Jump to content

தாலியும் குலக்குறிச் சின்னமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தாலியும் குலக்குறிச் சின்னமும்  
ஞா. ஸ்டீபன்

தமிழ்ப் பண்பாட்டில் தாலி பழங்காலந் தொட்டு வழக்கில் உள்ளதா என்பது குறித்து பல விவாதங்கள் தமிழில் நடந்துள்ளன. மா. இராசமாணிக்கனார், தமிழ்ப் பண்பாட்டில் தாலி பிற்காலத்தில் குறிப்பாக 12ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிற்கு வந்தது என்றும், அதற்குமுன் அது வழக்கில் இல்லை என்றும் உறுதிபடக் கூறினார். இதற்கு மாறாக ம.பொ.சி. சங்ககாலத்திலிருந்து தாலி வழக்கிலிருந்தது என்றும், தாலி தமிழனின் தனித்த பண்பாட்டு அடையாளம் என்றும் வாதிட்டார். வெறும் இலக்கியச்சான்றுகளை மட்டும் சான்றாதாரங்களாகக் கொள் ளாமல் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் சார்ந்த மெய்ம்மைகளையும் குறுக்கு நோக்கீடு செய்து புதிய வெளிச்சம் பாய்ப்பது இன்றியமையாதது.

thaali.jpg

தற்கால வழக்கில் தாலி என்பது திருமண நிகழ்வின் மையமான ஒரு கூறாக உள்ளது. மணமானவள் என்பதைக் குறிக்கும் அடையாளமாகப் பெண்ணிற்கு அது அமைந்துள்ளது. தாலி மீது ஏற்றப்பட்டுள்ள புனிதம் வாழ்க்கையின் அனைத்துப் பரப்புகளிலும் வேர்விட்டுள்ளது. மங்கல நாண், திருமாங்கல்யம், திருமாங்கல்ய தாரணம், மங்கலப்பூட்டு என அதன் பெயரும் புனிதமூட்டப்பட்டு வழங்கப்படுகின்றது. மங்கலச் சின்னமாகக் கருதப்படும் தாலி, கணவனின் இருப்புவரை மட்டுமே பெண்ணிற்குச் சொந்தமானது. அதாவது தாலி என்பது திருமண மானவள் என்பதை அடையாளப்படுத்தும் சின்னம் மட்டுமல்ல, அது கணவனின் இருப்பை உறுதிசெய்யும் அடை யாளமாகவும் இருக்கின்றது. கணவன் உயிருடன் இருக்கும்போது தாலியைக் கழற்றக் கூடாது என்பது அழுத்தமான மரபு. கோயில்களுக்குச் சென்று தாலிக்கயிற்றை மாற்றுபவர்கள் அம்மன் கழுத்தில்கிடக்கும் தாலியை எடுத்துப் போட்டுக்கொண்டு பின் தன்தாலியைக் கழற்றி மாற்றிப் போடுதல் உண்டு. கருக்குவேல் அய்யனார் கோயிலில் புது தாலிக் கயிற்றைக் கழுத்தில் கட்டிக்கொண்ட பிறகுதான் பழைய கயிற்றைக் கழற்றுகிறார்கள். தாலியை வெளியில் போடக்கூடாது. அது கணவனுக்கு மட்டும்தான் தெரியவேண்டும் என்பதற்கு அரிச்சந்திரன்- சந்திரமதி கதை சான்று. தாலி கழன்று வீழ்வது அல்லது அதற்கு ஏற்படும் சேதம் என்பது கணவனின் இழப்பு அல்லது கணவனுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்னுணர்த்தும் அடையாளம் எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. தாலி பாக்கியத்திற்காகவும் தாலி நிலைப்பதற்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் நோன்புகளும் வழிபாடுகளும் அதன் இன்றியமையாமையை விளக்கும். தாலி கணவனுக்குச் சமமானது. இதனால்தான் ‘தாரம் போனபின் தூரம்’ என்ற பழமொழி வழங்கப்படுகிறது. தாலியை இழந்தவள் அமங்கலமாகக் கருதப்படுகின்றாள். அவளுக்குச் சடங்கியல் சூழல்களில் வழங்கப்படும் உரிமை தாலியை வைத்தே முடிவு செய்யப்படுகின்றது.

