Jump to content

Turnitin: மிரட்டலும் மீட்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Turnitin: மிரட்டலும் மீட்பும்

by விஜயலட்சுமி 

turnitin

கட்டற்ற தகவல் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத இணைப்புகளாக அறிவுத்திருட்டு (plagiarism) மற்றும் முறையான மேற்கோள் (proper citation) ஆகியவை திகழ்கின்றன. இவை இரண்டையும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும், கைவரப்பெறவும் உருவாக்கப்பட்ட மென்பொருளே Turnitin. ஆனால் ஆய்வாளர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக ஆய்வு மாணவர்களின் மத்தியில் Turnitin வெறுக்கத்தக்கதாக இருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு Turnitin மிகப்பெரும் மிரட்டலாகவே இருந்துவருகிறது. ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தும் ஆய்வாளர்களுக்கு தங்கள் மரபில் புழக்கம் இல்லாத Turnitin ஓர் அந்நியத்தன்மையைக் கொடுக்கிறது.

அதிகமும் ஒன்றைச் சார்ந்து இருக்கும் ஒன்றை, அப்படியே நகல் செய்யும் தன்மையுடைய பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்ட இவர்களால் உலகக்கல்விச் சூழலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. சுய ஆய்வு, சுய கண்டடைதல், மேற்கோள் காட்டல் என அனைத்துமே கிழக்காசிய நாடுகளுக்கு புதிய கல்வியியல் கலாச்சாரத்தை போதிப்பவையாகும். இதனை, சாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட Turnitinயை மிகக்குறுகிய காலகட்டத்தில் கிழக்காசிய நாடுகளின் உயர்கல்விக் கூடங்களில் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவே இவ்வெறுப்புணர்வுக்கு அடித்தளமிடுகிறது. மேலும் Turnitin தொடர்பான தவறான புரிதலும், முறையான மேற்கோள் காட்டும் திறன் குறைவாக இருப்பதும்கூட கருத்தில் கொள்ளவேண்டிய காரணங்களாகும்.

Turnitin முழுக்க முழுக்க உரை பொருத்திப்பார்க்கும் கருவியாக (text-matching tool) மட்டுமே வடிவமைக்கப்பட்டதாகும். இவ்விணைய மென்பொருளால் உலகில் உள்ள அனைத்து எழுத்துப் பிரதிகளையும் பொருத்திப்பார்க்க முடியாது. விவாதங்கள், மின் கலைக்களஞ்சியங்கள், உரைகள், விளக்கப்படங்கள், வரைபடங்கள், மின் புத்தகங்கள் என இணைய உலகில் பொதுப் பகிர்வாகியிருக்கும் தரவுகளை மட்டும் Turnitin மென்பொருள் அடையாளம் காணும்.

அதேவேளை, பொதுவான இணையத் தரவுகள், மின் நூல்கள், ProQuest தரவுத்தளம் ஆகியவற்றைத் தவிர்த்து இதர எந்தவொரு அச்சு வடிவிலான படைப்புகள் மற்றும் சந்தா அடிப்படையிலான தரவுத்தளங்களில் உள்ள படைப்புகளையும் இம்மென்பொருளால் அடையாளம் காணமுடியாது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், Turnitin மென்பொருள் இணையவழித் தரவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அறிவுத்திருட்டினை அளவிடுகிறது. நமது படைப்பு இணையத்தில் உள்ள எவ்வகைப் படைப்போடு பொருந்தி இருக்கிறது என்பதை அடையாளம் காட்டுகிறது.

