Jump to content

ஈவ் டீஸிங்: போலீஸார் முன்னிலையில் வாலிபரை அடித்து உதைத்த மாணவி! (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லக்னோ: ஈவ் டீஸிங் செய்த வாலிபரை காவலர் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த
வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை  காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி.

மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்பாக வாலிபரை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈவ் டீஸிங் செய்த வாலிபரை, மாணவி ஒருவர் காவலர் முன்னிலையிலேயே செருப்பால் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலீசில் ஒப்படைத்தவுடன் இந்த மாணவி, அங்கிருந்து விலகியிருக்க வேண்டும்!

அதன் பின்னர் நடந்த சம்பவங்களுக்காக மாணவியைப் போலீசார் கைது செய்திருக்க வேண்டும்!

இப்படியான சம்பவங்கள் இந்திய தேசத்தில் மட்டுமே ..கரகோஷம் பெற முடியும்!:wub:

Link to comment
Share on other sites

ஈவ்டீசிங் செய்ததாக எ.கே.யி படிக்கும் மாணவனை....

தவறே செய்தாலும், அந்த மாணவனை அரவணைத்து நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதுதான் பள்ளிக்கு அழகு. எந்தத் தவறும் செய்யாத ஒரு அப்பாவிப் பிஞ்சின் நெஞ்சில் நஞ்சை விதைத்ததோடு, அந்தக் குழந்தையை பள்ளிக்கே வரக் கூடாது என்றும் ஒரு பள்ளி நிர்வாகம் பாடாய்ப்படுத்திய கொடுமையான சம்பவம் ஒன்று திருத்தங்கல் நகரத்தில் நடந்துள்ளது.''என் வீட்டுக்காரர் துணி வியாபாரம் பார்க்கிறார். 23 வருஷம் கழிச்சு எங்களுக்குப் பிறந்த குழந்தை இவன். ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களுக்கு கிடைச்ச செல்வம் என்பதால், ஆசை ஆசையா சீராட்டி வளர்த்தோம். எப்பவும் துறுதுறுன்னு இருப்பான். இந்த வருஷம்தான் திருத்தங்கல் நாடார் வித்யாலயா ஸ்கூல்ல எல்.கே.ஜி. சேர்த்தோம். எங்க பையனும் நல்லாப் படிச்சான். என் வீட்டுக்காரர்தான் தினமும் பஸ்ல கூட்டிட்டுப்போய் ஸ்கூல்ல விட்டுட்டு வருவார். போன 4-ம் தேதி பஸ்ஸில் நல்ல கூட்டம். பையனைத் தோளில் தூக்கிவெச்சிருக்கார். அப்ப பக்கத்துல நின்னுட்டு இருந்த ஒரு லேடியோட தலைமுடியைப் பிடிச்சு விளையாடி இருக்கான். முதல்ல அந்தம்மா டேய்னு அதட்டி இருக்காங்க. திரும்பவும் கொஞ்ச நேரம் கழிச்சு, அதே மாதிரி அவங்க தலைமுடியைப் பிடிச்சு இழுத்திருக்கான். உடனே அந்தம்மா, 'உங்க டீச்சர்கிட்ட வந்து சொல்றேன் பார்’னு நேம் பேட்ஜ் பார்த்து இருக்காங்க. என் வீட்டுக்காரரும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றாங்கன்னு நினைச்சுட்டு, 'ரொம்ப சேட்டை பண்றாங்க. டீச்சர்கிட்ட சொல்லுங்க’னு விளையாட்டா சொல்லி இருக்கார் என்று சோகத்துடன் கூறினார் குழந்தையின் தாய். அந்த லேடி என் பையன் படிக்கிற ஸ்கூல் ஆபீஸ்லதான் வேலை பார்க்கிறாங்களாம். அது எங்களுக்குத் தெரியாது. ஸ்கூலுக்குப் போனதும் பிரின்ஸ்பால்கிட்ட போய், பையனின் பெயர் விவரம் எல்லாம் சொல்லி, 'நான் பஸ்ஸில் வரும்போது முதுகைத் தடவி ஈவ் டீசிங் செஞ்சான்’னு சொல்லி இருக்காங்க. உடனே என் பையனை கிளாஸை விட்டு வெளியே உக்காரவெச்சுட்டாங்க. எங்களைக் கூப்பிட்டு அனுப்பின பிரின்ஸிபால், 'இந்த வயசுலேயே பஸ்ஸில் ஈவ் டீசிங் பண்ணி இருக்கான். நான் சொல்ற சைக்காலஜி டாக்டரைப் போய்ப் பார்த்துட்டு, அதுக்குப் பிறகு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வாங்க’னு அனுப்பிட்டாங்க. 'இந்த வயசுல அந்த மாதிரிப் பண்றவனா? எங்க பையன் அப்படி இல்லை’னு எவ்வளவோ சொன்னோம். காது கொடுத்துக் கேட்கலை. எதுக்கும் போய் செக் பண்ணுவோம்னு அவங்க சொன்ன டாக்டரைப் போய் பார்த்தோம். அந்த டாக்டரும், 'உங்க பையனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நல்லா இருக்கான்’னு சொல்லிட்டாங்க. திரும்பவும் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனா, சேர்த்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. 'இன்னும் அஞ்சு மாசம் ட்ரீட்மென்ட் எடுங்க. அடுத்த வருஷம் யு.கே.ஜி-யில் சேர்த்துக்கிறோம்’னு அசால்ட்டா சொல்றாங்க. அப்பாவி குழந்தை மேல அபாண்டமா ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி ஸ்கூலுக்கே வரவிடாமப் பண்ணிட்டாங்களே... இதைக் கேள்விப்பட்டா மத்தவங்க நம்ம புள்ளையைப் பத்தி என்ன நினைப்பாங்கனு பெத்த வயிறு எரியுது. இதுக்கு ஒரு நீதி வேணும். எங்க குழந்தைக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. தினமும் காலையில் யூனிஃபார்மை மாட்டிட்டு, என்னை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போங்கன்னு அழுறான். என்றார் கண்ணீருடன். அந்தப் பள்ளியின் முதல்வர் பிரீதாவிடம் இதுகுறித்து கேட்டபோது, ''அந்தப் பையன் மத்த குழந்தைகளைக் கடிச்சுவைக்கிறான். எல்லாரையும் கெட்ட வார்த்தையால் திட்டுறான். அவன் மீது பல தடவை புகார் வந்துடுச்சு. அதனால்தான் கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகச் சொன்னோம். இன்னும் இரண்டு கவுன்சிலிங் பாக்கி இருக்கு. அதை முடிச்சதும் கிளாஸுக்குக் கூட்டிட்டு வாங்கனுதான் சொன்னோம். அதுக்குள்ள அவனோட பெற்றோர் கோர்ட்டுக்குப் போவோம்னு தேவை இல்லாத பிரச்னை பண்றாங்க. மத்தபடி ஈவ்டீசிங் பண்றான்னு நாங்க சொல்லவே இல்லை'' என்று மறுத்தார். குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத்தின் தமிழக சிறப்புப் பிரதிநிதியாக, 'மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் இயக்குநர் ஹென்றி டிஃபேன் பதவி வகிக்கிறார். அந்த அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றோம். அந்தப் பெற்றோரின் தொடர்பு எண்களைப் பெற்றுக்கொண்டார். ''எங்கள் அமைப்பின் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கிறோம். நாளை மறுநாள் அந்தக் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லச் சொல்லுங்கள்'' என்றார். அவர்கள் அந்தப் பள்ளியிடம் இதுசம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள். தற்போது அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் மீண்டும் பள்ளியில் சேர்த்து கொண்டதாக தக்வல்கள் வந்துள்ளன.

