Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: தன்னம்பிக்கையின் மறுபெயர்!

 

 
 
chair_3106775f.jpg
 
 
 

ஹாங்காங்கைச் சேர்ந்த 33 வயது லாய் சி வாய், ஆசிய மலையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 முறை பட்டங்களை வென்றிருக்கிறார். 2011-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான விபத்து ஏற்பட்டது. “நான் கண் விழித்தபோது மருத்துவமனையில் இருந்தேன். எனக்குச் சில அறுவை சிகிச்சைகள் முடிந்திருந்தன. இனி நான் சக்கர நாற்காலியில்தான் என் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்றும் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்றும் சொன்னார்கள்.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய என்னை, குடும்பத்தினரும் நண்பர்களும் அக்கறையுடன் அரவணைத்துக்கொண்டார்கள். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே குத்துச்சண்டை பயிற்சி செய்துகொண்டிருந்தேன். அதைப் பார்த்த என் நண்பர்கள், சக்கர நாற்காலியுடன் மலையேறுவதற்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். 2014-ம் ஆண்டு ஹாங்காங்கின் புகழ்பெற்ற லயன் மலையில் முதல் முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன்.

என் நண்பர்கள் மிகவும் கவலையடைந்தனர். பிறகு என் உறுதியைக் கண்டு ஆதரவளித்தனர். 500 மீட்டர் மலை என்னை வா, வா என்று அன்போடு அழைத்துக்கொண்டே இருந்தது. இரண்டாண்டுகள் நன்றாகப் பயிற்சி செய்தேன். 2016 டிசம்பர் 9-ல் நான் சக்கர நாற்காலியுடன் மலையேறும் விஷயத்தை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினேன். அந்தக் கிரானைட் மலையில் நம்பிக்கையோடு ஏற ஆரம்பித்தேன். மிகச் சவாலாகவும் கடினமாகவும் இருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் முயற்சியைக் கைவிட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. இறுதியில் மலை உச்சியை அடைந்தேன். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதே டிசம்பர் 9 அன்று சாலையில் அடிபட்டுக் கிடந்தேன். ஐந்தே ஆண்டுகளில் கால்கள் இயங்காவிட்டாலும் மலை உச்சியில் அமர்ந்துகொண்டிருக்கிறேன். நான் எதையும் இழந்துவிடவில்லை என்பதை இந்த மலையேற்றம் எனக்கு உணர்த்தியிருக்கிறது” என்று மகிழ்கிறார் லாய் சி வாய்.

மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் லாய் சி வாயைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மலையேற்றப் பயிற்சியாளர் ஒருவர், “சக்கர நாற்காலியுடன் மலையேறுவதை இதுவரை யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். லாய் சி வாய் சக்கர நாற்காலியுடன் மலையேறியது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை” என்று சிலிர்க்கிறார்.

தன்னம்பிக்கையின் மறுபெயர் லாய் சி வாய்!

ரொட்டிகளில் தடவிச் சாப்பிடக்கூடிய நியுடெல்லாவை, முடிக்குச் சாயம் ஏற்றுவதற்குப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். துபாயைச் சேர்ந்த முடிதிருத்துநர்கள் அபேத், சமீர் இருவரும் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நியுடெல்லாவை முடிகளில் தடவி சிறிதுநேரம் ஊறவைக்கிறார்கள். பிறகு முடிகளைச் சுத்தம் செய்தால், பொன் நிறத்திலும் பளபளப்பாகவும் பட்டுப் போலவும் முடிகள் மாறிவிடுகின்றன. தற்காலிக சாயம் ஓரிரு நாட்களில் காணாமல் போய்விடும். ஆனால் நியுடெல்லா சாயம் 3 வாரங்களுக்குத் தாக்குப்பிடிக்கிறது என்கிறார்கள். சத்தும் சுவையும்கொண்ட குழந்தைகள் அதிகம் விரும்பக்கூடிய நியுடெல்லாவை, முடிக்குச் சாயமாகப் பயன்படுத்துவதற்கு எராளமானவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

நியுடெல்லாவுக்கு வந்த சோதனை…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தன்னம்பிக்கையின்-மறுபெயர்/article9437440.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: பெரியவர்கள் பிரச்சினைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்!

 
emotional_advice_3107302f.jpg
 
 
 

வல்லுநர்களைச் சந்தித்து உணர்ச்சிபூர்வமான ஆலோசனைகளைப் பெற நேரமோ, பணமோ இல்லாதவர்கள், 11 வயது சிறுவனிடம் ஆலோசனைகளைக் கேட்கிறார்கள்! நியுயார்க் சப்வே ஸ்டேஷனில் அமர்ந்து, ஆலோசனைகளை அளித்துவருகிறான் சிரோ ஆர்டிஸ். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 2 மணி நேரம் ஆலோசனைகளை வழங்குவதற்காகச் செலவிடுகிறான். ஒவ்வொருவருக்கும் 5 நிமிடங்கள், 136 ரூபாய் கட்டணம். சிறுவனிடம் ஆலோசனை கேட்கப் பெரியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். பெயர், குடும்பம், வேலை போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு எந்தவிதமான ஆலோசனை வேண்டும் என்று கேட்கிறான். வீட்டிலோ, வேலையிலோ, உறவுகளிலோ ஆலோசனை வேண்டும் என்று சொன்னால், அதற்கேற்றவாறு எளிய ஆலோசனைகளை வழங்கி விடுகிறான். அவர்களும் திருப்தியாகக் கட்டணத்தைச் செலுத்திவிட்டுச் செல்கிறார்கள். “ஒருநாள் இரவு சில பிரச்சினைகளை விவரித்து, அதற்கு அவனுடைய ஆலோசனைகளையும் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனுடைய திறமையை ஊக்குவிக்க முடிவு செய்தேன். மறுநாள் வில்லியம்ஸ்பர்க் தெருவுக்குச் சென்றோம். ஆலோசனைக்கு 2 டாலர் கட்டணம் என்று எழுதி வைத்துக் காத்திருந்தோம். நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் வந்து, ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்” என்கிறார் சிரோவின் அப்பா ஆடம். “என்னுடைய ஆலோசனைகள் மிக எளிமையானவை. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு விஷயமும் மாற்றத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நாமும் மாறித்தான் ஆக வேண்டும் என்பதைத்தான் என் ஆலோசனைகளில் அதிகம் சொல்கிறேன்” என்கிறான் சிரோ.

சிறுவனிடம் ஆலோசனை கேட்கும் அளவுக்குப் பெரியவர்கள் பிரச்சினைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்!

பெண்கள் மாதவிடாய் காலத்தை இன்னும் சவுகரியமாக உணர்வதற்காக, சுவிட்சர்லாந்து சாக்லேட் நிறுவன உரிமையாளர் மார்க் விட்மர் புதிய சாக்லேட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த சாக்லேட்டில் 60% கோகோவும் ஸ்விட்சர்லாந்து மலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 17 விதமான மூலிகைகளும் கலந்திருக் கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தை யோசித்த விட்மர், 17 மூலிகைகள் கலந்த தேயிலைத் தூளைத் தயாரித்தார். பிறகு அந்த யோசனையை சாக்லேட்டுக்கு மாற்றிவிட்டார். “பெண்களுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், மாதவிடாய் நேரத்தில் வரும் பிரச்சினைகளும் குறைய வேண்டும் என்று திட்டமிட்டோம். இது மருந்து அல்ல. மருத்துவக் குணங்கள் கொண்ட சுவையான சாக்லேட். 100 கிராம் ஃப்ரான்மன்ட் சாக்லேட்டின் விலை 800 ரூபாய். அடுத்த ஆண்டு ஆசியச் சந்தைகளில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதுவரை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்” என்கிறார் மார்க் விட்மர்.

விலை குறைந்தால் பெண்களுக்கான பிரத்யேக சாக்லேட்டை வரவேற்கலாம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பெரியவர்கள்-பிரச்சினைகளில்-மூழ்கிக்-கிடக்கிறார்கள்/article9439554.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பிரிவென்பது கொடுமை

 
child1_3107778f.jpg
 
 
 

பிரிட்டனைச் சேர்ந்த எட் க்யூசிக், இசைக் கலைஞர். அவரது மனைவி நினா கிராஃபிக் டிசைனர். மகன் பிறந்து சில மாதங்களில் கடுமையான வயிற்று வலி, தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டார். பிரசவம் தொடர்பான வலியாக இருக்கும் என்று பரிசோதனை செய்தபோது, முற்றிய நிலையில் குடல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. 6 வாரங்கள் மட்டுமே நினா உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் நினாவின் ஆயுளைக் கொஞ்ச காலமாவது நீட்டிக்க முடிவெடுத்தார் க்யூசிக். “எப்படியாவது கிறிஸ்துமஸ் வரை உயிருடன் இருந்து, எங்கள் மகன் நினாவின் கிறிஸ்துமஸ் பரிசைத் திறந்து பார்ப்பதை, அவர் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். திடீரென்று அவரது உடல் நிலை மோசமானது. மருத்துவமனையில் சேர்த்து ஒரே வாரத்தில் நினாவின் உயிர் பிரிந்துவிட்டது. இன்னும் பத்து நாட்கள் இருந்திருந்தால் நினாவின் ஆசை நிறைவேறியிருக்கும். நினாவைப் போல அற்புதமான மனைவியையோ அன்பான தாயையோ பார்த்திருக்க முடியாது. நினாவுக்காக வேலைக்குச் செல்லாமல் நன்றாகக் கவனித்துக்கொண்டேன். ஆனாலும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று கடிதம் எழுதியிருக்கிறார் க்யூசிக்.

கொடுமை…

ஒட்டோனா மகி என்ற தெரபி ஜப்பானில் புகழ்பெற்று வருகிறது. வளையாத உடலை ஒரு துணிக்குள் வைத்து, கட்டி விடுகிறார்கள். அம்மாவின் கர்ப்பப் பையில் இருப்பது போல துணிக்குள் 15 - 20 நிமிடங்கள் இருக்க வேண்டும். இப்படித் தினமும் சிகிச்சை எடுத்துக்கொண்டால், முதுகு சரியான நிலைக்கு வந்துவிடும். அதிக நேரம் உழைக்கும் ஜப்பானியர்கள் தவறான நிலையில் உட்கார்ந்திருக்கின்றனர். இதனால் முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர். பல்வேறு சிகிச்சைகளுக்குச் சென்றாலும் முழுமையாகக் குணம் அடைய முடிவதில்லை. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உருவாக்கப்பட்டதே ஒட்டோனா மகி தெரபி. “இந்த தெரபியை எடுத்த பிறகுதான் என்னுடைய முதுகுவலி சரியானது. ஆரம்பத்தில் முழுமையாக நம்பவில்லை. வேறு வழியின்றிதான் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். வெகுவிரைவிலேயே பலன் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஒரு துணிக்குள் மூட்டையாக இருப்பது வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் சிறப்பான சிகிச்சை முறை. இப்போது என் முதுகு நேராக நிமிர்ந்துவிட்டது. இருக்கைகளில் சரியான விதத்தில் அமர முடிகிறது. முன்பு இருந்ததை விட உடல் மிகவும் வளைந்து கொடுக்கிறது. புத்துணர்ச்சியோடு வாழ்கிறேன்” என்கிறார் யாயோய் கட்டயாமா. ஜப்பானிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிறகு ஒட்டோனா மகியின் புகழ் பரவிவிட்டது.

எங்கிருந்துதான் யோசனை உதிக்குமோ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிரிவென்பது-கொடுமை/article9441275.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: 56 மொழிகள் அறிந்த அசகாயசூரர்!

 

 
lan_3108337f.jpg
 
 
 

முகமது மெசிக் 56 மொழிகளைச் சரளமாகப் பேசவும் 14 மொழிகளைப் புரிந்துகொள்ளவும் கூடியவராக இருக்கிறார்! யுகோஸ்லாவாகியாவைச் சேர்ந்த முகமதுவுக்கு 5 வயதிலேயே மொழிகளை வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறன் வந்துவிட்டது. “ஐந்து வயதில் கிரேக்க நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். எனக்கு அறிமுகம் இல்லாத மொழி பேசுபவர்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தேன். சுற்றுலாவின் இறுதி நாளில் கார் ரிப்பேர் ஆகிவிட்டது. டிரைவர், மெக்கானிக் ஆகியோருடன் கிரேக்க மொழியில் நான் பேசியதைக் கண்டு என் குடும்பமே அதிர்ந்து போனது. என் அப்பா அலுவலக ரீதியாகப் பல நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித் தேன். உறவினர்கள் பல நாடுகளில் இருந்ததால், அங்கும் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் அப்பா. மருத்துவப் பரிசோதனையின் முடிவில், எனக்கு ஒருவகையான ஆட்டிசம் குறைபாடு கொஞ்சம் இருக்கிறது என்றும், அந்தக் குறைபாடு சில நேரங்களில் தற்செயலாக மொழிகளை எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றலை வழங்குகிறது என்றும் தெரிய வந்தது. என்னுடைய திறமையை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் புதுப் புது மொழிகளைக் கற்றுக்கொடுக்க முன்வந்தனர். சிலவற்றை நானே தேடிச் சென்று கற்றுக்கொண்டேன். இரண்டே வாரங்களில் யூ டியூப், 2 புத்தகங்கள், 43 கார்ட்டூன்கள் மூலம் பால்டிக் மொழியைக் கற்றுக்கொண்டேன். ஒரு சில மொழிகளைக் கற்றுக்கொண்டால், அவற்றுடன் கொஞ்சம் வித்தியாசப்படும் பல மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். வருடத்தில் 200 நாட்கள் விமானத்தில் பறந்துகொண்டே இருக் கிறேன். பல்வேறு நாடுகளில் விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி என்று ஓடிக்கொண்டே இருக்கிறேன். 56 மொழிகள் இன்று எனக்குத் தெரிந்தாலும் எல்லா மொழிகளையும் அடிக்கடி பயன்படுத்தும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஒரு மொழி அழியும்போது மனிதன் ஒப்பற்ற செல்வத்தை இழக்கிறான்” என்கிறார் முகமது மெசிக்.

