Jump to content

Tim Horton ம் எனது கனடாவும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இரண்டு மணிநேரம் தூங்கியிருப்போம். அறையின் வெளியே ஒரே சத்தம். எங்களுடன் வந்தவர்கள் நியூயோக் நகர் பார்க்கும் ஆவலில் தடல் புடலாக ஆயத்தமாவது எமது அறையின் வெளியே அவர்கள் பேச்சிலிருந்தே கேட்கிறது. அரைத்தூக்கத்தில் எழுந்து வெளியே வந்தேன், எங்களைத் தவிர மற்றைய எல்லோரும் ஆயத்தம். காலையில் என்னுடன் அலைந்து திரிந்த மாமாவும் சாப்பட்டு மேசையில் கோப்பிய உறிஞ்சியபடி இருக்க, அவசரப்பட்டு குளியளறைக்குள் புகுந்து சில நிமிடங்களில் வெளியே வந்து, அவசரத்தில் கோப்பியை சூட்டோடு கீழிறக்கி, கொண்டுவந்த சாப்பட்டில் கொஞ்சத்தைக் கடித்து, பாண்டுக்குள்ளும், டீ சேர்ட்டுக்குள்ளும் புகுந்துகொள்ளும்போது காலை 9 மணி. 

சிட்னியைப் போல நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு காலை நீட்டிக்கொண்டுக் காரில் போகும் வசதியில்லை என்கிறபடியால், கனடாவில் நடந்தது போலவே, அதே சப்வே, பஸ்கள்...நினைக்கும்போதே தலை வலித்தது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது, இவ்வளவு காசு கொடுத்து, இவ்வளவு கரைச்சல்ப் பட்டு, அமெரிக்காவுக்கு வந்தாயிற்று, இடம் பார்த்துத்தான் ஆகவேண்டும், என்ன கஷ்ட்டப் பட்டாவது என்று முடிவாகிவிட, தோளில் பையும், ஸ்ட்ரோலரில் சிறியவளையும் ஏற்றிக்கொண்டு எனக்கு முன்னல் நடந்துகொண்டிருந்த சொந்தங்களுக்குப் பின்னால் நானும் நடக்கத் தொடங்கினேன். மனைவி வழக்கம் போல கமெராப் பைய்யைத் தூக்கிக் கொண்டு முன்னால் நடந்துகொண்டு சென்றாள். 

நாம் தங்கியிருந்த இடத்தின் வீதிகளுக்கும், நான் கொச்சிக்கடையில் பல வருடங்களுக்கு முன்னர் பார்த்த வீதிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. நியுயோக்கின் நிலக்கீழ் சாக்கடை துர்நாற்றம் டிரெயினேஜ் வழியாக வெளியே வந்து காற்றில் கலந்துகொண்டிருக்க, ஆங்கிலம் பேசத் தெரியாத சீனர்கள் அந்தத் தெருவெங்கும் ௹தமது மொழியில்  சத்தமாகப் பேசியபடி நடந்துகொண்டிருக்க, பிண்ணனியில் நியூயோர்க் நகர பொலீசாரின் வாகன சைரன் ஒலித்துக்கொண்டிருக்க, கொலிவூட் படங்களை அந்தக் காலைப் பொழுது எனக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தது.

ஒரு 20 அல்லது 25 நிமிடங்கள் நடந்திருப்போம், நாம் ஏறவேண்டிய சப்வே நிலையமும் வந்தது. கனடாவினது போல இல்லாமல் மிகவும் பழமையானதாக, அசுத்தமாக இருந்தது அந்த சப்வே நிலையம். இடம் பார்க்க வந்துவிட்டு துப்பரவு எல்லாம் பார்த்தால் எப்படி? சரி, டிக்கெட் வாங்குவதற்கு கவுன்டருக்குப் போனோம். குடும்பம் குடும்பமாக வாங்குவதென்று முடிவாகிவிட, உதலில் மாமா குடும்பம் கவுன்டர் வாயிலைச் சூழ்ந்துகொள்ள, ஏனையவர்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்க, காலையில் அவசர அவசரமாக வேலைக்குப் போவோருக்கு நாம் இடைஞ்சலாக மாறினோம். சிலர் வாய்விட்டே, "சற்று ஒதுங்கி நில்லுங்கள் " என்று கூறிவிட்டுச் சென்றார்கள். இன்னும் சிலர் இடித்துத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.ஆவர்களது அவசரம் அவர்களுக்கு. இதற்கிடையில் டிக்கெட் கொடுப்பவருக்கும் மாமாவுக்குமிடையே ஒரு சின்னப் பிரச்சினை. ஏதோ முதன் முதலாக ஆங்கிலம் தெரியாத ஒருவருடன் கதைப்பதுபோல டிக்கெட் கொடுப்பவர் மாமாவுடன் கதைக்க, மாமாவுக்கு கடுப்பாக, டிக்கெட் கொடுப்பவர் வேண்டுமென்றே எம்மைத் தாமதப் படுத்த...அங்கே டிக்கெட் வாங்கக் காத்திருந்த மற்றையவர்கள் பொறுமை  இழக்க, போதும் போதும் என்றாகிவிட்டது. 

ஒருவாறு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறினோம். 

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

நாங்களும் அடுத்த கிழமை நியூயோக் போகின்றோம். நகரத்தைச் சுற்றிப் பார்க்க மிக ஆவல்!!

 

கெதியாய் எழுதுங்கோ ரகு.... :) வாசிக்க ஆவல்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயிலில் சீனர்கள், கறுப்பர்கள், கனடாவை விட அதிகமான வெள்ளையர்கள் என்று பலரும் இருந்தனர். நான் கனடாவில் வாங்கிய "கனடா" எழுதப்பட்ட தொப்பியைப் போட்டிருந்தேன். எனக்கு முன்னார் எங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஒரு இளம் வெள்ளை ஜோடி எங்களை வெகுநேரம் அவதானித்தபடி இருக்க, நானும் அவர்களை கடைக் கண்ணால் அவதானித்தபடி இருந்தேன். 

அந்த வாலிபருக்கு ஒரு 25 வயதிருக்கலாம். கை, கழுத்தெல்லாம் பச்சை குத்தி, ஏனோ தானோவென்று டீ சேர்ட்டும் பாண்ட்டும் அணிந்து சற்றுக் களைத்திருந்ததுபோலக் காணப்பட்டார். பெண்ணோ சற்று நாகரீகமாக ஆடை அணிந்திருந்தாள். 

