Jump to content

வரப்போகும் நாடாளுமன்றம் தேர்தலையொட்டிய அரசியல் - சாந்தி சச்சிதானந்தம்


Recommended Posts

அதிகார பேராசை பிடித்து மகிந்த இராஜபக்சவும் அவருடைய கூஜா தூக்கிகளும் குட்டையைக் குழப்பிக் கொண்டேயிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்களுடைய திட்டங்களையெல்லாம் பொடிப்பொடியாக்குவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பவர் தீட்டக் கூடிய சதித் திட்டங்கள் பலவுண்டு. அதிலொன்றுதான் Giving a long enough rope to hang himself  என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற முறையாகும். அதாவது நல்ல நீட்டான கயிறு திரித்துக்கொடுத்து அக்கயிறைக் கொண்டே ஒருவர் தன்னைத்தானே தூக்கிலிட வைப்பது என இதற்குப் பொருள்படும். மகிந்த இராஜபக்ச மெதமுலனவில் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சித் தலைவர் தனது ஆதரவாளர்களையும் தனக்கு ஆதரவான அமைச்சர்களையும் மகிந்த ஆதரவாளர்களாக பாசாங்கு பண்ணி அனுப்பி வைப்பதிலிருந்து இது ஆரம்பிக்கின்றது.

தன்னிடம் வந்து சேருகின்ற மக்களையும் அரசியல்வாதிகளையும் பார்த்து விட்டு தனக்கு நிரம்ப ஆதரவு இருக்கின்றதென நம்பி மகிந்த ஆழத்தில் காலை விட்டு தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிpவிக்க வைப்பது அடுத்த கட்டமாகும். அறிவித்தலைத் தொடர்ந்து இதுவரை அவர் கூட்டத்தில் பங்குபற்றியவர்களை நிறுத்தி வைத்து அவரை நட்டாற்றில் கைவிடுவது மூன்றாம் கட்டமாகும். அறிவித்தலை வாபஸ் வாங்க வழியில்லாமல் அவர் ஐ.ம.சு.மு யில் வேட்பாளர் நியமனம் கேட்டு நிற்கும்போது இதோ தீர்மானம் எடுக்கின்றோம் எனக்கூறியே நாள் கடத்தி கடைசி நேரத்தில் கையை விரிப்பது நான்காவத கட்ட நடவடிக்கையாகும். இதைத்தான் ஜனாதிபதி சிரிசேன செய்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சம்பவங்கள்  அப்படித்தான் கோடு காட்டுகின்றன.

மகிந்த தான் தேர்தலில் போட்டியிட்டு அரசாங்கம் அமைக்கப்போவதாக அறிவித்த பின்னரான மெதமுலன கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தாலும்  எதிர்பார்த்த அளவு அமைச்சர்கள் சமுகம் தரவில்லை. மகிந்த ஆதரவாளர்களுக்கு வேட்பாளர் நியமனம் கொடுக்கப்பட மாட்டாது என கட்சிக்குள்ளிருந்து கசிந்து வந்த செய்தியும் இதற்கு ஓர் காரணமாக அமையலாம். இதனால், தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி என்னும் ஓர் சிறிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி மகிந்த தரப்பினர் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை வாக்காளர்கள் தலைவர்களுக்கு விசுவாசிகளாக வாக்குகள் போடுவதைவிடவும் கட்சிக்கே விசுவாசமாக இரக்கமையே இதுவரை கண்டிருக்கின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமைப் பீடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரொருவருக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டபோது மிகுந்த மனக் கிலேசம் அடைந்த போதிலும் தமது கட்சி கேட்கின்றதேயென்னும் ஒரோ காரணத்திற்காக அதன் ஆதரவாளர்கள் சிரிசேனவிற்கு வாக்களித்ததை காணக்கூடியதாக இருந்தது. மகிந்த ஒரு புதிய கட்சியில் போட்டியிட நேர்ந்தால் எவ்வளவு தூரத்திற்கு ஸ்ரீலங்கா கட்சி ஆதரவாளர்கள் தமது கட்சியை விட்டு புதிய கட்சிக்கு வாக்களிப்பர் என்பதை தேர்தல் முடிவுகள்தான் கூற முடியும். இனிவருங்காலம் சுவாரசியமான காhலமாக இருக்கப் போகின்றது. .

