Jump to content

லண்டன் வீட்டுவிலை உயர்வுக்கு காரணமான கறுப்புப்பணம் தமக்குத் தேவையில்லை என்கிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன்


Recommended Posts

கறுப்புப் பணம்: நான்காம் இடத்தில் இந்தியா

லண்டன் வீட்டுவிலை உயர்வுக்கு காரணமான கறுப்புப்பணம் தமக்குத் தேவையில்லை என்கிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன்

லண்டன் வீட்டுவிலை உயர்வுக்கு காரணமான கறுப்புப்பணம் தமக்குத் தேவையில்லை என்கிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன்

பிரிட்டனுக்குள் வரும் “கறைபடிந்த பணத்தை” தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது ஐக்கிய ராஜ்ஜிய அரசு. இப்படியான பணத்தைக் கொண்டு லண்டனிலும் வேறு இடங்களிலும் இருக்கும் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதைத் தடுக்கவேண்டும் என்கிறார் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன். “கறைபடிந்த பணத்தை” லண்டன் விரும்பவில்லை என்கிறார் அவர்.

"உங்களின் ஊழல் பணத்தை சேர்த்துவைப்பதற்கான இடம் லண்டன் அல்ல” என்று அவர் ஒரு உரையின்போது தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடித்த அல்லது பொய்க் கணக்கு காட்டிய பணத்தைக் கொண்டு பிரிட்டனில் சொத்து வாங்குவதை தடுக்கப் போவதாக சூளுரைத்த உரையின் ஒரு பகுதியாக கேமரன் இதைத் தெரிவித்திருந்தார்.
தேசியக் குற்ற முகாமையின் சமீபத்திய அறிக்கையின்படி, பிரிட்டனில் இருக்கும் மேல்மட்டக் குடியிருப்புக்களை வாங்கிக் குவிப்பதன் மூலம், பல நூறு கோடி ஸ்டெர்லிங் பவுண்ட்கள் கறுப்புப் பணம் பிரிட்டனுக்குள் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்படியான குடியிருப்புக்களில் பெரும்பான்மையானவை பிரிட்டன் தலைநகர் லண்டனில்தான் இருக்கின்றன. லண்டன் தான் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது.


தென் கிழக்கு ஆசியாவில் நான்குநாள் பயணத்தின்போது ஊழல் உலக அளவில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தார்
தென் கிழக்கு ஆசியாவில் நான்குநாள் பயணத்தின்போது ஊழல் உலக அளவில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தார்

இப்படி லண்டனில் வாங்கப்படும் கட்டிடங்கள், பெரும்பாலும் வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருக்கும் நாடுகளில் தலைமையகங்களைக் கொண்டு செயற்படும் நிறுவனங்களின் பெயர்களிலேயே வாங்கப்படுகின்றன. இந்நிறுவனங்கள் தமது உண்மையான முதலாளி யார் என்பதை வெளிப்படுத்தாமல் வெறும் பெயரளவுக்கு மட்டுமே செயற்படும் தன்மை கொண்டவை.
இந்த செயற்கையான நிறுவனங்கள், தமது ரகசிய முதலாளிகளின் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதன் மூலம், அவர்களின் சொந்த நாடுகளில் வருமான வரி அதிகாரிகளின் பார்வையில் இருந்து அவர்களைக் காப்பாற்ற உதவுகின்றன.

இது நேரடியாக பிரிட்டனை பாதிக்கிறது. காரணம் பிரிட்டனில் வீடுகள் உள்ளிட்ட அனைத்துவிதமான சொத்துக்களின் மதிப்பை செயற்கையாக பலமடங்கு அதிகரிப்பதோடு, உள்ளூர்வாசிகளால் இவற்றை வாங்கமுடியாமல் செய்துவிடுகிறது.
ஆனால், கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் நடமாட்டம் என்பது உலகளாவிய பிரச்சனை.
காரணம், இந்த கட்டட வர்த்தகத்தில் புழங்கும் கறுப்புப் பணத்தின் பெரும்பங்கு வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து உருவாகிறது.
பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இது மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.


வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி


ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்: சில சுவாரஸ்யமான விவரங்கள்
ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்: சில சுவாரஸ்யமான விவரங்கள்

வளர்ந்துவரும் நாடுகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் கறுப்புப் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக பல்வேறு சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள் மதிப்பிட்டுள்ளன.
2012ஆம் ஆண்டில் மட்டும் 9.912 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கறுப்புப் பணம் சர்வதேச அளவில் சட்டவிரோதமாக புழங்கியதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. கறுப்புப் பணப் புழக்கம் குறித்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படத் துவங்கிய காலத்திற்குப் பிறகு மிக அதிகபட்சமாக கறுப்புப் பணம் புழங்கியது இந்த ஆண்டில்தான் என்று கூறப்படுகிறது.

வளர்ந்துவரும் நாடுகள் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 6.6 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கணக்கில் வராத பணத்தை இழந்துவிட்டதாக, வாஷிங்டனில் இருந்து செயற்படும் 'குளோபல் ஃபைனான்ஸ் இன்டக்ரிடி' அமைப்பு தெரிவித்திருக்கிறது.

150730094407_total_illicit_financial_flo

உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக நாடுகளின் அரசுகள் வெளியிட்ட புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள்.
2003ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடையில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வெளியே சென்ற நிதியின் அளவை அவர்கள் கணக்கிட்டதில், ஆண்டுக்கு ஆண்டு கறுப்புப் பணம் வெளியேறும் வேகம் சுமார் 10 சதவீதம் அதிகரித்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.
ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கறுப்புப் பணம் வளர்ந்து வரும் நாடுகளில் இருந்தும் ஏழை நாடுகளில் இருந்தும் வெளியேறுகிறது என்கிற புள்ளிவிவரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளிடமிருந்து பெறும் வளர்ச்சி நிதியின் அளவைவிட இந்த தொகை அதிகமானது.


