Jump to content

முஜாஹித்துடன் கோத்தாவுக்கு தொடர்பு :விளக்க வேண்டும் : ஐ. தே. க.கோரிக்கை


Recommended Posts

Mohamed-Mujaid-and-Gotabaya.jpg?itok=lNr
 
போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்­ளி­யான மொஹமட் முஜாஹித்திற்கும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விற்கும் தொடர்பு உள்­ளது. ஆகவே, இது தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் நாட்­டிற்கு உண்­மையை வெளிப்­ப­டுத்த வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்­சரும் கம்­பஹா மாவட்­டத்தின் ஐ.தே.க.வேட்­பா­ள­ரு­மான ரஞ்சன் ராம­நா­யக்க கோரிக்கை விடுத்தார்.

போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டைய 25 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர்­வி­ப­ரங்­களை ஔடத கட்­டுப்­பாட்டு சபையின் தலைவர் நிஷாந்த சம­ர­சிங்க உட­ன­டி­யாக வெளி­யிட வேண்டும்.இல்­லையேல் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடைப்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்:

முக்­கிய போதைப்­பொருள் புள்­ளி­யான மொஹமட் முஜாஹித் என்­பவர் மலே­சி­யாவில் இருந்து கொண்டு இலங்­கையில் போதைப்­பொருள் வர்த்­த­கத்தை முன்­னெ­டுக்­கின்றார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்­கான செல­வி­னையும் முஜாவே பொறுப்­பேற்­றி­ருந்தார்.
இந்­நி­லையில் இலங்­கையை போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் கேந்­திர நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அதி­கா­ரத்தை தக்­க­வைத்துக் கொண்டு பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் முன்­னெ­டுத்­துள்­ளனர்.
மொஹமட் முஜாஹித்தின் மலே­சி­யா­வி­லுள்ள வீட்­டிற்கு பல தட­வைகள் ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­லுள்ள அனை­வரும் சென்று தங்­கி­யுள்­ளனர்.இதற்­கான ஆதா­ரங்கள் எம்­மிடம் உள்­ளன. போதைப்­பொருள் வர்த்­த­கர்­களின் உத­வியை கொண்டே ராஜ­ப­க்ஷ­வினர் தனது வாழ்க்­கையை கொண்டு நடத்­தி­யுள்­ளனர்.
மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­டது மாத்­தி­ர­மின்றி போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் தம்­முடன் ஒன்று சேர்த்­துள்­ளனர்.

அத்­துடன் போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்­ளி­யான மொஹமட் முஜாஹித்திற்கும் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விற்கும் தொடர்பு உள்­ளது. யுத்­ததை மைய­மாக கொண்ட செல்வம் திரைப்­ப­டமும் கூட மொஹமட் முஜாஹித்தின் அனு­ச­ர­னை­யு­டனே வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
அது மாத்­தி­ர­மின்றி செல்வம் திரைப்­ப­டத்தின் வெளி­யிட்டு வீழா மிகவும் கோலா­க­ல­மாக நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்த நிகழ்­விற்கு பிர­தம அதி­தி­யாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவே வருகை தந்­தி­ருந்தார்.
மேலும் இந்த திரைப்­படம் மஹிந்த ராஜ­ப­க்ஷவை போற்றும் விதத்­திலே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த படம் ஜனா­தி­பதி தேர்தல் காலங்­க­ளி­லேயே வெ ளியி­டப்­பட்­டது.
இது தொடர்பில் ராஜ­ப­க்ஷ­வினர் மௌனம் காத்து வரு­கின்­றனர்.போதைப்­பொருள் வர்த்­தகர் முஜாஹித்துடன் தொடர்பு உள்­ளதா என்­பது தொடர்­பான உண்­மையை முன்னாள் பாது­காப்பு செய­லாளர் நாட்­டிற்கு வெளிப்­ப­டுத்த வேண்டும்.

முஜா போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் முக்­கிய புள்ளி என்­பது முன்னாள் பாது­காப்பு செய­லாளர் என்ற வகையில் அறிந்­தி­ருக்­க­வில்­லையா? அல்­லது அவர்­க­ளது உள­வுப்­பி­ரி­வினர் அறி­விக்­க­வில்­லையா என்­ப­தனை நாட்­டிற்கு வெளிப்­ப­டுத்த வேண்டும்.
மேலும் போதைப்­பொருள் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டைய 25 பாரா­ளு­மன்ற உறுப்பினர்களின் பெயர்விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த பெயர்ப்பட்டியல் அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிஷாந்த சமரசிங்க அச்சப்படுகின்றார்.அவ்வாறு அச்சப்படுவாராயின் அவர் அந்த பதவியிலிருந்து உடனடியாக வௌியேற வேண்டும்.
ஆகஸ்ட 18 ஆம் திகதி குறித்த பட்டியலை வெ ளியிடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.

http://www.virakesari.lk/articles/2015/07/31/முஜாஹித்துடன்-கோத்தாவுக்கு-தொடர்பு-விளக்க-வேண்டும்-ஐ-தே-ககோரிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சன் ராமநாயக்க: குளோபல் தமிழ் செய்தியாளர்:-

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு கோத்தபாய உடந்தையாக செயற்பட்டார்:



சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலான 'முஜா’ என்றழைக்கப்படும் மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிம் கும்பலுக்கு உடந்தையாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய செயற்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் வலைப்பின்னல் நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுக்க அரச அனுசரணையை கோத்தபாய வழங்கினார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையை போதைப் பொருள் மத்தியநிலையமாக மாற்ற ராஜபக்ச சகோதரர்கள் முயன்றுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிணம் தின்னும் சுறாவை வளர்த்ததை ஒப்புக்கொண்ட கோத்தபாய முஜாஹிம் போதைப் பொருள் கும்பலுடன் உள்ள உறவை குறித்து விரையில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முஜாவிற்கு கோத்தபாய திரைப்பட படப்பிடிப்புக்காக இராணுவ வீரர்கள், ஆயுதம், உலங்குவானூர்தி ஆகியவறறை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச குற்றவாளிகளின் திரைப்பட வெளியீட்டு விழாவில் கோத்தபாயவும் அவரது பாரியாரும் கலந்து கொண்டதுடன் முஜாவின் நீச்சல் தடாகத்தில் மகிந்த ராஜபக்சவின் பிள்ளைகள் நீராடியமைக்கும் அங்கு கார் போட்டிகளில் கலந்து கொண்டமைக்கும் தன்னிடம் ஆதாரம் உண்டு என்று ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122476/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முஜாவிற்கு கோத்தபாய திரைப்பட படப்பிடிப்புக்காக இராணுவ வீரர்கள், ஆயுதம், உலங்குவானூர்தி ஆகியவறறை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.//

கோத்தா... எங்களை வைத்து, எங்கேயோ போயிட்டான்.
நாங்க தான்..... கே.பி.யைப்  பார்த்து,  கோத்தாவை கட்டிப் பிடிக்க முயல்கிறோம்.
எங்கடை... சனம், திருந்திறத்துக்கு.....  இன்னும், கன தூரம் இருக்கு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.