Jump to content

ஈவ் டீஸிங்: போலீஸார் முன்னிலையில் வாலிபரை அடித்து உதைத்த மாணவி! (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லக்னோ: ஈவ் டீஸிங் செய்த வாலிபரை காவலர் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த
வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை  காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி.

மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்பாக வாலிபரை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈவ் டீஸிங் செய்த வாலிபரை, மாணவி ஒருவர் காவலர் முன்னிலையிலேயே செருப்பால் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலீசில் ஒப்படைத்தவுடன் இந்த மாணவி, அங்கிருந்து விலகியிருக்க வேண்டும்!

அதன் பின்னர் நடந்த சம்பவங்களுக்காக மாணவியைப் போலீசார் கைது செய்திருக்க வேண்டும்!

இப்படியான சம்பவங்கள் இந்திய தேசத்தில் மட்டுமே ..கரகோஷம் பெற முடியும்!:wub:

Link to comment
Share on other sites

ஈவ்டீசிங் செய்ததாக எ.கே.யி படிக்கும் மாணவனை....

தவறே செய்தாலும், அந்த மாணவனை அரவணைத்து நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதுதான் பள்ளிக்கு அழகு. எந்தத் தவறும் செய்யாத ஒரு அப்பாவிப் பிஞ்சின் நெஞ்சில் நஞ்சை விதைத்ததோடு, அந்தக் குழந்தையை பள்ளிக்கே வரக் கூடாது என்றும் ஒரு பள்ளி நிர்வாகம் பாடாய்ப்படுத்திய கொடுமையான சம்பவம் ஒன்று திருத்தங்கல் நகரத்தில் நடந்துள்ளது.''என் வீட்டுக்காரர் துணி வியாபாரம் பார்க்கிறார். 23 வருஷம் கழிச்சு எங்களுக்குப் பிறந்த குழந்தை இவன். ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களுக்கு கிடைச்ச செல்வம் என்பதால், ஆசை ஆசையா சீராட்டி வளர்த்தோம். எப்பவும் துறுதுறுன்னு இருப்பான். இந்த வருஷம்தான் திருத்தங்கல் நாடார் வித்யாலயா ஸ்கூல்ல எல்.கே.ஜி. சேர்த்தோம். எங்க பையனும் நல்லாப் படிச்சான். என் வீட்டுக்காரர்தான் தினமும் பஸ்ல கூட்டிட்டுப்போய் ஸ்கூல்ல விட்டுட்டு வருவார். போன 4-ம் தேதி பஸ்ஸில் நல்ல கூட்டம். பையனைத் தோளில் தூக்கிவெச்சிருக்கார். அப்ப பக்கத்துல நின்னுட்டு இருந்த ஒரு லேடியோட தலைமுடியைப் பிடிச்சு விளையாடி இருக்கான். முதல்ல அந்தம்மா டேய்னு அதட்டி இருக்காங்க. திரும்பவும் கொஞ்ச நேரம் கழிச்சு, அதே மாதிரி அவங்க தலைமுடியைப் பிடிச்சு இழுத்திருக்கான். உடனே அந்தம்மா, 'உங்க டீச்சர்கிட்ட வந்து சொல்றேன் பார்’னு நேம் பேட்ஜ் பார்த்து இருக்காங்க. என் வீட்டுக்காரரும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொல்றாங்கன்னு நினைச்சுட்டு, 'ரொம்ப சேட்டை பண்றாங்க. டீச்சர்கிட்ட சொல்லுங்க’னு விளையாட்டா சொல்லி இருக்கார் என்று சோகத்துடன் கூறினார் குழந்தையின் தாய். அந்த லேடி என் பையன் படிக்கிற ஸ்கூல் ஆபீஸ்லதான் வேலை பார்க்கிறாங்களாம். அது எங்களுக்குத் தெரியாது. ஸ்கூலுக்குப் போனதும் பிரின்ஸ்பால்கிட்ட போய், பையனின் பெயர் விவரம் எல்லாம் சொல்லி, 'நான் பஸ்ஸில் வரும்போது முதுகைத் தடவி ஈவ் டீசிங் செஞ்சான்’னு சொல்லி இருக்காங்க. உடனே என் பையனை கிளாஸை விட்டு வெளியே உக்காரவெச்சுட்டாங்க. எங்களைக் கூப்பிட்டு அனுப்பின பிரின்ஸிபால், 'இந்த வயசுலேயே பஸ்ஸில் ஈவ் டீசிங் பண்ணி இருக்கான். நான் சொல்ற சைக்காலஜி டாக்டரைப் போய்ப் பார்த்துட்டு, அதுக்குப் பிறகு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வாங்க’னு அனுப்பிட்டாங்க. 'இந்த வயசுல அந்த மாதிரிப் பண்றவனா? எங்க பையன் அப்படி இல்லை’னு எவ்வளவோ சொன்னோம். காது கொடுத்துக் கேட்கலை. எதுக்கும் போய் செக் பண்ணுவோம்னு அவங்க சொன்ன டாக்டரைப் போய் பார்த்தோம். அந்த டாக்டரும், 'உங்க பையனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நல்லா இருக்கான்’னு சொல்லிட்டாங்க. திரும்பவும் ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனா, சேர்த்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. 'இன்னும் அஞ்சு மாசம் ட்ரீட்மென்ட் எடுங்க. அடுத்த வருஷம் யு.கே.ஜி-யில் சேர்த்துக்கிறோம்’னு அசால்ட்டா சொல்றாங்க. அப்பாவி குழந்தை மேல அபாண்டமா ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி ஸ்கூலுக்கே வரவிடாமப் பண்ணிட்டாங்களே... இதைக் கேள்விப்பட்டா மத்தவங்க நம்ம புள்ளையைப் பத்தி என்ன நினைப்பாங்கனு பெத்த வயிறு எரியுது. இதுக்கு ஒரு நீதி வேணும். எங்க குழந்தைக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. தினமும் காலையில் யூனிஃபார்மை மாட்டிட்டு, என்னை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போங்கன்னு அழுறான். என்றார் கண்ணீருடன். அந்தப் பள்ளியின் முதல்வர் பிரீதாவிடம் இதுகுறித்து கேட்டபோது, ''அந்தப் பையன் மத்த குழந்தைகளைக் கடிச்சுவைக்கிறான். எல்லாரையும் கெட்ட வார்த்தையால் திட்டுறான். அவன் மீது பல தடவை புகார் வந்துடுச்சு. அதனால்தான் கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகச் சொன்னோம். இன்னும் இரண்டு கவுன்சிலிங் பாக்கி இருக்கு. அதை முடிச்சதும் கிளாஸுக்குக் கூட்டிட்டு வாங்கனுதான் சொன்னோம். அதுக்குள்ள அவனோட பெற்றோர் கோர்ட்டுக்குப் போவோம்னு தேவை இல்லாத பிரச்னை பண்றாங்க. மத்தபடி ஈவ்டீசிங் பண்றான்னு நாங்க சொல்லவே இல்லை'' என்று மறுத்தார். குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத்தின் தமிழக சிறப்புப் பிரதிநிதியாக, 'மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் இயக்குநர் ஹென்றி டிஃபேன் பதவி வகிக்கிறார். அந்த அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றோம். அந்தப் பெற்றோரின் தொடர்பு எண்களைப் பெற்றுக்கொண்டார். ''எங்கள் அமைப்பின் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கிறோம். நாளை மறுநாள் அந்தக் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லச் சொல்லுங்கள்'' என்றார். அவர்கள் அந்தப் பள்ளியிடம் இதுசம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள். தற்போது அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் மீண்டும் பள்ளியில் சேர்த்து கொண்டதாக தக்வல்கள் வந்துள்ளன.