வளர்ந்து வரும் நாடுகளுக்குள் செல்லும் நிதியின் அளவும் அவற்றில் இருந்து வெளியேறும் கறுப்புப்பணத்தின் அளவும்
வளர்ந்து வரும் நாடுகளுக்குள் செல்லும் நிதியின் அளவும் அவற்றில் இருந்து வெளியேறும் கறுப்புப்பணத்தின் அளவும்
மேலும், இந்த நாடுகளுக்கு வளர்ச்சி நிதியாகவும் அன்னிய நேரடி முதலீடாகவும் வரும் தொகையைவிட இந்த நாடுகளில் இருந்து வெளியேறும் கறுப்புப் பணத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.
கறுப்புப் பணம் எங்கிருந்து வருகிறது?
சர்வதேச அளவில் கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் பயணம் என்பது பிரதானமாக வளர்ந்து வரும் நாடுகளில் இருந்துதான் துவங்குகிறது.


அதிக அளவு கறுப்புப்பணத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகள்
அதிக அளவு கறுப்புப்பணத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகள்

ஆனால் அதன் பரவல் என்பது ஒரே சீராக இல்லை.
கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி உற்பத்தியாகும் இடமாக ஆசிய கண்டமே இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் புழங்கிய கறுப்புப் பணத்தின் 40 சதவீதம் ஆசிய கண்டத்தில் இருந்தே வந்திருக்கிறது.
ரஷ்யா, துருக்கி, பெரும்பான்மையான கிழக்கு ஐரோபிய நாடுகளை உள்ளடக்கிய “வளர்ந்து வரும் ஐரோப்பிய நாடுக”ளில் இருந்து உருவான கறுப்புப் பணத்தின் அளவு 21 சதவீதமே என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.


பிராந்திய ரீதியில் கறுப்புப்பணத்தை அதிகம் ஏற்றுமதி செய்யும் 15 நாடுகள்
பிராந்திய ரீதியில் கறுப்புப்பணத்தை அதிகம் ஏற்றுமதி செய்யும் 15 நாடுகள்

அமெரிக்க மற்றும் கரீபிய பிராந்தியங்களில் இருந்து சுமார் 20 சதவீத கறுப்புப் பணம் உருவானதாகவும் அதற்கு அடுத்து மத்திய கிழக்கும் வட ஆப்ரிக்காவும் சேர்ந்து 10.8 சதவீத கறுப்புப் பணத்தை உருவாக்குவதாகவும் சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே இருக்கும் ஆப்ரிக்காவிலிருந்து 8 சதவீத கறுப்பு பணம் உருவானதாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேசமயம், அதிகபட்ச கறுப்புப் பணப் பரிவர்த்தனை செய்யும் நாடுகளே கறுப்புப் பணத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டவை என்று சொல்லிவிடமுடியாது.
வளர்ந்து வரும் நாடுகளில் இப்படி “காணாமல்போன பணத்தின்” உண்மையான பாதிப்பு என்ன என்பதை கணக்கிட வேண்டுமானால், ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இந்த பணத்தின் அளவை ஒப்பிட்டு பார்ப்பதே சரியான அணுகுமுறை என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அப்படிப்பார்க்கும்போது, வளர்ந்துவரும் நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3.9 சதவீத வருமானம் இப்படி கறுப்புப் பணமாக அந்நாடுகளை விட்டு வெளியேறுகிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

150730094347_gdp_illicit_financial_flow_

இதிலும்கூட சஹாராவுக்குத் தெற்கே இருக்கும் நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. காரணம் இந்த நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும்போது 3.9 சதவீதத்தைவிட கூடுதலான பணம் கறுப்புப் பணமாக மாறி நாட்டை விட்டு வெளியேறுகிறது. அதனால் இந்த நாடுகள் கூடுதல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.


கறுப்புப்பணம் எப்படி உருவாகிறது?
உலக அளவிலான மிகப் பெரும் ஊழல் வலைப்பின்னல் கட்டமைப்பு இதை சாத்தியமாக்குவதாக ஐ.நா. கூறுகிறது. இந்த கறுப்புப் பணம் புழங்குவதற்கு, நாடு விட்டு நாடு கைமாற்றப்படுவதற்கு, இயற்கைவள வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு, வரி விலக்கு அளிப்பதற்கு, முதலாளி யார் என்றே தெரியாமல் போலியான நிறுவனங்களைத் துவக்கி நடத்துவதற்கு என பலவகையான செயல்களை செய்வதற்கும் கட்டமைப்புகள் இருப்பதாகவும் அவற்றின் மூலமே இந்த கறுப்புப் பண பரிவர்த்தனை சர்வதேச அளவில் சாத்தியமாவதாகவும் ஐநா கூறுகிறது.

http://www.bbc.com/tamil/global/2015/07/150730_illicitmoney

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையிலை கள்ளக்காசு வைச்சிருக்கிற ஆக்கள் வலு கவனமாயிருங்கோ....:cool:
பாங்கிலை ஆர் காசு வைச்சிருக்கினமோ அதுதான் காசு....மற்றதெல்லாம் வெறும் பேப்பர் எண்டு சொன்னாங்களெண்டால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்????  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.