

அந்தப் பெண் மைக்கேலின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 68 வயது ஜாய் ஹார்பாட்டில். அந்தப் பகுதியின் கவுன்சிலராகவும் அவர் இருக்கிறார். மைக்கேலால் இந்தச் சம்பவத்தைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரராகவும் கவுன்சிலராகவும் இருப்பதால் காவல்துறையில் முறையிடவும் தயங்கினார். ஆனால் அவர் மனைவி, ஜாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். வேறுவழியின்றி புகார் கொடுத்தார் மைக்கேல். விசாரணையில் விளையாட்டுக்காக இப்படிச் செய்ததாக ஜாய் ஒப்புக்கொண்டார். விரைவில் கவுன்சிலர் பதவியில் இருந்து ஓய்வு பெறப் போகும் ஜாய், சிறந்த நிர்வாகி என்பதால், அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ம்… விளையாட்டு வினையாகிவிட்டது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-டூ-இன்-ஒன்-கார்/article9167166.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பச்சோந்தி மனிதன்!

 

 
lizard_2374442f.jpg
 

இத்தாலியைச் சேர்ந்த 37 வயது ஜோஹன்னஸ் ஸ்டோட்டர் மனித உடல்கள் மீது ஓவியங்களைத் தீட்டக்கூடிய ஓவியர். பெண் மாடல்களை வைத்து தவளை, கிளிகள் போன்றவற்றை உருவாக்கி, அசத்தியிருக்கிறார். சமீபத்திய இவருடைய படைப்பு பச்சோந்தி. இரண்டு பெண்கள் மீது வண்ணங்களைத் தீட்டி, கிளையில் நடந்து செல்லும் பச்சோந்தியைக் கொண்டு வந்திருக்கிறார்.

’’இயற்கை மீது எனக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் தவளை, பச்சோந்தி என்று வரைகிறேன். ஒரு படத்தை வரைவதற்கு ஒரு வாரம் தயார் செய்வேன். உதவியாளர் இருப்பதால் 6 மணி நேரங்களில் ஓவியத்தை என்னால் முடித்துவிட முடியும்.

வரைபவருக்கும் மாடல்களுக்கும் மிகுந்த பொறுமை இருப்பது இந்த ஓவியத்துக்கு அவசியம். பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன்’’ என்கிறார் ஜோஹன்னஸ்.

அட! சொன்னால்தான் மனுசங்கன்னே தெரியுது!

பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமையல் செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கியிருக்கிறார்கள். மனிதக் கைகளைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கின்றன சமைக்கும் ரோபோக்கள். ஒவ்வொரு கையிலும் 24 மோட்டார்கள், 26 மைக்ரோ-கண்ட்ரோலர்கள், 129 சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அடுப்பைப் பற்ற வைத்து, வாணலியை அதன் மீது வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்களைப் போட்டு, கரண்டியால் கிளறி, அடுப்பை அணைத்து, மூடிவைத்து விடுகிறது இந்த ரோபோ.

மனிதர்கள் செய்வது போலவே கைகளால் அனைத்தையும் லாகவமாகக் கையாண்டு, சமைத்து முடிப்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. 2017ம் ஆண்டில் விற்பனைக்கு வர இருக்கிற சமைக்கும் ரோபோ, 6.5 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்க இருக்கிறது. எதிர்காலத்தில் பெரிய உணவகங்களில் ரோபோ செஃப் கண்டிப்பாக இடம்பெறும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சமையலறை பெண்களுக்கு குறைந்த விலையில் கண்டுபிடிங்களேன்

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார் 52 வயது டு மெயிங். டுவின் குடும்பத்தினர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, அவரைக் கைவிட்டு விட்டனர். வாழ வழி தெரியாத டு, அரசாங்க இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார். விரைவில் அங்கிருந்தும் வெளியேறும் நிலை. யிசாங் நகரில் இருந்த ஒரு குகைக்குச் சென்று தங்கிவிட்டார்.

மழை நீரைப் பிடித்துப் பயன்படுத்திக்கொள்கிறார். அருகில் இருக்கும் விவசாயிகள் விதைகளை அளித்தார்கள். அதனால் குகைக்கு அருகில் முட்டைக்கோசு வளர்த்து, உணவுக்குப் பயன்படுத்துகிறார். அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் முதியவர் பென்ஷன் தொகையை வைத்துச் சமாளித்துக்கொள்கிறார். டுவைப் பற்றிய செய்தி சமீபத்தில் வெளியே பரவியது. பலரும் அவருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

அப்படியே நகருக்குள் ஒரு தங்கும் இடத்துக்கும் ஏற்பாடு செய்யக்கூடாதா?

ஜாக்சன் கோர்டன், பிலெடெல்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சின்ன வயதில் இருந்தே அவருக்கு பேட்மேனின் பேட்சூட் மீது ஆர்வம் அதிகம். நிஜ பேட்சூட்டை உருவாக்குவதற்காக 10 தடவை பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கிப் பார்த்தார்.

இறுதியில் பொருத்தமான பேட்சூட்டை உருவாக்கிவிட்டார். இந்த பேட்சூட்டின் மொத்த எடை 11 கிலோ. பேட்சூட்டை அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் பறக்கலாம், சண்டைக்காட்சிகளில் நடிக்கலாம் என்பதால் இந்த பேட்சூட் மூலம் நல்ல வருமானமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் ஜாக்சன்.

சம்பாதிக்க ஒரு வழியையும் கண்டுபிடிச்சிட்டீங்க ஜாக்சன்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பச்சோந்தி-மனிதன்/article7104778.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: மணப்பெண்ணை கீழே தள்ளிய குதிரை!

 

 
masala_3034263f.jpg
 

தேவதைக் கதைகளில் வரும் திருமணம் போல் தங்களின் திருமணமும் அமைய வேண்டும் என்று பலரும் நினைக் கிறார்கள். அதன் ஒருபகுதியாக விதவிதமான இடங்களில் புகைப் படங்கள் எடுப்பது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நியு ஜெர்ஸியைச் சேர்ந்த சூ அலெக்ரெட்டாவும் புகைப்படங்கள் எடுப்பதற்காக, குதிரையில் ஏறினார்.

கருப்புக் குதிரையில் வெள்ளை ஆடை அணிந்து, கையில் மலர்க்கொத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று குதிரை கீழே தள்ளிவிட்டது. தலைகுப்புற தண்ணீரில் விழுந்தார். எல்லோரும் அதிர்ந்து போனார் கள். ‘‘என் திருமணம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவ மாக இருக்க வேண்டும் என்று நினைத்து, இப்படிப் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டேன். எதிர்பாராமல் கீழே விழுந்ததில், என் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. நான் நினைத்தது போல என் வாழ்நாளில் இதை மறக்க முடியாது’’ என்கிறார் சூ அலெக்ரெட்டா.

ஐயோ, பாவம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள் மிக உயரமாக வளர் கின்றன. உலகிலேயே அதிக உயரம் வளரக்கூடிய வட அமெரிக்கா வின் செங்காலி மரத்துக்குப் போட்டியாக வளர்ந்து வருகின்றன. யூகலிப்டஸ் மரங்களில் 700 இனங்கள் உள்ளன. பொதுவாக 85 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடிய யூகலிப்டஸ் மரம், பூக்கக்கூடிய மரங்களில் மிக உயரமானது என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. டாஸ்மேனியா வில் உள்ள ஒரு யூகலிப்டஸ் மரம் 99.6 மீட்டர் உயரம் வளர்ந் திருக்கிறது! இன்னும் 15 மீட்டர்கள் வளர்ந்தால், இன்று மிக உயர மாகக் கருதப்படும் ஹைபீரியன் செங்காலி மரத்தை எட்டிப் பிடித்து விடும். உலகின் பல பகுதிகளில் இருக்கும் யூகலிப்டஸ் மரங்கள், முழு வாழ்நாளையும் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுக்காமல், வெட்டி விடுகிறார்கள். ஆனால் டாஸ்மேனியாவில் 400 ஆண்டுகள் வரை கூட யூகலிப்டஸ் மரங்கள் வாழ்கின்றன. முதல் 90 ஆண்டுகள் வரையே யூகலிப்டஸ் வேகமாக வளர்கிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது. ஒருகட்டத்தில் நோய் வந்தோ, மனிதர்களால் வெட்டப்பட்டோ வாழ்நாளை முடித்துக் கொள்கிறது. மரங்களை மனிதர்கள் வெட்டாமல், முழு வாழ்நாளையும் வாழ அனுமதித்தால், செங்காலி மரத்தின் உயரத்தை யூகலிப்டஸ் ஒருநாள் தொட்டுவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக வாழ அனுமதிப்போம்!

ஜப்பானைச் சேர்ந்த யமமோடோ நிறுவனம் பல்வேறு வாசனைத் திரவியங்களை உருவாக்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஷிகிபோ தொழில்நுட்ப நிறுவனத்துடன் சேர்ந்து ‘டியோ-மேஜிக்’ என்ற பெயரில் துர்நாற்றம் வீசக்கூடிய விஷயங்களில் நறுமணத்தைக் கொண்டு வரும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. முதல் முயற்சியாக குழந்தைகளின் டயாபர்களில் நறுமணத்தைச் சேர்த்தது.

தற்போது ஒசாகாவில் உள்ள கழிவுநீர் அகற்றும் வண்டிகளில், நறுமணத்தைக் கொண்டு வந்திருக்கிறது. கழிவுநீர் அகற்றும் வண்டிகளைக் கண்டால் பொதுமக்கள் முகம் சுளிப்பார்கள். அந்த வண்டி ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். இந்தப் பிரச்சினையைத் தற்போது டியோ மேஜிக் நறுமண திரவியம் தீர்த்து வைத்திருக்கிறது. எரிபொருளில் சாக்லெட் நறுமணத்தைச் சேர்த்திருக்கிறது. இதனால் கழிவுநீர் வாகனம் செல்லும்போது, துர்நாற்றத்துக்குப் பதில் சாக்லெட் மணம் பரவுகிறது.

இனி, மூக்கை மூட வேண்டியதில்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மணப்பெண்ணை-கீழே-தள்ளிய-குதிரை/article9187609.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கால் இல்லாவிட்டாலும் கவலை இல்லை!

 

 
masala04oct16_3033263f.jpg
 

சீனாவைச் சேர்ந்த 11 வயது காவோ ஜியு, 2012-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்துவிட்டான். அவன் தன் நிலையை நினைத்து, முடங்கிப் போய்விடவில்லை. அவனைப் போலவே 13 வயதில் இரண்டு கால்களையும் இழந்த சென் ஜோவுவைப் பார்த்து, நம்பிக்கை கொண்டான். சென் ஜோவு பாடகராகவும் பேச்சாளராகவும் இருக்கிறார். இரண்டு கால்களை இழந்த நிலையிலும் சீனாவில் உள்ள 700 நகரங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்! டாய், ஹுவான்ஷான் உட்பட 100 மலைகளில் ஏறியிருக்கிறார்! காவோவின் கதையைக் கேட்ட சென், அவனைத் தான் வசிக்கும் நகருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் சேர்ந்து முதல்முறையாக, 900 மீட்டர் உயரமுள்ள மலை மீது ஏறியிருக்கிறார்கள். லாவோஷான் மலையில் இருவர் ஏறிய செய்தி, சீனா முழுவதும் பரவியது. இடுப்புக்குக் கீழே எதுவும் இன்றி, சாதாரண தரைகளில் செல்வதே கடினம். சென்னும் காவோவும் படிகளில் ஏறி, மலை உச்சியை அடைந்திருக்கிறார்கள்!

காவோவுக்கு இனி கவலை இல்லை!

நியுயார்க்கில் வசிக்கும் ஜிம், சூசன் கோவல்ஸிக் தம்பதியர், 22 வயது பழுப்புக் கரடியை வளர்த்து வருகிறார்கள். 635 கிலோ எடை கொண்ட கரடி, ஜிம், சூசனிடம் அன்பாகப் பழகி வருகிறது. தோள் மீது சாய்ந்துகொள்கிறது. நாக்கால், முகத்தை வருடுகிறது. விளையாடுகிறது.

