Jump to content

அண்ணல் கலாம் மறைந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


அண்ணல் கலாம் மறைந்தார் அவனி அழுகிறது.

காலா கலாமைக் கவர்ந்தது ஏன் எங்களுக்கம்
மேலாம் அறிஞனினி வேண்டாமென்றெண்ணினையோ!

கண்ணிழந்த காலன் கலாமை எடுத்து விட்டான்
அண்ணலை எங்கள் அரிய தமிழுறவை
எண்ணியிருந்து எண்பத்தி மூன்றகவை
காணப்பறித்த தறு கண்ணாளன் தோற்கானா?

எத்தனை பேர் இன்னும் இப்புவியில் தொண்ணூறை
தாண்டியும் வாழ்கின்றார் தறி கெட்ட காலனுக்கேன்
இத்தனை வன்மம் எம் தமிழத்தாய் பெற்றெடுத்த
சொத்தினை எங்கள் சோதியைப் போயேன் பறித்தான்

அறிவியலே உந்தன் ஆற்றல் இதுதானா?
குறிவைத்து இந்தக் குவலயத்தில் நல்லோரை
தட்டிப் பறிக்கும் தரம் பாராக் காலனை ஏன்
எட்டியுதைக்க இன்னும் வழிகாணாய்

ஐஸாக் நியூட்டனைப்போல் ஐன்ஸ்டீன் அறிஞனைப்போல்
அறிவியலுக்காய் வாழ்ந்த அப்துல் கலாம் எங்கள்
அன்னை தமிழின் அருமை மகனன்றோ!

ஏன் தமிழர் வாழ்வில் இடிவிழுத்தப் பார்த்திருந்தாய்?

குரு ஆனை மேலாம் குறளை மனதிருத்தி
அருவாம் திருவருளை அன்புடனே நேசித்து

ஆக்கம் பல கண்ட அப்துல் கலாம் என்றும்
நீக்கமற நிறைந்தெம் நெஞ்சில் நிலை நிற்பார்.

அன்னவரின் ஆன்மா அண்டவனின் சன்னிதியில்
உன்னதமாம் சுவன ஒளியில் கலக்கட்டும்.

ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாம் விடயத்தில் இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள் நியாயமிருக்கின்றது...ஒருசில நாடுகள் வருத்தத்தை தெரிவிக்குது அதிலையும் நியாயமிருக்குது.

ஆனால் எங்கடை டமிள் பேஷ்புக்கு சனமும் அனுதாபம் தெரிவிச்சு விழுந்து விழுந்து அழுகினம். கவிதை எல்லாம் எழுதுகினம்...கண்ணீர் வடிக்கினம்....எந்த விதத்திலை எங்களுக்கும் அவர் பெரியவர் ஆனார்?

காந்தி தாத்தா நேரு மாமாவை எல்லாம் பள்ளி பாடங்களிலும் பாலர் வகுப்பிலும் படித்து கையை சுட்டுக்கொண்டது போதும். :innocent:

அப்துல் கலாம் அவர்கள் தன்னடக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். தமிழனாக இருக்கலாம். 
ஆனால் அவர் கற்ற கல்வியை வைத்து மனிதனுக்கு அழிவைத்தரும் செயல்களை செய்தவர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கரு!

பொதுவாக.. இரங்கல் திரிகளில்... அவர்களுக்கெதிரான கருத்துக்களைத் தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை!

எனினும்.. உங்கள் கவிதையை ஆழமாக வாசித்தேன்!

கல்வி.. மாண்பு.. போன்றவை மனிதகுலத்துக்கான சேவையாக அமையும் போதே.. அவை சிறப்படைகின்றன என்று நினைக்கிறேன்!

ஆபிரிக்க அடிமைகளின் விடுதலைக்கு வித்திட்ட ஆபிரகாம் லிங்கனும்....அனாதைகளின் அல்லல்களைத் துடைக்கத் தனது வாழ்வை அர்ப்பணித்த அன்னை திரேசா போன்றவர்களும் அதிகம் படித்தவர்கள் அல்ல! ஆயினும் அவர்களது மரணங்களுக்கு உலகம் கண்ணீர் சிந்தியது!

மகாத்மா காந்தியையும்... நேருவையும் .. இலங்கைத் தமிழர்கள் மதித்ததைப் போல யாருமே மதித்ததில்லை! காவோலையால் வேய்ந்த வீடுகளின், மண் சுவர்களின் ஆணிகளில் கூட அவர்களது படங்களே தொங்குவதைக் கண்டிருக்கிறேன்! 

ஆயினும்.. முள்ளி வாய்க்கால் சம்பவங்களின் பிறகு.. எதையுமே ஏற்றுக்கொள்ள முன்னர் ஆயிரம் கேள்விகள் மனதில் தோன்றுகின்றன!

மரணங்களுக்குள்ளும்.. மனிதத்தைத் தேடும் மனநிலையிலேயே இப்போது வாழ்கிறோம்!

அப்துல் கலாம் அவர்களுக்கு  ஆழ்ந்த அஞ்சலிகள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..ஆனால் எங்கடை டமிள் பேஷ்புக்கு சனமும் அனுதாபம் தெரிவிச்சு விழுந்து விழுந்து அழுகினம். கவிதை எல்லாம் எழுதுகினம்...கண்ணீர் வடிக்கினம்....எந்த விதத்திலை எங்களுக்கும் அவர் பெரியவர் ஆனார்?

..

