Jump to content

”அங்கஜன் அண்ணா” – “அங்கஜன் அண்ணா” எனும் ஸ்ரீகாந்தி யார்?


Recommended Posts

”அங்கஜன் அண்ணா” – “அங்கஜன் அண்ணா” எனும் ஸ்ரீகாந்தி யார்?

யாழிற்கு கடந்த 28ம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா திடீர் விஜயம் மேற்கொண்ட போது நல்லூர் ஆலய முன்றலில் வடக்கு கிழக்கை சேர்ந்த காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தார்கள்.

அந்த போராட்டத்தில் ஒரு பெண் முன்னின்று ஒழுங்கு படுத்தி குரல் கொடுத்தார். குறித்த பெண்ணினை அதற்கு முந்திய காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்களில் எவரும் கண்டதில்லை. ஆனால் அந்த பெண்ணே போராட்டத்தை வழி நடத்தினார்.

பின்னர் ஜனாதிபதியினை சந்திப்பதற்கு என கோவில் வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதனின் வீட்டுக்கு போராட்ட காரர்களை அழைத்து சென்று அங்கு சந்திப்பினை ஒழுங்குபடுத்தினார்.

ஜனாதிபதியுடன் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது துயரத்தை எடுத்து கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் இடை இடையில் குறித்த பெண் இந்த துயரங்களை எல்லாம் அங்கஜன் அண்ணா தான் தீர்த்து வைக்க கூடியவர்கள் என வார்த்தைக்கு வார்த்தை ”அங்கஜன் அண்ணா’ , ‘அங்கஜன் அண்ணா’ என ஜனாதிபதி முன்னால் அங்கஜன் புகழ் பாடிக்கொண்டு இருந்தார்.

ஒரு கட்டத்தில் திருகோணமலையை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனை திருகோணமலை கடற்படையினர் தான் கடத்தி சென்றனர் என ஜனாதிபதியிடம் முறையிட்டுக்கொண்டு இருந்த வேளை இடைமறித்து குறித்த பெண் அங்கஜன் அண்ணா இருக்கிறார் அவர் எல்லாம் செய்து தருவார் என கூற ஜனாதிபதி சைகை மூலம் குறித்த பெண்ணை கதைக்க வேண்டாம் என கூறி தாயை கதைக்க சொன்னார்.

இறுதியில் ஜனாதிபதி காணாமல் போனவர்கள் தொடர்பில் தனது தலைமையில் ஒரு செயலணி உருவாக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அது தேர்தல் முடிந்த பின்னரே உருவாக்கப்படும்.

உங்களை மாவட்ட அரச அதிபர் மற்றும் ஆளூநர் ஊடாக தொடர்பு கொள்வோம். ரகசிய முகாம்கள் அல்லது காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என நீங்கள் சந்தேகிக்கும் இடங்கள் இருந்தால் அது தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரினார்.

அவ்வேளையும் குறித்த பெண் அதனை அங்கஜன் அண்ணா மூலம் செய்யுங்கள் என ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறினார். உடனே ஜனாதிபதி அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு அவ்விடத்தில் இருந்து எழுந்து சென்றார்.

இந்த பெண் தான், காணாமல் போனோர் சங்க தலைவி ஸ்ரீகாந்தி தான் எனவும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அவசர அழைப்பு என பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்து யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள உள்ளாதாக அழைத்து இருந்தார்.

அந்த பெண்ணுடனேயே செவ்வாய்க்கிழமை (04.08.2014) காணாமல் போனவர்களின் உறவினர்கள் முரண்பட்டு அவருக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.

குறித்த பெண் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் அங்கஜனின் ஆள் எனவும் தன் மீது கை வைத்தால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி இருந்தார்.

அதேவேளை (04.08.2014) செவ்வாய்க்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அங்கஜன் இராமநாதன் அங்கு காணாமல் போகடிக்கப் பட்டவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அந்த பெண்ணுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/119384.htmlUpfa IntrRane 01Upfa IntrRane 02Upfa IntrRane

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  அடிக்கொரு தரம்.. அண்ணா ...அண்ணா என்று விழிக்கிற பொம்பிளையளை அவ்வளவா நம்பிறதில்லை!:oO:

அதே மாதிரித்தான் அடிக்கடி தாவணித் தலைப்பை.. இழுத்து மூடுற ஆக்களையும் அவ்வளவா நம்பிறதில்லை!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  அடிக்கொரு தரம்.. அண்ணா ...அண்ணா என்று விழிக்கிற பொம்பிளையளை அவ்வளவா நம்பிறதில்லை!:oO:

அதே மாதிரித்தான் அடிக்கடி தாவணித் தலைப்பை.. இழுத்து மூடுற ஆக்களையும் அவ்வளவா நம்பிறதில்லை!:grin:

நான்... பொக்கற்றுக்குள் சீப்பு வைத்து, அடிக்கடி.... தலை வாரும் ஆண்களை நம்புவதில்லை.:grin:

Link to comment
Share on other sites

”அங்கஜன் அண்ணா” – “அங்கஜன் அண்ணா” எனும் ஸ்ரீகாந்தி யார்?

குறித்த பெண் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் அங்கஜனின் ஆள் எனவும் தன் மீது கை வைத்தால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி இருந்தார்.

அதேவேளை (04.08.2014) செவ்வாய்க்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அங்கஜன் இராமநாதன் அங்கு காணாமல் போகடிக்கப் பட்டவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அந்த பெண்ணுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/119384.html

அங்கையன்தான் அந்த பெண்ணை செட்பண்ணி கதைக்க சொல்லிவிட்டு இப்ப பிளேட்ட மாத்தி போடுறார் போல இருக்குது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.