Jump to content

ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

இலங்கையணி அறிவிப்பு

 

INSLDRO.jpg

 

இடதுகை சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரர்களான மிலிந்த சிறிவர்த்தன, சச்சித் பத்திரன ஆகியோர் முதற்தடவையாக பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடருக்கான அணிக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ரங்கன ஹேரத், தரிந்து கௌஷால், தம்மிக பிரசாத், நுவான் குலசேகர, ஜீவன் மென்டிஸ், டுஷ்மந்த சமீர, டிமுத் கருணாரட்ன ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு இறுதியாக ஒருநாள் போட்டியில் விளையாடிய நுவான் பிரதீப்புடன், லசித் மலிங்க, சுரங்க லக்மால், சகலதுறைவீரர் திசார பெரேரா ஆகியோர் வேகப்பந்துவீச்சை கவனிக்கவுள்ளனர். சுழற்பந்துவீச்சை மேற்படி இரு சகலதுறைவீரர்கள் உட்பட சீக்குக பிரசன்னாவும், சசித்திர சேனநாயக்காவும் கவனிக்கவுள்ளனர்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் ஏ அணியுடன் சிறப்பாக செயற்பட்ட குஷால் பெரேராவுடன், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், லகிரு திரிமானே, அஷான் பிரியஞ்சன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

பாகிஸ்தானுடனான இந்த ஒருநாள் தொடரே இலங்கையணியின் ஜாம்பவான்களான சங்கக்காரா, ஜெயவர்த்தன ஓய்வு பெற்ற பின் பங்கேற்கும் முதலாவது தொடராகும். தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஜூலை 11ஆம் திகதி தம்புள்ள மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அணிக்குழாம் : அஞ்சலோ மத்தியுஸ் (அணித்தலைவர்), திலகரட்ன டில்ஷான், குஷால் பெரேரா, உபுல் தரங்க, லகிரு திரிமானே, தினேஷ் சந்திமால், மிலின்ட சிறிவர்த்தன, அஷான் பிரியஞ்சன், நுவான் பிரதீப், திசார பெரேரா, சுரங்க லக்மால், லசித்மலிங்க, சசித்திர சேனநாயக்கா, சீக்குக பிரசன்னா, சசித்திர பத்திரன

http://tamil.wisdensrilanka.lk/article/1771

Link to comment
Share on other sites

  • Sat Jul 11 (50 ovs) 10:00 local (04:30 GMT | 06:30 CEST)
    1st ODI - Sri Lanka v Pakistan (Reserve Day) Rangiri Dambulla International Stadium LIVE
    N/A
  •  
  • Wed Jul 15 (50 ovs) 14:30 local (09:00 GMT | 11:00 CEST)
    2nd ODI - Sri Lanka v Pakistan (Reserve Day) Pallekele International Cricket Stadium LIVE D/N
    N/A
  •  
  • Sun Jul 19 (50 ovs) 14:30 local (09:00 GMT | 11:00 CEST)
    3rd ODI - Sri Lanka v Pakistan (Reserve Day) R Premadasa Stadium, Colombo LIVE D/N
    N/A
  •  
  • Wed Jul 22 (50 ovs) 14:30 local (09:00 GMT | 11:00 CEST)
    4th ODI - Sri Lanka v Pakistan (Reserve Day) R Premadasa Stadium, Colombo LIVE D/N
    N/A
  •  
  • Sun Jul 26 (50 ovs) 14:30 local (09:00 GMT | 11:00 CEST)
    5th ODI - Sri Lanka v Pakistan (Reserve Day) Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota LIVE D/N
    N/A
  •  
  • Thu Jul 30 (20 ovs) 19:00 local (13:30 GMT | 15:30 CEST)
    1st T20I - Sri Lanka v Pakistan R Premadasa Stadium, Colombo LIVE D/N
    N/A
  •  
  • Sat Aug 1 (20 ovs) 19:00 local (13:30 GMT | 15:30 CEST)
    2nd T20I - Sri Lanka v Pakistan R Premadasa Stadium, Colombo LIVE D/N

 

Link to comment
Share on other sites

சிரேஷ்ட வீரர்களற்ற பாகிஸ்தானும் இலங்கையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன
 

1104966.jpgமுதிய அல்­லது அதி சிரேஷ்ட வீரர்கள் இல்­லாத அணி­க­ளாக பாகிஸ்­தானும் இலங்­கையும் புதிய வீரர்­களை உரு­வாக்கும், மறு­ரூ­ப­மாகும் முயற்­சி­யுடன் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நாளை முதல் விளை­யா­ட­வுள்­ளன.

 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுடன் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து பாகிஸ்­தானின் மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், சஹீத் அவ்­றிடி ஆகி­யோரும் இலங்­கையின் மஹேல ஜய­வர்­தன, குமார் சங்­கக்­கார ஆகி­யோரும் ஓய்வு பெற்­றதை அடுத்து இரண்டு நாடு­களும் சந்­திக்கும் முத­லா­வது சர்­வ­தேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இது­வாகும்.

 

உலகக் கிண்ணப் போட்­டி­களின் பின்னர் சிரேஷ்ட வீரர்­க­ளில்­லாமல் பங்­க­ளா­தேஷில் தனது முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் (3 போட்­டிகள்) தொடரில் விளை­யா­டிய பாகிஸ்தான், அங்கு முற்­றிலும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக வெள்­ளை­ய­டிப்பு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

 

அஸ்ஹர் அலி தலை­மை­யி­லான அதே அணி இப்­போது ஏஞ்­சலோ மெத்யூஸ் தலை­மை­யி­லான இலங்கை அணியை 5 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சந்­திக்­கின்­றது.

 

இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்­புளை ரங்­கிரி விளை­யாட்­ட­ரங்கில் நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

 

மஹேல, குமார் இல்­லாத நிலையில் இலங்கை அணியில் இடம்­பெறும் வீரர்கள் நிறைய கற்­றுக்­கொள்­ள­வேண்­டி­யி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்ட ஏஞ்­சலோ மெத்யூஸ், டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்­வியை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நிவர்த்தி செய்ய முயற்­சிப்­ப­தாகக் கூறினார்.

 

இந்தத் தொடரில் திலக்­க­ரட்ன டில்­ஷா­னுடன் இலங்­கையின் ஆரம்பத் துடுப்­பாட்ட ஜோடி­யாக யார் விளை­யா­டுவார் என்ற கேள்வி நிலவி வரு­கி­ன்றது.

 

லஹிரு திரி­மான்ன, உப்புல் தரங்க அல்­லது குசல் ஜனித் பெரேரா ஆகி­யோரில் ஒருவர் அந்த ஸ்தானத்தில் விளை­யா­டக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

1104967.jpgஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் ஆரம்ப துடுப்­பாட்­டக்­கா­ர­ராக லஹிரு திரி­மான்ன திற­மையை வெளிப்­ப­டுத்­திய போதிலும் நடந்து முடிந்த பாகிஸ்­தா­னு­ட­னான தொடரில் முன்­வ­ரிசை துடுப்­பாட்­டக்­கா­ர­ராக அவரால் பிர­கா­சிக்க முடி­யாமல் போனது. இந் நிலையில் அவர் ஆரம்பத் துடுப்­பாட்­டக்­கா­ர­ராக களம் இறக்­கப்­ப­டு­வது சந்­தே­கமே.