தொடர்ந்து, அசல் படைப்பைப் பொழிப்புரை செய்திருந்தாலோ அல்லது அதன் கருத்துகள் எடுத்தாளப்பட்டிருந்தாலோ இம்மென்பொருளால் அவற்றை அடையாளம் காணமுடியாது. மேலும், இதனால் மேற்கோள்களை அடையாளம் காணமுடியாது. அதாவது ஒரு வாக்கியம் அல்லது பத்தி முறையாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியையும் சேர்த்தே வண்ணமிட்டு அசல் படைப்போடு பொருத்திக் காட்டும்.
ஆக, Turnitin ஒரு படைப்பு அறிவுத்திருட்டு செய்யப்பட்டுள்ளது எனும் முழுமுற்றான தீர்ப்பை வழங்கும் மென்பொருள் இல்லை. மாறாக, தொகுக்கப்பட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றி நம் படைப்பை அசல் படைப்போடு ஒப்பிட்டு மட்டுமே காட்டுகின்றது.

Romanized எழுத்துருவில் அமைந்துள்ள இணையத் தரவுகளைத் தவிர்த்து சீனம், ஸ்பேனிஷ், ப்ரான்ஸ் எழுத்துருக்களைக் கொண்ட இணையத் தரவுகளை மட்டுமே இதனால் உள்வாங்க முடியும். ஆக, தமிழ்மொழியை இதனால் உள்வாங்க முடியாது என்பதைத் தெளிவில் கொள்ள வேண்டும்.

Turnitin பயன்கள்

அறிவுத்திருட்டை அடையாளம் காண உதவுகிறது

இம்மென்பொருள் உருவாக்கத்தின் நோக்கமே அறிவுத்திருட்டைக் களைவதாகும். அவ்வகையில் பயனர்கள் தங்களது படைப்பை இம்மென்பொருளினுள் பதிவேற்றம் செய்து சரிபார்ப்பதன்வழி அறிவுத்திருட்டிலிருந்து விடுபட முடியும். இம்மென்பொருள் அடையாளமிடும் பகுதிகளைச் செறிவு செய்து, திருப்தி அடையும்வரை மீண்டும் மீண்டும் மீள் பதிவேற்றம் செய்து திருத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மேற்கோள் காட்ட உதவுகிறது

படைப்பாளர்கள் முறையாக மேற்கோள் காட்டாதபோது Turnitin அதனை வண்ணமாக்கி காட்டுகிறது. அந்நிலையில் பயனர் தனது படைப்பில் சரியான மேற்கோள்களை இடவும், விடுபட்ட மேற்கோள்களை முழுமைப்படுத்தவும் சுலபமாக இருக்கும். ஆக, முறையான மேற்கோள் இடுவதற்கு உதவும் கருவியாக நாம் Turnitin-ஐ புரிந்து கொள்ளலாம். அல்லது மேற்கோள் இடுவதில் மேலும் கவனமாக இருக்க Turnitin வழிகாட்டுவதாகவும்கூடக் கொள்ளலாம்.

தரவுகளை அதிகம் சாராமல் இருத்தல்

தரவுகளை அதிகமாக கொண்டு உருவாக்கப்படும் படைப்பை ‘patch writing’ என்று கல்வியியல் சூழலில் அழைப்பர். ஒரே தரவை 10% மேல் பயன்படுத்தும்போது அதனை Turnitin அடையாளப்படுத்துகிறது. இம்மாதிரியான அம்சத்தைக் கொண்ட படைப்பின் அசல் தன்மை கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்வகையில் Turnitin ஆய்வாளர் ஒரு தரவை அதிகம் சாராமல் இருக்க அவற்றை முறையாக அடையாளம் காட்டி, படைப்பில் திருத்தத்தைச் செய்ய உதவுகிறது.

பொழிப்புரைத் திறனை அதிகரிக்கிறது

அறிவுத்திருட்டைக் களைய, பொழிப்புரை செய்யும் வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. அசல்படைப்பை சுட்டிக்காட்டும் Turnitin சாம்பல் நிறத்திலான அடையாளத்துடன் பொழிப்புரைக்கு ஏதுவான சில மாற்றுச் சொற்களையும் பயனர்களுக்கு வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆய்வாளர்களின் பொழிப்புரை செய்யும் திறன் மேம்படுவதையும் பல ஆய்வுகள் காட்டுகின்றன.