எமது நிறத்தையும், நாம் அணிந்திருந்த கனடா தொப்பி மற்றும் டீ சேர்ட்டுகளையும் பார்த்து என்ன நினைத்தார்களோ தெரியாது, தமக்குள் எம்மைப் பார்த்துப் பேசியபடி இருந்தார்கள். சிலவேளை நாம் அணிந்திருந்தவற்றுக்கும் , எமக்கும் என்ன தொடர்பு என்று நினைத்தார்களோ என்னவோ ??

ஆனால், இவை எதையுமே கண்டுகொள்ளும் நிலையில் எம்முடன் வந்த உறவுகள் இருக்கவில்லை, அந்தக் கொம்பாட்மென்ட் முழுதும் கேட்குமளவிற்கு தமிழில் சத்தமாக பேசிக்கொண்டு வந்தார்கள், இடைக்கிடையே பீறிட்டுச் சிரிப்பு வேறு! எனக்கே அந்தரமாகப் போய்விட்டது. கொஞ்சம் மெதுவாகப் பேசக் கூடாதா?? எதோ யாழ்ப்பாணத்தில் தட்டி வானில் போவதாக நினைப்பு ! இவர்கள் இப்படி ஒவ்வொருமுறையும் தமிழில் உரக்கப் பேசிச் சிரிக்கும்போதும் முன்னாலிருந்த ஜோடி எங்களைப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொள்ளும். அட விடுங்கப்பா, தமிழில் பேசுவது ஒரு குற்றமா??

ஒருவாறு ரயில் நான் இறங்கவேண்டிய இடத்தை அடைந்தது. அது வேறு எதுவுமில்லை, உலகப் புகழ் பெற்ற டயிம் ஸ்குவெயர். புற்றீசல்கள் போல மக்கள் அலைமோதிக்கொண்டிருக்க, அந்த மக்கள் வெள்ளத்தில் நாமும் கலந்து நடக்கத் தொடங்கினோம். நடையோ நடை அப்படியொரு நடை. ஒரு 30 நிமிடம் நடந்தபின் பிள்ளைகள் களைத்துவிட ஒரு மக்டொனால்ட்சில் நின்று அவர்களுக்குப் பசியாற்றி மீண்டும் நடை. போவது மன்ஹாட்டன் பகுதியைச் சுற்றிப் பார்க்கும் உல்லாசப் படகுப் பயணம் நோக்கி!

நாம் மான்ஹட்டன் படகுப் பயண அலுவலகத்தை அடையும்போது 12 மணியாகிவிட்டது. அலுவலகக் கவுன்டரிலகொரு கறுப்பினப் பெண். நாங்கள் கூட்டமாக டிக்கெட்டுக்களை வாங்குவதைப் பார்த்துவிட்டு, "25 பேருக்கு மேலென்றால் மட்டுமே கூட்டமாக வாங்கினால் லாபம் இருக்கு. ஆனால் நீங்கள் 20 பேர் மட்டுமே, ஆகவே குடும்பம் குடும்பமாக வாங்கினால் லாபம்" என்று அறிவுரை சொன்னாள். நாமும் எமது பங்கிற்கு தனியாகவும், குடும்பமாகவும் , கூட்டமாகவும் கணக்குப் பார்த்து (கணக்கில் நான் புலியாக்கும் ) இறுதியில் அவள் சொன்ன வழிப்படியே டிக்கெட்டுக்களை வாங்கினோம். நாம் ரிக்கெட் வாங்கி முடியும்போது படகு புறப்படத் தயாரிகிவிட்டது. அரைவாசிப்பேர் எம்மில் படகுக்கு அருகில் போய்விட, மீதிப்பேர் டிக்கெட் அலுவலகத்தில் இன்னும் நிற்க, படகுக் காரர்களுக்கு கொதி வந்துவிட்டது. படகிலிருந்த மற்றைய நூற்றுக்கணக்கானவர்களை காக்க வைத்துக்கொண்டு நாங்கள் டிக்கெட் வாங்கியிருக்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படகிலிருந்து இரண்டுபேர் கீழே இறங்கி வந்து எம்மை துரிதப்படுத்தும்படி அலுப்புக் கொடுக்க, படகினருகில் கூட்டமாகப் போட்டோ எடுக்கும் இருவர் எம்மை அங்கே இங்கேயென்று இழுக்க, எம்மில் சிலருக்குக் கோபமும் வந்துவிட, ஒரே அல்லோல கல்லோலம். 

ஒருவாறு படகில் ஏறி அமர்ந்துகொண்டோம். நாம் உள்ளே வரும்போது முழுப்படுகுமே எம்மைப் பார்ப்பது புரிந்தது. அவர்களைக் காக்கவைத்துவிட்டோம் எம்கிற நியாயமான கோபம் அது. இதெல்லாம் கணக்கிலெடுத்தால் இடம்பார்க்க முடியாது, ஆகவே நாம் வந்த விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கத் தொடங்கினோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மன்ஹட்டன் சதுக்கத்தை அண்டிய கடற்பரப்பினூடாக எமது படகு மெதுவாக சென்றுகொண்டிருக்க படகின் அறிவிப்பாளர் அந்த இடங்களைப் பற்றிய வர்ணனையைச் செய்துகொண்டே வந்தார். அந்தக் கடற்கரையெங்கும் உலகின் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் பல்நாட்டுக் கம்பெனிகளும், பெரிய காப்பரேட் கம்பெனிகளும். வானுயர எழும்பிநின்ற அந்தக் கட்டிடங்களின் உச்சியில் அவற்றின் பெயார்கள் நியோன் விளக்குகளால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருக்க அமெரிக்கா என்றால் இதுதான் என்று அவை பெருமையாக மார்தட்டிக் கொள்வதுபோலத் தோன்றியது எனக்கு. 

