Jump to content

கவனமாக காரைப் பராமரிக்க: டிப்ஸ்


Recommended Posts

cleaning_2471563f.jpg

காரை வெயிலில் வைத்து சோப்பு போட்டு கழுவக் கூடாது. வெயிலால் சோப்பு உலர்ந்து கறையாகப் படிந்துவிடும். இதைப் போக்க காருக்கு வேக்ஸ் பாலிஷ் தர வேண்டியிருக்கும்.

கோடைக் காலத்தில் நீண்ட தூர பயணத்தின்போது கார் அதிக சூடேறிவிடும். இதனால் ரேடியேட்டர், கூலண்ட் ஆகியவற்றையும், அனைத்து ஹோஸ்களும் சரியாக செயல்படுகின்றனவா என சோதித்துக் கொள்ள வேண்டும்.

காரை வெயிலில் நிறுத்திவிட்டு பிறகு ஓட்டும் போது ஏசியை முழு வேகத்தில் செயல்படுத்துவதோடு, காரின் ஜன்னலை சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் வெளி வெப்பமும், காரினுள் நிலவிய வெப்பமும் சீராகி, ஏசி குளிர்ச்சி விரைவில் கிடைக்கும்.

கோடைக் காலத்தில் கார் டயர்களின் காற்று விரைவில் வெளியாகும். இதனால் அடிக்கடி காற்றழுத்தத்தை சோதிக்க வேண்டும். நீண்ட பயணம் முடிந்த உடனேயோ அல்லது கார் டயர் சூடாக இருக்கும்போதோ காற்றடிக்கக் கூடாது.

காரின் ரப்பர் பகுதிகள் வெப்பம் காரணமாக இலகிவிடும். வைபர் பிளேடு, கூலண்ட் ஹோஸ், ஆயில் ஹோஸ் உள்ளிட்டவற்றை கவனித்து மாற்ற வேண்டும். காரை சர்வீசுக்கு விடும்போது இவை மாற்றவேண்டியிருந்தால் மாற்றி விட வேண்டும்.

நீண்ட பயணத்துக்குப் பிறகும் உச்சி வேளையிலும் பெட்ரோல் நிரப்பக் கூடாது. நீண்ட பயணம் காரணமாக பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் ஆவியாகியிருக்கும். இதேபோன்ற நிலைதான் உச்சிவேளையிலும். இதனால் இரு சந்தர்ப்பத்திலும் பெட்ரோல் நிரப்புவதை தவிர்ப்பது, பெட்ரோல் இழப்பை தடுக்க உதவும்.

தகவல் உதவி:

கே.ஸ்ரீனிவாசன், தலைமை பொதுமேலாளர்,

டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

http://tamil.thehindu.com/business/business-supplement/கவனமாக-காரைப்-பராமரிக்க-டிப்ஸ்/article7416564.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

டிப்ஸ்: அதிக மைலேஜ் பெறுவது எப்படி?

mylage_2479938f.jpg

$ காரை முறையாக ஓட்டினாலே எரிபொருள் (டீசல் அல்லது பெட்ரோல்) வீணாவதைத் தடுக்க முடியும். கிளட்ச் பெடலில் காலை வைத்துக் கொண்டு ஓட்டினால் எரிபொருள் அதிகமாக செலவாகும். மேலும் நெரிசல் அதிகம் இல்லாத சாலையைத் தேர்ந்தெடுத்தால் விரைவாக செல்ல முடிவதுடன் மைலேஜும் கூடுதலாகக் கிடைக்கும்.

$ காரின் வேகத்தைக் குறைப்பதற்கு பிரேக்கை உபயோகிப்பதற்குப் பதிலாக கியரை மாற்றி வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதன் மூலம் எரிபொருள் வீணாவதைத் தவிர்க்கலாம்.

$ டயரின் காற்றழுத்தத்தை அறிவுறுத்தப்பட்ட அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். சீரற்ற காற்றழுத்தம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை எரிபொருளை உறிஞ்சும்.

