Jump to content

தேசியப் பட்டியல் நியமனம் தமிழரசுக் கட்சியின் முடிவே தவிர, கூட்டமைப்பின் முடிவல்ல! - என்கிறார் சுரேஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Tuesday 2015-08-25 07:00]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

  

யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரான அவருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் மற்ற கட்சித்தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் சரியான முடிவு எடுக்காமல் தமிழரசுக்கட்சி தனது விருப்பத்திற்கு இரண்டு பேரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமித்திருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

இந்த கோரிக்கை தொடர்பில் திருகோணமலையில் இரண்டு முக்கிய பேச்சுகள் நடைபெற்றிருந்த போதிலும், பேச்சுகளுக்கு அமைவாக முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

"தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப் பட்டியலுக்கு தமிழரசு கட்சியில் இருக்கும் சில நபர்கள் தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை நியமித்திருப்பது, கூட்டமைப்பில் இருக்கும் தமிழரசு கட்சி தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு ஏற்புடைய செயலல்ல. எல்லோரும் சேர்ந்து விதை விதைப்பதும், அறுவடை செய்யும்போது தமிழரசு கட்சி மட்டும் செய்துகொண்டு போவது என்பதும் ஆரோக்கியமான அரசியலுக்கும் நல்லதல்ல; ஒரு கூட்டமைப்பு தத்துவங்களுக்கும் நல்லதல்ல; ஆனால் இதனை மிகவும் வெட்கம் கெட்டத்தனமாக தமிழரசு கட்சி தொடர்ந்து செய்கிறது என்பதுதான் ஒரு விடயம்" என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அதேசமயம், இந்த பிரச்சனை குறித்து தமது கட்சி இரண்டொரு தினங்களில் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இதுகுறித்த விரிவானதொரு நேர்காணலை வழங்குவதற்குத் தற்போது தான் தயாரில்லை என்றும், சுருக்கமானதொரு கருத்தை மட்டுமே இப்போது தன்னால் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார். 

http://seithy.com/breifNews.php?newsID=138988&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அன்று கஜே கோஸ்டிக்குச் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறோம் விருப்பமில்லாவிட்டால் எவரும் கூட்டமைப்பில் இருந்து விலகிக்கொள்ளலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பல்.. உங்களையும் தேற விடாது.. தமிழர்களையும் உருப்பட விடாது. தானும் கெட்டு தன் இனத்தையும் கெடுக்கும் ஒரு அலுவலை தான் சம் சும் கும்பல் இப்ப முதன்மையா எஜமான விசுவாசம் கொண்டு முன்னெடுத்து வருகுது. வாக்குப் போட்ட மக்களுக்கு தெளிவான அரசியல் அறிவில்லாட்டி இதுதான் நடக்கும்.

கூட்டமைப்பை உருவாக்க.. தமிழரசுக் கட்சியை விட புளொட்டை விட மற்றவர்கள் பட்ட பாடு அதிகம். இப்ப அவர்கள் எல்லாம் வெளிய. கூட்டமைப்பை புறக்கணித்த புளொட் உள்ள. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைமைக்கு சண்டை போட்டிட்டு ஓடியாந்த சம்பந்தன் இப்ப உள்ள. முதலில் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பை விட்டு வெளியேறினால்.. அல்லது வெளியேற்றப்படனும். அப்பதான் கூட்டமைப்பு வெளில உள்ள பலரையும் உள்ளடக்கி பலப்படும். கொள்கையில் உறுதியாக இருந்து..செய்யப்பட்ட தியாகங்களை மலினப்படுத்தி அரசியல் குறுகிய இலாபம் பெற முனையாமல்.. உறுதியாக இருக்கும். tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இரண்டு வருடங்களில்.... கூட்டமைப்பு என்னும் கட்சியே.... இருக்காது.
சுரேஷ் பிரேமச் சந்திரனை.... கஜேந்திரகுமாரின், "தமிழ் தேசிய மக்கள் முன்னணியில்" இணைய வரும்படி.... அன்பாக அழைக்கின்றோம்.:)

Link to comment
Share on other sites

சுரேஸ் தனக்கு கட்சியில் விருப்பமில்லை என்றும் விலகுவதாகவும் எப்போ சொன்னவர் ? அவரின் கருத்துக்கு பதிலளிக்க தேவை இல்லை என ஏன் சம்பந்தர் போக்கு காட்டுகிறார்,,

Link to comment
Share on other sites

அடுத்த இரண்டு வருடங்களில்.... கூட்டமைப்பு என்னும் கட்சியே.... இருக்காது.
சுரேஷ் பிரேமச் சந்திரனை.... கஜேந்திரகுமாரின், "தமிழ் தேசிய மக்கள் முன்னணியில்" இணைய வரும்படி.... அன்பாக அழைக்கின்றோம்.:)

