Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: குட்டி ஸ்டீவ் இர்வின்!

 
masala_2533723f.jpg
 

ஆஸ்திரேலியாவில் வசிக்கிறான் 5 வயது சார்லி பார்கர். இவன்தான் உலகின் இளம் முதலை வேட்டைக்காரன். முதலைப் பண்ணையில் தினமும் தன் பெற்றோருடன் வேலை செய்து வருகிறான். 3 வயதில் இருந்தே முதலைக் குட்டிகளைப் பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டான். பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர்த்து, சீருடையில் முதலைப் பண்ணையில் தன் நேரத்தைச் செலவிடுகிறான்.

ப் விக்டோரியாவில் உள்ள பல்லரட் விலங்குகள் பூங்காவில் தினமும் ஆமை, முதலை, முயல் போன்ற விலங்குகளுக்குத் தன் கைகளால் உணவு கொடுப்பது சார்லியின் முக்கியமான பணி. பெற்றோர் கண்காணிப்பில் ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறான். விலங்குகளைப் பார்ப்பதை விட, சார்லி விலங்குகளைக் கையாள்வதைப் பார்ப்பதற்கு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

குட்டி ஸ்டீவ் இர்வின்!

நெதர்லாந்தில் உள்ள பன்றிப் பண்ணையில் உலகிலேயே முதல் முறை பன்றிப் பாலாடைக்கட்டி தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ பாலாடைக்கட்டியின் விலை ஒன்றரை லட்சம் ரூபாய்! பன்றிப் பண்ணையின் உரிமையாளர் எரிக் ஸ்டெனிக், பல ஆண்டுகள் யோசித்து, பரிசோதித்து பன்றிப் பாலில் இருந்து பாலாடைக்கட்டியை உருவாக்கியிருக்கிறார். மாட்டுப் பாலை விட பன்றிப் பாலில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. ஆனால் பன்றிப் பாலைக் கறப்பதுதான் மிகவும் கடினமான காரியம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை 100 மி.லி. பால் மட்டுமே ஒரு பன்றி சுரக்கும். 10 லிட்டர் பால் கறக்க 40 மணி நேரம் செலவிட வேண்டும். 10 லிட்டர் பாலில் இருந்து 1 கிலோ பாலாடைக் கட்டியைப் பெற முடியும். முதலில் பன்றிப் பாலில் இருந்து பாலாடைக் கட்டி எடுக்கும் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. பல்வேறு விதங்களில் பரிசோதனைகள் செய்து, இறுதியில் பன்றிப் பாலாடைக் கட்டி எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் எரிக். பாலாடைக் கட்டிகளிலேயே மிகவும் சுவையானது பன்றிப் பாலாடைக்கட்டிதான். ஒருமுறை சுவைத்தால் மற்ற பாலாடைக்கட்டிகளை விரும்ப மாட்டார்கள் என்கிறார் எரிக்.

பன்றியின் பாலும் பாலாடைக்கட்டியும் யாரும் யோசித்திருக்கவே மாட்டார்கள்!

சைபீரியாவில் உள்ள ஷோர்ஸ்கி தேசியப் பூங்காவில் 12 வயது சிறுவன் டெனின் அலெக்ஸாண்ட்ரோவ் நடந்துகொண்டிருந்தான். அப்பொழுது ஈர மண்ணில் மிகப் பெரிய மனிதக் காலடித் தடம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டான். தன்னுடையை அப்பாவை அழைத்துக் காட்டினான். அவரும் ஆச்சரியமடைந்தார். காலடித் தடத்துக்கு அருகில் தன்னுடைய காலை வைத்துப் பார்த்தார். சாதாரண மனிதர்களின் காலை விட இரண்டு மடங்குப் பெரிதாக அந்தக் காலடி இருந்தது.

‘‘மிக அழுத்தமாகவும் புதிதாகவும் தெரிந்த காலடியைப் பார்க்கும்பொழுது, அந்த உயிரினம் வெகு தொலைவு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது யாருமே வித்தியாசமான உருவத்தையும் பார்த்ததில்லை, வித்தியாசமான சத்தத்தையும் கேட்டதில்லை என்றனர். அநேகமாக இது பனிமனிதனாகத்தான் இருக்க வேண்டும். இதுவரை அதை நான் நம்பவில்லை. காலடித் தடத்தைப் பார்த்த பிறகு பனிமனிதன் இருக்கலாம் என்று தோன்றுகிறது’’ என்கிறார் ஆண்ட்ரி. இந்தக் கோடையில் மட்டும் இரண்டாவது முறையாகப் பனிமனிதன் காலடித் தடம் இங்கே இருப்பதாகப் புகார் வந்திருக்கிறது என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

காலம் காலமாக காலடியை மட்டும் விட்டுச் செல்லும் பனிமனிதனே, எங்கே ஒளிந்திருக்கிறாய்?

பிரேஸிலைச் சேர்ந்த குளவியின் விஷத்தில் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய தன்மை இருப்பதாக லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பால் பீல்ஸ் தெரிவித்திருக்கிறார்.

‘‘தன்னை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கே குளவிகள் கொடுக்கில் விஷத்தை வைத்திருக்கின்றன. புற்றுநோய் இருக்கும் பகுதிகளில் குளவியின் கொடுக்கை வைத்து விஷத்தைச் செலுத்தினால், புற்றுநோய் செல்கள் வேகமாக அழிந்து போகின்றன. உடலின் பல்வேறு பகுதிகளில் வரும் புற்றுநோய்களுக்குப் பல்வேறு விதங்களில் மருத்துவம் செய்யப்படுகின்றன.

மருத்துகளை எடுத்துக்கொள்வதோடு, குளவியின் விஷத்தையும் செலுத்தினால் எளிதில் புற்றுநோயிலிருந்து மீண்டுவிடலாம். குளவியின் விஷம் நோய் இருக்கும் செல்களில் மட்டுமே வேலையைக் காட்டுகிறது. நோயற்ற செல்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிப்பதில்லை என்பது முக்கியமானது’’ என்கிறார் பால் பீல்ஸ். இன்னும் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு குளவி விஷத்தை புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

புற்றுநோய் அரக்கனிடமிருந்து மனிதர்களை மீட்கும் காலம் வெகு விரைவில் வரவேண்டும்.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குட்டி-ஸ்டீவ்-இர்வின்/article7610846.ece?homepage=true&relartwiz=true

நிர்வாகத்தினர்க்கு

இது ஒரு தொடர் பதிவு. இது வேறு ஒரு பகுதியில் வரவேண்டியது என்றால் பொருத்தமான பகுதிக்கு நகர்த்தி விடவும். நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: பழத்தோல் கைப்பை!

 
 
 
masala_2532488f.jpg
 

நெதர்லாந்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தூக்கி எறியும் பழக்கழிவுகளில் இருந்து ’பழத்தோல்’ உருவாக்கியிருக்கின்றனர். மாட்டுத் தோலைப் போலவே இந்தப் பழத் தோலைக் கொண்டு பைகள் தைக்கலாம், தாளாகப் பயன்படுத்தலாம். அருகில் உள்ள பழச்சந்தைக்கு மாலையில் சென்று, அழுகிய பழங்களை அள்ளி வருகிறார்கள். பழங்களை வெட்டி, கூழாக்குகிறார்கள். பின்னர் கலவையை அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறுகிறார்கள். பெரிய வடிகட்டிகளின் மீது சிறிது கலவையை ஊற்றி, சமப்படுத்துகிறார்கள்.

சில மணிநேரம் வெப்பத்தில் காய விடுகிறார்கள். பிறகு எடுத்தால் பழக்கலவை உறுதியான தோலாக மாறியிருக்கும். அவற்றை எடுத்து வேண்டிய அளவில் வெட்டி, பிளாஸ்டிக் தாளில் சுற்றி வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். விலங்குகளின் தோல் அளவுக்கு அத்தனை உறுதியாக இல்லாவிட்டாலும் ஓரளவு உறுதியாகவே இருக்கிறது பழத்தோல்.

மாம்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களில் இருந்து அருமையான தோல் கிடைக்கிறது. ஆனாலும் பழத்தோல் தயாரிக்கும் வழிமுறைகளை மாணவர்கள் இன்னும் முழுமையாகச் சொல்லவில்லை. பழத்தோலை வைத்துப் பைகள் தயாரிப்பது தங்கள் நோக்கம் இல்லை என்றும், தோலை வைத்து என்ன செய்ய முடியும் என்பதைத் தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

அட! வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்!

போர்ட்லாந்தில் வசிக்கிறார் கேலின் கோச். அவருடைய செல்லப் பிராணி லோகி பூனை. இன்று இன்ஸ்டாகிராமில் அதிக செல்வாக்குப் படைத்த பூனையாக வலம் வருகிறது. லோகியின் மிரட்டும் கண்களும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் 2 பற்களும்தான் இதற்குக் காரணம். பார்ப்பதற்கு ரத்தக்காட்டேரி போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது லோகி.

‘‘2 ஆண்டுகளுக்கு முன்புதான் லோகியைத் தத்தெடுத்தேன். அப்பொழுது சாதாரண பூனை போலத்தான் இருந்தது. திடீரென்று ஒருநாள் பூனையால் இமைகளை மூடமுடியவில்லை, 2 பற்களும் இப்படி வெளியே தெரிய ஆரம்பித்தன. பலமுறை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும், காரணத்தை அறிய முடியவில்லை. இமைகளும் பற்களும்தான் இப்படி அச்சத்தை ஏற்படுத்துகின்றனவே தவிர, பூனை எப்பொழுதும் போல சாதுவாகவே இருக்கிறது. வீட்டுக்கு வருபவர்களும் முதலில் லோகியைப் பார்த்து பயப்படுகிறார்கள். லோகியை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு வருகிறேன். தன் உருவத்தால் லோகி உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது’’ என்கிறார் கேலின் கோச்.

ரொம்ப அதியசமாகத்தான் இருக்கு!

பாம்புகளிலேயே அதிக விஷத்தன்மை உடையவை கடல் பாம்புகள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ட்ரைப் கடலில் வலம் வந்துகொண்டிருந்தார். ஒரு கடல் பாம்பு பாறை மீனை வாயால் கவ்வியிருந்தது. பாறை மீனும் பாம்பின் உடலைக் கடித்தபடி இருந்தது. இரண்டுக்கும் ஏற்பட்ட கடினமான போராட்டத்தின் இறுதியில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இரண்டும் இறந்து போய்விட்டதாக நினைத்தார் ட்ரைப். ‘‘பிராணிகள் மீது எனக்கு அன்பு அதிகம். பாறை மீனின் பிடியில் இருந்து பாம்பைத் தனியாகப் பிரித்து எடுத்தேன். என்ன ஆச்சரியம், பாம்பு உயிருடன் இருந்தது. பாம்பைத் தனியாகவும் மீனைத் தனியாகவும் விட்டேன். சில நிமிடங்களில் மீண்டும் பாம்பு பாறை மீனைத் தேடிச் சென்று இரண்டாவது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டது’’ என்கிறார் ட்ரைப்.

பசி பயமறியாது…

புளோரிடாவில் வசிக்கும் ஸ்டெபானி ரைட்டர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளோமா படிப்பை முடித்தார். இந்த நான்கு ஆண்டுகளில் அந்தப் படிப்புக்கு ஏற்ற வேலை அவருக்குக் கிடைக்கவே இல்லை. மன வருத்தத்தில் இருந்தவர், தன்னுடைய டிப்ளோமா சான்றிதழை இணையத்தில் விற்பனைக்கு வைத்துவிட்டார். தான் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, இந்தப் படிப்பை முடித்திருப்பதால் 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்டெபானி. ‘‘நான்கு ஆண்டுகளாக நான் வேலைக்கு அலைவதைப் பார்த்த நண்பர், ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு, ஏன் 4 ஆண்டுகளை வீணாக்கிவிட்டாய் என்று கேட்டார். டிப்ளோமாவை விற்றுவிட்டால், படிப்புக்கு ஏற்ற வேலை செய்ய வேண்டியதில்லை. எந்த வேலை கிடைத்தாலும் பார்க்கலாம்’’ என்கிறார் ஸ்டெபானி.

உங்க டிப்ளோமாவால் உங்களுக்கே வேலை கிடைக்கலை… இதை வாங்கி என்ன செய்யப் போறாங்க?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பழத்தோல்-கைப்பை/article7607086.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: உடலையே மூடி மறைந்த ரோமம்!

 
masala_2535414f.jpg
 

ஆஸ்திரேலியாவில் வசித்த கான்பெர்ரா ஆடு, அளவுக்கு அதிகமான ரோமங்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தது. ஆட்டின் உடலே வெளியே தெரியாத அளவுக்கு, பார்வையையும் மறைத்தபடி வளர்ந்து கிடந்தன ரோமங்கள். ஆட்டின் காலில் இருந்து ரத்தம் வெளியேறி, இறக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.

ஆடுக்கு உதவும் விதத்தில், ரோமங்களை வெட்டி எடுத்தனர். 40.5 கிலோ எடை இருந்தது ரோமம். உடலில் எடை குறைந்த உடன் ஆடு நிம்மதி அடைந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் போட்டிகளில் பங்கேற்பதற்காக விவசாயிகள் ஆடுகளுக்கு முடிகளை வெட்டுவதில்லை. அது ஆடுகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது.

ஐயோ… பாவம்…

தாய்லாந்தில் பழங்காலத்து பழக்கம் ஒன்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பொம்மைகள் மூலம் குழந்தைகளின் ஆவிகளை வழிபடும் வழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. கருவிலேயே இறந்துபோகும் குழந்தைகளின் ஆவிகளை வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அது காலத்துக்கு ஏற்றவாறு மாறி, ஒருகட்டத்தில் மறைந்து போய்விட்டது. சமீபத்தில் மீண்டும் குழந்தை கடவுளை வணங்குவது அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அதிர்ஷ்டமும் செல்வமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

பொம்மைகளையும் பொம்மைகளுக்கான அமைப்பையும் உருவாக்கிய மே நிங், ‘‘3 ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் மிகவும் பிடிவாதக்காரனாக இருந்தான். அவனை யாராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒருநாள் நம்பிக்கையோடு கடவுள் பொம்மையை வாங்கி வந்தேன். உடனே என் மகனின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.