சில சடங்கியல் சூழல்களில் தாலியைக் கழற்ற அனுதிக்கப்படுகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மருங்கூர் ஊராட்சிக்குட்பட்ட மல்லப்பாடி என்ற கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை சித்திரை மாதம் பத்துநாட்கள் திருவிழா நடத்தப்படுகின்றது. இக்கோயிலின் பூசாரி காப்பு கட்டியது முதல் திருவிழா முடியும்வரை வீட்டுக்குச் செல்லாமல் மாரியம்மன் கோயிலிலேயே தங்குவார். காப்பு கட்டும் அன்று அவர் தன் மனைவியின் கழுத்திலுள்ள தாலியைக் கழற்றிவிடுவார். திருவிழா முடிந்து வீட்டிற்குத் திரும்பிவந்து தாலியை மீண்டும் மனைவியின் கழுத்தில் கட்டுவார். இதுபோன்ற வழக்கம் தஞ்சாவூரின் சில பகுதிகளிலும் உள்ளது. மாரியம்மனுக்குப் பூசை செய்யும்போது பூசாரிக்குப் பெண்பந்தம் இருக்கக்கூடாது என்பதற்கு அடையாளமாக இது செய்யப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

தமிழகத்தில் சாதி,மத வேறுபாடின்றி அனைவரிடமும் தாலிகட்டும் வழக்கம் உள்ளது. ஆனால் எல்லாரிடமும் ஒரேமாதிரியான தாலி வழக்கில் இல்லை. சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு வடிவத்திலான தாலியைப் பயன்படுத்துகின்றன. தாலியின் வடிவமைப்பைக் கொண்டே ஒருவர் சார்ந்திருக்கும் சாதியக் குழுவை அடையாளங்காண இயலும். ஆலிலைத் தாலி, பொட்டுத்தாலி, சிறகுத்தாலி, நாகவல்லிப்பொட்டு, வட்டத்தாலி, சிறுதாலி. பெருந்தாலி, பஞ்சாரத்தாலி, நாணல்தாலி, மண்டைத்தாலி, பார்ப்பாரத்தாலி எனத் தாலியின் வகைகளும் வடிவங்களும் பல உள்ளன. ஆலிலைத் தாலி தமிழகத்திலும் கேரளத்திலும் பரவலாக உள்ளது. இத்தாலியில் தாங்கள் விரும்பும் தெய்வங்களின் உருவங்களைப் பொறித்துக்கொள்வர். கிறித்தவர்கள் ஆலிலைத் தாலியில் சிலுவை, புறா, விவிலியம், திராட்சைபோன்ற உருவங்களைப் பொறித்துக்கொள்கின்றனர். தாலிகட்டும் முறைகளிலும் சாதிக்குச் சாதி வேறுபாடுகள் உள்ளன. சாதிகளைத் தாலியை அடிப்படையாகக் கொண்டு அறுத்துக்கட்டும் சாதி, அறுத்துக்கட்டாத சாதி எனப் பகுப்பதும் வழக்கில் உள்ளது. அறுத்துக்கட்டும் சாதிகளில் மணமுறிவு அல்லது கணவனின் இறப்பு ஆகிய சூழல்களில் மறுமணம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. சில சாதிகளில் கணவனின் இறப்புக்குப் பின் மனைவியைக் கணவனின் அண்ணன் அல்லது தம்பிக்கு முதல் மனைவி அல்லது இரண்டாவது மனைவியாக்குவதுமுண்டு. குழந்தைகள் இருப்பின் அவர்களையும் இப்புதிய உறவில் இணைத்துவிடுவர். இதனைச் ‘சேர்த்துவைத்தல்’ என்கின்றனர். குழந்தைகளைப் பராமரித்தல், கணவனை இழந்த மனைவி மற்றும் சொத்துப் பாதுகாப்புபோன்ற காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்படுகின்றது. இவ்வழக்கத்தின் வெளிப்பாடே அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி என்ற பழமொழி ஆகும். சாதிய உட்பிரிவுகளைச் சிறுதாலி, பெருந்தாலி எனப் பிரித்து அடையாளப்படுத்துவதும் உண்டு.

