Jump to content

சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம்


Recommended Posts

சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம்

சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம்

September 1, 2015  09:03 pm

 
 
தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 28ம் திகதி ஆரம்பமான, இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டமான நேற்று 2-வது இன்னிங்சில் இந்தியா துடுப்பெடுத்தாடிய போது, 10-வது விக்கெட்டாக இசாந்த் சர்மா களம் இறங்கினார்.

இதன்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் இசாந்த் சர்மாவிற்கு தொடர்ந்து பவுன்சராக வீசினார்.

இதனால் கோபம் அடைந்த இசாந்த் சர்மா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு பிராசத்துடன் இணைந்து தினேஷ் சந்திமால், லகிரு திரிமானே ஆகியோரும் இசாந்த் சர்மாவுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக தம்மிக பிரசாத் துடுப்பெடுத்தாடிய வேளை, இசாந்த் சர்மா பந்தில் அடிபட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மைதான நடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து இன்று போட்டி முடிந்தபின் இந்த விவாகரம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஐ.சி.சி. நன்னடத்தை விதியை மீறியது தெரிய வந்தது.

இதனால், இசாந்த் சர்மா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. எனவே, தென்னாபிரிக்கா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது முதல் போட்டியில் இசாந்த் சர்மாவால் பங்கேற்ற இயலாது.

அதுபோல், இலங்கை வீரர் சந்திமால் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தம்மிக்க பிராசத் மற்றும் லகிரு திரிமானேவுக்கு போட்டியின் வருவாயில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இசாந்த் சர்மா, சண்டிமால் ஒரு போட்டியில் விளையாடத் தடை: ஐசிசி அதிரடி

 
மோசமான நடத்தைக்காக இசாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்டில் விளையாடத் தடை. | படம்: ராய்ட்டர்ஸ்.
மோசமான நடத்தைக்காக இசாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்டில் விளையாடத் தடை. | படம்: ராய்ட்டர்ஸ்.

களத்தில் மோதல் போக்கைக் கடைபிடித்ததற்காக இசாந்த் சர்மா மற்றும் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால் ஆகியோர் ஒரு போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

மேலும், மோசமான நடத்தைக்காக இலங்கை வீரர்கள் லாஹிரு திரிமானே, தம்மிக பிரசாத் ஆகியோருக்கு ஆட்டத் தொகையில் 50% அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இசாந்த் சர்மா விளையாட முடியாது. சண்டிமால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாது.

நடந்து முடிந்த கொழும்பு, 3-வது டெஸ்ட் போட்டியில் தம்மிக பிரசாத்-இசாந்த் சர்மா விவகாரத்தின் போது இசாந்த் சர்மா மீது மோதியதால் சண்டிமாலுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த மோதல் போக்கில் திரிமானேயும் ஈடுபட்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இசாந்த் சர்மா, 2-வது இன்னிங்சில் உபுல் தரங்காவை வீழ்த்தி விட்டு அவரை மோசமாக வழியனுப்பியதாலும், மொத்தமாக அவரது நடத்தை மோசமாக இருந்ததாலும் நீக்கத்துக்கான 2 புள்ளிகளைப் பெற்றதால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் முடிந்த பிறகு 4 வீரர்களும் தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டதால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/sports/இசாந்த்-சர்மா-சண்டிமால்-ஒரு-போட்டியில்-விளையாடத்-தடை-ஐசிசி-அதிரடி/article7604267.ece

Link to comment
Share on other sites

''இனிமேல் இது போல் நடந்தால் நீண்ட காலத் தடை!''- இஷாந்துக்கு நடுவர்கள் எச்சரிக்கை

 

லங்கை வீரர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த இஷாந்த் சர்மாவுக்கு, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை வீரர் சண்டிமாலும், ஒரு நாள் போட்டி ஒன்றில் விளையாடத் தடையை சந்தித்திருக்கிறார்.

ish.jpg

இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2வது டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்ததற்காக, ஏற்கனவே இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 65 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு நகரில் நேற்று முடிவடைந்த 3வது டெஸ்ட் போட்டியிலும் இஷாந்த் சர்மாவுக்கும், இலங்கை வீரர்கள் தம்மிகா பிரசாத், சண்டிமால், ஹெராத், திரிமண்ணே ஆகியோருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

முக்கியமாக 'பந்தை நேராக என் தலைக்கு போடு 'என்னும் வகையில் இஷாந்த் சைகை செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.  இந்திய இன்னிங்ஸ் முடிந்ததும் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்த இஷாந்தை, இலங்கை வீரர் தம்மிகா பிரசாத் விரட்டி சென்றதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து  ஐ.சி.சி. ஒழுங்கு விதிமுறைகளை மீறியுள்ளதாக இஷாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, மொகாலியில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் விளையாட முடியாது.

அதேபோல் இஷாந்தை உரசியதற்காக இலங்கை வீரர் சண்டிமாலுக்கு,  ஒருநாள் போட்டி ஒன்றில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இலங்கை மோதவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் சண்டிமால் விளையாட முடியாது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிற வீரர்களான தம்மிகா பிரசாத், திரிமண்ணே ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போட்டி நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் கூறுகையில், '' கடந்த திங்கட்கிழமை மைதானத்தில் நடந்த சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது கிரிக்கெட்டுக்கு பலன் அளிக்க கூடிய செயல்கள் அல்ல. கிரிக்கெட் வீரர்கள் எதிரணி வீரர்களை  நடுவர்களை மதிக்க கற்று கொள்ள வேண்டும்.

தற்போது தடையை சந்தித்துள்ள இஷாந்த் சர்மா, 12 மாதங்களுக்குள் இது போன்று மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அவர் நீண்ட காலத் தடையை சந்திக்க நேரிடும். சண்டிமாலை பொறுத்தவரை, பிரசாத்துக்கும் இஷாந்துக்கும் நடந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை. எனினும் இஷாந்தின் உடலுடன் உடல் உரசியதற்காக அவர் தடையை சந்தித்துள்ளார்'' என்றார். 

http://www.vikatan.com/news/article.php?aid=51809

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.