விரைவில் மிக நல்ல குழந்தையாக மாறிப் போனான். மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்றுதான் பொம்மைகளை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறேன். இங்குள்ள ஆயிரக்கணக்கான பொம்மைகள் தங்களின் தத்தெடுக்கப் போகும் பெற்றோருக்காகக் காத்திருக்கின்றன’’ என்கிறார். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றார் போல அளவு, எடை, அலங்காரம், ஆண், பெண் என்று பொம்மைகளைச் செய்து கொடுக்கிறார் மே நிங்.

ஏற்கெனவே சிரிப்பு புத்தர் எல்லோரையும் செல்வந்தராக மாற்றிவிட்டார்… நீங்க வேற...

ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, நாய்களுக்குப் பிரத்யேக முகமூடிகளைத் தயாரித்திருக்கிறது. அன்பான, சாதுவான நாய்கள் முகமூடியை அணிந்தவுடன், ஆக்ரோஷமான, ரத்தம் வடியும் பற்களுடன் ஓநாய்களைப் போலக் காட்சியளிக்கின்றன. கோரமான முகமூடியுடன் இருக்கும் நாய்களை யாரும் திருடிச் சென்றுவிட மாட்டார்கள் என்கிறார் முதல் முகமூடியைப் பயன்படுத்திய மரினா குருல்யோவா. முகமூடி அணிவது நாய்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. வித்தியாசமாக இருக்கட்டும் என்று இப்படி ஒரு முகமூடியைத் தயாரித்தோம். அது மிகப் பெரிய அளவுக்கு உலகம் முழுவதும் பரவிவிட்டது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

வித்தியாசம் என்பதற்காக இப்படியா?

திருமணம் ஆன தம்பதியரில் மூன்றில் இரண்டு தம்பதியர் தங்கள் வருமானத்தைப் பற்றிப் பேசிக்கொள்வதில்லை. அதாவது தங்கள் இணையிடம், வருமானம் எவ்வளவு வருகிறது, சேமிப்பு எவ்வளவு, கடன் எவ்வளவு போன்ற நிதி தொடர்பான விஷயங்களைப் பரிமாறிக்கொள்வதில்லை என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. திருமணத்துக்கு முன்பு நிதி தொடர்பாகப் பேசிக்கொண்டவர்கள் கூட, திருமணத்துக்குப் பின் பேசுவதில்லை.

பெண்களின் வருமானம் பற்றி பெரும்பாலும் ஆண்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். பெண்களுக்குத்தான் ஆண்களின் வருமானம் குறித்து சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. கடன் வாங்கும் நிறுவனங்களில் இருந்து வரும் தகவல்களை வைத்தே சிலர் கணவரின் வருமானத்தை அறிந்துகொள்கிறார்கள். அதிகமாகக் கடன் வாங்கி, அதைத் தங்கள் இணையிடம் பகிர்ந்துகொள்ளாதவர்களிடையே விவாகரத்து அதிகம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்பவர்கள்தானே சரியான இணையாக இருக்க முடியும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உடலையே-மூடி-மறைந்த-ரோமம்/article7615083.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: 95 வயது இளமை சாமியார்!

 
 
masala_2531375f.jpg
 

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் யோகா குரு காஸிம் குர்பஸ். 50 வயது மதிக்கத்தக்கவராக இருக்கிறார், ஆனால் அவருக்கு 95 வயதாகிவிட்டது. இன்னும் 35 ஆண்டுகள் உயிர் வாழப் போவதாகச் சொல்கிறார். ‘’நான் சிறிய வயதில் இருந்தே யோகா செய்கிறேன். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைபிடித்து வருகிறேன். மனிதனின் ஆயுள் காலம் 130 ஆண்டுகள். 65 வயதில் இருந்துதான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. என்னைப் போல் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் யார் வேண்டுமானாலும் 130 வயது வரை வாழலாம்’’ என்கிறார் காஸிம்.

41 வயதில் காஸிமுக்கு மோசமான கார் விபத்து ஏற்பட்டது. அவருடைய முதுகெலும்பு உடைந்து போனது. இனிமேல் காஸிமால் எப்பொழுதும் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். காஸிம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய முதுகெலும்பைச் சரி செய்துவிட்டார். 9 மாதங்களில் நடக்க ஆரம்பித்துவிட்டார். இந்த 9 மாதங்களில் 63 பரிசோதனைகளைத் தன் உடலில் நிகழ்த்தியிருந்தார். ’’நம் மூளையைச் சரியான விதத்தில் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட தசைகளுக்கும் நரம்புகளுக்கும் கட்டளைகளைக் கொடுத்தால் விரைவில் உடல் நலம் பெற்றுவிடும்.

அப்படித்தான் நான் மறுபிறவி எடுத்திருக்கிறேன்’’ என்கிறார் காஸிம். ஆனால் மருத்துவ உலகில் இருந்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார் காஸிம். ‘’நான் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறேன். என் உடலைப் பரிசோதித்து நான் ஏமாற்றுகிறேனா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’’ என்று கூறி வருகிறார் காஸிம்.

யாரைத்தான் நம்புவதோ…

சீனாவைச் சேர்ந்த லின் ஹான்பிங் வித்தியாசமான கலைஞர். கடந்த 20 ஆண்டுகளாக மீன் எலும்புகளை வைத்து ஓவியங்களை உருவாக்கி வருகிறார். சீனாவில் இருக்கும் ஒரே ஒரு மீன் எலும்பு கலைஞர் இவர்தான்! ‘‘நான் சிறுவனாக இருந்தபோதே மீன் எலும்புகள் என்னைக் கவர ஆரம்பித்துவிட்டன. மீன் எலும்புகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். இன்று மீன் எலும்பு ஓவியங்களுக்கு என்று பிரத்யேகமாக ஓவியக்கூடத்தை ஸியாமென் பகுதியில் வைத்திருக்கிறேன். இங்கே 1000 ஓவியங்கள் இடம்பெற்றிருக் கின்றன’’ என்கிறார் லின்.

மீன்களைச் சாப்பிட்ட பிறகு, எலும்புகளை எடுத்துச் சேகரித்து வந்த லின், இன்று உணவகங்கள், மீன் மார்கெட், மீன் தொழிற்சாலைகளுக்குச் சென்று எலும்புகளைச் சேகரித்து வருகிறார். 10 விதங்களில் எலும்புகளைச் சுத்தம் செய்கிறார். இவருடைய ஓவியங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. மரங்களும் பறவைகளும் பறப்பது போல ஓவியம் இருந்தால், சீனாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம் என்கிறார் லின். ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார்.

வித்தியாசமான முயற்சி… நல்ல நோக்கம்…

அலாஸ்காவில் உள்ள கிவலினா நகரம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய நிலப்பரப்பை இழந்து வருகிறது. ஒவ்வொரு புயலின்போதும் கிவலினாவின் பரப்பளவு குறைந்து வருகிறது. அதாவது நிலப்பகுதி தண்ணீருக்குள் சென்றுவிடுகிறது. 403 குடும்பங்கள் வசித்து வந்த இந்தப் பகுதியில், பெரும்பாலானோர் வேறு இடங்களில் குடியேறி வருகின்றனர். கிவலினாவில் நிலத்தையோ, வீட்டையோ யாரும் வாங்க முன்வருவதில்லை. கடல் மட்டம் அதிகரிப்பதோடு, நிலப்பகுதியில் கடல் அரிப்பும் இருப்பதால் வேகமாக மறைந்து வருகிறது கிவலினா. 2025-ம் ஆண்டுக்குள் முழுமையாக நீரில் மூழ்கிவிடும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள். மக்களின் உணவுத் தேவையை கூட இங்கே பூர்த்தி செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

இனியாவது சுற்றுச்சூழல் குறித்து உண்மையான அக்கறை காட்டுவார்களா?

தாய்லாந்தில் உள்ள டைகர் வனவிலங்கு பூங்காவில் பார்வை யாளர்களைக் கவர்ந்திழுக்கிறார் ‘தேள் ராணி’. கொடிய விஷம் கொண்ட கருந்தேள்களைச் சட்டையில் மாட்டிக்கொண்டு, பார்வையாளர்களுடன் உரையாடி வருகிறார். தேள்கள் ஊர்ந்து சென்றால், அவற்றை எடுத்து, மீண்டும் சட்டை மீது வைத்துக் கொள்கிறார். தேள் ராணியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதை எல்லோரும் விரும்புகிறார்கள். நூற்றுக்கணக்கான தேள்கள் உடலில் இருந்தாலும் புன்சிரிப்புடன் வலம் வருகிறார் தேள் ராணி.

தைரிய ராணி!

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாதுகாப்பான தண்ணீர் கிடைக்க வழி செய்த தெரசாவுக்கு வாழ்த்துகள்

 
 
 
book_2529262f.jpg
 

தண்ணீரை வடிகட்டக்கூடிய புத்தகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு மூலம் உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்குச் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க இருக்கிறது. புத்தகத்தைத் திறந்து ஒரு தாளை எடுத்து, அதன் மீது தண்ணீரை ஊற்றினால், மிக சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் 99 சதவிகித பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு விடுகின்றன. கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் தெரசா டான்கோவிச்சின் கடின உழைப்பில் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் புத்தகம் உருவாகியிருக்கிறது. மிகச் சிறிய வெள்ளி, செம்புத் துகள்களால் புத்தகத்தின் பக்கங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் வழியாக நீர் செல்லும்போது, பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டுவிடுகின்றன.

‘‘கண்ணீரைக் கூட இந்தத் தாளில் விட்டால், சுத்தமான தண்ணீராக மாறிவிடும். ஆறு, குளம், கிணறு என்று எங்கிருந்து தண்ணீர் எடுத்தாலும் இந்தப் புத்தகம் சுத்தப்படுத்திவிடும். வெள்ளி, செம்பு போன்றவற்றை வைத்து தண்ணீரைச் சுத்தம் செய்திருக்கிறார்கள். நான் அவற்றை புத்தக வடிவில் மாற்றியிருக்கிறேன். உலகிலேயே தண்ணீரைச் சுத்தம் செய்யக்கூடிய முதல் புத்தகத்தை நான்தான் கண்டுபிடித்திருக்கிறேன்’’ என்கிறார் தெரசா. புத்தகத்தின் ஒவ்வொரு தாளும் 100 லிட்டர் தண்ணீரைச் சுத்தம் செய்யும் ஆற்றல் படைத்தது. ஒரு புத்தகம் ஒரு மனிதரின் தண்ணீர்த் தேவையை 4 ஆண்டுகளுக்குச் சுத்தப்படுத்திக் கொடுத்துவிடும். விரைவில் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.

பாதுகாப்பான தண்ணீர் கிடைக்க வழி செய்த தெரசாவுக்கு வாழ்த்துகள்

உலகிலேயே மிக அழகான சிலந்தி ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பீகாக் சிலந்தி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. 3 முதல் 5 மி.மீ. அளவுக்கு இருக்கும் இந்தச் சிலந்தியின் முகம் நீல நிறமாக இருக்கிறது. கால்களில் கறுப்பு, வெள்ளைக் கோடுகள் காணப்படுகின்றன. பெண் சிலந்திகளைக் குடும்பம் நடத்த அழைக்கும்போது ஆண் சிலந்திகள் கால்களைத் தட்டி, நடனமாடுகின்றன. டாக்டர் ஓட்டோவும் டாக்டர் ஹில்லும் பீகாக் சிலந்திகளில் 21 முதல் 39 வகைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள்தான் சிலந்தியின் நடனத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘’பீகாக் சிலந்தியைப் பார்க்கும் மக்கள், சிலந்திகளைப் பற்றிய தங்களின் கருத்துகளை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள்’’ என்கிறார் ஓட்டோ.

அடடா! இத்தனைக் காலம் எங்கே ஒளிந்திருந்தாய்?

பெண்களின் பிரசவ வேதனையை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, சீனாவில் செயற்கையாக ஆண்களுக்குப் பிரசவ வலி கொடுக்கப்பட்டது. இப்பொழுது ’மிஸ்டர் மம்மி’ என்ற பெயரில் ஒரு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேரும் ஆண்கள் செயற்கையாக பிரசவ வலியை உணர்வார்கள். குழந்தையின் நனைந்த துணிகளை அடிக்கடி மாற்றிவிடுவார்கள். பொம்மை அழும்போது, தோளில் தூக்கிக்கொண்டு நடப்பார்கள். இரட்டைக் குழந்தைகள் என்றால் 2 பொம்மைகளை வைத்துப் பயிற்சி. இரண்டாவது பிரசவம் என்றால், முதல் குழந்தையையும் கவனித்துக்கொண்டு, பிறந்த குழந்தையையும் கவனிக்கும் விதத்தில் விதவிதமாகப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 24 மணி நேரம் அளிக்கப்படும் பயிற்சியின்போது, ஆண்கள் பிரசவ உடையை அணிந்துகொள்ள வேண்டும். பிரசவத்தின்போது கொடுக்கப்படும் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும்.

‘‘பயிற்சியின்போது என்னால் வேறு எதையும் சிந்திக்கவே முடியவில்லை. குழந்தைக்குப் பாலூட்டுவது, உடை மாற்றுவது, தாலாட்டுவது, தூங்க வைப்பது என்று அடுத்தடுத்து வேலைகள் இருந்துகொண்டே இருந்தன. நிம்மதியாக சாப்பிடவோ, சிறிது நேரம் தூங்கவோ முடியவில்லை. பெண்களின் கஷ்டம் இப்பொழுதுதான் தெரிகிறது’’ என்கிறார் பயிற்சி எடுத்த ஒருவர். ‘‘பிரசவ வலியையோ, குழந்தை வளர்ப்பின் கஷ்டத்தையோ அறியாத ஆண்கள், பெண்களை மதிக்கத் தவறி விடுகிறார்கள். சிறிய பிரச்சினை என்றாலும் விவாகரத்து வாங்கிச் சென்றுவிடுகிறார்கள். பெண்கள்தான் தனியே குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறார்கள். ஆண்களின் இந்த எண்ணத்தை மாற்றுவதற்காகவே இந்தப் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறேன். பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் ஒருநாளும் பெண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க மாட்டார்கள். குழந்தை வளர்ப்பில் உதவுவார்கள்’’ என்கிறார் ஜேன் ஜியாங்.