அப்துல் கலாம் அவர்கள் தன்னடக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். தமிழனாக இருக்கலாம். 
ஆனால் அவர் கற்ற கல்வியை வைத்து மனிதனுக்கு அழிவைத்தரும் செயல்களை செய்தவர்.

great_5.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

great_5.gif

அப்துல் கலாம் விடயத்தில் இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள் நியாயமிருக்கின்றது...ஒருசில நாடுகள் வருத்தத்தை தெரிவிக்குது அதிலையும் நியாயமிருக்குது.

ஆனால் எங்கடை டமிள் பேஷ்புக்கு சனமும் அனுதாபம் தெரிவிச்சு விழுந்து விழுந்து அழுகினம். கவிதை எல்லாம் எழுதுகினம்...கண்ணீர் வடிக்கினம்....எந்த விதத்திலை எங்களுக்கும் அவர் பெரியவர் ஆனார்?

காந்தி தாத்தா நேரு மாமாவை எல்லாம் பள்ளி பாடங்களிலும் பாலர் வகுப்பிலும் படித்து கையை சுட்டுக்கொண்டது போதும். :innocent:

அப்துல் கலாம் அவர்கள் தன்னடக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். தமிழனாக இருக்கலாம். 
ஆனால் அவர் கற்ற கல்வியை வைத்து மனிதனுக்கு அழிவைத்தரும் செயல்களை செய்தவர்.

 

 

என்னங்க எங்க ஊரு வாத்தியாரு செத்துப்போனாருண்ணு கவிதையெழுதப் போனா நீங்க ஏதோ பினாத்துறீங்க. நாங்க ஆறுகோடிப் பேருங்க கலாம் போயிட்டாருண்ணு கவலையில கெடக்கிறம் நீங்க வேற. 

ஒங்க காமண்டுகள பேஸ்புக்குலயும் போடுங்க.  அப்ப தெரியும். சும்மா குண்டுச் சட்டிக்குள்ள இருந்து குதிரையோட்டாதீங்க.

Link to comment
Share on other sites

l ''இதுவரை எத்தனையே உயர் தொழில்நுட்ப கருவிகளை பல விஞ்ஞானிகளோடு இணைந்து நாட்டுக்காக தயாரித்துள்ளீர்கள்.. இந்தத் தயாரிப்புகளிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தது எது, எதைத் தயாித்ததற்காக நீங்கள் மிக அதிகமாக பெருமை அடைந்தீர்கள்...''? ஒரு சந்திப்பில் இது டாக்டர் அப்துல் கலாமிடம் கேட்கப்பட்ட கேள்வி. அக்னி, பிருத்வி, த்ரிசூல், ஆகாஷ், நாக் உள்ளிட்ட ஏவுகணைகள், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள், அர்ஜூன் ராணுவ டாங்கிகள், எல்சிஏ போர் விமானங்கள், செயற்கைக் கோள்கள், அணு குண்டு.... என வகை வகையான ஆயுதங்களைத் தயாரித்தவரிடம் இருந்து நாம் என்ன பதிலை எதிர்பார்த்திருப்போம்? ஏவுகணை, அணு குண்டு என்பதைத் தானே.. ஆனால், கலாம் சொன்னார்.

 

 

 

 

.. ''நான் மிகப் பெருமையாக கருதுவது ஊனமுற்ற குழந்தைகள் பயன்படுத்த எடையில்லாத காலிபர் ஷூக்களைத் தயாரித்ததைத் தான்'' என்றார். போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பு caliperகள் முன்பு மிக எடையுடன் இருந்தன. இந் நிலையில் ஏவுகணைகளின் எடையைக் குறைக்க கார்பன்- கார்பன் பாலிமர்கள் மற்றும் glass filled polypropylene என்ற ரசாயனம் கொண்ட பல பகுதியை கலாம் தலைமையிலான Defence research and development organisation (DRDO) விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த எடை குறைவான அதே நேரத்தில் மிக வலுவான இந்த கார்பன் பாலிமர் மெட்டீரியல்களைக் கொண்டு காலிப்பர் ஷூக்களைத் தயாரித்தால் ஊனமுற்ற குழந்தைகளுக்கு மிக உதவியாக இருக்குமே என்ற கலாமுக்கு யோசனை எழ, உடனே அது குறித்து ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அமைப்பின் தலைவரான டாக்டர் நரேந்திரநாத்தைக் கூப்பிட்டுச் சொன்னார்.

 

 

 

அவரும் இந்த யோசனையை செயல்படுத்தலாம் என ஆர்வம் தெரிவிக்க, உடனடியாக மத்திய அரசிடம் பேசி டி.ஆர்.டி.ஓவிடம் இருந்த அந்தத் தொழில்நுட்பத்தை நிஜாம் இன்ஸ்டியூட்டுக்கு இலவசமாக வழங்கினார். கூடவே சில டிஆர்டிஓ விஞ்ஞானிகளையும் அங்கே அனுப்பி மருத்துவர்களுடன் இணைந்து அந்த காலிப்பர்களை வடிவமைக்க வைத்தார். இதையடுத்து மேலும் பல காலிப்பர்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இந்தத் தொழில்நுட்பம் தரப்பட்டது. இதனால் இந்த காலிப்பர்களின் எடை 3 கிலோவில் இருந்து 300 கிராம் ஆனது. அதே நேரம் இது இரும்பை விட அதிக உறுதியானது. இப்போது பெரும்பாலான போலியோ பாதித்த குழந்தைகள் பயன்படுத்தும் இந்த காலிப்பர்கள் அக்னி ஏவுகணையின் முனைப் பகுதியில் பயன்படுத்தப்படும் அதே பொருளால் தான் செய்யப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்படும் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை போலியோ தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தந்து காலிப்பர்களின் எடையைக் குறைத்து அந்தக் குழந்தைகளின் சிரிப்பில் பேரானந்தம் அடைந்த மனிதர் தான் அப்துல் கலாம். அதே போல இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவும் ஸ்டென்ட்களை இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் தயாரிக்க வைத்தவரும் கலாம் தான். 1990களில் ஒரு ஸ்டென்ட்டின் விலை ரூ. 1.5 லட்சம் என்ற நிலை இருக்க, ஆயுத தயாரிப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் மூலம் இதை மிகக் குறைத்த விலையில் தயாரிக்கலாமே என்ற யோசனையை ஹைதராபாத்தைச் சேர்ந்த கேர் குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ் தலைவர் டாக்டர் சோமராஜூவுடன் இணைந்து செயல்படுத்தினார் கலாம்.

