Jump to content

திருமண உறவை இன்னும் நம்புகிறீர்களா?


Recommended Posts

திருமண உறவை இன்னும் நம்புகிறீர்களா?

திருமண உறவை இன்னும் நம்புகிறீர்களா?

 

திரிஷாவுக்கும் பட அதிபர் வருண்மணியனுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி பிறகு அது முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டனர். திரிஷா தற்போது சினிமாவில் பிசியாக உள்ளார்.

திரிஷா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி: திருமணம் முறிந்தால் நிறையபேர் ஓய்ந்து போவது உண்டு. நீங்களோ பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்க்கையை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இது போன்ற சூழலில் பலரும் உடைந்து போவது உண்மைதான். ஆனால் என்னை எளிதில் இவை பாதிப்படைய செய்யாது. நான் எல்லா விஷயங்களிலும் ‘பாசிட்டிவ்’ ஆக இருக்கிறேன். எனது வாழ்வின் முடிவு களை மனமும் இதயமும் சேர்ந்தே எடுக்கின்றன. நான் எனது குடும்பத்தினருடன் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். அவர்கள் எனக்கு ஆதரவாக இருக் கிறார்கள்.

கே: திருமண முறிவுக்கு பிறகு உங்களை பற்றி நிறைய வதந்திகள் பரவுகிறதே? முறிவுக்கான காரணம் என்ன?

ப: வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்க முடியாது. வதந்திகள் பற்றி நான் கவலைப் படவில்லை. எனது வாழ்க்கையின் முக்கிய நபராக எனது அம்மா இருக்கிறார். யாருக் கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இல்லை. இதுபோன்ற விஷயங் கள் நிகழும் போது வதந்தி கள் கிளம்புவதும் மக்கள் குழப்ப மடைவதும் சகஜம் தான். திருமண முறிவுக் கான காரணம் பற்றி நிறைய சொல்லலாம். ஆனால் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதில் நிறையபேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை இதில் இழுக்கவிரும்ப வில்லை. இது ரொம்ப தனிப்பட்ட விஷயம். நான் இப்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே நடந்த விஷயங்களை மீண்டும் தோண்ட விரும்ப வில்லை.

கே: திருமண உறவை இன்னும் நம்புகிறீர்களா?

ப: நான் திருமணபந்தத்தை இப்போதும் நம்புகிறேன். ஆனால் திருமணம் சமுதாயத்துக்கு ரொம்ப அவசியமானது என்பதை நம்பவில்லை. சமுதாய தேவைக்காக திருமணம் செய்து கொண்டு பாதிக்கப்பட்ட நிறைய பேரை நான் பார்த்து இருக்கிறேன். காதலிக்கிற ஒருத்தரை திருமணம் செய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக திருமணம் கூடாது. வயது என்பது பிரச்சினை இல்லை. நான் இருப்பதைந்து வயதில் அந்த மாதிரி ஒரு மனிதரை சந்தித்து இருந்தால் இப்போது அவரை திருமணம் செய்து கொண்டு இருப்பேன். இவ்வாறு திரிஷா கூறினார்.

http://www.eelakural.com/?p=17755

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரிசாவின் நம்பிக்கையை குலைக்கிற மாதிரி கேள்வி கேட்கிறாங்க. திருமண உறவை நம்பாமல் இருக்க அவா என்ன கன்னியாத்திரியா... ஆக்கிடுவாங்க போல. ;)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.