Jump to content

மாவீரர்கள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்! Photo in


Recommended Posts

 

மாவீரகள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்!

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)யின் முதலாவது  மாபெரும் பொதுக்கூட்டம்  வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில்  நடை பெற்று கொண்டு உள்ளது.
 
கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுவிடம் மற்றும் மூத்த தளபதிகள் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின்   நினைவுவிடம் அமைந்துள்ள  தீருவிலில் நினைவிடத்தில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவதால் படுகொலை செய்யப்பட பொதுமக்களின் நினைவுநாள் இன்று அதனால் அவர்களுக்கு மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாவீரகள் நினைவு
பாடலுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது .

மேலதிக செய்திகள் விரைவில்..
Valvai%20tnfp%20meeting-1.JPG
Valvai%20tnfp%20meeting-2.JPG
Valvai%20tnfp%20meeting-3.JPG
Valvai%20tnfp%20meeting-4.JPG
Valvai%20tnfp%20meeting-5.JPG
Valvai%20tnfp%20meeting-6.JPG
Valvai%20tnfp%20meeting-7.JPG
Valvai%20tnfp%20meeting-8.JPG
Valvai%20tnfp%20meeting-9.JPG
Valvai%20tnfp%20meeting-10.JPG
Valvai%20tnfp%20meeting-11.JPG
Valvai%20tnfp%20meeting-12.JPG
Valvai%20tnfp%20meeting-13.JPG
Valvai%20tnfp%20meeting-14.JPG
Valvai%20tnfp%20meeting-15.JPG
Valvai%20tnfp%20meeting-16.JPG
Valvai%20tnfp%20meeting-17.JPG
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு, மஞ்சள் கொடிகள்... பட்டொளி வீசிப் பறக்க,
கடலா, கடல் அலையா..... என திரண்ட மக்கள் வெள்ளத்தின் முன் நடந்த கூட்டத்தைப் பார்க்க....
"நமது வெற்றியை, நாளை சரித்திரம் சொல்லும்..... இப்படை தோற்கின் எப்படி வெல்லும்..." என்னும் பாடல்.... நினைவுக்கு வந்தது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும்வரை ஏனையவர்கள் அரசியல்செய்ய ஜனநாயகவெளி தேவை எனக் கூப்பாடுபோட்டவர்கள். இப்போது ஒரு சாராரை மட்டும் விமர்சனம் செய்வது வியப்பளிக்க்கின்றது.பாதுகாப்பான ஜன்னல்களுக்குள் இருந்துகொண்டு ஓலமிடுவதால் எதுவுமே நடந்திடப்போவதில்லை. உங்களுக்கான களமும் இப்போது புலத்தில் விரிந்துகிடக்கின்றது அங்கே நீங்களும் அரசியல் செய்யலாம் எனும் நிலை வந்தாயிற்று போங்கள் அங்கு உங்களது அரசியல் எதுவோ அதனைச் செய்யுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

இவ்வளவு  காலமும் மாவீரர் தினங்களுக்கும எங்கிருந்தார் மிஸ்டர் பொன்னம்பலம்??? இப்ப வாக்குத் தேவைப்படுகுது.. வந்திட்டார்... எல்லாம் அரசியலில் சகஜமப்பா ...

Link to comment
Share on other sites

புலிகள் இருக்கும்வரை ஏனையவர்கள் அரசியல்செய்ய ஜனநாயகவெளி தேவை எனக் கூப்பாடுபோட்டவர்கள். இப்போது ஒரு சாராரை மட்டும் விமர்சனம் செய்வது வியப்பளிக்க்கின்றது.பாதுகாப்பான ஜன்னல்களுக்குள் இருந்துகொண்டு ஓலமிடுவதால் எதுவுமே நடந்திடப்போவதில்லை. உங்களுக்கான களமும் இப்போது புலத்தில் விரிந்துகிடக்கின்றது அங்கே நீங்களும் அரசியல் செய்யலாம் எனும் நிலை வந்தாயிற்று போங்கள் அங்கு உங்களது அரசியல் எதுவோ அதனைச் செய்யுங்கள்.