 

 

 

இதன் மூலம் வெறும் ரூ. 10,000க்கு ஸ்டென்ட்டை உருவாக்கினார் கலாம். 'K-R stent' (Kalam-Raju-Stent) என அழைக்கப்படும் இந்த விலை குறைவான ஸ்டென்ட் மூலம் இப்போது நாட்டில் லட்சக்கணக்கான இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. ஒடிஸ்ஸாவின் பாலாசூர் மாவட்டத்தை ஒட்டி வங்கக் கடலில் அமைந்துள்ள சிறிய தீவு வீலர் ஐலண்ட். நமது ஏவுகணைகளின் சோதனை நடப்பது இங்கே தான். இந்தத் தீவில் உள்ள டிஆர்டிஓ மையத்தில் தங்கியபடி விஞ்ஞானிகளுடன் இணைந்து ஏவுகணைகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் கலாமுக்கு அலாதி பிரியம். இந்தத் தீவுக்கு ஏராளமான வகை குருவிகள் வந்து செல்வதை பார்த்த கலாம் அங்கே ஆயிரக்கணக்கான மரங்களை நட வைத்து தீவையே பச்சை பசேல் என்று மாற்றியும் காட்டினார். இப்போது அங்கு வழக்கத்தை விட அதிகமான குருவிகள் சத்தம். கலாம் அண்ட் டீம் உருவாக்கிய ஏவுகணைகளில் மிக மிக முக்கியமானது பிரமோஸ் ஏவுகணை. இந்திய- ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான இந்த ஏவுகணைக்கு இணையான ஏவுகணை இதுவரை இல்லை. ஏவுகணைகளில் இருவகை உண்டு. Cruise missile, Ballistic missile. க்ரூயிஸ் மிசைல்கள் குறைந்த தூரம் சென்று தாக்குபவை. புறப்பட்ட இடத்திலிருந்து குறி வைக்கப்பட்ட இடம் நோக்கி செல்பவை. இவற்றின் வேகம் குறைவு.

 

 

 

பாலிஸ்டிக் மிசைல்கள் நெடுந்தூரம் சென்று தாக்குபவை. முதலில் வானை நோக்கி எழும்பி, பூமிக்கு சில நூறு கி.மீ. தூரம் மேலே சென்று பின்னர் குறி வைக்கப்பட்ட இடம் நோக்கி அதி வேகத்தில் பாய்பவை. இவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ரகத்தை சேர்ந்தவை. ஆனால், பிரமோஸ் ஏவுகணை தான் உலகிலேயே மிக அதி வேகத்தில் செல்லக்கூடிய க்ரூயிஸ் மிசைல். 290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை மணிக்கு 1225 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. அதாவது 290 கி.மீ. தூரத்தை 15 நிமிடங்களில் சென்று தாக்கும். இந்த ஏவுகணையை வீழ்த்தக்கூடிய Anti-Missile defence system ஏதும் இதுவரை இல்லை என்பது இதன் சிறப்பம்சம். டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் டாக்டர் சிவதாணு பிள்ளை, ரஷ்ய ஏவுகணை ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் யெவ்ரமோவ், டாக்டர் லியோநோவ் ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கியது தான் பிரமோஸ். இந்தியாவின் பிரமபுத்திரா, ரஷ்யாவின் மாஸ்கோ நதி ஆகிய பெயர்களை சேர்த்துத் தான் 'பிரமோஸ்' என இதற்கு பெயர் சூட்டினார் அப்துல் கலாம். (இந்த ஏவுகணையின் வேகத்தை அதிகப்படுத்தி இதை Supersonic Cruise missile என்ற நிலையில் இருந்து Hypersonic Cruise missile என்ற நிலைக்கு தரம் உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியிருந்தார் கலாம். அவரது யோசனைப்படி இதன் வேகத்தை அதிகப்படுத்தும் சோதனைகள் கடந்த சில காலமாக நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் வீலர் ஐலண்ட் தீவில் நடந்த இந்தச் சோதனைகள் பெரும் வெற்றி அடைந்தன.

 

 

அதாவது 8ம் தேதி முதல் ஏவுகணை தாக்கிய அதே இடத்தை 9ம் தேதி ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அட்சரம் பிசகாமல் மிகத் துல்லியமாகத் தாக்கியது) செயற்கைக் கோள்கள் தொழில்நுட்பத்திலும் கலாமுக்கு அதீத ஆர்வம் உண்டு. ஐஆர்எஸ், இன்சாட் செயற்கைக் கோள்களில் ஆரம்பித்து சமீபத்தில் இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மங்கள்யான் வரை கலாமுக்கும் பங்கு உண்டு. செவ்வாய் கிரகத்துக்கு 2018ம் ஆண்டில் இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ள மங்கள்யான் 2 விண்கலத்துக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டலாமே!

