Jump to content

விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை


Recommended Posts

விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

 
 
start_2501789f.jpg
 

விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.

ஸ்டார்ட் மெனு வசதி முதலில் விண்டோஸ் 95-ல் அறிமுகமானது. அதன் பிறகு அது கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளைப் பொறுத்தவரை ஸ்டார்ட் மெனு விண்டோஸுக்கான நுழைவு வாயில் போன்றதுதான். பழக்கமான வீட்டில் வாசல் கதவைத் திறந்து உள்ளே செல்வது போல பயனாளிகள் விண்டோஸில் ஸ்டார்ட் மெனுவை வரவைத்துத் தாங்கள் விரும்பிய புரோகிராம்களையும், ஆவணங்களையும் எளிதாக அணுகினார்கள். பயனாளிகளுக்கு நட்பான இயங்குதளம் எனப் பாராட்டப்படும் விண்டோஸுக்கு அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்ததில் ஸ்டார்ட் மெனு அம்சத்துக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.

1993 முதல் மாறாமல் இருக்கும் இந்த அம்சத்தில் சின்னதாகப் புரட்சி செய்வதாக நினைத்து விண்டோஸ் 8-ல் மைக்ரோசாப்ட் கையை வைத்து ஸ்டார்ட் ஸ்கிரீன் வசதியைக் கொண்டு வந்தபோது பயனாளிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. விண்டோஸ் -8 எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போக இதுவும் முக்கிய காரணம்.

இப்போது, விண்டோஸ் 10 வெர்ஷனில் இந்த அம்சம் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது.

விண்டோஸ் எவ்வளவோ மாறிவிட்டது. கையடக்க கம்ப்யூட்டர்களாக ஸ்மார்ட் போன்கள் அவதாரம் எடுத்து இணைய உலகம் ஆண்ட்ராய்டு மயமாகிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்க ஒரு பழைய அம்சத்தில் கொண்டாட என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்.

22 ஆண்டுகள் ஆன பிறகும் ஸ்டார்ட் மெனுவை விண்டோஸில் இருந்து தூக்கி வீச முடியாமல் இருப்பது ஏன் என்றும் கேட்கலாம்.

இங்குதான் விஷயமே இருக்கிறது. ஸ்டார்ட் மெனு வெறும் ஒரு அம்சம் மட்டும் அல்ல; அது மென்பொருள் வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அழகாக உணர்த்தும் ஒரு அம்சம்; அதோடு பயன்பாட்டுத்தன்மை எனும் கோட்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லலாம்.

விண்டோஸ் மென்பொருள் வடிவமைப்பில் இது சின்ன விஷயம்தான்; ஆனால் இந்தச் சின்ன விஷயத்துக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருப்பது தெரியுமா?

அந்தக் கதையின் நாயகன் வடிவமைப்பாளரான டேனி ஆரன். முன்னால் மைக்ரோசாப்ட் ஊழியரான இவர்தான் ஸ்டார்ட் மெனுவின் பிரம்மா. 1993-ல் இவர் மைக்ரோசாப்டில் பணிக்குச் சேர்ந்தார். பழக்கவழக்க உளவியல் வல்லுநராகப் பயிற்சி பெற்ற செழுமையான ஆரனிடம் விண்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகத்தை மெருகேற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் விண்டோஸ் இயங்குதளத்தை அமைக்க வேண்டிய பணி இது.

ஆரன் ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளுக்குப் பேசும் திறன் பயிற்சியில் ஈடுபட்டவர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் சிம்பன்சிகளுடன் தொடர்புகொள்வதற்கான சாதனம் ஒன்றை உருவாக்கினார். சிம்பன்சி களுக்கு அவரால் எதையும் கற்றுத் தர முடியவில்லை என்றாலும், இந்த, முயற்சியின் மூலம் அவர் பயன்பாட்டுத் தன்மை பற்றிய முக்கிய குறிப்புகளைத் தெரிந்துகொண்டிருந்தார்.

விண்டோஸ் இயங்குதளம் தொடர்பான பயனாளிகள் அனுபவம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் பாடம்தான் அவருக்குக் கைகொடுத்தது.

