Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11898571_10206456280237267_4356364066056

என்னணை அப்பு?

இடிஞ்சு போய் இருக்கிறாய்!

 

எல்லாம் முடிஞ்சுது...!

அது தான் இப்படி!

 

என்னப்பு நடந்தது?

 

ஆரம்பப் புள்ளிக்கே..,

திரும்ப வந்திருக்கிறம்!

 

இல்லை...இல்லை..!

இன்னும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறம்!

 

என்னப்பு.. கள்ளுத் தத்துவமோ?

 

கள்ளில முன்னேற்றம் !

அதை விடு..!

பிளாவிலை குடிச்சனாங்கள்,

இப்ப...,

கிளாசில குடிக்கிறம்!

 

ஆயிரமாய்த் துலைச்சு...,

அலங்கோலங்கள் சுமந்து...,

விலாசங்கள் கலைந்து,,,

தலையில துண்டோட...!

 

என்னப்பு நடந்தது?

கொஞ்சம் விளக்கமாய் சொல்லணை!

 

அது தானே சொல்லிறன்..,

ஆரம்பப் புள்ளிக்கே..,

திரும்ப வந்திருக்கிறம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை... அழகு புங்கை.
இதில்... அரசியல் உள்குத்து, கலப்படம்.. எதுவும்  இல்லை என நினைக்கின்றேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நகர்வுக்குள் அவன் ஆனையிறவு வரை வந்திடுவான்
அதன் பின்னர் நாங்கள் குடாவுக்குள் நின்றுகொண்டு கும்மியடிப்போம்.

அப்போதும்  சொல்லுவார்கள் இறுதித் தீர்வு இப்போது கைக்குள் என்று :grin:

Link to comment
Share on other sites

அடுத்த நகர்வுக்குள் அவன் ஆனையிறவு வரை வந்திடுவான்
அதன் பின்னர் நாங்கள் குடாவுக்குள் நின்றுகொண்டு கும்மியடிப்போம்.

அப்போதும்  சொல்லுவார்கள் இறுதித் தீர்வு இப்போது கைக்குள் என்று :grin:

ஏற்கனவே பலாலியிலும் மின்னேரியாவிலும்  நின்ற ஆமியை  ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டு வந்து விட்ட விண்ணர்கள் தானே நாங்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பலாலியிலும் மின்னேரியாவிலும்  நின்ற ஆமியை  ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டு வந்து விட்ட விண்ணர்கள் தானே நாங்கள் :rolleyes:

ஒரு இனத்தின், உச்ச  போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் சனம் இருந்திருக்கும் ( 2016´ல் தீர்வு என்று சொல்லும்... தமிழ் அரசியல் வாதிகள் உட்பட) என்று தெரிந்திருந்தால்... தேயத் தலைவரே, போரட்டத்தை ஆரம்பித்திருக்க மாட்டார்.
யாருமே... எதிர்பாரத  அளவில், தமிழனுக்குள்... ஒட்டுக் குழுவும், ஓணான் குழுவும் இருந்திருக்கு.
இது.... காக்கை வன்னியன் கால தமிழனின்... சாபக்கேடு. இந்த இனம்.... இனி, உய்யப் போவதில்லை.

Link to comment
Share on other sites

ஒரு இனத்தின், உச்ச  போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் சனம் இருந்திருக்கும் ( 2016´ல் தீர்வு என்று சொல்லும்... தமிழ் அரசியல் வாதிகள் உட்பட) என்று தெரிந்திருந்தால்... தேயத் தலைவரே, போரட்டத்தை ஆரம்பித்திருக்க மாட்டார்.
யாருமே... எதிர்பாரத  அளவில், தமிழனுக்குள்... ஒட்டுக் குழுவும், ஓணான் குழுவும் இருந்திருக்கு.
இது.... காக்கை வன்னியன் கால தமிழனின்... சாபக்கேடு. இந்த இனம்.... இனி, உய்யப் போவதில்லை.

சோகமான் உண்மை புங்கை என்ன செய்வது .

ஆயுதத்தால் ரிவேர்ஸ் கியரை மாறி தட்டிவிட்டோம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான் உண்மை புங்கை என்ன செய்வது .

ஆயுதத்தால் ரிவேர்ஸ் கியரை மாறி தட்டிவிட்டோம் .