 

 

அத்­துடன், அண்­மையில் நிறை­வு­பெற்ற பாகிஸ்தான் ஏ அணிக்­கான இரு­வகை கிரிக்கெட் தொடர்­களில் துடுப்­பாட்­டத்தில் அப­ரி­மி­த­மாக பிர­கா­சித்த குசல் ஜனித் பெரே­ராவும் அணி யில் இடம்­பெ­றுவார் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

இவர் ஆரம்­பத் ­து­டுப்­பாட்­டக்­கா­ர­ராக விளை­யா­டினால் உப்புல் தரங்க மூன்றாம் இலக்­கத்­தி லும் தொடர்ந்து லஹிரு திரி­மான்ன, அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், தினேஷ் சந்­திமால், திசர பெரேரா ஆகியோர் துடுப்­பாட்­டத்தை வலுப் ­ப­டுத்­துவர்.

 

சுழல்­பந்­து­வீச்சில் சகல துறை வீரர் மிலிந்த சிறி­வர்­தன, சச்­சித்ர சேனா­நா­யக்க, சீக்­குகே பிர­சன்ன, ஆஷான் பிரி­யஞ்சன் ஆகி­யோ­ருக்கு இடையில் இரண்டு அல்­லது மூன்று இடங்­க­ளுக்கு போட்டி நில­வு­வ­தற்­கான வாய்ப்பு இருக்­கின்­றது.

 

சுழல்­பந்­து­வீச்சில் இருவர் ஈடு­ப­டுத்­தப்­பட்டால் வேகப்­பந்­து­வீச்சில் லசித் மாலிங்­க­வுடன் சுரங்க லக்மால் அல்லது நுவன் ப்ரதீப் இணைவார்.

 

குழாமில் மற் றொரு சுழல்­பந்து­ வீச்சாள­ரான சச்சித் பத்­தி­ர­னவும் இடம்பெறுகின்றார். இவ ருக்கு இறுதி அணியில் இடம் கிடைப்பது இன்னும் உறுதியில்லை.

பாகிஸ்தான் 

குழாம் விபரம்:
அஸ்ஹர் அலி (அணித் தலைவர்), சர்ஃப்ராஸ் அஹ்மத் (உதவி அணித் தலைவர்), அஹ்மத் ஷேஹ்ஸாத், அன்வர் அலி, அசாத் ஷவிக், பாபார் அஸாம், பிலால் அசிவ், ஈஷான் ஆதில், இமாத் வசிம், மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்வான், மொஹமத் ரிஸ்வான், முக்தார் அஹ்மத், ரஹாத் அலி, ஷொயெப் மாலிக், யசிர் ஷா.

 

 

11049Sri-Lanka---Pakistan-odi-cricket-in

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11049#sthash.pyyJfG7Q.dpuf

 
Link to comment
Share on other sites

மொகமது ஹபீஸின் ஆல் ரவுண்ட் திறமை: இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

 
  • இலங்கைக்கு எதிராக தம்புல்லாவில் சதம் கண்டு வெற்றிக்கு வித்திட்ட மொகமது ஹபீஸ் சதமடித்த பிறகு... | படம்: ஏ.எப்.பி.
    இலங்கைக்கு எதிராக தம்புல்லாவில் சதம் கண்டு வெற்றிக்கு வித்திட்ட மொகமது ஹபீஸ் சதமடித்த பிறகு... | படம்: ஏ.எப்.பி.
  • பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹபீஸ். | படம்: ஏ.எப்.பி.
    பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹபீஸ். | படம்: ஏ.எப்.பி.

தம்புல்லாவில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை, பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான் தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்ற முனைப்புடன் ஆடி வருகிறது.

டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி. இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஹபீஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 45.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஹபீஸ் 95 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 103 ரன்களை விளாசினார். ஷோயப் மாலிக் வின்னிங் ஷாட்டை தில்ஷனின் பந்தை சிக்சருக்கு அடித்து முடித்தார். அவர் 45 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

குசல் பெரேரா-தில்ஷான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தது. பெரேரா 26, பின்னர் வந்த திரிமானி 23, தரங்கா 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஒன்றும் சரியாக மாட்டாத தில்ஷான் 65 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது 26.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான். தில்ஷன் அடித்த ஆஃப் சைடு ஷாட்கள் லெக் திசையில் மிட்விக்கெட்டுக்குச் சென்றன. தில்ஷன் ஆடிய மிக மோசமான இன்னிங்ஸ் இது என்று வர்ணிக்கலாம். 9 பந்துகளில் 3, பிறகு 35 பந்துகளில் 19, பிறகு 58 பந்துகளில் 35, கடைசியில் 65 பந்துகளில் 38 ரன்களில் அவுட்.

5-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் மேத்யூஸ்-தினேஷ் சன்டிமால் ஜோடி 82 ரன்கள் சேர்த்து இலங்கையை சரிவிலிருந்து மீட்டது. மேத்யூஸ் 38 ரன்களில் (54 பந்துகள்) ஆட்டமிழக்க, பின்னர் வந்த திசாரா பெரேரா 1 ரன்னில் வெளியேற, ஸ்ரீவர்த்தனா களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சன்டிமால் 56 பந்துகளில் அரைசதம் கண்டார். ஸ்ரீவர்த்தனா 22 ரன்களில் வெளியேற, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது இலங்கை.

பாகிஸ்தான் தரப்பில் ஹபீஸ் 10 ஓவர்களில் 41 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஹபீஸ் சதம்

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் அசார் அலி 21, அஹமது ஷெஸாத் 29 ரன்களில் வெளியேற, ஹபீஸுடன் இணைந்தார் பாபர் ஆஸம். இந்த ஜோடி 58 ரன்கள் சேர்த்தது. பாபர் 25 ரன்களில் வெளியேற, ஷோயிப் மாலிக் களம்புகுந்தார். இதனிடையே ஹபீஸ் சிக்ஸர் அடித்து 58 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

இதன்பிறகு சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விரட்டிய ஹபீஸ், பெரேரா பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 93 பந்துகளில் சதத்தை எட்டினார். இது அவருடைய 10-வது சதமாகும். அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து முகமது ரிஸ்வான் களமிறங்க, மாலிக் அதிரடியில் இறங்கினார்.