56 மொழிகள் அறிந்த அசகாயசூரர்!

அமெரிக்காவில் வசிக்கும் 82 வயது பால் ரஸ்ஸல், மறதி நோயால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் வளர்த்த ஹைடி பூனையை, உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். ஆனால் அங்கிருந்து வெளியேறி, ரஸ்ஸல் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டது ஹைடி. அருகில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டு, பூட்டிய வீட்டையே சுற்றி வந்துகொண்டிருந்தது. ஓராண்டுக்குப் பிறகு ரஸ்ஸல் வீடு திரும்பினார். “என் படுக்கையை விட்டு எழுந்தபோது, கம்பளத்தில் ஒரு விநோத உருவத்தைக் கண்டு பயந்து போனேன். ஆனால் அது அமைதியாக இருந்தது. பிறகுதான் ஹைடி என்று தெரிந்தது. முகத்தைத் தவிர, உடல் முழுவதும் அடர்த்தியாக முடிகள் வளர்ந்து சடைகளாக மாறியிருந்தன. பூனையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, மயக்க மருந்து கொடுத்து, முடிகளை வெட்டினோம். ஒரு கிலோ முடியுடன் இவ்வளவு நாளும் சிரமப்பட்டிருக்கிறது ஹைடி” என்கிறார் ரஸ்ஸல்.

பாவம் பூனை…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-56-மொழிகள்-அறிந்த-அசகாயசூரர்/article9442758.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அதிசய குழந்தை ஜாமி வாழ்க!

 

 
yaan_2342123f.jpg
 
 
 

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் 51 வயது லி யான்ஸி. ஆக்ஸ்ஃபோர்ட் வெளியீடான ஆங்கிலம் சீனம் அகராதியை முன் அடையிலிருந்து பின் அட்டை வரை மனப்பாடமாகச் சொல்கிறார். 2,458 பக்கங்கள் கொண்ட அகராதியிலிருந்து என்ன வார்த்தைக் கேட்டாலும் மிகச் சரியாக விளக்கம் சொல்லிவிடுகிறார். விரிவுரையாளராக இருக்கும் லி யான்ஸிக்கு ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட 21 வயது மகனின் மருத்துவச் செலவுக்காக அதிகப் பணம் தேவைப்பட்டது. அதற்காக நிறைய மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட விரும்பினார். அதற்கு முன் தன்னைத் தயார் செய்துகொள்ள முடிவெடுத்தார். 2013ம் ஆண்டில் இருந்து தினமும் காலை 3 மணியில் இருந்து 6 மணி வரை அகராதியைப் படித்தார். 465 ஆங்கில இதழ்களை நூலகத்திலிருந்து எடுத்து, 19 நாட்களில் படித்து முடித்தார். இன்று மொழியிலும் நினைவாற்றலிலும் அபாரமான பெண்மணியாகத் திகழ்கிறார். ஆங்கிலம் தவிர, ஜெர்மன், ரஷ்யன், போலிஷ் உட்பட 10 மொழிகளைச் சரளமாகப் பேசுகிறார். பிரெயின் பவர் என்பது சீனத் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி. அதில் பங்கேற்க வேண்டும் என்பது லி யான்ஸியின் கனவு. மற்றவர்களை வெல்ல வேண்டும் என்பது என் எண்ணமல்ல, என்னுடைய திறமையை நான் உணர்ந்துகொள்ளவே இதில் பங்கேற்க விரும்புகிறேன் என்கிறார்.

லி யான்ஸி தி கிரேட்!

சேலம் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் ட்ரெவோர் மெக்கெண்ட்ரிக். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டார் ட்ரெவோர். ஐபோன் அப்ளிகேஷன்களை விற்று தேவையான வருமானத்தை ஈட்டும்படி நண்பர்கள் ஆலோசனை தந்தார்கள். ஆனால் அதிலும் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்பொழுது ஸ்பானிய மொழியில் பைபிள் தரமானதாக இல்லை என்பது தெரியவந்தது. பைபிளை ஆடியோவோக மாற்றி, அப்ளிகேஷன்களை உருவாக்கினார். எதிர்பார்த்ததை விட பைபிள் அப்ளிகேஷன்கள் வேகமாக விற்பனையாயின. முதல் ஆண்டு வருமானம் 47 லட்சம் ரூபாய். அடுத்த ஆண்டு அது 63 லட்சம் ரூபாயாகப் பெருகியது. இரண்டே ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நல்ல நிலையை எட்டிவிட்டார் ட்ரெவோர். ’கடின உழைப்பைச் செலவிட்டு நான் இந்தப் பணத்தை ஈட்டவில்லை. தினமும் சில மணிநேரங்கள்தான் செலவிடுகிறேன். இந்த வருமானத்தால் சந்தோஷம் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் நான் கடவுள் நம்பிக்கை அற்றவன். எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்தில் இருந்து கிடைக்கும் பணம் எப்படித் திருப்தி தரும்? அந்த நேரத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் இதில் இறங்கினேன். என்னைப் பொருத்தவரை ஹாரி பாட்டர் புத்தகத்தைப் போல பைபிளும் ஒரு நாவல்தான். நான் மத குரு என்று நினைத்து, பலரும் என்னைத் தொடர்புகொள்ளும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது’ என்கிறார் ட்ரெவோர்.

நீங்க ரொம்ப வித்தியாசமானவர் ட்ரெவோர்!

ஸ்திரேலியாவில் வசிக்கும் கேட், 5 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பெண் குழந்தை நலமாக இருந்தது. ஆனால் ஆண் குழந்தையின் நாடித் துடிப்புக் குறைந்துகொண்டே வந்து, நின்றுவிட்டது. மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது என்றனர். கேட் அதிர்ந்து போனார். அறையைவிட்டு எல்லோரையும் வெளியேறச் சொன்னார். கணவர் டேவிட்டிடம் குழந்தையை எடுத்து, தன் மார்பு மேல் வைக்கச் சொன்னார். கண்ணீர் பெருகியபடி குழந்தையைக் கட்டிப் பிடித்து, உடலைச் சூடேற்றினார். நீண்ட முயற்சிக்குப் பிறகு குழந்தை லேசாக அசைந்தது. மருத்துவர்களை அழைத்தார் டேவிட். குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. ஜாமி பிழைத்துக்கொண்டான். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமி பிறந்த கதையைச் சொல்லியிருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தடவை கூட உடல் நலக்குறைபாடு ஜாமிக்கு ஏற்பட்டதில்லை. ஆரோக்கியமாக இருக்கிறான் என்று கேட்டும் டேவிட்டும் ஆனந்தமடைகிறார்கள்.

அதிசய குழந்தை ஜாமி வாழ்க!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அதிசய-குழந்தை-ஜாமி-வாழ்க/article6995806.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: 110 மரங்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

 

ulagam_3108615f.jpg
 
 
 

ப்பானின் டட்யாமா வளைகுடா பகுதியில் அபூர்வமான இரு நண்பர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள். ஹிரோயுகி அரகாவா என்ற கடல் சுற்றுலா வழிகாட்டியும் யோரிகோ என்று அழைக்கப்படும் மிகப் பெரிய மீனும் (Asian Sheepshead Wrasse) கடந்த 25 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறார்கள். ‘எங்கள் நட்புக்குக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஒவ்வொரு முறை கடலுக்குள் சென்றதும் இரும்பு இயந்திரம் ஒன்றின் மீது சுத்தியலால் தட்டுவேன். சில நிமிடங்களில் எங்கிருந்தாலும் யோரிகோ வந்து சேர்ந்துவிடும். அதன் பிரம்மாண்டமான தலையை வருடிக் கொடுப்பேன். இருவரும் முத்தமிட்டுக்கொள்வோம். சிறிது நேரம் விளையாடுவோம். என்னையே சுற்றிச் சுற்றி வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். பிறகு விடைபெற்றுக்கொண்டு மேலே வந்துவிடுவேன். இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட நான் கூப்பிட்டு, யோரிகோ வராமல் இருந்ததில்லை. எங்கள் அபூர்வ நட்பை பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டேன். தற்போது பலரும் எங்கள் நட்பை நேரில் பார்க்க வருகிறார்கள். என்னையும் யோரிகோவையும் வைத்து ஆவணப்படம் கூட எடுத்திருக்கிறார்கள். மீன்களுக்கு அன்பு போன்ற உணர்ச்சிகள் கிடையாது என்கிறார்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. யோரிகோ போல உற்ற தோழனை நான் மனிதரில் கூடக் கண்டதில்லை’ என்கிறார் ஹிரோயுகி அரகாவா.

சாத்தியமில்லாத இருவரின் கால்நூற்றாண்டு நட்பு!

 

110 Weihnachtsbäume, 130 Lichterketten und 16 000 Christbaumkugeln: Das Haus von Familie Jeromin in Rinteln im Weserbergland erstrahlt in der Adventszeit als kunterbunte Weihnachtswelt. Foto: dpa

 

Foto: dpa

Foto: dpa

 

ஜெர்மனியில் வசிக்கும் தாமஸ் ஜெரோமின் வீடு, வெளியில் சாதாரணமாக இருக்கிறது. ஆனால் உள்ளே ஒரு காட்டையே அமைத்திருக்கிறார். 110 கிறிஸ்துமஸ் மரங்களையும் 16,000 பரிசுப் பொருட்களையும் வைத்து வீட்டை அலங்கரித்திருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரே ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்துதான், கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறார். அதற்குப் பிறகு 20, 45, 80 என்று மரங்களை அதிகரித்து, இந்த ஆண்டு 110 மரங்களை வைத்திருக்கிறார். கூடம், படுக்கையறை, சமையலறை, குளியலறை என்று எங்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. அக்டோபர் மாதம் மரம் தயாரிக்கும் வேலையில் இறங்கி, 8 வாரங்களில் நிறைவு செய்கிறார். இந்த ஆண்டு ஜெரோமின் கிறிஸ்துமஸ் மரங்கள் பற்றிச் செய்திகள் வெளிவந்து ஏராளமானவர்கள் அவர் வீட்டுக்கு வருகை தந்துகொண்டிருக்கிறார்கள். ‘கிறிஸ்துமஸ் மரங்களுக்கு அதிகம் செலவு ஆகாது. என்னால் சமாளிக்க முடியும் என்பதால்தான் இதுபோன்ற காரியங்களில் இறங்குகிறேன். இப்போதெல்லாம் எனக்காக நிறைய மரங்களைக் குறைந்த விலைக்குக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். கிறிஸ்துமஸ் முடிந்த 2 வாரங்களில் அனைத்துப் பொருட்களும் மிகவும் மலிவாகக் கிடைக்கும். அப்போது அடுத்த கிறிஸ்துமஸுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிடுவேன். மூன்று வாரங்கள் அலங்கார விளக்குகளுக்கு மின்கட்டணம் 7 ஆயிரம் ரூபாய். இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு சின்னப் பரிசுப் பொருளைக் கொடுத்து அனுப்பும்போது அவர்களின் மகிழ்ச் சிக்கு அளவே இருக்காது. கிறிஸ்துமஸ் முடிந்து 2 வாரங்களுக்கு எனக்கு வேலை அதிகம் இருக்கும். ஒவ்வொரு மரத்தையும் பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்து விடுவேன்’ என்கிறார் தாமஸ் ஜெரோமின்.

110 மரங்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-110-மரங்களுடன்-கிறிஸ்துமஸ்-கொண்டாட்டம்/article9443292.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மனிதர்களுக்குப் புத்துணர்வூட்டும் ஹஸ்கி கஃபே!

 

 
dog_3109349f.jpg
 
 
 

தாய்லாந்தின் மிகச் சுவையான உணவுகளைச் சாப்பிடவும் புத்துணர்வு பெறவும் ட்ரூ லவ் கஃபேயை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள். இங்கே பனிப்பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 25 ஹஸ்கி நாய்கள் இருக்கின்றன. வசீகரிக்கும் தோற்றமும் அன்பாகப் பழகும் குணமும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கின்றன. ‘மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த நாய்களை வைத்து, கஃபேயை ஆரம்பித்தோம். இன்று தாய்லாந்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக எங்கள் கஃபே மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் மூன்று வேளை ஹஸ்கிகளுடன் பழகுவதற்கு அனுமதிக்கிறோம். நாய்களுடன் செலவிடும் நேரம், உணவு, குளிர்பானம் போன்றவற்றுக்காக 670 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். ஒரு மணிநேரம் மகிழ்ச்சியாக நாய்களுடன் விளையாடலாம். நாய்கள் இருக்கும் பகுதிக்கு நுழையும் முன் கைகளைச் சுத்தம் செய்து, கால்களுக்கு பிளாஸ்டிக் உறைகளை மாட்டிக்கொள்ள வேண்டும். நாய்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துவிடுவோம். ஹஸ்கி நாய்கள் புத்திசாலியானவை. சைபீரிய வகையைச் சேர்ந்த இந்த நாய்களுக்கு ஏற்ற சூழ்நிலையை எங்களால் முழுவதுமாகக் கொடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறோம். 24 மணி நேரமும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இடத்தில் இருக்கின்றன. மக்களுடன் சேர்ந்திருக்கும் நேரங்களில் மட்டுமே இவை வெளியே வருகின்றன. மனிதர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு மிகவும் ஒத்துழைப்புக் கொடுக்கின்றன. முன்பதிவு செய்துவிட்டே இங்கே வர வேண்டும். இல்லாவிட்டால் மணிக்கணக்கில் காத்திருப்பதைத் தவிர்க்க இயலாது’ என்கிறார் உரிமையாளர்.

