Jump to content

அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது : ராமதாஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது : ராமதாஸ்
[Friday 2015-08-28 07:00]
இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணையில், அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணையில், அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  

" இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வேதனை அளிக்கும் போதிலும், இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதால் அதிர்ச்சி அளிக்கவில்லை.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நிஷா பிஸ்வால், இலங்கையில் அந்நாட்டு தலைவர்கள் பலரை சந்தித்துப் பேசிய பிறகு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈழத்தமிழர் பிரச்னையில் அமெரிக்க அரசை நம்பக் கூடாது; ஈழத்தமிழர்களுக்கு உதவுவதைப் போல நாடகமாடும் அமெரிக்கா, எந்த நேரத்திலும் துரோகம் செய்யத் தயங்காது என பல ஆண்டுகளாகவே கூறி வருகிறேன். எனது இந்தக் குற்றச்சாற்றை நிரூபிக்கும் வகையில்தான் அமெரிக்காவின் அறிவிப்பு அமைந்திருக்கிறது.

‘‘இலங்கையில் சமரசம் மற்றும் அமைதியை ஏற்படுத்த மாறுபட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மாறுபட்ட சூழல் ஏற்பட்டிருக்கிறது’’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நிஷா பிஸ்வால் கூறியிருப்பது நகைப்பை வரவழைக்கிறது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் தமிழர்களுக்கு நீதி கிடைத்து விடும் என்பதுதான் அவரது கூற்றின் பொருளாகும். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முதல் முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்பவர் அல்ல. ஏற்கனவே 3 முறை மொத்தம் நான்கரை ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். இந்த காலத்தில் பல நீதிவிசாரணைகளை அவர் குழிதோண்டி புதைத்துள்ளார்.

இப்போதைய நிலையில் ஈழத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் ஆணையர் சையத் அல் ஹுசைனும் மட்டுmதான். இலங்கைப் போர்க்குற்றங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பன்னாட்டு விசாரணை அறிக்கை, அடுத்த மாதம் மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்படவுள்ளது.

அந்த அறிக்கை குறித்த காலத்தில் வெளியிடப்படுவதையும், அதில் பட்டியலிடப்படும் குற்றங்களின் அடிப்படையில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவதையும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு பசுமைத் தாயகம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத்திலும் இக்கோரிக்கையை பசுமைத் தாயகம் வலியுறுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=139215&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.