Jump to content

லண்டனில் துடுப்பாட்டத்தின்போது பந்து தாக்கியதில் தமிழ் வீரர் மரணம்


Recommended Posts

Bavalan

லண்டனில் வாராவாரம் இடம்பெற்று வரும் தமிழ் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியொன்றின்போது பந்தொன்று நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதில் இளம் தமிழ் கிரிக்கட் வீரர் ஒருவர் மரணித்துள்ள சம்பவமொன்று சறே சேர்பிற்றன் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் போட்டித்தொடரின் பிரிவு மூன்றின் போட்டியொன்றில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பரீஷ் விளையாட்டுக் கழகத்தின் பத்மநாதன் பாவலன் என்ற 24 வயதுடைய வீரரே இவ்வாறு பரிதாபகரமாக இறந்துள்ளார்.

மானிப்பாய் பரீஷின் சக வீரர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் கிரிக்கட் சமூகத்தினையும் துயரத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் சேர்பிட்டன் லோங் டிட்டன் றிகிரியேஷன் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

பந்தினால் தாக்கப்பட்டதும் நிலைகுலைந்துபோன பாவலனைக் காப்பாற்ற விசேட அம்புலன்ஸ் வண்டிகளிலும், உலங்குவானூர்தியிலும் மைதானத்துக்கு விரைந்த வைத்தியர்கள் கடுமையாகப் போராடியபோதும், முயற்சிகள் பயனளிக்கவில்லை என சக வீரர்கள் கொழும்பு மிரரிடம் தெரிவித்தார்கள்.

சிறப்பான சகலதுறை ஆட்டக்காரரான பாவலன் யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

கோடைக் கால வார இறுதிநாட்களில் லண்டனின் பல்வேறு பாகங்களிலும் சுமார் நாற்பதுக்கும் அதிகமான கழகங்களுக்கிடையே, ஐந்து பிரிவுகளில், பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தினரால் நடாத்தப்பட்டுவரும் போட்டித்தொடர்களில் ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள்.

அண்மையில் காலமாகிய பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வல்லிபுரநாதன் தீபராஜின் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னரேயே நேற்றைய போட்டிகளில் பாவலன் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கலந்துகொண்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.colombomirror.com/tamil/?p=5168

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். கிரிக்கெட் பந்து எமனாகி வருவது தொடர்பில்.. பந்து வடிவமைப்பில் பாவனையில் மற்றும் தற்காப்பில் விதிமுறைகளில் மீள் சிந்தனையும் புதிய நடைமுறைகளும் அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட், மரண விளையாட்டாக போய் விட்டது.
பத்மநாதன் பாவலனுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாதன் பாவலனுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

பௌலர்களின் சில பௌன்சர்கள் பாட்ஸ்மன்களை படு காயமாக்குகின்றன,சில  சுடு காட்டுக்கும் அனுப்பி விடுகின்றன...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி ஆங்கிலமும் இச்செய்தியை பரிவோடு பிரசுரித்துள்ளது.

Bavalan Pathmanathan dies after being struck in chest by ball

A cricketer has died after being struck on the chest by a ball during a local league match in Surrey.

Bavalan Pathmanathan, 24, was batting for Manipay Parish Sports Club in the British Tamil League on Sunday at Long Ditton recreation grounds.

An air ambulance was called but he later died of his injuries.

http://www.bbc.co.uk/sport/0/cricket/33425867

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.