மனிதர்களுக்குப் புத்துணர்வூட்டும் ஹஸ்கி கஃபே!

ரஷ்யாவில் வசிக்கும் 21 வயது அலெக்சாண்டர் க்ரமரென்கோ, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாடிக்கையாளருக்கு உரிய நேரத்தில் அவரால் கொடுக்க முடியவில்லை. தாமதமாக அனுப்பப்பட்ட பொருட்கள் சேதமடைந்து திரும்பி வந்துவிட்டன. இதனால் சுமார் 30 லட்சம் ரூபாய் நஷ்டம். உடனடியாகப் பொருட்களை வாங்கிய நிறுவனங்களிடம் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம். வேறுவழியின்றி அலெக்சாண்டர், தன்னை அடகு வைக்க முடிவெடுத்துவிட்டார். ஆன்லைனில் தன்னைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு, தன்னை பெண்கள் யாராவது 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தால், அவர்களுக்கு ஓராண்டுக் காலம் கணவனாக இருக்கிறேன் என்கிறார். விளம்பரத்தைக் கண்டவர்கள், யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் இந்தத் தகவல் உண்மை என்று தெரியவந்தபோது, அதிர்ந்து போனார்கள். ‘எதிர்பாராத விதத்தில் எனக்கு மிகப் பெரிய தொகை நஷ்டமாகிவிட்டது. என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன். 35 வயதுக்குள் இருக்கும் பெண்கள், அதிக விலைக்கு ஏலம் எடுத்து, என் வாழ்க்கையைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் நல்ல கணவனாகவும் சிறந்த மனிதனாகவும் ஓராண்டு வரை இருப்பேன். என்னை ஏலம் எடுத்து, மணந்துகொள்ளும் பெண்ணைப் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு அவரவர் வழியில் திரும்பிவிடலாம்’ என்கிறார் அலெக்சாண்டர்.

அடப்பாவி, எவ்வளவு மோசமான யோசனை...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனிதர்களுக்குப்-புத்துணர்வூட்டும்-ஹஸ்கி-கபே/article9445625.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒரு மலைப்பாம்புக்கு இவ்வளவு புரிதல் இருக்க முடியுமா!

 
snake_3109709h.jpg
 

சீனாவின் ஹைகோவ் பகுதி யில் வசிக்கும் 68 வயது ஷி ஜிமின், 7 ஆண்டுகளாக மலைப்பாம்பை வீட்டில் வளர்த்து வருகிறார். 60 கிலோ எடையும் 3.7 மீட்டர் நீளமும் கொண்ட இந்த மலைப்பாம்பை தங்களின் செல்ல மகன் என்கிறார். “2009-ம் ஆண்டு நான் வேலை செய்யும் இடத்தில் பாம்புகளை விற்றுக்கொண் டிருந்தார் ஒரு வியாபாரி.

கடைசியில் 30 செ.மீ. நீளமே இருந்த இந்த மலைப்பாம்பை யாரும் வாங்கவில்லை. எனக்கு விருப்பம் இருந் தால் இலவசமாக எடுத்துக் கொள்ளும்படிச் சொன்னார். என் மனைவியிடம் பாம்பை ஒப்படைத் தேன். அப்போது ஆடு, மாடுகளைச் சாப்பிடக்கூடிய ராட்சச வாய்கொண்ட மலைப்பாம்பு என்று நாங்கள் நினைக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல பாம்பு பெரிதாகிக்கொண்டே வந்தது. மலைப்பாம்பின் இயல்பு குறித்து அறிந்தாலும் எங்களால் அதை வெளியேற்ற இயலவில்லை. இரண்டு மகள்கள் திருமணமாகி வெகு தொலைவில் இருக்கிறார்கள். அவனுக்கு நன்வாங் என பெயரிட்டு மகனாகவே நினைத்து அன்பு செலுத்தி வருகிறோம். ஆனாலும் பாதுகாப்பு குறித்து கவனமாக இருப்போம்.

பகலில் வீடு முழுவதும் சென்று வருவதற்கு அனுமதித்திருக்கிறோம். இரவு மட்டும் அவனுக்கான அறையில் விட்டுவிடுவோம். ஒரு குழந்தையைப் போல எங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பான். மாலை நடைப்பயிற்சிக்கு வருவான். இதுவரை அவன் எங்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதில்லை. அதேபோல அவனுக்காக எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டதில்லை. வருடத்தில் 6 மாதங்கள் குளிர்கால உறக்கத்துக்குச் சென்றுவிடுவான் நன்வாங். அப்போது மட்டும் ஒரு கூண்டுக்குள் அவனை வைத்து, குளிருக்கு இதமாக கம்பளியைப் போர்த்திவிடுவோம்.

மலைப்பாம்பு வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமில்லை. என்னுடைய பென்ஷனில் பாதி இவனுக்கே செலவாகிவிடுகிறது. 20 நாட்களுக்கு ஒருமுறை 8 கோழிகளைச் சாப்பிடுகிறான்” என்கிறார் ஷி ஜிமின். இவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறும்போது, “ஆரம்பத்தில் நடைப்பயிற்சிக்கு ஜிமின் மலைப்பாம்பை அழைத்து வரும்போது நாங்கள் பயந்து நடுங்குவோம். இப்போதெல்லாம் குழந்தைகளே மலைப்பாம்புடன் நின்று படம் எடுத்துக்கொள்கிறார்கள். எங்கள் குழந்தைகள் வளர்வதைப் போல நன்வாங்கும் வளர்ந்து வருகிறான். ஒரு மலைப்பாம்புக்கு உரிய எந்த குணமும் அவனிடம் இல்லை. ரொம்பவே அமைதியானவன்” என்கிறார்கள்.

ஒரு மலைப்பாம்புக்கு இவ்வளவு புரிதல் இருக்க முடியுமா!

தங்க நகைகளில் இருந்து ஆடைகள் வரை அன்னாசிப்பழ வடிவம் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. ஆனால் பழத்தை விரும்பிச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று நினைத்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், பழத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இளம் மஞ்சள் நிறத்தை இளஞ்சிவப்பாக மாற்றி, புளிப்பைக் குறைத்து இனிப்பை அதிகரித்திருக்கிறார்கள். பிங்க் நிறத்தைப் பெண்கள் விரும்புவதால், பிங்க் அன்னாசிப்பழத்துக்கும் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கும் பிங்க் அன்னாசிப்பழம், அடுத்த ஆண்டு கடைகளில் கிடைக்கும் என்கிறார்கள்.

பாலினப் பாகுபாடு குறையணும்னு போராடிக்கொண்டிருக்கும் காலத்தில் பழத்திலும் பாகுபாடா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒரு-மலைப்பாம்புக்கு-இவ்வளவு-புரிதல்-இருக்க-முடியுமா/article9447349.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா - 19 நாட்களில் கட்டிய 37 மாடி வீடு

 
 
masala_2341172h.jpg
 

சீனாவின் கட்டுமான நிறுவனம் ஒன்று மிக மிகக் குறைந்த காலத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி சாதனை படைத்திருக்கிறது. சாங்ஷா நகரில் இருக்கும் இந்த ஸ்கை சிட்டி, 97 மாடிகளில் 800 குடியிருப்புகளைக் கட்டி 4 ஆயிரம் பேர் வசிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. 20 மாடிகளை நிறைவு செய்திருந்தபோது, உள்ளூர் அதிகாரிகள் கட்டிடத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார்கள். இதற்காக ஒரு வருடம் எந்த வேலையும் செய்யாமல், அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தார்கள்.

அருகில் விமான நிலையம் இருப்பதால், 57 மாடிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வருட காலத்தாமதத்தைச் சரி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது கட்டுமான நிறுவனம். மீதியுள்ள 37 மாடிகளையும் இரவு, பகல் பார்க்காமல் ஏராளமான தொழிலாளர்களை ஈடுபடுத்தி 19 நாட்களில் கட்டி முடித்துவிட்டது. 97 மாடிக் கட்டிடம் என்றால் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற சாதனை கிடைத்திருக்கும். ஆனால் 19 நாட்களில் 37 மாடிகளை கட்டி முடித்த சாதனை எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது!

சாதனை மேல சாதனை செஞ்சிட்டே இருக்காங்க சீனர்கள்!

அமெரிக்காவில் வசிக்கிறார் 21 வயது கேமரென் ப்ராண்ட்லி. அலபாமா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் மூன்று வேளையும் பூச்சிகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறார். மனிதர்களின் எதிர்கால உணவாக இருக்கப் போவது பூச்சிகள்தான். அதனால் பூச்சிகளை விதவிதமாகச் சமைத்து, சுவைத்துப் பார்க்கத் திட்டமிட்டேன். பூச்சிகளைச் சமைக்கும் வரை கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் சமைத்த பிறகு, சுவையில் எங்கோ சென்றுவிட்டது.

மாடு, பன்றி இறைச்சிகளுக்குப் பதில் பூச்சிகளை வைத்துக்கொண்டேன். ஒரு மாதத்தில் என் உடலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஃப்ரைட் ரைஸ் முதல் சிப்ஸ் வரை பூச்சிகளில் அனைத்தையும் செய்து பார்த்துவிட்டேன். எண்ணெய் இல்லாமல் பாப்கார்ன் போல சில பூச்சிகளைப் பொறித்தும் உண்டேன். பட்டுபூச்சிகளில் உள்ள பியூபா பருவப் புழுக்கள் தான் எனக்கு மிகவும் விருப்பமானது என்கிறார் கேமரென்.

இந்தியாவில் பூச்சிகளுக்கும் தடை விதிப்பாங்களோ?

சீனாவின் அல்டாய் மலைப் பகுதியில் தங்கம் கிடைப்பது வழக்கம். அங்கே கால்நடைகளை மேய்த்துக்கொண்டு சென்ற ஒருவரின் பார்வையில் பட்டது மஞ்சள் நிற உலோகக் கட்டி. நிலத்திலிருந்து தோண்டி எடுத்தார். வீட்டுக்குக் கொண்டு வந்தார். கட்டியைச் சுத்தம் செய்து, அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். 7 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டி என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. இது 80 சதவிகிதம் சுத்தமான தங்கமாக இருந்தது. நிலத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அரசாங்கத்துக்குச் சொந்தம். கண்டெடுத்தவர் பாராட்டுகளை வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டார். அல்டாய் என்றாலே தங்கம் என்று பொருள். இங்கே தங்கம் கிடைப்பது வெகு சகஜம். ஆனால் மிகப் பெரிய அளவில் நிலத்துக்கு மேலே தங்கக் கட்டி கிடைத்திருப்பதுதான் ஆச்சரியம் என்கிறார்கள்.

ம்… கண்டெடுத்தவருக்குக் கொஞ்சம் தங்கமாவது கொடுத்திருக்கலாம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-19-நாட்களில்-கட்டிய-37-மாடி-வீடு/article6991324.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: 'பிச்சைக்காரர்களே டிஜிட்டலுக்கு மாறிட்டாங்க'

 

 
beggars_3110643f.jpg
 
 
 

உலகம் முழுவதும் பிச்சை எடுப்பவர்களின் நிலை மோசமாகிக்கொண்டே வருகிறது. டிஜிட்டலுக்கு மாறிக்கொண்டிருப்பதால், பெரும்பாலானோர் கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. அதனால் பிச்சைக்காரர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவர்களால் உதவ முடிவதில்லை. கையில் பணம் வைத்திருப்பவர்கள், நாங்கள் உணவு, உடை, தங்கும் இடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக அவர்களுக்குப் பணம் அளிக்கிறோம். ஆனால் கையில் பணம் கிடைத்தவுடன் சிகரெட், போதைப் பொருள், மது போன்றவற்றுக்குச் செலவு செய்துவிடுகிறார்கள். இதனால் பணமாகக் கொடுப்பதற்கு யோசிக்கிறோம் என்கிறார்கள். பிச்சை எடுப்பவர்களின் கஷ்டத்தைப் போக்குவதற்காக ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த கார்ஸ்டென் வான் பெர்கெலும் ஸ்டீஃபன் லீண்டர்ட்சேயும் Contactless paymen jacket ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். ‘இந்த ஜாக்கெட்டில் ஒரு யூரோ செலுத்தும் அளவுக்கு ஒரு ஸ்மார்ட் கார்டை வைத்திருக்கிறோம். உதவி செய்ய நினைப்பவர்கள் தங்களது பண அட்டையை ஸ்மார்ட்கார்டில் வைக்க வேண்டும். சில நொடிகளில் உங்கள் வங்கியில் இருந்து 1 யூரோ, உதவி பெறுபவரின் வங்கிக் கணக்குக்குச் சென்றுவிடும். ஸ்மார்ட் அட்டையின் மேல் இருக்கும் எல்சிடி திரையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். இந்த ஜாக்கெட் பிச்சை எடுப்பவர்களுக்கும் வீடற்ற ஏழைகளுக்கும் உதவியாக இருக்கும். இந்தப் பண்டிகைக் காலத்தில் எங்களால் முடிந்த அளவுக்கு ஏழைகளின் முகத்தில் புன்னகையை வரவழைத்திருக்கிறோம்’ என்கிறார் கார்ஸ்டென்.