இந்தப் பயிற்சியை உலகம் முழுவதும் கொண்டுவந்தால், பெண்களின் பிரச்சினைகள் காணாமல் போய்விடலாம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பாதுகாப்பான-தண்ணீர்-கிடைக்க-வழி-செய்த-தெரசாவுக்கு-வாழ்த்துகள்/article7596430.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: தாத்தாவின் தலையில் கொம்பு!

 
masala_2528196f.jpg
 

சீனாவின் கையன் கிராமத்தில் வசித்து வருகிறார் 87 வயது லியாங் ஸியுஸென். 8 ஆண்டுகளுக்கு முன்பு லியாங்கின் தலையில் மச்சம் ஒன்று தோன்ற ஆரம்பித்தது. அது பெரிதாகிக்கொண்டே வந்தது. மச்சம் தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். அது கொம்பு போலப் பெரிதாக வளர்ந்துவிட்டது. கொம்பு நமைச்சல் தருவதாக அடிக்கடி சொல்லி வந்தார் லியாங். சீன மருத்துவம் செய்தும் பலன் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே உடைந்து போனது கொம்பு.

எல்லோரும் நிம்மதியடைந்தனர். ஆனால் மீண்டும் அதே இடத்தில் கொம்பு முளைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த முறை அதன் வளர்ச்சி வேகம் அதிகரித்துவிட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்தக் கொம்பும் உடைந்து, மீண்டும் முளைத்தது. தற்போது காண்டாமிருகத்தின் கொம்பு போல 13 செ.மீ. நீளத்துக்குப் பெரிதாக வளர்ந்து லியாங்கின் நிம்மதியைக் கெடுத்து வருகிறது. மருத்துவர்கள் கொம்பைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

பரிசோதனை செய்து பார்த்ததில் தோல் கட்டி என்று தெரியவந்தது. அறுவை சிகிச்சை மூலம் கொம்பை எடுத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் குடும்பத்தினரோ லியாங்கின் வயதைக் காரணம் காட்டி மறுத்து வருகிறார்கள். தன் பிரச்சினையை யாராவது சரி செய்ய மாட்டார்களா என்று காத்திருக்கிறார் லியாங்.

ஐயோ பாவம்… வயதான காலத்தில் இப்படி ஒரு பிரச்சினையா…

கொரியாவைச் சேர்ந்த டிசைனர் ஜாங் ஊசியோக். காபி மூடியை வித்தியாசமான முறையில் உருவாக்கியிருக்கிறார். அதாவது மூடி மனித முகம் போன்று காட்சியளிக்கிறது. வாய்ப் பகுதியில் இருக்கும் துளை மூலம் காபியை உறிஞ்சிக் குடிக்கலாம். ’’மூடியில் ஓட்டை போட்டு, ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் குடிப்பது வழக்கமானது.

நான் வித்தியாசமாகச் செய்ய நினைத்தேன். மனித முகத்தில் இருந்து காபி பருகுவது எல்லோரையும் உற்சாகமடைய வைக்கும். நான் நினைத்தது போலவே ஆண்களும் பெண்களும் இந்த மூடிக்கு அதிக வரவேற்பை அளித்திருக்கின்றனர். ஒரே மாதிரியான விஷயங்கள் வாழ்க்கையைச் சலிப்படைய வைத்துவிடும். இப்படி விதவிதமாக யோசித்து, நம்மை நாமே உற்சாகம் செய்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் ஜாங் ஊசியோக்.

காபி சுவையாக இருந்தாலே உற்சாகம் வந்துவிடாதா என்ன?

பொதுவாக வயதானவர்கள் ஃபேஷன் குறித்து ஆர்வம்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஜெர்மனியைச் சேர்ந்த 70 வயது குந்தர் ஆன்லைன் ஃபேஷன் உலகில் புதிய சகாப்தம் படைத்து வருகிறார். சமீபத்தில் பெர்லின் ரயில் நிலையத்தில் குந்தர் விதவிதமாக ஆடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ‘’வயது என்பது வெறும் எண்கள்தான். ஃபேஷனுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை.

ஆரோக்கியமான உடல்நிலை, அழகான எளிமையான ஆடைகள், மகிழ்ச்சியான புன்னகை இருந்தால் போதும். உங்கள் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியும் நல்ல எண்ணங்களும் முகத்தில் பிரதிபலிக்க வேண்டும். வேறு ஒன்றும் தேவை இல்லை’’ என்கிறார் குந்தர். தனித்துவம் மிக்கவர் என்று பெர்லின் ஃபேஷன் உலகம் குந்தரைக் கொண்டாடி வருகிறது.

எந்த விஷயத்துக்கும் வயது ஒரு தடையில்லை!

அமெரிக்காவில் வசிக்கிற 25 வயது மாத்யுவும் 24 வயது கைலாவும் சுற்றுலா சென்றனர். அலையடிக்கும் பகுதியில் நின்றுகொண்டிருந்த கைலாவிடம், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கோரிக்கை வைக்க நினைத்தார் மாத்யு. கையில் இருந்த சிறிய மோதிரப் பெட்டியைத் திறந்தார். மோதிரம் உருண்டு, கடலுக்குள் சென்றுவிட்டது. அதிர்ச்சியில் உறைந்து போனார் மாத்யு. கைலாவுக்கும் ஏமாற்றமாக இருந்தது.

சட்டென்று கடலில் குதித்து மோதிரத்தைத் தேட ஆரம்பித்தார் மாத்யு. எப்படித் தேடியும் கிடைக்கவே இல்லை. அருகில் இருந்தவர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டு, தங்கள் பங்குக்குக் கடலில் குதித்து தேடினர். கைல் ப்ளுஷர் என்பவர் இரண்டு மணி நேரம் கடலுக்குள் தேடி, மோதிரத்துடன் மேலே வந்தார். எல்லோரும் கைதட்டி அவரைப் பாராட்டினர். தனியாக கோரிக்கை வைக்க நினைத்த மாத்யு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு முன்பு திருமணக் கோரிக்கை வைத்தார். கைலாவும் சம்மதிக்க, மோதிரத்தை அணிவித்தார்.

உயிரைப் பணயம் வைத்து தேடிக் கொடுத்த கைலுக்கு ஒரு பூங்கொத்து!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தாத்தாவின்-தலையில்-கொம்பு/article7593422.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: சூப்பர் பாட்டிகள்!

 
ulagam_2537636f.jpg
 

மெக்ஸிகோவில் வசிக்கிறார் ஜீசஸ் சுய் அக்வேஸ். இவரும் இவருடைய குடும்பத்தில் உள்ள 30 பேர்களும் மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் முகம் முழுவதும் அடர்த்தியான முடிகள் முளைத்திருக்கின்றன. இவர்களை எல்லோரும் ஓநாய் மனிதர்கள் என்று அழைக்கின்றனர். ‘’மரபணு குறைபாட்டால் ஏற்பட்ட இந்தப் பிரச்சினைக்கு இதுவரை மருத்துவம் கண்டுபிடிக்கப் படவில்லை. பார்ப்பவர்களுக்குச் சற்றுப் பயமாக இருக்கலாம். ஆனால் நாங்களும் மனிதர்களே. சாத்தான் வீடு என்று கோபம் கொண்ட சிலர், எங்களின் 20 செல்லப் பூனைகளைக் கொன்றுவிட்டனர். கிண்டல், கோபம், கடினமான சொற்பிரயோகம், அடிதடி என்று எங்கள் மீது ஏதோ ஒரு வன்முறை எப்பொழுதும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் எங்களால் ஒரே இடத்தில் வாழ இயலாது. எங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாது. சரியான படிப்பு இல்லாததால் நல்ல வேலையும் கிடைக்காது. பரிதாபப்பட்டு சிலர் கொடுக்கும் வேலைகளைச் செய்து எங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறோம்’’ என்கிறார் ஜீசஸ். ஓநாய் மனிதன் என்ற தலைப்பில் இவர்களைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. சர்க்கஸ் கம்பெனி மூலம் உலகம் முழுவதும் சுற்றியிருந்தாலும் எல்லா இடங்களிலும் மனிதர்கள் ஒரே மாதிரி சக மனிதர்களைப் புரிந்துகொள்ளாதவர்களாகவே இருக்கிறார்கள் என்கிறார் ஜீசஸ்.

சக மனிதர்களை மதிக்கும் நாகரிகம் எப்பொழுது எல்லோருக்கும் வரப்போகிறதோ…

கேபிஜி84 என்பது ஜப்பானிய பெண்கள் நடத்தும் இசைக்குழு. இந்தக் குழுவில் இருக்கும் 33 பெண்களும் மூதாட்டியர். 84 வயதைக் கடந்தவர்கள். 97 வயது ஹாரு யாமஷிரோதான் மிக வயதான உறுப்பினர். அனைவரும் பாடியபடி ஆடுவார்கள். இந்த இசைக்குழுவை ஜப்பானியர்கள் பெரிதும் விரும்பி வரவேற்கிறார்கள். ’’எங்கள் இசைக்குழுவை எல்லோரும் ஒரு புன்னகையுடன் வரவேற்கிறார்கள். யாரும் எங்களைக் கிண்டல் செய்வதில்லை. எங்கள் பாடல்கள் கடல், மழை, டால்பின், திமிங்கிலம் என்று இயற்கை சார்ந்த கருப்பொருளைக் கொண்டவை. 80 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இந்தக் குழுவில் அனுமதி இல்லை’’ என்கிறார் 86 வயது ஹைடெகோ கெடமோரி. பாட்டிகளின் இசைக்குழுவுக்கு நடுத்தர வயது மக்களே ரசிகர்களாக இருக்கிறார்கள். இசையை ரசிப்பதோடு, பாட்டிகளுடன் உரையாடவும், காபி அருந்தவும் ஆர்வம் காட்டுகிறார்கள். மேடையில் திரைக்குப் பின்னால் மாத்திரைகளை விழுங்குவதும், மருந்துகளைத் தேய்ப்பதுமாக இருக்கும் பாட்டிகள், திரைக்கு முன்னால் வந்துவிட்டால் அத்தனை உற்சாகமாகிவிடுகின்றனர்.

சூப்பர் பாட்டிகள்!

சீனாவில் இருக்கிறது காங்ஸி டோங் என்ற சிறிய கிராமம். இந்த மலைக் கிராமத்தில் உள்ள அத்தனைப் பேரும் குங் ஃபு கலையைக் கற்றவர்கள். மார்ஷியல் கலைகளைக் கற்று, சுயசார்புடன் வாழ்ந்து வருகிறார்கள். கிராமத்தினருக்கு முக்கியத் தொழில் விவசாயம். கால்நடைகள் வளர்ப்பு. விவசாய வேலைகள் போக மீதி நேரத்தை அனைவரும் மார்ஷியல் கலைகள் கற்பதில் செலவிடுகிறார்கள். வயது வரம்பு எதுவும் கிடையாது. குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என்று எல்லோரும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். கிராமத்தினர் அனைவரும் மார்ஷியல் கலைகளைக் கற்றுக்கொள்வதற்கு 2 காரணங்களைச் சொல்கிறார்கள் மற்றவர்கள். புலி, சிறுத்தை, பாம்பு போன்ற விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்காகக் கற்றுக்கொள்ளலாம். பழங்காலத்தில் அண்டை ஊர்களைச் சேர்ந்த மக்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்குக் கற்றுக்கொண்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் யாருக்கும் உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. 123 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மார்ஷியல் கலைகளைக் கற்றுக்கொள்வது ஆச்சரியமானது. இதில் பெண்களும் விதிவிலக்கல்ல.

உதாரண மனிதர்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சூப்பர்-பாட்டிகள்/article7621886.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கோழிக் குஞ்சு- சிக் ரன்!

 
masala_2527109f.jpg
 

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு பெரிய லாரி கோழிக் குஞ்சுகளை ஏற்றி வந்துகொண்டிருந்தது. திடீரென்று வண்டி கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்துவிட்டது. லாரியில் இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிக் குஞ்சுகள் வெளியே ஓடி வந்தன. அந்தப் பகுதியே மஞ்சள் பந்துகள் உருண்டோடி வருவது போலக் காட்சியளித்தது. அருகில் இருந்த மக்கள் பெட்டிகள், வாளிகள், பைகளில் கோழிக் குஞ்சுகளை அள்ளிச் சென்றனர். லேசான காயம் அடைந்த ஓட்டுனர், கோழிக் குஞ்சுகளைக் காப்பாற்ற வழி தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சிக் ரன்!

இங்கிலாந்தில் வசிக்கிறார் 65 வயது பிரையன் பால்ட்வின். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குணமாக்க முடியாத புற்றுநோய் என்பதால், 6 மாதங்கள் மட்டுமே பிரையன் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை நீக்கிவிட்டனர். அப்படியும் புற்றுநோய் நுரையீரல் வரை பரவிவிட்டது. உயிரோடு இருக்கக்கூடிய மீதி காலத்தை சந்தோஷமாகக் கழிக்க முடிவு செய்தார் பிரையன். தன்னுடைய சொத்தை விற்றார். தோட்டத்துடன் கூடிய சிறிய வீட்டை வாங்கினார். மீதிப் பணத்தில் ஆடம்பர சுற்றுலாவை மேற்கொள்ளத் திட்டமிட்டார்.

‘‘எனக்குச் சுற்றுலா செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் என் தொழில் காரணமாக எங்குமே செல்ல முடிந்ததில்லை. புற்றுநோய் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மீதி நாட்களையாவது என் விருப்பப்படி சந்தோஷமாகக் கழிக்க முடிவு செய்தேன். என் விருப்பத்தை மனைவி சூசனும் ஏற்றுக்கொண்டார் தொடர்ந்து மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வருகிறேன்’’ என்கிறார் பிரையன். இதுவரை 6 ஆடம்பர சுற்றுலாக்களை மேற்கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகளைக் கடந்த பின்னும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் பிரையன்!

பாசிட்டிவ் சிந்தனை காலனையே தள்ளி நிற்க வைத்துவிட்டது

அமெரிக்காவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருந்த நான்சி வார்னர், வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். பியர் மூலம் ஜாம் தயாரித்த முதல் மனிதர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். உணவு பதப்படுத்தும் வேலையைச் செய்துகொண்டிருந்தபோது, தற்செயலாக இந்தக் கண்டுபிடிப்பை நான்சி நிகழ்த்தினார். அதிலிருந்து பல முறை பியரை வைத்து ஜாம், ஜெல்லி போன்றவற்றை உருவாக்கிப் பார்த்தார். இறுதியில் வெற்றியும் பெற்றுவிட்டார். இன்று வாரத்துக்கு 3 ஆயிரம் பாட்டில்கள் ஜாமையும் ஜெல்லியையும் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறார்.