அப்படியே அந்தக் கட்டிடங்களைத் தாண்டிச் செல்ல நியூயோக்கின் பழைய துறைமுகப் பகுதியூடாக படகு பயணித்தது. பல ஏக்கெர்க் கணக்கில் அமைக்கப்பட்டிருந்த பாரிய சரக்கு மண்டபங்கள். பாவிக்கப் படாவிட்டாலும் கூட இன்னும் அப்படியே புதியனவைபோலத் தோற்றமளித்தன. இவற்றைத் தாண்டிச் செல்லும்போது, 70களிலும் 80 களிலும் இப்பகுதியில் தலைவிரித்தாடிய மாபியாக் குழுக்கள், அவற்றுக்கிடையேயான சண்டைகள், கடத்தல்கள், போதைவஸ்த்து வியாபாரம், குழுக்களிடையிலான கொலைகள் என்பவை பற்றியும் அந்த ஆறிவிப்பாளர் சொல்ல மறுக்கவில்லை. "இப்போது நிலமை எவ்வளவோ பரவாயில்லை, ஆனாலும் அவ்வப்போது அவை இருக்கத்தான் செய்கின்றன" என்று அவை பற்றிக் கூறி முடித்தார்.

அடுத்ததாக, மற்றைய கட்டிடங்களிலிருந்து முற்றாக வேறுபட்ட, உலகப் பிரபலங்களின் உல்லாச இருப்பிடமாகத் திகழும் இரு பெரிய நீல நிறக் கண்ணாடிக் கட்டிடங்கள் இருந்த பகுதியை அண்மித்து படகு செல்கையில், "இப்போது நீங்கள் பார்ப்பது இரு சினிமாப் பிரபலங்களின் உல்லாச வீடுகள். முதல் இரண்டு அடுக்குகளும் நடிகர் லியனோ டி கப்ரியோவுக்குச் சொந்தமானது, அதற்குக் கீழுள்ள அடுக்கு அவுஸ்த்திரேலிய நடிகர் ஹியூ ஜக்மானுக்குச் சொந்தமானது " என்று அவர் கூறி முஇத்ததும், படகிலிருந்த எல்லோரது கழுத்துக்களும் பக்கவாட்டில் திரும்பி அந்த மாடி வீடுகளைப் பார்க்க, பலர் தமது கமெராக்களில் கிளிக்கியும் கொண்டனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக மன்ஹட்டன் பகுதியின் இதயம் என்று அழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் இருந்த பகுதியை அண்மித்தபோது, அறிவிப்பாளர் பேசத் தொடங்கினார். படகு முழுதும் நிசப்தமான அமைதி. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட 3200 அப்பாவிகளின் மரணமும், அன்றைய தினம் அம்மக்களின் ஓலமும் கண்முன்னே வந்து நிற்க, ஒருகணம் அந்த மக்களுக்காக மனம் இரங்கியது. அரசாங்கங்களின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் ஆப்பாவிகளைக் கொல்வது எந்த விதத்தில் நியாயம் ? வீட்டிட்லிருந்து வேலைக்குப் புறப்படும்போது உயிருடன் திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கையில் சென்றவர்கள், அவர்கள் மாலை வரும்வரை காத்திருந்த உறவுகள் என்று இப்படி எல்லோரையும் உடலாலும், மனத்தாலும் நொடிப்பொழுதில் கொன்றுவிட்டு "இறைவனுக்கே மகிமை" என்று கூக்குரலிடும் அரக்கத்தனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சரி, படகுப் பயணத்துக்கு வருகிறேன், ரெட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் இப்போது அவற்றின் நினைவாகவும், ஏன் சாகிறோம் என்று கூட அறியாமல் அன்று இறந்துபோனவர்களுக்காகவும் ஒரரு நினைவுக் கட்டிடம் எழுப்பப்பட்டிருந்தது. முன்னைய ரெட்டைக் கோபுரத்தின் உயரத்திற்கு நிகராக, பழைய ரெட்டைக் கோபுரத்தின் இடிபாடுகளை ஒருங்கமைத்து, மீள் உருவாக்கம் பெற்று நிமிர்ந்து நின்ற அந்த ஒற்றைக் கோபுரத்தைப் பார்க்கும்போது அமெரிக்கர்கள் பயங்கரவாதத்தைக் கண்டு பயந்து ஒளிந்துவிடவில்லை, மாறாக இன்னும் உறுதிகொண்டு எழுந்து நிற்கிறார்கள் என்று தோன்றியது எனக்கு. அந்த இடத்தில் சிலநேரம் தரித்து நின்ற அந்தப் படகு பின்னர் மெதுவாக இன்னுமொரு அமெரிக்க அடையாளம் நோக்கிச் செல்லத் தொடங்கியது. 

பச்சை நிறத்தில், மன்ஹட்டன் வானில் மிகவுயரத்தில் தனியே எழுந்து நிற்கும் உருவம் அது. அமெரிக்கா என்றால் உலகின் எவர் கண்முன்னும் வரும் அந்த உருவம், வேறு எதுவுமில்லை, அது அமெரிக்காவின் சுதந்திர தேவதை. முழுச் செப்பினால் உருவாக்கப்பட்டு பிரான்சு மக்களால் அமெரிக்காவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பாரிய சுதந்திரத் தேவதை உண்மையிலேயே மிக அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தாள். அந்தப் படகுப் பயணத்தின் கிளைமாக்ஸே அந்த தேவதைதான் ! அவளுக்காகவே படகில் ஏறியிருந்த நூற்றுக்கணக்கானவர்களும், நாங்களும், கண்களை தீட்டி, கமராக்களை உயர்த்திப் பிடித்து அவள் அருகில் வரும்வரை ஆவென்று அவளிருந்த பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். படகு மெது மெதுவாக அவளருகில் செல்லும்போது அந்த தேவதையின் விசாலம் புரியத் தொடங்கியது. அருகில்ச் சென்று படகு அசையாமல் நின்றுவிட, நூற்றுக்கணக்கான கமெராக்களும், கைய்யடக்கத் தொலைபேசிகளும் தாறுமாறாக படங்களைச் சுட்டுத் தள்ளின. செல்பிகளுக்கு குறைவிருக்கவில்லை. அதுவொரு பரவச அனுபவம், அனுபவித்தால்ப் புரியும்.