தில்ஷான் வீசிய 46-வது ஓவரின் 2-வது பந்தில் மாலிக் சிக்ஸரை விளாச, 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது பாகிஸ்தான். மாலிக் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55, ரிஸ்வான் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹபீஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது பாகிஸ்தான்.

http://tamil.thehindu.com/sports/மொகமது-ஹபீஸின்-ஆல்-ரவுண்ட்-திறமை-இலங்கையை-வீழ்த்தியது-பாகிஸ்தான்/article7411507.ece

Link to comment
Share on other sites

17 பந்தில் அரை சதமடித்து இலங்கை வீரர் குஷால் பெரைரா சாதனை!

gush.jpgலங்கை அணியின் தொடக்க வீரர் குஷால் பெரைரா 17 பந்தில் அரை சதமடித்து சாதனை படைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக அடிக்கப்பட்ட இரண்டாவது அரை சதம் இது.

பாலேகால் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 287 ரன்கள் எடுத்தது.  அடுத்து இலங்கை அணி பேட் செய்யத் தொடங்கியது. இதில் குஷால் பெரைரா பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 17 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இந்த 17 பந்துகளில் 3 பந்துகளை மட்டுமே பெரைரா வீணடித்தார். ஒரே ஒரு ரன்தான் பெரைரா ஓடியும் எடுத்தார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக அடிக்கப்பட்ட 2வது அரை சதம் ஆகும். இறுதியில் 25 பந்துகளில்  68 ரன்களில் பெரைரா அவுட் ஆனார். இதற்கு முன்  தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 16 பந்துகளில் அரை சதமடித்ததுள்ளார். சனத் ஜெயசூர்யா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளனர்.

இந்த போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

 

http://www.vikatan.com/news/article.php?aid=49543

Link to comment
Share on other sites

குசல் ஜனித் பெரேரா அதிரடி; பாகிஸ்தானுக்கு பதிலடி!

 
 

குசல் ஜனித் பெரே­ராவின் அதி­ரடி ஆட்டம் கைகொ­டுக்க, தில்­ஷானின் நிதான ஆட்டம் அதற்கு துணை நிற்க இலங்கை 2 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்­டா­வது போட்­டியில் வெற்­றி­பெற்று அசத்­தி­யது.217801.jpg

பாகிஸ்தான் அணி வெற்றி இலக்­காக நிர்­ண­யித்த 288 ஓட்­டங்­களை இலங்கை அணி 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 48.1 ஓவர்­களில் அடைந்து வெற்­றி­பெற்று, பாகிஸ்­தா­னுக்கு பதி­லடி கொடுத்­தது.

கண்டி பல்­லே­க­லையில் நேற்று நடை­பெற்ற இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பாகிஸ்தான் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 287 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

Kus5017 (link is external) by r56149841 (link is external)

http://www.dailymotion.com/video/x2y58vy_kus5017_sport

பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக அசார் அலி மற்றும் அஹமட் ஷேசாட் ஆகியோர் கள­மி­றங்­கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அபா­ர­மாகத் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை இந்த ஜோடி உயர்­த்­தி­யது. அஹமட் ஷோசட் 30 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த வேளையில் பத்­தி­ர­னவின் பந்­து­வீச்சில் போல்ட் முறையில் ஆட்­ட­மி­ழந்து வெளி­யே­றினார்.

அதன்­பி­றகு 2ஆவது விக்­கெட்­டிற்­காக மொஹமட் ஹபீஸ் கள­மி­றங்­கினார். இவர் 9 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று பெவி­லியன் திரும்­பினார். அடுத்­த­டுத்து வீரர்கள் ஆட்­ட­மி­ழந்த போதிலும், ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராகக் கள­மி­றங்­கிய அசார் அலி நிதா­ன­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி 79 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த வேளையில் தில­க­ரத்ன தில்­ஷானின் பந்­து­வீச்சில் சிறி­வர்­த­ன­விடம் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழந்தார். இறு­தியில் பாகிஸ்தான் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 287 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

288 என்ற வெற்றி இலக்கை நோக்கிக் கள­மி­றங்­கிய இலங்கை அணியின் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர்­க­ளான தில்ஷான் மற்றும் குசல் பெரேரா ஆகியோர் அபா­ர­மாகச் செயற்­பட்­டனர். அதி­ரடி ஓட்ட சேர்க்­கையில் ஈடு­பட்ட குசல் 18 பந்­து­களில் அரைச்­சதம் பெற்றார். ஒரு கட்­டத்தில் இலங்கை அணி 7 ஓவர்­களில் 85 ஓட்­டங்கள் வரை பெற்­றி­ருந்­தது. 25 பந்­து­களில் 68 ஓட்­டங்­களைப் பெற்றார் குசல். தில்ஷான் 48 ஓட்­டங்­களைப் பெற்றார். அணித் தலைவர் மெத்­தியூஸ் மற்றும் திரி­மான்னே ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்­தனர்.

இறுதிவரை களத்தில் நின்ற சந்திமால் 48 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இலங்கை அணியின் இந்த வெற்றியோடு தொடர் 1–1 என்ற சமநிலையில் இருக்கிறது.

http://www.virakesari.lk/articles/2015/07/16/குசல்-ஜனித்-பெரேரா-அதிரடி-பாகிஸ்தானுக்கு-பதிலடி-0

Link to comment
Share on other sites

3 வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்து ஆடுகிறது.

Link to comment
Share on other sites

பாதுகாப்பு கருதியே போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டது - பிரகாஸ் பாஸ்டர்

 
 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தை நோக்கி கல் எறியப்பட்டதையடுத்து போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டடதாக இலங“கை கிரிக்கட் சபையின் செயலாளர் பிரகாஸ் ஷாப்டர் தெரிவித்துள்ளார்.

Sri-Lanka-cricket.jpg

இதேவேளை, வீரர்களின் பாதுகாப்பு கருதியே குறித்த போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டதாகவும் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படைகளைக் கொண்டு கட்டுப்படுத்தவேண்டிய ஒரு பதற்ற சூழ்நிலை நிலவியதாகவும் சம்பவம் குறித்து சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/articles/2015/07/20/பாதுகாப்பு-கருதியே-போட்டி-இடைநடுவே-நிறுத்தப்பட்டது-பிரகாஸ்-பாஸ்டர்

Link to comment
Share on other sites

கெத்தாராமவில் அரங்கேறிய களேபரம்; இலங்கை கிரிக்கெட் துறைக்கு களங்கத்தை கற்பித்த கைகலப்பு
 

விளை­யாட்­டுத்­து­றைக்கு மிகவும் பொருத்­த­மா­னதும் மதிக்­கத்­தக்­க­து­மான நாடு என பல்­வேறு நாடு­க­ளாலும் பிர­மு­கர்­க­ளாலும் புக­ழாராம் சூட்­டப்­பட்­டு­வந்த இலங்­கைக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான சம்­பவம் ஒன்று நேற்று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு இடம்­பெற்­றது.

 

1119411713815_10153422217657114_49196127

 

பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடையில் கெத்­தா­ராம ஆர்.பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­யின்­போது அரங்கில் பார்­வை­யா­ளர்­க­ளுக்­கான "டி" பகு­தியில் மோதல் இடம்­பெற்­றது.

 

இந்த மோதலில் ஈடு­பட்­ட­வர்கள் பொலி­ஸா­ரினால் அரங்­கி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து அரங்­கிற்கு வெளியே கடும் மோதல் இடம்­பெற்­ற­துடன் அங்கு நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னங்­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­பட்­டன.

