Jump to content

ராஜீவ் வழக்கு தள்ளுபடி.


Recommended Posts

ராஜீவ் வழக்கு தள்ளுபடி.

Ragin

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் பேரறிவாளவன், முருகன் மற்றும் சாந்தனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசு தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனுவை இந்திய உச்சநீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், 3 மேற்படி மூவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது சரியானதே என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது

http://www.jvpnews.com/srilanka/118510.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி, இவர்கள் கூடிய விரைவில் வெளியில் வரவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி, இவர்கள் கூடிய விரைவில் வெளியில் வரவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. இருந்தாலும் இந்திய அரசியலை நம்பேலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கின் நோக்கம் இவர்களின் விடுதலையே அன்றி உச்ச நீதிமன்றத்து தீர்ப்பை மீண்டும் மீண்டும் அதுவே சரி பார்க்கும் அவலம் அல்ல.  இது தான் ஹிந்தியாவின் நீதித்துறையின் இலச்சனம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையே... உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தமை... பாராட்டும் படியான விடயம்.
இனியும்... எவனும், வேறு மனு கொடுத்து... காலத்தை விரயமாக்காமல் இருக்க வேண்டும்.
அத்துடன் இவர்களை... தமிழக அரசு விடுதலை செய்யலாமா..... என்ற வழக்கு ஒன்று நடந்த படி உள்ளது. 
அதற்கும்.. விரைவில், நல்ல தீர்ப்பு  வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையே... உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தமை... பாராட்டும் படியான விடயம்.
இனியும்... எவனும், வேறு மனு கொடுத்து... காலத்தை விரயமாக்காமல் இருக்க வேண்டும்.
அத்துடன் இவர்களை... தமிழக அரசு விடுதலை செய்யலாமா..... என்ற வழக்கு ஒன்று நடந்த படி உள்ளது. 
அதற்கும்.. விரைவில், நல்ல தீர்ப்பு  வர வேண்டும்.

அந்த வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது சிறி

பாதகமாக...

மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது சிறி

பாதகமாக...

மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று.

தகவலுக்கு, நன்றி விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது சிறி

பாதகமாக...

மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று.

அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருப்பதாக படித்த நினைவு.. இறுதித் தீர்ப்பு வந்தமாதிரி தெரியவில்லையே?

 

முருகன், சாந்தன், பேரறிவாளன் தண்டனையை குறைத்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரது கருணை மனுக்கள் 11 ஆண்டுகளாக குடியரசுத் தலைவரிடம் கிடப்பில் இருந்ததால், தண்டனையை குறைக்க வேண்டும் என்று அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி, அவர்களது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ராஜீவ் கொலை வழக்கில் உயிரிழந்தோரின் குடும்பங்களின் கருத்தையும் கேட்க வேண்டும். அவர்களது நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று வாதிடப்பட்டது. இந்த வாதம் அப்போதே நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கருணை மனு மீது 11 ஆண்டுகள் முடிவெடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது அசாதாரண தாமதம் தான். அதைக் காரணமாக வைத்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சரியானது தான்’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

7 பேர் விடுதலை மனு

இவர்கள் மூன்று பேர் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை தமிழக அரசு விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதி மன்றத்தின் வேறு அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tamil Hindu

 

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் வன்னியர்,

தகவலுக்கு நன்றி,

இவர்கள் விரைவில் வெளிவர இறைவனை பிரார்த்திப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு விடுதலை செய்ததை எதிர்த்து, மத்திய அரசு தொடர்ந்த வழக்கு பற்றிய.... 
உண்மை நிலவரத்தை அறியத் தந்த வன்னியனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.