$ மிகவும் பழக்கமான சாலையில் செல்வதன் மூலம் மேடு, பள்ளம், ஸ்பீடு பிரேக்கர் இருக்கும் இடம் தெரிந்திருக்கும். இது கிளட்ச், பிரேக் மற்றும் கியர் உபயோகத்தைக் குறைத்து மைலேஜை அதிகரிக்க உதவும்.

$ காரை எந்த கியரில் செலுத்தினாலும் 2,000 முதல் 2,400 ஆர்பிஎம் என்ற நிலையிலேயே செலுத்துங்கள். இது இன்ஜினுக்கு கூடுதல் சுமையோ அல்லது குறைவான சுமையோ தராமல் சீராக இயக்கும். இதன் மூலம் மைலேஜ் மேம்படும்.

$ காரின் ஏசியை இரண்டாம் நிலையிலோ அல்லது ஆட்டோமேடிக் ஏசியில் 25 டிகிரியிலோ வைத்து ஓட்டும்போது எரிபொருள் குறைவாக தேவைப்படும்.

$ பெட்ரோல் பங்குகளில் லாரிகள் மூலம் டேங்குகளில் பெட்ரோல் நிரப்பும்போது உங்கள் காருக்கு எரிபொருள் நிரப்பாதீர்கள். இந்த சமயத்தில் பெட்ரோல் நிலைய டேங்குகளில் உள்ள கசடுகள் உங்கள் காரில் சென்று எரிபொருள் குழாயை பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

தகவல் உதவி:

கே.ஸ்ரீனிவாசன், தலைமை பொதுமேலாளர் டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

http://tamil.thehindu.com/business/business-supplement/டிப்ஸ்-அதிக-மைலேஜ்-பெறுவது-எப்படி/article7443235.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 2 months later...

டிப்ஸ்: கிளட்ச் பெடல்

clutch_2547241f.jpg

l கார் ஓட்டும்போது கிளட்ச் பெடலின் மீது காலை வைத்துக் கொண்டு ஓட்டக் கூடாது ஏன்?

l கார் ஓட்டும் பெரும்பாலானவர்கள் கியர் மாற்றும்போது கிளட்ச் பெடலை அழுத்தி கியர் மாற்றுவார்கள். அவ்விதம் கியர் மாற்றிய பிறகு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுக்காமல் கிளட்ச் பெடலை காலை ரெஸ்ட் செய்ய உபயோகிக்கும் ஒரு இடம் போல அதன் மீது காலை வைத்தபடியே காரை ஓட்டுவார்கள்.

l கிளட்ச் பெடலின் மீது காலை வைத்தபடியே ஓட்டுவதால், கிளட்ச் பெடல் எப்போதும் அழுந்திய நிலையிலேயே இருக்கும். இதனால் ஃபிளை வீலுக்கும் பிரஷர் பிளேட்டிற்கும் இடையே உள்ள கிளட்ச் பிளேட் எப்போதுமே ஃபிளை வீலிலிருந்து சற்று விலகியே சுற்றிக் கொண்டிருக்கும்.

l இவ்விதம் கிளட்ச் பிளேட் விலகியே சுற்றுவதால் என்ஜினில் உருவாகும் சக்தியானது சரியாக கியர் பாக்ஸிற்கு கடத்தப்படுவதில்லை.

l என்ஜினின் முழு சக்தியும் சரியாக கடத்தப்படாததால் வாகனத்தின் வேகம் குறையும் வாய்ப்புகள் அதிகம். அத்துடன் பெட்ரோல்/ டீசல் வீணாகும். அத்துடன் கிளட்ச் பிளேட்டின் ஆயுள்காலம் குறையும். இதனால் குறைந்த கிலோ மீட்டர் ஓடிய நிலையில் கிளட்ச் பிளேட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

l கியர் மாற்றும்போது கிளட்சை பயன்படுத்திவிட்டு பிறகு கிளட்ச் பெடலிலிருந்து காலை எடுத்து விட வேண்டும். தேவையானபோது மட்டுமே கிளட்ச் பெடலை அழுத்த வேண்டும்.

l இப்போது வரும் கார்களில் கிளட்ச் பெடலுக்கு அருகிலேயே காலை வைத்துக் கொள்ள இட வசதி அளித்துள்ளனர். அதன் மீது காலை வைத்துக் கொண்டால் கிளட் பகுதி நீண்ட காலம் உழைக்கும். இன்ஜினின் முழு சக்தியும் காருக்குக் கிடைக்கும். எரிபொருளும் சிக்கனமாகும்.