ஐயோ… பிச்சைக்காரர்களே டிஜிட்டலுக்கு மாறிட்டாங்க என்று இங்கே கிளம்பிடப் போறாங்க!

தொலைதூர உறவுகளைப் பராமரிப்பது மிகவும் சிக்கலானது. நேரிடையாகப் பார்க்க முடியாது, ஆறுதலாகக் கைகளைப் பற்ற முடியாது, தோளில் சாய்ந்துகொள்ள முடியாது. இவர்களுக்காகவே ’கிஸ்செஞ்சர்’ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அன்பானவர்களுக்கு முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தூரத்தில் இருக்கிறோம் என்ற குறை தெரியாது. சிங்கப்பூரில் வசிக்கும் AIARTL (Artificial Intelligence and Robotics Technology Laboratory) இயக்குநர் டாக்டர் ஹூமான் சமானி இதை உருவாக்கியிருக்கிறார். இரண்டு சிறிய ரோபோக்களில் சிலிக்கான் உதடுகள் பதிக்கப்பட்டு, இணையம் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஸ்மார்ட்போன்களை வைத்து, சம்பந்தப்பட்டவரைத் தொடர்புகொண்டு, சிலிக்கான் உதடுகளில் முத்தத்தைப் பதிக்க வேண்டும். கடந்த மாதம் லண்டனைச் சேர்ந்த எம்மா யான் ஸாங்கும் கிஸ்செஞ்சரை உருவாக்கினார். ஹூமான் சமானியின் கிஸ்செஞ்சர் எம்மாவின் கிஸ்செஞ்சரை விட பலவிதங்களில் மேம்பட்டதாக இருக்கிறது. ‘மெசஞ்சரில் இருந்து கிஸ்செஞ்சரை உருவாக்கினேன். காதலர்களுக்கானது என்று நினைக்க வேண்டாம். தொலைதூரத்தில் வேலை செய்யும் அப்பா, தன் குழந்தைகளுக்கு இதன் மூலம் முத்தமிடலாம்’ என்கிறார் எம்மா. இருவரின் கிஸ்செஞ்சர்களும் தற்போது பரிசோதனை முயற்சிகளில்தான் இருக்கின்றன.

அன்பைப் பரிமாறிக்கொள்ளும் கருவி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிச்சைக்காரர்களே-டிஜிட்டலுக்கு-மாறிட்டாங்க/article9450226.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாலங்களில் சாதனைகளைப் படைத்து வருகிறது சீனா!

 

 
palam_3111324f.jpg
 
 
 

தென்மேற்கு சீனாவின் நிஜு நதி பள்ளத்தாக்கின் மீது கட்டப்பட்டிருக்கிறது பெய்பன்ஜியாங் பாலம். 3 ஆண்டுக் காலத்தில் 4,396 அடி நீளத்துக்குப் பாலம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 146.7 மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கிறது. பள்ளத்தாக்கில் இருந்து 565 மீட்டர் உயரத்தில் பாலம் இருக்கிறது. இந்தப் பாலத்தின் மூலம் ஸுவான்வேய் நகருக்கும் ஷுசெங் நகருக்கும் இடையேயான பயணத்தில் 4 மணி நேரம் மிச்சமாகியிருக்கிறது. உலகிலேயே மிக உயரமான பாலம் என்ற பெருமையும் பெய்பன்ஜியாங் பெற்றிருக்கிறது. உலகிலேயே இரண்டாவது, மூன்றாவது உயரமான பாலங்களும் சீனாவில்தான் உள்ளன.

பாலங்களில் சாதனைகளைப் படைத்து வருகிறது சீனா!

ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் ஜிம் க்ளாப், டிலன் பார்கர் வசிக்கும் நியூயார்க் குடியிருப்புக்கு சாண்டா க்ளாஸுக்கு அனுப்ப வேண்டிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து சேரும். ஒவ்வொரு கடிதத்தையும் பிரித்துப் படித்து, யாருக்கு என்ன தேவையோ அவற்றை அனுப்பி வைக்கும் பணியை இருவரும் செய்துவருகிறார்கள். ‘நாங்கள் அந்தக் குடியிருப்புக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, சாண்டா க்ளாஸ் பெயரிட்டு, எங்கள் முகவரிக்குச் சில கடிதங்கள் வந்திருந்தன. ஏன் வந்தன, யார் இப்படி எங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பது என்றெல்லாம் தெரியாது. கடிதங்களைப் படித்தபோது, அவர்கள் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களை சாண்டா க்ளாஸ் பெயரில் அனுப்பி வைத்தோம். அடுத்த ஆண்டு தினமும் 25, 30 கடிதங்கள் வர ஆரம்பித்துவிட்டன. அந்த ஆண்டு மட்டும் 400 கடிதங்கள் வந்தன. ஒவ்வொருவருக்கும் பரிசுப் பொருட்களை வாங்கி, அனுப்பி வைத்தோம். அப்படியே ஒவ்வொரு ஆண்டும் கடிதங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வந்தது. பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் எழுதியிருப்பார்கள். சில கடிதங்கள் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் எழுதியிருப்பார்கள். துணிகள், பொம்மைகள், ஷுக்கள், கிறிஸ்துமஸ் விருந்துக்காக வான்கோழி போன்றவற்றைத்தான் அதிகம் கேட்பார்கள். நாங்கள் பரிசுகளை அனுப்புவதைக் கேள்விப்பட்டு நண்பர்கள், தெரிந்தவர்கள் எங்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அவர்களிடம் கொஞ்சம் கடிதங்களைக் கொடுத்து, பரிசுகளை அனுப்பி வைக்கச் சொல்கிறோம். நாங்கள் இருவரும் தற்போது லண்டனில் வசித்து வருகிறோம். நண்பர்களிடம் சொல்லி, நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு வரும் சாண்டா க்ளாஸ் கடிதங்களை அனுப்பி வைக்கச் சொல்கிறோம். எங்கள் நண்பர்கள் பிரித்துக்கொண்டது போக எங்களுக்கு மட்டும் 350 கடிதங்கள் வந்துசேர்ந்தன. இதுவரை நாங்கள் உதவி செய்த ஒரு குழந்தையைக் கூட நேரில் பார்த்ததில்லை, இவர்கள் எல்லாம் யார் என்றே தெரியாது. ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ’22-வது தெருவின் அற்புதம்’ என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறோம்” என்கிறார்கள் ஜிம்மும் டிலனும்.

ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்களுக்கு பூங்கொத்து!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பாலங்களில்-சாதனைகளைப்-படைத்து-வருகிறது-சீனா/article9452932.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அட! பசு மாட்டை, குதிரையாக மாற்றிவிட்டாரே இந்த சாரா!

 

 
horse_3111541h.jpg
 

நியூசிலாந்தைச் சேர்ந்த சாரா தாம்சன் குதிரை சவாரியைப் போல பசு மாட்டின் மீது சவாரி செய்கிறார். 11 வயதில் மாட்டு சவாரியை ஆரம்பித்த சாரா, 18 வயதில் அநாயசமாக ஓட்டிச் செல்கிறார். ‘எனக்குக் குதிரையேற்றம் மிகவும் பிடிக்கும். ஒரு குதிரை வாங்குவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் என் பெற்றோர் வாங்கித் தரவில்லை. ஆனாலும் குதிரை சவாரி ஆர்வம் குறையவே இல்லை. ஒருநாள் எங்கள் வீட்டில் வளர்த்து வரும் மாடுகளில் ஏறி என் தம்பி விளையாடிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் மாட்டையே குதிரையாக நினைத்து, சவாரி செய்தால் என்ன என்று தோன்றியது.

அதுவரை எனக்கு மாட்டின் மீது ஏறிப் பழக்கமில்லை. தரையில் அமர்ந்திருந்த 6 மாதக் கன்றான லிலாக் மீது ஆர்வத்துடன் குதித்தேன். ஆனால் லிலாக் பயப்படவும் இல்லை, கோபப்படவும் இல்லை. அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்று முதல் லிலாக் மீது சவாரி செய்யும் பயிற்சியில் இறங்கினேன். மாட்டின் மீது சவாரி செய்யும் பெண் என்ற அளவுக்கு எங்கள் ஊரில் பிரபலமானேன். 7 ஆண்டுகளில் லிலாக் வளர்ந்துவிட்டாள். எனக்கும் அவளுக்குமான புரிதல் நன்றாக இருக்கிறது. லிலாக் முதுகில் அமர்ந்தால், குதிரையா மாடா என்று வித்தியாசம் தெரியாத அளவுக்குப் பாய்ந்து ஓடுகிறாள்.

குறுக்கே பெரிய மரம், பள்ளம் எது வந்தாலும் அழகாகத் தாண்டி விடுவாள். என்னுடைய லிலாக் சவாரி குறித்த படங்களை இன்ஸ்டாகிரமில் வெளியிட்டேன். லிலாக்கும் நானும் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டோம். 1.4 மீட்டர் உயரத்துக்கு லிலாக் தாண்டிக் குதிப்பதை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். பள்ளத்தைக் கண்டால் மட்டுமே அவளுக்குப் பிடிக்காது. மற்றபடி புல்வெளிகளில் நடப்பதும் ஆற்றில் குதித்து நீந்துவதும் இவளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது குதிரை சவாரி மீது எனக்கு ஆர்வமே இல்லை’ என்கிறார் சாரா தாம்சன்.

உலக மசாலா: அட! பசு மாட்டை, குதிரையாக மாற்றிவிட்டாரே இந்த சாரா!

கையுறைகளை மாட்டிக்கொண்டு ஆபத்தான வேலைகளைச் செய்யும்போதும் விரல்களுக்கு எளிதில் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதற்காகவே சிலியைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்கோம்பிக் புதிய கையுறைகளை உருவாக்கியிருக்கிறார். ‘இன்று ஆபத்தான வேலைகளைச் செய்பவர்களுக்குப் பாதுகாப்பான காலுறைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மரத்தை அறுக்கும்போதும் சுத்தியலால் அடிக்கும்போது சாதாரண கையுறைகள் விரல்களைக் காப்பாற்றுவதில்லை. பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு இந்தப் பாதுகாப்பான கையுறைகளை உருவாக்கியிருக்கிறேன். என் கையுறைகளை மாட்டிக்கொண்டு சுத்தியலால் ஓங்கி அடித்தாலும் விரல்கள் பாதிக்கப்படாது. மரம் அறுக்கும்போது ரம்பம் தவறுதலாக கையுறை மீது பட்டாலும் காயம் ஏற்படாது. மிகப் பெரிய கல் தவறி கை மீது விழுந்தாலும் வலிக்காது. இந்தக் கையுறைகள் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கிறது. என்னுடைய Mark VIII கையுறைகளை சுரங்கம், மீன்பிடிப்பு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தினால் விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்’ என்கிறார் ஜார்ஜ் ஸ்கோம்பிக்.

அவசியமான கண்டுபிடிப்பு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அட-பசு-மாட்டை-குதிரையாக-மாற்றிவிட்டாரே-இந்த-சாரா/article9453511.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: செய்யாத தவறுக்கு 20 வருட தண்டனை!

 

 
ulaga_masala_3112382f.jpg
 
 
 

ஜப்பானில் வசிக்கும் ஓடோவ்வும் கடயாமா யுமியும் மூன்று குழந்தைகளுடன் மிகவும் சந்தோஷமாக வசித்து வருகிறார்கள். ஆனால் ஓடோவ் கடந்த 20 ஆண்டுகளாக யுமியிடம் பேசுவதில்லை. யுமி பதில் கிடைக்காவிட்டாலும் ஓடோவ்விடம் பேசுவார். இருவருக்கும் கருத்து வேறுபாடோ, சண்டையோ கிடையாது. ‘மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தைகளைக் கவனிப்பதற்கே எனக்கு நேரம் சரியாக இருந்தது. அதனால் அவரிடம் பேசுவது குறைந்து போனது. ஒருகட்டத்தில் அவர் என்னிடம் பேசுவதையே விட்டுவிட்டார். மற்றபடி என் கணவரிடம் எந்தக் குறையும் இல்லை. இது எல்லாப் பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைதான். மற்றவர்கள் அந்தக் காலகட்டத்தைக் கடந்த பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள். இவர் அப்படியே இருந்துவிட்டார்’ என்கிறார் யுமி. 18 வயது யோஷிகி, ‘நான் என் அம்மாவும் அப்பாவும் பேசிப் பார்த்ததே இல்லை. என் அக்காக்களுக்குக் கூட இருவரும் பேசிய நினைவு இல்லை. இருவரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். எங்களை அற்புதமாக வளர்த்திருக்கிறார்கள். ஆனாலும் எங்கள் மீது அளவு கடந்த அன்பும் அக்கறையும் காட்டியதற்காக என் அம்மாவுக்கு இந்தத் தண்டனை என்பது எங்களை மிகவும் சங்கடப்படுத்துகிறது. நாங்கள் எவ்வளவோ முயன்றும் அப்பாவைப் பேச வைக்க முடியவில்லை. தொலைக்காட்சியின் உதவியை நாடினோம். அவர்கள் இருவரிடமும் பேசினார்கள். முதன் முதலில் எங்கள் அம்மாவும் அப்பாவும் சந்தித்துக்கொண்ட ஒரு பூங்காவில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். மூன்று குழந்தைகளைக் கவனிப்பதை நான் முக்கியமாக நினைத்ததால், உங்கள் மனம் வருந்தும்படி நடந்துகொண்டேன் என்றார் அம்மா. இல்லை, நான்தான் குழந்தைகள் மீது அதிக பாசம் காட்டுவதாகப் பொறாமைகொண்டு பேசாமல் இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இனி ஒருநாளும் பேசாமல் இருக்க மாட்டேன் என்றார் அப்பா. சற்றுத் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இந்தத் தருணத்துக்காகத்தானே நாங்கள் காத்திருந்தோம்! இனி எங்களுக்கு எந்தவிதக் குற்றவுணர்வும் இருக்காது’ என்கிறார்.