‘‘பழச்சாற்றில் இருந்து ஜாம் செய்வது போலதான் பியரிலிருந்தும் ஜாம் செய்கிறேன். பியரைக் கொதிக்க வைக்கும்போது அதில் இருக்கும் ஆல்கஹால் செயல் இழந்துவிடுகிறது. அதனால் இந்த ஜாமும் ஜெல்லியும் உடலுக்கு எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்துவதில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. நூறு வருடங்களுக்கு முன்பு வைனில் இருந்து ஜாமும் ஜெல்லியும் தயாரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். நான் பியரில் இருந்து தயாரித்திருக்கிறேன்’’ என்கிறார் 34 வயது நான்சி. 8 விதச் சுவைகளில் பியர் ஜெல்லி கிடைக்கிறது.

கலக்கறீங்க நான்சி!

அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலத்தில் டையமண்ட் ஸ்டேட் பார்க் இருக்கிறது. உலகிலேயே பொதுமக்கள் சென்று வரக்கூடிய ஒரே வைரச் சுரங்கம் இதுதான். புதையல் வேட்டையை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்க நினைப்பவர்கள் இந்தச் சுரங்கத்துக்குச் செல்லலாம். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 600 வைரக் கற்களை இங்கு வரும் பார்வையாளர்கள் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்கள்.

1906ம் ஆண்டு ஜான் ஹட்டில்ஸ்டோன் என்ற விவசாயி மூலம் இங்கே வைரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த நிலம் அரசாங்கத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. 1972ம் ஆண்டு முதல் பொதுமக்கள் வந்து செல்லும் விதமாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆயிரம் வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே வரும் குழந்தைகளும் பெரியவர்களும் வைரங்களைத் தேடும் பணியில் பல மணி நேரம் ஈடுபடுகிறார்கள். கண்டெடுத்த வைரங்களின் மதிப்புக்கு ஏற்றவாறு அவர்களுக்குச் சன்மானமும் வழங்கப்படுகிறது.

கண்டுபிடிப்பவர்களுக்கும் கொஞ்சம் வைரம் கொடுத்தால் இந்நேரம் எல்லா வைரங்களும் வெளியே வந்திருக்கும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கோழிக்-குஞ்சு-சிக்-ரன்/article7590301.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: நம்பிக்''கை'' மனிதர்!

 
 
masaka_2525322f.jpg
 

சீனாவின் சோங்க்விங் நகரில் வசிக்கிறார் 48 வயது சென் ஸிங்கின். ஒரு விபத்தின் மூலம் இரண்டு கைகளையும் இழந்துவிட்டார். ஆனாலும் தன்னுடைய குறைபாட்டை எண்ணி அவர் ஒருநாளும் மனம் உடைந்து போனதில்லை. விவசாய வேலைகளில் இருந்து அத்தனை வேலைகளையும் இரண்டு கால் பாதங்கள் மூலம் செய்து வருகிறார். சோளக் கதிர் அறுக்கிறார், சோள மணிகளைக் கால்களால் தனித்தனியே உதிர்க்கிறார், மூட்டை கட்டுகிறார். அதேபோல பாதங்களால் பாத்திரங்கள் தேய்க்கிறார், காய்கறி வெட்டுகிறார், அடுப்பு பற்ற வைத்து சமைக்கிறார். சமைத்த உணவை தன்னுடைய 91 வயது அம்மாவுக்கு ஸ்பூனை வாயில் பிடித்து, ஊட்டியும் விடுகிறார்.

‘‘அருமையான கால் பாதங்கள் இருக்கும்போது எனக்கு எதற்கு கைகள்? 7 வயதில் மின் விபத்தில் கைகளை இழந்தேன். 14 வயதில் என் சகோதரிகள் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டனர். எத்தனை காலத்துக்கு அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ முடியும்? அதனால் நானே சமைக்கவும் விவசாய வேலைகளைச் செய்யவும் கற்றுக்கொண்டேன். முதலில் சிரமமாக இருந்தது. ஆனால் இன்று கைகளால் செய்வதைப் போல எளிதாகவும் வேகமாகவும் எந்த வேலையையும் என்னால் செய்ய முடிகிறது’’ என்கிறார் சென்.

‘‘சென் போன்றவர்கள் ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் சென் எவ்வளவு அற்புதமான மனிதர்! அவரைப் பார்க்கும்போது தன்னம்பிக்கை அதிகரித்து, வாழ்க்கை மீது மதிப்பு வருகிறது’’ என்கிறார் சென்னின் நண்பர்.

நம்பிக்‘கை’யுடன் வாழ்ந்து வரும் சென்னுக்குப் பாராட்டுகள்!

ஜே.டி நெட்ஒர்க் என்ற நிறுவனம் ஆசியாவில் டிசி காமிக்ஸ் உணவகங்களை ஆரம்பித்திருக்கிறது. சூப்பர் ஹீரோ கருத்தை மையமாக வைத்து மலேசியாவில் இரண்டு உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது உணவகம் சிங்கப்பூரில் செப்டம்பர் 1-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த உணவகங்களில் டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், பேட்மேன், ஒண்டர் வுமன் போன்றவை ஒவ்வோர் உணவிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

பேட்மேன் பிஸா, ஒண்டர் வுமன் ரோல், சூப்பர்மேன் பான்கேக் என்று வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்கின்றன. தண்ணீர் பாட்டிலில் கூட சூப்பர் ஹீரோ சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல கேட் வுமன் காபி, பேட்மேன் சாக் டாஃபி, சூப்பர்மேன் மில்க்‌ஷேக் போன்றவையும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. உணவுகளில் மட்டும் அல்லாமல் உணவக விடுதியின் சுவர்களில் சூப்பர் ஹீரோக்களின் படங்கள், அலமாரிகளில் சூப்பர் ஹீரோ பொம்மைகள் என்று குழந்தைகளையும் பெரியவர்களையும் அசத்துகின்றன இந்த உணவு விடுதிகள்.

சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்!

இங்கிலாந்தின் நார்த் யார்க்‌ஷயரில் இருக்கிறது நிட் நதிக்கரை. இங்குள்ள கிணற்றில் தண்ணீர் ஊறிக்கொண்டே இருப்பதால் எப்பொழுதும் கிணற்று நீர் வெளியே வடிந்துகொண்டே இருக்கிறது. அப்படித் தண்ணீர் வழியும் இடத்தில் ஏதாவது ஒரு பொருளை வைத்தால் குறிப்பிட்ட காலத்தில் அது கல்லாக மாறிவிடும் என்கிறார்கள். இலைகள், குச்சிகள், இறந்த பறவைகள், பொம்மைகள் போன்றவற்றை தண்ணீர் வடியும் இடத்தில் ஒரு கயிற்றில் கட்டி வைத்துவிடுகிறார்கள். சிறிய பொருட்கள் 5 மாதங்களில் கல்லாக மாறிவிடுவதாகவும் பெரிய பொருட்கள் ஓராண்டுக்குள் கல்லாக மாறிவிடுவதாகவும் சொல்கிறார்கள்.

வரலாற்றாசிரியர் ஜான் லேலண்ட், இந்த நீர் 500 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ குணம் நிறைந்ததாக நம்பப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் காலப்போக்கில் அங்கு விழும் நீர் புளிப்புத் தன்மை மிக்கதாக மாறிவிட்டது என்றும் தண்ணீர் வடியும் இடத்துக்குக் கீழே இருக்கும் பொருட்கள் மெதுவாக கல்லாக மாறிவருவதாகவும் சொல்கிறார்கள். தண்ணீரைச் சோதித்த விஞ்ஞானிகள், நீரில் அதிக அளவில் கனிமங்கள் இருப்பதால், தொடர்ந்து தண்ணீரில் இருக்கும் பொருட்கள் மீது கடினமான கனிம ஓடு உருவாகிறது. அது பார்ப்பதற்கு கல்லாகத் தெரிகிறது என்கிறார்கள்.

எது எப்படியோ… மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது இந்த அதிசயக் கிணறு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நம்பிக்கை-மனிதர்/article7586126.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: வீட்டுக்குள் தேனீ வளர்ப்பு

 
 
masala_2539835f.jpg
 

தேனைச் சுவைக்கும் அளவுக்குத் தேன் கூட்டை யாரும் ரசிப்பதில்லை. ஆனால் வீட்டுக்குள்ளேயே தேனீக்களை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் அமெரிக்கர்கள். பீகோ சிஸ்டம் என்ற பெயரில் வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் தேனீக்களில் இருந்து ஏராளமான தேனைப் பெறுகிறார்கள். மீன் வளர்ப்பு போல சுவற்றில் தேனீ வளர்க்கும் கூட்டைப் பொருத்திவிடுகிறார்கள். குழாய் வழியாக வெளியில் இருந்து கூட்டுக்குள் தேனீக்கள் வந்து செல்கின்றன. வீட்டுக்குள் தேனீக்கள் சுற்றித் திரிவதில்லை.

அதனால் வீட்டில் உள்ளவர்களுக்குப் பயமில்லை. தேனீக்கள் அதிகம் பெருகிவிட்டால், இன்னொரு கூட்டையும் எளிதில் இணைத்து விடலாம். கூட்டைப் பராமரிப்பதும் கழிவுகளை அப்புறப்படுத்துவதும் எளிது. ஒவ்வொரு கூட்டில் இருந்தும் அரை கிலோ தேன் கிடைக்கும். வீட்டுக்குள் தேனீ வளர்க்கும் திட்டத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான மைக் ஸாங்கிள், ‘’ஒரு கூட்டின் விலை 30 ஆயிரம் ரூபாய் என்றாலும் தேனீ வளர்ப்பின் மூலம் சூழலுக்கும் நன்மை செய்கிறீர்கள், நீங்களே உற்பத்தி செய்த தேனையும் பெறுகிறீர்கள் என்பது எவ்வளவு நல்ல விஷயம்!’’ என்கிறார்.

சூழலுக்கு நல்லது என்றால் செலவு செய்யலாம்!

அமெரிக்காவில் வசிக்கும் 29 வயது நடாலி ஃப்ளெட்சர், மனித உடலில் ஓவியங்கள் தீட்டக்கூடியவர். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து, 200 நாட்களில் 101 மனித ஓவியங்களைத் தீட்டும் பணியைச் செய்து முடித்திருக்கிறார். சுவர், கட்டிடங்கள், தாவரங்கள், மலைகள் என்று ஏராளமான ஓவியங்களை வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். 200 நாட்களில் 30 ஆயிரம் மைல்களைக் கடந்து, 140 மனிதர்களைப் பயன்படுத்தி, இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

பார்க்கும் இடத்தில் இருக்கும் காட்சியை அப்படியே உடலிலும் வரைவதுதான் நடாலியின் சிறப்பம்சம். சட்டென்று பார்த்தால் ஓவியத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இவற்றைப் புகைப்படங்களாக எடுத்து, கண்காட்சியும் வைத்திருக்கிறார். ‘’இந்தத் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் முழுவதும் செல்ல இருக்கிறேன். அதற்கடுத்து உலக நாடுகளுக்குப் பயணமாவேன்’’ என்கிறார் நடாலி.

கலக்குங்க நடாலி!

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இயங்கி வருகிறது ஹாஸ் ஹில்டில் உணவு விடுதி. 1898-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சைவ உணவு விடுதிக்கு வயது 117. மிகப் பழமையான உணவு விடுதி என்ற கின்னஸ் சாதனையையும் பெற்றிருக்கிறது. இந்த விடுதியில் இந்திய உணவுகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. ஜெர்மனில் இருந்து வந்தவர்கள், சைவ உணவுப் பழக்கத்தைப் பரப்பும் விதத்தில் இந்த விடுதியை ஆரம்பித்திருக்கிறார்கள். ஹில்டில் குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது தலைமுறையினர் இதை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், அலுவல் ரீதியான பயணத்தின்போது இங்கே வந்து சாப்பிட்டிருக்கிறார். ‘’எங்களுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எங்கள் நிறுவனரின் மருமகள் டெல்லிக்குச் சென்று, இந்திய உணவுகளைக் கற்றுக்கொண்டு வந்தார். இந்திய, கிரேக்க, தாய், லெபனான், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய உணவுகள் இங்கே எப்பொழுதும் கிடைக்கும்’’ என்கிறார் ஹெடிகெர். சாம்பார் வடை, பாலக் பனீர், விதவிதமான சட்னிகள், சாலட்களை ருசிக்க இந்தியர்கள் படையெடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் வாழை இலை சாப்பாடும் வடஇந்திய தாலியும் கிடைக்கின்றன.

அடடா!

அமெரிக்காவின் மசசூசெட்ஸ் கடற்கரையில் 11 அடி நீளம் கொண்ட சுறா மீன் ஒன்று கரை ஒதுங்கியது. அங்கே வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சுறாவைக் காப்பாற்றி, கடலில் விடுவதற்கான வேலைகளில் இறங்கினர். தண்ணீர் இன்றி இறந்து விடக்கூடாது என்பதற்காக, வாளியில் தண்ணீரை எடுத்து வந்து சுறா மீது ஊற்றிக்கொண்டே இருந்தனர். இன்னும் சிலர் மணலில் சுரங்கம் தோண்டினர். சுரங்கத்தின் வழியே சுறாவைக் கடலில் சேர்க்க முயற்சி செய்தனர். காவல்துறையினர் சுறாவை மீட்டு, கடலில் விட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் சுறா இறந்து, கரையில் ஒதுங்கியது. ’’ஏற்கெனவே உடல் நலமின்றியோ, காயம் காரணமாகவோ சுறா கரை ஒதுங்கியிருக்கிறது. எத்தனையோ பேர் முயன்றும் பெரிய சுறாவைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது’’ என்கிறார்கள் காவலர்கள்.

அடப்பாவமே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வீட்டுக்குள்-தேனீ-வளர்ப்பு/article7628642.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கையில் காது!

 
 
masala_2524194f.jpg
 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 45 வயது கலைஞர் ஸ்டெலார்க். அவரது இடது கையில் மூன்றாவதாக ஒரு காது வளர்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு பரிசோதனை முயற்சிக்காக, இடது கையில் ஒரு காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இணைத்துக்கொண்டார். 6 மாதங்களில் அந்தக் காது, ஸ்டெலார்க் உடலுடன் இணைந்துவிட்டது. அதாவது அவரது சொந்த உறுப்புகளைப் போலவே இந்த அந்நிய உறுப்பையும் அவரது உடல் ஏற்றுக்கொண்டுவிட்டது.

