Jump to content

ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லையாம் : பரபரப்பு தகவல்


nochchi

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒசாமா பின்­லேடன் இன்னும் சாக­வில்­லையாம் : பர­ப­ரப்பு தக­வல்

 

 
 
சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­யான ஒசாமா பின்­லேடன் இன்னும் சாக­வில்லை. அவர் அமெ­ரிக்க உள­வுத்­து­றையின் பாது­காப்பில் சொகு­சாக வாழ்ந்து வரு­கிறார் என எட்வர்ட் ஸ்னோடன் பர­ப­ரப்பு தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.Osama-bin-Laden-is-alive.jpg

அமெ­ரிக்க பாது­காப்பு ரக­சி­யங்­களை வெளி­யிட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட எட்வர்ட் ஸ்னோடன். 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்­யாவில் இருந்து வரு­கிறார். இவர், சமீ­பத்தில் இணை­ய­த்தளம் ஒன்றில் வெளி­யிட்­டுள்ள கட்­டு­ரையில் ஒசாமா பின்­லேடன் சாக­வில்லை என்ற பர­ப­ரப்பு தக­வலை தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் தனது கட்­டு­ரையில் அமெ­ரிக்கா குறித்து பல குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன் வைத்­துள்ளார். குறிப்­பாக ஒசாமா பின்­லேடன் சொகு­சாக வாழ்­வ­தற்­காக, சிஐஏ மாதந்­தோறும் 100,000இற்கும் மேற்­பட்ட அமெ­ரிக்க டொலர்­களை நிதி­யாக அளித்து வரு­கி­றது. இந்த தொகை சில தொழி­ல­தி­பர்கள் மற்றும் அமைப்­புக்கள் மூலம் நாஸாக் வங்கிக் கணக்கு வழி­யாக அனுப்­பப்­ப­டு­கி­றது. 

ஒசாமா எங்­கி­ருக்­கிறார் என எனக்கு சரி­யாக தெரி­யாது. ஆனால், 2013ஆம் ஆண்­டி­லி­ருந்து தனது 5 மனை­விகள் மற்றும் ஏரா­ள­மான குழந்­தை­க­ளுடன் அமெ­ரிக்க உள­வுத்­து­றையால் பாது­காக்­கப்­பட்டு வரு­கிறார். 

இதற்கு என்­னிடம் பல ஆதா­ரங்கள் உள்­ளன. அவரைக் கொன்று விட்­ட­தாக அமெ­ரிக்கா நாடகம் ஆடு­கி­றது. இதற்கு பாகிஸ்தான் ரக­சிய அமைப்பும் உடந்தை. என தெரி­வித்­துள்ளர்.
ஒசா­மாவின் உட­லையும் யாரி­டமும் அவர்கள் காண்­பிக்­க­வில்லை. இவை­களை பயன்­ப­டுத்தி தான் ஒசா­மாவை தலை­ம­றை­வாக்கி உள்­ளனர். தாடி இல்­லாமல், இரா­ணுவ உடையில் இருப்­பதால் அவரை யாரும் இது­வரை அடை­யாளம் காண முடி­ய­வில்லை. போலி­யான ஆவ­ணங்­களை வெளி­யிட்­டதால் அவர் இறந்து விட்­ட­தாக அனை­வரும் நம்பி விட்­டனர்.

ஒசாமா உயி­ருடன் இருப்பதற்கான பல ஆதாரங்களையும், அமெரிக்கா ஒசாமா வுக்கு உதவி வருவதற்கான ஆதாரங்கள் அடங்கிய புத்தகத்தை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/articles/2015/09/01/ஒசாமா-பின்­லேடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறந்து போன மனுசனை... திருப்பி ஞாபகப் படுத்திறாங்கள்.
பின்லாடனை... விடுவிக்கச் சொல்லி,  போராட்டம் வெடிக்கப் போகுது. :grin:

Link to comment
Share on other sites

அப்போ இவர்கள் எந்த வில்லாவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். எதையுமே நம்பமுடியாமல் இருக்கின்றது

_45786726_tv007338667.jpg     2079podduamman_05_11_07_j.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.