Jump to content

திரு சுமந்திரனிடம் சில கேள்விகள்


Recommended Posts

1977 இல் எதிர் கட்சியாக அமர்ந்து வட்ட மேசை, சதுரமேசை, இசை நாற்காலி(musical chair) விளையாடி அதிலும் தோற்று சென்னையில் அஞ்ஞாத வாசம் பூண்டு, சென்னைக்குப் பறந்ததில் இயற்கை கொல்லாமல் விட்டதில் மிச்ச சொச்சமான கூத்தணியும் காலப்போக்கில் அதனோடு இணைந்த வரலாற்று எச்சங்களும் தமிழனை பிரதி நிதிப்படுத்தவே தகுதியில்லாத கோமாளிகள் . 

Link to comment
Share on other sites

sumanthiran-sampanthan

டக்ளசிற்கும் கஜேந்திரகுமாரிற்கும் என்ன வித்தியாசமாம் கேட்கிறார் திருவாளர். சுமந்திரன். அதனை அவர்களது கட்சி பத்திரிகை இன்று வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. டக்ளஸ் இன்று எவருக்கும் ஒரு வேண்டாப் பொருளாகி விட்டார். அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் சுமந்திரன். எமது மக்கள் வெறுமனே டக்ளஸ் எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளாதவர் அவர். இதற்கெல்லாம் பதில் சொல்லவும் வேண்டுமா என்ற சலிப்பு எங்களுக்கிருந்தாலும் ஒரு பதிவிற்காக இதை சொல்லுகின்றோம்.


————————–———–

சனாதிபதித் தேர்தலில் மைத்ரியும் மகிந்தவும் ஒன்று என்ற நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் எடுத்தார். ஒருவருக்கும் வாக்களிக்க மக்களை கோர மாட்டோம் என்று எடுக்கின்ற நிலைப்பாடானது மகிந்தவை வெற்றி கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நோக்காக கொண்ட சிங்கள தரப்பை, அதை ஆதரிக்கும் தமது நலன்களில் மட்டும் அக்கறை கொண்ட மேற்குலகத்தை, இந்தியாவை எமது நிலைப்பாடுகள் தொடர்பில் அசைய வைக்கும் என்ற காரணத்தினாலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக கஜேந்திரகுமார் அப்போதும் சொன்னார் இப்போதும் சொல்கிறார். இதில் என்ன தவறு?

மாற்றம் நடந்ததுமே ஜெனீவா அறிக்கை பிற்போடப்பட்டது. சர்வதேச விசாரணை என்று சொன்ன சர்வதேசமும் கூட்டமைப்பும் உள்ளக விசாரணை என்று பேசத் தொடங்கி விட்டன. மாற்றத்தால் வந்த நன்மைகள், என்ன தீமைகள் என்ன? கூட்டி கழித்துப் பார்த்தால் எது மேலோங்குகின்றது? சம்பூரில் காணி விடுவிக்கப்பட்டதை பற்றி சொல்கின்றனர். சம்பூர் காணி விட சர்வதேச அழுத்தம் காரணமா மைத்ரி-ரணிலின் நல்லெண்ணம் காரணமா? மகிந்தவும் சர்வதேச அழுத்தத்திற்கு பயந்து சில காணிகளை அவ்வப்போது விடுவித்தாரே? அதை எவ்வாறு விளங்கப்படுத்துவது? ஆனால் கேள்வி இது தான்: மாற்றத்தின் பின் ஒட்டு மொத்தமாக சர்வதேச அழுத்தம் குறைவா? கூடுதலா? சொல்லுங்கள்.

காணி விடுவிப்பை விடுங்கள். மூச்சு விட இடைவெளி கிடைத்தது என்று சொல்கின்றனர். வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன. சித்திரவதைகள் தொடர்கின்றன என்று நேற்று ஐ. நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு உறுப்பினர் யஸ்மின் சூகா அறிக்கை விட்டிருக்கிறார். (பார்க்க: www.itjpsl.com) இது தானா மூச்சு விட இடைவெளி?

ஊடகம், பேச்சு சுதந்திரம் கொஞ்சம் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். மைத்திரி ஆட்சியில் குறைந்தது நான்கு ஊடகவியலாளர்களுக்கு உயிர்அச்சுறுத்தல் அல்லது மிரட்டல் விடப்பட்டது. நால்வரும் தமிழ் ஊடகவியலாளர்கள் என்று சனநாயகத்திற்கான ஊடகவியலளார்கள் என்ற முற்போக்கு சிங்கள ஊடகவியலாளர்களால் நடத்தப்படும் அமைப்பு கூறுகிறது. (http://www.jdslanka.org/index.php/press-releases1/539-rsfjds-press-councils-revival-places-media-under-permanent-threat)

————————

கொஞ்சம் தானும் மாற்றமில்லை என்பது எமது வாதமல்ல. ஏதோவொரு விவரிக்க முடியாத ஒரு இடைவெளி ஒன்று மூச்சு விட கிடைத்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம். ஆனால் இன்று நடப்பதென்ன?

