Jump to content

ஆஷஸ் - இது கிரிக்கெட் அல்ல போர்!


Recommended Posts

ஆஷஸ் - இது கிரிக்கெட் அல்ல போர்!

லகில் பல காரணங்களுக்காக போர் நடந்து பார்த்திருப்போம். ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு கிரிக்கெட் போட்டியை போராக கருதுவதை பார்த்திருக்கிறீர்களா?

வார்த்தை பரிமாற்றங்கள் துவங்கி களத்தில் மோதிக் கொள்ளாத குறையாக நடந்து கொள்வது வரை அனைத்துமே இந்த ஆட்டங்களில் நடக்கும். கிரிக்கெட்டை இப்படி ரசிகர்களும், வீரர்களும் போர் போல பார்க்கிறார்கள் என்றால் அது ஒன்று இந்தியா- பாகிஸ்தான் போட்டியாக இருக்கும், இன்னொன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் போட்டியாக இருக்கும்.

Cricket-ashes.jpg

இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் டெஸ்ட் போட்டிகளில் மோதிக் கொள்ளும் போட்டிகள் அனைத்தும் 1882க்கு பிறகு 'ஆஷஸ் தொடர்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை ஆஷஸ் தொடரின் 69வது தொடர் ஆரம்பிக்க உள்ளது.

அது என்ன ஆஷஸ்?

DeathofEnglishCricket.jpg'ஆஷஸ் போட்டிகள் என்றால் ஏன் இவ்வளவு கோபம்? களத்தில் ஏன் இத்தனை ஆக்ரோஷம்...? ' என்ற கேள்விகள் பலருக்குள் எழுவது உண்டு. மற்ற ஒருநாள், டி20 போட்டிகளில் கூட ஆஸ்திரேலியா - இங்கிலாந்து வீரர்கள் இவ்வளவு ஆக்ரோஷம் காட்டுவதில்லை. ஏன் ஆஷஸுக்கு மட்டும் இவ்வளவு கோபம் என்றால், 1882ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வென்றதில்லை.

ஆனால் 1882ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது. இத்தனைக்கும் அந்த ஒரு போட்டியில்தான் இங்கிலாந்து தோற்று இருந்தது. தொடரை கைப்பற்றியது இங்கிலாந்துதான். ஆனாலும் ஓவல் தோல்வியை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிக்கையான 'தி ஸ்போர்டிங் டைம்ஸ்',  ''இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது, இங்கிலாந்து கிரிக்கெட் எரிக்கப்பட்டு சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது'' என இரங்கல் செய்தியாக அறிவித்தது.

பின்னர் 1882-83களில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று மூன்று டெஸ்ட் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடியது. இரண்டு டெஸ்ட்களின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்க, மூன்றாவது டெஸ்ட்டை இங்கிலாந்து வென்று பழிதீர்த்தது. அதற்கு பரிசாக மெல்பர்னை சேர்ந்த மூன்று பெண்கள், இங்கிலாந்து கேப்டன் இவோ ப்லிக்கிற்கு ஒரு கோப்பையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பெயில்ஸ்களை எரித்து சாம்பலாக வழங்கினார்கள் என்று கூறப்படுகிறது.

68549_1.jpgஅதன்பின் 20 வருடங்கள் கழித்து 'ஆஷஸ்' என்ற பெயரில் அதிகாரப்பூர்வ தொடர் துவங்கப்பட்டது. 1921 ல் லண்டனை சேர்ந்த பத்திரிக்கையில் ஆஷஸ் கோப்பையின் வடிவம் வெளியிடப்பட்டது. மரக்கோப்பைக்குள் சாம்பல் அடைக்கப்பட்டது போன்ற 5 அங்குல கோப்பை அது.

தற்போது அந்த கோப்பையை எந்த அணி வென்றாலும் அந்த அணிக்கு ஆஷஸ் சாம்பியன் என்ற பெயர் இருக்கும்; ஆனால் கோப்பை எம்சிசியில் பாதுகாக்கப்படும். ஆனால் இது பிள்க்கிடம் இருந்த கோப்பையின் மாதிரிதான் என்று கூறப்படுகிறது. புதுமையாக வடிவமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.


இங்கிலாந்தா? ஆஸ்திரேலியாவா?

இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடைபெற்றுவருகிறது. இதுவரை 68 தொடர்கள் நடைபெற்றுள்ளது.இதில் மொத்தம்  டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 128 போட்டிகளை ஆஸ்திரேலியாவும், 103 போட்டிகளை இங்கிலாந்தும் வென்றுள்ளன, 89 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

collage.jpg

இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி அதிகமான போட்டிகளையும், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணி அதிகமான போட்டிகளையும் வென்றுள்ளது. 68 தொடர்களில் ஆஸ்திரேலியா 32 தொடர்களையும், இங்கிலாந்து 31 தொடர்களை வென்றுள்ளது. இந்த தொடரை இங்கிலாந்து வென்றால் சமமாக இருக்கும்.
 

வார்னேthe-ashes.jpg, ஃபிளின்டாப், ஸ்ட்ராஸ், ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவை மிகவும் பிரபலமாகும். 1989க்கு பிறகு தொடர்ந்து தோற்ற இங்கிலாந்து 2005ல் ஃப்ளின்டாப், பீட்டர்சன் என பெரும்படையோடு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை 'ரிட்டர்ன் ஆஃப் ஆஷஸ்' ஆக்கியது. பின்னர் ஹாட்ரிக் தொடர் ஜெயித்த இங்கிலாந்து கடைசி ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது.

இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்த்தால் இரு அணிகளும் புதிய திறமைகளைதான் பெரிதும் நம்பி உள்ளன. களத்தில் வெற்றி தோல்விகளை விட ஸ்லெட்ஜிங் எனும் வசைபாடுதல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து குக் என்றால் ஆஸ்திரேலியா வாட்சன் என்றும், ஆஸ்திரேலியா ஜான்ஸன் என்றால், இங்கிலாந்து ஆண்டர்சன் என்றும் கூறி மிரட்டி வருகின்றன.

அட என்னப்பா இது 5 அங்குல கோப்பைக்கா இந்த அக்கப்போர் என்றால் ஆம்! நாளை துவங்க உள்ள ஆஷஸ் வெறும் கிரிக்கெட் அல்ல ஒரு போர்தான்!

http://www.vikatan.com/news/article.php?aid=49125

Link to comment
Share on other sites

ஆச்சரியமான விடயம் இந்த கிரிக்கெட் போட்டி பற்றி ஜெர்மனியில் மிகவும் பிரபலமான SPIEGEL ONLINE இணையதளத்தில் இந்ததொடர் எப்படி உருவாகியது என்ற விபரத்துடனும் ஒரு சில படங்களுடனும் ஒரு கட்டுரை பிரசுரமாகி இருக்கிறது.

அதில் உள்ள முதல் படமே மிசல் ஜோன்சன் 150km வேகத்தில் பந்து வீசுவார் என்ற விளக்கத்துடன் ஆன படம்தான்.:o

image-869629-galleryV9-xjbp_zpsc520vimp.

Auf wenn es nicht immer so aussieht: Cricket ist ein dynamischer Sport. Der Australier Mitchell Johnson gehört zu den besten Bowlern der Welt. Er beschleunigt den Ball auf bis zu 150 Kilometer pro Stunde.

http://www.spiegel.de/sport/sonst/cricket-the-ashes-2015-england-und-australien-kaempfen-um-eine-urne-a-1042399.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.