கமெராக்களும், செல்பிகளும் களைத்துவிட, படகு மெது மெதுவாக திரும்பிச் செல்ல ஆரம்பித்தது. போகும் வழியில் மன்ஹட்டன் பகுதியை ஏனைய இடங்களுடன் தொடுத்து நிற்கும் உயிர் நாடிகளான புறூக்லின் பாலம், மான்ஹட்டன் பாலம் போன்றவற்றின் கீழாகச் சென்றது படகு. செல்லும்போதே அவற்றின் சரித்திரம், கட்டப்பட்ட விதம், கட்டவேலைகளில் ஈடுபட்ட மக்கள் என்று அறிவிப்பாளர் சொல்லிக்கொண்டே போக, அந்தப் பிரமாண்டமான பாலங்களின் அமைப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

இப்படியே நியூயோக் நகரின் அழகை கடலில் இருந்தே பார்த்துவிட்டு, ஆனந்தக் களைப்பில் படகும், நாங்களும் மீண்டும் கரையை அடைந்தோம். 

 

கரையை அடைந்ததும், கொண்டுவந்த சிற்றுண்டிகள் மளமளவென்று வயிற்றுக்குள் இறங்க, சிறிது நேரம் அந்தத் துறைமுகப் பகுதியில் அமர்ந்திருந்து அந்த அழகை ரசித்துக்கொண்டிருந்தோம். 

சில நேரத்தின் பின்னர், நியூயோக் பகுதியை இலவசமாகச் சுற்றிக் காட்டும் கூரையற்ற டபுள்டெக்கர் பஸ்கள் வரிசையாக துறைமுகப் பகுதியில் காத்திருக்க, நாம் கூட்டமாக ஏறி  அமர்ந்துகொள்ளவும், நெரிசலான, சனநடமாட்டம் மிக்க அந்த நகரூடாக வீதி வலம் வரத்தொடங்கியது நாமிருந்த பஸ். 

15-20 நிமிட ஓட்டத்தின் பின்னர் அது நின்றுவிட, நாமெல்லாம் இறங்கி நடக்கத் தொடங்கினோம். டயிம் ஸ்குவெயர் என்றழைக்கப்படும் அமெரிக்காவின் மிகப் பிரபலமான சதுக்கம் நோக்கி நாம் நடந்தபோது, எம்முடன் அலைகடலென மக்கள் வெள்ளம் நடந்துகொண்டிருந்தது. 

அந்த சதுக்க வீதிகளெங்கும் நியோன் விளக்குகளாலும், இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் செய்தித் தலைப்புகள், காணொளிகள், விளம்பரங்கள், மேற்கத்தைய இசையாலும் விழாக்கோலம் பூண்டிருக்க, அந்தப் பகுதியே சொர்க்க லோகம் போலக் காட்சியளித்தது. முடிந்தவரை அப்பகுதியை எமது கமெராவுக்குள்ளும், செல்போன்களுக்குள்ளும் சுருட்டிக் கொண்டே, கடைகளுக்குச் செல்ல ஆயத்தமானோம். 

கடைகளுக்குள் சென்றவர்கள் மீண்டு வர மழையும் பெய்யத் தொடங்க இரவு 9 மணியாகிவிட்டிருந்தது. இனிப் போதும் என்று தீர்மானித்துவிட்டு, சப்வே நிலையத்தை நோக்கி நடந்தோம். 

3 அல்லது 4 சப்வே ரயிகளில் மாறி மாறி ஏற், இரவு 12 மணிக்கு நாமிருந்த இடத்தை அடைந்ததோடு எமது அமெரிக்கப் பயணம் முடிவிற்கு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்தப் பதிவை பார்த்தேன். ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அழகாக எழுதுகிறீர்கள்.

கனடாவின் இடங்கள் பலவற்றை நீங்கள் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்த பின்னர் நானும் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சி.என் ரவர் உட்பட...

உண்மைதான்  மணிவாசகர்..

நான் ஒவ்வொரு நாளும் வேலைக்கு போகும் போது ஈபிள் கோபுரத்துக்கு பக்கத்தால் தான் வருவேன்

ஆனால் அதில் நின்று அல்லது ஏறிப்பார்த்தது என்பது ஒரு முறையோ இருமுறை தான்

அதுவும் யாராவது வெளியிலிருந்து வந்த உறவுகளுடன்..

ஆனால் தமிழகத்திலிருந்து வந்த இயக்குநர் சசி அவர்கள்

ஒரு கருத்தைச்சொன்னார்

இதை வடிவமைத்த ஈகிள் அவர்களின் சிறப்பு என்ன தெரியுமா?

இதனூடாக செல்பவர்கள் அனைவரையும் (கோடிக்கணக்கானவர்கள்)

கோபுரத்தை திரும்பிப்பார்க்க வைத்தது தான் என்றார்

அப்பொழுது தான் நானும் யோசித்தேன்

நானும் திரும்பிப்பார்க்காமல் போனதில்லை...

Link to comment
Share on other sites

எமது ஊரை நாமே வர்ணித்தால் புழுகாகிவிடும்.எமது விருந்தாளி என்னமா புகழுகின்றார்.இதை வைத்து அவுஸ்ரேலியா எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.வாழ்த்துக்கள்.

value-proposition-for-big-data-isv-partn

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மை லாட்! ரகுநாதன் என்பவர் பயணக்கட்டுரையை பந்தி பந்தியாக எழுதி என்னை கடுப்பேத்துகின்றார்.:grin:
சிவனே வேலையும் நானும் என்றிருந்த என் மௌன யுத்தத்தை சிதறியடித்துவிட்டார் மை லாட்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரை நாமே வர்ணித்தால் புழுகாகிவிடும்.எமது விருந்தாளி என்னமா புகழுகின்றார்.இதை வைத்து அவுஸ்ரேலியா எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.வாழ்த்துக்கள்.

value-proposition-for-big-data-isv-partn

நீலப்பறவை ஐயா!

எதிலையும் கையை வையுங்க..மன்னிக்கலாம்!

ஆனால்...அவுஸ்திரேலியாவைப் பற்றி நீங்கள் அனுமானிப்பது தவறு!

இந்தக்கட்டுரை முடிய.. ரகு...அவுசைப் பற்றி எழுதினால்..அடுத்த பிளேனை எடுத்து நீங்கள் இஞ்சை வந்திருவீங்கள்!

அவருடைய எழுத்து நடை அப்படி... உங்கள் கனடாவல்ல!

கலியாணப் பெண்ணுக்குச் சோடனை பண்ணிற மாதிரித் தான் கனடாவைப் பற்றி.. ரகுவின் எழுத்து!:grin:

Link to comment
Share on other sites

நீலப்பறவை ஐயா!

எதிலையும் கையை வையுங்க..மன்னிக்கலாம்!