புலியை விட... முதலில் ஆயுதத்தை தூக்கியது... "புளட்" தான்.
ஆனால்.... ஒரு சிங்கள  ராணுவத்தையும் சுடாமல், தமிழனை மட்டுமே சுட்டு... பயிற்சி பெற்றும், 
"ரிவேர்ஸ் கியரை" தட்டினதும், சோகமான உண்மை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலியை விட... முதலில் ஆயுதத்தை தூக்கியது... "புளட்" தான்.
ஆனால்.... ஒரு சிங்கள  ராணுவத்தையும் சுடாமல், தமிழனை மட்டுமே சுட்டு... பயிற்சி பெற்றும், 
"ரிவேர்ஸ் கியரை" தட்டினதும், சோகமான உண்மை.:)

சிறித்தம்பி! இதுக்கை ஏன் புளட் புல்லாங்குழலுகளை இழுக்கிறீங்க.....அவர்கள் தீர்க்கதரிசுகள் அட்ட அவதானிகள் எங்கை அசூல் அடிச்சால் அந்தமாதிரி அள்ளலாம் என்ற நற்சிந்தனையுடையவர்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ உண்மையாகவா?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை... அழகு புங்கை.
இதில்... அரசியல் உள்குத்து, கலப்படம்.. எதுவும்  இல்லை என நினைக்கின்றேன்.  :grin:

சத்தியமாய் இல்லை, தமிழ் சிறி!

நாங்கள் பிளேன் டீ குடிச்ச தேத்தண்ணிக் கடையளில, வாசலில இரண்டு அறிவிப்புப் பலகைகள் இருக்கும்!

முதலாவது...' உறவுக்குப் பகை கடன்".

இரண்டாவது.. " இங்கே அரசியல் பேசாதீர்கள்"  :grin:

அடுத்த நகர்வுக்குள் அவன் ஆனையிறவு வரை வந்திடுவான்
அதன் பின்னர் நாங்கள் குடாவுக்குள் நின்றுகொண்டு கும்மியடிப்போம்.

அப்போதும்  சொல்லுவார்கள் இறுதித் தீர்வு இப்போது கைக்குள் என்று :grin:

இறுதித் தீர்வு.. சம்பந்தர் கூறியது போல விரைவில் வரும்!

அதுவும்... மாகாண சபை வடிவில்....!:love:

சரித்திரம் 'வட்டப் பாதையில்' பயணிக்கின்றது என்பது எவ்வளவு உண்மை.. வாத்தியார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பலாலியிலும் மின்னேரியாவிலும்  நின்ற ஆமியை  ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டு வந்து விட்ட விண்ணர்கள் தானே நாங்கள் :rolleyes:

தீர்க்க தரிசனமில்லாத 'நகர்வுகள்' எங்களுடையவை!

ஓட.. ஓடத் துரத்தப்பட்டு.. வளங்களற்ற ஒரு பாலைவனப் பிரதேசத்தில் ஒதுக்கப்பட்ட இனம் எம்முடையது!

தன்னம்பிக்கை என்பது முற்றாகத் தகர்க்கப்பட்டு... வலிந்து புகுத்தப்பட்ட 'வருணாச்சிரம தர்மத்தின்' மத நம்பிக்கைகளைத் துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் வாழும் ஒரு இனம்!

மாட்டிறைச்சி சாப்பிடுவதை வெளியில் சொன்னால் வெட்கமென்று கூறும் இனம்..! ஆனால் வெட்கமில்லாமல் மாட்டிறைச்சி சமைத்துச் சாப்பிடும் இனம்!

வளமற்ற நிலத்தில் வளர்ந்ததால்.. வெறும் சலுகைகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் பணிந்து போக வேண்டிய கட்டாயம் அந்த இனத்துக்கு உள்ளது!

அதுவே எமது போராட்டம் காட்டிகொடுக்கப் பட்டும், அழிக்கப்பட்டதுக்குமான முக்கியமான காரணமாகும்! 

கசப்பான உண்மை என்னவெனில்.. ஒரு விடுதலைப் போராட்டத்துக்கான பக்குவம் எமது இனத்துக்கு இன்னும் ஏற்படவில்லை!

பெரும்பான்மை இனத்தவரும்..எமது இனத்துக்கு ஏற்பட்ட அநியாயங்களின் 'ஆழத்தைச்' சரியாகப் புரிந்து கொள்ளவுமில்லை!

இழப்பு எமக்கு மட்டுமல்ல... அவர்களுக்கும் தான்.. ஏன் முழு இலங்கைக்கும் தான்!