இன்று கூட்டமைப்பு ஆதரித்த அதே மைத்ரி மேற்கு சொல்லியும் கேளாமல், இந்தியா சொல்லியும் கேளாமல் தனது கட்சியின் மேலேயே அதிக பாசம் உள்ளவர் என்பதை நிரூபித்து மகிந்த போட்டியிடுவதை அனுமதித்திருக்கின்றார். சிங்கள தேசியவாதம் என்பது இது தான். அதற்குள் அரசியல் செய்யும் எவருமே அந்த அரசியலுக்கு திருப்பி வருவார்கள். வராவிட்டால் தேர்தல் தோல்வி தான். அன்று சந்திரிக்கா பற்றி கனவுகளை வரைந்தனர். இன்று மைத்ரி பற்றி. இருவருமே 6 மாதத்திற்கு மேல் சிங்கள பௌத்த அரசியலின் தாக்கத்திலிருந்து சுதந்திரமாக இருக்க முடியவில்லை. சிங்களத் தீவிர தேசியவாதம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் தனது தன்மையை பறை சாற்றி நிற்கிறது.

இதைப் பற்றி சுமந்திரனிடம் கருத்து கேட்டால் அது உட் கட்சி விவகாரம் என்றார். தமது மாற்றத்தின் நாயகன் மீண்டும் மகிந்தவை கொண்டு வந்தால் அதற்கு பேர் உட் கட்சி விவகாரமா?

இதே கூட்டமைப்பின் செல்வம், சுரேஷ், மாவை, சிறீதரன், அரியம் மைத்ரி ஒன்றும் செய்யவில்லை – தேவையென்றால் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் போராடுவோம் என்கின்றனர். இதற்கு பெயர் என்ன?? சுத்துமாத்து தானே?

சனவரியில் வாக்கு கேட்கும் போது மாற்றத்திற்கு வாக்களியுங்கள் என்று தான் கேட்டனர். இன்று ஒரு எதிரியை வீழ்த்த இன்னொரு எதிரிக்கு வாக்களிக்க கேட்டோம் என்று சடைகின்றனர். யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்? நாளுக்கொரு கதை. பொழுதொரு மேனி. இதுவா நிதானமான, தெளிவான அரசியல்?

இன்று தெற்கில் உருவாகும் சூழலை தயவு செய்து பாருங்கள்; கூர்மையாக அவதானியுங்கள். சிங்கள அரசியலை பற்றிய யதார்த்தத்தை விளங்கி உங்களுக்கு அப்பட்டமாக சொன்னவர் யார் – எச்சரித்தவர் யார்? உண்மை சொல்லி அரசியல் செய்யுபவர்களா உங்கள் பிரதிநிதி அல்லது உசுபேற்றி சனரஞ்சக தேர்தல் அரசியல் செய்யும் கூட்டமைப்பினரா? 

http://tamilleader.com/?p=50296

Link to comment
Share on other sites

சில வருடங்களுக்கு முன்னர்.........

அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் , அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக அந்தச் சிறைகளின் முன்பாக மாபெரும் கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றிற்கு மனோ கணேசனும் , விக்கிரமபாகு கருணாரட்ணவும் ஒழுங்கு செய்கிறார்கள், இந்தப் போராட்டம் ராஜபக்ச விற்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது ஏற்கன்வே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் சிக்கித்தவிக்கும் மகிந்த தெற்கில் இப்படியொரு போராட்டம் நடைபெறுவதை விரும்பவில்லை,

சரியாக மனோ கணேசன் அவர்களின் போராட்டத்திற்கு முதல் நாள் நீங்கள் சிறைக்குச் சென்று அரசியல்  கைதிகளைச் சந்திக்கிறீர்கள், அவர்கள் உண்ணாவிரத்தினைக் கைவிடுகிறார்கள், இதனால் மனோகணேசனின் கவணயீர்ப்பு போராட்டமும் கைவிடப்படுகிறது, ராஜபக்ச நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார், மனோ கணேசன் மறுநாள் மிகுந்த சினத்துடன் பத்திரிகை அறிக்கை விடுகிறார் "அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒருவர் நடாத்தும் போராட்டத்தை இன்னொருவர் குழப்புவது சரியில்லை எனவும் தமிழர்களின் போராட்டங்களிற்கிடையில் ஒரு ஒருங்கிணவு வேண்டும் "என

நீங்கள் சிறை சென்று போராட்டம் கைவிடப்பட்ட பின்னர்   இரண்டு அரசியல் கைதிகள்   விடுவிக்கப்பட்டார்கள்  சடலங்களாக.....