ஆனால்...அவுஸ்திரேலியாவைப் பற்றி நீங்கள் அனுமானிப்பது தவறு!

இந்தக்கட்டுரை முடிய.. ரகு...அவுசைப் பற்றி எழுதினால்..அடுத்த பிளேனை எடுத்து நீங்கள் இஞ்சை வந்திருவீங்கள்!

அவருடைய எழுத்து நடை அப்படி... உங்கள் கனடாவல்ல!

கலியாணப் பெண்ணுக்குச் சோடனை பண்ணிற மாதிரித் தான் கனடாவைப் பற்றி.. ரகுவின் எழுத்து!:grin:

இன்னும் ஒரு சில கிழமைகளில் பணவீக்கம் ஏற்பட்டு எல்லாமே நாறப்போகின்றது.அதைவிட பெரிய கொடுமை.ஓய்வூதியகாலத்துக்கு சேர்த்துவைத்த காசைக்கூட எடுத்து வீடு வேண்டினோர் நிலை பெரிய கவலைக்கிடம்.இப்படியான நிலையில் தேர்த்தல் வேறு.எனது நண்பருக்கு உங்கு புகையிலைத்தோட்டம் மாந்தோப்பெல்லாம் உண்டு.ஆயத்தமாகவுள்ளேன்.சீஸ்சும்  பட்டரும் தான் தஞ்சமென்றுள்ளேன்.கெடுத்துவிடாதீர்கள் 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அடுத்ததாக மன்ஹட்டன் பகுதியின் இதயம் என்று அழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் இருந்த பகுதியை அண்மித்தபோது, அறிவிப்பாளர் பேசத் தொடங்கினார். படகு முழுதும் நிசப்தமான அமைதி. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட 3200 அப்பாவிகளின் மரணமும், அன்றைய தினம் அம்மக்களின் ஓலமும் கண்முன்னே வந்து நிற்க, ஒருகணம் அந்த மக்களுக்காக மனம் இரங்கியது. அரசாங்கங்களின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் ஆப்பாவிகளைக் கொல்வது எந்த விதத்தில் நியாயம் ? வீட்டிட்லிருந்து வேலைக்குப் புறப்படும்போது உயிருடன் திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கையில் சென்றவர்கள், அவர்கள் மாலை வரும்வரை காத்திருந்த உறவுகள் என்று இப்படி எல்லோரையும் உடலாலும், மனத்தாலும் நொடிப்பொழுதில் கொன்றுவிட்டு "இறைவனுக்கே மகிமை" என்று கூக்குரலிடும் அரக்கத்தனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

https://truthandshadows.wordpress.com/2010/10/18/bush-reaction-the-very-odd-behaviour-of-a-president-on-911/

 

இன்னும் நம்பமுடியவில்லை..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எமது ஊரை நாமே வர்ணித்தால் புழுகாகிவிடும்.எமது விருந்தாளி என்னமா புகழுகின்றார்.இதை வைத்து அவுஸ்ரேலியா எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

value-proposition-for-big-data-isv-partn

நீலப்பறவை,

 

கனடா நன்றாக இருக்கிறது என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். அதற்காக அவுஸ்த்திரேலியா நன்றாக இல்லை என்று நான் கூறாமலேயே நீங்கள் எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?

நான் அங்கிருந்த 4 வாரங்களும் எனக்கு நன்கு பிடித்துவிட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நான் சென்றுவந்த இடங்கள், பழகிய மனிதர்கள், இயற்கையாகவே பசுமையான நாடு..இப்படிப்பல. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பலதடவை உலகிலேயே மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நாடு என்று அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்ற நாடென்னும்போதே, நான் சொல்லமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும் கனடாவின் மகிமை.

ஆனால், அப்படி மக்கள் வாழ மிகவும் ஏற்ற நாடுகள் பட்டியலில் அவுஸ்த்திரேலியாவின் மூன்று நகரங்களான மெல்போர்ன், சிட்னி, பிறிஸ்பேர்ன், ஆகியவைகூட முதல் 5 இடங்களுக்குள் அவ்வபோது வந்திருக்கின்றன என்பதையும் நான் கூறிக்கொள்ள வேண்டும்,

நான் எழுதியது என்னைக் கவர்ந்த கனடாவின் சிறப்புகள். இவை எனது சொந்த அனுபவங்கள் மட்டுமே. என்னைப் போலவே கனடாவை சுற்றிப் பார்த்தவர்களுக்கு என்னைப் போலவோ அல்லது வேறுவிதமான அனுபவங்களோ  ஏற்பட்டிருக்கக் கூடும்.

நான் மீண்டும் அவுஸ்த்திரேலியா வருமுன்னர் எனது பல்கலை நண்பர்கள் இருவரைச் சந்தித்தேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சாடை மாடையாக கனடாவிற்கு நான் நிரந்தர வதிவிட அனுமதியுடன் வருவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் சொன்னபதில், "One day Hospitality" ஐப் பார்த்து மயங்கிவிடாதே என்பதுதான். உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, விருந்தினராக நாம் அங்கே இருந்தபோது உறவினர்கள் நடந்துகொண்டவிதம், நாம் நிரந்தரமாகவே அங்கு குடிபெயரும்போது வித்தியாசமாக இருக்கும் என்பது. இது ஓரளவிற்கு உண்மைதான் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். 

அடுத்தது வேலைவாய்ப்பும், ஊதியமும். எனக்குத் தெரிந்த பலர் அங்கே இரண்டுவேலைகள் செய்கிறார்கள் தமது அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு. சனி ஞாயிறுகளிலும் சிலவேளைகளில் வேலைக்குப் போகிறார்கள். கனடாவின் மணித்தியாலம் ஒன்றிற்கான குறைந்த ஊதியம் 12 டொலர்கள். ஆனால், அங்கேயே படித்த அல்லது பிறநாடுகளில் நல்ல படிப்புகளோடு வந்தவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். 