 

111942015-07-19t184131z_1800641416_gf100

 

போதாக்­கு­றைக்கு அரங்­கிற்கு வெளியே மோதலில் ஈடு­பட்­ட­வர்கள் கையில் அகப்­பட்ட பொருட்­களைக் கொண்டு அரங்கை நோக்கி எறிந்­தனர்.

 

அரங்கின் தென்­கி­ழக்குப் பகு­தியில் எண்­ணிக்கை பல­கைக்கு அருகில் களத்­த­டுப்பில் ஈடு­பட்­டி­ருந்த யசீர் ஷா வுக்கு அருகில் ஒரு கல் ஒன்று வீழ்ந்­ததை அடுத்து அவர் தனது அணித் தலை­வ­ரிடம் முறை­யிட்டார்.

 

அதை­ய­டுத்து பாகிஸ்தான் வீரர்கள் அனை­வரும் ஆடு­க­ளத்­திற்கு அருகில் அழைக்­கப்­பட்­டனர். அதேநேரம் ஊட­க­வி­ய­லாளர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட பகுதிக்­குள்ளும் ஒரு கல் வந்து வீழ்ந்­தது.

 

11194car1.jpgஇந்த சம்­ப­வத்­தினால் இரவு 9.30 மணி அளவில் ஆட்டம் தடைப்­பட்­டது. அந்த சந்­தர்ப்­பத்தில் 317 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிக்­கொண்­டி­ருந்த இலங்கை 33.3 ஓவர்­களில் 7 விக்கெட்­களை இழந்து 158 ஓட்டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

வீரர்கள் அனை­வரும் ஆடு­க­ளத்­திற்கு அருகே அமர்ந்­தி­ருக்­கையில் போட்டி பொது மத்­தி­யஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத், வீரர்­களின் பாது­காப்பைக் கருத்தில் கொண்டு அவர்­களை தங்­கு­ம­றைக்கு அழைத்துச் சென்றார்.

 

இந்த நிலையில் அவ­ச­ர­மாக அழைக்கப்­பட்ட விசேட அதி­ரடிப் படை­யினர் அரங்­கிலும் அரங்­கிற்கு வெளி­யிலும் பாது­காப்பை உறுதி செய்­ததை அடுத்து 32 நிமிட நேர தடையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்­தது.

 

இந்த மோத­லுக்கும் கிரிக்கெட் போட்­டிக்கும் எவ்­வித சம் ­பந்­தமும் இல்­லாத போதிலும் இலங்கை கிரிக்கெட் வர­லாற் றில் அரங்­கிலோ அரங்­கிற்கு வெளியிலோ இவ்­வா­றான ஒரு சம்­பவம் இடம்­பெற்­றது இதுவே முதல் தடவை­யாகும்.

 

111943903614.jpg

 

இந்த சம்­ப­வத்தை அடுத்து  நால்வர் சந்­தே­கத்­தின்­பேரில் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டனர்.

 

இதே­வேளை, இந்த அமை­தி­யின்­மைக்கு இலங்கை கிரிக் கெட் அதி­கா­ரி­க­ளையோ இர­சி­கர்­க­ளையோ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்­களும் இர­சி­கர்­களும் குறை கூற­வில்லை.

 

ஒரு சிறு கும்­பலே இந்த அசம்­பா­வித்­திற்கு காரணம் என வும் இலங்கை ரசிகர்­க­ளுக்கு தாம் ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும்  பாகிஸ்தான் வீரர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

 

'தனிப்­பட்ட சிலர் செய்த தவ­றுக்­காக எல்­லோ­ரையும் குறை­காண முடி­யாது. எமது ஆத­ரவு இலங்­கைக்கும் இர­சி­கர்­க­ளுக்கும் எப்­போதும் இருக்­கின்­றது' என பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தனது ட்விட்டர் பதிவில் குறிப்­பிட்­டுள்ளார்.

 

இதே­போன்ற வார்த்­தை­களை தனது ட்விட்­டரில் முன் னாள் கிரிக்கெட் வீரரும் வர்­ண­னை­யா­ள­ரு­மான ஷொயெப் அக்தார் எழு­தி­யுள்ளார்.

 

எவ்­வா­றா­யினும் இலங்கை அணியின் முன்னாள் தலை வர் மஹேல ஜயவர்­த­னவின் கருத்து வேறு வித­மாக இருந்­தது.

 

'போட்டி முடி­வு­களை சிறந்த மனப்­பாங்­குடன் ஏற்று விளை­யாட்டை இர­சிக்­க­வேண்டும்.

 

சில இரசிகர்களினால் இழைக்கப்பட்ட இந்தத் தவறு சகல இரசிகர்களையும் பாதிக் காது என நம்புவோமாக' என மஹேல தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள நான்காவது சர்வ தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11195#sthash.eOQ2RPmL.dpuf
 

 

சகலதுறைகளிலும் பிரகாசித்த பாகிஸ்தானிடம் 135 ஓட்டங்களால் தோற்றது இலங்கை
 

 

 

111963902877.jpgபாகிஸ்தான், இலங்கை அணி­க­ளுக்கு இடையில் கெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் 135 ஓட்டங்­களால் வெற்­றி­பெற்­றது.

 

இதன் மூலம் ஐந்து போட்­டிகள் கொண்ட தொடரில் 2 –1 ஆட்டக் கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்­கின்­றது.

 

பாகிஸ்­தா­னினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட 317 ஓட்­டங்கள் என்ற மிகவும் கடி­ன­மான வெற்றி இலக்கை நோக்கிப் பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்­கையின் துடுப்­பாட்ட வீரர்கள் கவ­னக்­கு­றைவு கார­ண­மாக விக்­கெட்­களைத் தாரை­வார்த்த வண்­ண­மி­ருந்­தனர்.

 

அணியின் உதவித் தலைவர் லஹிரு திரி­மான்ன மாத்­தி­ரமே பொறுப்­பு­ணர்­வுடன் துடுப்­பெ­டுத்­தாடி அரைச் சதத்தைப் பெற்றார்.

 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த பாகிஸ்தான், சிறந்த ஆரம்பம், வேக­மான அரைச் சதங்கள் மற்றும் கடைசிக் கட்­டத்தில் வெளி­யான அதி­ரடி ஆகி­ய­வற்றின் உதவியுடன் கணி­ச­மான மொத்த ஓட்­டங்­களைப் பெற்­றது.

 

பாகிஸ்தான்  இன்­னிங்ஸில் துடு­ப் ­பெ­டுத்­தா­டிய ஆறு பேரும் 35 ஓட்­டங்­க­ளுக்கு மேல் பெற்­றமை விசேட அம்­ச­மாகும்.

 

அஹ்மத் ஷெஹ்ஸாத், அணித் தலைவர் அஸ்ஹர் அலி ஆகிய இரு­வரும் ஆரம்ப விக்­கெட்டில் 16.3 ஓவர்­களில் 93 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தனர். 