தாலிகட்டும் முறையில் சில பொதுவான வழக்கங்களை யும் தனித்த மரபுகளையும் காணமுடிகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சில பதிவுகள் இங்குத் தரப்படுகின்றன. “பிராமணரிடம் பெண்ணின் தந்தையார் நாற்காலி (அ) விதைக் கூடைமீது அமர்ந்து பெண்ணைத் தன் மடியில் உட்காரவைத்து, மாப்பிள்ளையின் சகோதரி அவர்களுக்குப் பின்னால் நின்று விளக்குப் பிடிக்க, மணமகன் மேற்குமுகமாக நின்ற கோலத்தில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார். மாப்பிள்ளை தாலிக்கயிற்றில் ஒரு முடிச்சு மட்டும்தான் போடுகின்றார். பெண்ணின் நாத்தனார் மற்ற இரண்டு முடிச்சுகளைப் போடுகின்ற வழக்கம் உள்ளது.

கருணீகர் இனத்திலும் மணப்பெண்ணை அவள் தந்தையார் மடியில் உட்காரவைத்து, நாத்தனார் விளக்கு பிடிக்க, நுகத்தடியின் துவாரத்தில் மாங்கல்யத்தை மூன்றுமுறை நுழையவிட்டு எடுத்தல் என்ற வழக்கம் உள்ளது. ஆச்சாரிகள் இனத்தில் எதிரெதிரே உட்கார்ந்திருக்கும் மணமக்களுக்கிடையில் திரைபிடிக்க நாத்தனார் பெண்ணின் பின்னால் நின்று நாத்தி விளக்கு பிடிக்க, மணமகன் திரைமறைவிலிருந்து தாலிகட்டி மூன்று முடிச்சு போடுகின்றார். அதன் பிறகு பங்குனி முகூர்த்தம் என்ற பெயரில் மணமக்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும்நிலையில் திரைபோடாமலேயே மணமகன் மணமகள் கழுத்தில் நாகவல்லிப் பொட்டு என்ற தாலியைக் கட்டி மூன்றுமுடிச்சு போடுவார்.

குயவர் இனத்தில் பொட்டுத்தாலி என்ற தாலியை மணமகன் மணமகள் கழுத்தில் அணிந்து மூன்று முடிச்சு போடுகின்றார். மணமகனின் சகோதரி பின்னால்நின்று காமாட்சி அம்மன் விளக்கு வைத்திருப்பார். மாலையில் நாகவல்லி முகூர்த்தம் என்ற பெயரில் நாகவல்லிப் பொட்டு என்ற தாலியை இரண்டாவதாக மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி மூன்றுமுடிச்சு போடுகின்றார்.

சலவைத் தொழிலாளர் இனத்தில் மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையில் திரைபோட்டு நாத்தனார் பெண்ணுக்குப் பின்னால் நின்று விளக்கு பிடிக்க மாப்பிள்ளை, பெண்ணின் கழுத்தில் தாலிகட்டி மூன்றுமுடிச்சு போடுகின்றார். தொண்டைமண்டல சைவவேளாளர், தேசிகர், வீரசைவப் பண்டாரம், பேரி செட்டியார், வாணியச் செட்டியார், சேனைத் தலைவர், செங்குந்தர், வன்னியர், யாதவர், ஆதிதிராவிடர் ஆகிய பத்து சாதியினரிடமும் மணமேடையில் மணமக்கள் அமர்ந்த நிலையிலிருக்க, மணப்பெண்ணின் கழுத்தில் தாலிகட்டி மூன்று முடிச்சு போடுதல், மணமகனின் சகோதரி பின்னால்நின்று காமாட்சி விளக்கு பிடித்தல் என்ற பொதுவான வழக்கம் காணப்படுகின்றது.”(அ.இராசேந்திரன், 2006: 73-74).

தாலியைக் கோக்க மஞ்சள், கருப்பு, சிவப்பு, வெள்ளைநிறக் கயிற்றில்

ஏதேனும் ஒன்று பயன்படுத்தப்படுகின்றது. கயிற்றின் நிறவேறுபாட்டிற்கும் சாதியக் குழுக்களுக்கும் தொடர்

