Jump to content

இறுதி யுத்தகாலத்தில் திட்டமிட்டே கூட்டமைப்பினர் இந்தியா ஓடினர்!


Recommended Posts

இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நிலைப்பாடு தாங்களும் அக்கட்சி எம்.பி என்ற வகையில் என்னவாக இருந்தது என கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நாங்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் இருந்தோம். அங்கு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. எமது கூட்டமைப்பினர் தமது தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது இந்தியா அவர்களை கூப்பிட்டிருந்தது. கூட்டமைப்பினர் இந்தியா செல்லும் விடயம் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவனுக்கு தெரியவந்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டார். அப்போது கூட்டமைப்பினர் எவரும் புலிகளுடன் கதைக்கவில்லை. ஏனெனில் புலிகளின் கதை முடிகின்றது. இந்தியாவுடன் போவோம் எனக் கருதியிருந்தார்கள். இதன் போது எனது தொலைபேசிக்கும் அழைப்பு வந்தது. நான் கதைத்தேன்.

அப்போது தொடர்பினை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்பினர் எங்கே நிற்கிறார்கள்? அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றார். நான் அப்போது அவர்கள் அனைவரும் இந்தியா செல்ல தீர்மானித்துள்ளார்கள் என தெரிவித்திருந்தேன். உடனடியாக புலித்தேவன் என்னிடம் சொன்னார் அவர்கள் இந்தியா செல்வதை நிறுத்தும் படி ஏனெனில் இவர்களை இந்தியாவில் வாயை மூடிக்கொண்டு இருக்க வைத்துவிட்டு யுத்தத்தை முடிப்பதற்கு இந்த அரசாங்கமும் இந்தியாவும் பார்கிறது என்றார். நான் இதனைக் கூறியபோது கூட்டமைப்பினர் அதனை கணக்கு எடுக்கவில்லை. அன்றிரவே இந்தியா சென்று விட்டனர். அவர்கள் யத்தம் முடிந்த பின்னே வந்து இறங்கினார்களெனவும் அவர் தெரிவித்தார்.http://www.pathivu.com/news/41901/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவருக்கு நடேசன் அய்யா ஏதும் சொல்லேல்லையாமோ? 

Link to comment
Share on other sites

அட இந்தியாவுக்கு ஓடாமல் இருந்தால் தானே அதிசயம் .....குரங்கு வாலை நிமிர்த்த முடியுமோ ?

Link to comment
Share on other sites

தலைவரால் உருவாக்கபட்டதாம் கூட்டமைப்பு .

தலைவாரல் ஜனாதிபதியானவர் மகிந்தா .

அடுத்த வரி வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தியாவுக்கு ஓடாமல் இருந்தால் தானே அதிசயம் .....குரங்கு வாலை நிமிர்த்த முடியுமோ ?

 இருந்து பாருங்கோ......... திருப்பியும் ஓடிப்போய் கோள்மூட்டத்தானே போயினம் !!!!! :grin:

Link to comment
Share on other sites

20000ம் ஆண்டுக்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த பலரை புலிகள் துரோகிகள் என்று கொன்றுவிட்டு யாழில் மேயர் யோகேஷ்வரன் மேயர் சிவபாலன் கட்சி உறுப்பினர்கள்.பின் யாழை டக்கிளஷ் மாமா பிரபாகரன் தான் கொடுத்தவர் ஆழசொல்லி நான் சும்மா உனக்கு தற்கொலை குண்டு அனுப்புவன் வருகிறார் என்றால் முன்பே அறிவிப்பன் நீர் ஒழிந்துகொள்ளும் என்று.அது தான் படிப்பறிவில்லாதவன் எல்லாம் யாழில் மேயராக இருந்தவர்கள்.பின்பு சமாதான காலத்தில் சர்வதேசத்திற்கு மக்களால் அங்கீகரிக்கபட்டவர்களின் ஆதரவு தேவை என்று சர்வதேசம் கேட்ட போதுதான் விழித்து இப்படி ஒருபிரச்சனையிருக்கா என்றபடியால் தான் தமிழர் விடுதலைக் கூட்டணி அனைத்து இயக்கங்களையும் ஒன்று சேர்த்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக தான் இல்லாவிட்டால் இவர்களை சர்வதேசம் பேச்சுக்கு அழைத்திரா.இதை விடுத்து இங்கு வந்து பீத்துகிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.. தலைவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்.. இந்த தமிழ் நண்டுகளை ஒரே கூடையில் போட்டு வைச்சிருக்க என்பது.

கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் பேரழிவை விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்ததில் இருந்து.... நண்டுகளின் குணம் வெளிப்பட ஆரம்பித்து விட்டது. :unsure:

இது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. இப்படி நடக்கல்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன ஜனாதிபதி தேர்தலுக்கும்... இந்தியாவுக்கு அடிக்கடி ஓடித் திரிந்த சம்பந்தன்....
இந்தப் பொதுத் தேர்தலுக்கு, இந்தியாவுக்குப் போகாமல்,

"ஊருக்குள்ளை... ரவுண்ட்" அடிச்சுக் கொண்டு திரியிற மர்மம் எனக்குப் புரியவில்லை.:grin: :ärger:

Link to comment
Share on other sites

2006ல் இருந்து புலிகளின் அரசியல் துறை எத்தனை பேரை டெல்லிக்கு தூதுவர்களாக அனுப்பி யுத்தத்தை ஒரு நிலைகொண்வர முயற்சித்தவர்கள் என்று எங்களிற்கு தெரியும் சம்பந்தன் போனது தான் உங்களிற்கு பிரச்சனையாகவுள்ளது.எல்லா இயக்கத்திற்கும் தமிழ்கட்சிகளிற்கும் ஏஐமான் டெல்லிதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006ல் இருந்து புலிகளின் அரசியல் துறை எத்தனை பேரை டெல்லிக்கு தூதுவர்களாக அனுப்பி யுத்தத்தை ஒரு நிலைகொண்வர முயற்சித்தவர்கள் என்று எங்களிற்கு தெரியும் சம்பந்தன் போனது தான் உங்களிற்கு பிரச்சனையாகவுள்ளது.எல்லா இயக்கத்திற்கும் தமிழ்கட்சிகளிற்கும் ஏஐமான் டெல்லிதான்.

 

சூப்பர் காமெடி 

Link to comment
Share on other sites

சம்பந்தனின் பருப்பு மோடியிடம் அவியாது அது தான் குரங்கு வாலை சுருட்டி கொண்டு உள்ளுருக்குள் சுற்றுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் பருப்பு மோடியிடம் அவியாது அது தான் குரங்கு வாலை சுருட்டி கொண்டு உள்ளுருக்குள் சுற்றுது

இப்ப... ஜெயலலிதா, தமிழ் நாட்டு முதலமைச்சராக இருப்பதால்... 
அங்கு போனாலும், இவர்களை....திரும்பியும் பார்க்க மாட்டார்.
அதான்.... உள்ளூருக்குள்ளையே  சுத்தி, சுத்தி.... உழுது கொண்டிருக்கிறார்.:grin:

Link to comment
Share on other sites

கஜேந்திரகுமார்

கஜேந்திரன்

பத்மினி

3பேரும் 2009ல் கூட்டமைப்பு உறுப்பினர்கள்

அப்ப என்ன ....... கூட்டமைப்பு எண்டு போட்டிருக்கு?

சுடர்வன் தலையங்கத்தை போடும் போது கொஞ்சம் யோசிச்சு போடோனும்

தலைப்புக்கும் செய்திக்கும் தொடர்பில்லாமல் செய்திகளை தொடர்ந்து இணைக்குரீர்கள்

eg: விக்னேஸ்வரன் ஐயா கூட்டமைப்புக்கு எதிர்ப்பு எண்டமாதிரி போட்டிருந்தியல் உள்ள போய் பார்த்தால் விஷயம் வேறு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.