 

இவர்கள் இரு­வரும் 7 ஓவர்கள் இடை­வெ­ளியில் ஆட்­ட­மி­ழந்த பின்னர் மொஹமத் ஹவீஸும் சர்வ்ராஸ் அஹ்­மத்தும் அரைச் சதங்­களைக் குவித்­த­துடன் 3ஆவது விக்­கெட்டில் 72 ஓட்­டங்­களைப் பகிர்ந்து பாகிஸ்­தானின் மொத்த எண்­ணிக்­கைக்கு உர­மூட்­டினர். 

 

இவர்­களைத் தொடர்ந்து அஹ்­மத்­துடன் ஜோடி சேர்ந்த ஷொயெப் மாலிக் நான்­கா­வது விக்­கெட்டில் 61 ஓட்­டங்­க­ளையும் வீழ்த்­தப்­ப­டாத ஐந்­தா­வது விக்­கெட்டில் மொஹமத் ரிஸ்­வா­னுடன் 59 ஓட்டங்­க­ளையும் பகிர்ந்தார்.

 

இலங்கை பந்­து­வீச்­சா­ளர்­களில் சச்சித் பத்­தி­ரன மாத்­தி­ரமே திற­மை­யாக பந்­து­வீ­சினார்.

 

எண்­ணிக்கை சுருக்கம்: 

 

பாகிஸ்தான் 50 ஓவர்­களில் 316 க்கு 4 விக். (சார்வ்ராஸ் அஹ்மத் 77, மொஹமத் ஹஃபீஸ் 54, அஸ்ஹர் அலி 49, அஹ்மத் ஷெஹ்ஸாத் 44, ஷொயெப் மாலிக் 42 ஆ.இ., மொஹ்மத் ரிஸ்வான் 35 ஆ.இ., சச்தித் பத்­தி­ரன 49 – 1 விக்.)

 

இலங்கை 41.1 ஓவர்­களில் 181 (லஹிரு திரிமான்ன 56, குசல் ஜனித் பெரேரா 20, யசிர் ஷா 29 –4 விக்., அன்வர் அலி 24 – 2 விக்., இமாத் வசிம் 28 – 2 விக்.)

 

ஆட்டநாயகன்: சர்வ்ராஸ் அஹ்மத்

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11196#sthash.9WGKzYCZ.dpuf
Link to comment
Share on other sites

களநிலைவரத்தைப் பார்த்தே எமது வியூகங்கள் அமையும் : அஞ்சலோ மெத்தியூஸ்

 
 

பாகிஸ்தான் அணி­யுடன் இன்று நடை­பெ­ற­வுள்ள போட்­டியில் எமது பந்­து­வீச்சு முறையில் ஒரு சில மாற்­றங்கள் ஏற்­ப­டலாம் என்றும் இன்­றைய கள­நி­லை­வ­ரத்தை பார்த்து அணி
யில் ஏதும் மாற்­றங்கள் ஏற்­ப­டலாம் என்றும் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் தெரி­வித்தார்.

Angelo-Mathews_7.jpg
பாகிஸ்தான் -– இலங்கை அணி­க­ளுக்­கி­டையில் நடந்­து­வரும் 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்­டியில் இலங்கை அணியும் இரண்டு போட்­டி­களில் பாகிஸ்தான் அணியும் வெற்­றி­பெற்­றுள்­ளன.

இந்­நி­லையில் இலங்­கைக்கு தீர்க்­க­மான நான்­கா­வது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தப் போட்­டி­கு­றித்து ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்தித்து கருத்து தெரி­வித்த அஞ்­சலோ மெத்­தியூஸ், கடந்த­ போட்­டியில் எமது செயற்­பா­டுகள் மோச­மா­கத்தான் இருந்­தது. அதை நிவர்த்­தி­செய்­து­கொண்டு இந்தப் போட்­டியில் கள­மி­றங்­க­வி­ருக்­கிறோம்.

அணியில் ஏதும் மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா என்று கேட்­ட­தற்கு, இது ­வ­ரையில் எந்த மாற்றமும் செய்­யப்­ப­ட­வில்லை. இன்­று­காலை மைதா­னத்தின் கள­நி­லை­வ­ரத்தை பார்த்து ஏதேனும் மாற்­றங்கள் செய்­யப்­ப­டலாம்.

எமது பந்­து­வீச்­சா­ளர்கள் இன்னும் திறம்­பட செயற்­ப­ட­வேண்டும். எமக்கு சுழற்­பந்து வீச்­சா­ளர்­களின் தட்­டுப்­பாடு இருக்­கி­றது. அதையும் நிவர்த்தி செய்­து­­கொண்­டுதான் நாம் போட்­டியை முன்­ந­கர்த்த செல்கிறோம்.

எமக்கு விளையாட்டுதான் முக்கியம். முடிவுகள் குறித்து கவலையில்லை. ஆனால் சிறப்பாக விளையாடி னால் வெற்றி தேடி வரும் என்றார்.இன்­றையப் போட்­டி­யோடு சேர்த்து மீத­மி­ருக்கும் இரண்டு போட்­டி­க­ளிலும் இலங்கை வெற்­றி­பெறவேண்­டி­யது கட்டாயமாகும்.

http://www.virakesari.lk/articles/2015/07/22/களநிலைவரத்தைப்-பார்த்தே-எமது-வியூகங்கள்-அமையும்-அஞ்சலோ-மெத்தியூஸ்

Link to comment
Share on other sites

பாக். கிற்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டி : இலங்கை துடுப்பெடுத்தாடுகிறது

 
 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

218401.3.jpg

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் 3ஆவது போட்டி கொழும்பில் நடைபெற்றது.

இதில் ரசிகர்களின் கலவரம் ஒரு பக்கம் இருந்தாலும் பாகிஸ்தான் அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான்–இலங்கை இடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று இடம்பெற்று வருகிறது.

இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். இதற்காக அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி முனைப்புடன் செயல்படும்.

அதே சமயம் மெத்யூஸ் தலைமையிலான இலங்கை அணிகடந்த போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி கொடுக்க கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு காணப்படும்.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.

அதன் படி களமிறங்கயி இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை அணியின் முதல் விக்கெட் ஓட்டமெதனையும் பெறாது பறிக்கப்பட்டது. குஷல் பெரேரா ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இலங்கை அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 72 ஓட்டங்களை பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/articles/2015/07/22/பாக்-கிற்கு-எதிரான-4-ஆவது-ஒருநாள்-போட்டி-இலங்கை-துடுப்பெடுத்தாடுகிறது

Link to comment
Share on other sites

தொடரை வென்றது பாக்.,: இலங்கை மீண்டும் தோல்வி

Sri Lanka, Pakistan, One Day International Cricket

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில்  பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டியின் முடிவில் பாகிஸ்தான் 2–1 என, முன்னிலையில் இருந்தது. 