மேலும் அவுஸ்த்திரேலியாவுடன் ஒப்பிடும்போது வாழ்க்கைச் செலவு கனடாவில் சற்றுக் குறைவு. இதற்கு சனத்தொகையும், வியாபாரத்தின் போட்டியும் காரணமாக இருக்கலாம். இதுமட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருப்பதால் நிச்சயம் விலை குறைவாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. விற்பனை வரி 12.5%

அவுஸ்த்திரேலியாவை எடுத்துக்கொண்டால் அநேகமான தமிழர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். சனி, ஞாயிறுகளில் வேலைக்குப் போவோர் மிகவும் குறைவு. சம்பளம் கனடாவுடன் ஒப்பிடும்போது இங்கு குறைந்தது 50.0% ஆவது அதிகமானது, சுமாரான  ஒரு வேலை இருந்தாலே போதும், அவுஸ்த்திரேலியாவில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு. அதேபோல வாழ்க்கைச் செலவும் இங்கே அதிகம். விற்பனை வரி 10 % இப்போதைக்கு மட்டும்.

காலநிலை என்று பார்த்தால், அவுஸ்த்திரேலியாவின் அதிகூடிய வெப்பநிலை 53 செல்ஸியஸ். இது போனவருடம் தென் அவுஸ்த்திரேலியாவின் பாலைவனப் பகுதியொன்றில் பதிவானது. ஆனால் கரையோர மாநிலங்களின் சராசரி உயர் வெப்பநிலை 40 இலிருந்து 45 வரைதான். அதேபோல குளிர்கால வெப்பநிலை -5 இற்குக் கீழ் போனது கிடையாது. காலையில் எழுந்து காரின்மீதும், வீட்டின் டிறைவ் வே மீதும் குவிந்திருக்கும் பனியை அகற்றவேண்டிய தொல்லையோ அல்லது, பனியில் ரோட்டில் சறுக்கிக் கொண்டு கார் ஓடவேண்டிய தேவையோ இல்லை. ஆக, மக்கள் வாழ்வதற்கு மிகவும் சுவாத்தியமானது. பிறிஸ்பேர்ன் காலநிலை எமது யாழ்ப்பாணத்தின் காலநிலையை ஒத்தது என்றால் நம்புவீர்களா?

ஆனால் கனடாவில் காலநிலை மிகவும் வித்தியாசமானது. சென்றவாரம் டொரொன்டோவில் 43 பாகை என்று எங்கள் அக்கா கூறியபோது நம்பமுடியவில்லை. அதேபோல குளிர்காலத்தில் -20 என்றால் சொல்லத்தேவையில்லை. 

இனவாதம் பற்றிப் பேசினால், கனடா மக்கள் அவுஸ்த்திரேலியர்கள் போலில்லை, மென்மையானவர்கள் என்கிறார்கள்.ஆஸிக்கள் இனவாதிகள் என்கிறார்கள். ஆனால், அது அவர் அவரது சொந்த அனுபவம். எனக்கும் சிறு கசப்பான அனுபவங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்தால் கொல்லப்படுவோம் என்கிற அச்சமோ, அல்லது இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படும் நிலையோ இங்கில்லை. வேலைத்தளத்தில் நானும் ஒரு "ஓஸிதான்". ஆஸிக்களின் இயல்பான நக்கலும் நைய்யாண்டியும் கலந்த பேச்சுப் பலருக்கு அவர்களை இனவாதிகளாக் காட்டிவிடுகிறது என்பதில் ஐய்யமில்லை. இதற்காக இங்கே உண்மையான இனவாதிகள் இல்லையென்றும் நினைத்துவிடவேண்டாம்.

கனடாவின் இனவாதம் எப்படியிருக்கிறது என்பதுபற்றி எனக்குச் சொல்லத் தெரியாது. ஏனென்றால் நானிருந்த 4 வாரங்களிலும் கண்ணின் இமை காப்பதுபோல் எங்களைக் காத்துநின்றனர் உறவுகள். 

இறுதியாக, நான் எங்கு வாழ்வதென்கிற முடிவெடுக்க வேண்டிவந்தால், நாம் அவுஸ்த்திரேலியாவுடன் நின்றுவிடுவேன். ஏனென்றால் இன்றுவரை நான் சந்தோஷமாக, எந்தவித பண அழுத்தமும் இல்லாமல் வாழவைப்பது அவுஸ்த்திரேலியாதான்.  ஆனால் ஒவ்வொரு வருடமும் கனடாவை சென்று தரிசிக்க முடியுமானால் நிச்சயம் போவேன். அவுஸ்த்திரேலியாவில் வாழ்வது எவ்வளவு ஆனந்தமோ, அப்படித்தான் கனடாவை தரிசிப்பதும்.

இந்த இரண்டு நாட்டையும் நான் விரும்பும் முக்கிய காரணம் அங்கிருக்கும் எனது தமிழர்கள் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும் ?! 

Link to comment
Share on other sites

தொடருங்கள் உங்கள் பயண கட்டுரையை . ராஜரத்தினம் குடும்பத்தை சந்தித்தீர்களா ?

எந்த நாட்டில் இருந்தால் என்ன நாம் வாழும் முறையில் தான் வாழ்க்கையின் சந்தோசம் அடங்கியிருக்கு.

போனவாரம் ஆஸியில் இருந்து வந்த எனது இன்னொரு சிறுவயது கிரிக்கெட் நண்பனை  சந்தித்தேன் . (ஈசு & சித்திரா ) .அவர் வருவதாக அறிந்து கலிபோர்னியா ,நியுயோர்க் இலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள் .அவர் வந்த நாட்கள் முதல் நண்பர்கள் உறவினர்களின் உபசரிப்பால் திளைத்துவிட்டதாக சொன்னார் .

அவர் இருந்த குழப்படிக்கு அன்று இரவு அவர் கொடுத்த உரை என்னை அதிர்சியில் ஆக்கிவிட்டது அவ்வளவு முதிர்ச்சி .வாழ்க்கை என்பது அதேதான் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சு வாசித்துக் கொண்டே வருகின்றேன், நன்றாக இருக்கின்றது தொடருங்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் பயண கட்டுரையை . ராஜரத்தினம் குடும்பத்தை சந்தித்தீர்களா ?

எந்த நாட்டில் இருந்தால் என்ன நாம் வாழும் முறையில் தான் வாழ்க்கையின் சந்தோசம் அடங்கியிருக்கு.

போனவாரம் ஆஸியில் இருந்து வந்த எனது இன்னொரு சிறுவயது கிரிக்கெட் நண்பனை  சந்தித்தேன் . (ஈசு & சித்திரா ) .அவர் வருவதாக அறிந்து கலிபோர்னியா ,நியுயோர்க் இலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள் .அவர் வந்த நாட்கள் முதல் நண்பர்கள் உறவினர்களின் உபசரிப்பால் திளைத்துவிட்டதாக சொன்னார் .

