Jump to content

இராணுவத்தையே அச்சத்துக்குள்ளாக்கிய வல்வெட்டித்துறைப் புகைக்குண்டு


Recommended Posts

இராணுவத்தையே அச்சத்திற்குள்ளாக்கிய வல்வெட்டித்துறை புகைக்குண்டு!

JULY 27, 2015 COMMENTS OFF
இராணுவத்தையே அச்சத்திற்குள்ளாக்கிய  வல்வெட்டித்துறை புகைக்குண்டு!

வல்வெட்டித்துறையில் நெடியகாடு இளைஞர்களால் காலம்காலமாக கோவில் திருவிழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளிலும்…

பல ஊர்களில் பல வகையான நிகழ்வுகளிலும் பல வகையான அளவுகளில் உருவாக்கி நெருப்பின் மூலம் வருகின்ற புகையின் சூடான காற்றினை நிரப்பி வானில் பறக்க விடுகின்ற காகிதத்தில் உருவான ஒரு பெரிய Baloon புகைக்குண்டு அல்லது புகைக்கூடு என்று அழைக்கப்படும்.

விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக வன்னியில் பல இடங்களிலும் நெடியகாட்டு இளைஞர்களின் புகைக்குண்டு அடி வானம் தொட்டு மாவீரர்களுக்காக அஞ்சலிகள் செலுத்திய பல வரலாறுகளும் உண்டு.

இந்தியா இராணுவம் வல்வெட்டித்துறையில் இருந்த காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட புகைக்குண்டு வானத்தில் பறப்பதைக் கண்டு… “விடுதலைப் புலிகள் உள்ளுக்குள் இருந்து தாக்க வருகிறார்கள்” என நினைத்து பயந்து போய் உலங்கு வானூர்திகள் ஊடாக வானத்தில் பறந்து கொண்டிருக்கும் புகைக்குண்டுகளைச் சுற்றி வளைத்து சுட்டுத் தள்ளிய வரலாறுகளும் பல உண்டு. இவ்வாறு பல வியப்பூட்டும் வரலாறுகளைக் கொண்ட புகைக்குண்டினைப் பற்றிப் பார்ப்போம்…

பலரையும் வியப்புக்குள்ளாக்கியும்… அறியாத ஒரு சிலரை அச்சத்திற்குள்ளாக்கியும் வரும் இப்புகைக் குண்டுகளானது, பட்டம் (காத்தாடி) உருவாக்கப் பயன்படுத்துகின்ற ஒரு சாதாரண காகிதத்தாலேயே உருவாக்கப்படுகிறது. இரட்சாத புகைக்குண்டுகள் மட்டுமே பைஞ்சுதை காகிதத்தால் (Cement packed Peper) உருவாக்கப்படுகிறது.

காங்கேசன்துறையில் Cement பொதி செய்யப்படும் பைகளானவை ஒரு வகையான தடிப்பான காகிதத்தாலானவை. அந்தக் காகிதத்தை ஊரவர்கள் “மாட்டுத்தாள் பேப்பர்” என்றே அழைப்பார்கள். அந்த மாட்டுத்தாள் பேப்பரைத்தான் 40 அடிக்கு மேலான புகைக்குண்டுகளை உருவாக்கப் பயன்படுத்துகிறார்கள்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்ததின நிகழ்வையொட்டி 50 அடி நீளமுள்ள இரட்சாத புகைக்குண்டினை வானத்தில் பறக்க விட்டு வல்வை மக்களின் வாழ்த்துக்களை விசேடமாக தெரிவித்து சிறப்பித்திருந்தனர், வல்வை நெடியகாட்டு இளைஞர்கள்.

இப் புகைக்குண்டுகளை பறக்க விடுவதற்காக… பாதி இரும்பு பரல்கள் அல்லது பெரிய வாளிகளில், ஏற்கனவே சேமித்து வைத்திருந்த வாகனங்களின் கழிவு எண்ணெய்களை ஊற்றி அதற்குள் பழைய துணிகளை ஊற வைத்து தீப்பந்தமாக எரியவிடுவார்கள்.
புகைக்குண்டின் நீளங்களுக்கு ஏற்ப வகையில் புகைக்குண்டின் நுழைவாயிலில் வட்டவடிவமாக பொருத்தப்படும் கம்பியின் அளவும் மாறுபடும். அந்த இரும்புக் கம்பி பொருத்தப்பட்ட வாயிலாலேயே தீச்சுவாலையில் இருந்து வெளிவரும் புகையின் காற்று உட்செலுத்தப்படும். ஏற்கனவே வாளிகளில் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலையின் மேல் புகைக்குண்டின் நுழைவாயிலை பலர் பாதுகாப்பாக பிடித்தபடி புகையிலிருந்து வரும் சூடான காற்றினை நிரப்புவார்கள்.