அவருக்குக் கீழ் பணியாற்றிய குழுவினர் விண்டோஸ் இயங்குதளத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் கொடுத்து சோதனை செய்து கொண்டிருந்தனர். அநேகமாக எல்லாப் பயனாளிகளுமே ஒரு சின்ன டாஸ்க்கைக்கூட செய்து முடிக்க முடியாமல் திணறினர். அதாவது அவர்களால் விண்டோஸில் இருந்த அம்சங்களுக்குள் எளிதாகச் சென்றடைய முடியவில்லை. இந்தத் தடுமாற்றத்தைப் பார்த்த மற்ற புரோகிராமர்கள் நொந்து போயினர். பயனாளிகள் இப்படி இருக்கிறார்களே எனக் கோபம் அடைந்தனர்.

ஆனால் ஆரன் மட்டும் பிரச்சினை பயனாளிகளிடம் அல்ல; விண்டோஸில் எனப் புரிந்துகொண்டார். அதிலும் சோதனையில் பங்கேற்ற ஒருவரிடம் பேசிப்பார்த்தபோது அவர் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் பொறியாளராக இருப்பவர் எனத் தெரிந்துகொண்டார். போயிங் பொறியாளரே விண்டோஸ் உள்ளே எளிதாக உலா வர முடியாமல் தடுமாறினால் மற்றவர்கள் கதி என்ன யோசித்த ஆரன், இயங்குதளத்தில் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை எப்படிப் பயனாளிகள் கைகளில் எளிதாகக் கிடைக்கச்செய்வது எனத் தீவிரமாக யோசித்தார். விண்டோஸில் வடிவமைப்புக் கோளாறு என உணர்ந்தவர் ஒற்றை பட்டனில் எல்லாவற்றையும் பயனாளிகளுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என நினைத்தார்.

இந்த யோசனையின் பயனாகத்தான், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் கீழே கட்டம் கட்டமாகத் தோன்றச்செய்யும் டாஸ்க் பார் வசதியை உருவாக்கினார். அதன் பிறகு எந்த புரோகிராமையும் எளிதாகச் சென்றடையும் வகையில் டாஸ்க் பார் அடியில் ஸ்டார்ட் மெனுவை வைத்தார். அவ்வளவுதான்; வடிவமைப்பு முழுமையாயிற்று. விண்டோஸின் இடது மூலையில் ஆரம்ப கட்டம் போல இருக்கும் இந்த அம்சத்தை கிளிக் செய்தால் போதும் ஏணியில் ஏறுவது போல சரசரவென்று விண்டோஸுக்குள் சென்றுவிடலாம்.

இப்படித் தான் ஸ்டார்ட் மெனு விண்டோஸில் அறிமுகமானது.

ஆரன் பின்னர் மைக்ரோசாப்டில் இருந்து விலகிச்சென்றுவிட்டார். ஆனால் இந்தச் சின்ன கண்டுபிடிப்புக்கான காப்புரிமை அவரிடம்தான் இன்னமும் இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அவர் தனது குறிப்புகளைச் சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். பயனாளிகள் அனுபவத்தில் பாடமாக விளங்கக்கூடிய அந்தக் குறிப்பைக் காண: https://goo.gl/7e5cHl

http://tamil.thehindu.com/general/technology/விண்டோஸில்-ஸ்டார்ட்-மெனு-பிறந்த-கதை/article7512004.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி.

கல்லூரியில் படிக்கும்போது பன்ச் கார்ட்(Punch Card) மூலம் கணணியை இயக்கக் கற்று பின்னர் தாஸ்(DOS), யுனிக்ஸ்(Unix), ஐரிக்ஸ்(IRIX), ட்ரூ 64 (True 64) போன்ற இயங்குதளங்களை, வேலையின் திட்டப்பணிகளுக்கான கணணியின் கட்டளைகளை(Commands) மனப்பாடம் செய்து அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டிவரும்..
 