இரு அணிகள் மோதிய 4வது போட்டி கொழும்புவில் நடந்தது. ‘டாஸ்’ வென்று களமிறங்கிய இலங்கை அணிக்கு தில்ஷன் (50), திரிமான்னே (90) தவிர மற்றவர்கள் கைகொடுக்கவில்லை. இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 256 ரன்கள் மட்டும் எடுத்தது. 

எளிய இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி (33) ஏமாற்றினார். பின் இணைந்த அகமது ஷேசாத் (95), ஹபீஸ் (70) ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 

பாகிஸ்தான் அணி 40.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாகிஸ்தான் அணி 3–1 என, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் 5வது போட்டி 26ம் தேதி அம்பாந்தோட்டையில் நடக்கிறது.

http://sports.dinamalar.com/2015/07/1437585058/SriLankaPakistanOneDayInternationalCricket.html

 

Link to comment
Share on other sites

இலங்கை அணி சகல துறைகளிலும் பிரகாசிக்காதமை ஏமாற்றமளிக்கிறது: பயிற்றுநர் மார்வன் அத்தபத்து கூறுகின்றார்
2015-07-24 10:38:59

(நெவில் அன்தனி)

 

11257Marvan+Atapattu+Essex+v+Sri+Lanka+eபாகிஸ்தானுடனான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிட்ட  இலங்கை தோல்வி அடைந்த விதமானது பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அணியின் தலைமைப் பயிற்றுநர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்தார்.

 

நான்காவது போட்டி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் பிரகாசிக்கத் தவறியமையே இலங்கையின் தோல்விக்கு காரணம் எனவும் பாகிஸ்தான் அத்துறைகளில் அதீத திறமையை வெளிப்பத்தியதாகவும் கூறினார்.

 

எமது அடுத்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. தெரிவாளர்கள் அந்தத் தொடருக்கான அணியை மிகச்சரியாக தெரிவுசெய்வார்கள்.

 

அணித் தெரிவுகள் யாவும் தெரிவாளர்களினாலேயே நடத்தப்படும். எனவே அதில் தலையிடும் உரிமை எனக்கு இல்லை|| என மார்வன் அத்தப்பத்து தெரிவித்தார்.

 

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இலங்கை அடைந்த தோல்விக்கு காரணம் என்ன? என வினவியபோது,

 

நாங்கள் எதிர்பார்த்த அளவு மூன்று துறைகளிலும் எமது வீரர்களால் திறமையை வெளிப்படுத்தவில்லை. துடு;பபாட்டம் பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கின்றது.

 

எமது முதல் நான்கு துடுப்பாட்டக்காரர்களும் போதிய திறமையை வெளிப்படுத்த வில்லை.

 

லஹிரு திரிமான்ன, திலக்கரட்ன டில்ஷான் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்தபோதிலும் அவர்களிடம் இருந்த இதனைவிட திறமையை எதிர்பார்க்கின்றோம்.

 

டில்ஷான் 2 அரைச் சதங்கள் பெற்ற போதிலும் அவரிடம் இருந்து சதம் ஒன்றை எதிர்பார்க்கின்றோம்  என மார்வன் அத்தபத்து பதிலளித்தார்.

 

மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார போன்ற அனுபவசாலிகள் இல்லாத நிலையில் இளையவர்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் அணியின் திட்டங்கள் எதுவும் பலன்தராதமை தொடர்பில் ஏதோ சிக்கல் இருப்பதாக சுட்டிக்காட்டிய மார்வன், துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் இலங்கை அணி முன்னேற்றம் அடைவது அவசியம் என்றார்.

 

ஏஞ்சலோ மெத்யூஸின் தலைமைத்துவம் குறித்து விமர்சிக்கப்படுவது குறித்து கருத்து வெளியிட்ட  அத்தப்பத்து, அனுபவம் வாய்ந்த ஒரு தலைவராக ஏஞ்சலோ முன்னேறிவருகின்றார்.

 

மற்றையவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, உற்சாகமூட்டும் ஓர் அணித் தலைவராக வருவதற்கான ஆற்றல்கள் அவரிடம் இருக்கின்றன.

 

விரைவில் அவர் சிறந்த தலைவராக உயர்வார் என தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11257#sthash.9JnDOhq4.dpuf
Link to comment
Share on other sites

5ஆவது போட்டி இன்று; மலிங்க விளையாடமாட்டார்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5ஆவதும் இறு­தி­யு­மான சர்­வ­தேச ஒரு நாள் போட்டி ஹம்­பாந்­தோட்டை சூரி­ய­வெவ கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

soprt-news.jpg
சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் இரண்­டையும் பறி­கொ­டுத்­துள்ள நிலையில், இன்­றைய போட்­டியில் கள­மி­றங்கும் இலங்கை அணி இப்போட்­டியில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3 க்கு 2 என்ற கணக்கில் நிறைவு செய்ய கடு­மை­யாக முயற்­சிக்கும்.

கடந்த நான்கு போட்­டி­க­ளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருப்பினும், இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்­பா­டுகள் திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை.

துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு மற்றும் களத்­த­டுப்பு ஆகிய சகல துறை­க­ளிலும் இலங்கை அணி மெத்­த­னப்­போக்­கு­ட­னேயே விளை­யா­டி­யி­ருந்­தது.
இலங்கை அணியின் மத்­திய வரிசை மேலும் பல­மிக்­க­தாக அமை­ய­வேண்டும். பாரி­ய­ள­வி­லான இணைப்­பாட்­டங்­களை மேற்­கொள்ள வேண்டும்.

சொந்த மண்ணில் விளை­யா­டு­வதால் இலங்கை அணி இத்­தொ­டரை இல­கு­வாக கைப்­பற்­றி­விடும் என எண்­ணிய இலங்கை கிரிக்கெட் ரசி­கர்­க­ளுக்கு இறு­தியில் ஏமாற்­றமே கிடைத்­தது.

அனு­பவ பந்­து­வீச்­சா­ள­ரான லசித் மலிங்க மீண்டும் தனது பழைய ஆற்றல் திற­னுக்கு வர­வேண்­டிய கட்­டா­யத்தில் உள்­ளது. எனினும், அவர் இன்­றைய போட்­டியில் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்பது சந்தேகமாகவுள்ளது.

பாகிஸ்தான் அணி­யு­ட­னான 2 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் அவரின் பங்­க­ளிப்பு முக்­கியம் என்­பதால் அவ­ருக்கு ஓய்­வ­ளிக்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, அஸார் அலி தலை­மை­யி­லான இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி­யி னர் மிகவும் சிறப்­பாக விளை­யாடி இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்­தி­யுள்­ளனர்.

4 போட்டிகளின் நிறைவிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளமையால், இன்றைய போட்டியை உற்சாகத்துடனும் துணிச்சலுடனும் எதிர்க்கொள்ளக் காத்துள்ளது.

http://www.virakesari.lk/articles/2015/07/26/5ஆவது-போட்டி-இன்று-மலிங்க-விளையாடமாட்டார்

Link to comment
Share on other sites

5 வது ஒரு நாள் போட்டியில் ஸ்ரீலங்கா அணி முதலில் துடுப்பெடுத்து ஆடுகிறது.