‘உங்களுக்குத்தான் இவன் கரடியாகத் தெரிவான். எங்களைப் பொறுத்தவரை அன்பான மகன். நாம் கொடுக்கும் அன்பைப் போல பல மடங்கு அன்பைத் திருப்பிக் கொடுப்பதற்கு, கரடிகளால் மட்டுமே முடியும். சிறிய குட்டியாக, ஆதரவற்று திரிந்த கரடியை எடுத்து வளர்க்க ஆரம்பித்தோம். இவனிடம் இருந்துதான், கரடிகள் குறித்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்.

அதற்குப் பிறகு பல ஆதரவற்ற கரடிகளை எடுத்து, வளர்க்க ஆரம்பித்தோம். கரடிகள் இயற்கைச் சூழலில் வளர வேண்டும் என்பதற்காகவே 100 ஏக்கரில் ஒரு பண்ணையை வாங்கினோம். இங்கே காயம் அடைந்த கரடிகளை மீட்டு மருத்துவம் அளிக்கிறோம். பல்வேறு வகையான 11 கரடிகளை நாங்கள் பராமரித்து வருகிறோம். 20 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வந்தாலும் கடந்த ஆண்டுதான் தொண்டு நிறுவனமாக இதை மாற்றியிருக்கிறோம். ஒருநாளைக்கு 14 கிலோ உணவுகளைத் தயாரித்து கரடிகளுக்கு வழங்குகிறோம். இறைச்சி, செல்லப்பிராணிகளுக்கான உணவுகள், பழங்களை வழங்கி வருகிறோம். நடுநடுவே மிட்டாய்களையும் கொடுப்பதுண்டு. எங்கள் இருவருக்கும் கரடிகளைப் பராமரிப்பதே முழு நேர வேலையாக மாறிவிட்டது’ என்கிறார் ஜிம்.

கரடிகளை அரவணைக்கும் தம்பதியர்!

சிரியாவில் நடைபெற்று வரும் போரில், இடிபாடுகளுக்கு இடையே 4 மாதப் பெண் குழந்தையை மீட்புக் குழுவினர் மீட்டெடுத்த காட்சி உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியிருக்கிறது. காயம் அடைந்த வஹிதாவை மீட்டவர், தாங்க முடியாமல் கதறி அழுதார். பிறகு வஹிதா, அவள் அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டாள். மனைவியும் முதல் மகளும் போரில் கொல்லப்பட்டுவிட, வஹிதாவைக் கண்டு சற்று ஆறுதல் அடைந்திருக்கிறார் யாயா மாடொக்.

சே... இரக்கமற்ற போர்கள்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கால்-இல்லாவிட்டாலும்-கவலை-இல்லை/article9183335.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: போரை நிறுத்த முடியாது, பொம்மையாவது கொடுக்கிறேன்!

 

 
masala_3037044f.jpg
 

கடந்த 4 ஆண்டுகளாக சிரியாவின் அலெப்போ குழந்தை களுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், உதவி வருகிறார் ராமி ஆதம். சிரியாவில் பிறந்தவர், 1989-ம் ஆண்டு முதல் பின்லாந்தில் வசித்து வருகிறார். 2012-ம் ஆண்டு சிரியாவில் போர் ஆரம்பித்தபோது, அங்குள்ள குழந்தைகளுக்கு உதவி செய்யத் தொடங்கினார். உணவு, மருந்து, குடி தண்ணீர் போன்றவற்றைச் சேகரித்தார். அப்போது, ராமியின் மகள் தன்னுடைய பொம்மைகளை ஒரு பையில் போட்டு, கொடுத்துவிடச் சொன்னாள். ‘போர்ச் சூழலில் இருக்கும் குழந்தைகளுக்கு பொம்மைகளை விட உணவும் மருந்துகளும் முக்கியம் என்று நினைத்தேன்.

ஆனால் பொம்மைகளைக் கொடுத்தபோது, அவர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு உலகில் வேறு எதுவும் இணை இல்லை. கண் முன்னால் பெற்றோரை இழந்து, வீடுகளை இழந்து, ஆதரவற்று, உயிரைக் கையில் பிடித்தபடி வாழும் குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துதான் தங்கள் குழந்தைத்தனத்தை மீட்டெடுத்தார்கள். பொம்மையின் முக்கியத்துவம் புரிந்தது’ என்கிறார் ராமி ஆதம். இதுவரை உலகின் மிக ஆபத்தான நகரமாகக் கருதப்படும் அலெப்போவுக்கு 28 முறை சென்று திரும்பியிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் 80 கிலோ எடையுள்ள 1000 பொம்மைகளை எடுத்துச் சென்றிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுவிட்டது. அதனால் 80 கிலோ பொம்மைகளை முதுகில் கட்டிக்கொண்டு, சட்டத்துக்குப் புறம்பாக, கால்நடையாகச் சென்று, பல்வேறு ஆபத்துகளை எதிர்கொண்டு, தன் சேவையைச் செய்து வருகிறார். அரசுப் படைகளும் ஆபத்தானவை; எதிர்ப்புப் படைகளும் ஆபத்தானவை. ஆனாலும் தன் சேவையை நிறுத்தப் போவதில்லை என்கிறார் ராமி ஆதம்.

மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்து வரும் ராமி ஆதமை, சிரியாவின் ஐஎஸ், ஷியா படைகளும் தேடி வருகின்றன. ‘சிரியக் குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் மரணத்தையும் பாதுகாப்பின்மையையும் எதிர்நோக்கி யுள்ளனர். அவர்களின் மனநிலைக்கு பொம்மைகள் அவசியம். அதற்காக நான் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்னால் போரை நிறுத்த முடியாது. பொம்மைகளை யாவது கொடுக்கிறேன்’ என்கிறார் ராமி ஆதம். பொம்மைகளை நன்கொடையாகச் சேகரிக்கிறார். தற்போது துருக்கி எல்லையில், சிரிய குழந்தைகளுக்காகப் பள்ளி கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

சிரியாவின் சாண்டா!

போர்ச்சுகலைச் சேர்ந்த மகள் பயத்தில் கண்களை மூடியபடி அமர்ந்திருக்கிறார். அவர் தலையைப் பிடித்து, எலக்ட்ரிக் ரேஸரைக் கொண்டு வேகமாக முடியை வெட்டித் தள்ளுகிறார் அவரது அம்மா. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளியில் புற்றுநோயால் முடியை இழந்த சக மாணவி ஒருவரை, மகள் கிண்டல் செய்திருக்கிறார் என்பதை அறிந்த அம்மா, கோபத்தில் மகளின் முடியை வெட்டியிருக்கிறார் என்ற விளக்கமும் வெளியாகியிருக்கிறது. பலர் அம்மாவின் செயலை ஆதரித்தும், சிலர் கண்டித்தும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு தவறை இன்னொரு தவறால் திருத்த முடியுமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-போரை-நிறுத்த-முடியாது-பொம்மையாவது-கொடுக்கிறேன்/article9196605.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நீரின் மேல் வீடு

 
masala_2373585f.jpg
 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடற்கரை கழிமுகத்தில் ஓர் அழகான வீடு அமைந்திருக்கிறது. மரங்களை வைத்து நீரின் மேல் வீடு கட்டியிருக்கிறார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய வீடு, பசுமைக்குடில்கள், கலங்கரை விளக்கம், விளையாட்டுத் திடல் எல்லாம் இங்கே இருக்கிறது. சூரிய சக்தியைக் கொண்டு தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறார்கள்.

மழை நாட்களில் தண்ணீரைச் சேமித்துக்கொள்கிறார்கள். பசுமைக்குடில்கள் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்களை விளைவித்துக்கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர்கள் கிங், ஆடம்ஸ் இருவரும் நகர நெருக்கடி பிடிக்காமல், 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டனர். குழந்தைகளுடன் சேர்த்து நால்வர் மட்டுமே இந்தப் பெரிய வீட்டில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வீட்டைப் பார்க்க விரும்பினால், சந்தோஷமாக அழைத்துச் செல்கிறார்கள்.

அடடா! அற்புதமான இடம்!

பிரிட்டனைச் சேர்ந்த 57 வயது டேவ் ஹீலி பார்வையற்றவர். சஹாராவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாரத்தான் போட்டியில் இலக்கை அடைந்திருக்கிறார். தற்போது சஹாரா பாலைவனத்தில் 6 நாட்களில் 160 மைல்கள் தூரம் ஓடி, சாதனை படைத்திருக்கிறார். சஹாரா பாலைவனத்தில் ஓடுவது மிகவும் கடினமான சவால். 50 டிகிரி வெயில், மணலில் கால் புதையும், விரைவில் களைப்பு ஏற்படும். உதவியாளர்கள் மற்றும் நண்பர்களின் வழி நடத்தலில் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார் டேவ் ஹீலி. தன்னுடைய சாதனைகள் மூலம் கிடைக்கும் பணத்தை, பார்வையற்றவர்கள் அறக்கட்டளைக்கு வழங்கி வருகிறார்.

அட்டகாசமான சாதனை!

நெதர்லாந்து முதியோர் காப்பகம் ஒன்றில் புதுமையான ஒரு யோசனையைச் செயல்படுத்தி வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் காப்பகத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். அதற்குப் பிரதிபலனாக ஒரு மாதத்தில் 30 மணி நேரங்களை முதியவர்களுடன் செலவிட வேண்டும். முதியவர்களுக்காக விளையாட்டு, பிறந்தநாள் பார்ட்டி என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அவர்கள் ஆதரவாகப் பேசக்கூடிய மனிதர்களைத்தான் விரும்புகிறார்கள்.

அதனால்தான் மாணவர்களுக்கு இலவசமாகத் தங்கும் வசதியை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த யோசனை பிரமாதமாக வெற்றி பெற்றுவிட்டது. மாணவர்களும் ஆர்வமாக முதியவர்களிடம் உரையாடுகிறார்கள், உதவி செய்கிறார்கள். முதியவர்களும் மனம் விட்டுப் பேசி, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறார் விடுதியின் உரிமையாளர். மற்ற முதியோர் இல்லங்களிலும் இந்த யோசனையைச் செயல்படுத்த இருக்கிறார்கள்.

நல்ல யோசனை… இந்தியாவிலும் செயல்படுத்தலாமே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நீரின்-மேல்-வீடு/article7099319.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: இரவிலும் ஒளிரும் சாலை!

 

போலந்து நாட்டின் வட பகுதியில் இருக்கிறது லிட்ஸ்பார்க் வார்மின்ஸ்கி நகரம். சமீபத்தில் புதுமையான சாலையைப் போட்டு, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சைக்கிளில் செல்பவர்களுக்கான சிறப்பான பாதை இது. இரவு நேரத்திலும் பளபளவென்று இந்தச் சாலை ஜொலிக்கிறது. சூரிய சக்தி மூலம் ஒளிரக்கூடிய சாலையை போலந்து கட்டிட நிறுவனம் ஒன்று, விஞ்ஞானிகளை வைத்து உருவாக்கியிருக்கிறது. செயற்கை இழைகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்தச் சாலை, சூரியனில் இருந்து சக்தியை எடுத்துக்கொள்கிறது. பகல் முழுவதும் சூரிய சக்தியைக் கிரகித்தால், 10 மணி நேரம் சாலை ஒளிரும். அதனால் இரவும் முழுவதும் சாலை பளபளவென்று காட்சியளிக்கிறது. ஒளிரும் சாலையால் சைக்கிளில் செல்பவர்கள், இருளிலும் எளிதாகச் செல்ல முடிகிறது. ரசனையோடு பயணிக்க முடிகிறது.

இரவிலும் ஒளிரும் சாலை!

பிரிட்டனில் வசிக்கும் ஆன்டி போப், காவல்துறையில் பணிபுரிகிறார். இவரை எல்லோரும் ‘மெமரி போலீஸ்’ என்று அழைக்கிறார்கள். குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒருமுறை பார்த்தால், அப்படியே நினைவில் வைத்துக்கொள்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் 850 குற்றவாளிகளின் புகைப்படங்களை நினைவில் வைத்துப் பாதுகாத்து வருகிறார். கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கும் குற்றவாளிகள், சந்தேகப்படும் நபர்களைப் பார்க்கிறார். அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கிறார். நான்கு ஆண்டுகளில் இவரது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து எந்த ஒரு குற்றவாளியின் புகைப்படத்தைக் காட்டினாலும் சட்டென்று அனைத்து தகவல்களையும் சொல்லிவிடுகிறார். ‘என்னால் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்பதை விளக்க முடியவில்லை. ஆனால் படமாகவோ, தகவலாகவோ, குற்றமாகவோ எப்படியோ ஒருவிதத்தில் அவர்களைப் பற்றிய விஷயங்கள் பதிவாகிவிடுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகு முடி அலங்காரத்தை மாற்றினாலும்கூட என்னால் எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிறது’ என்கிறார் ஆன்டி போப்.

