Jump to content

ஸ்வாசிலாந்தில் அழகிப் போட்டிக்கு செல்லும் வழியில், பயங்கர விபத்து: 38 இளம்பெண்கள் பலி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

38 girls die in crash on way to Swaziland beauty pageant

ஸ்வாசிலாந்தில் அழகிப் போட்டிக்கு செல்லும் வழியில், பயங்கர விபத்து: 38 இளம்பெண்கள் பலி.
பபானே: ஸ்வாசிலாந்தில் டிரக் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் அழகிப் போட்டிக்கு சென்று கொண்டிருந்த 38 இளம்பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.

ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்தின் மன்னர் மூன்றாம் ஸ்வாதியின் மனைவியை தேர்ந்தெடுக்கும் அழகிப் போட்டி வரும் திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னிப் பெண்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கிளம்பினர்.

அப்படி அழகிப் போட்டியில் கலந்து கொள்ள அழகிகளை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பபானே மற்றும் மான்சினி ஆகிய முக்கிய நகரங்கள் இடையே கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரக்கில் இருந்த 38 இளம்பெண்கள் பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நாளைய அழகிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணமான மன்னரின் முன்பு கன்னிகள் நடனம் ஆடுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் அழகி மன்னரின் அடுத்த மனைவியாவார். முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியின்போது மன்னர் தனது 14வது மனைவியை தேர்வு செய்தார்.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த விபத்தால் தேசம் துயர் அடைந்துள்ளதாக மன்னர் தெரிவித்துள்ளார். ஸ்வாதி தனது தந்தை இறந்த பிறகு 1982ம் ஆண்டு ஸ்வாசிலாந்தின் மன்னர் ஆனார்.
நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

கவலையான செய்தி..

இது மன்னர் பூ மிதிக்கும் காட்சி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்தின் மன்னர் மூன்றாம் ஸ்வாதியின் மனைவியை தேர்ந்தெடுக்கும் அழகிப் போட்டி வரும் திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னிப் பெண்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கிளம்பினர்.//

மன்னர் மூன்றாம் ஸ்வாதியின் வருங்கால மகாராணி.... இந்த கன்னிப் பெண்கள் வந்த வாகனத்திலும் இருந்திருக்கலாம்.
பாவங்கள்... ஆசையுடன் வந்தவர்களை, விபத்து காவு வாங்கி விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.