எவருமே சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட அரசியல் கைதிகளை, நீங்கள் மட்டும் சந்தித்தது எப்படி?

மறுநாள் சிறைக்கு வெளியில் பெரிய கவணயீர்ப்பு போராட்டம் நடக்க இருப்பது தெரிந்தும் , கைதிகளின் போராட்டத்தினை ஏன் கைவிடச் செய்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு வாரமாகிவிட்டது. இந்த கேள்விகளை அனுப்பி. கூட்டமைப்பில் இளைஞர்களிற்கு இடம் கொடுப்பீர்களா? வீட்டுக்கு புள்ளடியிடும் போது வலமிருந்து இடுவதா? இடமிருந்து இடுவதா? மாதிரியான கேள்விகளிற்கு பதில் சொன்ன வேட்பாளர் ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம், கீழ் வரும் கேள்விகளிற்கு என்றேனும் ஒருநாள் பதில் சொல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

1. இலங்கையரசுடன் நீங்கள் மூன்று சுற்று இரகசிய பேச்சுக்கள் நடத்தியுள்ளீர்கள். இது உங்களிற்கும், சம்பந்தனிற்கும் மட்டுமே தெரிந்திருந்தது. கூட்டமைப்பின் எந்த தலைவர்களும் அதனை அறிந்திருக்கவில்லை. தமிழ் அரசியலில் இந்த தனிஆவர்த்தனங்கள் கற்றுத்தந்த பாடங்களை நீங்கள் படிக்காமல் இருக்கலாம். நாங்கள் படித்துவிட்டோம். அந்த பேச்சில் மங்கள சமரவீர பிராந்திய அலகு பற்றிய உறுதிமொழியை உங்களிற்கு தந்திருந்தார். ஆனால் அதனை நீங்கள் வெளிப்படுத்தவில்லை. இது பற்றி பின்னர் கூறிய சுரேஷ், அது கூட்டமைப்பின் முடிவல்ல, அதில் தவறு நேர்ந்தால் கூட்டமைப்பு பொறுப்பேற்காது என்றுவிட்டார். இப்பொழுது நீங்கள் தீர்வை பெற்றுத்தர வாக்களிக்க கோருகிறீர்கள். கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதா? உங்களிற்கு வாக்களிப்பதா?

2. வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், மற்றும் முதல்வரிற்கிடையிலான முரண்பாடொன்று நீதிமன்றம்வரை சென்றது. முதல்வர் சார்பில் நீங்கள் நீதிமன்றம் சென்றீர்கள். அது மகிந்த ராஜபக்ச காலம். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் தமிழர்களிற்கு சார்பாகவே இருக்கும் என முதல்வர் கூறினார். முதல்வரின் அதிகாரங்களை நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், 13வது திருத்தத்தின் குறைபாடுகளை வெளிச்சமிடலாமென அவர் கூறினார். இருந்தாலும், முதல்வரிற்கே தெரியாமல் அந்த வழக்கை நீங்கள் இறுதிநேரத்தில் வாபஸ் வாங்கினீர்கள். இது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. 
இப்பொழுது கூறுகிறார்கள், உங்களிற்கு சட்டம் தெரியும், எல்லா இடங்களிலும் வாதாடி வென்று வருவீர்கள் என. எனக்குள்ள சந்தேகம், முதல்வர் வழக்கு 'டீலை' ஏன் செய்தீர்கள்? யாருடன் செய்தீர்கள்? எதிர்காலத்திலும் இப்படியான 'டீல்' செய்யமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

(இன்னும் வரும்)

நன்றி முகநூல் Yo Karnan 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
    • இது ஒட்டு மொத்த‌ இந்திய‌ அள‌வில் தேர்த‌ல் ஆணைய‌த்தை கைக்குள் வைத்து பிஜேப்பி செய்யும் தேர்த‌ல் மோச‌டி இப்ப‌டி குள‌று ப‌டி செய்து தேர்த‌லில் வெல்வ‌தெல்லாம் ஒரு வெற்றியா......................இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் கிடையாது................இந்திய‌ அள‌வில் தாங்க‌ள் 400 இட‌ங்க‌ளின் வென்று ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்க‌ளே / ஆனால் இப்ப‌டி குள‌று ப‌டி செய்து அமைப்போம் என்று ஆர‌ம்ப‌த்தில் சொல்ல‌ வில்லை இப்ப‌ பிடிப‌ட்டான் மோடி என்ற க‌ள்ள‌ன்......................தேர்த‌ல் ஆணைய‌த்தையும் ஈவிம் மிசினையும் ந‌ம்பி தான் த‌மிழ் நாட்டு பிஜேப்பி அண்ணாம‌லை அதிக‌மாய் பொங்கி எழுகிறார்....................இதெல்லாம் ஒரு தேர்த‌ல்.............................த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக‌ளை நினைக்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.