Jump to content

எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு எதிர்க்கட்சிகளிடம் : ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு எதிர்க்கட்சிகளிடம் : ஜனாதிபதி
news

எதிர்க்கட்சித் தலைவரை தெரிவுசெய்யும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில், ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து, தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக விமல் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட பின்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்ற சர்ச்சை கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வருகின்றது.


அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டுமென பெரும்பாலானோர் தெரிவித்து வருகையில், சுதந்திரக் கட்சிக்கே அது வழங்கப்பட வேண்டுமென மறுசாரார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், ஐ.ம.சு.முவின் சில கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை அமைத்து நாடாளுமன்றில் எதிரணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.


இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெயரிடும் பொறுப்பு சபாநாயகருக்கு கொடுக்கப்பட்டது. எனினும் இன்றைய தினம் ஜனாதிபதி இதனை எதிர்க்கட்சிகளிடமே விட்டுவிட்டார். இந்நிலையில், நாளைய முதலாவது நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சைக்கு விடைகிடைத்துவிடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது
- See more at: http://onlineuthayan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.