புண்டு. “சங்கரன்கோயில் அருகிலுள்ள முடுக்குமீண்டான் பட்டியில் வாழும் செம்பநாட்டு மறவரிடையே கருப்புக் கயிற்றினைத் தாலியாக அணியும் பழக்கம் இருந்ததாகவும், இப்போது எல்லோரும் மஞ்சள் கயிற்றினையே பயன்படுத்துவதாகவும் குறிக்கப்படுகின்றது. இப்போதும் கொண்டையம் கோட்டை மறவர்களிடம் இப்பழக்கம் உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. சைவச் செட்டி மார்களும், பிள்ளைமார்களும் ஏழு நூல் இழையில் தாலியைக் கோர்த்துக் கட்டுவர். மஞ்சள் கயிற்றைத் தாலியாகப் பயன்படுத்தும் வேறுசில சாதிகளில் விதவைகள் கருப்புக் கயிற்றை அணிவர். மேலும் உருமா கட்டும் பழக்கம் ஒன்று கொண்டையம் கோட்டையாரிடம் உள்ளது. அதாவது தங்கத்திலான பட்டையான ஒன்றை மணமகளின் நெற்றியில் தாய்மாமன் கட்டுவார். அதை அப்பெண் பத்திரமாகப் பெட்டியில் வைத்துக்கொள்வாள். செம்பநாட்டு மறவர் இதைப் ‘பட்டம் கட்டுதல்’ என்கின்றனர். கிறித்தவ உடையார்களிடமும் இப்பழக்கம் உள்ளது. கிறித்தவப் பறையர், பள்ளர்களிடையே பட்டம் கட்டுதல் என்ற பெயரில் நாத்திமார், மாமியார் போன்றோர் நெற்றியில் கட்டுவர். இதனை நாத்திப் பட்டம், மாமிப்பட்டம் என்று கூறுவர். கடலூர் மாவட்டத்திலுள்ள கிறித்தவப் பறையர்களிடையே முதலில் வெள்ளை நூலில் தாலி கட்டப்படும். தாலி பெருக்கிப் போடும் அன்றுதான் வேறு மஞ்சள் கயிற்றில் அது மாற்றப்படும்” (அ.நிர்மலா, தமிழகப் பெண்களும் தாலி பற்றிய வழக்காறுகளும்- ஆய்வறிக்கை 2005:21-22). வாழைக்குத் தாலிகட்டுதல், தென்னைக்குத் தாலிகட்டுதல், வீட்டுத் தூணுக்குத் தாலிகட்டுதல், அரசமரத்துக்குத்

தாலி கட்டுதல், கழுதைக்குத் தாலிகட்டுதல் என வெவ்வேறு நோக்கங்களுக்காகத் தாலிகட்டும் மரபுகளும் உள்ளன.

கிறித்தவர்களைத் தவிர்த்து ஏனைய பிரிவினரிடம் தாலிகட்டும் நிகழ்வு கோயிலில்தான் நிகழ வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெரும்பாலும் தாலிகட்டுதல் மணமகள் இல்லத்தில் நிகழும். சில சாதியினரிடம் மணமகன் இல்லத்தில் நிகழும். பெரும்பான்மையான திராவிடப் பழங்குடியினரின் திருமணம் வீட்டில் நிகழ்கின்றது. தாலிகட்டிய பின்னர் குலதெய்வ வழிபாடு செய்வதே வழக்கமாகவுள்ளது. தாலிகட்டும்போது மணமகனுக்கு அவனது சகோதரி உறவுடைய பெண் அருகிலிருந்து உதவுவது பெரும்பான்மை வழக்கமாக உள்ளது. “மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலிகட்டும் வழக்கமுடைய சாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணைசெய்கின்றாள். ஒன்றிரண்டு சாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையிலுள்ள சந்து அல்லது முடக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலிகட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்து தாலிகட்டிய வழக்கத்தின் எச்சப்பாடாகும்”(தொ.பரமசிவன்,2001:50). முன்பு அனுப்பர் சமூகத்தாரின் திருமணங்களில் மாப்பிள்ளையின் பங்காளிகள் சென்று மணப்பெண்ணைக் குண்டுகட்டாகக் கட்டித் தூக்கிவந்து மணமேடையில் அமர்த்துவதுண்டு என செங்கோ வரதராசன் பதிவு செய்துள்ளார் (1988:101). பெண்ணைக் கவர்ந்து வந்து மணம் செய்வது பழங்குடிமக்களிடமும் காணப்பட்ட வழக்கமாகவுள்ளது. பல ஜமீன்தார்கள் தங்களுக்குப் பிடித்த பெண்களைக் கடத்திவந்து அந்தப் புரத்தில் சேர்த்த பதிவுகளும் உள்ளன. அரசர்களும் இளவரசர்களும் வேட்டைக்குச் செல்லும் போது இவ்வாறு பெண்களைக் கவர்ந்து சென்ற கதைகள் பல வழக்கிலுள்ளன.