செய்யாத தவறுக்கு 20 வருட தண்டனை!

தாய்லாந்தின் புகெட் தீவில் முதலைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனுசாக் சலங்கம் என்ற பயிற்சியாளர் 3 மீட்டர் நீளமுள்ள மிக ஆபத்தான முதலையை வைத்து நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். வாயைத் திறந்துகொண்டிருந்த முதலை திடீரென்று அனுசாக்கின் ஷு அணியாத காலைக் கவ்விப் பிடித்துவிட்டது. நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் தேர்ந்த பயிற்சியாளர் என்பதால், முதலையிடமிருந்து தப்பிவிட்டார் அனுசாக். இந்தச் செய்தி வெளியே பரவினால் எதிர்ப்புக் கிளம்பும் என்பதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீடியாவிடம், லேசான சிராய்ப்புதான் ஏற்பட்டிருக்கிறது என்றும் இன்று அனுசாக்தான் நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

ஆபத்தான விலங்கோடு இப்படி நிகழ்ச்சி நடத்தலாமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-செய்யாத-தவறுக்கு-20-வருட-தண்டனை/article9456260.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: செய்தித்தாள்களின் காதலர்!

 

 
newspaper_3112895f.jpg
 
 
 

சீனாவின் குவாங்ஸி பகுதியில் வசிக்கும் 74 வயது சீ ஜிலின், கடந்த 36 ஆண்டுகளாகச் செய்தித்தாள்களைச் சேகரித்து வருகிறார். கூடம், படுக்கையறைகள், சேமிப்பு அறை என்று வீட்டில் உள்ள 7 அறைகளிலும் செய்தித்தாள்கள் மேற்கூரையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது சமையலறையிலும் சேமிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘நான் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். எழுதுவதில் ஆர்வம் அதிகம். எங்கள் பகுதி நாடகக் குழுவில் இணைந்து கதை, வசனம் எழுத ஆரம்பித்தேன். என்னால் அதில் தனித்துவத் தைக் காட்ட முடியவில்லை. அன்று முதல் என் திறமையை வளர்த்துக் கொள்வதற்காகச் செய்தித்தாள்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். சில மாதங்களிலேயே என்னுடைய எழுத்தில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. செய்தித்தாள் வாசிப்பதால் பொதுஅறிவு பெருகியது. அதை என்னுடைய எழுத்துகளில் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. பல்வேறு நாடகப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றேன். முப்பதாண்டுகளில் நடைபெற்ற எந்த நிகழ்வையும் இந்தச் செய்தித்தாள்களின் துணைகொண்டு எழுதிவிட முடியும். ஓய்வுபெற்ற பிறகு செய்தித்தாள்கள், பத்திரிகைகள் அனைத்தையும் வாங்குவதற்குச் சிரமமாக இருக்கிறது. ஆனாலும் என்னால் வாங்காமல் இருக்க முடியாது. என்னுடைய தேவைகளைக் குறைத்துக்கொண்டு சமாளித்து வருகிறேன்’ என்கிறார் சீ ஜிலின்.

செய்தித்தாள்களின் காதலர்!

அமெரிக்காவின் ஓக்லஹாமா பகுதியில் வசிக்கிறார் அபே அஹெர்ன். இவரது 19 வார கர்ப்பத்தில், கருவுக்குக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மூளை, மண்டையோடு முழுமையாக வளர்ச்சியடையவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் கருச்சிதைவு ஏற்படலாம். இது முழுக் குழந்தையாகப் பிறக்க வாய்ப்பில்லை என்றார்கள் மருத்துவர்கள். அபேக்கும் கணவர் ராபர்ட்டுக்கும் கருவைக் கலைக்க மனம் இல்லை. ‘எத்தனை நாட்கள் உயிருடன் இருந்தாலும் குழந்தையைப் பெற்றே தீருவது என்று முடிவு செய்தோம். நல்லவேளையாகக் கருச்சிதைவு ஏற்படவில்லை. பிரசவ நேரம் வந்தது. மருத்துவர்கள் குழந்தை பிறந்து சில மணி நேரமே உயிருடன் இருக்கும் என்றனர். நானும் ராபர்ட்டும் குழந்தையின் உறுப்புகளைத் தானமாகக் கொடுத்துவிட முடிவு செய்தோம். ஏகப்பட்ட குழாய்கள் பொருத்தப்பட்ட குழந்தையை என்னிடம் ஒப்படைத்தனர். எங்கள் இரு மகள்களும் தங்கைக்கு ஆனி என்று பெயர் சூட்டினார்கள். தங்கையுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அம்மா, அப்பா, அக்காக்களின் அன்பிலும் அரவணைப்பிலும் ஆனி 15 மணி நேரம் அற்புதமாக வாழ்ந்தாள். பிறகு ஆனியை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். மிகத் துன்பமான நேரம். உறவினர்களும் நண்பர்களும் எவ்வளவோ முறை கலைத்துவிடச் சொன்னார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம். 15 மணி நேர அன்பையும் அரவணைப்பையுமாவது எங்களால் குழந்தைக்குக் கொடுக்க முடிந்ததே. ‘ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக அவளது உடல் உறுப்புகளைத் தானமளிக்க இயலாது, உடலை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்’ என்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆனியைப் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார் அபே அஹெர்ன்.

நெகிழ வைத்துவிட்டார் அபே...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-செய்தித்தாள்களின்-காதலர்/article9458398.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஓடாத கார்கள்

 

 
ulagama_3113411f.jpg
 
 
 

ஜெர்மனியில் உள்ள V8 ஹோட்டல், வாகனப் பிரியர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு 34 தங்கும் அறைகள் உள்ளன. பெட்ரோல் பங்க், சாலைப் பயணம், கார் ஷெட், கார் தொழிற்சாலை, கார் பந்தயம், பழுது பார்க்கும் இடம் என்று ஒவ்வோர் அறையும் ஒவ்வொரு விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படுக்கையை கார் போலவே உருவாக்கி இருக்கிறார்கள். இவை தவிர, கார் பொம்மைகள், சுவரில் ராட்சச கார் புகைப்படங்கள், காரின் உதிரி பாகங்களை வைத்து சுவர் அலங்காரம் என்று ரசனையுடன் அமைத்திருக்கிறார்கள். கார் மற்றும் கார் பந்தய வீரர்கள் தொடர்பான புத்தகங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஹோட்டலின் முகப்பில் பழைய மாடல் கார்களின் அணிவகுப்பு இருக்கிறது. டிரைவ் இன் தியேட்டரும் உண்டு. ஜெர்மனியிலேயே விலை அதிகமான தங்கும் விடுதிகளில் இதுவும் ஒன்று.

ஓடாத கார்கள்!

ரஷ்யாவைச் சேர்ந்த உல்யானா, விடுமுறைக்காக தனது பெற்றோருடன் தாய்லாந்து கிளம்பினாள். அவளுடைய கரடி பொம்மையை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். விமானத்தில் புறப்பட்ட பிறகுதான் கரடி பொம்மை நினைவுக்கு வந்தது. உல்யானா கரடி பொம்மையைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டாள். எவ்வளவோ சமாதானம் செய்தும் அவள் வருத்தத்தைக் குறைக்க முடியவில்லை. உடனே உல்யானா அம்மா, விமான நிலையத்துக்கு ஒரு இமெயில் அனுப்பினார். அதில் அந்தக் கரடி பொம்மையை பத்திரமாக எடுத்து வைக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையடுத்து விமான நிலைய ஊழியர்கள், கரடி பொம்மையை ஜன்னல், உணவு மேஜை போன்ற இடங்களில் வைத்துப் புகைப்படங்கள் எடுத்து, உல்யானாவின் அம்மாவுக்கு அனுப்பி வருகிறார்கள். தன் பொம்மை பத்திரமாக இருப்பதை அறிந்த உல்யானா மகிழ்ச்சியோடு ரஷ்யா திரும்பும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்.

குழந்தையின் வருத்தத்தைப் போக்கிய ஊழியர்களுக்கு நன்றி.

என்னதான் அலங்காரம் செய்துகொண்டாலும் வயதானால் கழுத்தில் தொங்கும் சதைகளை ஒன்றும் செய்ய இயலாது. அதற்காகவே Nexsey Tape உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை எடுத்து கழுத்தின் பின்பகுதியில் தொங்கும் சதைகளைச் சேர்த்து ஒட்டவேண்டும். சட்டென்று சில வருடங்கள் பின்னோக்கிச் சென்று, இளமையாகத் தோற்றம் அளிக்க முடியும். லிண்டா கோமெஸ் என்ற அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பாளர் நெக்ஸியை உருவாக்கி இருக்கிறார். “உலகம் முழுவதும் வயதானவர்களுக்கு கழுத்துச் சதைகள் தொங்கிவிடுகின்றன. எல்லோராலும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இயலாது. அதற்காகவே நான் இந்த நெக்ஸியை உருவாக்கினேன். இதைப் பயன்படுத்துவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டாம். வலி இருக்காது. யாருடைய உதவியும் தேவைப்படாது. துணி, முடியால் நெக்ஸியை மறைத்தும் விடலாம். பெண்களுக்கு இது மிகவும் பயன்படும்” என்கிறார் லிண்டா கோமெஸ்.

நெக்ஸியின் மாயாஜாலம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஓடாத-கார்கள்/article9460566.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அட்டகாசமாக இருக்கிறது சிலை!

 
ulagam1_3113985f.jpg
 
 
 

முதல் உலகப் போர் முடி வடைந்து நூற்றாண்டு நிறைவுக்காக, இங்கிலாந்தில் பிரம்மாண்டமான போர் வீரர் ஒருவரின் உருவம் வடிவமைக் கப்பட்டிருக்கிறது. பழைய இரும்புப் பொருட்கள், தகரம், தொழிற்சாலையில் வீணாகும் உலோகக் கழிவுகள் போன்ற வற்றை வைத்து மிக நேர்த்தி யாகச் சிலையை உருவாக்கி யிருக்கிறார் மார்டின் கல்பாவி. 20 அடி உயரம் கொண்ட இந்தச் சிலையை 3 மாதங்களில் செய்து முடித் திருக்கிறார். “என் வாடிக்கை யாளர் ஒருவருக்காகச் செய்திருக்கிறேன். பார்ப்பதற்கு பழைய இரும்புப் பொருட்களை வைத்து உருவாக்கிய சிலை என்று சாதாரணமாகத் தோன்றும். ஆனால் இதை உருவாக்குவது மிகவும் கடினம். பல்லாயிரக்கணக்கான இரும்புப் பொருட்களால் ஆனது இந்தச் சிலை. ஒவ்வொரு பொருளும் விழாமல் இருப்பதற்குக் கம்பிகளால் இணைத்திருக்கிறேன். பார்ப்பவர்கள் எல்லோரும் போரில் இருக்கும் ஒரு வீரரின் முகம் எப்படி இருக்குமோ, அப்படியே இருக்கிறது என்கிறார்கள். விரைவில் முதல் உலகப் போர் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு இந்தச் சிலை சென்றுவிடும்” என்கிறார் மார்டின்.

அட்டகாசமாக இருக்கிறது சிலை!

