Jump to content

நம்ப வைத்து ஏமாற்றினரே.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப வைத்து ஏமாற்றினரே...: அதிர்ச்சியில் இலங்கை தமிழர்கள்! 

Tamil_News_large_133004620150830003020.j
இலங்கையில், சிங்கள கட்சிகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி, கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கு, இலங்கை மத்திய அமைச்சரவையில் உரிய வாய்ப்பு கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது; இதனால், தமிழர்கள் அதிர்ச்சி அடைத்து உள்ளனர். 

3௦ அமைச்சர்கள் :

இலங்கை அரசியலமைப்பிற்கான, 19வது திருத்தச் சட்டத்தின் படி, மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை, 30 என ஏற்கனவே நிர்ணயித்துள்ளதோடு, இணை அமைச்சர்களின் எண்ணிக்கையும் வரையறுத்துஉள்ளனர். இதே காரணம் காட்டி, ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்ற, தமிழ் எம்.பி.,க்களுக்கும், அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் தரப் போவதில்லை என, ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திர கட்சியும் முடிவெடுத்துள்ளன.
இதையடுத்து, சிங்கள கட்சிகளின் தலைமைகள், தமிழர்களையும், தமிழ் பேசும், எம்.பி.,க்களையும் ஏமாற்றிவிட்டதாக, தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்துள்ள, தமிழ் எம்.பி.,க்கள், அதை வெளிக்காட்ட இயலாமல் தவிக்கின்றனர்; 'நாங்கள் நம்பிய, சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர்' என்று சொல்ல இயலாமல் தவிக்கின்றனர். அதை வெளிப்படுத்தினால், தங்களின் கவுரவம் பாதிக்கப்படும் என்பதால் வேறு காரணங்களை கூறுகின்றனர்.ஐக்கிய தேசிய கட்சியும், இலங்கை சுதந்திரா கட்சியும் இணைந்து, தேசிய அரசாங்கம் அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டதால், ஐக்கிய தேசிய கட்சியிலும், அதன் கூட்டணியிலும் போட்டியிட்ட தமிழர்களுக்கு அந்தஸ்து கிடைக்காமல் போனது.

இப்படி ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்துள்ளதற்கு காரணம், பாராளுமன்ற அமைச்சரவையில் சிங்களர்களின் ஆதிக்கம் குறைந்துவிடக் கூடாது; தமிழர்களின் ஆதிக்கம் வரவே கூடாது என்பது தான். இதை, தமிழர்கள் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான வேலாயுதம், தேசிய பட்டியலிலும், அமைச்சரவையிலும் இடம்பிடிப்பார் என்று அளித்திருந்த வாக்குறுதி, தேர்தல் முடிவுகள் வந்த பின், காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.அதேபோல, நுவரெலியா மாவட்டத்தில் வென்றுள்ள ராதாகிருஷ்ணன், திலகராஜ், திகம்பரம் ஆகியோருக்கும்; பதுளையில் வென்றுள்ள வடிவேல், சுரேஷ், அரவிந்தகுமார் ஆகியோருக்கும், அமைச்சரவையில் வாய்ப்பு தருமாறு கோரப்பட்டுள்ளது. ஆனால், இவர்களில் யாராவது ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, 'ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், அதற்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்' என, அறிவித்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சியோ, தேசிய அரசு என்ற பெயரில், இலங்கை சுதந்திரக் கட்சியோடு இணைந்துள்ளது.மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருக்கு, அதிகபட்ச அதிரடிப்படை பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. அவர், ஐக்கிய தேசிய கட்சியின் உளவாளி என்பது தேர்தலுக்கு பிறகே தெரிய வந்தது.
இதெல்லாம் தமிழர்களுக்கு, ஐக்கிய தேசிய கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைத்துவிட்டது; தமிழர்களின் ஆதரவு கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பை, 'நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டதாகவே' தமிழர்கள் கருதுகின்றனர்.

போராட வேண்டிய நிலை:

அமைச்சரவையில், தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில், அவர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற, ஏற்கனவே போராடியது போல மீண்டும் தொடர்ந்து போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது தமிழர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ராஜபக் ஷே போல இருக்கமாட்டார் என்ற நம்பிக்கை இப்போது தகர்ந்து போய்விட்டது. 