குடும்பம் என்னும் நிறுவனத்தைத் தக்கவைக்கும் இன்றியமையாத ஒழுகலாறே திருமணமாகும். தற்காலத்தில் தாலி திருமணத்தின் தவிர்க்க முடியாத கூறாக உள்ளது. எனவே தாலி என்ற கூறைத் தனியாகப் பிரித்துப் பார்ப்பது பொருத்தமுடையதாக இருக்காது. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் தாலி எத்தகைய இடத்தைப் பெறுகின்றது என்பதைப் பகுப்பாய்வதன் மூலமே தாலி தொடர்பான வெவ்வேறு மரபுகளையும் வேறுபாடுகளையும் புரிந்துகொள்ள இயலும். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வழக்கிலிருந்த - வழக்கிலிருக்கும் தாலி தொடர்பான மரபுகள் மேலே தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. இங்குச் சுட்டப்பட்ட வழக்கங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளன என்று சுருக்கிவிட இயலாது. இறப்புச் சடங்கில் நிகழ்த்தப்படும் தாலியறுப்புச் சடங்கும் சாதிக்குச் சாதி, பகுதிக்குப் பகுதி வேறுபடுகின்றன. விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கையர்கள் நிகழ்த்தும் தாலியறுப்புச் சடங்கு, சில பெருந்தெய்வக் கோயில்களில் நிகழ்த்தப்படும் திருக்கல்யாணச் சடங்கு போன்றவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இவ்வா றாகத் தாலி என்பது திருமணம், வழிபாடு, இறப்பு ஆகிய மூன்று தளங்களில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது என்பதை மேலே தரப்பட்டுள்ள தரவுகள் உணர்த்துகின்றன. அதே வேளையில் தாலிக்கு ஏதோ ஒரு தொன்மைத்தன்மை உள்ளது என்பதையும் ஊகிக்க முடிகின்றது. தாலியின் படிநிலை வளர்ச்சியை அடையாளங்காண்பதின் மூலம் அதன் தற்காலச் செயற்பாடுகளைப் புரிந்துகொள்ள இயலும்.

தமிழ்நாட்டு அணிகலன்கள் குறித்து விரிவாக ஆய்வுசெய்த சாத்தான்குளம் அ. இராகவன் 100க்கும் மேற்பட்ட கழுத்தணிகள் உள்ளன என்றும், அவற்றுள் 59 அணிகலன்கள் பற்றி விளக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இராகவன் விளக்கியுள்ள அணி கலன்களுள் தாலியும் அடங்கும். இன்று அணிந்துவரும் திருமண அணியன்று தாலி எனக் குறிப்பிடும் அவர் ஐம்படைத் தாலி, தாலிக்கொழுந்து, சிறுநெற்றாலி, பன்னிரைத்தாலி, பன்மணித்தாலி, புலிப்பல்தாலி, புலிநகத்தாலி, பொன்றாலி, பின்றாலி, மணத்தாலி எனப் பத்து வகையான தாலிகளைக் குறிப்பிடுகின்றார் (தமிழ்நநட்டு அணிகலன்கள் 1970: 210-212). இவற்றுள் ஒன்று கூட திருமணத்தின்போது கட்டப்படும் தாலியைக் குறிக்கவில்லை என்பது கவனத்திற்குரியது. சங்கஇலக்கியத்தில் ஆண்களும் அணியும் அணிகலனாகத் தாலி காட்டப்பட்டுள்ளது (அகம்.54:18). இப்பாடலில் புலிப்பல் தாலி அணிந்த வீரன் ஒருவனைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறு.161ஆவது பாடல் புலிப்பல் தாலி அணிந்த தலைவன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. போர்வீரன் ஒருவன் தன் மரபுவழியான அணிகலன்களைக் களைந்து போர்க்கருவிகளையும் போர் அணிகலன்களையும் அணிந்த நிலையை புறம்.77 ஆவது பாடல் வருணிக்கின்றது. அத்தகைய வீரன் தாலியை(ஐம்படை) இன்னும் களையவில்லை என்று அப்பாடல் குறிப்பிடுகின்றது. புலிப்பல் தாலி அணிந்த சிறுவர்களைப்புறம்.374ஆவது பாடல் குறிப்பிடுகின்றது. புலிப்பல் தாலி அணிந்த பெண்கள் பற்றியும் குறிப்பு உள்ளது. உடன்போக்கு சென்ற தலைவியைச் சுரத்திடைத் தேடிச்சென்ற செவிலித்தாய் தன் ஆற்றாமையை வழியில் கண்ட மானிடம் புலம்புவதாக அமைந்த அகம்.7ஆவது பாடல் திருமணத்திற்கு முன்பு புலிப்பல்தாலி அணிந்திருந்த தலைவிபற்றிக் குறிப்பிடுகின்றது. இப்பாடல்களில் குறிக்கப்படும் புலிப்பல் தாலி ஆண்,பெண் என இருபாலருக்கும் உரிய அணிகலன் என்பது தெளிவு. குறிஞ்சி, முல்லை சார்ந்த மாந்தர்களே புலிப்பல்தாலி அணிந்திருந்தனர் என்றும் அறியமுடிகின்றது. வீரத்தின் சின்னமாகப் புலிப்பல் தாலியை அணிந்து கொண்டனர் என்று தொ.பரமசிவன் (பண்பபட்டு அசைவுகள் 2001:52) குறிப்பிடுவது போன்று பொருள்கொள்ளாமல் சிறுவர்களும் பெண்களும் புலிப்பல்தாலி அணிந்திருந்தனர் என்ற குறிப்புகளையும் கவனத்தில்கொண்டால் அது ஒரு குலக்குறிச் சின்னமாக இருக்கலாம் எனக் கருதும் வாய்ப்புள்ளது. எனவே புலிப்பல் தாலி திருமணத்தோடு தொடர்புடையது அல்ல எனத் தெளியலாம்.