 

 

பல விடயங்கள் இங்கு குழந்தை பிள்ளைகளுக்கு  விளக்குவது போல விளக்கவேண்டிக்கிடக்கு .

அரசியல் ஜனநாயக வெளிதேவை என்பதற்கும் தாம் விரும்பும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மற்ற கட்சிகளை தாக்குவதற்கும் வித்தியாசம் இருக்கு .

குமார் ,விஜயகலா ,டக்கிலஸ் தோற்கவேண்டும் என்பதற்கும் அவர்களை போடவேண்டும் என்பதற்கும் பெரிய வித்தியாசம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்தினத்தையும் மாவீரர்களையும் அவர்கள் மாவீரர்களானதற்கான நோக்கத்தையும் விமர்சித்து அவற்றின்மீது சாணம் எறிந்தவர்கள் இப்போது மாவீரர்களுக்காக வக்காளத்துவாங்குவது நகைப்பிற்கிடமாகவுள்ளது. தேசியத் தலைவரது வழிநடத்தலில் தமிழீழப்போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் பயங்கரவாதிகள் எனக்கூறுயதன்மூலம் அவரது கட்டளையேற்று எனது மண்ணில் விதயாகிப்போன மாவீரர்களைது ஈகையையும் சேர்த்தே பயங்கரவாதம் எனக்கூறி சுதந்திரதினத்தில் தேனீரும் கித்துள் பனங்கட்டியும் வாங்கிச்சாப்பிட்டவர்கள் துடுப்பாட்டமாடியவர்கள் சிங்கக்கொடிகாட்டி காளியின்பெயரால் யாழில் சங்கதமாடியவர்களுடன் ஒப்பிடுகையில், யாழ்களத்தின் அன்பான உறவாகிய அர்ச்சுண் கூறியதுபோல தமிழர்களது சொத்துக்களையும் சுகங்களையும் அரசியல் எனும்பெயரில் சுரண்டிய காசுடன் சுகமாக இருந்திடாமல் தமிழர்களுக்கான (அது புலம்பெயர் புலிவால்களுக்காவது இருந்திட்டுப்போகட்டும் எங்களுக்காக அரசியல் செய்யவும் யாராவது தேவைதானே) அரசியலை முன்னெடுத்துச் செல்லும் கஜேந்திரன் மாவீரர்களை இப்போதாவது நினைவுகூர்வதில் தவறேதும் இல்லை.

அர்ச்சுண், அதுதானே கூறுகிறேன் சரியோ பிழையோ, நீங்கள் இனைத்தபடி இவைகள் எல்லாம் நீங்கிய சூழல் இப்போது இருக்கின்றது அவர்களைப் போடுவதற்கான துப்பாக்கிகள் கூட நந்திக்கடலில் அமிழ்ந்துபோய்விட்டன அப்படி யாராவது போட்டுத்தள்ளினால் அரசியல் களத்தினை மாற்றி அமைப்பதற்காகவோ அன்றேல் புலிப்பிராந்தி அரசியலை தொடர்ந்து செய்வதற்காகவோ, தமிழர் விரோததேசம் இந்தியாவோ அன்றேல் சிங்களமோ இல்லையேல் பிராந்திய அரசியலில் தங்களைது இருப்பை நிலைநிறுத்த முயல்பவர்களோ செய்யலாம். இதில் என்ன விளக்கம் தேவை.

Link to comment
Share on other sites

மக்கள் சொத்தில் வாழும் ஒரு சில புலத்து பினாமிகளின் பணத்தில் குளிர்காயும் மக்கள் முன்னனி கஐன் குழுக்கள். 
மாவீரர்கள் இலங்கைபாரளுமன்ற அரசியலிற்கும் இலங்கை யாப்பிற்கும் எதிராக விடுதலை என்ற வேட்கைக்காக மடிந்தவர்களை ப்படி இந்த குழுக்கள் கொச்சைபடுத்துகிறார்கள்.அபாயம் மக்களே கவனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மட்டும் புலிகளையும் மாவீர்ர்களையும் தங்களுக்கு பயன்படுத்தலாம் என்று யாரப்பு எழுதிக் கொடுத்தது? 