ஆனால் 90 களின் ஆரம்பத்தில் விண்டோஸ் வந்தபோது தனிக் கணணிக்கான(Standalone OS) இயங்குதளமாகவே இருந்தது.. பின்னர் யுனிக்ஸ், நாவல் நெட்வேர்(Nowell Netware) போன்ற இயங்குதளத்தின் கூட்டுக் கட்டமைப்பு(Networking) அம்ச வெற்றியை கண்டு, அவற்றிற்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் உருவாக்கியதுதான் விண்டோஸ் என்.டி(Windows NT) மற்றும் விண்டோஸ் வொர்க் குரூப்..(Windows Work Group).

விண்ட்டோஸ் 3.0 விலிருந்து விண்டோஸின் மறுபதிப்பான விண்டோஸ் 95 வந்தவுடன் கணணியில் அதன் முகப்பு கவர்ச்சி(GUI) பயனாளிகளை ஈர்த்தது.. அப்பொழுது ஆரம்பித்தது மைக்ரோசாஃப்டின் ஏறுமுகம். அதில் பயனாளிகள் கணணியின் கட்டளைகளை நினைவிற்கொள்ள அவசியமில்லாமல் வெறும் சுட்டியைக்கொண்டே நமக்குத் தேவையான அனைத்து கட்டளைகளை 'கிளிக்' செய்யவந்த வரப்பிரசாதத்தால், விண்டோஸ் மாபெரும் வெற்றியை ஈட்டியது..

இயங்குதள சந்தையில் அப்பொழுது மைக்ரோசாஃப்ட் பதித்த வெற்றியின் அடித்தளத்தை இன்றுவரை எந்த கொம்பனாலும் அசைக்க முடியவில்லை..

இடையில் ஆப்பிள்(Apple Mac), லினக்ஸ்(Linux) என லொட்டு,லொசுக்கு வந்தாலும், பயனாளிகளுக்கு விண்டோஸின் முகப்பும்(GUI), இயக்க எளிதான வசதியும்(Plug and Play) மிக சிறப்பனவை. 

 

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி ராசவன்னியன்.

விண்டோஸ் 10வது பதிப்பு ஜூலை 29 ல் வெளியாகிவிட்டது.

விண்டோஸ் 7, 8, 8.1 இன் பாவனையாளர்கள் இலவசமாக விண்டோஸ் 10 யை தரவிறக்கம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு  நவீனன்.

ராசவன்னியரின் விளக்கம் அந்தக்காலத்துக்கு அழைத்துச்சென்றது

பயன்பாட்டை செயலில் தந்த நிழலிக்கும் நன் றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொசுறு தகவல்:

விண்டோஸ் 3.0 மற்றும், விண்டோஸ் வொர்க் குரூப் 3.11 வெளிவந்தபொழுது அது முழுமையான இயங்குதள மென்பொருளாக இல்லை.. அவை தாஸ்(DOS) இயங்குதளத்தின் மேலேயே ஒரு கூடுதல் அம்சமாக செயல்பட்டது..

அதாவது கணணியை தாஸ் 6.22 மூலம் பூட்(Boot) செய்து C:\ என்று 'ப்ராம்ப்ட்' வந்தவுடன் win என தட்டச்சு செய்தால் மட்டுமே விண்டோஸ் 3,11 உயிர்பித்து இயங்கும்..

இந்த குறைபாட்டை நீக்கி, தாஸ் 6.22 மற்றும் விண்டோஸ் 3.11 இரண்டையும் ஒருங்கிணைத்து, முழு இயங்குதளமாக விண்டோஸ் 95 முதன் முதலில் வெளிவந்தது.

இதன்மூலம் விண்டோஸ் 95 கணணி, விண்டோஸ் என்.டி கூட்டுக்கட்டமைப்பில்(Network Domain) ஒரு அங்கமாக(Client) செயல்பட ஏதுவானது.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

உண்மை நிழலி, இயங்குதளம் 10 வேகமாக செயல்படுகிறது. நானும் கடந்த 1 கிழமையாக பயன்படுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

உண்மை நிழலி, இயங்குதளம் 10 வேகமாக செயல்படுகிறது. நானும் கடந்த 1 கிழமையாக பயன்படுத்துகிறேன்.