மெமரி போலீஸ்!

ங்கிலாந்து துறைமுகத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட லாரி ஒன்று, உருளைக்கிழங்கு சிப்ஸ்களை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. நீண்ட பயணத்துக்குப் பிறகு, ஓட்டுனர் சரக்குகளை இறக்குவதற்காகக் கதவைத் திறந்தார். அதிர்ந்து போனார். லாரிக்குள் 15 பேர், ஸ்லீப்பிங் பேக் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் ஓட்டுனர். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஒவ்வொருவரையும் வெளியே கொண்டு வந்தனர். 2 குழந்தைகளும் அதில் இருந்தனர். ‘அனுமதியின்றி, அகதியாக இங்கிலாந்துக்குள் இவர்கள் நுழைந்திருக்கிறார்கள். இன்னும் சற்றுத் தாமதம் ஆகியிருந்தால் இவர்களை உயிருடன் மீட்டிருக்க முடியாது. ஆபத்தான வழியை நாடியிருக்கிறார்கள். 5 பேருக்கு இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்க இடமும் மருத்துவமும் கொடுத்து வருகிறோம். உடல் தேறிய பிறகு விசாரணை நடத்துவோம்’ என்கிறார் ஓர் அதிகாரி.

அகதிகளின் வாழ்க்கை கொடுமையாக இருக்கிறது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இரவிலும்-ஒளிரும்-சாலை/article9204034.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மனிதனின் அறியாமையால் எவ்வளவு பாதிப்பு...

 

 
golden_fish_2371618h.jpg
 

அறிவியல் புனைகதைகளில் சாத்தியமான விஷயத்தை தற்போது நிஜத்தில் நடத்த இருக்கிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த 30 வயது வலெரி ஸ்பிரிடொனோவ் மிக அரிய மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். தலை மட்டும் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்திருக்கிறது. உடல் மிகச் சிறிய அளவில் இருக்கிறது. இந்த நோயால் நாளுக்கு நாள் இவரது உடல் மோசமடைந்து வருவதால் தலை மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மையத்தைத் தொடர்புகொண்டார் வலேரி. மரணம் அடைந்த ஆரோக்கியமான உடலில் இருந்து தலையை நீக்கிவிட்டு, வலேரியின் தலையைச் சேர்ப்பதுதான் இந்த அறுவை சிகிச்சை. செர்ஜியோ கவவெரோ என்ற மருத்துவர் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. 36 மணி நேரம் நடைபெறும் அறுவை சிகிச்சையில் 150 மருத்துவர்களும் செவிலியர்களும் பங்கேற்க இருக்கின்றனர். சுமார் 62 கோடி ரூபாய் செலவாக இருக்கிறது. வலேரியிடம் இந்த அறுவை சிகிச்சை குறித்து பயமில்லையா என்று கேட்டால், “அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும் விரைவில் இறந்துபோகத்தான் போகிறேன். ஒருவேளை இந்தச் சிகிச்சையால் நான் பிழைத்துவிட்டால் எனக்கும் மனித குலத்துக்கும் நல்லதுதானே’’ என்கிறார் வலேரி.

இது மட்டும் வெற்றியடைந்தால் மருத்துவம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிடும்!

அமெரிக்காவில் உள்ள கொலோரடா ஏரியில் ஆயிரக்கணக்கான தங்கமீன்கள் வாழ்வதால் புதிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இந்த ஏரியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கமீன் வசித்ததில்லை. அருகில் வசிக்கும் யாரோ 4 மீன்களை ஏரியில் விட்டனர். மூன்றே ஆண்டுகளில் 4 ஆயிரம் மீன்களாகப் பெருகிவிட்டன. புதிய தங்கமீன் வருகை, ஏற்கெனவே ஏரியில் வசித்த மீன் இனங்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டது. காலம்காலமாக வசித்து வந்த மீன்கள், வேகமாகக் குறைந்து வருகின்றன. சுற்றுச் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மற்ற மீன் இனங்களையும் ஏரியையும் காக்கும் விதத்தில் தங்கமீன்கள் பிடிக்கப்பட்டு, உணவுக்காக வழங்கப்படுகின்றன. செல்லப் பிராணியாக வீட்டில் தங்கமீன்களை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் ஏரியில் கொண்டு வந்து போட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்திருக்கிறது அரசாங்கம்.

மனிதனின் அறியாமையால் எவ்வளவு பாதிப்பு…

இங்கிலாந்தில் வசிக்கும் 35 வயது டெப்பி டெய்லருக்கு சமைப்பது என்றால் மிகவும் விருப்பம். ஆனால் சமைத்த உணவுகளை அவர் சாப்பிடுவதில்லை. அவர் சாப்பிடும் ஒரே உணவு மாட்டு இறைச்சி சுவை கொண்ட மான்ஸ்டர் மன்ச் சோள சிப்ஸ்தான்! இவற்றுடன் தேநீரை மட்டும் அடிக்கடி குடிக்கிறார். எனக்குச் சமைக்கப்பட்ட உணவுகளைக் கண்டாலே பிடிக்காது. அதனால் இந்த உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டேன் என்கிறார் டெப்பி. ஒரு நாளைக்கு இரண்டு ஃபேமிலி பாக்கெட்டுகள்தான் இவரின் உணவு. அதிலும் மாட்டிறைச்சி சுவையை மட்டுமே சாப்பிடுகிறார். ஒவ்வொரு முறை கடையில் இருந்து மன்ச் பாக்கெட்டுகளை வாங்கும்போது, வீட்டில் குழந்தைகள் பார்ட்டியா என்று கேட்கிறார்கள் கடைக்காரர்கள். உறவினர்களும் நண்பர்களும் எவ்வளவோ மாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. 11 வயது வரை கண்டதையும் சாப்பிட்டு, உடல் பெருத்த குழந்தையாக இருந்தார் டெப்பி. பிறகு அவருக்கு உணவு சாப்பிட முடியாதபடி ஒரு நோய் வந்துவிட்டது. அப்பொழுது ஆரம்பித்த இந்தப் பழக்கம் 10 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சே… ஒரு நோய் எப்படி எல்லாம் மாற்றிவிடுகிறது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனிதனின்-அறியாமையால்-எவ்வளவு-பாதிப்பு/article7095435.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: கேப்சூல் தங்கும் விடுதிகள்!

 

 
masala_3041557f.jpg
 

கேப்சூல் தங்கும் விடுதிகள் ஜப்பானில் மிகவும் புகழ்பெற்றவை. வேலை வேலை என்று இருப்பவர்கள், நள்ளிரவில் வீடு திரும்ப இயலாது. அதனால் அருகிலிருக்கும் கேப்சூல் விடுதிகளில் தங்கிக்கொள்கிறார்கள். சவப்பெட்டி அளவுக்கு இந்த கேப்சூல் அறைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வோர் அறையிலும் ஒரு படுக்கை, தொலைக்காட்சிப் பெட்டி, இன்டர்நெட் இணைப்பு, கண்ணாடி, கடிகாரம், பை வைக்க சிறிய அலமாரி, குளிர்சாதன வசதி போன்றவை செய்யப்பட்டிருக்கின்றன.

ஒருவர் தாராளமாக உட்கார்ந்து வேலை செய்யலாம், படுக்கலாம். இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ள கேப்சூல் அறைகளில் புகை பிடிக்கக்கூடாது, சாப்பிடக்கூடாது. குளியலறைகளும் கழிவறைகளும் தனியாக இருக்கின்றன. சில உணவுகளும் பானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இரவு நேரங்களில் தங்குவதற்கே இவை பயன்படுகின்றன. ஆண்களே இந்த கேப்சூல் அறைகளில் அதிக அளவில் தங்குகிறார்கள். சில இடங்களில் பெண்களுக்குத் தனியாக கேப்சூல் அறைகளை ஒதுக்கியிருக்கிறார்கள்.

வேலையிலிருந்து வீடு திரும்ப முடியாதவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்ட முடியாதவர்கள், தங்கும் விடுதிகளில் செலவு செய்ய முடியாதவர்கள் கேப்சூல் விடுதிகளை நாடுகிறார்கள். வேலை தேடும் இளைஞர்கள், மாதக்கணக்கில் கேப்சூல் அறைகளில் தங்கிக் கொள்வதும் உண்டு. 50 முதல் 700 கேப்சூல் அறைகள் கொண்ட விடுதிகள் ஜப்பானில் இருக்கின்றன.

நல்ல விஷயம்தான், ஆனாலும் மார்ச்சுவரி அலமாரி நினைவுக்கு வருதே…

உலக விலங்குகள் தினமான அக்டோபர் 4 அன்று, இஸ்தான்புலில் டாம்பிலி பூனைக்கு ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. நடைபாதையை ஒட்டியுள்ள படியில், டாம்பிலி உட்கார்ந்திருப்பது போல, இந்தச் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள். டாம்பிலி மிகவும் அழகான பூனை. தன்னுடைய குறும்புகளால் ஏராளமானவர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டது. டாம்பிலியின் விதவிதமான செய்கைகளைப் படங்கள் எடுத்து, இணையத்தில் பலரும் வெளி யிட்டனர். உலகம் முழுவதும் டாம்பிலியின் புகழ் பரவியது. கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்பிலி நோய்வாய்ப்பட்டது.

ஒரு மாதத்துக்குப் பிறகு இறந்து போனது. டாம்பிலி ஓடியாடி விளையாடிய தெருவில் நூற்றுக்கணக்கான மலர்க்கொத்துகளும் மெழுகுவர்த்திகளும் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டன. டாம்பிலி என்றும் நம் நினைவை விட்டு அகலக்கூடாது என்று முடிவு செய்த 17 ஆயிரம் ரசிகர்கள், நிரந்தரமாக ஒரு சிலை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இஸ்தான்புல் நகர நிர்வாகமும் உடனடியாகக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. மனிதர்களைப் போல கையை ஊன்றியபடி உட்கார்ந்திருக்கும் புகழ்பெற்ற டாம்பிலியின் படத்தைச் சிலையாக வடித்து, டாம்பிலி வசித்த தெருவில் வைத்துவிட்டனர். ‘எங்கள் நாட்டில் டாம்பிலிக்கு இருந்த ஆதரவில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் உலகம் முழுவதும் தனக்கு ரசிகர் கூட்டத்தைச் சேர்த்திருப்பதில்தான் டாம்பிலி தனித்துவம் பெறுகிறாள்’ என்கிறார் பூனையின் உரிமையாளர் ஜுலேலா சரிகா.

பூனைக்குச் சிலை வைத்த ரசிகர்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கேப்சூல்-தங்கும்-விடுதிகள்/article9210176.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மாமனிதர் ராமோன் அர்சுண்டியா!