44/0 ஓட்டங்கள் 8 ஓவர்கள் முடிவில்

Link to comment
Share on other sites

இலங்கை ஆறுதல் வெற்றி

Kusal Perera

அம்பாந்தோட்டை: பாகிஸ்தானுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. 

இலங்கை சென்ற பாகிஸ்தான் அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. கடைசி மற்றும் 5வது போட்டி அம்பாந்தோட்டையில் நேற்று நடந்தது. 

தில்ஷன் ‘10,000’:

முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணிக்கு குசல் பெரேரா (116) சதம் விளாசினார். அரைசதம் கடந்த தில்ஷன் (62), ஒரு நாள் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார். இந்த இலக்கை எட்டிய 4வது இலங்கை வீரரானார். ஒட்டுமொத்தமாக 11வது வீரரானார். கேப்டன் மாத்யூஸ் (70*), ஸ்ரீவர்தனா (52*) அதிரடி காட்ட, இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்தது. 

கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் அசார் அலி (35), ஹபீஸ் (37) மட்டும் ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் சொதப்ப, பாகிஸ்தான் அணி 37.2 ஓவரில் 203 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி தோல்வியடைந்தது.  

இருப்பினும் முந்தைய போட்டிகளில் வென்றதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணி தொடரை 3–2 என கைப்பற்றி கோப்பை வென்றது.

http://sports.dinamalar.com/2015/07/1437931622/KusalPerera.html

Link to comment
Share on other sites

'பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு தொடர் தோல்விகளை இருபது 20இல் நிவர்த்திக்க இலங்கை முயற்சிக்கும்'
2015-07-30 10:05:27

(நெவில் அன்­தனி)

 

11341_3921932.png"டெஸ்ட் தொடர், சர்­வ­தேச ஒருநாள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் மாறு­பட்­டது. எனவே பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்றி­பெற முயற்­சிப்போம் என இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க தெரி­வித்தார்.

 

கெத்­தா­ராம, ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிக்­கான அணியின் தயார் நிலை குறித்து நேற்­றைய தினம் செய்­தி­யா­ ளர்கள் மத்­திய பேசிய லசித் மாலி ங்க இதனைக் குறிப்­பிட்டார்.

 

இரண்டு தொடர்­க­ளிலும் பிர­கா­சித்து பாகிஸ்தான் வெற்­றி­பெற்­ற­போ­திலும் இந்தத் தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்­பாக விளையாட உள்­ளனர்.

 

எனினும் பொறுத்­தி­ருந்­து தான் பார்க்­க­வேண்டும் என அவர் கூறினார்.

 

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் திற­மை­யாகப் பந்துவீச­வில்லை என்­பதை ஓப்புக்­கொண்ட லசித் மாலிங்க, சர்வதேச இரு­ப­துக்கு 20 போட்டிகளில் திற­மையை வெளிப்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­கவும் அதற்­காக கடும் பயற்­சியில் ஈடுப்­பட்­டு­ வந்­த­தா­கவும் குறிப்பிட்டார்.

 

‘‘அடுத்த உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­வரை எமக்கு உள்ளூர் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் இல்லை. எனவே, சர்­வ­தேச போட்­டி­க­ளில்தான் எமது திற­மையைப் பரீட்­சிக்க வேண்­டி­யுள்­ளது.

 

மேலும் இளம் வீரர்கள் அணிக் குள் ஈர்க்­கப்­பட்­டி­ருப்­பது அவர்­க­ளுக்கு சிறந்த சந்­தர்ப்­பத்தை உரு­வாக்கிக் கொடுக்கும் என நம்புகின்றேன்’’ என லசித் மாலிங்க தெரி­வித்தார்.

 

113413934573.png

 

‘‘பல புதிய வீரர்கள் குழாமில் இடம்­பெ­று­வது இலங்கை அணியின் எதிர்­கா­லத்­திற்கு மிகவும் நல்­லது.

 

உலக இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டிக்கு முன்­ப­தாக எங்­க­ளுக்கு 10 அல்­லது 12 போட்­டி­களே கிடைக்­க­வுள்­ளன.

 

உலக இரு­பது 20 போட்­டிக்கு முன்­ப­தாக நம் நாட்டில் உள்ளூர் போட்­டிகள் இல்­லா­ததால் இத்­த­கைய சர்­வ­தேச போட்­டி­களைக் கொண்டு சரி­யான வீரர்­களைத் தெரிவு செய்­ய­வேண்டும்.

 

அத்­துடன் ஐந்து போட்­டிகள் நடந்து முடிந்த பின்னர் உள்ளூர் போட்டி­களில் திற­மையை வெளிப்­ப­டுத்தி இன்னும் தேசிய குழாமில் இடம்­பெ­றா­ம­லி­ருப்­ப­வர்­க­ளுக்கும் வாய்ப்­ப­ளிப்­பதா என்பது குறித்து ஆலோ­சிக்­க­வேண்டும்.

 

அவர்­க­ளது திறமை சர்­வ­தேச தரத்­திற்கு ஏற்­பு­டை­யதா என்­பதைக் கண்­ட­றி­வ­தற்கு சர்வ­தேச அரங்­கமே சரி­யான சந்­தர்ப்­ப­மாகும்.

 

உலக இரு­ப­துக்கு இரு­பது போட்­டிகள் அண்­மிக்­கும்­போது அவர்­க­ளுக்கு இன்னும் அதி­க­மான வாய்ப்­பு­களை வழங்­கு­வதை நான் விரும்­பு­கின்றேன்’’ என்றார் அவர்.

 

அத்­துடன் நெருக்­க­டி­களை சமா­ளிக்­கக்­கூ­டிய வீரர்­களை இனங்காண்­ப­துவும் அவ­சியம் எனக் குறிப்­பிட்ட லசித் மாலிங்க, எல்லா வீரர்­களும் மனோ­தை­ரி­யத்­துடன் இருப்­ப­தா­கவும் அவர்கள் அனை­வரும் திற­மையை வெளிப்­ப­டுத்தி பாகிஸ்­தா­னுக்கு போட்டித் தன்­மையை ஏற்­ப­டுத்­துவர் என கரு­து­வ­தா­கவும் கூறினார்.

 

இலங்கை குழாம்

 

லசித் மாலிங்க (அணித் தலைவர்), தனஞ்­சய டி சில்வா, சத்­து­ரங்க டி சில்வா, திலக்­க­ரட்ன டில்ஷான், பினுர பெர்­னாண்டோ, ஷெஹான் ஜய­சூ­ரிய, சாமர கப்­பு­கெ­தர, நுவன் குல­சே­கர, ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, தசுன் ஷானக்க, மிலிந்த சிறி­வர்­தன, ஜெவ்றி வெண்­டர்சே, கித்­ருவன் வித்தானகே.