Turnitinல் உள்ள வெவ்வேறு வண்ணங்கள்

இம்மென்பொருள் ஒரு படைப்பு அசல் படைப்போடு பொருந்தியிருப்பதைச் சுட்டிக்காட்ட பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்துகிறது. ஒரு தரவில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை அளவிடுவதன் அடிப்படையிலே இவ்வண்ணங்கள் மாறிமாறி பயன்படுத்தப்படுகின்றன. அசல் தரவில் உள்ள சொற்களில் 20க்கும் மேற்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படும்போது வண்ணங்கள் இட்டு அடையாளப்படுத்தப்படுகிறது.

அதன் அட்டவணை பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது.
நீலம்    எந்த சொற்களும் அசல் தரவோடு பொருந்தவில்லை
பச்சை    ஒரு சொல் பொருந்தியுள்ளது (24% similarity index)
மஞ்சள்    25-49% similarity index
ஆரஞ்சு    50-74% similarity index
சிவப்பு    75-100% similarity index

இவ்வாறு பொருந்தி இருக்கும் வாக்கியம்/பத்தி அறிவுத்திருட்டு செய்யப்பட்டுள்ளதா இல்லையா எனும் முடிவுக்கு வரும் பொறுப்பு பயனர்களையே சாரும். இறுதி முடிவு எடுக்கும் கடப்பாட்டை நம்மிடமே Turnitin மென்பொருள் விட்டுவிடுகிறது.

உதாரணமாக படைப்பாளர் முறையாக மேற்கோள் காட்டியிருந்தால் குறிப்பிட்டு வண்ணமாக்கி விடப்பட்டிருக்கும் பகுதியின் வண்ணத்தை நீக்கிவிட முடியும். அதன்மூலம் அப்பகுதி அறிவுத்திருட்டு செய்யப்படவில்லை என்பதாக மாறிவிடும். இதனை Instructor எனும் பயனர் மட்டுமே செய்ய முடியும்.

பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள், பதிப்பு, இதழியல் துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த மென்பொருளை ஆண்டுச்சந்தா அடிப்படையில் பயன்படுத்துகின்றன. இதில் முக்கிய இரு பிரிவுகளாக Instructor மற்றும் Student ஆகிய இருபிரிவுகள் இருக்கும். Instructor என்பவர் படைப்பின் அசல் தன்மையை சோதனைச் செய்பவராவார். Student என்பவர் படைப்பை இம்மென்பொருளில் பதிவேற்றம் செய்பவராவார் (பயனர்).

Checking originality என்பது படைப்பின் அசல் தன்மையை அடையாளம் காணும் பகுதியாகும். இதில், படைப்பின் அசல் தன்மை சோதனை செய்யப்பட்டு எப்படைப்போடு பொருந்தியிருக்கிறது என்பதை வகைவகையாக வண்ணமிட்டு இம்மென்பொருள் காட்டுகிறது. Instructorக்கு அனுப்பும் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் நமது படைப்பைத் திருத்தி மீள்பதிவிட்டு அசல் தன்மையைப் பரிசோதனை செய்துகொள்ள முடியும். Instructorக்கு அனுப்பிவிடப்பட்ட படைப்பு அவரால் நிராகரிக்கப்படும்போது, திருத்தம் செய்யப் பணிக்கும்போது மட்டுமே பயனர் அதனைத் திருத்த வாய்ப்புள்ளது.

மேற்கூறிய இவையே Turnitin மென்பொருளைப் பயன்படுத்துபவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அடிப்படையான செய்தியாகும்.

