Jump to content

'முரளிதரனின் ஆதரவு தேவையில்லை' - அரியநேத்திரன்


Recommended Posts

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு தேவையில்லை என்று கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆதரவு வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியமை தொடர்பில் அவரிடம் நேற்று கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'முரளிதரன் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தமிழ் மக்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. அதேபோல், எந்தக் கட்சியும் அவரை சேர்த்துக்கொள்ளவும் இல்லை. இதனாலேயே, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்' என்றார்.

'இவரின் ஆதரவு இன்றி பல தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அவ்வாறே, இம்முறையும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.இருந்தபோதிலும், இப்போதாவது கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம். அவரது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு என்பது காலம் கடந்த ஞானோதயமாகும்' என்றும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/151659#sthash.EvttvQGx.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.