தகவல் உதவி

கே.ஸ்ரீனிவாசன்,

தலைமை பொதுமேலாளர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

http://tamil.thehindu.com/business/business-supplement/டிப்ஸ்-கிளட்ச்-பெடல்/article7651412.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 1 month later...

டிப்ஸ்: மழைக் காலமும், பிரேக் பராமரிப்பின் அவசியமும்

break_2622438h.jpg

நன்றாக கார் ஓட்ட தெரிந்தவர்கள் கூட மழை காலத்தில் கார் ஓட்ட கொஞ்சம் அச்சப்படுவார்கள். மழையில் பிரேக் அடித்தால் கார் நிற்குமோ நிற்காதோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக ஒரு முறை நாம் பணிமனைக்குச் சென்று நம்முடைய காரில் பிரேக் நன்றாக உள்ளனவா என்று பார்ப்பது சிறந்தது. அப்படி பார்க்கத் தவறியவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கவனமாகப் பின்பற்றவும்.

மழை நேரங்களில் கார் ஓட்டுபவர்கள் கார் எடுப்பதற்கு முன்பாக பானெட்டைத் திறந்து பிரேக் ஆயில் அளவு சரியாக உள்ளதா என்று சரி பார்த்து விட்டு பின்பு காரை எடுக்கவும்.

ஹேண்ட் பிரேக் லீவர் சரியான அளவில் அட்ஜஸ்ட் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும். அவசர சமயத்தில் ஹேண்ட் பிரேக் நமக்கு உதவும்.

மழை நேரத்தில் ஓட்டுபவர்கள் மித‌மான வேகத்திலேயே ஓட்டவும். ஒரு வாகனத்திற்கும் மற்றொரு வாகனத்திற்கும் உள்ள இடைவெளியை சரியாக கடை பிடித்து ஓட்டவும். ஏனென்றால் பிரேக் போடும் போது மற்றொரு வாகனத்தின் மீது மோதுவதைத் தவிர்க்கலாம்.

ஏபிஎஸ் பிரேக் அல்லாத வாகனங்கள் பிரேக்கை ஒரேயடியாக அழுத்தாமல் இரண்டு அல்லது மூன்று முறை விட்டு விட்டு அழுத்தும் போது மழையில் வாகனம் ஒரு பக்கமாக இழுத்து செல்வதைத் தவிர்க்கலாம்.

பொதுவாக பிரேக் பேடும், பிரேக் ஷுவும் தண்ணீரில் தொடர்ந்து நனைந்து கொண்டிருந்தால் அதில் வழுவழுப்பு தன்மை அதிகமாகி விடும்,இந்த நிலையில் பிரேக்கை அழுத்தும்போது பிரேக் பிடிக்காமல் கொஞ்சம் இழுத்துக் கொண்டு போகும். ஆகவே வாகனம் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியை கடந்து வந்த பின்பு இரண்டு அல்லது மூன்று முறை பிரேக்கை அழுத்தி விடவும், அவ்வாறு அழுத்தும் போது வழுவழுப்பு தன்மை குறைந்து பிரேக் நன்றாகப் பிடிக்கும்.

மழை நேரத்தில் பிரேக் பெடல் மீது கால் வைத்தோ அல்லது ஹேண்ட் பிரேக் போட்டோ வாகனத்தை ஓட்டக் கூடாது. ஏனென்றால் பிரேக் பேடும் பிரேக் ஷுவும் தண்ணீரில் உள்ள காரணத்தால் விரைவாக தேய்ந்து விடும், அதோடு பிரேக் செயல்பாடு குறைந்து போகும்.

வாகனத்தை மேடான பகுதியில் பார்க் செய்யும் போது ஹேண்ட் பிரேக்கை மட்டும் பயன்படுத்தாமல் ஏதாவது ஒரு கியரில் வாகனத்தை நிறுத்தி பின்பு பார்க் செய்யவும்.