காற்று நிரம்பியதும் தொடர்ந்தும் பல கிலோ மீட்டர் தூரத்திற்குப் பறப்பதற்காக நுழைவாயிலில் உள்ள வட்ட வடிவ இரும்புக் கம்பியோடு இணைத்து புகைக்குண்டின் நுழைவாயிலில் குறுக்கு வழியாக நடுவினில் பெரிய தீப்பந்தம் ஒன்றை பல மணிநேரம் நின்று எரியக்கூடிய வகையில் வாயிலில் இணைத்து விடுவார்கள். கீழ்ப்பக்க நுழைவாயிலில் எரியும் தீப்பந்தம் மூலம் உள்ளிருக்கும் காற்று சூடாக்கபட்டு ஏற்கனவே முழுவதுமாக நிரம்பிய சூடான காற்றுடன் புகைக்குண்டு மெல்ல மெல்ல மேலெழும். பின்பு மெதுவாக அனைவரும் எழுந்து சிறு சுற்றுச் சுற்றி அப்படியே பறக்க விடுவார்கள்.

புகைக்குண்டானது பறந்து செல்லும் காட்சியை அருகிலிருந்து பார்க்கும் போது ஒரு வித்தியாசமான அனுபவத்தையும், ஒரு முழுமை பெற்ற மகிழ்ச்சியையும் மனதார பலரால் உணர முடியும். பல கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்ற புகைக்குண்டின் கீழ்ப்பக்க நுழைவாயிலில் பொருத்தப்பட்ட தீப்பந்தமானது அணைந்தவுடன் மெது மெதுவாக கடலிலோ அல்லது கண்தெரியாத இடத்திலோ விழுந்து விடும்.
இப் புகைக்குண்டுகள் சரியான அளவுத்திட்டத்துடனேயே உருவாக்கப்படுகிறது. அனைத்துமே அனுபவசாலிகளின் கைக்கணக்கு, கண்கணக்கினூடாகவே துல்லியமான முறைகளில் உருவாக்குகிறார்கள். சிறிய அளவு பிசகினாலும் புகைக்குண்டைப் பறக்க வைக்க முடியாது…

புகைக்குண்டு விடுவதையும், வானில் பறப்பதையும் காணவென்றே பல சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல இடங்களிலிருந்து வருவார்கள். பல பல வண்ணங்களில் புகைக்குண்டுகள் பறக்க விடுவதால் பல குழந்தைகளின் மனம் கவர்ந்த மிகப் பெரிய Baloon என்றும் சொல்லலாம்.

இலங்கையிலே வல்வெட்டித்துறையில் மட்டுமே புகைக்குண்டுகள் உருவாக்கி பறக்க விடப்படுகிறது. புகைக்குண்டு… வல்வையர்களின் பெருமைமிக்க சிறப்புக்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.Valavi 01 Valavi 02 Valavi 03 Valavi 04 Valavi 05 Valavi

 

Valavi-0f6

ஏசிறீலங்கா.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா இராணுவம், ஏற்கெனவே.... பயந்த சுபாவம் உள்ளவர்கள்.Smiley
புலிகளை கண்டு.... தலை தெறிக்க ஓடியவர்கள்.
இந்தியாவும், மற்றைய வல்லரசு நாடுகளும், ஒட்டுக் குழுக்களும்... கொடுத்த தெம்பிலை தான்,
அவர்களால்.... போரில் வெற்றி கொள்ள முடிந்தது.
இப்ப... வல்வெட்டித் துறையில் கண்ட, இந்த புகை குண்டைப் பார்த்து, எத்தினை பேர் இராணுவத்தை விட்டு ஓட யோசித்தானோ....Smiley

Link to comment
Share on other sites

 

போரில் இவர்கள் வெற்றி கண்டதில்லை. இன அழிப்பில்தான் வெற்றி கண்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்க முதலே வல்வெட்டித்துறை ஒரு வீரம் செறிந்த பூமி.
ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு மண்வாசனை. இது இயற்கையின் கொடை.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.