‘‘எனக்கு இரண்டு காதுகளும் நன்றாகவே வேலை செய்கின்றன. மூன்றாவது காது இன்னும் கேட்கும் திறனைப் பெறவில்லை. ஆனால் காதைத் திருகினாலோ, தொட்டாலே உணர்ச்சியை உணர்ந்துகொள்கிறது. எதிர்காலத்தில் மேலும் சில பரிசோதனைகள் மூலம் மூன்றாவது காதும் கேட்கும் சக்தியைப் பெறலாம். அப்போது இந்தக் காதையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, ஏராளமான விஷயங்களைச் செய்து பார்க்க இருக்கிறேன்.

இப்போதைக்கு உடலின் எந்தப் பகுதியிலும் எந்த உறுப்பையும் வளர்க்க முடியும் என்ற உண்மை என் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார் ஸ்டெலார்க். இவருக்குச் சிறிய வயதில் இருந்தே உடலியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம். தன்னுடைய உடலில் பல இடங்களில் பரிசோதனை முயற்சிகளைச் செய்து வருகிறார். நுரையீரல், வயிறு போன்றவற்றில் கேமராக்களைப் பொருத்தியிருக்கிறார். ஸ்டெலார்க் பரிசோதனைகளுக்கு நிறையப் பேர் நிதி அளித்து வருகிறார்கள்.

இன்னொரு வாய் வளர்க்கும் முயற்சியில் மட்டும் இறங்கிடாதீங்க ப்ளீஸ்…

ப்ளோரிடாவில் வசிக்கிறார்கள் ஆன்னும் கென் ஃப்ரெடெரிக்ஸும். கடந்த 60 ஆண்டுகளாகத் தங்களுடைய திருமணநாள் அன்று, திருமண கேக்கைச் சுவைத்து வருகிறார்கள். அதாவது 60 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணத்துக்காகச் செய்யப்பட்ட ஃப்ரூட் கேக்கைப் பாதுகாத்து, ஒவ்வோர் ஆண்டும் ஒரு துண்டை எடுத்துச் சுவைத்து வருகிறார்கள். 1955ம் ஆண்டு ஆன்னின் பாட்டி 3 அடுக்குகள் கொண்ட ஃப்ரூட் கேக்கை, தானே செய்து கொடுத்தார். திருமண விருந்தில் சாப்பிட்டது போக, ஓர் அடுக்கு அப்படியே இருந்தது. அதைப் பத்திரமாக எடுத்து, ஓர் உலோக டப்பாவில் போட்டு மூடி வைத்துவிட்டனர். முதல் திருமணநாள் அன்று டப்பாவைத் திறந்து கேக்கைச் சுவைத்தபோது, அது கெட்டுப் போகாமல் அப்படியே இருந்தது. காய்ந்துவிடாமல் இருப்பதற்காக கேக் மீது சிறிது பிராந்தியை ஊற்றி, மீண்டும் டப்பாவில் போட்டு மூடிவிட்டனர். இப்படியே 60 ஆண்டுகளாகத் திருமணநாள் அன்று கேக்கைச் சுவைத்து வருகிறார்கள். இன்றும் கூட கேக் சுவை குன்றாமல் இருக் கிறது என்கிறார்கள். ஆனால் ஆன், கென் தவிர வீட்டில் யாரும் இந்தக் கேக்கைச் சுவைத்துப் பார்க்க விரும்பியதில்லை. ’’60 ஆண்டு களுக்கு முன்பு செய்யப்பட்ட ஒரு உணவுப் பொருளை இன்று சாப்பிடுவது என்பது எவ்வளவு ஆச்சரியமானது! சுவை குன்றாமல் இருப்பதோடு, உடலுக்கும் தீங்கு விளைவிக்கவில்லை’’ என்கிறார் ஆன். 85 வயது கென்னும் 81 வயது ஆன்னும் சமீபத்தில் 60வது திருமணநாளைக் கொண்டாடினர்.

‘‘எவ்வளவோ செலவு செய்து விழா கொண்டாடப்பட்டாலும் ஒரு துண்டு பழைய கேக் சாப்பிட்ட பிறகுதான் எங்களுக்குத் திருப்தியாக இருந்தது’’ என்கிறார் கென்.

ஐயோ... ஜீரணிக்க முடியாத விஷயமா இருக்கே…

ஜெர்மனியில் வசிக்கிறார் 23 வயது லியோனி முல்லர். ஒரு வாடகை வீட்டில் தங்கி, பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். ஆனால் வீட்டின் உரிமையாளர் மூலம் அளவுக்கு அதிகமான பிரச்சினைகள் வந்துகொண்டே இருந்தன. ஒருகட்டத்தில் வீட்டைக் காலி செய்தார். மோசமான அனுபவத்தால் இன்னொரு வாடகை வீட்டுக்குச் செல்ல அவருக்குத் தயக்கமாக இருந்தது. 25 ஆயிரம் ரூபாய்க்கு சீசன் ரயில் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டார். ரயில்களிலேயே வாழ ஆரம்பித்துவிட்டார். குளிப்பது, துவைப்பது, மடிக் கணினியில் வேலை செய்வது என்று அத்தனை வேலைகளையும் ரயிலிலேயே செய்துவிடுகிறார். பல்கலைக்கழகம், அவரது காதலர் வசிக்கும் இடம் என்று தேவையானபோது மட்டும் ரயிலை விட்டு இறங்கிக்கொள்கிறார். ஸ்டேஷனில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுக் கொள்கிறார்.

‘‘30 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்தாலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆனால் 25 ஆயிரம் ரூபாய் ரயில் கட்டணத்தில் நிம்மதியாக இருக்கிறேன். தூங்குவது ஒன்று மட்டுமே கொஞ்சம் சிரமமானது. மற்றபடி ரயில் என்னுடைய வீடாகவே மாறிவிட்டது. படிப்பு முடித்தவுடன் காதலர் வீட்டில் சொல்லி, திருமணம் செய்துகொண்டால் தங்கும் பிரச்சினை இருக்காது’’ என்கிறார் லியோனி.

பாவம்… எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார் லியோனி

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கையில்-காது/article7582081.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தை- கங்காரு நட்பு!

 
masala_2540867f.jpg
 

அமெரிக்காவில் வசிக்கிறார் குழந்தை எழுத்தாளர் ஜுலியா ஜேசன். அவரது 18 மாதக் குழந்தை அலியாவுக்குத் தோழனாக இருக்கிறது ஒரு கங்காரு. அலியாவும் கங்காருவும் ஒரே உணவைச் சாப்பிடுகிறார்கள், ஒன்றாகவே விளையாடுகிறார்கள். மூர்க்கமான விலங்காக கருதப்படும் கங்காரு, ஒரு குழந்தையிடம் இத்தனை அன்பு காட்டுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தருகிறது.

‘‘என்னுடைய புத்தகங்களில் விலங்குகளைத்தான் கதாபாத்திரங் களாகப் பயன்படுத்தி வருகிறேன். பூமேரூ என்ற கங்காரு என் கதைகளில் வரும். என் குழந்தை பிறந்த உடனே நிஜக் கங்காருவை அறிமுகம் செய்துவிட்டேன். குழந்தை வளர, வளர கங்காருவுக்கும் அலியாவுக்கும் நட்பு இறுக்கமானது. கங்காருவின் காது, வால், மூக்கு என்று எதைப் பிடித்து அலியா இழுத்தாலும் கங்காரு அமைதியாகவே இருக்கும். பூமேரூவுடன் அலியா இருக்கும்போது நான் அவள் குறித்து கவலைப்பட மாட்டேன்’’ என்கிறார் ஜுலியா.

ஆச்சரியமான நட்புதான்!

அமெரிக்காவின் கெண்டகி வனவிலங்குகள் பூங்காவில் வசிக்கிறது ஜெலானி கொரில்லா. பூங்காவுக்கு வந்த ஓர் இளைஞர் கொரில்லாவைப் புகைப்படங்களும் வீடியோவும் எடுத்தார். பிறகு கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த ஜெலானியிடம் ஒவ்வொரு புகைப்படத்தையும் காட்டினார். போனில் படங்களைப் பார்த்த ஜெலானி, மீண்டும் மீண்டும் படங்களைக் காட்டுமாறு சைகை செய்தது.

ஒருகட்டத்தில் கண்ணாடியில் இளைஞர் சாய்ந்துகொள்ள, அவர் தோள் மீது உரசும் விதத்தில் கண்ணாடியில் கொரில்லாவும் சாய்ந்துகொண்டு படங்களைப் பார்த்து ரசித்தது. ஒவ்வொரு படத்தையும் பார்த்த பிறகு, அடுத்த படத்துக்காக ஆவலுடன் காத்திருந்தது. மனிதர்களைப் போலவே பல விஷயங்களில் ஒத்திருக்கும் கொரில்லாவின் நடவடிக்கைகள் சுவாரசியப்படுத்துகின்றன.

கலக்கல் ஜெலானி! விநோத மனிதர்கள்!

லண்டனில் வசிக்கும் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் வில் ப்ரூகர் ஒரு வித்தியாசமான பிராஜக்டைச் செய்து முடித்திருக்கிறார். பிரிட்டனின் புகழ்பெற்ற பாப் பாடகர் டேவிட் பவ்வி. ஓராண்டு முழுவதும் டேவிட் போல வாழ்ந்திருக்கிறார் ப்ரூகர். டேவிட் சாப்பிட்ட உணவுகள், படித்த புத்தகங்கள், சுற்றுலா சென்று வந்த இடங்கள் என்று ஒவ்வொன்றையும் அப்படியே செய்து பார்த்திருக்கிறார். 74ம் ஆண்டு டேவிட் தலைமுடிக்கு ஆரஞ்சு வண்ணத்தையும் இமைகளில் நீல வண்ணத்தையும் போட்டுக்கொள்வார்.

கண்களைப் பறிக்கும் மஞ்சள் சூட் அணிந்துகொள்வார். இவற்றைச் செய்வதற்கு மட்டும் ப்ரூகர் திணறிப் போனார். ’’புகழ்பெற்ற ஒருவரைப் போல வாழ்ந்து பார்ப்பது அத்தனை எளிதானதல்ல. ஒரு ஆராய்ச்சிக்காகவே இதைச் செய்தேன். ஒரு வருடம் முழுவதும் டேவிட் போலவே உடை அணிந்து, சாப்பிட்டு வாழ்ந்தாலும் நான் டேவிட் இல்லை என்பதில் உறுதியாக இருந்தேன். என்னதான் செய்தாலும் அசலைப் போல இன்னொன்றை உருவாக்கவே முடியாது. இது படிப்புத் தொடர்பான ஆய்வுதான். மற்றபடி டேவிட் என்று பொதுமக்களை நான் ஏமாற்ற நினைக்கவில்லை’’ என்கிறார் ப்ரூகர்.

ம்... ஒருவரைப் போல வாழ்ந்து பார்த்து… அப்படி என்ன தெரிந்துகொள்கிறார்களோ…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குழந்தை-கங்காரு-நட்பு/article7632525.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சியர் கேர்ள்ஸ் மாதிரி ஆபிஸில் சியர் லீடர்ஸ்!

 
masala_2523181f.jpg
 

சீன நிறுவனம் ஒன்று தங்களுடைய ஆண் ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்வதற்கு சியர்லீடர்களைப் பணியில் அமர்த்தியிருக் கிறது. புரோகிராமிங் சியர்லீடர்கள் என்று அழைக்கப்படும் 3 பெண்கள், ஆண் ஊழியர்களிடம் உற்சாகமாக உரையாடுகிறார்கள். பிங்-பாங் விளையாடுகிறார்கள். பாடுகிறார்கள். அவர்களுக்குப் பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் ஊழியர்கள் மிகவும் உற்சாகத்துடன் வேலை செய்கி றார்கள்.

ஊழியர்கள் சோர்வாக இருந்ததை அறிந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் ஆலோசனையில் அந்த நிறுவனத்தில் சியர்லீடர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். பெண்கள் உற்சாகமாக வேலை செய்வதற்கு ஆண் சியர்லீடர்கள் உண்டா என்று அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் கேட்டனர். ‘‘பெண்களுக்கு சியர்லீடர்கள் தேவையே இல்லை. வேலை என்று வந்துவிட்டால் அளவுக்கு அதிகமாகவே உழைக்கிறார்கள்’’ என்று பதில் அளித்திருக்கிறார் மனிதவள மேம்பாட்டு அதிகாரி.

இதெல்லாம் ரொம்ப அநியாயம்… ஊழியர்களை உற்சாகப்படுத்த வேறு வழியே இல்லையா?

அமெரிக்காவில் உள்ள இண்டியானாவில் வசிக்கிறார் 38 வயது ஜெசிகா ஹயெஸ். சமீபத்தில் ஒரு தேவாலயத்தில் அவருக்குத் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் அந்தத் திருமணத்தில் மணமகனை யாரும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் ஜெசிகா திருமணம் செய்திருப்பது இயேசு கிறிஸ்துவை! இறையியல் ஆசிரியராக பிஷப் ட்வெங்கெர் பள்ளியில் பணியாற்றி வரும் ஜெசிகா, தன்னை இயேசுவுக்கு அர்ப்பணித்துவிட்டார்.

இனிமேல் ஜெசிகா யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டார். இயேசுவின் மனைவியாக மாறிவிட்டாலும் ஜெசிகா, வழக்கமான சாதாரண வாழ்க்கையைத்தான் மேற்கொண்டு வருகிறார். ‘’எத் தனையோ பேர் இயேசுவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகி றார்கள். நான் அதைச் செயல்படுத்திக் காட்டிவிட்டேன். அதனால் என் மீதி வாழ்க்கை முழுவதும் பிரார்த்தனையில் கழிக்கவே விரும்புகிறேன். வெள்ளை ஆடையும் மோதிரமும் எப்பொழுதும் என் திருமணத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கப் போகின்றன’’ என்கிறார் ஜெசிகா.

ஆண்டாள், மீராவின் வரிசையில் ஜெசிகா!

சீனாவின் சோங்க்விங் பகுதி காவல் நிலையத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தன்னுடைய காதலி தற்கொலை செய்துகொள்வதாகத் தகவல் அனுப்பியிருக்கிறார். உடனே இந்த முகவரிக்குச் சென்று அவரைக் காப்பாற்றும்படி ஒருவர் கேட்டுக்கொண் டார். காவலர்கள் அந்த முகவரிக்குச் சென்றனர். 10 நிமிடங்கள் தட்டிப் பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே ஒரு பெண் ஆவேசமாக நின்றுகொண்டிருந்தார்.