அவர் இருந்த குழப்படிக்கு அன்று இரவு அவர் கொடுத்த உரை என்னை அதிர்சியில் ஆக்கிவிட்டது அவ்வளவு முதிர்ச்சி .வாழ்க்கை என்பது அதேதான் .

 

 

நான் சந்திக்கத் தவறிய ஒரு சிலரில் இராஜரத்தினம் ஐய்யாவின் மகளின் குடும்பமும் ஒன்று. கிடைத்த 4 வாரத்தில் எவ்வளவு இடங்களைப் பார்க்க முடியுமோ, அவ்வளவு இடங்களையும் பார்க்க வேண்டும் என்கிற அவசரத்தில் ஒரு சிலரை விட்டு விட்டேன். 

இனிவரும்போது எல்லோரையும் பார்த்துவிடலாம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியாவில் வாழ்வது எவ்வளவு ஆனந்தமோ


ஒசி ஒசி ஓய் ஓய்..........தொடருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது "அமெரிக்காவைப் பார்க்கும் ஒருநாள் ஆசையை" அவசர அவசரமாக மான்ஹட்டன் சதுக்கத்துடனேயே முடித்துக்கொண்டு மறுநாள் காலையிலேயே மீண்டும் கனடா புறப்படத் தயாரானோம்.

எதிர்பார்த்ததுபோலவே ஓட்டுனரும் பஸ்ஸும் காலையில் 7 மணிக்கே ஆஜராகிவிட, நாமிருந்த வீட்டின் வீதி மீண்டு கலகலப்பாகியது. ஏனென்று கேட்கிறீர்களா? நாங்கள் ஏறுவதற்காக அந்த வீதியை முற்றாக மறித்து பஸ்ஸை நிப்பாட்டினால் கலகலப்பாக இல்லாமல் எப்படியிருக்கும் ? பஸ்ஸுக்குப் பின்னால் வரிசையாக வந்துநின்ற கார்களின் ஓட்டுனர்களிடம் தெரியாத வார்த்தைகளில் பேச்சு வாங்கிக் கொண்டே நாம் பஸ்ஸினுள் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தோம். ஒருவாறு 10 அல்லது 15 நிமிடங்களில் பஸ் அந்த வீதியிலிருந்து நகரத் தொடங்கியது.

அமெரிக்காவின் நகர வாகன நெரிசலுக்குள் வேண்டாவெறுப்பாக புகுந்து, நீண்ட வரிசைகளில் அமெரிக்கர்களுடன் நாமும் காத்திருந்து இடைவெளி கிடைத்தபோது சுளித்து ஓடி, பெருந்தெருச் சிக்கல்களிருந்து விடுபட்டு, ப்ரீ வேயில் ஏறும்போது எங்களுக்கு வேர்த்துவிட்டது.

பிரீவேயில் ஏறியதும் பஸ் வேகமெடுக்கத் தொடங்கியது. "அண்ணோய், நீங்கள் வரேக்கையும் எங்களைச் சொப்பிங் செய்ய விடயில்லை, போகேக்கையாவது நாங்கள் ஆறுதலாச் சொப்பிங் செய்யவேணும், சொல்லிப் போட்டம்" ஏன்று மாமியும், எனது மனைவியும் கண்டிப்பாகச் சொல்லிவிட, ஓட்டுனருக்கு வெறுப்பாகி இருக்க வேண்டும், "எனக்கொண்டுமில்லை, 14 மணித்தியாலத்துக்கு மேல என்னால ஓட ஏலாது. ஏதோ பார்த்துச் செய்யுங்கோ " என்று அவரும் பதிலுக்குச் சொன்னார்.

அமெரிக்காவுக்குப் போகும்போதிருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அமெரிக்காவிலேயே நின்றுவிட, நாங்கள் மட்டும் களைப்புடன், எப்படா வீடு வருமென்று காத்துக்கொண்டு, பஸ்ஸிலிருந்து விலகி பின்புறமாக ஓடிக்கொண்டிருந்த கிராமங்களையும் தோட்டவெளிகளையும் எந்த உணர்வுமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க ஓட்டுனர் தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே நெடுத்த ஓட்டங்கள், இடையிடையே டிம் ஹோர்ட்டன்கள், பீஸ்ஸாக்கள், டோனட்டுக்கள், மீண்டும் ஓட்டம் என்று சிலமணிநேரம் ஓடிவிட்டது.

மாமியும், எனது மனைவியும் எதிர்பார்த்திருந்த பென்சில்வேனியா மோல் என்றழைக்கப்படும் தரமான பொருட்களை விற்பனை வரியில்லாமல் மலிவான விலையில் வாங்கும் அங்காடியொன்றிற்குள் வாகனத்தை ஓட்டுனர் நுழைத்தபோது மதியம் 1 மணி. அகோர வெய்யில் அமெரிக்காவில் கொளுத்திக்கொண்டிருக்க, நாங்கள் ஆளுக்கொரு திக்கில் கலைந்துபோனோம்.

அந்தப் பிரதேசம் முழுக்க அமெரிக்காவின் பிரபல துணிக் கடைகள், லீவைஸ், டொமி லீ, வான் ஹியூசன், லீ, அமெரிக்கன் ஈகிள், காப், பூமா, அடிடாஸ், ரீபொக்....இப்படிப் பல கடைகள். அவுஸ்த்திரேலியாவில் நாங்கள் நுழைவதற்கே பயப்படும் இந்தக் கடைகளுக்குள் மனைவி தந்த வெறும் 200 டாலர்களைக் கைக்குள் சுருட்டிக்கொண்டு புதிய தைரியத்துடன் நுழைந்தேன். ஏனென்றால், "இஞ்ச எந்தக் கடைக்க போனாலும் ஒரு 20 அல்லது 30 உள்ளுக்குத்தான் எல்லாம் வரும்" என்று மாமி ஏற்கனவே சொல்லிவைத்ததால் வந்த தைரியம் அது. 

எனக்குப் பிடித்த டெனிம் காற்சட்டைகள் , ரெண்டொரு டீ சேர்ட் வாங்க 150 டாலர் போய்விட்டது. மீதியை கவனமாக வைத்துக்கொண்டு, மற்றையவர்களின் சொப்பிங் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினேன். 