 

 
masala_3042783f.jpg
 

மெக்ஸிகோவில் வசிக்கும் ராமோன் அர்சுண்டியா, கடந்த 40 ஆண்டுகளாக இகுவானாக்களை (பச்சோந்தியைப் போன்ற ஒரு விலங்கு) பாதுகாத்து வருகிறார். அழிந்து வரக்கூடிய ஆபத்தான விலங்காக இருந்த இகுவானா, இன்று சரணாலயம் அளவுக்குப் பெருகி இருக்கிறது. அதற்குக் காரணம் அர்சுண்டியாதான். “நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மெக்ஸிகோவில் இகுவானா அழிந்து போனதாக நம்பப்பட்டது. ஒருநாள் நானும் என் தந்தையும் 2 இகுவானாக்கள் சூரிய ஒளியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். இரண்டையும் வளர்க்க ஆரம்பித்தோம். இன்று எங்களிடம் 640 இகுவானாக்கள் இருக்கின்றன. மற்ற விலங்குகளைப் போல இவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு நாங்கள் கொடுப்பதில்லை. இவற்றுக்கு ஒருநாளைக்கு 182 கிலோ உணவுகள் தேவைப்படுகின்றன. இலைகள், பழங்கள், காய்களை விரும்பிச் சாப்பிடுகின்றன. இதுவரை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

பிராணிகள் மீது அன்பும் ஆர்வமும் இருப்பவர்களிடம் சென்று, உணவுகளைப் பெற்று வருகிறோம். இகுவானாக்களைச் சுத்தம் செய்வது, உணவளிப்பது என்று நிறைய வேலைகள் இருக்கும். எனக்கு உதவி செய்பவர்களுக்கும் நான் சம்பளம் கொடுக்க வேண்டும். அழிந்து வரக்கூடிய ஒரு உயிரினத்தைக் காப்பாற்றி இருக்கிறேன். அரசாங்கம் கண்டுகொள்ளாவிட்டாலும் விலங்குகள் நல அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன. முறையாக எங்கள் இகுவானா சரணாலயம் பதிவு செய்யப்படவில்லை என்று அரசாங்கம் மூடச் சொன்னபோது, விலங்குகள் நல அமைப்புகள்தான் போராடி, தடுத்தன. தற்போது பதிவு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளோம். இகுவானாக்களைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளைக் கட்டணமின்றி அனுமதிக்கிறோம். அவர்கள் உணவாகவோ, பணமாகவோ கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறோம். உலகிலேயே இகுவானாக்களுக்கான ஒரே சரணாலயம் இதுவாகத்தான் இருக்கும்” என்கிறார் ராமோன் அர்சுண்டியா.

ஆபத்தான நிலையில் இருந்த ஓர் உயிரினத்தைக் காப்பாற்றிய மாமனிதர் ராமோன் அர்சுண்டியா!

அமெரிக்காவில் வசிக்கும் ஆம்பர் வில்லி, சிசி, செவ்பகா என்று இரு நாய்களை வளர்த்து வருகிறார். இரண்டும் வேறு வேறு இனங்கள். சிசி மிகவும் சிறிய நாய். செவ்பகா மிகப் பெரிய கறுப்பு நாய். இரண்டும் ஆண்டுக்கணக்கில் நட்புடன் பழகி வருகின்றன. திடீரென்று நாய்களுக்குத் தொற்று ஏற்பட, விலங்குகள் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்துச் சென்றார் ஆம்பர் வில்லி. அங்கே சில நாட்கள் அவை தங்கி, சிகிச்சை எடுத்துக்கொண்டன. செவ்பகாவும் சிசியும் எங்கும் ஒன்றாகச் சென்றன. ஒன்றாகச் சாப்பிட்டன. ஒன்றாக விளையாடின. ஒன்றாக நடைபயின்றன.

எப்போது தூங்கினாலும் சிசி, செவ்பகா மீது படுத்து உறங்கும். இதைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை. சிசி செய்யும் எந்தக் குறும்புக்கும் செவ்பகா கோபப்படுவதில்லை. விலங்குகள் நல அமைப்பு தன்னார்வலர்கள் சிசியையும் செவ்பகாவையும் விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற நண்பர்களைப் பார்த்ததில்லை என்கின்றனர். நான்கு நாட்களுக்குப் பிறகு சிசியும் செவ்பகாவும் வீடு திரும்பின.

அழகான நட்பு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மாமனிதர்-ராமோன்-அர்சுண்டியா/article9213998.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: திரைக்கடல் ஓடியும் மணமகள் தேடு!

 

 
china_3044410f.jpg
 

சீனாவில் மணப்பெண்கள் பற்றாக்குறை இருப்பதால், ரஷ்ய மணப் பெண்களைத் தேடிச் செல்கிறார்கள் சீன ஆண்கள். வெற்றிகரமான இளம் தொழிலதிபர்கள், ஒவ்வோர் ஆண்டும் சைபீரியாவில் நடைபெறும் ‘மணப்பெண் சுற்றுலா’வில் கலந்துகொள்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தங்களுக்குப் பிடித்த மணமகளைத் தேர்ந்தெடுத்து, திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த ஆண்டு பெய்ஜிங், ஹாங்காங், ஷான்காய், ஷென்ஜென் பகுதிகளைச் சேர்ந்த 5 தொழிலதிபர்களும் ரஷ்யாவைச் சேர்ந்த 25 பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 25-45 வயது ஆண்களும் 25-35 வயது பெண்களும் கலந்துகொண்டனர். முதலில் சம்பிரதாயச் சந்திப்பு, மணமகன், மணமகள் குறித்த விவரங்கள் பரிமாற்றம், குடும்பம், தொழில், பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்பார்ப்புகள், திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் போன்ற விஷயங்களை எல்லாம் ஆண்களும் பெண்களும் பரிமாறிக்கொள்கிறார்கள்.

இறுதியில் இணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சீன ஆண்கள், பெண்களை மிகவும் மதிக்கிறார்கள் என்று புகழ்கிறார்கள் ரஷ்யப் பெண்கள். “எப்பொழுதும் மிதமான அழகுடன் அமைதியாகப் புன்னகை செய்கிறார்கள் ரஷ்யப் பெண்கள். முக்கியமாக, ஆண்களுடன் போட்டிப் போடுவதில்லை” என்கிறார்கள் சீன மணமகன்கள். ஆனால் சீனாவில் 120 ஆண்களுக்கு 100 பெண்கள்தான் இருக்கிறார்கள். சீனாவின் ஒரு குழந்தைத் திட்டமும் ஆண் குழந்தைகள்தான் வேண்டும் என்று நினைப்பதும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான முக்கியக் காரணங்கள். “இனியும் ஒரே இனத்துக்குள், ஒரே நாட்டுக்குள் மணமக்களைத் தேடுவது சாத்தியமில்லை. அதனால்தான் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறோம். பிரமாதமாகப் போய்க்கொண்டிருக்கிறது” என்கிறார் எலெனா சுவோரோவா.

திரைக்கடல் ஓடியும் மணமகள் தேடு!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹின், உருளைக் கிழங்குகளில் இருந்து பாலாடைக்கட்டியை உருவாக்கியிருக்கிறார். பொட்டேடோ மேஜிக் கம்பெனியின் நிறுவனரான ஆண்ட்ரூ டைஹின், 12 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். “சீஸ், பொட்டேடோவை இணைத்து சாட்டோ என்று பெயரிட்டிருக்கிறேன். பாலாடைக்கட்டியைப் போலவே இருக்கும், உருகவும் செய்யும். இதில் வேறு எந்த ரசாயனங்களும் சேர்க்கவில்லை. உருளைக்கிழங்கை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தி, சாட்டோவை உருவாக்கியிருக்கிறோம்.

பாலாடைக் கட்டியில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்யலாம். சாட்டோவை வைத்து பாலாடைக்கட்டியாகவும் பாலாகவும் பயன்படுத்தலாம். ஐஸ்க்ரீம்களில் சேர்க்கலாம். உருளைக்கிழங்கு சுவையில்தான் இருக்கும். விரைவில் சாட்டோ, உணவுத் தொழிற்சாலைகளில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர இருக்கிறது. மெல்பர்னில் ஒருவர் ‘லிக்விட் பொட்டேடோ’ தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கு மாற்றாக, விவசாயப் பொருட்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே எங்களின் லட்சியம்” என்கிறார் ஆண்ட்ரூ டைஹின்.

சாட்டோ, நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-திரைக்கடல்-ஓடியும்-மணமகள்-தேடு/article9218512.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பெண்களுக்கு மரியாதை!

 
ulagamasala_3045674f.jpg
 

ஜப்பானில் பெண்களின் உடல் நலனுக்காகவே பிரத்யேக கோயில் ஒன்று இருக்கிறது. குடோயாமா நகரில், கோயா மலையின் அடிவாரத்தில் ஜிசன் கோயில் அமைந்திருக்கிறது.

வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஜப்பானில் உள்ள மற்ற புத்தர் கோயில்களைப் போலவே இருக்கிறது. ஆனால், உள்ளே நுழைந்தவுடன் எங்கு பார்த்தாலும் வடிவங்கள் (நம்மூரில் கண் உள்ளிட்ட பாகங்களை வெள்ளியில் செய்து காணிக்கை செலுத்துவது போல) பெண்களின் மார்பக மினியேச்சர்கள் பஞ்சு, துணி, மரம், பிளாஸ்டிக், உலோகம் போன்றவற்றில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளன. ஆண் மருத்துவர் ஒருவர், தன் நோயாளி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதற்காக வந்திருந்தார். திடீரென்று தலைமை குருவிடம் சென்று, பெண்கள் மார்பக வடிவங்களை இந்தக் கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கட்டுமா என்று கேட்டார். அவரும் ஏற்றுக் கொண்டார். விஷயம் வேகமாக நாடு முழுவதும் பரவியது.

அன்று முதல் இன்றுவரை மார்பக வடிவங்களைக் காணிக்கையாக அளிக்கும் வழக்கம் தொடர்கிறது. மார்பகப் புற்றுநோய் மட்டுமின்றி, பெண்களுக்கு ஏற்படும் அனைத்து உடல் நலக் கோளாறுகளை நிவர்த்தி செய்ய, பெண்கள் கோயிலுக்கு வருகிறார்கள். சுகப் பிரசவம், பால் சுரப்பு, புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு என்று வேண்டுதல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

சமீபக் காலங்களில் மார்பகங்கள் காணிக்கை செலுத்துவதும் அதிகரித்து வருகிறது. 9-ம் நூற்றாண்டில் கோயா மலை மீது கோபோ டைஷி, புத்தர் கோயிலைக் கட்டினார். அந்தக் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. கோபோ டைஷியின் தாய், மலை அடிவாரத்தில் தங்கியிருந்தார். ஒரு மாதத்தில் 9 தடவை மலையில் இருந்து இறங்கிவந்து, தாயைப் பார்த்துச் செல்வார் கோபோ டைஷி. அதனால் இந்த மலைக்கு, ‘ஒன்பது முறை மலை’ என்ற பெயர் வந்துவிட்டது. பிறகு மலையடிவாரத்தில் பெண்கள் வழிபடும் ஜிசன் கோயில் உருவானது.

பெண்களுக்கு மரியாதை...!

உலகின் பிரத்யேகமான சமூக வலைதளம் ரிச் கிட்ஸ். இதில் உறுப்பினரானால் மாதம் 67,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உலகின் மிகப் பிரபல சமூக வலைதளங்கள் எல்லாம் இலவசமாகக் கிடைத்துக்கொண்டிருக்கும்போது, ரிச் கிட்ஸுக்கு யார் வரப் போகிறார்கள்? ‘பணக்காரர்களுக்கான பிரத்யேக சமூக வலைதளம் இது. இங்கே உறுப்பினர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால் மற்ற சமூக வலைதளங்களைப் போல், தனித்துவம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். விருப்பம் போல் எழுதலாம், படங்களை வெளியிடலாம். யாரெல்லாம் பார்க்க அனுமதிக்கிறீர்களோ, அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். மற்ற எல்லாவற்றையும் விட ரிச் கிட்ஸ் உறுப்பினர் என்பது, மிகப் பெரிய கவுரவம்.

ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் கட்டணம் பெறுகிறோம். அதற்கு ஏற்றார்போல வசதிகளையும் செய்து தருகிறோம். இந்தக் கட்டணத்தில் குறிப்பிட்ட அளவு பணம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படுகிறது. கவுரவத்துடன், ஏழைகளுக்கு உதவும் திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கிறது’’ என்கிறார் ரிச் கிட்ஸ் சி.இ.ஓ. ஜுராஜ் இவான்.

ஏழைகளுக்கு உதவுகிறேன் என்பது பேஷன் போல!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பெண்களுக்கு-மரியாதை/article9220755.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாட்டிகளால் புகழ்பெற்ற உணவகம்!