பத்திலை யாழ் இணையமும் வேகமாக வேலை செய்யுதா????? :unsure::oO::(

Link to comment
Share on other sites

 

பத்திலை யாழ் இணையமும் வேகமாக வேலை செய்யுதா????? :unsure::oO::(

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

சில நாட்களாக புதிய யாழிணையம் வேகமாகத்தான் வேலை செய்கின்றது.


எனது கணணியை பொறுத்தவரைக்கும் வேகம் என்று பார்க்கும் போது இதற்கு முந்திய யாழ் இணையம் வேகமாகவே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

புதிய யாழில் வேகம் மட்டும் பிரச்சனை அல்ல..  பலவகை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தும் ஏன் நிர்வாகத்தில் இந்த பராமுகம்?

இன்னமும் ஒரு திரியை பார்த்துவிட்டு உடனே அடுத்த திரிக்கு மாறினால், காத்திருக்க வைக்கிறது.. இதனால் வெறுப்பே ஏற்படுகிறது. :(

What's the necessity to have flood control here to wait for say 6 or 10 secs.. ? யாழை ஒரே நேரத்தில்  100 பேர் பார்ப்பது என்பது மிக சிறிய இணைய போக்குவரத்துதானே..?

மொத்தத்தில் பழைய யாழ்களமே பயனாளர்களுக்கு சிறந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய யாழில் வேகம் மட்டும் பிரச்சனை அல்ல..  பலவகை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தும் ஏன் நிர்வாகத்தில் இந்த பராமுகம்?

இன்னமும் ஒரு திரியை பார்த்துவிட்டு உடனே அடுத்த திரிக்கு மாறினால், காத்திருக்க வைக்கிறது.. இதனால் வெறுப்பே ஏற்படுகிறது. :(

What's the necessity to have flood control here to wait for say 6 or 10 secs.. ? யாழை ஒரே நேரத்தில்  100 பேர் பார்ப்பது என்பது மிக சிறிய இணைய போக்குவரத்துதானே..?

மொத்தத்தில் பழைய யாழ்களமே பயனாளர்களுக்கு சிறந்தது..

வன்னியனுக்கு காட்டப் படும்.....  flood control here to wait for say 6 or 10 secs.. முன்பு எனக்கு காட்டியது.
இப்போ.... அது தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

நான் எனது மடிகணணிக்கு விண்டோ 10 அப்டேட் செய்தபின்பு சவுண்ட் வரவில்லை. பிறகு ஆடியோ டிரைவர் ஐ அழித்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தபின்பு நல்லாக வேலை செய்யுது.

இதில் இருக்கிற மற்ற ஒரு பிரச்சினை எனவென்றால், விண்டோ 10 ல கூகிள் chrome பயன்படுத்தும்போது தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக வருகுது ஆனால் இங்கிலீஷ் எழுத்துக்கள் ஒழுங்காக இருக்குது. யாராவது சொல்லமுடியுமா எப்படி தமிழ் எழுத்துக்களை பெரிதாக பார்ப்பது எண்டு.

Link to comment
Share on other sites

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

கடந்த 3 நாட்களாக வேகமாகத்தான் வேலை செய்கின்றது.:)

நான் எனது மடிகணணிக்கு விண்டோ 10 அப்டேட் செய்தபின்பு சவுண்ட் வரவில்லை. பிறகு ஆடியோ டிரைவர் ஐ அழித்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தபின்பு நல்லாக வேலை செய்யுது.

இதில் இருக்கிற மற்ற ஒரு பிரச்சினை எனவென்றால், விண்டோ 10 ல கூகிள் chrome பயன்படுத்தும்போது தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக வருகுது ஆனால் இங்கிலீஷ் எழுத்துக்கள் ஒழுங்காக இருக்குது. யாராவது சொல்லமுடியுமா எப்படி தமிழ் எழுத்துக்களை பெரிதாக பார்ப்பது எண்டு.

நான் பொதுவாக கூகிள் chrome பாவிப்பது இல்லை. ஆனால் நீங்கள் இங்கு எழுதியபின் முயற்சித்து பார்த்தேன் எனது கணணியில் தமிழ் எழுத்து மற்றைய இணணய உலாவிகளில் வருவது போலவே வருகிறது கூகிள் chrome இலும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.