தென்னிலங்கை அரசியல் இவ்வாறு போய்க்கொண்டிருக்க தமிழ் மக்களின் அரசியலோ  ஏதோவொரு குழப்பமான பாதையில் போய்க்கொண்டிருக்கின்றது. புதிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளர்ர்.  என்ன தீர்வு, யார் தரப்போகிறார்கள் என்கின்ற எங்களது கேள்விகளுக்கு, சமஸ்டித் தீர்வுதான் என உத்தரவாதம் தருகின்றார் சுமந்திரன். மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என அவர் விளக்கியிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டில் ஒரு பாரிய பிரச்சினை தொக்கி நிற்கின்றது.

முதலாவதாக, என்ன தீர்வுகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தமிழ் மக்களுக்குத் தெரியமலிருக்கும் பிரச்சினையாகும். சிங்கள களத்தில் அரசியல் அவை தெரிந்து விட்டால் பௌத்த தீவிரவாதக்குழுக்களுக்கு வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுத்த மாதிரியாக இருக்கும் எனக் கருதுவது ஓரளவுக்கு சரிதான். ஆனால் அதற்காக, தமிழ் மக்களுக்கும் தெரியாத வண்ணம் இரகசியமாக இந்தத் தீர்வுகள் எட்டப்படுவது சரியா? சமஸ்டி ஆட்சி என்பது ஒரு திட்டமான முறையல்ல. அது அமுலில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு வித்தியாசமான முறையாக  அது செயற்படுத்தப்பட்டிருக்கின்றது. வெறும் நிர்வாகப் பகிர்வு நடைமுறையிலிருந்து சுயாதீன நாடாளுமன்றங்களின் இணைப்பு முறை வரை இதன் பரப்பெல்லை விரிந்திருக்கின்றது.

பொதுவாக, ஒரு சம~;டி அரசின் அம்சங்கள் ஆறாகும். இரண்டு படிநிலையிலுள்ள அரசுகள் தமது பொதுவான பிரஜைகளுடன் நேரடியாக செயற்படுவதற்கான வரைமுறைகளை ஏற்படுத்துதல். முதலாவது அம்சமாகும். சட்டவாக்கம், நிறைவேற்று அம்சங்கள், வரி வருமானத்தின் ஒதுக்கீடுகள் என்னும் ஆட்சியின் மூன்று முக்கிய அதிகாரங்கள் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக இரு அரசாங்கங்களுக்கும் அவற்றின் சுயாதீனத் தன்மையைப் பேணும் வகையில் பிரித்துக் கொடுக்கப்படுதல் அடுத்த அம்சமாகும்.

 பிராந்திய மக்களின் அபிப்பிராயங்கள் தேசிய கொள்கைத் திட்ட வகுப்பில் பிரதிபலிக்கும் முகமாக, பிராந்திய பிரதிநிதித்துவம் மத்திய அரசில் இடம்பெறுவதற்கான பொறி முறைகளை ஏற்படுத்தல் மூன்றாவது அம்சமாகும்.. நாட்டின் அரசியலமைப்பச் சட்டத்தில் ஏற்படுத்தப்படும் எந்தத் திருத்தமும் பிராந்திய மக்களின் குறிpப்பிட்ட வீதமானோரின் ஒப்புதலின்றி நடைமுறைப்படுத்தப்பட முடியாத விதிகளை ஏற்படுத்தல் நான்காவது அம்சமாகும். இந்த அரசாங்கங்களுக்கிடையில் ஏற்படக்கூடிய பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நீதித்துறை வழியாகவோ அல்லது சர்வசன வாக்கெடுப்பு வழியாகவோ நடுவர் முறையை செயற்படுத்துதல் ஐந்தாவமு; அம்சமாகும்.

எங்கெங்;கு இரு அரசாங்கங்களினதும் அதிகாரங்கள் ஒன்று மற்றதன் மீது படியும் குழப்ப நிலை காணப்படுகின்றதோ அங்கேயெல்லாம் இந்த அரசாங்கங்களுக்கு பொதுவான பொறிமுறைககளை செயற்படுத்தி நிலைமையைத் தெளிவாக்குதல் ஆறாவது அம்சமாகும். எத்தனை சிக்கல்கள். இது வெறுமனே காணி பொலிஸ் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெறும் விசயமல்ல என்பது இதனைப் பார்த்தால் விளங்கும். decentralized Unions, Unions,Federations, Federacies, Confederations, Associated Sates, Condominiums, Leagues, Joint Functional Authorities,  இவையெல்லாம் கலந்த கலவையாட்சி, என சமஸ்டி அரசுகள் பலதரப்படும். இந்த ஒவ்வொரு முறையிலான அரசும் மேலே கூறப்பட்ட ஆறு அம்சங்களையும் ஏதொவொரு விதத்தில் உள்ளடக்கியiவையாக இருக்கும்.