 

 
flowers_3046815f.jpg
 

பிரான்ஸில் வசிக்கும் புரூனோ கெயர் பூச்செடிகள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். ஆனால் பூச்செடிகளை விட செடிகளுக்குத் தண்ணீர் விடும் பூவாளிகள்தான் ஏராளமாக இருக்கின்றன. இந்தப் பூவாளிகள் எல்லாம் விற்பனைக்கானவை அல்ல. ‘என்னிடம் 800 பூவாளிகள் இருக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு என் சகோதரி, கிறிஸ்துமஸுக்குப் பூவாளி ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். ஒரு செடிக்குத் தண்ணீர்விட பூவாளி எவ்வளவு முக்கியமானது என்று புரிந்தது. அன்றுமுதல் எங்கே பூவாளியைப் பார்த்தாலும் வாங்கி வந்துவிடுவேன். சிலர் அவர்களாகவே பூவாளிகளைக் கொண்டுவந்து, அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். கடையின் உட் சுவர்கள், தரை, கூரை, வெளிச் சுவர்கள் என்று எல்லா இடங்களிலும் பூவாளிகள் நிரம்பிவிட்டன. இனி எங்கே மாட்டுவது என்று யோசித்தபோது, தோட்டம் கண்ணில்பட்டது. செடிகள், மரங்கள் மீது பூவாளிகளைத் தொங்கவிட்டுவிட்டேன். என் கடையைப் பார்ப்பவர்கள், பூவாளி விற்பனை செய்கிறேன் என்றே நினைக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கும் இதுவரை விற்றதில்லை. கடைக்கு வரும் குழந்தைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லாண்டில் வரும் வீடு மாதிரியே இருப்பதாக ஆச்சரியப்படுகிறார்கள். தற்போது நான் பூவாளிகள் வாங்குவதை நிறுத்திவிட்டேன். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், பழைய பூவாளிகளை எல்லாம் என் கடை முன் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஒவ்வொன்றையும் இடம் பார்த்து வைப்பதுதான் சவாலாக இருக்கிறது’ என்கிறார் புரூனோ கெயர்.

பூவாளிகளின் காதலர்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் இனோடெகா மரியா என்ற உணவகத்தில் முழுக்க முழுக்க பாட்டிகள்தான் உணவுகளைத் தயாரிக்கிறார்கள். இங்கே தொழில்முறை சமையல் கலைஞர்களைப் பயன்படுத்துவதில்லை. பாட்டிகள் சமைப்பதாலும் அற்புதமான சுவைகளில் உணவுகள் கிடைப்பதாலும் இந்த உணவகம் பிரபலமாகிவிட்டது. ‘12 ஆண்டுகளுக்கு முன்பு என் பாட்டி, அம்மா, தங்கை என்று வரிசையாக இறந்துபோனார்கள். மிகவும் மனம் உடைந்து போனேன். அப்போதுதான் இத்தாலியில் இல்லத்தரசிகளை வைத்து ஒருவர் உணவகம் நடத்தும் செய்தியைப் படித்தேன். பாட்டிகளை வைத்து உணவகம் நடத்தும் யோசனை உதித்தது. உடனே செயலில் இறங்கிவிட்டேன். ஆர்வமுள்ள பாட்டிகளை வேலையில் சேர்த்தேன். பாலஸ்தீனம், செக் குடியரசு, அர்ஜெண்டினா, நைஜீரியா, அல்ஜீரியா என்று உலகம் முழுவதிலுமுள்ள 30 பாட்டிகள் இன்று எங்கள் உணவகத்தில் வேலை செய்கிறார்கள். அதனால் எந்த வகை உணவுகளைக் கேட்டாலும் எங்களால் செய்து கொடுக்க முடிகிறது. இன்றைய உணவு முதல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த உணவுகள் வரை இங்கே செய்து தருகிறோம். பாட்டிகளுக்குள் போட்டி இருக்கும். தினமும் யார் பிரமாதமாகச் சமைக்கிறாரோ, அவருக்கு மரியாதை செய்வோம். தங்களால் இந்த வயதிலும் அற்புதமாகச் சமைக்க முடிகிறது என்பதும் சம்பாதிக்க முடிகிறது என்பதும் பாட்டிகளை உற்சாகப்படுத்துகிறது’ என்கிறார் உரிமையாளர் ஸ்காரவெல்லா.

பாட்டிகளால் புகழ்பெற்ற உணவகம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பாட்டிகளால்-புகழ்பெற்ற-உணவகம்/article9226527.ece?homepage=true&relartwiz=true

 

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: பழங்கால செயற்கை ஓவியங்கள்!

 

 
masala_2370631f.jpg
 

பிரான்ஸில் கண்டறியப்பட்ட குகை ஓவியங்கள் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த ஓவியங்கள் எல்லாம் 36 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களால் தீட்டப்பட்டவை. பிரான்ஸில் உள்ள பழங்காலக் குகையிலிருந்து 36 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களை எல்லாம் புகைப்படங்கள் எடுத்தனர்.

பிறகு அதேபோல ஒரு குகையை செயற்கையாக உருவாக்கினார்கள். இதில் ஆயிரம் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. 425 ஓவியங்களில் கம்பளி காண்டாமிருகங்களும் கம்பளி யானைகளும் காணப்படுகின்றன. குகையின் வெளிப்பகுதி நவீனமாக அமைக்கப்பட்டிருந்தாலும் உள்ளே அச்சு அசலாக நிஜக் குகையை ஒத்திருக்கின்றன.

20 ஆண்டுகளுக்கு முன்பு நிஜக் குகை கண்டறியப்பட்டது. மிகப் பழமையான இந்த ஓவியங்களைக் காப்பாற்றி, பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செயற்கை குகை அமைக்கப்பட்டிருக்கிறது. 6 ஆயிரம் டிஜிட்டல் புகைப்படங்களைப் பார்த்து அப்படியே மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அடடா! அற்புதமான ஓவியங்கள்.. அற்புதமான பணி!

சீனாவில் வசிக்கும் 34 வயது ஸாங் யியி மிகப் பெரிய எழுத்தாளர். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாக இல்லை. தன்னுடைய குழந்தை பருவத்து ஹீரோவான வில்லியம் ஷேக்ஸ்பியரைப் போல தன் உருவமும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு செய்து, 10 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். கண், கண் இமை, மூக்கு என்று ஒவ்வோர் உறுப்பும் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பல மாதங்கள் ஆகின. இவ்வளவு செய்தவர் தன்னுடைய நீளமான முடியை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை.

ஸாங் இதுவரை ராயல்டியாக சம்பாதித்த அத்தனை பணமும் அழகுபடுத்திக்கொள்வதற்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் ஸாங். ஆங்கில நாடகங்களில் பங்கேற்றபோது, ஷேக்ஸ்பியர் போல தன் உருவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் வந்தது. பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு, ஸாங் மிகச் சிறந்த எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. பெரும் பணக்காரராக மாறினார். தன்னுடைய இந்த வளர்ச்சி ஷேக்ஸ்பியரால்தான் வந்தது என்று கருதும் ஸாங், அவரைப் போல உருவத்தை மாற்றிக்கொள்ள விரும்பினார். எண்ணத்தைச் செயல்படுத்தியும் விட்டார்.

எவ்வளவு செலவு செய்தாலும் நீங்கள் அவராக முடியாது ஸாங்…

எகிப்தில் உள்ள கெய்ரோ சுரங்க ரயில் நிலையத்தின் சுவர்களுக்கு நடுவே 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பூனை மாட்டிக்கொண்டது. அந்தப் பூனையை மீட்கும் வழி தெரியவில்லை. பூனையின் அலறல் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். வயதான அப்டோ பூனையை மீட்கப் பெரும்பாடுபட்டார். ஆனால் முடியவில்லை.

அதனால் தினமும் பூனைக்கு வேண்டிய உணவுகளையும் தண்ணீரையும் சுவரில் உள்ள துளை வழியே போட்டு விடுவார். 5 ஆண்டுகள் இப்படியே இருட்டுக்குள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தது பூனை. சுவற்றை ஒட்டிய கடைகள் எல்லாம் தற்போது காலி செய்யப்பட்டுவிட்டன. சுவற்றை உடைத்து, பூனையை மீட்டிருக்கிறார் அப்டோ. இதுவரை இப்படி ஒரு மீட்புப் பணி எகிப்தில் நடைபெற்றதில்லை என்கிறார்கள் மீட்புப் படையினர்.

பூனைக்கு ஆயுசு கெட்டி…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பழங்கால-செயற்கை-ஓவியங்கள்/article7092112.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: போராட்டத்தால் கிடைத்த வெற்றி!

 

 
masala_3049815f.jpg
 

5 ஆண்டுகளுக்கு முன்பு மெக்ஸிகோவின் சீரன் நகரத்தை, சக்தி வாய்ந்த போதை மருந்து குழுக்கள் அச்சுறுத்திக்கொண்டிருந்தன. அவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல்வாதிகளும் காவல்துறையும் செயல்பட்டன. இன்று, மெக்ஸிகோவின் தன்னிறைவு பெற்ற நகரமாக நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கிறது சீரன்.

2011-ம் ஆண்டு, போதை மருந்து கும்பல்களின் உதவியோடு காட்டில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் அரசாங்கத்தின் உதவியை நாடினர். ஆனால் அரசாங்கமோ கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி, தங்கள் காடுகளையும் நீர் நிலைகளையும் தங்கள் எதிர்காலத்தையும் காப்பாற்றிக்கொள்ள, மக்களே போராட முடிவு செய்தனர்.

பெண்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடக்க வேண்டிய அவல நிலையை எடுத்துச் சொன்னார் மார்கரிடா எல்விரா ரொமேரோ. பெண்கள் அவருடன் சேர்ந்து போராடுவதற்கு வந்தனர். ஒருநாள் ரொமேரோவும் மற்ற பெண்களும் தயாராகக் காத்திருந்தனர். மரம் வெட்டுவதற்கு ஆட்கள் வந்தவுடன், தேவாலயத்தில் ஒரு பெண், மணி அடித்தார். இன்னொருவர் பட்டாசு வெடித்தார். விஷயம் சீரன் நகர் முழுவதும் பரவியது. பெண்கள் கையில் கிடைத்த கத்தி, கட்டை, கற்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, மரம் வெட்டுபவர்களை நோக்கி ஓடி வந்தனர்.

உடனே அவர்கள் காவல் துறையையும் மேயரையும் அழைத்தனர். ஆனால் எதைக் கண்டும் பெண்கள் பின்வாங்கவில்லை. குற்றவாளிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர் அனைவரையும் விரட்டியடித்தனர். தங்களுக்குள்ளே தலைவர்களைத் தேர்ந்தெடுத்தனர். நகரையும் காட்டையும் பாதுகாப்பதற்கு ஆண்களும் பெண்களும் சேர்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டன. நகரைச் சுற்றி ஆயுதங்களுடன் கூடிய சோதனைக் கூடங்கள் நிறுவப்பட்டன. மரம் வெட்டுபவர்களோ, போதை மருந்து கடத்துபவர்களோ உள்ளே நுழைய முடியவில்லை.

அரசாங்கத்தின் உதவியின்றி, தாங்களே 3 ஆயிரம் ஹெக்டேரில் மரங்களை நட்டு, வளர்த்து வருகின்றனர். இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. கடந்த ஆண்டில் மெக்ஸிகோவின் குற்றம் நிகழாத நகரமாக சீரன் உருவெடுத்தது. இங்கே கொலை, கொள்ளை, கடத்தல், போதைப் பொருள் என்று எந்தக் குற்றமும் பதிவாகவில்லை. இந்த வெற்றிக்கு காரணம் மக்களின் ஒற்றுமையும் உழைப்புதான் என்கிறார்கள்.

போராட்டத்தால் கிடைத்த வெற்றி!

சீனாவைச் சேர்ந்த குய்யாங், குகை வடிவில் ஓர் உணவு விடுதியை ஆரம்பித்தார். இங்கே வருபவர்கள் தாங்களாக விருப்பப்பட்ட தொகையைக் கொடுத்தால் போதும் என்று அறிவிப்பும் செய்தார்.

உணவகம் மிகவும் பிரபலமானது. மக்கள் கூட்டம் அலை மோதியது. ஆனால் குய்யாங்தான் மகிழ்ச்சியாக இல்லை. “மக்களிடம் நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டத்தை ஆரம்பித்தேன். சாப்பிட்டவர்களில் 10% மக்கள்தான் மிகச் சொற்பமான தொகை செலுத்தினார்கள். ஒரே வாரத்தில் 10 லட்சம் ரூபாய் நஷ்டம். என்னுடைய பங்குதாரர்கள் அதிருப்தியில் வெளியேறிவிட்டனர். இனி மற்றவர்களைப் போல கட்டணம் வசூலித்தால்தான் தொடர்ந்து நடத்த இயலும்” என்கிறார் குய்யாங்.

ஐயோ பாவம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-போராட்டத்தால்-கிடைத்த-வெற்றி/article9238438.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: தங்கையின் தியாகம், அண்ணனைக் காப்பாற்றட்டும்!