அகநானூற்றின் 86 மற்றும் 136ஆகிய இருபாடல்கள் சங்ககாலத் திருமணமுறையை விரிவாக விளக்குகின்றன. இவ்விரு பாடல்களிலும் திருமணத்தின்போது செய்யப்பட்ட சடங்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் தாலிபற்றிய குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. “திருமணத்தின்பொழுது மணமக்களுக்குத் தாலிகட்டும் வழக்கம் இருந்திருக்குமாயின், இவ்விரு பாக்களில் ஒன்றிலேனும் நீராட்டு, விருந்து முதலியனவற்றைக் கூறும் புலவர், தாலிகட்டும் சடங்கினைக் குறியாதிருத்தல் கூடுமோ?” என்று மா.இராசமாணிக்கனார் கேள்வி எழுப்பியுள்ளார் (தமிழர் திருமணத்தில் தாலி 1955:13). வதுவை மணத்தில் தாலிகட்டும் வழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என உறுதிப்படுத்த இவ்விரு பாடல்களும் உறுதியான சான்றுகள் என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியங்களில் தாலி என்பதற்கு அணிகலன் மட்டுமல்லாது வேறு பொருள்களும் (சோழி) உள்ளன என்பதற்கு ஐங்குறுநூறு 166ஆவது பாடல் சான்றாக அமைகின்றது.

சங்ககாலத் திருமணமுறையில் சமயத்திற்கு இடமில்லை. அச்சடங்கு குழுக்களுக்குரிய குலச்சடங்காகவே அமைந்திருந்தது. குறவர், வேட்டுவர், உமணர், ஆயர், மறவர்போன்ற இனக்குழுக்களின் திருமணமுறைகளில் வேறுபாடுகள் இருந்தனவா என்பதை அறிய அகச் சான்றுகள் காணப்பெறவில்லை. திருமணநிகழ்வைப்பற்றிப் பேசும் இரண்டு பாடல்களுமே (அகம்.86,136) மருதத்திணை சார்ந்தவை. இருபாடல்களும் தலைவி ஊடலுற்ற சூழலில் தலைவன் தமக்கு நிகழ்ந்த திருமண நிகழ்வை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன. முதுமங்கல பெண்டிர் மணநீராட்ட மகனைப் பெற்றெடுத்த மகளீர் நால்வர் சூழ்ந்து வாழ்த்தி நெல்லும் மலரும் தலையில் சொரிந்து இல்லக்கிழத்தியாக்கினர் எனக் குறிப்பிடுகின்றன. மணநிகழ்வு பெண்களால் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தை நிகழ்த்திய பெண்களை அகம்.86ஆம் பாடல் ‘வால்இழை மகளிர்’ என்றும், அகம். 136ஆம் பாடல் ‘வதுவை மண்ணிய மகளிர்’ என்றும் குறிப்பிடுகின்றன. வாழ்வரசிகளே திருமணத்தை நடத்திவைத்துள்ளனர். பெண்கள் திருமணத்துக்குப்பின் அணியும் அணிகலன்கள் தனியாக இருந்துள்ளன என்பதை ‘வால்இழை மகளிர்’ என்ற குறிப்பும் அகம்136 ஆம் பாடலில் காணப்படும் ‘வெண்நூல் சூட்டி’ என்ற குறிப்பும் உணர்த்துகின்றன. வதுவை மணம் கண்ட பெண்களை அடையாளம்காண அவர்களது அணிகலன்களே பயன்பட்டன.