Link to comment
Share on other sites

 

முச்சுக்கு 100தடவை தலைவரால் உருவாக்கிய கூட்டமைப்பு   என்று சொல்லிகொண்டு யார் எழுதிகொடுத்தது என்று கேட்டால்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாறிப்போன கூட்டமைப்பிற்கு  சந்தர்ப்பம் கொடுக்க  நினைப்பவர்கள்...
தேசிய மக்கள் முன்னணிக்கு ஏன் சந்தர்ப்பம் கொடுக்கக்கூடாது என நினக்கின்றீர்கள்?

 

 

எல்லாம் தேர்த்தலில் வெற்றி பெறும் வரை தான் !!!

இங்குதான் இளைஞர்கள் கொதித்தெழுந்தார்கள்.
இங்குதான் மக்கள் விழிப்படைந்தார்கள்.
அங்குதான் மக்கள் தலைவர் பிரபாகரன் நிற்கின்றார்.

Link to comment
Share on other sites

அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் இதன் அர்த்தம் என்ன தெரியுமா தமிழனின் பொருளாதார வளங்களை அன்னியனிற்கு சிங்களவனுக்கு காட்டி கொடுத்தவர்களிற்கு பின்னால் போவதிலும் பார்க்க மாவையும் சம்பந்தனும் இப்பவும் மேலனவர்கள் .தமிழ் தேசியமக்கள் முன:னனியை ஏன் கீழ் எழுதியுள்ளார்கள் தமிழன் முட்டால்கள் என்று இப்பவும் மண்தூவுகிறார்கள்

Link to comment
Share on other sites

அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் இதன் அர்த்தம் என்ன தெரியுமா தமிழனின் பொருளாதார வளங்களை அன்னியனிற்கு சிங்களவனுக்கு காட்டி கொடுத்தவர்களிற்கு பின்னால் போவதிலும் பார்க்க மாவையும் சம்பந்தனும் இப்பவும் மேலனவர்கள் .தமிழ் தேசியமக்கள் முன:னனியை ஏன் கீழ் எழுதியுள்ளார்கள் தமிழன் முட்டால்கள் என்று இப்பவும் மண்தூவுகிறார்கள்

இதெல்லாம் ததேமமு வைத்தூக்கிப்பிடிப்பவர்களுக்கு விளங்கவா போகுது

Link to comment
Share on other sites

சுமத்திரனுக்கு கூடின கூட்டத்தை விட இங்கு வந்த சனத்தை பார்க்கையிலே தெரியுது ஆர் வருவினம் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கஜே குழு இம்முறை பாராளுமன்றத்தில் மாவீரர் நாளை சிறப்பாக கொண்டாடப்போகினம் எண்டு சொல்லுங்க! என்ன குறை கொத்துரிரொட்டி ஒண்டுதான் இருக்காது!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மாவீரகள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்ட

 

 

Valvai%20tnfp%20meeting-6.JPG
Valvai%20tnfp%20meeting-7.JPG
Valvai%20tnfp%20meeting-8.JPG
Valvai%20tnfp%20meeting-9.JPG
Valvai%20tnfp%20meeting-10.JPG
Valvai%20tnfp%20meeting-11.JPG
 
Valvai%20tnfp%20meeting-13.JPG
Valvai%20tnfp%20meeting-14.JPG
 
 

படங்களைப்பார்க்கின்ற போது ஒன்று மட்டும் தெரிகிறது

கூட்டமைப்பின் கூட்டங்களைவிட மக்கள் அதிகமாக வருகிறார்

அதாவது மற்றவர்களை நாடத்தொடங்கியிருக்கிறார்

இப்பொழுதாவது கூட்டமைப்பின் தலைவர்கள் தமது தப்புக்களை உணர்ந்து ஒற்றுமையை வளர்க்கணும்..

இந்தத்தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்குகள் போகலாம்

ஆனால் மனங்கள்............................???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதியவர்கள் மூலமும் ஈழத்தமிழரின் உரிமைகள் கிடைக்கப்பெற்றால் சந்தோசமே. 