பூட்டை உடைத்து எப்படி வீட்டுக்குள் நுழையலாம் என்று கத்தினார். தற்கொலையைத் தடுப்பதற்காகவே பூட்டை உடைத்ததாகக் காவலர்கள் சொன்னார்கள். தகவல் அறிந்து வீட்டின் உரிமையாளர் அங்கு வந்தார். உடைத்த கதவைச் சரி செய்து கொடுக்கும்படி அந்தப் பெண்ணைக் கேட்டுக்கொண்டார். ‘‘பூட்டை உடைத்தவர்கள்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். நான் விளையாட்டுக்கு என் காதலரிடம் தற்கொலை செய்வதாகச் சொன்னேன். அதை உண்மை என்று நம்பி வந்து, பூட்டை உடைத்த காவலர்கள்தான் இதற்குப் பொறுப்பு’’ என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண். காவலர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

இப்படி எல்லாமா விளையாடுவார்கள்?

இங்கிலாந்தில் வசிக்கும் பெர்தா எனும் முயலுக்கு மோசமான விபத்தின் மூலம் இடுப்பு எலும்பு உடைந்துவிட்டது. முயலால் நகரக்கூட முடியவில்லை. உரிமையாளர் மெலானி ஜேம்ஸ் பெர்தாவின் பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்தார். ஒரு சிறப்புச் சக்கர நாற்காலியை உருவாக்கினார். அதை பெர்தாவின் உடலோடு சேர்த்துக் கட்டினார்.

இப்பொழுது பெர்தா எளிதாக நகர்ந்து செல்ல முடிகிறது. ’’நான்கு ஆண்டுகளாக பெர்தாவை வளர்த்து வருகிறேன். இடுப்பு எலும்பு உடைந்தபோது நான் மிகவும் துன்புற்றேன். நாய்களுக்குச் சக்கர நாற்காலி கொடுக்கும் செய்திகளைக் கேள்விப்பட்டு, பெர்தாவுக்கும் ஏற்பாடு செய்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெர்தா, இப்போது தானே சுதந்திரமாக எங்கும் சென்று வருவது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் மெலானி ஜேம்ஸ்.

பெர்தா சார்பாக மெலானிக்கு நன்றி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சியர்-கேர்ள்ஸ்-மாதிரி-ஆபிஸில்-சியர்-லீடர்ஸ்/article7578153.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாயின் ஒயின் சுமை!

 
masala_2542036f.jpg
 

அமெரிக்காவின் தென் கரோலினாவைச் சேர்ந்த நேட் குக், ஈவ் என்ற நாயை வளர்த்து வருகிறார். நாயின் தலையில் கண்ணாடிக் கோப்பையை வைத்து, ஒயினை ஊற்றுகிறார். நாய் கோப்பையைச் சுமந்துகொண்டு, சமாளித்தபடி நிற்கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு கோப்பையை எடுத்துவிட்டு, ஈவ்வைப் பாராட்டும் விதத்தில் தட்டிக் கொடுக்கிறார். மனிதர்களைப் போல நாயும் தலைச் சுமையைச் சமாளிக்கிறது!

செல்லப்பிராணியை என்னவெல்லாம் செய்ய வைக்கிறார்கள்!

இங்கிலாந்தில் வசிக்கும் க்ளார்க் குடும்பத்தில் 6 சகோதரர்களும் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரார்கள். இவர்களில் 5 சகோதரர்கள் 90 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டு முசோலினியின் மகள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இன்னொருவர் இந்தியாவில் உள்ள மகாராஜா ஒருவரின் விருந்தினராக வந்திருக்கிறார், வாடிகனில் போப்பைச் சந்திக்கும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது என்று சுவாரசியமாகத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

‘’போருக்குச் செல்லும்போது வழியனுப்பிய எங்கள் அம்மா, 6 பேரும் போவது போல பத்திரமாகத் திரும்பி வரவேண்டும் என்று வாழ்த்தினார். அம்மாவின் எண்ணப்படி நாங்கள் ஜெர்மனி, இத்தாலி, பர்மா எல்லாம் சுற்றிவிட்டுப் பத்திரமாகத் தாய்நாடு திரும்பினோம். இது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுடன் இருந்த எத்தனையோ லட்சம் வீரர்கள் மடிந்து போய்விட்டனர். எங்களில் ஒருவன் 82ம் ஆண்டு இறந்துவிட்டான். நாங்கள் எஞ்சியிருக்கிறோம்’’ என்கிறார் டோனி. ஹெர்பர்ட் 99, டாம் 97, பீட்டர் 95, பால் 92, டோனிக்கு 90 வயது. 10 குழந்தைகளில் ஜான் க்ளார்க் காய்ச்சலால் 55 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 3 சகோதரிகளில் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள்!

இங்கிலாந்தின் லிவர்பூலில் ‘ஜங்க் ஃபுட் கஃபே’ என்ற உணவு விடுதியை நடத்தி வருகிறார்கள் நடாலி க்ரியன், கப்பி ஹோல்ம்ஸ் என்ற பெண்கள். இந்த உணவு விடுதியில் கிடைக்கும் உணவுகள் அனைத்தும் வீணான பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை. ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கின்றன.

‘‘உலகில் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. அதே நேரம் 4 நொடிகளுக்கு ஒருவர் பசியால் மரணம் அடைகிறார். இது எவ்வளவு மோசமான விஷயம்? வீணாகும் உணவுப் பொருட்களுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறோம். மளிகைக் கடைகள், பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்களில் வீணாகும் பொருட்களை வாங்கிக்கொள்கிறோம். அவற்றைக் கொண்டு சுவையான உணவுகளைத் தயாரிக்கிறோம். இங்கு வரும் ஏழைகள் சாப்பிட்டுவிட்டு, முடிந்ததைக் கொடுத்துவிட்டுச் செல்லலாம்’’ என்கிறார் நடாலி.

தற்போது வார இறுதிகளில் மட்டும் இயங்கி வருகிறது இந்த விடுதி. நிறையப் பேர் இவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு நன்கொடை அளிக்க முன்வருகிறார்கள். யாரிடமும் பணமாகப் பெற்றுக்கொள்வதில்லை. உணவுப் பொருட்களாக மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள். இந்த விடுதியில் இவர்கள் இருவர் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அற்புதமான காரியங்களைச் செய்யும் தோழிகளுக்குப் பாராட்டுகள்!

சீனாவின் ஸியான் பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளியில், கட்டணமாகக் கொடுக்கப்படும் பணத்தில் குழந்தைகளின் பெயர்களை எழுதித் தரும்படிக் கட்டாயப்படுத்துகிறது நிர்வாகம். கள்ள நோட்டு அதிகம் புழங்குவதால், பள்ளி ஊழியர்களால் அவற்றைக் கண்டுபிடிக்க இயலவில்லை. என்னென்னவோ செய்து பார்த்த பள்ளி நிர்வாகம், இறுதியில் குழந்தைகளின் பெயர்களைப் பணத்தில் எழுதித் தரும்படிக் கேட்டுக்கொண்டது.

தங்கள் நேர்மையைப் பள்ளி நிர்வாகம் சந்தேகிக்கிறது என்று பெற்றோர் கொதிக்கிறார்கள். பள்ளி நிர்வாகமோ, தங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிவிட்டது. சில பெற்றோர் தாளின் ஓரத்தில் பென்சிலால் பெயர்களை எழுதிக் கொடுத்து வருகிறார்கள். குழந்தைகளிடம் இருந்து ஆசிரியர்களே பணத்தை வாங்கி, பரிசோதித்து, நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் ஆசிரியர்களும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

பணத்தில் எழுதுவது குற்றமில்லையா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாயின்-ஒயின்-சுமை/article7636242.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: 90 வயது ஓவியர்!

 
masala_2543730f.jpg
 

ரஷ்யாவில் வசிக்கிறார் 90 வயது வலெரி கரமோவ். பள்ளிகளில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்த கரமோவ், ஓவியம் தீட்டுவதில் இருந்து ஓய்வு பெறவில்லை. பள்ளியில் காவலராகப் பணிபுரிந்து வரும் கரமோவ், கோடை விடுமுறையில் பள்ளிச் சுவர்கள் முழுவதும் ஓவியங்களைத் தீட்டி விடுகிறார். ‘‘ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகளுக்குப் புதிய அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பழைய ஓவியங்களை அழித்து புதிய ஓவியங்கள் தீட்டுகிறேன். என் ஓவியங்களை நின்று ரசிக்காத குழந்தைகளே கிடையாது’’ என்கிறார் கரமோவ். பள்ளியின் 3 தளங்களிலும் 3 விதமான ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார். முதல் தளம் ‘இயற்கைப் பாதுகாப்பு’ என்ற பொருளில் காடு, மலை, விலங்குகள், பறவைகள் என்று அட்டகாசமாகத் தீட்டப்பட்டிருக்கின்றன.

இரண் டாவது தளம் ‘பூமி பாதுகாப்பு’. ஆறுகள், மலைகள், கடல்கள், காடுகள், சமவெளிகள் என்று இருக்கின்றன. மூன்றாவது தளத்தில் மனிதர்கள் உருவாக்கிய புகழ்பெற்ற கட்டிடங்கள். பிரமிடு, சீனப் பெருஞ்சுவர், தாஜ் மஹால் போன்றவை இடம்பெற்றுள்ளன. சுவர்களில் தூரிகை வைக்கும் வரை, தான் என்ன வரைய வேண்டும், எப்படி வரைய வேண்டும் என்று திட்டமிட்டுக்கொள்வதில்லை.

தூரிகையைப் பிடித்தால் போதும், அதுவே வரைந்துகொள்கிறது என்கிறார் கரமோவ். ‘‘இன்றைய குழந்தைகளுக்கு அவசியமாகத் தெரிந்திருக்க வேண்டியவை இயற்கையும் கலைகளும்தான். எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் போதும், உலகம் நல்ல நிலையில் இருக்கும்’’ என்கிறார்.

ஓவியங்கள் மட்டுமல்ல, உங்க சிந்தனையும் அழகு கரமோவ்!

அமெரிக்காவில் வசிக்கிறார் ஷோனா சைபாரி. நான்கு குழந்தைகளின் தாயான ஷோனாவுக்கு நாய்க் குட்டிகள் என்றால் மிகவும் விருப்பம். பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, பணம் கொடுத்து நாய்க் குட்டிகளை வாங்கி வருகிறார். குட்டிகள் பெரிதாகும் வரை அவ்வளவு அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக்கொள்கிறார். நன்றாக வளர்ந்ததும் நாய்க் காப்பகத்தில் நாய்களை விட்டுவிடுகிறார். மீண்டும் நாய்க் குட்டிகளைத் தேடிக் கிளம்புகிறார். ‘‘ரொம்ப விஷமம் செய்கிறது. குப்பையைக் கிளறுகிறது. அடுத்த நாய்களிடம் வம்பு செய்கிறது’’ என்று ஒவ்வொரு நாய்க்கும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி, காப்பகத்தில் விடுகிறார் ஷோனா. இவரின் செய்கையை விலங்குகள் நல ஆர்வலர்கள் மட்டுமின்றி, குடும்பத்தினரும் எதிர்க்கிறார்கள்.

‘‘நாங்கள் குறும்பு செய்தால் எங்களையும் காப்பகத்தில் விட்டுவிடுவீர்களா?’’ என்று கேட்கிறார் மகள். கணவரோ இனிமேல் ஒரு நாய்க்குட்டி உள்ளே வந்தாலோ, ஒரு நாய் வெளியே போனாலோ விவாகரத்துதான் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் ஷோனா தன் செயலை வழக்கம் போலச் செய்து வருகிறார். அதற்குக் காரணமும் இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வளர்த்த இரண்டு நாய்கள் இறந்து போய்விட்டன. அதிலிருந்து அவரால் மீண்டு வர வெகு காலமானது. அதனால் ஆசை தீர குட்டி நாய்களை எடுத்து வளர்க்கிறார். அந்த நாய்களுக்கு ஏதாவது நடப்பதற்குள் காப்பகத்தில் விட்டுவிடுகிறார். ஆனால், ‘‘குட்டி நாய்கள்தான் அழகானவை. ரசிக்க வைக்கக்கூடியவை. நாய்கள் மனிதர்களுக்குச் சிறந்த தோழர்கள். என்னால் நாய்கள் இல்லாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது’’ என்று சொல்லிக்கொள்கிறார் ஷோனா.

மனித மனம் விசித்திரமானது…

தென்கொரியாவின் தலைநகரில் இருக்கிறது பூப் கஃபே. வெளியில் பார்ப்பதற்குச் சாதாரண கஃபே போலத் தெரிகிறது, ஆனால் உள்ளே ‘கழிவறை’ என்ற பொருளில் ஒவ்வொரு விஷயமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காபி, தேநீர் குவளைகள் கழிவறை போன்று செய்யப்பட்டுள்ளன. விடுதியின் சுவர், திரைச்சீலைகள், மேஜை விரிப்பு, தலையணை என்று எங்கும் மனிதக் கழிவு வடிவங்கள் காணப்படுகின்றன.

சாப்பிடும் ரொட்டி கூட இந்த வடிவத்தில்தான் கிடைக்கிறது. ‘‘நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவின் உருவங்களில் உணவுகளைக் கொடுப்பது எந்தவிதத்திலும் மோசமான விஷயம் இல்லை. நுழைந்ததும் முகம் சுளிப்பவர்கள் கூட எங்கள் உணவுகளைச் சுவைத்துப் பார்த்த பிறகு, வாடிக்கையாளர்களாக மாறிவிடுகின்றனர். எந்த வடிவத்தில் இருந்தாலும் உணவு உணவுதான். அதைச் சாப்பிடுவதில் என்ன தயக்கம்? இதைப் புரிந்துகொண்டவர்கள் இங்கே வந்தால் போதும்’’ என்கிறார் உரிமையாளர்.

என்ன சொன்னாலும் கொஞ்சம் ஒருமாதிரியாத்தான் இருக்கு…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-90-வயது-ஓவியர்/article7640869.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஓவியம்!

 
 
masala_2545053f.jpg
 

உலகப் புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கா, நெதர்லாந்தில் உள்ள ஜுன்டெர்ட் நகரில் பிறந்தார். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் இங்கே பூக்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வான் கா இறந்து 125வது ஆண்டு என்பதால், அவரைச் சிறப்பிக்கும் விதத்தில் திருவிழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள். இதில் 50 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர். வான் கா உருவமும் அவர் வரைந்த ஓவியங்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வோர் அலங்காரமும் 10 மீட்டர் உயரமும் 20 மீட்டர் அகலமும் கொண்டது. 50 வகையைச் சேர்ந்த 6 லட்சம் டெய்லியா பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகள் பார்வையாளர்களைக் கொள்ளைகொண்டன.

