Jump to content

திரை விமர்சனம்: ஆரஞ்சு மிட்டாய்


Recommended Posts

omreview_2497657f.jpg

வணிக சினிமா வகுத்துக்கொண்ட இலக்கணங்களை மீறி வெளியாகும் பல படங்களை ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘காக்கா முட்டை’. இதே வகையில் பாசாங்கில்லாத படமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’.

108 ஆம்புலன்ஸ் வண்டியில் அவசர கால மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் சத்யா (ரமேஷ் திலக்) தன் பணியை மிகவும் விரும்பிச் செய்கிறார். தன் பணிக்காகக் காதலையே துறக்கும் அளவுக்கு அவர் இதை நேசிக்கிறார். கைலாசம் (விஜய் சேதுபதி) அறுபது வயது இதய நோயாளி. ஆதரவின்றி வீட்டில் தனியாளாக வசிக்கிறார். நோய் தரும் பாதிப்பைவிடத் தனிமை தரும் அழுத்தமே அவருக்கு அதிகம். ஆம்புலன்ஸுக்கு போன்செய்து அழைக்கிறார். சத்யாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகமும் (ஆறுபாலா) அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வருகிறார்கள். பிடிவாதம், வீம்பு ஆகியவற்றோடு நிராகரிப்பின் வலியையும் சுமந்துகொண்டிருக்கும் கைலாசத்துடன் மருத்துவமனை நோக்கி அவர்களது பயணம் தொடங்குகிறது.

நோய்வாய்ப்பட்ட முதுமையிலும் தன் ஆளுமையை இழக்காமல் வாழ்க்கையை ரசிக்கும் கைலாசத்தின் சேட்டைகளைச் சமாளிக்க முடியாமல் சத்யாவும் ஆறுமுகமும் திண்டாடுகிறார்கள். அவரது உடல்நலம் மோசமான நிலையில் இருப்பதை அறிந்து கொள்ளும் சத்யா, பாதி வழியில் அவரை விட்டுச் செல்ல மனமில்லாமல் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். மருத்துவமனையில் தங்கப் பிடிக்காமல் வெளியேறும் கைலாசத்தை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குப் புறப்படுகிறார். கைலாசத்தை அவரது வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தாரா? கைலாசத்தின் மகன் என்ன செய்கிறார்? அவர் நிலை ஏன் இப்படி இருக்கிறது?

மனித உறவுகளின் அருமையும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான தேடலும்தான் படத்தின் ஆதார மையம். சத்யா, கைலாசம் என்னும் இரு பாத்திரங்களை வைத்து இந்த இரண்டு அம்சங்களையும் அறிமுக இயக்குநர் பிஜு விஸ்வநாத் கையாள்கிறார். உறவுகளைப் பேணுதல் என்பது சக வாழ்வுக்கான அடிப்படை. சுயநலத்துக்காக அதைத் தவிர்ப்பவர்கள் தங்கள் எதிர்கால வேதனைகளுக்கான விதைகளைப் போட்டுக்கொள் கிறார்கள். இளம் இயக்குநர் பிஜு விஸ்வநாத் முதல் படத்திலேயே இப்படிப்பட்ட கனமான விஷயத்தைக் கையில் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அவருடன் இணைந்து இந்தக் கதையை எழுதியிருக்கும் விஜய் சேதுபதியின் முயற்சியும் பாராட்டுக்குரியது.

பெரியவரின் ஏக்கம் மட்டுமின்றி அவருக்குள் உயிர்ப்புடன் இருக்கும் குறும்பும் பதிவாகியிருப்பது மனித இயல்பை உணர்ந்த சித்தரிப்பு. காதலை விடவும் தன் பணியை நேசிக்கும் சத்யாவின் அணுகு முறை இளைஞர்களிடையே அரிதாகக் காணப்படும் குணம். அதை இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரித்திருப்பது இயக்குநரின் வெற்றி.

இரவில் ஆட்டோவில் பயணிப்பது, முதியவர் உற்சாகமாக நடனமாடுவது என்று கொண்டாட்டத்துக்கும் குறைவில்லை.

நரைத்த தலை, தடித்த மூக்குக் கண்ணாடி, காவியேறிய பற்கள், சர்க்கரை நோய் இருந்தாலும் ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடும் குழந்தைத்தனம் என்று கைலாசமாகக் கச்சிதம் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் அவரது உடல் மொழியில் நோய்வாய்ப்பட்ட முதியவருக்கான தளர்வை அதிகம் காண முடிய வில்லை. ஒப்பனையும் சீராக இல்லை.

அப்பாவின் வயதையொத்த கைலாசத்திடம் இனம்புரியாத ஓர் ஒட்டுதலை உணரும் அவரசகால மருத்துவ உதவியாளராக ரமேஷ் திலக் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுபாலா, காதலியாக நடித்திருக்கும் அஷ்ரிதா ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ஒரு பாடல் மனதை அசைக்கிறது. பின்னணி இசை படத்தின் ஒலி வடிவிலான பாத்திரமாகவே இருக்கிறது.

கனமான கதை, யதார்த்தமான சித்தரிப்பு ஆகியவை இருந்தும் முழுமையான திரைப்பட அனுபவம் கூடவில்லை. கதையை நகர்த்திச் செல்லப் போதிய சம்பவங்கள் இல்லாததே இதன் காரணம். உணர்வு தளத்திலும் காட்சி மொழியிலும் நடிப்பிலும் வலுவாக வெளிப்படும் இந்தப் படம், விரைவிலேயே ஒரு குறிப்பிட்ட தடத்துக்குள் சிக்கிக் கொண்டு தேங்கி நிற்கிறது. ஒன்றே முக்கால் மணிநேரமே ஓடும் இந்தப் படம் அந்த நீளத்துக்குக்கூட நியாயம் செய்யும் அளவுக்கு வலுவான சம்பவங்களோ தேக்க மற்ற திரைக்கதையோ அமையவில்லை. எனவே நீளமான குறும்படம் பார்த்த உணர்வையே தருகிறது இந்தப் படம்.

கைலாசத்தின் உடல் நிலைக்கு அவர் ஆரஞ்சு மிட்டாயைச் சாப்பிடக் கூடாது. ஆனால் அவருக்குப் பிடித்திருக்கிறது, சாப்பிடுகிறார். இதையே தலைப்பாக வைத்ததன் மூலம் இனிப்பும் புளிப்பும் கலந்த அந்த மிட்டாயைப் போலத் தான் வாழ்க்கையும் என்று இயக்குநர் சொல்லவருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

காட்சிகள், வசனங்கள் மூலம் சொல்லப்படும் இந்தச் செய்தி, முழுமையான திரைப்பட அனுபவமாக மாறத் தவறுகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-ஆரஞ்சு-மிட்டாய்/article7499014.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

இப்படியான கதை உள்ள படங்கள் தான் தேவை. அதை விட்டு சும்ம கதை ஒண்டும் இல்லாமல் 200, 300 கோடி கொட்டி படமெடுத்தாலும் ஓடாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.