 

நவகிரி.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈவ்டீசிங் செய்ததாக எ.கே.யி படிக்கும் மாணவனை....

தவறே செய்தாலும், அந்த மாணவனை அரவணைத்து நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதுதான் பள்ளிக்கு அழகு. எந்தத் தவறும் செய்யாத ஒரு அப்பாவிப் பிஞ்சின் நெஞ்சில் நஞ்சை விதைத்ததோடு, அந்தக் குழந்தையை பள்ளிக்கே வரக் கூடாது என்றும் ஒரு பள்ளி நிர்வாகம் பாடாய்ப்படுத்திய கொடுமையான சம்பவம் ஒன்று திருத்தங்கல் நகரத்தில் நடந்துள்ளது.''என் வீட்டுக்காரர் துணி வியாபாரம் பார்க்கிறார். 23 வருஷம் கழிச்சு எங்களுக்குப் பிறந்த குழந்தை இவன். ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களுக்கு கிடைச்ச செல்வம் என்பதால், ஆசை ஆசையா சீராட்டி வளர்த்தோம். எப்பவும் துறுதுறுன்னு இருப்பான். 

எல்.கே.ஜி. என்பது, தமிழ் நாட்டில் முதலாம் வகுப்பு என்று நினைக்கின்றேன்.
ஆறு வயதுப் பிள்ளை, ஆயாவுக்கு..."ஈவ் டீசிங்" செய்ததை யாரும் நம்புவாங்களா.....
அந்த, ஆயா.... அட்டு பிகர் போலுள்ளது. தன்னை யாரும் ஈவ் டீசிங் செய்ய மாட்டாங்களா...என்ற ஏக்கத்கில், அலையுறார் போலுள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்த்துறை வேடிக்கை பார்க்குது...

அவரை முதலில் உள்ள தள்ளணும்

இது தான் இந்தியாவின் சட்டத்தின் பெறுமதி

இதுக்குள்ள வல்லரசாகும் கனவு வேறு.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்த்துறை வேடிக்கை பார்க்குது...

அவரை முதலில் உள்ள தள்ளணும்

இது தான் இந்தியாவின் சட்டத்தின் பெறுமதி

இதுக்குள்ள வல்லரசாகும் கனவு வேறு.......

அந்தப் பெண் அடிக்கும் போது.... காவல் துறையினன் வேடிக்கை பார்பதைப் பார்க்க, பத்திக் கொண்டு வருகுது.
பையன்... ஏதோ... செய்யக் கூடாததையா... செய்திட்டான்.
அவன், கூனிக்  குறுகி.... நிற்பதைப் பார்க்க, கவலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.