Turnitin மென்பொருளின் நான்கு முக்கிய செயலிகள்

Originality Report (அசல்தன்மை அறிக்கை)
பதிவேற்றம் காணும் ஒரு படைப்பை இணையத்தில் உள்ள பில்லியன் கணக்கான இணைய ஆவணங்கள், இணைய தொகுபதிவகத்தின் (repository) இதழ்கள், பதிப்புகள் மற்றும் Turnitin மென்பொருளில் சேமிக்கப்பட்ட படைப்புகளோடு ஒப்பிட்டு அப்படைப்பின் அசல் அறிக்கை (Originality Report)  என வெளியிடும்.

Quick Mark Sets (QM)
இச்செயலியின்வழி ஏற்கனவே வழங்கப்பட்ட புள்ளிகளை எளிதாக மாற்றியமைக்க முடியும். படைப்பின் எப்பகுதிக்கும் எளிதாக நகர்த்திச் செல்லும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்படுள்ளது. Turnitin வழங்கியிருக்கும் புள்ளிப் பட்டியலைத் தவிர்த்து Instructor தங்களது தேவைக்கேற்பப் புள்ளிப் பட்டியலை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

குரல்வழி கருத்துப் பதிவு (Voice Comments)
ஒவ்வொரு சொல்லின், வாக்கியத்தின், பத்தியின் இறுதியிலும் அல்லது விரும்பிய எப்பகுதியிலும் குரல் பதிவினை வைக்கும் வசதியை இம்மென்பொருள் கொண்டுள்ளது. குரல் பதிவின்வழி படைப்பின் குறிப்பிட்ட பகுதிகளில் செய்யவேண்டிய மாற்றங்கள், கருத்து தொடர்பான கேள்விகள் அனைத்தையும் எளிமையாக, தெளிவாக மற்றும் விரைவாக, பயனர்களுக்கு தெளிவுறுத்த முடியும்.  பயனர்களும் தங்களது கருத்துகளை, விளக்கங்களை குரல் பதிவிட்டு Instructorக்குத் தெரியப்படுத்தலாம். இது Instructor மற்றும் Student ஆகிய இருவரின் தட்டச்சு செய்யும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

Rubrics
பயனரின் படைப்புகளை மதிப்பிட்டு புள்ளிகளை வழங்க Rubric பயன்படுத்தப்படுகிறது. இதில் Standard rubric, Custom rubric, Qualitative Rubric என மூன்று விதமான பதிப்பீட்டு சட்டக வகைகள் உள்ளன. இதில் ஏதாவதொன்றைத் தெரிவுசெய்து புள்ளிகள் வழங்குவதற்கான அளவீடுகள் (criteria) மற்றும் ஒப்பளவுகள் (scales) என மதிப்பெண் சட்டகத்தை நெறிப்படுத்தி எளிதாகப் புள்ளிகள் வழங்க முடியும். பயனர்களும் இதனைப் பார்த்துத் தங்களது படைப்புத் தரத்தை மேம்படுத்த துணைநிற்கிறது.

முடிவாக

தகவல் தொழிநுட்ப உலகின் கற்றல்பேறில் ஓர் அங்கமாகி உள்ள Turnitin அதிகம் பயனளிக்கும் மென்பொருளாகும். இதன் செயல்பாட்டையும் தேவையையும் நன்கு புரிந்துகொள்வதன்வழி தரமான, செறிவான, அசல்தன்மைமிக்க படைப்பை உருவாக்க முடியும். தமிழ் மொழியையும் இதனுள் இடம்பெறச் செய்ய வழிவகைகளை மேற்கொள்வதன்வழி தமிழ் கற்றல், கற்பித்தல், ஆய்வுத் துறைகளை மேலும் செறிவாக்க முடியும் என்பது உறுதி. அல்லது குறைந்தபட்சம் மற்ற மொழிகளில் Turnitinயை பயன்படுத்தி அதிலிருந்து பெறப்படும் அனுபவத்தைக் கொண்டு தமிழ் சூழலில் எழுத்துப்பணியினை மேம்படுத்தவாவது முனையலாம்.

http://vallinam.com.my/version2/?p=2264

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.