 

பாகிஸ்தான் குழாம்

 

ஷஹித் அப்றிடி (அணித் தலைவர்), சப்ராஸ் அஹ்மத், அஹ்மத் ஷேஹ்ஸாத், அன்வர் அலி, இமாத் வசிம், மொஹமத் ஹபீஸ், மொஹமத் இர்ஃபான், மொஹமத் ரிஸ்வான், முக்தார் அஹ்மத், நௌமான் அன்வர், ஷொயெப் மாலிக், சொஹெய்ல் தன்வீர், உமர் அக்மால், யசிர் ஷா, ஸியா உல் ஹக்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11341#sthash.sG8qV25P.dpuf
வீரர்களை தெரிவுசெய்வதில் அணித் தலைவருக்கும் பங்குள்ளது - லசித் மாலிங்க கூறுகின்றார்
2015-07-30 10:36:50

11342_3934267.pngஇலங்கை அணித் தலைவர் என்ற வகையில் அணித் தெரி வில் தனக்கும் பங்கு இருப்­ப­தா­கவும் திறை­மை­சாலி­களை மீண்டும் பரீட்­சிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை எனவும் லசித் மாலிங்க கூறு­கின்றார்.

 

இரண்டு வீரர்கள் லசித் மாலிங்­கவின் விருப்­பத்­திற்கு அமை­யவே குழாமில் இருந்து நீக்­கப்­பட்­ட­தாகத் தக­வல்கள் வெளியா­கி­யுள்­ளன என லசித் மாலிங்­க­விடம் செய்­தி­யாளர் ஒருவர் கேட்டபோதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

‘‘தெரிவு சம்­பந்­த­மான கூட்­டத்­தின்­போது ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் சொந்தக் கருத்­துக்­களை வெளி­யிட உரிமை இருக்­கின்­றது.

 

அணித் தலைவர் என்ற வகையில் எனக்கும் குறிக்கோள் ஒன்று இரு­கின்­றது.

 

2019 உலகக்கிண்ணப் போட்­டி­க­ளுக்கு முன்­ப­தாக 60க்கும் மேற்­பட்ட போட்டிகள் நமக்கு விளை­யா­டக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

 

அப்­போது வீரர்­களைத் தாரா­ள­மாக இனங்­காண முடியும். ஆனால் எங்­க­ளுக்கு இன்னும் 10 போட்­டி­களே இருப்­ப­துடன் 6 மாதங்­களே மீத­முள்­ளன.

 

எனவே இலங்­கையில் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டக்­கூ­டிய தகு­தி­வாய்ந்­த­வர்கள் இருக்­கின்­றார்­களா என்­பதை கண்­ட­றிய இது சிறந்த சந்­தர்ப்­ப­மாகும்.

 

2010முதல் இரு­பது 20 அணியில் இடம்­பெற்ற வீரர்கள் இருவர் (லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்­திமால்) குழாமில் இல்லை.

 

அவர்­க­ளிடம் உள்ள திற­மை­களை நாம் அறிவோம்.

 

அவர்­களை மீண்டும் பரீட்சிக்கத் தேவையில்லை என்பதால் புதியவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களைப் பரீட்சிக்கின்றோம்’’ என பதிலளித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11342#sthash.FNilBEgl.dpuf
Link to comment
Share on other sites

இலங்கைக்கு 176 வெற்றி இலக்கு

 
 

 

இலங்கைக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.218963.3.jpg
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது 20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ அரங்கில்   நடைபெறுகின்றது.
இப்போட்டியில்; நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.


அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட் வீரர்களாக முக்தார் அஹமட் மற்றும் அஹமட் செயிசாட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைப்பாட்டமாக 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது முக்தார் 2 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.


இதனையடுத்து களமிறங்கிய முஹமட் ஹாபிஸ் 17 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். பின்னர் செயிசாடுடன் கைகோர்த்த சொயிப் நிதானமாக துடுப்பெடுத்தாட அஹமட் செயிசாட் 37 பந்துகளில் 46  ஓட்டங்களை பெற்று அரைச் சதத்தை தவற விட்டார். 


பின்னர் களமிறங்கிய உமர் அக்மால் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 24 பந்துகளில் 46  ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த அப்ரிடி 8 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.


களத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மாலிக் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றார். அந்த வகையில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.


இலங்கை அணியின் பந்து வீச்சில் திசர பெரேரா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/articles/2015/07/30/இலங்கைக்கு-176-வெற்றி-இலக்கு

Link to comment
Share on other sites

பாகிஸ்தான்  175/5 (20/20 ov)
ஸ்ரீலங்கா  146/7 (20/20 ov)
பாகிஸ்தான்  29 ஓட்டங்களால் வெற்றி
 
 

Link to comment
Share on other sites

இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

 
 

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 29 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.218979.jpg
இலங்கைக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது 20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ அரங்கில்   நடைபெற்றது.
இப்போட்டியில்; நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.


அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட் வீரர்களாக முக்தார் அஹமட் மற்றும் அஹமட் செயிசாட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைப்பாட்டமாக 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது முக்தார் 2 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.


இதனையடுத்து களமிறங்கிய முஹமட் ஹாபிஸ் 17 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். பின்னர் செயிசாடுடன் கைகோர்த்த சொயிப் நிதானமாக துடுப்பெடுத்தாட அஹமட் செயிசாட் 37 பந்துகளில் 46  ஓட்டங்களை பெற்று அரைச் சதத்தை தவற விட்டார். 


பின்னர் களமிறங்கிய உமர் அக்மால் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 24 பந்துகளில் 46  ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த அப்ரிடி 8 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.


களத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மாலிக் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றார். அந்த வகையில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.


இலங்கை அணியின் பந்து வீச்சில் திசர பெரேரா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


இதனையடுத்து இலங்கை அணியின் இன்னிங்சை தொடர்வதற்காக களம் கண்ட குசேல் ஜனித் பெரேரா மற்றும் டில்சான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ஜனித் பெரேரா 4, டில்சான் 6 ஓட்டங்களை பெற்று அரங்கு திரும்பினர். பின்னர் வந்த கித்துரவன் விதானகே ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.


இவ்வாறு ஆரம்பமே 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கிய இலங்கை அணியை மெத்தியூஸ் மற்றும் தனஞ்சிய டி சில்வா ஆகியோர் சரிவிலிருந்து மீட்டனர். இதன் போது 23 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.


பின்னர் வந்த சிறிவர்தன அதிரடியாக துடுப்பெடுத்தாடினார். மறுபுறத்தில் இருந்த டி சில்வா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திருப்பிய சாமர கப்புகெதர களம் கண்டார்.


இருவரும் அதிரடியை தொடர்ந்த போதும் அது நீடிக்கவில்லை. 18 பந்துகளில்  35 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் அதிரடி ஆட்டகாரர் சிறிவர்தன. பின்னர் கப்புகெதரவுடன் இணைந்த திசர பெரேராவும் 2 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.


இதனையடுத்து இலங்கை அணியால் வெற்றி இலக்கை தொட முடியாமல் போனது. இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கப்புகெதர ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை பெற்றார்.

http://www.virakesari.lk/articles/2015/07/30/இலங்கையை-வீழ்த்தி-பாகிஸ்தான்-வெற்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.