அத்துடன் சமஸ்டி அரசுகளின் உருவங்களும் வேறு வேறானவையாகும். உதாரணமாக, மலேசியாவானது 13 மாநில அரசுகரளக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஆர்ஜென்டீனாவில் 23 மாகாண அரசுகள், 5 பிராந்தியங்கள்,1 சமஸ்டி மாவட்டம், 1 தேசிய சமஸ்தானம் (territory)  ஆகியவற்றைக் கொண்டியங்குகின்றது. இதன் ஒவ்வொரு அலகுகளும் வித்தியாசமான அதிகாரங்களைக் கொண்டவையாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு சமஸ்டி ஆட்சி நடைமுறையில் இருக்கின்ற ஒவ்வொரு நாட்டினதும் நாட்டாட்சிப் பரப்பெல்லையும் வித்தியாசமான அமைப்புக்களைக் கொண்டியங்குகின்றன.

நம் நாட்டிலும் முஸ்லிம் மக்கள்  சிதறி வாழுகின்ற தன்மையினால் இது போன்ற ஏற்பாடுகளை சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தனி உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் பாதுகாத்தல், ஒற்றுமை உருவாக்கும் அதே சமயம் ஒரு சமூகத்தின் பன்முகத்தன்மையையும் பேணுதல், சமஸ்டி அரசினது ஒவ்வொரு அலகும் வௌ;வேறான பரிமானம் சனத்தொகை ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் கூட அவற்றின் மத்தியில் சமத்துவத்தினைப் பேணுதல் போன்ற கொள்கைகளின் அடிப்படைகளில்  இந்த ஒவ்வொரு அம்சமும் தீர்மானிக்கப்படுகின்றன.

கூட்டமைப்பு சொல்வது போல எமக்குத் தரப்படப்போகின்ற சமஸ்டி ஆட்சி முறையானது இதில் எந்த வகையை உள்ளடக்கப்போகின்றது? அதனைத் தீர்மானிக்கப் போவது கூட்டமைப்பின் தலைமைப்பீடமும் சிங்கள அரசாங்கமுமா?. இதனைத் தீர்மானிப்பதில்  மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? பரந்துபட்ட மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்களதும் ஆலோசனைகளையும் ஒப்புதலையும் பெறாமல் சிங்களத் தலைமைத்துவம் அரசியலமைப்புச் சட்டம் வரைந்துள்ளது என அவர்கள் மீது குற்றம் சாட்டும் நாம் இதே தவறை விடலாமா?

கூட்டமைப்பு உண்மையில் செய்யவேண்டியது யாதெனில், தாம் தெரிவு செய்யும் சமஸ்டி முறையின் நகலை மக்களின் பார்வைக்கு வைப்பதூன். முதலில் இதனைத் தமது கட்சித் தொண்டர்களுக்கு விளக்க வேண்டும். பின்பு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவாக தமது கட்சித் தொண்டர்கள் மூலம் மக்களைச் சந்தித்து அவர்கள் முன் இதனை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஒவ்வொரு சந்திப்பும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டதாகவும், மக்களின் அபிப்பிராயங்கள் தொகுக்கப்படும் விதத்திலும் அமையவேண்டும். இந்த முறைவழியானது இருவழிப் போக்காக இருக்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தினையும் சமஸ்டி ஆட்சி முறை பற்றியும் மக்கள் மத்தியில் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படும் அதே நேரத்தில் அவர்களின் அபிப்பிராயங்களையும் உணர்வுகளையும் கட்சி பெறும் வகையில் இது இருக்கும். எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நிகழும் தருணத்தில், தமிழ் மக்கள் முன்மொழிந்த அம்சங்களில் ஏதாவது நிராகரிக்கப்படுமேயானால் 9கட்டாயம் நடக்கப்போகின்றது) அதற்கு எதிராக இந்த மக்களை அணிதிரட்டுவது இலகுவாக இருக்கும். மக்களின் இந்த கூட்டு நடவடிக்கை மூலமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் அதன் மூலமாக ஸ்ரீலங்கா அரசின் மீதான அவற்றின் அழுத்தத்தினையும் நாம் ஏற்படுத்த முடியும். இவையொன்றையும் செய்யாது விட்டோமானால், இதைக் கேட்டோம் அதைத் தரவில்லையென உதட்டைப் பிதுக்கி அறிக்கைகளை வெளியிடும் பணியினைத்தான் எமது அரசியல்வாதிகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கப் போகிறார்கள்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121631/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.