மெல்பர்ன் நகரில் ஒரு குடியிருப்புவாசி, தன்னுடைய வீட்டு உரிமையாளர் மீது கொடுத்துள்ள புகார் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ‘வீட்டு வாடகையுடன் தண்ணீருக்கான கட்டணத்தையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன். அப்படியிருந்தும் ஒவ்வொரு முறை கழிவறையைப் பயன்படுத்தும்போதும் நாணயத்தைப் போட்டால்தான் தண்ணீர் வரும் என்ற நிலை சட்டத்துக்குப் புறம்பானது. அரசாங்கம் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தச் சொல்கிறது. வீட்டு உரிமையாளர் தண்ணீர் சிக்கனத்துக்காக ஒவ்வொரு முறையும் நாணயம் போடச் சொல்வது அநியாயம். இந்த விஷயம் என்னை மனரீதியாக மிகவும் பாதித்திருக்கிறது. என் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இது எவ்வளவு பாதிக்கும்?’ என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடப் பாவமே!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் அடர் பனிப் பொழியும் அதிகாலை நேரத்தில், திறந்தவெளி கால்பந்து மைதானத்தில் மாணவர்கள் பரீட்சை எழுதியிருக்கிறார்கள். கடுங்குளிரில், தாளில் எழுதுவதைக் கூட பார்க்க முடியாத இருளில் மாணவர்கள் தவித்தனர். இதைச் சகிக்க முடியாத பெற்றோர்கள், இந்தக் காட்சிகளைப் படங்களும் வீடியோக்களுமாக எடுத்து வெளியிட்டுவிட்டனர். உடனடியாக பிரின்சிபல் ஜிஷெங் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பரீட்சை நடைபெற்ற நாள், அளவுக்கு அதிகமாகப் பனிப் பொழிவு இருக்கும் என்பதால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை அழைத்து 4 மணிநேரம் பனியில் அமர வைத்து, பரீட்சை எழுத வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியதோடு, பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்புதான் மிக முக்கியம் என்றும் சீனக் கல்வித் துறை அறிவுரை வழங்கியிருக்கிறது. ஜிஷெங் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இப்படியும் சில மனிதர்கள்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அட்டகாசமாக-இருக்கிறது-சிலை/article9462698.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பனிக்கட்டி சிற்பங்களிலும் அசத்துகிறார்கள் சீனர்கள்!

 

 
pani_3114571f.jpg
 
 
 

சீனாவின் ஹார்பின் நகரில் ஆண்டுதோறும் பனிச் சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. உலகிலேயே மிகப் பெரிய, தனித்துவ மிக்கப் பனிச் சிற்பங்கள் இங்கேதான் இருக்கின்றன. அருகில் இருக்கும் சோங்ஹுவா நதியில் இருந்து பனிக்கட்டிகள் வெட்டி எடுத்து வரப்பட்டு, சிற்பங்களாக வடிக்கப்படுகின்றன. விலங்குகள், பறவைகள், ராட்சச கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற சின்னங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என்று விதவிதமான சிற்பங்களும் கட்டிடங்களும் பிரமிப்பூட்டுகின்றன. இந்த ஆண்டு 1,115 அடி நீளமுள்ள பனியால் உருவாக்கப்பட்டுள்ள சறுக்கு மரம் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. 500 மனிதர்களின் உழைப்பில் இந்தப் பனிச் சிற்பங்கள் உருவாகியிருக்கின்றன. ஹார்பின் நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பனிச் சிற்பத் திருவிழா, மார்ச் மாதம் வரை நடைபெறும். உலகம் முழுவதிலுமிருந்து பனிச் சிற்பங்களைப் பார்வையிடுவதற்காக ஒன்றரை கோடி பேர் வர இருக்கிறார்கள். நான் 20 ஆண்டுகளாகப் பனிச் சிற்பங்களை மிகவும் மகிழ்ச்சியோடு செதுக்கி வருகிறேன். மக்கள் பார்த்து சந்தோஷப்படும்போது இந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்” என்கிறார் சிற்பக் கலைஞர் லு.

பனிக்கட்டி சிற்பங்களிலும் அசத்துகிறார்கள் சீனர்கள்!

ஆரோக்கியமான

உணவுகள் சுவை குன்றியதாக இருக்கும் என்பதை மாற்றியமைத்திருக்கிறார் இத்தாலியைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் வலெரியோ சங்குய்னி. இவர் உருவாக்கிய ஆரோக்கிய ஐஸ்க்ரீமில் சுவையும் பிரமாதமாக இருப்பதோடு, புத்துணர்வையும் அளிக்கிறது. “இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, சில நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொண்டால் மனித வாழ்நாள் அதிகரிக்கும் என்பது மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியர்களின் உணவுகளில் ஆலிவ் ஆயில், தக்காளி, சிவப்பு ஒயின் போன்றவை அதிகம் சேர்க்கப்படுகின்றன. இவை இத்தாலியர்களின் வாழ்நாட்களை நீட்டித்திருக்கின்றன. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நூறு வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidant) அதிகம் உள்ள உணவுகள் சமைக்கப்பட்டு, உணவு மேஜைக்கு வருவதற்குள் கணிசமான அளவில் சக்தியை இழந்துவிடுகின்றன. மிகக் குறைவான வெப்பத்தில் பாதுகாக்கப்படும் பொருட்களில் சத்துகளின் இழப்பு குறைவாக இருப்பதால் இந்த ஐஸ்க்ரீமை உருவாக்கியிருக்கிறேன். இனிப்பில்லாதா கோகோ, ஜாதிபத்ரி, க்ரீன் டீ மூன்றிலும் அதிக அளவில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றை வைத்து ஐஸ்க்ரீமைத் தயாரித்திருக்கிறேன். ரோம் பல்கலைக் கழகத்தில் பரிசோதனை செய்து பார்த்ததில் சாதாரண ஐஸ்க்ரீம் களைச் சாப்பிட்டவர்களைவிட என்னுடைய ஐஸ்க்ரீம்கள் சாப்பிட்டவர் கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தனர். ரத்தநாளங்கள் வேலை செய்வதில் முன்னேற்றம் இருந்ததால் அவர்களின் உடல் நலம் மட்டுமின்றி, மன அழுத்தம் குறைந்து மன நலமும் பாதுகாக்கப்படுவது தெரியவந்தது” என்கிறார் வலெரியோ.

ஆயுளை நீட்டிக்கும் ஐஸ்க்ரீம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பனிக்கட்டி-சிற்பங்களிலும்-அசத்துகிறார்கள்-சீனர்கள்/article9465422.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பலநாள் திருடர் ஒருநாள் அகப்பட்டுக்கொண்டார்!

 

 
 
 
 
ulagam_3114931f.jpg
 
 
 

தாய்லாந்தைச் சேர்ந்த 41 வயது பிரபிட்சா ஸ்மாட்சோரபுத், பள்ளி ஆசிரியராக அமெரிக்காவின் விர்ஜினியாவில் வேலை செய்துவந்தார். உலகின் முன்னணி நிறுவனங்களின் விலை மதிப்பு மிக்க கைப்பைகளை ஆன்லைன் மூலம் வாங்குவார். தான் ஆர்டர் செய்த கைப்பையைப் போல அச்சு அசலாக சீனாவில் இருந்து கைப்பைகளை வாங்கி வைத்திருப்பார். ஒரிஜினல் பை கைக்கு வந்தவுடன் பிடிக்கவில்லை என்று, போலி பையைத் திருப்பி அனுப்பி வைத்துவிடுவார். அந்த நிறுவனமும் பைக்குரிய பணத்தை மீண்டும் அவர் வங்கிக்கே திருப்பிச் செலுத்திவிடும். ஒரிஜினல் பைகளை ஆன்லைனில் நல்ல விலைக்கு விற்றுவிடுவார். அமெரிக்காவின் 12 மாகாணங்களில் இப்படிப் பைகளை வாங்குவதும் போலி பைகளை அனுப்பி வைப்பதுமாக இருந்தார். இதற்காக 16 விதமான கடன் அட்டைகளைப் பயன்படுத்திவந்தார். கோடிக்கணக்கில் பணம் புரண்டது. வெற்றிகரமாகத் தொழில் சென்றுகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் டி.ஜே. மாக்ஸ் நிறுவனம் பிரபிட்சாவின் ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்துவிட்டது. காவல்துறையின் உதவியோடு அதிரடியாக பிரபிட்சாவின் வீட்டுக்குள் நுழைந்தபோது 572 கைப்பைகளைக் கைப்பற்றினர். இதில் ஒரிஜினல் பைகளும் போலி பைகளும் கலந்திருந்தன. டி.ஜே. மாக்ஸ் நிறுவனத்தில் மட்டும் 226 கைப்பைகளை வாங்கி, போலி பைகளை அனுப்பி வைத்திருக்கிறார். இதன் மூலம் பல கோடி ரூபாய்களை இந்த நிறுவனத்தில் இருந்து மட்டும் பெற்றிருக்கிறார். பிரபிட்சா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நடைபெற்று வந்தது. சீன நிறுவனத்துக்குப் போலி கைப்பைகளைக் கேட்டு அவர் அனுப்பிய இமெயில்களைக் கண்டுபிடித்தனர். பிரபிட்சாவுக்கு எதிராக ஏகப்பட்ட சாட்சிகள் இருந்ததால், வேறுவழியின்றி குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கில் இவர் செய்த ஏமாற்று வேலைக்கு 40 ஆண்டுகளாவது சிறைத் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பிரபிட்சாவின் வழக்கறிஞர், இவர் குழந்தையிலிருந்து பெற்றோரால் மனத்தாலும் உடலாலும் மிக மோசமாக நடத்தப்பட்டவர். அதனால் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று வாதாடினார். இறுதியில் 30 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஏமாற்றியவர்களுக்கு உரிய பணத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறது நீதிமன்றம்.

பலநாள் திருடர் ஒருநாள் அகப்பட்டுக்கொண்டார்!

பிரேசிலில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர், பொம்மையைக் கடவுள் என்று நினைத்து தவறுதலாக வழிபட்டு வந்திருக்கிறார். “என் மகள் தன் பாட்டி வணங்கும் உருவங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதைக் கண்டதும் என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. போச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த புனிதத் துறவி அந்தோணி என்று நினைத்து, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலில் வரக்கூடிய எல்ரான்ட் பொம்மையை வணங்கி வந்திருக்கிறார் பாட்டி. இரண்டு சிலைகளையும் அருகில் வைத்துப் பாட்டிக்கு வித்தியாசத்தைக் காட்டினோம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்று வருந்தினார்” என்கிறார் கேப்ரியலா பிராண்டோ.

இதில் பாட்டியின் தவறு ஒன்றுமில்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பலநாள்-திருடர்-ஒருநாள்-அகப்பட்டுக்கொண்டார்/article9466480.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தலைமுடி உறையும் போட்டி!

 

 
masala_2340029f.jpg
 
 
 

கனடாவில் வித்தியாசமான போட்டி ஒன்று ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியைக் காண்பதற்கும் போட்டியில் பங்கேற்பதற்கும் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இளம் வேனிற்காலம் தொடங்கும்போது, தலைமுடி உறையும் போட்டி நடைபெறுகிறது. 60 நொடிகளில் மைனஸ் 30 டிகிரி செல்ஷியஸில் உறைய வைத்துவிட வேண்டும் என்பதுதான் போட்டி.

ஒவ்வொருவரின் தலை முடியும் பனியால் உறைந்து வித்தியாசமான தோற்றத்தைத் தரும். யார் முடி மிகப் பிரமாதமாக உறைந்திருக்கிறதோ, அவரே வெற்றி பெற்றவர்.

இப்படியும் ஒரு போட்டியா?

தாய்லாந்தின் ோங் புவா லம்பு மாகாணத்தில் வசிக்கும் ஒரு துறவி, கொதிக்கும் எண்ணெயில் அமர்ந்திருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் பய பக்தியோடு அவரை வணங்கிக்கொண்டு நிற்கிறார்கள். அவர் கை படும் பொருட்களை வீட்டில் வைத்தால் நல்லது என்பதால், ஏராளமான பொருட்கள் விற்பனையாகின்றன.

கொதிக்கும் எண்ணெய்யில் விரல்களை வைத்தால் அவ்வளவு எளிதில் சூடு தாக்காது. துறவி உட்கார்ந்திருக்கும் பாத்திரம் இரண்டு அடுக்குகளால் ஆனது. கீழ் அடுக்கில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். மேல் அடுக்கில் எண்ணெய். கீழே இருந்து நெருப்பு எரியும்பொழுது, தண்ணீர் வெப்பத்தை இழுத்துக்கொள்ளும்.

எண்ணெய் சூடாகவே செய்யாது. அதனால் துறவி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எண்ணெய்க்குள் அமர்ந்திருக்கலாம் என்கிறார்கள் தாய்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாத்திட்டுதான் இருப்பாங்க…

ஜெர்மனியில் குடித்துவிட்டு, சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் அதிகம். இவர்களால் நகரின் சுவர்கள் நாசமாவதோடு, சுற்றுச் சூழலும் கெடுகிறது. பல ஆண்டுகள் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பலனளிக்கவில்லை. சுவர்களில் ஸ்பெஷல் ஹைட்ரோபோபிக் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள்.

இந்த பெயிண்டுக்குத் தண்ணீரை விலக்கும் சக்தி உண்டு. சுவற்றில் தண்ணீர் ஊற்றினால், திருப்பி அனுப்பிவிடும். பெயிண்ட் அடித்து, `சிறுநீர் கழித்தால், திருப்பி உங்கள் மீதே வந்து விழும்’ என்று வாசகத்தையும் எழுதி வைத்தார்கள். ஆனாலும் மக்கள் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சிறுநீர் கழித்தனர்.

அவர்கள் மீதே சிறுநீர் திரும்பிப் பாய்ந்தது. இப்பொழுது யாரும் தெருவில் சிறுநீர் கழிப்பதில்லை. சுவரும் நகரும் சுத்தமாகக் காட்சியளிக்கின்றன.

அடடா! இங்கேயும் அந்த பெயிண்ட்டை வாங்கி அடிக்கலாம்…

இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த ஓராண்டில் மட்டும் அதிக அளவில் கடல்வாழ் உயிரினங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கடலின் ஆழமான, இருளான இடங்களில் இருந்து பெரும்பாலான உயிரினங்கள் அறிமுகமாகியிருக்கின்றன.