Read more at: http://tamil.oneindia.com/editor-speaks/abdul-kalam-was-very-proud-making-lightweight-calipers-polio-patients-232302.html

அவரின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு  உந்துசக்தி,    

நமது காலத்தில் வாழ்ந்த ஒரு எளிமையான நேர்மையானஅறிவியலாளர் ,

தமிழன் என்பதில்  எமக்கே பெருமை   

 

Link to comment
Share on other sites

FB_IMG_1438266278560.jpg

 

 

FORMER PRESIDENT ABDUL KALAM L ...
FORMER PRESIDENT ABDUL KALAM LAID TO REST IN RAMESHWARAM
FORMER PRESIDENT ABDUL KALAM LAID TO REST IN RAMESHWARAM
 
 

மதுரை: மக்கள் மனங்களில் நிறைந்த அப்துல் கலாம், சமூக வலைத்தளங்களிலும் உன்னத மனிதராக உயர்த்தப்பட்டார். அப்துல் கலாம் இறந்த தகவல் கிடைத்தததில் இருந்து சமூக வலைதளங்கள் அவரை ஆக்கிரமித்துக் கொண்டன. கடந்த 27ம் தேதியில் இருந்து சமூக வலைதளங்களான, பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டரில் அப்துல் கலாம் சிறிய வயது புகைப்படங்கள் தொடங்கி இறப்பதற்கு முன் மாணவர்களிடம் பேசிய போது எடுத்தப்படம், கொடுக்கப்பட்ட பட்டங்கள், அவர் எழுதிய புத்தகங்கள், பொன் மொழிகள் என அனைத்து புகைப்படங்களும் அடுத்தடுத்து பதிவிடப்பட்டன. குறிப்பாக, வாட்ஸ்அப், பேஸ் புக்கில், ஏராளமானோர் தங்களது புரபைல் (முகப்பு) படத்தை கலாம் படமாக மாற்றி வைத்தனர். சிலர் கருப்பு பேட்ச், கண்ணீர் அஞ்சலி படத்தை வெளியிட்டு தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். சமூக வலைத்தளங்களில் வலம் வந்த கலாம் குறித்த வாசிப்புகள் இதோ...

* எழுத படிக்க தெரியாதவர்களில் எமனும் ஒருவன்... அழகான அறிவியல் புத்தகத்தை கிழித்து எறிந்து விட்டான்...

* ஒரு மனிதன் பிரியும் போது அவன் தாய் அழுதால், அவன் ஒரு நல்ல மகன். அவன் பிள்ளை அழுதால் அவன் ஒரு நல்ல தகப்பன். ஆனால், அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதால் அவன் ஒரு நல்ல தலைவன். நீங்கள் ஒரு நல்ல தலைவர் ஐயா! என்றும் மக்கள் மனதில் நீங்கள் குடியரசுத் தலைவர்.

* இந்தியாவின் தேசியக் கொடியை சந்திரனில் நிலை நிறுத்த வேண்டும் என ஆசை கண்டவர் கலாம். அந்த ஆசை சந்திரயான் விண்கலம் ராக்கெட் மூலம் நிறைவேறியது.

* கனவு காண சொன்னாய்... இதுவும் கனவாகவே இருக்‘கலாம்’ என்று மனம் ஏங்குதே!

* அடுத்தவருக்கு மட்டும் கிடைத்தது என பொறாமை படாத விஷயம் மரணம்! ஆனால், இன்று இது போன்ற மரணம் கிடைக்காதா! என்று பொறாமை பட வைத்த விஷயம்! கலாமின் மரணம்...

* கலாம் கல்லறையில் இப்படியும் எழுதலாம் ‘வானத்தை அளந்து முடித்து ஓய்வு எடுக்கிறது ஓர் அக்னி பறவை’.

* இனி சொர்க்கத்துக்கு நீங்கள் தான் ஜனாதிபதி, சென்று வாருங்கள் ஐயா...சொர்க்கமும் உங்களால் பெருமைப்படட்டும்.

* ராமேஸ்வரத்தில் தினந்தோறும் பாவங்கள் கழிக்கப்படுவது வழக்கம். முதல் முறையாக புண்ணியம் விதைக்கப்படுகிறது.

* ‘இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’.

* ‘பெருமிதம் கொள்கிறேன்! நீங்கள் நேசித்த பாரத நாட்டில் நானும் ஒரு குடிமகன் என்று. உறுதி மொழி கொள்கிறேன்! நீங்கள் கண்ட கனவு பாரதத்தை நிஜத்தில் உருவாக்கிட உழைப்பேன் என்று’.

* பஸ் கண்ணாடி உடையவில்லை, கடையடைக்க நிர்பந்தமில்லை, பள்ளிக்கூடம், கல்லூரிகளை மூட கட்டாயம் இல்லை, தற்கொலை நாடகமில்லை, கட்சி பேனர்கள் கட்டப்படவில்லை இத்தனையும் இல்லை.. கலாம் மறைவுக்கு.

* கலாமுக்காக அவரது குடும்பம் வருந்துகிறது குடும்பத்திற்கு பேரிழப்பு என்று. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வருந்துகிறார்கள் நம் தேசத்திற்கு வழி காட்டி இல்லை என்று. அதுவே, ஒரு குழந்தை கதறி அழுகிறது. இனி நம்மை அன்போடு கொஞ்சும் அப்துல் கலாம் இல்லையே என்று.!