திறமைக்கு மரியாதை!

அமெரிக்க விஞ்ஞானி டேவ் விட்லாக், 12 ஆண்டுகளாகக் குளிக்காமல் இருப்பதாகச் சொல்கிறார். குளிப்பதற்குப் பதிலாக, அவரே கண்டுபிடித்த நன்மை செய்யும் பாக்டீரியா ஸ்ப்ரேயைப் பயன்படுத்தி வருகிறார். ‘‘தினமும் குளிக்க வேண்டும் என்று இதுவரை எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லை. தினமும் சோப், ஷாம்பூ போட்டுக் குளிக்கும்போது உடலில் இயற்கையாக இருக்கும் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்களைச் சிதைத்துவிடுகின்றன. நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் தோலில் இருந்து சுரக்கும் வியர்வை, எண்ணெய் போன்றவற்றைத் தின்று, நம் உடலைச் சுத்தப்படுத்தி விடுகின்றன.

யூரியாவையும் அமோனியாவையும் வியர்வையில் இருந்து எடுத்துக்கொண்டு, நைட்ரிக் ஆக்ஸைடை திருப்பித் தருகின்றன நன்மை செய்யும் பாக்டீரியாக்கள். நைட்ரிக் ஆக்ஸைட் ரத்த நாளங்களுக்குள் சென்று ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது’’ என்கிறார் டேவ் விட்லாக். மதர் டர்ட் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் ஸ்ப்ரே, தண்ணீரைப் போன்று இருக்கிறது. தினமும் குளிக்காமல் இருவேளை இந்த ஸ்ப்ரேயை உடல் முழுவதும் போட்டுக்கொள்ள வேண்டும். மதர் டர்ட் ஸ்ப்ரேயின் விலை 6,600 ரூபாய்.

தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரிக்கும் இடங்களில் உங்க கண்டுபிடிப்பு பயன்படலாம்!

நாசாவைச் சேர்ந்த பொறியியலாளர் தாமஸ் சைவைட், இறந்தவர்களின் அஸ்தியை சந்திரனில் கொண்டு வைப்பதற்கு ‘எலிசியம்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். ‘‘எல்லோருக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. சொர்க்கத்துக்கு என்னால் வழிகாட்ட இயலாது என்பதால், சந்திரனுக்காவது அஸ்தியைக் கொண்டு செல்லலாம் என்று இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறேன். சந்திரனை விரும்பாதவர்களே உலகில் இல்லை.

அந்தச் சந்திரனில் சாம்பலைத் தூவுவது மூலம் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற இயலும் என்று நினைக்கிறேன். அதற்காக விண்வெளி நிறுவனமான அஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜியுடன் இணைந்து இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறேன்’’ என்கிறார் தாமஸ். 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அஸ்தியைப் பெற்றுக்கொள்ளும் பணி ஆரம்பித்திருக்கிறது. அஸ்திகள் சேகரிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு சந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கின்றன.

மக்களின் விருப்பத்தை இப்படி எல்லாமா பயன்படுத்துறது தாமஸ்?

சீனாவின் சோங்க்விங் பகுதியில் வசிக்கிறார் யுவான் டைபிங். 30 வயது இளைஞர், 80 வயது முதியவர் போலத் தோற்றம் அளிக்கிறார். மரபணுக் குறைபாடால் இந்த முதுமை ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். யுவான் பார்க்காத வைத்தியம் இல்லை. ஆனால் எந்த மருந்துக்கும் இவரது நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் முதுமை அதிகரித்தபடியே இருக்கிறது. 20 வயது வரை இயல்பான வாழ்க்கை வந்து வந்தார் யுவான். திடீரென்று அவரது கைகளிலும் கால்களிலும் சுருக்கங்கள் விழ ஆரம்பித்தன.

பிறகு முகத்திலும் முதுமை வர ஆரம்பித்துவிட்டது. இந்த முதுமையால் அவரது அடையாள அட்டையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. யுவானும் அவர் மனைவியும் வெளியே சென்றால், முதியவரை ஏன் திருமணம் செய்துகொண்டாய் என்று எல்லோரும் கேட்கிறார்கள். யுவானின் தம்பிக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தாமதிக்காமல் மருத்துவரை நாடியதால், அவரது முதுமை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதே ஊரில் மேலும் இருவர் முதுமை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஐயோ… பாவமே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பூக்களால்-அலங்கரிக்கப்பட்ட-ஓவியம்/article7644827.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தண்ணீருக்கே தண்ணி காட்டிய பாட்டில்!

 
bottle_2521113f.jpg
 

பிரிட்டனின் கடல்வாழ் உயிரியல் கூட்டமைப்பை சேர்ந்த விஞ்ஞானி ஜார்ஜ் பிட்டர் என்பவர் கடலின் நீரோட்டத்தை அறிந்து கொள்வதற்காக 1904 முதல் 1906 வரை சுமார் ஆயிரம் பாட்டில்களை வடக்கு கடல் பகுதியில் வீசினார். அந்த பாட்டில்களில் ஒரு துண்டு பிரதியை எழுதிவைத்தார். அதில், பாட்டிலை ஒப்படைத்தால் பணப்பரிசு வழங்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. சில மாதங்களில் பெரும்பான்மையான பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாட்டில்களில் ஒன்றை ஜெர்மனியின் அம்ரூம் தீவுப் பகுதியில் சுற்றுலா பயணி ஒருவர் அண்மையில் கண்டுபிடித்தார். சுமார் 108 ஆண்டுகள் கடலில் மிதந்த அந்த பாட்டில் இப்போதுதான் கரை ஒதுங்கியுள்ளது. இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது.

தண்ணீருக்கே தண்ணி காட்டிய பாட்டில்!

சீனாவின் கான்சு மாகாணம் லிசிபா கிராமத்தை சேர்ந்தவர் ஞான் குவான்சி (68). சம்பவத்தன்று ஒரு பெரிய பாண்டா கரடி கிராமத்துக்குள் புகுந்துவிட்டது. சீனாவில் பாண்டா கரடி பாதுகாக்கப்பட்ட விலங்கு என்பதால் அதனை தாக்கினோலோ அல்லது கொன்றாலோ கடும் தண்டனை விதிக்கப்படும். எனவே அதனை மீண்டும் காட்டுக்குள் விரட்ட குவான்சி முயற்சித்தார். இதனால் கோபமடைந்த பாண்டா, அவரை அடித்து உதைத்தது. எனினும் விடாமல் போராடி அதனை மீண்டும் காட்டுக்குள் அனுப்பினார் குவான்சி. பாண்டா தாக்கியதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அந்த மாகாண வனத்துறை, தேசிய இயற்கை பாதுகாப்பு ஆணையத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால்தான் பாண்டா கரடி கிராமத்துக்குள் புகுந்து குவான்சியை தாக்கியது என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வனத்துறை மற்றும் தேசிய இயற்கை பாதுகாப்பு ஆணையம் சேர்ந்து குவான்சிக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

பாண்டா அடித்ததில் அதிருஷ்டம் அடித்திருக்கிறது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தண்ணீருக்கே-தண்ணி-காட்டிய-பாட்டில்/article7571774.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நவீனன்...நிறைய புதுப்,புது விடயங்களை இணைக்கிறீர்கள்...நேரம் கிடைக்கும் போது வாசிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஓநாயுடன் ஓர் இரவு!

 
 
massla_2519949f.jpg
 

நார்வேயில் உள்ள போலார் வனவிலங்கு பூங்காவில் ஓநாய்களுடன் மனிதர்களைப் பழக அனுமதிக்கிறார்கள். இந்தப் பூங்காவில் நரி, பனிமான், கரடி போன்ற விலங்குகள் இருந்தாலும் ஓநாய்கள்தான் பெரிதும் கவர்கின்றன. ஓநாய்கள் மனிதர்களைக் கண்டுதான் அஞ்சுகின்றன. மனிதர்கள் ஓநாய்களைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை. பழக ஆரம்பித்து விட்டால் ஒரு நாயைப் போல அத்தனை அன்பைக் காட்டக்கூடியவை ஓநாய்கள் என்கிறார்கள் பூங்காவின் ஊழியர்கள்.

1 மணி நேரம் முதல் ஓர் இரவு வரை ஓநாய்களுடன் தங்குவதற்கு இங்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஓநாய் பூங்காவுக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே அவை அன்பைக் காட்ட ஆரம்பித்து விடுகின்றன. முகத்தோடு முகம் வைத்து உரசுகின்றன. விளையாடுகின்றன. 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை.

ஓநாய்களை பயமுறுத்தக்கூடாது, தீங்கு செய்யக்கூடாது, ஏதாவது தவறாகச் செய்து விட்டால் உடனே ஓநாய்களின் கவனத்தை வேறுவிதத்தில் திருப்ப வேண்டும் போன்ற விதிமுறைகள் இருக்கின்றன. பனிப்பிரதேசத்தில் நிலவு வெளிச்சத்தில் ஓநாய்களுடன் இரவு தங்குவது மிகவும் சுவாரசியமானது என்கிறார்கள். பூங்கா ஊழியர்களும் அருகில் இருப்பார்கள்.

பழகினால் விலங்குகளும் அன்பாகத்தான் இருக்குமோ…

சீனாவில் இயங்கி வருகிறது சிறுநீர் சிகிச்சை அமைப்பு. இதில் 1000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தினமும் அவரவர் சிறுநீரை ஒரு தம்ளரில் பிடித்து, குடித்து வருகிறார்கள். சீன சுகாதாரத்துறை அமைச்சகம் இதை அங்கீகரித்திருக்கிறது. தினமும் சிறுநீர் பருகுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. புற்றுநோய் கூட குணமாகிறது என்கிறார்கள். 79 வயது பாவோ யாஃபு இந்த அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவரது தந்தை நோயால் துன்புற்று வந்தார். அவர் சிறுநீர் குடிக்க ஆரம்பித்த பிறகு நோயிலிருந்து மீண்டுவிட்டார். அதிலிருந்து பாவோவும் சிறுநீர் குடிக்க ஆரம்பித்துவிட்டார்.

‘‘முதல் முறை சிறுநீர் குடிப்பது கடினமான செயல்தான். ஆனால் ஒருமுறை குடித்துவிட்டால் பழகிவிடும். சில சீன மருந்துகளை விட சிறுநீர் சுவையானது. ஆரம்பத்தில் 100 மி.லி. தான் குடித்தேன். இன்று 300 மி.லி. சாப்பிடுகிறேன். குடிக்க ஆரம்பித்த ஆறே மாதங்களில் என் வழுக்கைத் தலையில் முடிகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. கடந்த 22 வருடங்களில் ஒருமுறை கூட ஜலதோஷம் பிடித்ததில்லை. என் பார்வை சக்தி அதிகரித்திருக்கிறது’’ என்கிறார் பாவோ. மருத்துவர்கள் சிறுநீர் குடிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

உடலுக்குத் தேவை இல்லாத கழிவுகள்தான் சிறுநீர் மூலம் வெளியேறு கின்றன. கழிவுகளை மீண்டும் குடுப்பதால் எப்படி ஆரோக்கியம் திரும்பும் என்று கேட்கிறார்கள். ஆனால் குடிப்பவர்களோ கை உடைந்தபோது தொடர்ந்து சிறுநீர் ஊற்றி வந்ததில், எலும்பு தானாகச் சேர்ந்துவிட்டது, தைராய்டு பிரச்சினை சரியாகிறது என்று சொல்லி வருகிறார்கள். பாவோ ஆண்டுக் கணக்கில் சிறுநீரைச் சேமித்து வருகிறார். பரிசோதனைகள் செய்கிறார். பழைய சிறுநீருக்குக் கூடுதல் சக்தி இருக்கிறது. அதன் மூலமே தினமும் முகம், கண்கள், காதுகளைச் சுத்தம் செய்வதாகச் சொல்கிறார். சிறுநீர் குடிப்பதால் 120 ஆண்டுகள் வாழக்கூடிய சாத்தியமும் இருக்கிறது என்கிறார்.

ஐயோ… என்ன சொல்றதுன்னே தெரியலையே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஓநாயுடன்-ஓர்-இரவு/article7568893.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அடடா! அட்டகாசம்!

 
fish_2546133f.jpg
 

ஜப்பானியர்களின் பழங்கால ஓவியங்களில் ஒன்று ஜியோடகு. மீன்களில் வண்ணங்களைத் தீட்டி, தாளில் பதிக்கும் கலை இது. மீனை எடுத்து, நன்றாகச் சுத்தம் செய்கிறார்கள். பிறகு தண்ணீரைத் துடைத்துவிட்டு, மீனின் மீது வண்ணங்களைத் தீட்டுகிறார்கள். ஆங்காங்கே பஞ்சு மூலம் மீனின் உடலில் புள்ளிகளையும் கோடுகளையும் வரைகிறார்கள். வண்ணம் காய்வதற்குள் தாளில் மீனைப் பதிக்கிறார்கள். அழகான மீன் ஓவியம் உருவாகிவிடுகிறது. மீன் ஓவியங்கள் ஜப்பானின் ஈடோ ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்று விளங்கின. மன்னரின் அரண்மனை முழுவதும் மீன் ஓவியங்களே இடம்பெற்று இருந்தன. இன்று இரண்டு விதமாக மீன் ஓவியங்கள் உருவாக்கப்படுகின்றன. நேரடியாக மீனின் உடலில் வண்ணங்களைத் தீட்டி, தாளில் பதிப்பிக்கும் முறை ஒன்று. மீன் மீது தாளைச் சுற்றி, பஞ்சு மூலம் வண்ணத்தைத் தீட்டும் முறை இன்னொன்று. ஆபத்து இல்லாத வண்ணங்களைத் தீட்டுவதால், ஓவியங்கள் வரைந்து முடிந்த பிறகு மீன்களைச் சுத்தம் செய்து விற்பனைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

அடடா! அட்டகாசம்!