திருமணமாகாத பெண்களை அடையாளங்காணச் சில அணி கலன்கள் வழக்கில் இருந்தன என்பதை உறுதிப்படுத்த பல சான்றுகள் உள்ளன. திருமணத்திற்குமுன் சிலம்புகழி நோன்பு செய்வது குறித்துப் பல பாடல்களில் பதிவாகியுள்ளன. உடன்போக்கு போகியத் தலைவியைத் தேடிவரும் நற்றாய் அல்லது செவிலித்தாய் சிலம்பு கழியாது சென்றுவிட்டாளே என வருந்துவதாக அமைந்துள்ளன (அகம்.315:8, 321:15, 369:25, 385:17, ஐங்கு.399:1-2, நற்.279:9). மணமாகாத பெண்கள் காலில் சிலம்பு அணிவர் என்பதை இக்குறிப்புகள் உறுதிசெய்கின்றன. சிலம்புக்கழிச் சடங்கு பெண்வீட்டில் நிகழ்த்தப்பட்டப் பின்னரே வதுவை மணம் நிகழும் என்பதும் இக்குறிப்புகளால் அறியப்படுகின்றது. வதுவை மணத்தை விளக்கும் அகம்; 86, 136 ஆகிய பாடல்களில் சிலம்புக்கழிதல் பற்றிய குறிப்புகள் இல்லை. பாலைத் திணைப் பாடல்களில்தான் சிலம்புக்கழிதல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவ்வாறாயின் சிலம்புக்கழிதல் சடங்கு குறிஞ்சி, முல்லை, பாலைத் திணை சார்ந்த மரபாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது. பெண்கள் காலில் அணியும் சிலம்பு குலக்குறிச் சின்னமாக இருக்கலாம். பெண்கள் திருமணத்தின் காரணமாக எக்குலத்தோடு இணைக்கப்படுகின்றனரோ அக்குலத்தின் குலக்குறிச் சின்னத்தை ஏற்று அக்குலத்துக்குரியவராக மாறவேண்டும். இதன் காரணமாகவே சிலம்புக்கழி சடங்கு செய்யப்படுகின்றது. உடன்போக்கு செல்லும் தலைவி சிலம்பைக் கழற்றிவிட்டுச் சென்ற குறிப்பும் உள்ளது. “நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும், எம்மனை வதுவை நல் மணம் கழிக” (ஐங்.399) என்னும் பாடல்வரிகள் பெண்ணின் பிறந்த வீட்டுக் குலக்குறிச் சின்னமாகிய சிலம்பைக் களைந்து வதுவை மணம் செய்வதைத் தெளிவாக்கியுள்ளது. திருமணச்சடங்கில் பெண்ணிற்கு அணியப்பட்ட அணிகலன் யாது என்பது குறித்த தெளிவான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. வால்இழை மகளீர்(அகம்.86). வெண்நூல்(அகம்.136) ஆகிய குறிப்புகள் திருமணமானப் பெண்கள் அணிபவை என்பதை உணர்த்துகின்றன. இருப்பினும் இவை எவ்வகையான அணிகலன் என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை. கைம்பெண்கள் அணிகலன்களைத் துறந்தனர்(புறம்.261:18) என்ற செய்தி பரவலாக உள்ளது. ‘ஈகை அரிய இழைஅணி மகளிரொடு’(புறம்.127: 7-8) என்ற குறிப்பு மங்கல அணியைக் குறிக்கின்றது என்ற கருத்து உள்ளது (தமிழர் திருமணம் ம.பொ.சி.1990:22). இக்குறிப்புகள் திருமணமான பெண்களோடு தொடர்புடைய அணிகலன்கள் குறித்தவை. ஆனால் அவை தாலியைக் குறிக்கவில்லை என்ற கருத்தும் வலுவாக உள்ளது.