* இந்தியாவின் கடைக் கோடியில் கடைசி குடிமகனாகப் பிறந்து இந்தியாவின் முதற் குடிமகனாக உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல... சாதனையால் வந்தது.

* நிற்‘‘கலாம் ’’ நடக்‘‘கலாம் ’’ உடுக்‘‘கலாம் ’’ உறங்‘‘கலாம்’’ என இருக்‘‘கலாம் ’’ என்றிருந்த இந்தியனை விழிக்‘‘கலாம்’’. என தட்டி எழுப்பி இனி... உழைக்‘‘கலாம்’’ சிந்திக்‘‘கலாம்’’ பறக்‘‘கலாம்’’ ஜெயிக்‘‘கலாம்’’ சாதிக்‘‘கலாம்’’ எனச் சொன்னவர் ஐயா...அப்துல்‘‘கலாம்’’.

இது தவிர, ‘‘எதற்கும் தயாராக இரு, சம்மட்டியாக இருந்தால் அடி, பட்டறையாக இருந்தால் அடி வாங்கு ’’ நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்...ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்... உள்ளிட்ட கலாமின் பல்வேறு பொன் மொழிகள் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. மேலும், ஆந்திர மாநில சிறுமி அப்துல் கலாம் படத்திற்கு முத்தமிட்டு தனது இரங்கலை தெரிவிப்பது போன்ற புகைப்படம், அப்துல் கலாமின் நினைவாக ஆளுக் கொரு மரக்கன்றுகளை நடுவதால் மட்டுமே கலாமின் ஆத்மா சாந்தியடையும் என்பது போன்ற பலவசனங்கள் அதிகளவில் பகிரப்பட்டன.

இத்துடன், 96 வயது வயதான முன்னாள் விமான படை தளபதி மார்ஷல் அர்ஜூன் சிங் தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் கலாம் உடலுக்கு சல்யூட் வைத்தது, கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ஐ மாணவர் தினமாக அரசு அறிவித்திட வேண்டும் போன்றவையும் வாட்ஸ் அப்பில் அதிகளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒருபடியாக, கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை ஏராளமான இளைஞர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவில்லை.

- See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159008#sthash.TOP2aPV8.dpuf

Link to comment
Share on other sites

எங்கட ஆட்களின் பிரச்சனை என்றால் எமது பிரச்சனையை தாமே முகம் கொடுக்காமல் நாட்டை விட்டு ஓடிவிட்டு ஆயுத போராட்டம்   தோல்வியில் முடிய வந்தவன் போனவன் நின்றவன் எல்லோரையும் திட்டிதீர்ப்பதுதான்.

சினிமா சம்பந்தமானவர்கள் ,இலக்கியவாதி ,அரசியல்வாதி ,விளயாட்டு வீரர்கள் ,பொதுமகன்  எவர் வந்தாலும் எங்கட பிரச்னை பற்றி கேட்டின்றது அவர்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் திட்டுகின்றது .

இவ்வளவுக்கும் எம்மவர் எத்தனயோ  கொலைகளை செய்து தள்ளும் போது அதை ஆதரித்தவர்களும் மௌனமாக இருந்தவர்கள் தான் அதிகம் .

இது ஒரு மனோவியாதி அடுத்த தலைமுறைக்கு தொடரவில்லை என்பதுதான் நல்லவிடயம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க எங்க ஊரு வாத்தியாரு செத்துப்போனாருண்ணு கவிதையெழுதப் போனா நீங்க ஏதோ பினாத்துறீங்க. நாங்க ஆறுகோடிப் பேருங்க கலாம் போயிட்டாருண்ணு கவலையில கெடக்கிறம் நீங்க வேற. 

ஒங்க காமண்டுகள பேஸ்புக்குலயும் போடுங்க.  அப்ப தெரியும். சும்மா குண்டுச் சட்டிக்குள்ள இருந்து குதிரையோட்டாதீங்க.

ஆமா நாங்க ஆறு கோடிபேரும் உண்ணாமல், உறங்காமல் பட்டினி கெடக்கோம், அட போங்க சார்.. அரசாங்கத்துக்கு ஜிங்குசா போட்ட ஆளுக்கு இது ரொம்ப ஜாஸ்தி..! :love::(

அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றிலடித்ததினால் எழுந்த திட்டுகளை கேட்காமல் கணணி, பேஸ்புக்கை கட்டியழும் "வெள்ளை மேதாவிகள்" தான் குண்டுசட்டியைவிட்டு வெளியே வரவேணும்.

சரி, பேசுபுக்கு என்ன உலக உன்னத சாத்திரமாயென்ன..? கண்ட குப்பைகளின் அடைக்கலமே அதுதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி தாத்தா நேரு மாமாவை எல்லாம் பள்ளி பாடங்களிலும் பாலர் வகுப்பிலும் படித்து கையை சுட்டுக்கொண்டது போதும். :innocent:

குமாரசாமி அண்ணைக்கே உரிய..... அருமையான, சொல்லாடல்.
இந்த வரியை.... மிக ரசித்து வாசித்தேன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நாங்க ஆறு கோடிபேரும் உண்ணாமல், உறங்காமல் பட்டினி கெடக்கோம், அட போங்க சார்.. அரசாங்கத்துக்கு ஜிங்குசா போட்ட ஆளுக்கு இது ரொம்ப ஜாஸ்தி..! :love::(

அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றிலடித்ததினால் எழுந்த திட்டுகளை கேட்காமல் கணணி, பேஸ்புக்கை கட்டியழும் "வெள்ளை மேதாவிகள்" தான் குண்டுசட்டியைவிட்டு வெளியே வரவேணும்.