அப்ப கஜே குழு இம்முறை பாராளுமன்றத்தில் மாவீரர் நாளை சிறப்பாக கொண்டாடப்போகினம் எண்டு சொல்லுங்க! என்ன குறை கொத்துரிரொட்டி ஒண்டுதான் இருக்காது!:grin:

புலிகள் என்றால் கொலை என்ற சிந்தனை வராத உங்களுக்கு!!!!! :wink:
மாவீரர் என்றவுடன் கொத்துரொட்டி என்ற அதிர்வுகள் வந்ததின் மர்மம் என்னவோ????  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அது மாவீரர் நினைவு இல்லாமலேயே மாவீரர் நாள் அனுசரிக்கலாம் ஆனால் கொத்துரொட்டி இல்லாமல் மாவீரர் நாள் கொண்டாட முடியுமோ என்ன!"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசங்களில், ஒரு இடத்தில் மாவீரர் நாள் நடக்கும் போது.....பலர் தூர இடங்களில் இருந்து வருவார்கள். 
அவர்கள்... விரைவில் கெட்டுப் போகாததும், பசியை தாக்குப் பிடிக்கக் கூடியதும், 
இலகுவில் பயணத்தின் போது கொண்டு செல்லக் கூடியதுமான உணவு என்றால்.... கொத்து ரொட்டி தான்.
அதனை மாவீரர் நாளுடன் முடிச்சுப் போடுவது.... சரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் பெண் கணவன் வேலையால் லேற்றாக வந்தால் யாரோடை கூத்தடிச்சுப் போட்டு வாறியள் என்று கூறுவாளாம்.நேரத்துக்கு வந்தாலும் பிரச்சனைப் படுவாளாம்.இரவு  படுக்கையில் தள்ளிப்படுத்தால் ஐயாவுக்கு இண்டைக்கு நல்ல விருந்து கிடைச்சிருக்கு போல என்று புறுபுறுப்பாளாம். அடுத்தநாள் இவள் அப்படிச் சொல்வாளே என்று நெருங்கிப் படுத்தால் ஐயாவுக்கு இண்டைக்கு ஒண்ணும் கிடைக்கலைப் போல என்று வெறுப் பேத்துவாளாம். அதுபோல கொத்துரொட்டி வைக்காவிட்டால் எவ்வளவு தூரத்தில இருந்து சனம் வருகுதுகள் பட்டினி போட்டுட்டாங்கள் என்பார்கள். கொத்துரொட்டி வைத்தால் மாவீரர் நாளுக்கு கொத்துரொட்டி வித்து காசுசேர்க்கிறார்கள்என்பார்கள்.வாலிசார் தானும் படாள் தள்ளியும் படுக்காள் என்ற மாதிரி எழுததாதீர்கள்.

Link to comment
Share on other sites

வன்னியில் மாவீரர் நாள் கொத்துரொட்டி வித்து கொண்டாடுவதில்லை அங்கே சொந்தங்களின் துக்க நாளும் உணர்ச்சிபொங்கிய வேங்கைகளின் நாளும் புலத்தில் பணத்தாசைபிடித்த நரிகளின் திருகுதாளவிளையாட்டு நாளாகதான் இந்த நாள் கொண்டாடபடுகிறது தங்கள் பிள்ளைகளை அலங்கரித்து மேடையேற்றவும் தாயகத்தை சொல்லி கொத்து ரொட்டி விற்று தன் சொந்தங்களிற்கு அனுப்பவும் இதில் குளிர் காய கொஞ்ச பேர்.பிராபாகரன் முள்ளிவாய்காளில் விழுந்து கிடக்கவும்புலத்தில் பணம் பிடுங்கியவர்களை எங்கள் கண்ணால் கண்டேன்.இதைவிட என்னும் இருக்கு.

Link to comment
Share on other sites

இப்பவும் கொத்து ரொட்டி போட்டு போராளிகளின் இறப்பை கொண்டாட  அவர்கள் நினைக்கின்றார்களே ஒழிய ,

நாட்டில் போராளிகளின் உயிர் போவதைபற்றியோ  மக்கள் கஷ்டப்படுவது பற்றியோ எதவித அக்கறையுமில்லை .

இறப்பவர்கள் எண்ணிக்கை கூட வியாபாரம் கூடும் என்ற ஒரு நல்ல எண்ணம் தான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.