தகவல் உதவி: கே.ஸ்ரீனிவாசன்,

துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%9F%E0%

 

Link to comment
Share on other sites

டிப்ஸ்: மழைக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளும், தீர்வுகளும்...

 

car_2615058h.jpg

# பொதுவாக நாம் மழைக் காலங்களில் கார் ஓட்டுவதைத் தவிர்ப்போம் அல்லது குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவோம், அவ்வாறு குறைந்த அளவு பயன் படுத்தும் போது இன்ஜினின் இயக்கமும் குறைவாக இருக்கும். அதனால் பேட்டரியில் தேவையான அளவு மின்சாரம் சேமிக்க முடியாமல் போவதால் சில நேரங்களில் இன்ஜினை அணைத்து விட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யும் போது ஸ்டார்ட் ஆகாமல் போகிறது. நாம் மழை காலங்களில் காரைப் பயன் படுத்தாவிட்டாலும் தினமும் ஸ்டார்ட் செய்து ஒரு பத்து நிமிடம் வரை இன்ஜினை இயக்க செய்வதால் பேட்டரியில் மின் அளவு குறையாமல் இருக்கும்.

# அடுத்து முகப்பு விளக்கு எரியாமல் போய் விடும். இது பெரும்பாலும் முகப்பு விளக்கில் வெளிச்சம் அதிகம் பெற வோல்ட் அதிகமாக உள்ள பல்பை பயன் படுத்துவோரது கார்களில் நிகழும், ஏனென்றால் அதற்காக பயன் படுத்தும் Relay ல் தண்ணீர் பட்டு விட்டால் ஷார்ட் ஆகி பியூஸ் ஆக வாய்ப்புகள் அதிகம், எனவே ரிலேயில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

# கூலிங் ஃபேன் இயங்காமல் போவதும் உண்டு. இது எதனால் நிகழ்கிறது என்றால் தண்ணீர் அதிகம் தேங்கி உள்ள பகுதிகளில் வேகமாக வாகனம் ஓட்டும் போது Bumper grill வழியாக தண்ணீர் வேகமாக கூலிங் ஃபேன் உள்ள திசையை நோக்கி வரும், அப்படி வந்த தண்ணீர் கூலிங் ஃபேன் மோட்டார் மீது படும் போது ஃபேன் மோட்டார் ஷார்ட் ஆக வாய்ப்புகள் அதிகம், ஆக மழை காலங்களில் தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் மெதுவாக வாகனம் ஓட்டுவது நல்லது.

# அடுத்து மழைக் காலங்களில் அடிக்கடி டயர் பஞ்சர் ஆகும். இது அதிகம் செயல்படுத்தப்படாத கார்களில் அதிகமாக நிகழும். ஏனென்றால் டயர் அதிக நேரம் தண்ணீரில் இருப்பது ஒரு காரணம் அது மட்டும் இல்லாமல் ஓடாமல் உள்ள டயரில் கல் மற்றும் கண்ணாடி போன்றவை எளிதில் உள்ளே சென்று டியூபை பஞ்சர் செய்து விடும். ஆக மழைக் காலங்களில் கரடு முரடான சாலைகளில் மெதுவாக போவது சிறந்தது.

# தண்ணீர் மிக அதிகம் தேங்கியுள்ள பகுதியில் (சைலன்ஸர் வரை) வாகனம் செல்லும் போது இன்ஜின் ஆப் ஆகி விட்டால் திரும்பவும் ஸ்டார்ட் செய்யக் கூடாது. தண்ணீரில் இருந்து வெளியே நகர்த்தி பின்பு இன்ஜினில் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்த்து விட்டு தண்ணீர் புகாமல் இருந்தால் இன்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு இயக்கலாம் இதுவே சரியானது.

# அதே போல் மழைக் காலங்களில் அடிக்கடி ஏர் ஃபில்டரை பரிசோதிப்பது சிறந்தது. ஏனென்றால் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியில் வாகனம் செல்லும் போது தண்ணீர் புக வாய்ப்பு உள்ளது. இதில் தண்ணீர் போனால் ஏர் ஃபில்டரில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தகவல் உதவி
கே.ஸ்ரீனிவாசன், 
உதவி துணைத் தலைவர், 
டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்

 

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.