 

 
masalaa_3051109f.jpg
 

சீனாவில் வசிக்கும் யாங் லி (24), 3 மாத கர்ப்பமாக இருந்தார். இவரது அண்ணன் யாங் ஜுனுக்கு (29) கடந்த ஆண்டு நிணநீர்ச் சுரப்பி புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 5 கீமோதெரபி, 18 ரேடியோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வழங்கப்பட்டன.

புற்றுநோயில் இருந்து மீண்ட யான் ஜுன், கடந்த ஜூலை மாதம் மீண்டும் பாதிக்கப்பட்டார். இந்த முறை அவரைக் காப்பாற்ற ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை ஒன்றுதான் வழி என்றும், தங்கை யாங் லி யின் ஸ்டெம் செல் மிகவும் பொருந்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அண்ணனைக் காப்பாற்றுவதா, தன் வயிற்றில் வளரும் முதல் குழந்தையைக் காப்பாற்றுவதா என்று யாங் லி குழப்பம் அடைந்தார்.

வறுமையில் பிறந்தாலும் தன் அண்ணன் கஷ்டப்பட்டு படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டு வந்ததை எண்ணிப் பார்த்தார் யாங் லி. 7 வயது அண்ணன் மகள், தனது தந்தையை இழப்பதைவிட, நான் குழந்தையை இழப்பது பெரிய விஷயமில்லை என்று முடிவு செய்தார். கணவனிடம் எடுத்துச் சொல்லி, சம்மதிக்க வைத்தார்.

“அண்ணனின் உயிரைக் காப்பாற்ற இருக்கும் கடைசி முயற்சியை என்னால் செய்யாமல் இருக்க முடியாது. கனவுகளுடன் என் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இது ஒரு துன்பமான காலக்கட்டம்தான். எனக்கு வேறு வழியில்லை” என்று சொன்ன யாங் லி, கருவைக் கலைத்தார். மருத்துவர்கள் இவரது செயலை மிகவும் பாராட்டினர். யாங் லி-யின் உடல் தேறியவுடன் ஸ்டெம் செல்லை எடுத்து, யாங் ஜுனுக்குப் பொருத்த இருக்கிறார்கள்.

ஏற்கெனவே யாங் ஜுன் ரூ.30 லட்சம் மருத்துவத்துக்குச் செலவு செய்திருக்கிறார். மேலும் ரூ.40 லட்சம் தேவைப்படுகிறது. மருத்துவர் காவோ லிஹோங் தனிப்பட்ட முறையில் யாங் ஜுனுக்காக நன்கொடை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அண்ணன், தங்கை பாசத்தை எடுத்துரைத்து, இவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். விஷயம் சமூக வலைதளங்கள் மூலம் பரவியது. நன்கொடைகள் குவிகின்றன.

தங்கையின் தியாகம், அண்ணனைக் காப்பாற்றட்டும்!

சிங்கப்பூரில் ஓர் இளைஞர் தன் வருங்கால மனைவி போகிமான் ரசிகை என்பதால், 3 ஸ்நோர்லக்ஸ் ப்ளஷ் பொம்மைகளை இணையம் மூலம் வாங்கினார். திருமணத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்த மனைவி, பொம்மைகளைக் கண்டு அதிர்ந்துவிட்டார். ஒவ்வொரு பொம்மையும் 1.5 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது. அறையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டது. இந்தப் பொம்மைகளை அகற்றாவிட்டால், தன் பிறந்த வீட்டுக்கே சென்று விடுவதாக மிரட்டினார் மனைவி. உடனே பொம்மைகளை விற்க முயன்றார். ஆனால் ஒருவரும் வாங்குவதற்குத் தயாராக இல்லை.

மிகக் குறைந்த விலையில் யாராவது இந்தப் பொம்மைகளை வாங்கி, தன் வாழ்க்கையைக் காப்பாற்றும்படி இணையத்தில் கோரிக்கை வைத்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பொம்மைகளை விற்பனை செய்துவிட்டதாகவும் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிய நல்ல உள்ளத்துக்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார்.

ம்... வாழ்க்கைக்கே உலை வைத்த பரிசு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தங்கையின்-தியாகம்-அண்ணனைக்-காப்பாற்றட்டும்/article9244402.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விசித்திர மனிதர்

 

 
masala_3052788f.jpg
 

வடகொரிய தலைநகரில் இரண்டு ஆண்டுகளாக மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

19 வயது சிம்பன்ஸியைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. டால் என்ற இந்த சிம்பன்ஸி, அநாயாசமாகப் புகைப்பிடிக்கிறது. சிகரெட்டை வாயில் வைத்து, லைட்டரின் உதவியால் பற்ற வைத்து, தொடர்ச்சியாகப் புகையை வெளிவிடுகிறது. லைட்டர் இல்லாவிட்டால், ஏற்கெனவே பிடிக்கப்பட்ட சிகரெட்டில் இருந்து, பற்ற வைத்துக்கொள்கிறது.

டால் சிகரெட் பிடிக்கும் அழகைப் பார்ப்பதற்காகவே கூட்டம் படையெடுக்கிறது. சிம்பன்ஸிக்கு சிகரெட் பழக்கத்தை ஏற்படுத்தியதற்காக விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சிம்பன்ஸியின் பயிற்சியாளரோ, புகையை உள்ளே இழுப்பதில்லை. அதனால் சிம்பன்ஸிக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்கிறார்.

இந்தப் பூங்காவில் பறவைகள் நடனமாடுகின்றன, குரங்குகள் கூடைப்பந்து விளையாடுகின்றன. யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், பெங்குவின்கள் என்று ஏராளமான உயிரினங்கள் இருந்தாலும் இருபதே நாட்களில் சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொண்டு, மக்களின் கவனத்தை ஒட்டு மொத்தமாகத் தன் பக்கம் திருப்பியிருக்கிறது டால் சிம்பன்ஸி.

தானும் கெட்டு, பிற உயிரினங்களையும் கெடுப்பதில் மனிதனுக்கு இணை இல்லை…

முகமது பெல்லோ அபுபக்கர் நைஜீரியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர். 92 வயதான இவர், இதுவரை 107 பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார். 185 குழந்தைகள் இவர்களுக்கு இருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு, 86-வது மனைவியைத் திருமணம் செய்தபோதுதான், செய்தி வெளியில் தெரிய வந்தது. பலரும் முகமது அபுபக்கரை விமர்சனம் செய்தார்கள். இவர் மீது வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். இஸ்லாம் சட்டப்படி 4 மனைவிகளோடு மட்டும் வாழ வேண்டும் என்று எச்சரித்து, முகமது அபுபக்கரை விடுதலை செய்தது நீதிமன்றம்.

அதற்குப் பிறகு 19 பெண்களைத் திருமணம் செய்துவிட்டார். “இறைவனின் கட்டளைப்படியே நான் திருமணம் செய்து வருகிறேன். என் ஆயுள் முழுக்க நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் கட்டளை. இறைவனின் கட்டளையை என்னால் மீற முடியாது. நான் மற்றவர்களைப் போல சாதாரண மனிதன் அல்ல. என்னைப் பார்த்து யாரும் அதிகமான பெண்களைத் திருமணம் செய்துகொள்ளாதீர்கள். என் மனைவிகளிடம் கேட்டுப் பாருங்கள். எல்லோருமே என்னை விருப்பப்பட்டுதான் திருமணம் செய்திருக்கிறார்கள்” என்கிறார் முகமது அபுபக்கர்.

தற்போது 10 மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டார். இவருக்குக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வருமானமும் கிடையாது. செல்வந்தரும் இல்லை. ஒரு நாளைக்குக் குறைந்தது 18 கிலோ அரிசி இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இவரும் சம்பாதிக்கவில்லை. மனைவிகளையும் வேலைக்கு அனுப்புவதில்லை. எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால், எல்லாம் இறைவன் கொடுக்கிறான் என்கிறார் முகமது அபுபக்கர்.

விசித்திர மனிதர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விசித்திர-மனிதர்/article9250232.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் விலை மதிப்புமிக்க உருளைக் கிழங்கு சிப்ஸ்!

 

 
masala_22oct_3054225f.jpg
 

உலகின் மிக விலை மதிப்புமிக்க உருளைக் கிழங்கு சிப்ஸை உருவாக்கியிருக்கிறது ஸ்வீடனைச் சேர்ந்த மதுபான நிறுவனம். ‘ஸ்வீடனின் முன்னணி மதுபான நிறுவனங்களில் ஒன்று செயிண்ட் எரிக்ஸ். விலை உயர்ந்த மதுபானங் களை மட்டுமே நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் மதுவுக்கு இணையான நொறுக்குத்தீனி இருக்க வேண்டும் என்பதற்காகவே, உலகின் விலையுயர்ந்த உருளைக்கிழங்கு சிப்ஸை உருவாக்கியிருக்கிறோம்.

அழகான பெட்டியில் 5 உருளைக்கிழங்கு சிப்ஸ் மட்டுமே வைக்கப்பட்டி ருக்கின்றன. ஒரு துண்டின் விலை 736 ரூபாய். 5 துண்டுகள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை 3,746 ரூபாய். சிப்ஸில் சேர்க்கப் படும் 5 பொருட்களை 5 நாடுகளில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம்.

பாதாம் உருளை என்ற அரிய வகை உருளைக்கிழங்கைப் பயன்படுத்துகிறோம். உலகின் முன்னணி சமையல் கலைஞர் தன் கரங்களால் இந்த சிப்ஸை உருவாக்கி இருக்கிறார். அதனால் தான் இவ்வளவு விலை வைக்க வேண்டியதாகிவிட்டது. விலை அதிகமாக இருப்பதால் மக்கள் விரும்புவார்களா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உயர்தரமான மதுவை அருந்துபவர்கள், உயர்தரமான நொறுக்குத்தீனியையும் ஆதரிக்கிறார்கள். தொடர்ந்து உருளைக் கிழங்கு சிப்ஸை உருவாக்க முடிவு செய்திருக்கிறோம்’ என்கிறார் மேனேஜர் மார்கஸ் ஃப்ரையாரி.

ஒரு துண்டு சிப்ஸ் 736 ரூபாய் ரொம்பவே அநியாயம்…

சீனாவின் புகழ்பெற்ற பெரிய வணிக நிறுவனம் ஐகேஇஏ. வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் கட்டில், அலமாரி, சோபா விற்பனையைப் பெரிய அளவில் ஆரம்பித்தது. இங்கே பொருட்கள் வாங்க வருபவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தங்கியிருக்கலாம். கட்டிலில் தூங்கலாம். சோபாவில் அமர்ந்து கதை பேசலாம். ஷாங்காய் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் பெரிய தேநீர் கடை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கே அமர்ந்து, தேநீரை அருந்தியபடியே பேசிக் கொண்டிருக்கலாம். பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

இந்தக் காரணத்தால் கடைக்குத் தினமும் நூற்றுக் கணக்கான முதியவர்கள் வருகிறார்கள். நாள் முழுவதும் குளிர்சாதன வசதியை அனுபவித்தபடி, பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பொருட் கள் எதுவும் வாங்குவதில்லை, இதனால் நிறுவனத்தின் வருமானம் குறைய ஆரம்பித்துவிட்டது. இனிமேல் முதியவர்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது நிறுவனம்.

ஐயோ… பாவமே…

பெரு நாட்டின் ஹுவான்டா மாநிலத்தில் வசித்து வருகிறார்கள் க்வின்கானோ குடும்பத்தினர். அருகில் இருந்த நகரத்துக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பினர். கதவைத் திறந்த உடனே சிங்கத்தின் கர்ஜனை அவர்களைப் பயமுறுத்தியது. கதவைப் பூட்டிவிட்டு, சத்தம் வந்த இடம் நோக்கிச் சென்றனர்.

சமையல் அறையில் இருந்து கர்ஜனை வந்துகொண்டே இருந்தது. ஜன்னலை மெதுவாகத் திறந்து பார்த்தபோது, உணவு மேஜைக்கு அடியில் பூமா என்ற மலைச் சிங்கம் ஒன்று கோபத்துடன் பற்களைக் காட்டி கர்ஜித்தது. உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். எப்படி ஊருக்குள் வந்து, வீட்டுக்குள் நுழைந்திருக்கும் என்று எல்லோருக்கும் ஆச்சரியம். பக்கத்தில் உள்ள காடு சமீபத்தில் தீப்பற்றி எரிந்தது. அதனால் உணவு தேடி நகருக்குள் நுழைந்திருக்கும் என்றார்கள் காவலர்கள்.