மிகச் சிறிய இறால், 2 புதுவகை டால்பின்கள், ஃப்ரில்ட் சுறா, தவளைமீன் போன்று 1,451 உயிரினங்கள் முதல் முதலாக மனிதனின் பார்வையில் சிக்கியிருக்கின்றன. கடல்வாழ் உயிரினங்களில் மனிதர்கள் கண்டறிந்தவை குறைவானவை. இன்னும் கண்டறியப்படாத ஏராளமான விஷயங்கள் கடலில் இருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னும் எவ்வளவு விஷயங்களைக் கடல் ஒளித்து வைத்திருக்கிறதோ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தலைமுடி-உறையும்-போட்டி/article6989829.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: தனிமையில் வாடும் யானை...

 

 
 
 
elephant_3115806f.jpg
 
 
 

ஸ்காட்லாந்தில் ப்ளேர் ட்ரம்மோன்ட் சஃபாரி பார்க்கில் மாண்டி, டோட்டோ என்ற இரண்டு யானைகள் வசித்து வந்தன. 20 ஆண்டுகளாக மிக நெருங்கிய நண்பர்களாகப் பழகின. கடந்த மார்ச் மாதம் 46 வயதில் டோட்டோ இறந்து போனது. இதனால் மாண்டி மிகவும் சோகத்தில் ஆழ்ந்தது. சரியாக உணவு சாப்பிடாமல் உடலும் இளைத்தது. பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்தது.

தற்போது தனிமையில் மிகவும் சிக்கித் தவிக்கிறது மாண்டி. தனக்காக ஒரு நட்பைத் தேடுகிறது. இதனால் மீண்டும் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டது. உற்சாகமாக இருப்பதில்லை, சரியாக உண்பதில்லை. “பொதுவாக யானைகள் தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த யானை இறந்தால் துக்கத்தைக் கடைபிடிக்கின்றன. ஆனால் வெவ்வேறு கூட்டத்தைச் சேர்ந்த மாண்டியும் டோட்டோவும் இவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்ததும் டோட்டோவின் பிரிவுக்காக 10 மாதங்களுக்குப் பிறகு வருத்தப்படுவதும் ஆச்சரியமாக இருக்கிறது. ஐரோப்பா முழுவதும் மாண்டிக்காக 46 வயது யானை ஒன்றைத் தேடிவருகிறோம். மாண்டி ஆதிக்கம் செலுத்தக்கூடிய குணமுடையது. புதிய தோழியைப் படிப்படியாகத்தான் ஏற்றுக்கொள்ளும்” என்கிறார் பூங்கா அதிகாரி கேட்டி மேக்ஃபார்லேன்.

தனிமையில் வாடும் யானை…

கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெரிய அங்காடியில் தொப்பியும் நீல நிறச் சட்டையும் அணிந்து வந்த மனிதர், வாடிக்கையாளர்கள் செல்லும் வரை காத்திருந்தார். திடீரென்று வலது கையைப் பின்பக்கம் வைத்துக்கொண்டு, காசாளரிடம் பணம் தருமாறுக் கேட்டார். அவர் யோசிக்கவே, கையில் துப்பாக்கி இருக்கிறது என்று சொன்னார். உடனே கைகளைத் தூக்கிக்கொண்டு காசாளர் சற்றுப் பின்னே நகர்ந்தார். மேஜை மீது ஏறிக் குதித்து, இடது கையால் பணத்தை எடுத்தார். வலது கையை முன்பக்கம் சட்டைக்குள் மறைத்தபடி, மீண்டும் மேஜை மீது ஏறிக் குதித்து, கடையை விட்டு அகன்றார். துப்பாக்கி முனையில் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதை காவல் துறையில் புகார் செய்தனர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, அந்த மர்ம நபரின் கையில் துப்பாக்கியே இல்லை. விரல்களைத் துப்பாக்கி போல மடக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்தக் காட்சிகளை வெளியிட்டு, குற்றவாளியைப் பார்த்தால் தகவல் கொடுக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டது. இரண்டு மாதங்களாகியும் இதுவரை யாரும் தகவல் கொடுக்கவில்லை.

உலகிலேயே மிகவும் அசாதாரணமான கொள்ளை!

ஜெர்மனியில் உள்ள ஒரு தீவில் ஆயிரக்கணக்கான ஈஸ்டர் முட்டைகள் கொட்டிக்கிடந்தன. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வண்ணமயமான இந்த முட்டைகளைச் சேகரிக்க குழந்தைகளும் பெரியவர்களும் கூடிவிட்டனர். இது எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த வழியே செல்லும் சரக்குக் கப்பல்களில் இருந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முட்டைக்குள் பொம்மையும் சாக்லேட்டும் ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ஒரு தாளும் இருந்தன. கோணிகளில் சேகரிக்கப்பட்ட இந்த முட்டைகள், குழந்தைகள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தீவில் கொட்டிக் கிடந்த முட்டைகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தனிமையில்-வாடும்-யானை/article9469865.ece?homepage=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சூப்பர் ஹீரோவுக்கு இந்த உலகம் கடமைப்பட்டிருக்கிறது!

 
billi_bar_3116311f.jpg
 
 
 

பில்லி பார் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பனிப் பாலைவனத்தில் தனியாக வசித்து வருகிறார். 1920-ம் ஆண்டு முதல் இந்தப் பகுதி மனிதர்கள் வசிப்பதற்குத் தகுதியற்றதாக மாறிவிட்டது. பருவநிலை மிகக் கடுமையாக இருக்கும். 40 ஆண்டுகளாக இங்கே நிலவும் தினசரி பருவநிலையைக் குறித்து வருகிறார் பில்லி பார். பனிப்பொழிவு, வெப்பநிலை, பனி உருகுதல், இங்கே வரும் பறவைகள், விலங்குகள் என்று பல்வேறு தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார். பொழுதுபோக்குக்காக இவர் செய்த ஆய்வு, இன்று புவி வெப்பமடைதல் குறித்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகளுக்குப் பேருதவியாக இருந்து வருகிறது. இவரை ஸ்நோ கார்டியன், சூப்பர் ஹீரோ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். “நியூ ஜெர்சியில் வளர்ந்தேன். சுற்றுச்சூழல் அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு, என்னால் மனிதர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லை. அதனால் இந்தப் பனிப் பாலைவனத்துக்கு வந்துவிட்டேன். முதலில் கூடாரம் போட்டுத் தங்கினேன். அந்த ஆண்டு 25 அடி உயரத்துக்குப் பனிப்பொழிவு ஏற்பட்டது. உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாக இருந்தது. அடுத்த 8 ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு வீட்டை உருவாக்கினேன். நானே கால நிலையை அளக்கும் கருவிகளை உருவாக்கி வைத்திருக்கிறேன். இங்கே நிகழும் சின்ன மாற்றத்தைக் கூடப் பதிவு செய்திருக்கிறேன். ஆர்வத்தால் மட்டுமே இதை நான் செய்துவருகிறேன். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அருகில் இருக்கும் கிராமத்துக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி வருவேன். மாதம் ஒருமுறை நகரத்துக்குச் சென்று வருவேன். வானிலையைக் கவனிக்கும் நேரம் தவிர, மீதி நேரம் திரைப்படங்கள் பார்ப்பேன். புத்தகங்கள் படிப்பேன். மனிதர்களே இல்லாத இந்த இடத்தை எல்லோராலும் ரசிக்க முடியாது. எனக்கு இது ரொம்பவே பிடித்திருக்கிறது. 65 வயதாகிவிட்டது. இனியும் இங்கே தொடர்ந்து வசிக்க இயலாது. விரைவில் நாட்டுக்குள் சென்றுவிட வேண்டும்” என்கிறார் பில்லி பார். ஆராய்ச்சியாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து, கண்டுபிடிக்க வேண்டிய விஷயத்தைத் தனி மனிதராக, உலகத்துக்குத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கும் பில்லி பாரை அறிவுலகம் கொண்டாடுகிறது. புவி வெப்பமடைதல் குறித்த பல கேள்விகளுக்கு இவரின் ஆய்வு பதிலளிக்கும் என்கிறார்கள்.

சூப்பர் ஹீரோவுக்கு இந்த உலகம் கடமைப்பட்டிருக்கிறது!

விர்ஜினியாவில் ஓர் ஆடு பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந் தது. அருகில் ஒரு பூனை அமர்ந்து ஆட்டின் வயிற்றைத் தன் முன்னங்கால்களால் தடவி மசாஜ் செய்துகொண்டிருந்தது. ஆட்டுக்குப் பூனை உதவி செய்வதை அறியாமல், பூனையைச் சிலர் அப்புறப்படுத்தினர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி வந்து, மீண்டும் ஆட்டின் வயிற்றை மசாஜ் செய்ய ஆரம்பித்துவிட்டது பூனை. இந்தக் காட்சியை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஒரு பூனையால் எப்படி ஆட்டின் பிரசவ வலி புரிந்து, உதவி செய்ய முடிந்தது என்று எல்லோருக்கும் வியப்பாக இருக்கிறது.

ஆட்டின் பிரசவத்துக்கு உதவிய பூனை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சூப்பர்-ஹீரோவுக்கு-இந்த-உலகம்-கடமைப்பட்டிருக்கிறது/article9472804.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிறிய நகரில் பிரம்மாண்டமான பொருட்கள்!

 

 

chair_3116653f.jpg
 
 
 

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் மிகச் சிறிய நகரம் கேசீ. இங்கே 3 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே வசித்து வருகிறார்கள். ஆனால் இங்கேதான் உலகிலேயே மிகப் பெரிய பொருட்கள் எல்லாம் இருக்கின்றன. காற்றில் ஆடும் மணிகள், சாய்வு நாற்காலி, ஊசி நூல், தபால் பெட்டி, ஒரு ஜோடி ஷூ, நாணயம், அளவுகோல், பென்சில், முள்கரண்டி, சோளம், கள்ளி என்று ஏராளமான பொருட்கள் பிரம்மாண்டமான அளவுகளில் நகர் முழுவதும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 8 பொருட்கள் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பொருட்களை உருவாக்கியவர் தொழிலதிபர் ஜிம் போலின். போலின் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரான இவர், ஆரம்பத்தில் சிறிய பெயிண்ட் கடையை வைத்திருந்தார். படிப்படியாக உயர்ந்து இன்று இவரது நிறுவனத்தில் 240 பேர் வேலை செய்கிறார்கள். இதுதவிர பல்வேறு கடைகளும் ஆரம்பித்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அதிலிருந்து தப்பிப்பதற்காகச் சுற்றுலாவை மேம்படுத்த முடிவெடுத்தார். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் என்று நினைத்தார். இரண்டு ஆண்டுகள் திட்டமிட்டு, 2011-ம் ஆண்டு 54 அடி உயரமுள்ள ராட்சத மணியை உருவாக்கினார். அதிலிருந்து வரிசையாகப் பிரம்மாண்டமான பொருட்களை அமைத்து வருகிறார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றால் அந்தப் பொருட்கள் வேலை செய்யவேண்டும். அதனால் 8 பொருட்கள் மட்டுமே கின்னஸ் சாதனை படைத்தன. போலின் நினைத்தது போலவே இந்த ராட்சத பொருட்கள் பொருளாதாரத்தையும் மேம்படுத்தின. ராட்சத ஷூக்களுக்கு அருகே இருக்கும் ஷூ கடையில் தினமும் வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகள் தபால் நிலையத்தில் கடிதங்களை வாங்கி, பிரம்மாண்டமான தபால் பெட்டிக்குள் போடுகிறார்கள். இன்னும் போலின் ஆர்வம் குறையவில்லை. விரைவில் குதிரை, சுத்தியல், மட்டை பந்து போன்றவற்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

சிறிய நகரில் பிரம்மாண்டமான பொருட்கள்!

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் 50 வயது பெண்மணி ஒருவர், கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருக்கு 3 படுக்கையறைகள் கொண்ட ஒரு குடியிருப்பு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டுவிட்டு, விமான நிலையத்தில் தங்கி இருக்கிறார். “2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதில் நான் நிலைகுலைந்து போனேன். எனக்கு வேலையோ, வேறு வருமானமோ கிடையாது. அதனால் இருக்கும் வீட்டை 68 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுவிட்டு, விமான நிலையத்துக்கு குடிவந்துவிட்டேன். சில இரவுகள் மட்டும் தங்கும் எண்ணத்தில்தான் வந்தேன். கையில் எந்தப் பொருளும் கிடையாது. நாட்கள் செல்லச் செல்ல இந்த இடமே பிடித்துவிட்டது. வாடகையை வைத்து உணவு, உடைகளை வாங்கிக்கொள்கிறேன். 24 மணி நேரமும் குளிர்சாதன வசதி, இணைய இணைப்பு இருக்கிறது. அதனால் பொழுதும் போய்விடுகிறது. இப்பொழுது என்னைப் பற்றி பத்திரிகைகளுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதனால் என்னுடைய வீட்டை விற்று, அந்தப் பணத்தில் சிறிய வீட்டை வாங்கிக்கொண்டு சென்றுவிட முடிவு செய்துவிட்டேன். என் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண்மணி.

