Jump to content

கறுப்பூ யூலை நினைவு கூர்தலும் சிட்னி தமிழ் நடுகல் திறப்பு நிகழ்வும்


Recommended Posts

அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில், உலகில் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய றூக்வூட் மயான நிலையத்தில், தமிழீழ மண்ணின் மைந்தர்களை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியின் முன்னறலில் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவுநாளும், நடுகல் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.
இன்று பி.பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களது இழந்த உறவுகளையும், அதனைத் தொடரந்து இன்றுவரை சிறிலங்கா அரசினால் தொடர்ந்தும் அழிக்கபட்டுவரும் அனைத்து மக்களையும் நினைவில் நிறுத்தி மலர்அஞ்சலி செலுத்தினார்கள்.
மலர் அஞ்சலியை திருமதி கிருஸ்ணா nஐகதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மேஐர் சலிமின் அன்புச் சகோதரியும் பிரபல வானோலி அறிவிப்பாளருமான திருமதி சோனா பிரின்ஸ் அவர்கள் உணர்வுபூர்வமாக யூலை 83ல் படுகொலை செய்யபட்ட அனைத்து மக்களையும் சிறையில் கொடூரமாக படுகொலை செய்யபட்ட போராளிகளையும் மக்களை நினைவில் சுமந்து உரையாற்றினார்.
அடுத்ததாக தமிழீழத்தில் எமது மண்ணும் மக்களும் அழிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை எமக்காக குரல் கொடுத்துவரும் ஒரே ஒரு கட்சியாகிய Australian Greens party Senator for NSW சார்ந்த Lee Rhiannon அவர்கள் உரையாற்றினார்.
செல்வி யதுகிரி லோகதாசன் அவர்கள் கறுப்பு யூலையை பற்றிய பாடலை மிகவும் உணர்வூபூர்வமாக தனிய இனிய குரலில் வழங்கினார். தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினரான செல்வன் சுஐன் அவர்கள் உரையாற்றினார்.
இறுதியாக உறுதிமொழியுடன் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவு நிகழ்வும் நடுகல் திறப்பு நிகழ்வும் நிறைவுபெற்றது.

b 5

b2

b 4

b 3

b 1

http://tamilleader.com/?p=50231

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.