பூட்டிய வீட்டுக்குள் மலைச் சிங்கம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-விலை-மதிப்புமிக்க-உருளைக்-கிழங்கு-சிப்ஸ்/article9254918.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: 18 ஆண்டுகளாகக் குழந்தையைத் தேடும் அப்பா!

 

 
masala_2366281f.jpg
 

சீனாவில் வசிக்கும் 45 வயது குவோ கன்டங், கடந்த 18 ஆண்டுகளாக தன் மகனைத் தேடி அலைகிறார். 1997-ம் ஆண்டு 2 வயது குழந்தையாக இருந்த குவோ ஸென், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது நடுத்தர வயது பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அன்று ஆரம்பித்த தன் தேடுதல் வேட்டையை 18 ஆண்டுகள் ஆகியும் குவோ நிறுத்தவில்லை.

இதுவரை 4 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் சென்று வந்துவிட்டார். மோட்டார் சைக்கி ளின் இருபுறமும் குழந்தையின் புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்ட கொடிகளுடன் பயணிக்கிறார். இதுவரை 10 மோட்டார் சைக்கிள் களை மாற்றியுள்ளார். மகனைத் தேடுவதிலேயே வாழ்க்கைக் கழிவதால், போதுமான வருமானமும் இல்லை. சில நேரங்களில் சாப்பிடக்கூட வழியில்லாமல் பயணம் செய்துகொண்டே இருப்பார்.

ஒவ்வொரு நாளும் பயணத்தைத் தொடங்கும்போது, ’இன்று என் கிடைத்துவிடுவான்’ என்று நினைத்துக்கொண்டே கிளம்புகிறார். மாலையில் சோர்வாகத் திரும்பும்பொழுதும், ’நாளை கண்டிப்பாகக் கிடைத்துவிடுவான்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார். காணாமல் போன எத்தனையோ குழந்தைகள் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்த செய்திகளும், சில நல்ல மனிதர்கள் இதுபோன்ற குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் தகவல்களும் குவோவை உற்சாகத்துடன் இயங்க வைக்கின்றன.

குவோ குடும்பத்தினர் இதுவரை தங்கள் குடும்பப் புகைப்படம் எடுத்ததில்லை. குவோ ஜெஸ் வந்த பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள். குழந்தை காணாமல் போன பொழுது குவோவின் பழைய வீடு, கொஞ்சம் மாற்றிக் கட்டப்பட்டது. ஒருவேளை குழந்தையால் தன் வீட்டை அடையாளம் காண முடியாமல் போய்விட்டதோ என்று கவலைப்படுகிறார் குவோ.

கிரேட் அப்பா!

உலகிலேயே மிகப் பெரிய முயல் என்ற பட்டம் இங்கிலாந்தில் வசிக்கும் டாரியஸ் முயலுக்குக் கிடைத்திருக்கிறது. 4 அடி 4 அங்குல நீளமும் 22 கிலோ எடையும் கொண்ட ராட்சத முயலாகக் காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 2 ஆயிரம் கேரட்கள், 700 ஆப்பிள்கள் கொடுப்பதாகச் சொல்கிறார் டாரியஸின் உரிமையாளர் அன்னெட் எட்வர்ட்ஸ். டாரியஸின் மகன் ஜெஃப் பிறந்த 6 மாதங்களிலேயே 3 அடி 8 அங்குல நீளம் வளர்ந்திருக்கிறது.

மிக விரைவிலேயே டாரியஸ், தன் மகனிடம் பட்டத்தை இழக்கும் வாய்ப்பு இருக்கிறது. மகன் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் ஜெஃப்பை டாரியஸ் ஒரு குழந்தையைப் போலவே நடத்துகிறது என்கிறார் அன்னெட். ஆண்டுக்கு 4.5 லட்சம் ரூபாய் டாரியஸ் உணவுக்காகச் செலவு செய்யப்படுகிறது. பகல் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் இரண்டு முயல்களும் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

தந்தை 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறது!

கலிஃபோர்னியாவில் வசிக்கிறார் மெர்ரி கூர். இவர் பிரத்யேகமான நகைகளை உருவாக்கித் தருகிறார். அதாவது இறந்தவர்களின் சாம்பலை வைத்து, அழகான நகைகளைச் செய்து தருகிறார். அன்பானவர்கள் நம்மை விட்டுச் செல்வது உச்சபட்ச துயரம். அவர்களின் நினைவாக, அவர்களின் சாம்பலை வைத்து உருவாக்கப்படும் நகைகளை எப்பொழுதும் கழுத்தில் அணிந்துகொள்ளலாம். அவர்கள் நம்முடனே வசிப்பது போன்ற திருப்தி கிடைக்கும் என்கிறார் மெர்ரி. வாடிக்கையாளர்களிடமிருந்து சாம்பல் வந்தவுடன், தன் வேலையை ஆரம்பித்து விடுகிறார்.

வண்ண மயமான கண்ணாடி குண்டுகளுக்குள் சாம்பலை வைத்து மூடி விடுகிறார். அழகான டாலர் உருவாகி விடுகிறது. இந்த டாலரை செயினில் கோத்து மாட்டிக்கொள்ள வேண்டியதுதான். டாலர் செயின், மோதிரம், தோடு என்று எந்த விதமான நகை கேட்டாலும் செய்து தருகிறார். ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாம்பல் நகைகளை உருவாக்கித் தருகிறார் மெர்ரி. நகைகளைப் பார்த்தவுடன் கண்ணீர் வடித்து, நன்றி சொல்லிவிட்டு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைப் பார்க்கும்போது திருப்தி ஏற்படுவதாகச் சொல்கிறார் மெர்ரி.

அன்பு லாஜிக் பார்ப்பதில்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-18-ஆண்டுகளாகக்-குழந்தையைத்-தேடும்-அப்பா/article7076703.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அரை டன் எடையுடன் தவிக்கும் இமான்

 

 
masalaim_3057407f.jpg
 

எகிப்தில் வசிக்கும் இமான் அஹ்மது அப்துலாட்டி, கடந்த 25 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை. அவரால் படுக்கையை விட்டு நகரக்கூட முடியாது.

உலகிலேயே அதிக அடை கொண்ட பெண் இமான் அப்து லாட்டிதான். 500 கிலோ எடையுடன் இருக்கிறர். சிறிய வயதிலேயே அரிய குறைபாட்டால் பாதிக்கப் பட்ட இமான், விரைவிலேயே படுக்கையில் முடங்கிப் போனார்.

“இமான் பிறந்த தில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டாள். யானைக்கால் நோய், நோய்த் தொற்று, சுரப்பிகள் சரிவர இயங்கவில்லை என்று அடுத்தடுத்து பாதிப்புகளால் தாக்கப்பட்டாள். உடல் எடை அதிகமாகிக்கொண்டே வந்தது. 11 வயதில் காலை எடுத்து வைக்க முடியாத அளவுக்கு நோய் முற்றிவிட்டது. கொஞ்சம் நாள் தவழ்ந்தாள். பிறகு படுக்கையில் விழுந்தாள். அதீத எடையால் இமானால் புரண்டு படுக்கக்கூட முடியாது. சிலை போல அப்படியே படுத்திருப்பது மிகவும் கொடுமையானது. சாப்பிடுவது, இயற்கை உபாதைகளைக் கழிப்பது எல்லாமே படுக்கையில்தான். உடலைச் சுத்தம் செய்வதோ, ஆடை அணிவிப்பதோ மிகவும் சிரமம். ஒருவரால் எதையும் செய்ய முடியாது.

என் மனைவியும் இன்னொரு மகளும் இமானை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார்கள். உடல் இன்னும் பலூன் போல பெரிதாகிக்கொண்டேதான் வருகிறது. என் மகளுக்கு மருத்துவ உதவி கேட்டு, அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். கெய்ரோவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மருத்துவம் செய்தால், என் மகள் பிழைத்துவிடுவாள் என்று நம்புகிறேன்” என்கிறார் இமானின் தந்தை.

அரை டன் எடையுடன் தவிக்கும் இமானுக்கு விரைவில் மருத்துவ உதவி கிடைக்கட்டும்…

உலகிலேயே மிக அழகான மாடல் என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது டீ. இது ஆப்கன் ஹவுண்ட் வகையைச் சேர்ந்த நாய். நல்ல உயரமும் மெல்லிய உடலும் பட்டு போன்ற கருங்கூந்தலுமாக இருக்கிறது.

சிட்னியில் நடைபெற்ற நாய் கண்காட்சியில், உலகின் கவனத்தை ஈர்த்துவிட்டது. ஒரே இரவில் டீயின் புகைப்படம் இணையத்தில் 10 லட்சம் தடவைக்கு மேல் பகிரப்பட்டிருக்கிறது. நாய்களுக்கான உணவுகள், நாய்களுக்கான வாசனைத் திரவியங்களுக்கு டீயை மாடலாக சர்வதேச நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. “டீ இந்த வரவேற்பைப் பெற்றதில் எங்களுக்கு வியப்பில்லை. அத்தனைப் புகழுக்கும் தகுதியானவள். எங்கே அழைத்துச் சென்றாலும் கூட்டம் கூடிவிடும். அவளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள எல்லோரும் ஆர்வம் காட்டுவார்கள். டீ விலங்கு நடிகராக மாறிவிட்டாள். பலரும் தங்கள் பொருட்களுக்கு டீயை மாடலாக நடிக்கும்படி கேட்கிறார்கள். எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டால் பணம் வரும்தான். ஆனால் ஒப்புக்கொண்ட விளம்பரங்களில் மட்டுமே டீ நடிப்பாள். இனி அவளைக் கண்காட்சிகளிலோ, விளம்பரங்களிலோ பங்கேற்க வைக்கும் எண்ணம் இல்லை. அவளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. எங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழட்டும் என்று முடிவு செய்துவிட்டேன். டீ இதுவரை எங்களுக்குக் கொடுத்த மறக்க முடியாத அற்புதமான தருணங்களே வாழ்நாளுக்கும் போதும்” என்கிறார் உரிமையாளர் லூக் கவனா.

உலகின் சூப்பர் மாடல்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அரை-டன்-எடையுடன்-தவிக்கும்-இமான்/article9265296.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: திருடர்கள் ஜாக்கிரதை!

 

 
cycle_3058511f.jpg
 

சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த சைக்கிள் நிறுவனம், Skunlock என்ற பிரத்யேக சைக்கிளை உருவாக்கியிருக்கிறது. இந்த சைக்கிளை திருடர்கள் யாராவது தொட்டால், ரசாயனம் வெளியேறி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாந்தி வரும்.

“அமெரிக்கா முழுவதும் ஆண்டுக்கு 15 லட்சம் சைக்கிள்கள் திருடு போகின்றன. திருடர்களிடமிருந்து சைக்கிள்களைப் பாதுகாப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தோம். 6 மாத உழைப்பில் தீர்வைக் கண்டுபிடித்து விட்டோம். பூட்டை உடைத்து, ரசாயன மணத்தையும் தாண்டி ஒருவர் சைக்கிளை எடுத்துச் சென்றால், கொஞ்சம் தூரம் கூடப் போகமுடியாது. சைக்கிளைப் போட்டுவிட்டு, ஓடி விடுவார்கள். எளிதாக சைக்கிளை மீட்டுவிடலாம். 2017ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது” என்கிறார் டேனியல் இட்ஜோவ்ஸ்கி.

திருடர்கள் ஜாக்கிரதை!

ரஷ்யாவைச் சேர்ந்த மார்கரிடா ஸ்விட்னென்கோவுக்கு 12 வயதில் குறைபாடுடைய மகன் இருக்கிறான். மார்கரிடாவுக்கும் அவரது கணவர் சர்கேவுக்கும் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்துகொண்டே இருந்தது. 2010ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட முடிவு செய்தனர். ஆனால் வழக்கு இழுத்துக்கொண்டே சென்றது.

