Jump to content

அறிவியல் அறிவோம் : பூமியின் தூரத்துச் சகோதரி


Recommended Posts

kepler_2497679f.jpg

இரண்டாவது பூமி (பெர்த் 2.0) என்று வானவியலாளர்கள் அழைக்கும் கிரகத்தை நோக்கிய தேடல் வெகு காலமாக நடக்கிறது. அதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாஸாவின் கெப்ளர் கிரக-வேட்டை விண்கலத்தைச் சேர்ந்த வானவியலாளர்கள், இதுவரை கண்டறியப்பட்டிருப்பவற்றிலேயே பூமியுடன் அதிக ஒற்றுமை கொண்டிருக்கும் கிரகம் ஒன்றை தாங்கள் கண்டறிந்திருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்தார்கள்.

அதுக்கும் இதுக்கும் இடையே

பூமியின் விட்டத்தை விட ஒன்றரை மடங்குக்குச் சற்று அதிகமான விட்டம் கொண்டது அந்தக் கிரகம். அதன் பெயர் கெப்ளர் 452பி. அந்தக் கிரகம் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றுகிறது. சுற்றுப்பாதையை ஒரு தடவை நிறைவு செய்ய 385 நாட்கள் ஆகின்றன. இதனால் மிதமான வெப்பநிலையும், மேற்பரப்பொன்று இருக்குமென்றால், நீரும் இருப்பதற்கு அதில் சாத்தியமுள்ளது.

புதிய கிரகத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, பாறைத்தன்மை கொண்ட கிரகத்துக்கும் நெப்டியூன் போன்ற வாயுக் கோளத்துக்கும் இடையிலான தன்மையில் இந்தக் கிரகம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தக் கிரகம் பாறைத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு 50-லிருந்து 62 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாக, ‘தி அஸ்ட்ரானமிகல் ஜர்னல்’ இதழில் ஜோன் ஜென்கின்ஸ் தெரிவிக்கிறார். இது, அந்தக் கிரகம் சார்ந்துள்ள விண்மீனின் அளவைப் பொறுத்தே அமையும். அப்படியென்றால் பூமியின் நிறையை விட ஐந்து மடங்கு நிறையை அந்தக் கிரகம் கொண்டிருக்கும் என்று பொருள்.

சூரியனுக்கு அண்ணன்

அப்படிப்பட்ட கிரகம் அடர்த்தியான, மேகமூட்டமான வளிமண்டலத்தையும், எரிமலைகளையும், பூமியைவிட இரு மடங்கு ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கக் கூடும் என்கிறார் ஜென்கின்ஸ். செய்தியாளர் சந்திப்பின்போது இந்தக் கிரகத்தைப் பற்றி விவரித்த ஜென்கின்ஸ், சாப்மேன் மொழிபெயர்த்த ஹோமரின் இதிகாசத்தை முதன்முதலில் பார்த்த பரவசத்தை விவரித்துக் கீட்ஸ் எழுதிய வரிகளைக் கூறினார்: “வானகத்தை உற்று நோக்குபவர் புதிய கிரகம் ஒன்றைக் கண்டறிந்ததைப் போல நானும் உணர்ந்தேன்.”

இந்தக் கிரகத்துக்கு ஒளியூட்டிக்கொண்டிருக்கும் விண்மீனுக்கு நமது சூரியனைவிட 150 கோடி ஆண்டுகள் வயது அதிகம். சூரியனை விட 20% அதிக ஒளியையும் கொண்டது அது. உயிர் வாழ்க்கைக்கான அறிகுறிகளையும் அது கொண்டிருக்கிறது என்றும் ஜென்கின்ஸ் கூறுகிறார்.

பூமியின் சகோதரி

“கெப்ளர்-452பி-யை பூமிக்கு ஒன்றுவிட்ட, அக்காவாகக் கருதலாம். பூமியின் பரிணாமமடைந்துவரும் சூழலைப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு நமக்கு” என்கிறார் அவர். “ஒரு விண்மீனைச் சுற்றியுள்ள பகுதிகளுள் உயிர் வாழ்க்கைக்குச் சாதகமாக இருக்கும் ஒரு பகுதியில் 600 கோடி ஆண்டுகள், அதாவது பூமியின் வயதைவிட நீண்ட காலம் இந்தக் கிரகம் இருந்திருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்கவே வியப்பாக இருக்கிறது. உயிரினம் வாழ்வதற்குத் தேவையான விஷயங்கள், சூழல்கள் இந்தக் கிரகத்தில் இருந்திருக்குமென்றால் உயிரினம் தோன்றுவதற்கு அடிப்படையான வாய்ப்பு அது” என்கிறார் ஜென்கின்ஸ்.