சரி, பேசுபுக்கு என்ன உலக உன்னத சாத்திரமாயென்ன..? கண்ட குப்பைகளின் அடைக்கலமே அதுதான்!

பேசு புக்கு குப்பை கொட்டிற இடமுன்னா அதுக்கு நீங்க ஏன் சார் போறீங்க?  படிக்கிறது பன்னாடைன்னா வடிக்கிறது சக்கையாத்தான் இருக்கும். அதுக்கு யார் என்ன பண்ணமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசு புக்கு குப்பை கொட்டிற இடமுன்னா அதுக்கு நீங்க ஏன் சார் போறீங்க?  படிக்கிறது பன்னாடைன்னா வடிக்கிறது சக்கையாத்தான் இருக்கும். அதுக்கு யார் என்ன பண்ணமுடியும்.

'பேசுபுக்கு'க்கு யார் போறது?

அங்கே செல்லும் ,மேதாவிகள், 'அறிவாலிகள்', 'பன்னாடைகள்', 'சக்கைகள்' சொல்லும் அனுபவ விடயத்தை வைத்துதான் சொல்கிறேன்.. இந்த திரிக்கு "பேசுபுக்கு" என்று சம்மந்தமில்லாமல் நீங்கள் எழுதியதால் இவற்றை சொல்லவந்தது..

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரு... கவிதை வடித்ததையும், சூடு ஏறி.... கருத்து எழுதியதையும் இன்று தான் பார்த்தேன். Smiley
திரி.... சூடு பிடிக்கும், நேரம்... வன்னியன்  சார் , நன்றி சொல்லி விட்டு... போவது  நல்லது அல்ல....:)
வாங்க வன்னியன் சார்... சும்மா உரையாடுங்க,  நமக்கும்... பொழுது போக வேண்டாமா? :grin: Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ் புக் விடயத்தை ஆரம்பித்து வைத்தது நானில்லங்க.  மிஸ்டர் குமாரசாமியப் பாருங்க.  தமிழ் சிறி இதுக்கு முன்னாடி பல கவிதைகளை நான் எழுதியிருக்கிறேனே! ஒன்றும் உங்கள் கண்ணில் படவில்லையா?  நீங்கள் கருத்துக்கூட எழுதிருக்கீங்க சார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ் புக் விடயத்தை ஆரம்பித்து வைத்தது நானில்லங்க.  மிஸ்டர் குமாரசாமியப் பாருங்க.  தமிழ் சிறி இதுக்கு முன்னாடி பல கவிதைகளை நான் எழுதியிருக்கிறேனே! ஒன்றும் உங்கள் கண்ணில் படவில்லையா?  நீங்கள் கருத்துக்கூட எழுதிருக்கீங்க சார்.

உண்மையில்... மறந்து விட்டேன், கரு.... மன்னிக்க வேண்டும்.
இப்போ, எனக்கு  வயது போட்டுதில்லையா..... ஞாபக மறதி அதிகம்.
நான்.... உங்கள் கவிதைக்கு, கருத்து எழுதிய .... பதிவின், இணைப்பை... 
உங்களால்... எடுத்து தர முடியுமாக இருந்தால், அதனை வாசித்து... மிகவும் சந்தோசப் படுவேன், கரு.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆம் சாரி சார்!  யாழ் டாட் காமில் புதிய கட்டமைப்பு வந்த பிறகு
நான் தொடக்கிய திரிகளே முகப்பில் வரவில்லை ஏனென்று தெரியாது. முடிந்தால் முயற்சிசெய்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.  எனக்கும் ஞாபக மறதியுண்டு.  நீங்கள் கருத்தெழுதியது கவிதைக்கா> கட்டுரைக்கா என்பது இப்போது குழப்பமாக இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

உண்மையில்... மறந்து விட்டேன், கரு.... மன்னிக்க வேண்டும்.
இப்போ, எனக்கு  வயது போட்டுதில்லையா..... ஞாபக மறதி அதிகம்.
நான்.... உங்கள் கவிதைக்கு, கருத்து எழுதிய .... பதிவின், இணைப்பை... 
உங்களால்... எடுத்து தர முடியுமாக இருந்தால், அதனை வாசித்து... மிகவும் சந்தோசப் படுவேன், கரு.:)

சிறி அண்ணா ..இந்த இணைப்பை பாருங்கள் ( ஏதோ என்னால் முடிந்தது) :)

http://www.yarl.com/forum3/topic/144910-தமிழ்-ஹைகூ/#comment-1037370

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா ..இந்த இணைப்பை பாருங்கள் ( ஏதோ என்னால் முடிந்தது) :)

http://www.yarl.com/forum3/topic/144910-தமிழ்-ஹைகூ/#comment-1037370

மிக்க... நன்றி, தமிழினி. 
இதனைப் பார்த்தால்.... எனக்கே.... சிரிப்பாக உள்ளது.
கருவும்... தான், தேடிய.... கவிதையை, நீங்கள்... "மின்னல்" வேகத்தில் கண்டு பிடித்ததை இட்டு... மிகவும் சந்தோசப் படுவார் என நம்புகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கை தமிழினிக்கு மிகவும் நன்றி!  சொல்லாமற் செய்வர் பெரியரே!
"செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல்அரிது"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கை தமிழினிக்கு மிகவும் நன்றி!  சொல்லாமற் செய்வர் பெரியரே!
"செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல்அரிது"

கரு...., தங்கை தமிழினியிடம் அபரிதமான... ஆற்றல் உள்ளது.
கால் பந்தாட்டப் போட்டியோ, கிரிக்கெட் போட்டியோ, அரசியல் போட்டியோ, 
வாலி சார் இன்று ஆரம்பித்த.... புதிய வகையான குறுக்கெழுத்துப் போட்டியோ...
எதனையும்.... நிதானமாக, அவதானித்து, சரியான பதிலை அளிப்பார்.
இது..... எமக்கு பெருமையாகவும், ஆச்சரியாமாகவும் உள்ள விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆட்களின் பிரச்சனை என்றால் எமது பிரச்சனையை தாமே முகம் கொடுக்காமல் நாட்டை விட்டு ஓடிவிட்டு ஆயுத போராட்டம்   தோல்வியில் முடிய வந்தவன் போனவன் நின்றவன் எல்லோரையும் திட்டிதீர்ப்பதுதான்.