 

நவகிரி.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈவ்டீசிங் செய்ததாக எ.கே.யி படிக்கும் மாணவனை....

தவறே செய்தாலும், அந்த மாணவனை அரவணைத்து நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதுதான் பள்ளிக்கு அழகு. எந்தத் தவறும் செய்யாத ஒரு அப்பாவிப் பிஞ்சின் நெஞ்சில் நஞ்சை விதைத்ததோடு, அந்தக் குழந்தையை பள்ளிக்கே வரக் கூடாது என்றும் ஒரு பள்ளி நிர்வாகம் பாடாய்ப்படுத்திய கொடுமையான சம்பவம் ஒன்று திருத்தங்கல் நகரத்தில் நடந்துள்ளது.''என் வீட்டுக்காரர் துணி வியாபாரம் பார்க்கிறார். 23 வருஷம் கழிச்சு எங்களுக்குப் பிறந்த குழந்தை இவன். ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களுக்கு கிடைச்ச செல்வம் என்பதால், ஆசை ஆசையா சீராட்டி வளர்த்தோம். எப்பவும் துறுதுறுன்னு இருப்பான். 

எல்.கே.ஜி. என்பது, தமிழ் நாட்டில் முதலாம் வகுப்பு என்று நினைக்கின்றேன்.
ஆறு வயதுப் பிள்ளை, ஆயாவுக்கு..."ஈவ் டீசிங்" செய்ததை யாரும் நம்புவாங்களா.....
அந்த, ஆயா.... அட்டு பிகர் போலுள்ளது. தன்னை யாரும் ஈவ் டீசிங் செய்ய மாட்டாங்களா...என்ற ஏக்கத்கில், அலையுறார் போலுள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்த்துறை வேடிக்கை பார்க்குது...

அவரை முதலில் உள்ள தள்ளணும்

இது தான் இந்தியாவின் சட்டத்தின் பெறுமதி

இதுக்குள்ள வல்லரசாகும் கனவு வேறு.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்த்துறை வேடிக்கை பார்க்குது...

அவரை முதலில் உள்ள தள்ளணும்

இது தான் இந்தியாவின் சட்டத்தின் பெறுமதி

இதுக்குள்ள வல்லரசாகும் கனவு வேறு.......

அந்தப் பெண் அடிக்கும் போது.... காவல் துறையினன் வேடிக்கை பார்பதைப் பார்க்க, பத்திக் கொண்டு வருகுது.
பையன்... ஏதோ... செய்யக் கூடாததையா... செய்திட்டான்.
அவன், கூனிக்  குறுகி.... நிற்பதைப் பார்க்க, கவலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.