Jump to content

நியூசிலாந்து அணியின் 303 ரன்களை விரட்டி சென்று வீழ்த்தியது ஜிம்பாப்வே!


Recommended Posts

நியூசிலாந்து அணியின் 303 ரன்களை விரட்டி சென்று வீழ்த்தியது ஜிம்பாப்வே!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களை விரட்டி சென்று வெற்றி பெற்றது.

irvin.jpg

ஹராரே நகரில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் குப்தில் 11 ரன்னிலும் லாதம் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வில்லியம்சனும் ராஸ் டெயிலரும் இணைந்து ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

வில்லியம்சன் 102 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ராஸ் டெயிலர் 122 பந்துகளில் 112 ரன்களை அடித்தார். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை எடுத்தது.

ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் மசாக்டாசாவும் சிபாபாவும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தொடக்கம் முதலே விளாசினர். மசாக்டசா 99 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்தார். சிபாபா 42 ரன்களில் வீழ்ந்தார்.

அடுத்து வந்த இர்வின் 108 பந்துகளில் 130 ரன்களை மின்னல் வேகத்தில் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும்.சர்வதேச கிரிக்கெட்டில் இர்வின் அடித்த முதல் சதமிது.  ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பாரா தன் பங்குக்கு 26 ரன்கள் எடுத்தார்.ஜிம்பாப்வே அணி 49 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=50437#

Link to comment
Share on other sites

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டம்: விக்கெட் இழப்பின்றி வென்றது நியூஸி.

 
பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் மார்ட்டின் கப்டில். படம்: ஏ.எப்.பி
பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் மார்ட்டின் கப்டில். படம்: ஏ.எப்.பி

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்டில், டாம் லேத்தம் ஆகியோர் சதமடித்தனர்.

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் மஸகட்ஸா 0, கிரேக் இர்வின் 12, சகாப்வா 2, கேப்டன் சிகும்பரா 5, சிபாபா 42 ரன்களில் ஆட்டமிழக்க, 17.4 ஓவர்களில் 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த சீன் வில்லியம்ஸ்-சிகும்பரா ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. சீன் வில்லியம்ஸ் 26 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கிரெமர் 5 ரன்களிலும், உட்சேயா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இதனால் 146 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஜிம்பாப்வே.

சிக்கந்தர் சதம்

இதன்பிறகு பன்யங்காரா களமிறங்க, மறுமுனையில் ஜிம்பாப்வேயை சரிவிலிருந்து மீட்பதற்காக அதிரடியாக ரன் சேர்த்தார் சிக்கந்தர் ராஸா. தொடர்ந்து வேகமாக ஆடிய அவர் 95 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 3-வது சதமாகும்.

ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பன்யங்காரா 33 ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. சிக்கந்தர் ராஸா 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிக்கந்தர்-பன்யங்காரா ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது.

நியூஸிலாந்து தரப்பில் ஐஸ் சோதி 3 விக்கெட்டுகளையும், கிராண்ட் எல்லியட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

நியூஸி. பதிலடி

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில்-டாம் லேத்தம் ஜோடி ஜிம்பாப்வே பவுலர்களை மிக எளிதாக எதிர்கொண்டது. இதனால் கப்டில் 70 பந்துகளிலும், டாம் லேத்தம் 60 பந்துகளிலும் அரைசதம் கண்டனர். இதனால் 28.5 ஓவர்களில் 150 ரன்களைக் கடந்தது நியூஸிலாந்து.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய கப்டில் 116 பந்துகளில் சதமடித்தார். அவரைத் தொடர்ந்து டாம் லேத்தம் 106 பந்துகளில் சதமடித்தார். இறுதியில் 42.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 236 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது நியூஸிலாந்து. மார்ட்டின் கப்டில் 138 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 116, டாம் லேத்தம் 116 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

http://tamil.thehindu.com/sports/ஜிம்பாப்வேக்கு-எதிரான-2வது-ஒருநாள்-ஆட்டம்-விக்கெட்-இழப்பின்றி-வென்றது-நியூஸி/article7502149.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.