 

எல்லோருமே தலைவராக வேண்டும் என்னும் மனநிலை.. ஆயிரம் பிளவுகளை எமக்குள் உண்டாக்கி விட்டது!

தமிழரசுக்கட்சி வென்ற பின்னும் கூட.. அதற்கு அட்வைஸ் சொல்லும் ஆனந்த சங்கரியின் அறிக்கை ஒரு தற்கால உதாரணமாகும்!

போராட்டங்களின் நல்ல விளைவுகளில் ஒன்று.. எமது சமூகத்தின் ஒரு பகுதி.. புலம் பெயர்ந்தது என்று கூறுவேன்!

அதனால் ஏற்படும் அனுகூலங்களை நாம் பயன்படுத்த வேண்டும்... இன்னும் கோவில்களும், பூசாரிகளும் தான்..எமது 'மேட்டுக்குடி' சிந்தனையைச் சாக விடாமல் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்!

கோவில்கள் எமது கலாச்சாரத்தை வளர்க்கத் தேவை தான்... அதற்காகக் கும்மாளங்கள் தேவையில்லை!

ஆனால் எனக்குள்ள ஒரு ஆறுதல்..எமது இளைய தலைமுறை சுயமாகச் சிந்திக்கும் தன்மையைக் கொண்டிருப்பது தான்!

வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது மாதிரி ...மெல்ல மெல்லத் தாய் தந்தையரை மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்!

காலப்போக்கில் 'சாறிப் பாட்டிகள்' கூட இல்லாமல் போய்விடும்! 

தீர்வுக்கான உண்மையான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டு வருகின்றது என்றே கருதுகின்றேன்!

ஒரு புத்த பிக்கு கூடத் தேர்தலில் வெற்றி பெறாததும்...ஒட்டுக் குழுக்களின் தோல்வியும்.. ஒரு சுமுகமான தீர்வுக்கான சந்தர்ப்பமொன்று நெருங்கி வருவதையே காட்டி நிற்கின்றது!

அந்த நாள் விரைவில் வரவேண்டும் என்பது தான் எங்கள் அனைவரதும் விருப்பமாகும்!

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக அமையட்டும்!

நன்றி.. நிழலி..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மெல்ல மெல்லத் தாய் தந்தையரை மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்!

காலப்போக்கில் 'சாறிப் பாட்டிகள்' கூட இல்லாமல் போய்விடும்!

நாங்கள் மாறமாட்டமல்ல:unsure:.....ஐயோ சாரி இல்லாமல் போய்விடுமா?....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான் உண்மை புங்கை என்ன செய்வது .

ஆயுதத்தால் ரிவேர்ஸ் கியரை மாறி தட்டிவிட்டோம் .

 

அந்தக் காலத்து நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன், அர்ஜுன்!

எமது காலத்தில், எமது பொருளாதார நிலையில், தமிழீழம் சாத்தியம் தானா என்ற விவாதங்கள்.. கள்ளுக்கொட்டில் முதல் கொண்டு.. தேநீர்க்கடை ஈறாக நடந்தது முடிந்தன!

இன்று வரை சரியான விடை தெரியவில்ல..!

ஒரு வேளை தமிழீழம் கிடைத்தாலும்..அதை ஆழுகின்ற ஆழுமை எமதினத்திடம் இருக்கின்றதா எனினும் 'இல்லை' என்ற பதிலையே எமது கடந்த காலமும், தற்காலமும் எமக்கு அளிக்கின்றன!

திரும்பிப் பார்கையில் பல சந்தர்ப்பங்களை இழந்து விட்டோம் போல உள்ளது!

எம்மை வழி நடத்த ஒரு ஆளுமை மிக்க தலைமை தேவை..! உருவாகுமா என்ற ஏக்கம் மட்டுமே இப்போது உள்ளது!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! 

சிறித்தம்பி! இதுக்கை ஏன் புளட் புல்லாங்குழலுகளை இழுக்கிறீங்க.....அவர்கள் தீர்க்கதரிசுகள் அட்ட அவதானிகள் எங்கை அசூல் அடிச்சால் அந்தமாதிரி அள்ளலாம் என்ற நற்சிந்தனையுடையவர்கள்.:grin:

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. குமாரசாமியண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறந்த படம், "நறுக்"கென்ற எளிய கவிதை. வாழ்த்துகள் கவிஞரே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.