விமான நிலையத்தில் குடியிருந்த பெண்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிறிய-நகரில்-பிரம்மாண்டமான-பொருட்கள்/article9474480.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நிஜ ஹெர்குலிஸ்!

 

 
 
 
masala_3117793f.jpg
 
 
 

பாகிஸ்தானைச் சேர்ந்த 25 வயது அர்பாப் கிஸெர் ஹயட், 6 அடி 3 அங்குல உயரமும் 431.82 கிலோ எடையும் இருக்கிறார். இவரை ஹல்க் மனிதர் என்று அழைக்கின்றனர். உலகின் மிக வலிமையான மனிதர் என்று நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு டிராக்டரைக் கயிற்றால் பிடித்து நகர விடாமல் செய்திருக்கிறார். டிராக்டரை எவ்வளவு வேகமாக இயக்கினாலும் பின் சக்கரங்கள் மட்டும் இருந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தன. “இப்படி ஒரு உடல் எனக்கு அமைந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எடை தூக்குதலிலும் மல்யுத்தத்திலும் சாம்பியன் ஆக வேண்டும் என்பதுதான் என் லட்சியம். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கலோரிகள் என் உடலுக்குத் தேவைப்படுகின்றன. காலை உணவாக 36 முட்டைகள், மதியம் 3.5 கிலோ இறைச்சி, ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் போன்றவற்றை எடுத்துக்கொள்கிறேன். அளவுக்கு அதிகமான எடையால் என் உடலுக்கு இதுவரை எந்த நோயும் ஏற்பட்டதில்லை. எடை எனக்கு ஒருநாளும் சுமையாகத் தெரிந்ததில்லை” என்ற ஹயட், ஏற்கெனவே பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கிறார். உலக அளவில் வலிமையான மனிதராக வலம் வர வேண்டும் என்று விரும்புகிறார்.

நிஜ ஹெர்குலிஸ்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த யி லியான்ஸிக்கு 2009-ம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒன்றுக்கு மேல் ஒன்றாக இரண்டு முகங்கள் இருந்தன. மரபணுக் குறைபாட்டின் காரணமாக இப்படிக் குழந்தை பிறந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர். “குழந்தையை முதலில் பார்த்தபோது மயக்கமே வந்துவிட்டது. எனக்கு ஏன் இப்படி ஒரு குழந்தை பிறந்திருக்கிறது? என்னிடம் குழந்தையைக் கொடுக்க வேண்டாம் என்று மன்றாடினேன். மருத்துவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னைப் பக்குவப்படுத்தினார்கள். நாங்கள் ஏழை விவசாயிகள். அறுவை சிகிச்சை செய்வதற்குப் பணம் இல்லை. வேறுவழியின்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். உறவினர்கள் குழந்தையை எங்காவது விட்டுவிடும்படிக் கூறினார்கள். என்னால் எப்படி அந்தக் காரியத்தைச் செய்யமுடியும்? எல்லோரும் முகமூடிக் குழந்தை என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்” என்று யி லியான்ஸி கூறிய தகவல் சீனா முழுவதும் பரவியது. நன்கொடைகள் குவிந் தன. “திசுக்கள், தாடை எலும்புகள் என்று முகம் முழுவதும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதற்காக இரண்டு முறை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டோம். இரண்டுமே வெற்றி கரமாக அமைந்தன. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எலும்புகள் சாதாரணமாக வளர்ந்திருக்கின்றனவா என்பதைக் கணிக்க முடியும். ஆனாலும் முதல் அறுவை சிகிச்சையிலேயே ஹுய்காங்கின் முகம் ஓரளவு சாதாரணமாகிவிட்டது. இரண்டாவது அறுவை சிகிச்சை முடிந்து, காயங்கள் ஆறிய பின்னர் ஹுய்காங்கை நாங்கள் சந்திக்கவே இல்லை. அவன் பெற்றோர் அதற்குப் பிறகு எங்களிடம் அழைத்து வரவேயில்லை. ஹுய்காங் இன்று எப்படி இருக்கிறான் என்பதைப் பார்க்க மருத்துவ உலகமும் மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்கிறார் மருத்துவர் வாங்.

எங்கே இருந்தாலும் நலமாக இருக்கட்டும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நிஜ-ஹெர்குலிஸ்/article9480419.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பல் தேய்த்துவிடும் பறவை!

 
 
masala_2338435f.jpg
 
 
 

சிட்னியில் வசிக்கும் ப்ளூம் குடும்பத்தினர் மேக்பை பறவையை வளர்த்து வருகிறார்கள். மனிதர்கள் செய்யும் பல செயல்களையும் இந்த மேக்பை செய்து அசத்துகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டு, பெங்குவின் என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்கள். ப்ளூம் மகன்களுடன் படுக்கையில் படுத்து தூங்குகிறது. அதிகாலை எல்லோரையும் எழுப்பி விடுகிறது.

பல் தேய்க்கும்போது தோளில் அமர்ந்து, பற்களைச் சுத்தம் செய்துவிடுகிறது. உடற்பயிற்சி செய்கிறது. குழந்தைகளைப் போலவே உரக்கக் குரல் கொடுத்து அழைக்கிறது. பாடுகிறது. மேஜையில் அமர்ந்து சாப்பிடுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அலகால் முத்தம் கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது. கம்ப்யூட்டரில் வேலை செய்வதை வேடிக்கை பார்க்கிறது.

கால்குலேட்டரைக் கால்களால் தட்டி விளையாடுகிறது. குழந்தைகள் படிக்கும்போது அவர்களின் கைகளை ஆதரவாகத் தன் கால்களால் பிடித்தபடி படுத்துக் கிடக்கிறது. குழந்தைகளுடன் சேர்ந்து விதவிதமாக போஸ் கொடுக்கிறது.

ஒரு நாயைப் போல இத்தனை அன்பாக பறவை பழகுவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்கிறார் ப்ளூம். பெங்குவின் மற்றும் ப்ளூம் குடும்பத்தினரின் புகைப்படங்கள் இணையதளங்களில் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இப்பறவையின் அன்பு ஆச்சரியம் தருகின்றது

ஜப்பானியக் கண்டுபிடிப்பாளர் கொய்சி உச்சிமுரா பேசும் தலையணை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று இருக்கும் இளம் வயதினர், தனிமையில் இருக்கும்போது மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் தனிமையைப் போக்குவதற்காக இந்தத் தலையணையை உருவாக்கியிருக்கிறார். ஓய்வாக இருக்கும் நேரத்தில் தலையணையுடன் பேச ஆரம்பிக்கலாம்.

அதாவது தலையணையைத் தொட்டால், அது பேசும். மெதுவாகத் தொட்டால் மென்மையாகப் பேசும். கொஞ்சம் அழுத்தமாகத் தொட்டால் அதற்கு ஏற்றவாறு பதில் அளிக்கும். மிக மோசமாகத் தலையணையை அழுத்தினால் எச்சரிக்கை செய்துவிட்டு, அதற்குப் பிறகு பேசாமல் தன் எதிர்ப்பைக் காட்டும்.

அதனால் தலையணையைப் பயன்படுத்துகிறவர்கள் கண்டிப்பாக, அதை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். 500 விதமான பேச்சுகளைத் தலையணையில் ஏற்றியிருப்பதால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உரையாடலாம் என்கிறார் உச்சிமுரா. தலையணையின் விலை 10 ஆயிரம் ரூபாய்.

ஆச்சரியம்தான்… ஆனால் மனிதர்களின் இடத்தைத் தலையணையால் ஈடு செய்ய முடியுமா?

சீனாவின் அதிக எடை கொண்ட மனிதராக 26 வயது லியாங் யங் வலம் வந்தார். 222 கிலோ எடையைச் சுமக்க முடியாமல் திணறி வந்தவருக்கு, உதவ முன்வந்தது ஒரு மருத்துவமனை. ஆம்புலன்ஸில் லியாங்கை ஏற்ற முடியவில்லை. ஒரு ட்ராலியில் வைத்து, இரண்டு வீரர்கள் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சையுடன் ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் அளிக்கப்பட்டன. மூன்று மாதங்களில் 82 கிலோ எடையைக் குறைத்துவிட்டார் லியாங். இன்று குறைந்த காலத்தில் அதிக எடையைக் குறைத்த மனிதர் என்ற சிறப்பைப் பெற்றுவிட்டார்!

அட! லியாங் என்ன செஞ்சாலும் சாதனையாயிருதே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பல்-தேய்த்துவிடும்-பறவை/article6985588.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பெண்ணின் துயர் துடைத்த வான்கோழி!

 

vankoli_3118918f.jpg
 
 
 

அமெரிக்காவில் வசிக்கும் ஜோடி ஸ்மாலே, தான் வளர்க் கும் ஈஸ்டர் வான்கோழியை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறார். இதுவரை அமெரிக்காவின் 6 மாகாணங்களுக்குப் பயணம் செய்து திரும்பியிருக்கிறது ஈஸ்டர் வான்கோழி. கார், விமானம், கப்பல் போன்றவற்றில் பயணித்திருக்கிறது. “என் கணவரின் இழப்பால் துயரத்தில் இருந்தபோது, ஒருநாள் தெருவில் ஈஸ்டரைக் கண்டேன். அதைப் பார்த்தவுடன் எனக்கு ஏனோ அன்பு பெருகியது. அருகில் சென்று ஈஸ்டரை அணைத்தேன். அது என்னைக் கண்டு பயப்படாமல், பதிலுக்கு அன்பைச் செலுத்தியது. என் துயரத்தைப் போக்க வந்த தேவதையாகத் தோன்றியது. மூன்று வயதான ஈஸ்டர், குறைந்தது 10 ஆண்டுகளாவது உயிர் வாழும் என்பதை அறிந்தேன். வளர்க்க ஆரம்பித்தேன். வீட்டில் பூனைகளும் நாய்களும் செல்லப்பிராணிகளாக இருந்தாலும் ஈஸ்டர் எனக்கு மிகவும் நெருக்கமானவள். இவள் இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை. நான் சமைக்க ஆரம்பித்தால், சமையலறையில் அமர்ந்திருப்பாள். என்னுடன் மேஜையில் அமர்ந்து சாப்பிடுவாள். என் படுக்கையில்தான் உறங்குவாள். இவளுக்குத் துணிகளைப் போட்டு அழகு பார்ப்பேன். இவள் வந்த பிறகு என் துன்பத்தில் இருந்து வெளிவந்துவிட்டேன். மிகவும் புத்திசாலியானவள். அத்துமீறி எதையும் செய்யமாட்டாள். விமானத்தில் தனி இருக்கையில் அமர்ந்து, டிவி பார்த்தபடியே இவள் பயணிப்பதை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். விமானி இவளைக் கண்டு வியந்து, காக்பிட்டில் உட்கார அனுமதித்தார். எங்கே போனாலும் நல்ல பெயரைப் பெற்றுவிடுகிறாள். பொதுவாகவே எல்லா மனிதர்களிடமும் அன்பாகப் பழகுகிறாள். நாய்களுக்கும் பூனைகளுக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் ஓடிப்போய் உதவி செய்வாள். என்னைச் சிறிது நேரம் பார்க்காவிட்டால் குரல் கொடுத்தபடி தேட ஆரம்பித்துவிடுவாள்” என்கிறார் ஜோடி ஸ்மாலே.

பெண்ணின் துயர் துடைத்த வான்கோழி!

சியங்கோரா என்பது நாய்களின் ரோமங்களை வைத்துப் பின்னப்படும் ஆடைகளுக்கான கலை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கடுங்குளிர் நிலவக்கூடிய ஆர்டிக் பகுதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் நாய்களின் ரோமங்களில் ஆடைகளை நெய்திருக்கிறார்கள். இல்லினாய்ஸைச் சேர்ந்த ஜென்னி சான்கே, சியங்கோரா ஆடைகளை உருவாக்கி வருகிறார். ஸ்வெட்டர், கையுறை, தொப்பி, காலுறை போன்றவற்றை நாய்களின் ரோமங்களைக் கொண்டு செய்துவருகிறார். “ஆடுகளின் ரோமங்களை வெட்டுவது போல நாய்களுக்கு நாம் வெட்டுவதில்லை. நாய்கள் மீது அன்பு வைத்திருப்பவர்கள், அவற்றின் ரோமங்களை வைத்து ஏதாவது ஒரு பொருளை உருவாக்கித் தரும்படிக் கேட்டனர். நாய்கள் இறந்தாலும் அவற்றின் நினைவாக இந்தப் பொருட்களை வைத்துக்கொள்ளலாம் என்றனர். நாய்களின் உரிமையாளர்களிடம் ரோமங்களைச் சேகரித்து தரச் சொல்வேன். ரோமங்களைப் பலமுறை தண்ணீரில் சுத்தம் செய்து, நாய் வாசனை போகுமாறு செய்வேன். பிறகு அந்த ரோமங்களை வைத்து தொப்பி, கையுறை போன்று என்ன செய்ய முடியுமோ, செய்து கொடுத்துவிடுவேன். நாய் ரோமங்களால் உருவான தொப்பி என்று சொன்னால் தவிர, யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆடுகளின் ரோமங்களைவிட நாய் ரோமங்கள் 80% கதகதப்பை அதிகமாக அளிக்கக்கூடியவை” என்கிறார் ஜென்னி சான்கே.

நாய் ரோமங்களில் ஆடைகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பெண்ணின்-துயர்-துடைத்த-வான்கோழி/article9484042.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.