ஹவாயைச் சேர்ந்த தம்பதியர் டோரினா ரோசின் - மைகா சனீகல். டால்பின்களுடன் நெருக்கமாக இருப்பதால் டால்பின் மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். டோரினாவின் பிரசவத்தைக் கூட டால்பின்களின் உதவியோடு கடலில் பிரசவிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். தண்ணீரில் பிரசவம் நடைபெறுவது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய விஷயம். ஆனால் டால்பின்களுக்கு நடுவே பிரசவிப்பது வித்தியாசமானது என்கிறார்கள் டோரினாவும் மைகாவும். ’’ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை எங்களுக்கு உண்டு. டால்பின்களுக்கு எதையும் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. அதனால் என்னுடைய பிரசவம் டால்பின்களுடன் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். குழந்தை பிறந்த உடனே டால்பின்களிடம் பேசும்’’ என்கிறார் டோரினா. டால்பின்கள் மனிதர்களிடம் அன்பாகப் பழகக்கூடியவை என்று ஒரு கருத்து இருக்கிறது. மனிதர்கள் வளர்க்கக்கூடிய இடங்களில் இருக்கும் டால்பின்கள் வேறு மாதிரியானவை; கடலுக்குள் இருக்கும் டால்பின்கள் வேறு மாதிரியானவை. ஒரு சில நிமிடங்கள் அன்பாக இருக்கும் டால்பின், எந்த நேரம் வேண்டுமானாலும் மூர்க்கமாக மாறலாம். அதனால் டோரினாவின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. ஆண் டால்பின்கள் பெண் டால்பின்களைக் கடத்திச் செல்லக்கூடியவை. சிறிய பார்பாய்ஸ், சுறா போன்றவற்றைக் கொல்லும் சக்தியும் இவற்றுக்கு உண்டு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்

புதுமை செய்யும் ஆர்வத்தில் ஆபத்தைத் தேடிக்கொள்ளக்கூடாது…

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் இருக்கிறது ஷிஷன் ஷுபென் ஆரம்பப் பள்ளி. கடந்த சில நாட்களாக செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. பள்ளியில் தியானம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிரின்சிபல் உ. இதைப் பல பெற்றோர்கள் எதிர்த்து வருகிறார்கள். சிலர் ஆதரித்து வருகிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் தன் திட்டத்தை வெற்றிகரமாக்குவதில் கவனமாக இருக்கிறார் உ. குழந்தைகள் தினமும் ஒரு பழைய செய்தித்தாளுடன் வர வேண்டும். மதியம் அரை மணி நேரம் தாளை கீழே விரித்து, அதன் மீது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். ஆனால் தியானம் செய்வதற்குப் பதில் குழந்தைகள் தூக்கத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். ‘’குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே தியானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கே இதைக் கொண்டு வந்தேன். ஆனால் குழந்தைகள் தூங்கி விடுகின்றனர். அதனால் என்ன? குழந்தைகளுக்கு வேண்டியது ஓய்வு தானே? அது எப்படிக் கிடைத்தால் என்ன? தியானத்தை நான் கட்டாயப்படுத்தவும் இல்லை’’ என்கிறார் உ. பள்ளியில் தியானம் செய்யக்கூடிய அளவுக்கு தாராளமான இடமோ, காற்றோட்டமோ இல்லை. அதை முதலில் கொண்டு வரவேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். தியான வகுப்பை குழந்தைகள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர் என்பதுதான் முக்கியமான விஷயம்.

எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு முன் குழந்தைகளின் விருப்பத்தைக் கேட்டிருக்கலாமே...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அடடா-அட்டகாசம்/article7648152.ece

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி நவீனன்...நிறைய புதுப்,புது விடயங்களை இணைக்கிறீர்கள்...நேரம் கிடைக்கும் போது வாசிக்க வேண்டும்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

இணைப்பு நன்றி சகோ நவீனன்.. தொடர்ந்து இணையுங்கள் :)

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஆட்டுக்கால் மனிதன்!

 
masala_2518596f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கிறார் தொழில்நுட்ப வல்லுனர் தாமஸ் த்வைடெஸ். தன்னுடைய தொழில்நுட்பத்தை வைத்து, விடுமுறையை வித்தியாசமாகக் கழிக்க முடிவு செய்தார். ஆட்டின் கால்களைப் போன்று நான்கு செயற்கைக் கால்களையும் தலைக் கவசத்தையும் உருவாக்கிக்கொண்டார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்குச் சென்றார். கால்களையும் தலைக் கவசத்தையும் மாட்டிக்கொண்டார். ஆடுகளுடன் ஆடாக வலம் வந்தார். ஒருகட்டத்தில் ஆடுகள் மேய்வதை நிறுத்திவிட்டு, தாமஸை உற்று நோக்க ஆரம்பித்துவிட்டன.

மலைகளில் ஏறுவதைக் காட்டிலும் ஆடாக இருந்தபோது தலையைக் குனிந்துகொண்டு இறங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. பனிப்பொழியும் ஆல்ப்ஸ் மலையில் ஆடுகளோடு இரவில் தங்கியது போன்ற துயரம் உலகில் வேறு ஒன்றும் இல்லை. அதற்காக நெருப்பைக் கொளுத்தி, குளிரைச் சமாளித்ததாகச் சொல்கிறார். ’’மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மூலம் அவனது ஆசையை எவ்வளவு தூரம் நிறைவேற்ற முடியும் என்பதைப் பார்ப்பதற்காகவே இந்த விசித்திரத்தைச் செய்து பார்த்தேன்’’ என்கிறார் தாமஸ்.

இப்படி எல்லாமா ஆசைப்படுவாங்க!

அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார் டென்வர் சலூனின் உரிமையாளர் கெல்லி ஹீயூப். குறிப்பிட்ட இடைவேளையில் தலை அலங்காரப் பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். இதில் அப்பாக்களும் மகள்களும் மட்டுமே கலந்துகொள்ள இயலும். ’பியரும் பின்னல்களும்’ என்ற தலைப்பில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

ஒரு பயிற்சி முகாமில் 6 அப்பாக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 3600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நாள் முழுவதும் மகள்களின் தலையில் விதவிதமான பின்னல்கள் போட்டுப் பழக வேண்டும். இறுதியில் எந்தக் குழந்தையின் பின்னல் அழகாக இருக்கிறது என்பதை ஒரு நிபுணர் தெரிவிப்பார். வெற்றி பெற்ற அப்பாவுக்கு 6 பாட்டில் பியர், மகளுக்கு ஒரு பை நிறைய தலை அலங்காரப் பொருட்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. ’’’பின்னல்கள் மிகவும் சவாலானவை. அதிலும் குதிரைவால் போடுவதற்குள் திணறிவிட்டேன்’’ என்கிறார் ஓர் அப்பா.

அடடா! அப்பா மகளுக்கு தலை பின்ன ஆரம்பித்துவிட்டால் அம்மாவுக்கு டென்ஷன் குறையுமே!

மரபணு குறைபாடு மூலம் வரும் நோய்களில் ஒன்று ஸிரோடெர்மா பிக்மெண்டோசம். சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தால் தோல் மோசமாகப் பாதிக்கப்படுகிற நோய். பிரேஸிலின் ட்ஜல்மா ஜார்டின் என்ற கிராமம் முழுவதும் இந்த நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே வசிக்கும் 800 பேரில் 600 பேருக்குப் பாதிப்பு இருக்கிறது. புறஊதாக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக, வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகின்றனர். இந்த நோய் தோல் புற்றுநோயாக நாளடைவில் மாறிவிடுகிறது.

’’ஒருநாள் காலை எழுந்தபோது சிறிய அளவில் பாதிப்பு தெரிந்தது. அடுத்த இரண்டே நாட்களில் மிக வேகமாக வளர்ந்து மோசமான சேதத்தை உண்டாக்கிவிட்டது. இன்று வரை அதன் வேகத்தைக் குறைக்கவே முடியவில்லை. என் சகோதரர்களும் சகோதரியும் தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றனர்’’ என்கிறார் ஜார்டின். தற்போதைய நிலையில் குணப்படுத்த முடியாத நோயாக இருப்பதால், வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நோய் குறித்த விழிப்புணர்வை சில தொண்டு அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன.

ஐயோ… எவ்வளவு மோசமான நோய்…

டெக்சாஸ் தொழிற்சாலையில் வெல்டராக இருக்கிறார் ஸ்காட் ராப். தன்னுடைய வேலையையே கலையாக மாற்றி வருகிறார். இரண்டு உலோகக் குழாய்களை இணைக்கும் அலுப்பூட்டும் பணியைத் தானும் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்துவிடுகிறார் ஸ்காட். ‘’நான் ஒன்றும் என் நிபுணத்துவத்தைக் காட்ட பல டிசைன்களில் வெல்டிங் செய்வதில்லை. சாதாரணமாக வெல்டிங் செய்யப்பட்ட குழாய்களைப் பார்ப்பதில் சுவாரசியம் இல்லை.

அதனால் இப்படிச் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என வானவில் வண்ணங்களிலும் டிசைன்களிலும் குழாய்கள் அட்டகாசமாகவே இருக்கின்றன. எந்த வேலையையும் நமக்கு ஏற்றவாறு சுவாரசியம் கூட்டிக்கொள்வதில்தான் நமது திறமையே இருக்கிறது’’ என்கிறார் ஸ்காட்.

சரியா சொன்னீங்க ஸ்காட்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆட்டுக்கால்-மனிதன்/article7565192.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மனிதக் கண் எரிமலை!

 
masala_2516950f.jpg
 

கிழக்கு ரஷ்யாவின் சாக்ஹாலின் தீவில் புகசேவ்ஸ்கி எரிமலை இருக்கிறது. சமீபத்தில் எரிமலை வெடித்தது. அதிலிருந்து பீறிட்டு குழம்பு வெளியேறியது. புகைப்படக்காரர் மிகைல் மிகைலோவ் புகைப்படங்கள் எடுக்கச் சென்றார். ஹெலிகாப்டரில் இருந்து பார்த்தபோது எரிமலைக் குழம்பு மனிதக் கண் போன்று இருந்தது கண்டு ஆச்சரியமடைந்து போனார்.

‘‘இது போன்ற ஒரு காட்சியை நான் இதுவரை கண்டதில்லை. உலகில் உள்ள எந்த எரிமலைக் குழம்பும் இதுபோன்று இருந்ததில்லை. மிகப் பெரிய எரிமலை வெடிப்பு. இன்னும் கூட குழம்பு வெளி வந்துகொண்டிருக்கிறது. பிரமிப்பு அகலவில்லை. ஒரு புகைப்படக்காரராக இருப்பதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது’’ என்கிறார் மிகைல்.

ஆச்சரியங்களைத் தந்துகொண்டே இருக்கிறது இயற்கை!

சீனாவில் வசிக்கும் 5 வயது சிறுமி ஹான் ஜியாயிங் விலங்குகளை ஹிப்னாடிசம் செய்கிறார். பல்லி, முயல், கோழி, நாய், தவளை போன்ற விலங்குகளிடம் குரல் மூலமும் கைகளால் தடவிக் கொடுப்பதன் மூலமும் உறக்கத்தில் ஆழ்த்திவிடுகிறார். சீனத் தொலைக்காட்சியில் ஹான் ஜியாயிங் தன்னுடைய திறமையை எல்லோருக்கும் முன்பாக வெளிப்படுத்தினார். கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த ஒவ்வொரு விலங்கையும் வெளியே கொண்டு வந்து, ஒரு சில நிமிடங்களில் அப்படியே தூங்க வைத்து விடுகிறார். 5 விலங்குகளையும் தூங்க வைத்த பிறகு கைகளை உயர்த்தினார்.

அரங்கத்தில் இருந்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலர் பள்ளியில் ஒருநாள் ஹான் ஜியாயிங் தவளையைப் பிடித்தார். விளையாட்டாக அந்தத் தவளையிடம் பேசிக்கொண்டே, தடவிக் கொடுத்தார். உடனே அது உறங்க ஆரம்பித்துவிட்டது. அதைப் பார்த்து ஒவ்வொரு விலங்கையும் அதே போலச் செய்ய ஆரம்பித்துவிட்டார். அதாவது தான் ஹிப்னாடிசம் செய்கிறோம் என்பதை அறியாமலே செய்துகொண்டிருந்தார். அவரது பெற்றோர் ஹான் ஜியாயிங் திறமையை அறிந்துகொண்டு, ஊக்குவித்தனர். இன்று விலங்குகளை ஹிப்னாடிசம் செய்வதில் தனித் திறமையுடன் இருக்கிறார் ஹான் ஜியாயிங். கடந்த வாரம் வெளியான வீடியோவை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இதுவரை பார்த்திருக்கிறார்கள்.

கீர்த்தி பெரிது!

ஒரு சிறிய விஷயத்தின் மூலம் தொழிலதிபராகிவிட்டார் டெக்சாஸைச் சேர்ந்த அலெக்ஸ் க்ரைக். பெரிய உருளைக் கிழங்குகளில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு செய்தி எழுதி அனுப்புவதுதான் இவருடைய தொழில். அலெக்ஸ் தன் காதலியிடம் இந்த யோசனையைச் சொன்னபோது, முட்டாள்தனமான யோசனை என்று நிராகரித்துவிட்டார்.

ஆனால் அலெக்ஸ் விடுவதாக இல்லை. கடந்த மே மாதம் இந்தத் தொழிலை ஆரம்பித்தார். ஒரே மாதத்தில் 20 ஆயிரம் உருளைக் கிழங்குகளை அனுப்பிவிட்டார். 6.5 லட்சம் ரூபாயைச் சம்பாதித்து விட்டார். இரண்டே மாதத்தில் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் என்று தன் தொழிலை விரிவுபடுத்தியும் விட்டார்.

வல்லவருக்கு உருளைக்கிழங்கும் தொழில்…

சீனாவின் ஹன்பின் மாவட்டத்தில் உள்ள அன்காங் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடைபெறுகின்றன. அதில் பெரும்பாலோர் நடந்து செல்பவர்கள். போக்குவரத்து காவலர்கள் எவ்வளவோ முயன்றும் விதிமீறல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விதிமீறல்கள் செய்வோருக்கு அபராதம் விதிப்பதை நிறுத்திவிட்டு, போக்குவரத்து காவலர்களுக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்துவிட்டது போக்குவரத்து துறை. விதிகளை மதிக்காமல் சாலையைக் கடப்பவர்கள் மூலம் சுமார் 56 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும்.

அப்படி வசூலிக்காவிட்டால் போக்குவரத்து காவலர்களின் சம்பளத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயும் ஓவர் டைம் வருமானத்தில் 5 ஆயிரம் ரூபாயும் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்திருக்கிறது. இப்படிச் செய்வதால் 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊழியர்கள் சம்பளமாகப் பெற முடியும். காவலர்கள் கவனமாகக் கண்காணித்து விதிமீறுபவர்களிடம் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதுக்கெல்லாம் சீனர்கள் நம்ம ஊரில் பாடம் கத்துக்கணும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனிதக்-கண்-எரிமலை/article7560929.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.