உயிர் வாழ்க்கைக்கான சாத்தியங்களைக் கொண்ட கிரகங்களின் சிறப்புப் பட்டியலில் கெப்ளர் 452பிக்கும் இடம் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டுமென்றால் அந்தக் கிரகத்தின் நிறையை நேரடியாகக் கணக்கிட வேண்டும். அந்தக் கிரகத்தின் இழுவிசையால் அந்த விண்மீனின் சுழற்சியில் ஏற்படும் தடுமாற்றத்தை உற்று நோக்குவதற்கு ஏதுவான தொலைவிலிருந்து பார்க்க வேண்டும். அதற்குத் தற்போது சாத்தியமே இல்லை. ஏனெனில், கெப்ளர் 452பி பூமியிலிருந்து 1,400 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.

பட்டியலில் முதலாக..

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் பட்டியலைக் கடந்த வாரம் கெப்ளர் வானியலாளர்கள் வெளியிட்டனர். அதில் இந்தக் கிரகம்தான் முதலாவது. இதுவரை கெப்ளர் விண்கலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 4,696-ஐத் தொடுகிறது. இவற்றில் பெரும்பாலானவை பூமியைப் போன்றே சிறியவை. “நாமெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் ரொட்டித் துணுக்குகள்,” என்கிறார் ஜெஃப் காக்ளின். இந்தக் கிரகங்களின் பட்டியலைத் தொகுத்தவர் இவர்தான்.

2009-ல் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் பால்வெளி மண்டலத்தில் சைக்னஸ், லைரா ஆகிய விண்மீன் தொகுப்புகளுக்கு இடைப்பட்ட பகுதியை அவதானிப்பதில் நான்கு ஆண்டுகளைக் கழித்தது. கிரகங்கள் கடந்துசெல்லும்போது விண்மீன்களின் ஒளி மங்குவதை அந்த விண்கலம் உற்று நோக்கிக்கொண்டிருந்தது. 2013-ல் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. எனினும் அது திரட்டிய தரவுகளை வானியலாளர்கள் இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தத் தரவுகளை ஆராயும்போதெல்லாம் புதுப்புது கிரகங்கள் தலைகாட்டுகின்றன.

உயிர்கள் இருக்கின்றனவா?

இந்தக் கிரகத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பு மிக முக்கியமான தருணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே சமயத்தில்தான் ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிஷேல் மேயரும் டீடீயெய் கேலோஸும் பூமியிலிருந்து 50 ஒளியாண்டுகள் தூரத்தில் பேகஸி என்ற விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்தார்கள். சூரியக் குடும்பத்துக்கு வெளியே சூரியனைப் போன்ற ஒரு விண்மீனுக்குச் சொந்தமான கிரகங்களில் முதல்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் அதுதான். அந்தக் கண்டுபிடிப்புதான் பெரும் வானியல் புரட்சிக்கு வித்திட்டது.

டாக்டர் கேலோஸ் தற்போது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் அவர், “மகத்தான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதேபோன்று ஊக்கத்துடன் கடுமையாக உழைத்தால் பிற கிரகங்களில் உயிர்வாழ்க்கை சாத்தியமா என்ற கேள்விக்கு விடைகாணப்பட்டுவிடும்” என்றார்.

10 சதவீதம்

பால்வீதியில் இருக்கும் 20 ஆயிரம் கோடி விண்மீன்களில் பூமியின் அளவில் இருக்கும் கிரகங்களைக் கொண்டிருப்பவை சுமார் 10 சதவீதமாக இருக்கலாம் என்பது கெப்ளர் வானியலாளர்களின் கணக்கீடு. கெப்ளர் 452பி அவற்றுள் ஒன்றாக இருக்கலாம். இவற்றில் 600 விண்மீன்கள் பூமியிலிருந்து 30 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றன. அவற்றில் 60 விண்மீன்களில் பூமி போன்ற கோள்களுக்கான சாத்தியங்கள் இருக்கின்றன. வருங்காலத் தொலைநோக்கிகளின் நம்பிக்கை இந்த விண்மீன்கள்தான்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை

http://tamil.thehindu.com/general/education/அறிவியல்-அறிவோம்-21-பூமியின்-தூரத்துச்-சகோதரி/article7499114.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
    • இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக‌ அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா?  தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.  
    • தோனி விளையாடாவிட்டாலும் ஏதாவது ஒரு கோச்சாக சென்னையில் இருப்பார். கடைசியாக வரும் என்று கணித்துள்ளார்கள்.
    • அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார்.  நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும். யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற  சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.