மகிந்த ராஜபக் ஷே பொதுத் தேர்தலில் போட்டியிட, மைத்திரிபால சிறிசேன வாய்ப்பு தந்தது கூட, அவரின் ஆதரவு சிங்களர்கள் மற்றும் இராணுவத்தினரின் ஓட்டுகளை பெறுவதற்காக மட்டுமல்ல, தம் கூட்டணிக்குள் வளைப்பதற்காகவே என்பதை, தமிழர்கள் இப்போது உணரத் துவங்கியுள்ளனர். இலங்கையில், சிங்களர்களைப் போல, தமிழர்களும் சகல உரிமைகளைப் பெற்று நிம்மதியுடன் வாழ, சிங்களத் தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால் தமிழர்கள், பழைய சம்பவங்களை மறந்து, சிங்களர்களுடன் நல்லிணக்கமாக வாழும் மனநிலைக்கு 
மாறியுள்ளனர். இதைப் புரிந்து கொள்ளாமல் ஆதிக்கமும், அதிகாரமும் செலுத்தும் மனநிலையைத் தான், கடந்த கால் நுாற்றாண்டு காலமாக, சிங்கள தலைமைகள் கடைபிடிக்கின்றன. 

இது, தமிழர்களை மீண்டும் போராட்ட சிந்தனைக்கு செல்லத் துாண்டுவதாகவே அமையும் என்று, இலங்கையின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.  

http://www.dinamalar.com/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வம்சாவழித் தமிழர்கள் பலர் மந்திரி சபையை அலங்கரிக்க உள்ள நிலையில் சிங்கள அரசு அவர்களை  ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையோ ஏதோ  ஒரு ஜில்மாவிளையாட்டு  சறிக்கீட்டுது எண்டு நல்லவடிவாய் தெரியுது.....
ஒருசில நம்பேலாத தகவல்களை இந்தச்செய்தியை உறுதிப்படுத்துற மாதிரி இருக்கு :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தேர்தலுக்கு முன்பாகவே, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, 'ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், அதற்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம்' என, அறிவித்திருந்தது. ஐக்கிய தேசிய கட்சியோ, தேசிய அரசு என்ற பெயரில், இலங்கை சுதந்திரக் கட்சியோடு இணைந்துள்ளது.மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருக்கு, அதிகபட்ச அதிரடிப்படை பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. அவர், ஐக்கிய தேசிய கட்சியின் உளவாளி என்பது தேர்தலுக்கு பிறகே தெரிய வந்தது.
இதெல்லாம் தமிழர்களுக்கு, ஐக்கிய தேசிய கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைத்துவிட்டது; தமிழர்களின் ஆதரவு கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பை, 'நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டதாகவே' தமிழர்கள் கருதுகின்றனர்.

 

http://www.dinamalar.com/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பவும்.. இதயத்தால் இணையவும் ஒரு முகாந்திரம் இருக்கனும். புலிகள் இருந்த போது சிங்களத்திடம் இருந்து ஒட்டுக்குழுக்களை நோக்கி தேடி வந்த பதவிகள் எல்லாம் இப்போ.. இலவு காத்த கிளி கணக்காப் போயிட்டுது. புலிகள் எத்தனை பேருக்கு அரசியல் பிச்சை போட்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவு. தமிழரசுக் கட்சி ஆக்களுக்கு அரசியல் செய்ய தளம் அமைச்சுக் கொடுத்ததும் புலிகள் தான் போல. இப்ப எல்லாமே அவைட விருப்புக்கு நடக்கிறதா தெரியல்ல. புலிகளால் மட்டும் தான் சிங்களவனின் செயலை.. சிந்தனையை மாற்ற முடியும்.. முடிந்தது. மற்ற எவராலும் அது சாத்தியமில்லை... என்ற தெளிவிருந்தால்.. இதில் ஏமாற்றம் என்ற சொல்லுங்கே இடமில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பாருங்கோ இந்த காரணிகலேல்லாம் ஆட மாட்டாதவனுக்கு அரங்கு பிழை என்ற கணக்காயல்லோ இருக்கு 
அரங்கு பிழையோ ...மேடை கோணலோ 2016 இல் தீர்வு வந்தே தீரனும் ........இப்பதான் சூடு புடிக்குது .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பாருங்கோ இந்த காரணிகலேல்லாம் ஆட மாட்டாதவனுக்கு அரங்கு பிழை என்ற கணக்காயல்லோ இருக்கு 
அரங்கு பிழையோ ...மேடை கோணலோ 2016 இல் தீர்வு வந்தே தீரனும் ........இப்பதான் சூடு புடிக்குது .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.