பஸ்ஸில் ஓட்டுனர் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருக்க, பஸ் வெறிச்சோடிக் கிடந்தது. கொண்டுவந்த பைகளை கதிரையில் எறிந்துவிட்டு, இரண்டாம் முறை கடைகளை சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். இடையிடையே மாமி, மாமா, அக்கா, அத்தான்..இப்படி என்னுடன் வந்தவர்களை பார்த்து, "எப்பிடிப் போய்க்கொண்டிருக்குது?" என்று கேட்க, "இன்னும் கொஞ்சக் கடை கிடக்கு, பாத்துக்கொண்டு வாரம்" என்று ஏதோ தூரத்து உறவினர் ஒருவரை கடைத்தெருவில் பலகாலத்துக்குப் பிறகு கண்டவர்களைப்போல தமது கடமையில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க, நான் மனைவியையும் மகள்களையும் தேடத் தொடங்கினேன். 

ஒரு கடைக்குள்ளிருந்து வெளிக்கிட்டு இன்னொரு கடைக்குள் அவர்கள் நுழையும்போது  கண்டுபிடித்தேன். "இருக்கிற காசெல்லாம் முடிந்தாலும் உங்க்களுக்குக் கடை பார்க்கிற ஆசை விடாது" என்று நான் சொல்லவும், "எவ்வளவு மிச்சம் வைச்சிருக்கிறியள்" என்று மனைவி கேட்டாள். மீதமிருந்த 50 டாலர்களைக் கொடுத்துவிட்டு, அவர்களை இழுத்துக்கொண்டு சாப்பிடக் கிளம்பினேன்.

சைனீஸ் சாப்பாடு, பசிக்கு அமிர்தமாக இருக்க, மளமளவென்று விழுங்கிவிட்டு, இனி ஏலாது என்று சொல்லிக்கொண்டே பஸ்ஸுக்கு நடக்க, ஒருவாறு மற்றையவர்களும் வந்துசேர சுமார் 2 மணிநேரம் ஓடிவிட்டிருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் பஸ் ஓடத் தொடங்கியது. சிலர் நித்திரை கொள்ளத் தொடங்க, இன்னும் சிலர் பைகளுக்குள் கிடந்த உடைகளை வெளியே எடுத்துப் பார்க்க, சிலர் மீதமிருந்த மிக்‌ஷர், பகோடா, சிப்ஸ் என்று அசைபோட்டுக்கொண்டிருக்க நேரம் போய்க்கொண்டிருந்தது. அதற்குள் போகும் வழியில் இன்னும் ஏதாவது மோல் இருக்கிறதா என்று யாரோ இணையத்தில் பார்த்துச் சொல்லிவிடவும் பழையபடி மனைவியும், இன்னும் சிலரும் 'அங்கையும் போவம்' என்று அடம்பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.

பாவம் ஓட்டுனர். 14 மணித்தியாலத்திற்குமேல் ஓடமாட்டன் என்று சொல்லி வெளிக்கிட்டவர் கிட்டத்தட்ட 9 மணிநேரம் ஓடிவிட்டார். இன்னும் 4 மணிநேரமாவது ஓடினால்த்தான் டொரொன்டோவுக்குப் போகமுடியும். அதுக்குள்ள இன்னொரு ஷொப்பிங்கா என்று அலுத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் கேட்பதைச் செய்தால்த்தான் அவரின் முழுப்பணமும் அவருக்குக் கிடைக்கும். ஆகவே வேறு வழியில்லாமல் புறுபுறுத்துக்கொண்டே இன்னொரு மோலுக்குள் பஸ்ஸை நிறுத்தினார். 

இந்த மோல் முன்னர் பார்த்ததுபோலில்லாமல் கடைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் விற்பனை வரியும் கூடவிருந்தது. ஆகவே சில கடைகளுக்குள் மட்டுமே நுழைந்துகொண்டது எமது சனம். இப்படியே இன்னொரு 2 மணிநேரம் போக, கடைகளும் பூட்டும் நேரமாகியது. 

பணம் முடிந்து, உடலில் களைப்பேறி, இனிப்போதும் என்று பலருக்கும் சோர்வு வர தாமாகவே வந்து பஸ்ஸில் ஏறிக்கொள்ள ஓட்டுனர் பழையபடி அவசரத்துடன் ஓடத் தொடங்கினார்.

10 மணியளவில், அமெரிக்க - கனடா எல்லையிலுள்ள டூட்டி ப்ரீ கட்டிடத்தில் மீண்டும் பஸ் நின்றது. பெண்கள் பெர்ஃபியூமும், ஹான்ட் பாக்கும் வேண்ட வெளிக்கிட, ஆண்கள் தனியே 'தண்ணிப் போத்தல்' வேண்டப் புறப்பட இன்னொரு மினி ஷொப்பிங் அங்கே தொடங்கியது. ஏதோ டூட்டி ப்ரீயில் தண்ணி வாங்காட்டி தண்ணியே அடிக்காத மாதிரித்தான் சனத்தின்ர எண்ணம். அவ்வளவு உசாராக தண்ணிப் போத்தல்களை வாங்கி ட்ரொலி ஒன்றிற்குள் அடக்கிக் கொண்டு சனத்தோட சனமாக கியூவில நின்று, விலையே கேட்காமல் கிரெடிட் காட்டை விசுக்கி, சந்தோசமாக வாங்கிக்கொண்டு பஸ்ஸில் ஏறும்போது 11 மணி !

அப்பிடியே கஸ்ட்டம்ஸ் விசாரணை, பல்லிலிப்புகள், கேள்விகள், சடையல்கள் என்று கஸ்ட்டம்ஸ் விட்டு வெளியே வந்து, பஸ்ஸில் ஏறி, மறுபடி ஓடி....ஒருவாறு 12;30 மணிக்கு ஸ்னோபோல் கிரசன்ட்டில உள்ள அக்காவீட்டில் வந்து இறங்கினோம். 

அத்துடன் எமது அந்த அமெரிக்கப் பயணம் முற்றுப் பெற்றது ! அப்பாடா எழுதி முடிக்கவே களைக்குது எனக்கு !

 

Link to comment
Share on other sites

வாசித்த எமக்கே களைக்குது :) எழுதின உங்களுக்கு களைக்காதா என்ன? நன்றாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள் ரகு அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் நினைவில் வைத்து எழுதுவது நன்றாக உள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.