பலமுறை மார்கரிடாவையும் மகனையும் வீட்டை விட்டுத் துரத்த, சர்கே முயன்றார். ஆனால் உறுதியுடன் அதை முறியடித்தார் மார்கரிடா. மூன்று மாடிகள் கொண்ட மிகப் பெரிய பங்களாவில், மார்கரிடாவும் குழந்தையும் தங்கும் பகுதியில் கணப்பு அடுப்பு, சுடுநீர் இணைப்பு போன்றவற்றை நிறுத்தினார் சர்கே. நடுங்கும் குளிர்காலத்தில் தானும் தன் மகனும் எங்கே செல்வது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார் மார்கரிடா. ஒருவழியாக நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. வீட்டில் இருவருக்கும் பங்கு உண்டு என்றும் இருவரும் பாதியாகப் பிரித்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கியது.

அன்று இரவு மார்கரிடா நிம்மதியாக மாடி அறையில் மகனுடன் தூங்கினார். காலை அறையை விட்டு வெளியே வந்தவர் அதிர்ந்து போனார். மாடிப்படி ஆரம்பிக்கும் இடத்தில் மிகப் பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அதாவது மாடியில் இருந்து வரும் வழி சுவர் மூலம் அடைக்கப்பட்டிருந்தது. இப்படிச் செய்வது முட்டாள்தனமானது, அநியாயமானது என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் மார்கரிடா, ஆனால் சர்கே காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. வீட்டைச் சரி பாதி பிரித்தாகிவிட்டது, அவரவர் இடங்களில் வாழ வேண்டியதுதான் என்று கூறிவிட்டார்.

உடனே காவல்துறையிடம் புகார் அளித்தார் மார்கரிடா. பசியால் அழுத மகனுக்கு, உணவு கொடுக்க வழியில்லை. மாடியில் இருந்து ஒரு கயிற்றைக் கட்டி கீழே விட்டார். சமையல்காரர் உணவுகளை ஒரு பையில் வைத்து மேலே அனுப்பினார். காவலர்கள் வந்தனர். சர்கேவின் செயலைக் கண்டு அதிர்ந்தனர். பிறகு அவரைச் சமாதானம் செய்து, சுவற்றை இடித்து, வழி உண்டாக்கினர். 3 மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு மார்கரிடா கீழே இறங்கி வந்தார். தான் புதிய மனைவியுடன் புதிய வாழ்க்கை வாழப் போவதாகவும் எக்காரணம் கொண்டும் தன் எல்லைக்குள் மார்கரிடா வரக்கூடாது என்றும் சொல்லிவிட்டார் சர்கே.

வீட்டின் குறுக்கே சுவர் கட்டிய விநோத கணவர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-திருடர்கள்-ஜாக்கிரதை/article9270560.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மனிதச் சாம்பலில் பாத்திரங்கள்!

 
 
 
 
msala_3059700f.jpg
 

நியு மெக்ஸிகோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலில் இருந்து பாத்திரங்களைச் செய்கிறார். கடந்த ஆண்டு ஒரு புராஜக்டுக்காக இந்தச் சாம்பல் பாத்திரங்களை உருவாக்கியவர், நண்பர்களின் ஆலோசனையால் இதைத் தொழிலாக மாற்றிக்கொண்டார். ‘க்ரானிகல் க்ரிமேஷன் டிசைன்’ என்ற பெயரில், மனிதச் சாம்பலில் இருந்து காபி கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள் போன்றவற்றை உருவாக்கித் தருகிறார். ‘நான் 2015ம் ஆண்டு ஒரு புராஜக்டுக்காக 200 மனித எலும்புகளை விலைக்கு வாங்கினேன். அவற்றைத் தூளாக்கி, மண்ணுடன் கலந்து அழகிய பாத்திரங்களாக மாற்றினேன். மறுசுழற்சி முறையில் மனித எலும்புகளை பயன்படுத்துவதுதான் என்னுடைய திட்டம். மனிதச் சாம்பலைக் கேட்டு விளம்பரம் செய்தபோது, எதிர்வினைகள் மிக மோசமாக இருந்தன. இந்தத் திட்டத்தைக் கைவிட எண்ணினேன்.

ஆனால் நண்பர்கள் என்னை உற்சாகப்படுத்தினார்கள். ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு இருந்தது. தங்கள் அன்புக்குரியவர்களின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை, தங்களுடன் வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டினார்கள். இறந்தவர்கள் பாத்திரங்கள் மூலம் தங்களுடனே இருக்கிறார்கள் என்ற திருப்தி பலருக்கும் கிடைத்திருக்கிறது. முதிய மனிதர் ஒருவரின் உடலை எரித்தால் 1.8 கிலோவில் இருந்து 2.7 கிலோ வரை சாம்பல் கிடைக்கும்.

பாத்திரம் செய்வதற்கு 100 கிராம் சாம்பல் மட்டுமே போதுமானது. சாம்பல், மண், தண்ணீர் எல்லாம் சேர்த்து, அழகான பாத்திரங்களை உருவாக்கிவிடுகிறோம். இந்தப் பாத்திரங்களை அடுப்பில் வைக்கலாம். உணவு சமைக்கலாம். கோப்பைகளில் காபி குடிக்கலாம். உங்களுக்கு மட்டுமே இது மனித சாம்பலில் செய்தது என்று தெரியும். மற்றவர்களுக்குச் சாதாரண பீங்கான் பாத்திரங்களாகத்தான் தோன்றும்’ என்கிறார் ஜஸ்டின் க்ரோவ்.

மனிதச் சாம்பலில் பாத்திரம் செய்வது நியாயம்தானா?

பிரேஸிலைச் சேர்ந்த 36 வயது அர்மன்டோ டி அண்ட்ரேட், வீட்டின் தரைத் தளத்தில் அடைக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அர்மன்டோவை, அவரது அப்பாவும் சித்தியும் சேர்ந்து தரைத்தளத்தில் இருந்த ஓர் இருட்டறையில் தள்ளிவிட்டனர். சிறிய துளையைத் தவிர, ஜன்னல் கூட இல்லை. உணவு, நீர், உடை அவ்வப்போது கொடுத்தனர். அர்மன்டோவின் நண்பர்கள் காணாமல் போன நாளில் இருந்து விசாரித்து வருகின்றனர். அவன் தொலைதூரத்துக்குப் படிக்கச் சென்றுவிட்டான், வேலைக்குச் சென்றுவிட்டான், திருமணமாகி குடும்பத்துடன் நல்ல நிலையில் வசிக்கிறான் என்று ஆண்டுகள் செல்லச் செல்ல, நம்பும் விதத்தில் பொய்களைக் கூறி வந்திருக்கின்றனர்.

ஆனால் நண்பர்களுக்கு மட்டும் சந்தேகமாகவே இருந்தது. காவல்துறையில் புகார் கொடுத்தனர். காவலர்கள் தரைத் தளத்துக்குச் சென்று, கதவை உடைத்து, அர்மன்டோவை மீட்டனர். நீண்ட தாடியும் நீண்ட நகங்களுமாகக் காட்சியளித்தார். வெளிச்சத்தை அவரால் பார்க்க முடியவில்லை. பேச்சும் வரவில்லை. யாரையும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. மெல்லிய உடலுடன் பரிதாபமாக இருந்தவரை, உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். அர்மன்டோவின் அப்பாவை விசாரித்தபோது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தவன், தானே அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான் என்று சொல்லியிருக்கிறார். வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. உண்மை இனிமேல்தான் தெரியவரும் என்கிறார்கள்.

சே... எவ்வளவு கொடூரம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனிதச்-சாம்பலில்-பாத்திரங்கள்/article9275027.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இறந்தபிறகு என்ன உடை உடுத்தலாம்?

 

 
masala_3061348f.jpg
 

அழகான, நேர்த்தியான ஆடைகளை அணிவதற்கு மனிதர்கள் விரும்புகிறார்கள். வாழும்போது மட்டுமின்றி, இறந்த பிறகும் ஸ்டைலான ஆடைகளை அணியுங்கள் என்று சொல்கிறது பிரிட்டனைச் சேர்ந்த லிஸ்ட் ஆடை நிறுவனம். “பிரிட்டனில் வாழக்கூடிய 85% மக்கள், தாங்கள் இறக்கும்போது மிகச் சிறந்த ஆடைகளை அணிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்காகவே, ‘ஓவர் மை டெட் பாடி’ என்ற பெயரில் பிரத்யேக ஆடை வகைகளை உருவாக்கியிருக்கிறோம். வாழும்போது ஆடைகளுக்காக எவ்வளவு மெனக்கெடுகிறோம்! இறந்த பிறகு ஒரே ஆடையில்தான் இருக்கப் போகிறோம். அதற்காகக் கொஞ்சம் அதிகம் செலவு செய்தால் ஒன்றும் தவறில்லை.

அந்த ஆடையையும் நீங்களே பார்த்து, வடிவமைத்து, வாங்கி வைத்துக்கொண்டால் திருப்தியாக மரணத்தைச் சந்திக்கலாம். ஆடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகள், தொப்பிகள், ஆபரணங்கள், செருப்புகள் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் தற்போது 40 வகையான ஆடைகள் இருக்கின்றன. பிரபல மாடல்களுக்கு எங்கள் ஆடைகளை அணிவித்து, சவப்பெட்டியில் படுக்க வைத்து, விளம்பரப்படுத்தி வருகிறோம். நல்ல வரவேற்பு இருக்கிறது. இறந்த பிறகும் உங்கள் விருப்பம்போல எல்லாமே சரியாக நடப்பதற்கு நாங்கள் உதவி புரிகிறோம்” என்கிறார் லிஸ்ட் நிறுவனர்.

எங்கிருந்துதான் இப்படி எல்லாம் யோசனைகள் உதிக்குமோ?

உகாண்டாவின் வித்தியாசமான மனிதராக அறியப்படுகிறார் 47 வயது காட்ஃப்ரே பாகுமா. உருவம் சிறுத்து, உயரம் குறைந்து, கன்னம் வீங்கி, விநோதமான தலையுடன் காட்சியளிக்கிறார். வாழ்நாள் முழுவதும் சக மனிதர்களால் வெறுக்கப்பட்டவர், இன்று உகாண்டாவின் பாப் ஸ்டாராக நேசிக்கப்படுகிறார். “நான் பிறந்தபோதே என் உருவத்தைக் கண்டு, அம்மா பிரிந்து சென்றுவிட்டார். பாட்டிதான் என்னை வளர்த்தார். என்னுடன் யாரும் பேச மாட்டார்கள். தெருவில் நடந்தால் விநோதமாகப் பார்ப்பார்கள். இசை மீது எனக்கு ஆர்வம் அதிகம். நன்றாகப் பாடுவேன். என் திறமையைப் பார்த்தவர்கள், எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். பல நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட ஆரம்பித்தார்கள். எனக்கு வருமானமும் வர ஆரம்பித்தது.

என்னை ஒரு பெண் திருமணம் செய்துகொண்டார். 2 குழந்தைகள் பிறந்த பிறகு அவரும் சென்றுவிட்டார். மீண்டும் ஒரு நல்ல மனம் படைத்த பெண் என் மனைவியானார். 6 குழந்தைகள் பிறந்தனர். அவற்றில் ஒரு பெண் என்னைப் போலவே குறைபாட்டுடன் பிறந்திருக்கிறாள். என் குறைபாடு குழந்தைகளையும் பாதிக்குமோ என்று எனக்கு அச்சமாக இருந்தது. ஒரு மருத்துவர் உதவ முன்வந்தார். பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

என் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டால், எனக்கும் பாதிப்பில்லை என்றும் கூறிவிட்டார். நிம்மதியாக இருக்கிறது. வாழ்க்கையில் இசை மட்டும் இல்லை என்றால், என்னை ஒரு மனிதனாக இந்த உலகம் பார்த்திருக்காது” என்கிறார் காட்ஃப்ரே பாகுமா. “காட்ஃப்ரேயின் உருவம் கவரக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். அவருக்கு மிக நல்ல மனம் இருக்கிறது’’ என்கிறார் அவரது மனைவி நமன்டே கேட். யூடியூப்பில் காட்ஃப்ரே பாகுமாவின் இசையை இதுவரை 30 லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள்.

நீண்ட காலம் வாழட்டும் உகாண்டாவின் பாப் ஸ்டார்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இறந்தபிறகு-என்ன-உடை-உடுத்தலாம்/article9279723.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.