சினிமா சம்பந்தமானவர்கள் ,இலக்கியவாதி ,அரசியல்வாதி ,விளயாட்டு வீரர்கள் ,பொதுமகன்  எவர் வந்தாலும் எங்கட பிரச்னை பற்றி கேட்டின்றது அவர்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் திட்டுகின்றது .

இவ்வளவுக்கும் எம்மவர் எத்தனயோ  கொலைகளை செய்து தள்ளும் போது அதை ஆதரித்தவர்களும் மௌனமாக இருந்தவர்கள் தான் அதிகம் .

இது ஒரு மனோவியாதி அடுத்த தலைமுறைக்கு தொடரவில்லை என்பதுதான் நல்லவிடயம் .

எல்லா திரிகளிலும் ஓடிவந்தவர்கள் ஓடிவந்தவர்கள் என வரிக்குவரி புலம்பும் நீங்கள் எந்த வகையை சார்ந்தவர்????


என்னைப்போன்றவர்கள் தமிழீழ கொள்கையுடன் மட்டுமே புலம் பெயர்ந்தவர்கள். சிங்கள இனத்துடன் ஒன்றாக வாழ முடியாது என புலம்பெயர்ந்தோம். தனியாட்சி கொள்கையுடன் இன்றுவரைக்கும் இருக்கின்றோம்.

ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?

உங்களைப்பொறுத்தவரைக்கும் இலங்கையில் பிரச்சனை முடிந்து விட்டதே!!!

ஏன் இன்னும் தாமதம்?

அங்கே போய் உங்கள் நல்ல புத்திகளை வெளிக்காட்ட வேண்டியதுதானே?

நீங்களெல்லாம் படித்தவர்கள் தானே?

மற்றவனைப் பார்த்து நக்கலடிக்கும் போது தங்கள் நிலையையும் ஒருகணம் சிந்திக்க வேண்டும். கடையில் தானே வேலை செய்கின்றீர்கள்.  அங்கேயும் பலசரக்கு கடைகள் ஏராளமாக இருக்கின்றன. பழகிய தொழில் செய்வதற்கு இலகுவாக இருக்கும். அல்லது இருக்கவே இருக்கின்றது சினிமா தியேட்டர்கள் ரிக்கற் கிழிக்கலாம். ஏனினெல் நீங்களும் அகில சினிமா அனுபவம் உள்ளவரல்லவா!!!

மற்றவனை சுட்டுவிரல் காட்டி குற்றம் சாட்டும் போது இதர விரல்கள் உங்களைத்தான் காட்டுகின்றது.

 fingerpoint.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆட்களின் பிரச்சனை என்றால் எமது பிரச்சனையை தாமே முகம் கொடுக்காமல் நாட்டை விட்டு ஓடிவிட்டு ஆயுத போராட்டம்   தோல்வியில் முடிய வந்தவன் போனவன் நின்றவன் எல்லோரையும் திட்டிதீர்ப்பதுதான்.

சினிமா சம்பந்தமானவர்கள் ,இலக்கியவாதி ,அரசியல்வாதி ,விளயாட்டு வீரர்கள் ,பொதுமகன்  எவர் வந்தாலும் எங்கட பிரச்னை பற்றி கேட்டின்றது அவர்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் திட்டுகின்றது .

இவ்வளவுக்கும் எம்மவர் எத்தனயோ  கொலைகளை செய்து தள்ளும் போது அதை ஆதரித்தவர்களும் மௌனமாக இருந்தவர்கள் தான் அதிகம் .

இது ஒரு மனோவியாதி அடுத்த தலைமுறைக்கு தொடரவில்லை என்பதுதான் நல்லவிடயம் .

வாழ்க்கையில் எதையுமே இழந்து போகாமல்... ஊரிலிருந்த  இருந்த அவ்வளவத்தையும் அப்படியே வெளிநாட்டுக்குத் தூக்கி வந்தவர்களுக்கு.. இழப்பின் வலியோ அல்லது இழப்பின் வலிகளை ஆற்றுவதற்கான அப்துல் கலாம் போன்ற பெரியவர்கள் சிந்தும் கண்டனங்களின் வலிமையோ புரிந்திருக்க நியாயமில்லை!அப்துல் கலாம் கூடத் தான் கண்டுபிடித்த மகத்தான போராயுதங்களையிட்டுப் பெரு மிதமடையவில்லை! அவயவங்களை இழந்தவர்களுக்காகத் தந்து கண்டுபிடிப்புகள் பயன்படுவதையே பெருமையாகக் கருதுகின்றார்! தற்போதைய தொழில் நுட்பங்களை வைத்துத் தஞ்சைப் பெரிய கோவிலை இடித்து விட்டு.. அதை விட அழகிய கோவிலைக் கட்ட முடியும் தானே என்ற மாதிரியே உங்கள் கருத்துக்கள் அமைகின்றன! எனினும் பெரிய கோவிலின் பின்னாலுள்ள வரலாறும் சரித்திரமும் அந்தப் புதிய கோவிலுக்கு இருக்காது தானே!

