Jump to content

வார்த்தைகளால் தனது ஆக்ரோஷத்தை விற்பனை செய்கிறார் கோலி: பிஷன் பேடி காட்டம்


Recommended Posts

வார்த்தைகளால் தனது ஆக்ரோஷத்தை விற்பனை செய்கிறார் கோலி: பிஷன் பேடி காட்டம்

 
வெற்றி பெற்று விட்டோம் அதற்காக அதனை நாராசமாக கொண்டாடுவதா? என்று கேட்கிறார் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. | கோப்புப் படம்: வி.வி.சுப்ரமணியம்.
வெற்றி பெற்று விட்டோம் அதற்காக அதனை நாராசமாக கொண்டாடுவதா? என்று கேட்கிறார் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. | கோப்புப் படம்: வி.வி.சுப்ரமணியம்.

தேவையற்ற ஆக்ரோஷம் இசாந்த் சர்மாவின் தடையில் பரிதாபமாக முடிவடைந்துள்ளது என்று கூறிய முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி, விராட் கோலி தனது ஆக்ரோஷம் பற்றிய பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் பிஷன் சிங் பேடி கூறியதாவது: “ஆக்ரோஷம் பற்றிப் பேசிப் பேசியே கடைசியில் அது இசாந்த் சர்மாவின் தடையில் முடிந்துள்ளது. இதுதான் கிரிக்கெட் களத்திலிருந்து நாம் விரும்புவதா? இது பரிதாபமிக்க ஆக்ரோஷ வெளிப்பாடு. இன்னொன்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், விராட் கோலியின் ஆக்ரோஷத்துக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் அறிக்கை மாறி அறிக்கையாக கொடுத்துக் கொண்டிருக்கிறார், வார்த்தைகள் மூலம் தனது ஆக்ரோஷத்தை விற்பனை செய்கிறார் அவர் அவ்வளவே.

நடந்து முடிந்தவை துரதிர்ஷ்டவசமானவை. இந்தத் தொடரில் கோலி சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவர் தனது ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம். எப்போதும் ஒரு கேமரா கேப்டன் மீது கவனம் செலுத்தும். எனவே அவர் மிகவும் தனிப்பட்ட முறையில் சிறந்த ரோல் மாடலாக விளங்குவது அவசியம். பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் ஆக்ரோஷத்தை காட்ட வேண்டுமே தவிர வாயினால் அல்ல.

விராட் கோலியின் கேப்டன்சியைப் பொறுத்தவரையில் அவர் இன்னும் தொலைதூரம் செல்ல வேண்டும், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அணியின் குறைபாடுகளை வெற்றியின் மூலம் மறைத்து விட்டால் நாம் குருடர்களாக இருக்க வேண்டியதுதான்.

வெற்றி பெற்றோம் சரிதான், நல்ல வெற்றிதான் அதுவும் சரிதான், இளம் அணிக்கு வாழ்த்துக்கள்.ஆனால் அதற்குப் பிறகான அதீத கொண்டாட்டங்கள் தேவையற்றது. பெரிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தி விடவில்லையே. 3-0 என்று வெற்றி பெற்றிருந்தால் அணியினரின் கொண்டாட்டங்களை நான் புரிந்து கொள்கிறேன். சரி வென்று விட்டோம், ஆனால் ஏன் இந்த பித்தம்? அங்கு வெற்றி பெறத்தான் சென்றுள்ளோம் என்பது சரிதானே?

எனவே என்ன எதிர்பார்க்கப்பட்டதோ அதைத்தான் செய்துள்ளோம், இதில் என்ன பெரிய அமர்க்களம் வேண்டிக் கிடக்கிறது? நல்லதை மனதில் கொண்டு நாம் அதீதமாக கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இலங்கை அணி பலவீனமான அணி, அந்த அணியை இன்னும் தகர்த்திருக்க வேண்டும்.

எனினும் வெற்றி வெற்றியே, அணிக்கு எனது வாழ்த்துக்கள். அதற்காக ஒருநாடு பெரிய அமர்க்களம் செய்ய வேண்டியதில்லை. மனநிலையில் ஸ்திரத்தன்மை வேண்டும். எப்போது நாம் வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக பாவிக்கப் பழகப்போகிறோம்?

அஸ்வின் பிரமாதமாக வீசினார். முதல் முறையாக அவர் சீராக நன்றாக வீசியதைப் பார்த்தேன். ஆனால் இங்கும் நான் என்ன கூறுகிறேன் என்றால் இந்த இலங்கை அணி பலவீனமான அணி என்றே. ஆஞ்சேலோ மேத்யூஸிடமிருந்து ஒரு நல்ல இன்னிங்ஸ் தவிர அங்கு ஒன்றுமில்லை.

அமித் மிஸ்ரா நன்றாக பவுலிங்கும், பேட்டிங்கும் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் நாம் இளைஞர்களை நோக்கிச் செல்ல வேண்டும், துரதிர்ஷ்டவசமாக அமித் மிஸ்ராவிடம் இன்னும் நீண்ட நாள் கிரிக்கெட் வாழ்க்கை இல்லை.

ஹர்பஜன், மிஸ்ரா இருவருக்கும் காலம் முடிந்து விட்டது என்றே கருதுகிறேன், இந்த இலங்கை அணிக்கு எதிராக இளம் ஸ்பின்னர்களை களமிறக்கியிருக்க வேண்டும். இளம் ரத்தங்களை புகுத்துவதற்கான தொடரே இது.

அதே போல் ஆல் ரவுண்டர் என்ற தகுதியில் ஸ்டூவர்ட் பின்னி அணியில் இருப்பது பெரிய கேள்விக்குறி. புவனேஷ் குமாரை ஏன் உட்கார வைத்தனர். நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதற்காக செய்தவையெல்லாம் சரியாகி விடாது. நாம் நடைமுறை எதார்த்தத்துடன் சிந்திக்க வேண்டும்.

நல்ல இளம் ஸ்பின்னர்கள் இருக்கவே செய்கின்றனர். இடது கை மற்றும் லெக் ஸ்பின்னர்கள் உள்ளனர், திறமை எங்கே கண்டு கொள்ளப்படுகிறது? வாரியத்திடமிருந்து நல்ல பணம் சம்பாதிக்கும் 5 அணித் தேர்வாளர்களும் அடிமட்டத்திலிருந்து திறமைகளை கண்டுணர வேண்டும்.

அடுத்து கடினமான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மிக நீண்ட தொடர் காத்திருக்கிறது, இதில் நமது திறமையும், உடற்தகுதியும் கடும் சவால்களைச் சந்திக்கும்” இவ்வாறு கூறினார் பிஷன் பேடி.

http://tamil.thehindu.com/sports/வார்த்தைகளால்-தனது-ஆக்ரோஷத்தை-விற்பனை-செய்கிறார்-கோலி-பிஷன்-பேடி-காட்டம்/article7607757.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.