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்டது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிக்கு இணையாகவே இலங்கைவாழ் தமிழ்மக்களால் கூட்டமைப்பு போற்றப்படுவதை சம், சுங் கூட்டம் மிக நன்றாகவே தெரிந்து வைத்துள்ளது. இன்றைய நிலையில் கூட்டமைப்பை உடைக்க முயல்பவர்கள் அங்குள்ள மக்களால் நிச்சயம் தூக்கியெறியப் படுவார்கள்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனித்து போய் கட்சி தொடங்கினால் கஜேந்திரன்,ஆனந்தசங்கரி போன்றோரு க்கு நடந்த நிலைதான் உங்களுக்கும் வரும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அன்று கஜே கோஸ்டிக்குச் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறோம் விருப்பமில்லாவிட்டால் எவரும் கூட்டமைப்பில் இருந்து விலகிக்கொள்ளலாம்!

அங்கை இருக்கிறவை தங்கடை பிரச்சனையை தாங்களே பாத்துக்கொள்ளுறம் எண்டு அறிக்கை விடுகினம்....நீங்கள் என்னடாவெண்டால் புலம்பெயர்தேசத்திலையிருந்து ஓடர் போடுறியள்!!!!! confused0006.gif

நீங்கள் சுமந்திரன் வாலா?happy01941.gif

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு விரைவில் தமிழரசு கட்சியாக மாறிவிடும் .இந்த தேர்தலில் அப்படிதான் போட்டியிட்டார்கள்

கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதியாமல் இருப்பது ஒரு செய்தி வந்தபோது இதுபற்றி ஒரு பதிவு ஒருவருடத்திற்கு முதல் எழுதினேன் .

பெயரில் என்ன இருக்கு என்று யோசித்தேன் இப்ப வாலுகளின் அலட்டலகளை பார்க்க நிட்சயம் மாறவேண்டும் சும்மா எதற்கெடுத்தாலும் தலைவர் உருவாக்கிய கூ ட்டமைப்பு என்று கொண்டு ,

தலைவர் உருவாகிய கூட்டமமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய ஆட்களை துரத்திவிட்டு தலைவர் வேண்டாத புளொட்டை உள்வாங்கிவிட்டார்கள் இப்பவும் தலைவர்  உருவாகியது என்று கொண்டு சிலர் .

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு விரைவில் தமிழரசு கட்சியாக மாறிவிடும் .இந்த தேர்தலில் அப்படிதான் போட்டியிட்டார்கள்

கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதியாமல் இருப்பது ஒரு செய்தி வந்தபோது இதுபற்றி ஒரு பதிவு ஒருவருடத்திற்கு முதல் எழுதினேன் .

பெயரில் என்ன இருக்கு என்று யோசித்தேன் இப்ப வாலுகளின் அலட்டலகளை பார்க்க நிட்சயம் மாறவேண்டும் சும்மா எதற்கெடுத்தாலும் தலைவர் உருவாக்கிய கூ ட்டமைப்பு என்று கொண்டு ,

தலைவர் உருவாகிய கூட்டமமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய ஆட்களை துரத்திவிட்டு தலைவர் வேண்டாத புளொட்டை உள்வாங்கிவிட்டார்கள் இப்பவும் தலைவர்  உருவாகியது என்று கொண்டு சிலர் .

மிக மிக கேவலமான புளொட் இணை உள் வாங்கலாம் மற்றவர்கள் தான் கூடாதோ ....கூட்டமைப்பில் இருந்து எவரும் விலகி பாருங்கள் ...அப்ப தெரியும் தமிழரசு கட்சியா அல்லது வேறு எவருமா என்று ....எத்தனை தடவை சொல்லி உள்ளேன் ...அரசியல் என்பது உங்களுக்கு விளங்காத ஒன்று ...எத்தனை நாளைக்கு இப்படி உல்டா விடுவீர்கள் ....

இனி எப்படி தமிழரசு கட்சி இருக்க போகுது என்பதை மக்கள் விருப்பு வாக்குகள் மூலம் காட்டி உள்ளார்கள் ....சம் இப்பவே தள்ளாடும் வயது ....இனி காலம் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப நடத்த போகின்றது வெளிச்சம் .....

Link to comment
Share on other sites

.இனி காலம் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப நடத்த போகின்றது வெளிச்சம் .....

தலைவரைக் காட்டித்தான் கூட்டமைப்பு ஓட்டுப்பெற்றது வெளிப்படை.:unsure:

சந்திரனைப் பார்த்து நாய் குலைத்தது என்று சொல்வார்கள். ஆனால் நாய் பார்த்துக் குலைப்பதற்கும் சந்திரன் வேண்டுமென்பது குலைப்பவருக்குப் புரிவதில்லை.:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.