புலிகள் புரிந்த கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க நான் வரவில்லை! அப்படிப் பார்த்தால் சிங்கள இராணுவம் செய்த அத்தனை கொலைகளுக்கும் நீங்கள் நியாயம் கற்பிக்க முடியாது! 

சில கொலைகளை மனிதர்கள்..குறிப்பாக நாம் அண்ணார்ந்து பார்க்கும் அப்துல் கலாம் போன்றவர்கள் கண்டிக்காமல் விடுவதானது.. அந்தக் கொலைகளை அவர்கள் நியாயப் படுத்துவது போன்றே அமைகின்றது! 

ஸிம்பாப்வேயில் கொல்லப்பட்ட 'சிஸில்' என்ற சிங்கத்தின் மரணத்துக்கும்.. முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் மரணங்களுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

நான் புலிகளின் மரணங்களை இங்கு இழுக்கவில்லை!

ஒரு வேளை ..அந்தச் சிங்கத்தின் கொலையை நிச்சயம் அப்துல் கலாம் இருந்திருந்தால் நிச்சயம் கண்டித்திருப்பார்!

உலகம் முழுக்க அந்தச் சிங்கத்தின் கொலையைக் கண்டிக்கிறதே.. அதையே தான் நாமும் உலகத்திடம் எதிர்பார்த்தோம்!

உங்கள் கருத்துப் படி எமது இனத்தவரின் கொலைகள்.. கண்டங்களுக்குக் கூடத் தகுதியற்றவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் எதையுமே இழந்து போகாமல்... ஊரிலிருந்த  இருந்த அவ்வளவத்தையும் அப்படியே வெளிநாட்டுக்குத் தூக்கி வந்தவர்களுக்கு.. இழப்பின் வலியோ அல்லது இழப்பின் வலிகளை ஆற்றுவதற்கான அப்துல் கலாம் போன்ற பெரியவர்கள் சிந்தும் கண்டனங்களின் வலிமையோ புரிந்திருக்க நியாயமில்லை!அப்துல் கலாம் கூடத் தான் கண்டுபிடித்த மகத்தான போராயுதங்களையிட்டுப் பெரு மிதமடையவில்லை! அவயவங்களை இழந்தவர்களுக்காகத் தந்து கண்டுபிடிப்புகள் பயன்படுவதையே பெருமையாகக் கருதுகின்றார்! தற்போதைய தொழில் நுட்பங்களை வைத்துத் தஞ்சைப் பெரிய கோவிலை இடித்து விட்டு.. அதை விட அழகிய கோவிலைக் கட்ட முடியும் தானே என்ற மாதிரியே உங்கள் கருத்துக்கள் அமைகின்றன! எனினும் பெரிய கோவிலின் பின்னாலுள்ள வரலாறும் சரித்திரமும் அந்தப் புதிய கோவிலுக்கு இருக்காது தானே!

புலிகள் புரிந்த கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க நான் வரவில்லை! அப்படிப் பார்த்தால் சிங்கள இராணுவம் செய்த அத்தனை கொலைகளுக்கும் நீங்கள் நியாயம் கற்பிக்க முடியாது! 

சில கொலைகளை மனிதர்கள்..குறிப்பாக நாம் அண்ணார்ந்து பார்க்கும் அப்துல் கலாம் போன்றவர்கள் கண்டிக்காமல் விடுவதானது.. அந்தக் கொலைகளை அவர்கள் நியாயப் படுத்துவது போன்றே அமைகின்றது! 

ஸிம்பாப்வேயில் கொல்லப்பட்ட 'சிஸில்' என்ற சிங்கத்தின் மரணத்துக்கும்.. முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் மரணங்களுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

நான் புலிகளின் மரணங்களை இங்கு இழுக்கவில்லை!

ஒரு வேளை ..அந்தச் சிங்கத்தின் கொலையை நிச்சயம் அப்துல் கலாம் இருந்திருந்தால் நிச்சயம் கண்டித்திருப்பார்!

உலகம் முழுக்க அந்தச் சிங்கத்தின் கொலையைக் கண்டிக்கிறதே.. அதையே தான் நாமும் உலகத்திடம் எதிர்பார்த்தோம்!

உங்கள் கருத்துப் படி எமது இனத்தவரின் கொலைகள்.. கண்டங்களுக்குக் கூடத் தகுதியற்றவையா?

ஸிம்பாப்வேயில் கொல்லப்பட்ட 'சிஸில்' என்ற சிங்கத்தின் மரணத்துக்கும்.. முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் மரணங்களுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

 புராணங்கள் இதிகாசங்களையும் தாண்டி உலகத்தின் இன்றையை செய்தியை வைத்து எமது விடுதலையின் ஏளனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்கள்.
உண்மை நிலைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.... என்ன செய்வது,  புங்கை.
புலி, செய்ததை..... எல்லாம், பாராட்ட முடியாவிட்டாலும்...
நக்கல், அடிக்காமல்... இருக்குமா.... நம் சனம்.
அதற்குப் பெயர் தான்.. தமிழன்.
உதுகள்... எங்கை.... போனாலும், திருந்தாத இனம்.

எமது வாழ்வில், நெடுக அலுப்புத் தந்து கொண்டிருக்கும்,
தலைவர்கள் இறந்தால்..... 
கீரிமலையில், அவர்களது சாம்பலும், கரையாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.