Jump to content

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20: வங்கதேச நம்பிக்கைக்கு பலத்த அடி


Recommended Posts

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20: வங்கதேச நம்பிக்கைக்கு பலத்த அடி

தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி   52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

DE1.jpg

மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்தது. டி வில்லியர்ஸ் 2 ரன்னிலும் குயின்டன் டி காக் 12 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து டுப்லெசிசும் டுமினியும் வங்க தேச பந்துவீச்சை எதிர்கொண்டனர். டுப்லெசிஸ் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். டுமினி 18 ரன்களில் வெளியேறினார். கடைசிக்கட்டத்தில் ரூசவ் 21 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்ரிக்க அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவுக்கு எதிராக கலக்கிய முஸ்தாபீசூர் ரஹ்மானுக்கு இந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. அவரது பந்துவீச்சும் எடுபடவில்லை. 4 ஓவர்கள் வீசிய அவர் 30 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்சும் 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

DE.jpg

தொடர்ந்து வங்கதேச அணி பேட் செய்ய களமிறங்கியது. தமிம் இக்பால் 5 ரன்னிலும் சவும்யா சர்க்கார் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள். சாகிப் அல் ஹசன் 26 ரன்களையும் முஸ்தாபிகுர் ரஹீம் 17 ரன்களையும் எடுத்தனர். லிட்டன் தாஸ் 22 ரன்களை எடுத்தார். வங்கதேச அணி 18.5 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்ரிக்க அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.vikatan.com/news/article.php?aid=49031

Link to comment
Share on other sites

வங்கதேசத்துக்கு மீண்டும் அடி..தென்ஆப்ரிக்கா கொடுத்தது!

மிர்பூர்: தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டி 20 போட்டியிலும் வங்கதேச அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

DEEE.jpg

மிர்பூரில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான குயின்டன் டி காக் 44 ரன்களும், டி வில்லியர்ஸ் 40 ரன்களும் அதிரடியாக குவித்தனர். அடுத்து டுமினி 6, டுப்லெசிஸ் 16, டேவிட் மில்லர் 30, ரூசவ் 19 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்ரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. வங்கதேச தரப்பில் அரஃபத் சன்னி, முஸ்தாபீசூர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டையும், நாசர் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

bank.jpg

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேசம் பேட் செய்தது. தமிம் இக்பால் 13 ரன்களும் சவும்யா சர்க்கார் 37 ரன்களும் எடுத்து வெளியேறினர். சாகிப் அல் ஹசன் 8 ரன்களும், முஸ்தாபீகுர் ரஹீம் 19 ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஆட்ட முடிவில் வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தென்ஆப்ரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே நடந்த முதல் டி20 போட்டியிலும் தென்ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றுள்ளதால், தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

http://www.vikatan.com/news/article.php?aid=49117

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.