பழந்தமிழ் மரபில் தாலிகட்டும் வழக்கம் இல்லை என்ற கருத்தையும் அதற்குச் சமயத் தொடர்பில்லை என்பதற்கும் மேற்குறித்த சான்றுகள் போதுமானவை. சங்ககாலம் தொட்டுத் தமிழர்களிடம் சமணம், பௌத்தம், வைதீகம், சைவம், வைணவம் போன்ற சமயங்கள் தம்மை நிலைநிறுத்தக் கடுமையாகப் போராடி வந்துள்ளன. இச்சமயங்களுக்குள் பூசல்களும் மன்னர்களின் ஆதரவைப் பெறுவதற்கான போட்டிகளும் தொடர்ந்து இருந்துள்ளன.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆட்சி நிறுவப்பட்டதும் சமண, பௌத்த சமயங்கள் செல்வாக்கிழந்தன. பல்லவர்கள் வைதீகச் சமயத்திற்குப் பெரும் ஆதரவு தந்தனர். சைவம், வைணவம் ஆகிய சமயங்களும் வைதீகத்திற்கு ஈடாக வளர்ந்தன. பல கோயில்கள் கட்டப்பட்டன. இச்சமயங்கள் அரசு ஆதரவுடன் நிறுவனங்களாக மலர்ந்தன. இதனைத் தொடர்ந்து தோன்றிய பக்தி இயக்கம் தெய்வங்களையும் சமய நம்பிக்கைகளையும் வெகுசனப்படுத்தின. சமய நிறுவனங்கள் அரசின் நிருவாக அமைப் பிலும் சமுதாய வாழ்விலும் நெருக்கமான பிணைப்பைப் பெற்றன. மனிதனின் இன்பத் துன்பங்களுக்குப் பிறவிப் பயன், ஊழ், தெய்வக்குற்றம், பாவம். புண்ணியம் போன்றவையே காரணம் எனக் கற்பிக்கப்பட்டன. உலகத்தை இறைவனே இயக்குகின்றான், எனவே அவனை வழிபடுவதன் மூலம் மனிதன் தனது துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தன. இதற் கேற்றாற்போல் அவற்றின் தத்துவங்களும் புராணங்களும் அமைந்தன. வளமை, பாதுகாப்பு, தீமையை மாற்றுவித்தல், வெற்றி போன்ற வற்றை வழிபாடுகளின்மூலம் பெற முடியும் என்பதை முன்வைத்துப் புராதன மந்திரச் சடங்குகளைச் சமயமயமாக்கிக் கொண்டன. இதன் நீட்சியாக வாழ்க்கை வட்டச் சடங்குகளையும் சமய நம்பிக்கைகளோடு இணைத்துக் கொண்டன.

இந்த வளர்ச்சிப்போக்கில் திருமணத்தை அடையாளப்படுத்தும் அணிகலனாகவும் குலக்குறிச் சின்னமாகவும் இருந்த மணநாண் புனிதத் தன்மைபெற்ற தாலியாக புதுப்பொலிவு பெற்றது. இனக் குழுக்களின் சமூகச் சடங்காக இருந்த திருமணநிகழ்வு சமயங்களோடு இணைக்கப்பட்டுச் சமயச் சடங்கியல் இயல்புகளைப் பெற்றது. பழந்தமிழகத்தில் திருமணச் சடங்குகள் சமூகச்சடங்குகளாகவே (community rituals) இருந்தன என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. தற்காலத்திலும் திருமணநிகழ்வில் சமயச் சடங்குகளுக்கப்பால் சமூகச் சடங்குகளும் பெருமளவில் இடம்பெறுவதைக் காணலாம். ஆனால் முகூர்த்தம் சமய மரபுகளால் செல்வாக்கு பெற்றிருப்பதைக் காணலாம். சமூகச்சடங்குகளில் சமய மரபுகளையும் நம்பிக்கைகளையும் சமயங்கள் இணைத்தமையால் குலக்குறிச் சின்னங்களைக் கொண்டு குழுக்களை அடையாளம் காண்பதற்குப் பதிலாகக் குல தெய்வத் தைக் கொண்டு அடையாளங்காணும் போக்கு தோன்றியிருக்க வேண்டும். திருமணச் சடங்கு களின் வழியாகச் சமயங்கள் வாழ் வியலில் அதிகாரம் செலுத்தத் தாலியைப் புனிதச் சின்னமாக மாற்றிக் கொண்டது. வாழ்க்கைவட்டச் சடங்குகளில் சமயம் செய்த குறுக்கீடுகளின் விளைவே திருமணத்தை அடையாளப்படுத்தும் தாலி எனலாம்.

 

http://www.kalachuvadu.com/issue-187/page39.asp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.