Jump to content

பிரபாகரன் தமிழர்களை, நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார்: சிறீதரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் தமிழர்களை, நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார்: சிறீதரன்
[ சனிக்கிழமை, 04 யூலை 2015, 06:35.22 PM GMT ]

பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டார். தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

இந்தப்பாடசாலையின் வரலாற்றில் இந்த தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் வரவு ஒரு அத்தியாயமாக வரப்பிரசாதமாக அமைகின்றது. இப்படியான நவீன வளங்கள் கிடைக்கின்றபோது மாணவர்களின் சிந்தனை திறனும் தேடலும் மாற்றத்தக்கு உள்ளாகின்றது.

அதன் மூலம் சாதனைகள் படைக்கப்படுகின்றது. புதிய சிந்தனைகள் படைப்புக்கள் பிறக்கின்றன. இந்த மண்ணிலே எமது தொழில் நுட்ப அறிவை நவீன சிந்தனையை வெளிப்படுத்தக்கூடிய மனிதர்கள் வாழந்துபோயிருக்கின்றார்கள்.

பேராசிரியர் துரைராஜா சிவத்தம்பி போன்ற துறை சார் விற்பன்னர்கள் உலகம் வியக்கும் வண்ணம் வாழ்ந்து வரலாறு ஆகியிருக்கின்றார்கள். இந்த உலகத்தின் வளர்ச்சியுற்ற நாடுகளில் தமிழ் மாணவர்கள் சாதனை படைக்கின்றவர்களாக கண்டுபிடிப்புக்கள் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.

இது தமிழர்களின் மரபில் ஊறியுள்ள விடயம். அதனால் அந்த ஆற்றல் இந்த சந்ததியிடமும் இருக்கும் அவை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.அதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும். உலகத்தை நாம் வெல்கின்றவர்களாக மாறவேண்டும்.

அதற்கு உதைப்பு வேண்டும். கோழக்குஞ்சு முட்டையை கொத்தி அந்த உடைத்துத்தான் இந்த உலகத்தை பார்க்கின்றது. எல்லோரும் யாருக்கும் முழுமையாக தந்துவிடமாட்டார்கள். அதில் முயற்சியும் பங்கும் சிந்தனையும் இருக்கவேண்டும்.

முதலையும் உதைத்து உடைத்தே வெளிவருகின்றது. அதன் வல்லமையை உணர்கின்றது. வாழ்கின்றது. வாழ்க்கை இப்படித்தான். வாழக்கையில் நாம் எம்மை இந்த உலகத்தில் அடையாளப்படுத்த வேண்டும். விவேகானந்தர் இளைஞர்களை நோக்கிய தன் சிந்தனையால் அடையாளமானார். அன்னை தெரேசா அன்பால்அரவணைப்பால் அடையாளமானார்.

நெல்சன் மண்டேலா விடுதலைப் போராட்டத்தால் தன்னை அடையாளப்படுத்தினார். பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார். எனவே மாணவர்களே! நாமும் இந்த உலகத்தில் சாதனையாளர்களாக மாறவேண்டும்.

அதற்கு போராடித்தான் ஆகவேண்டும். அதற்கு வெற்றியின் மீதான நம்பிக்கைவேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றிபெறுகின்றார்கள். எல்லா ஜீவராசிகளும் பேராடித்தான் தினமும் வாழ்கின்றன.

எனவே வாழ்க்கையில் எல்லா துறைகளிலும் நாம் வெற்றி பெற அறிவையும் ஆற்றலையும் வளர்த்து இந்த உலகத்தை நாம் வெல்ல வேண்டும். அதற்கு இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடமும் ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்வி உயர் அதிகாரிகள் வடக்கு மகாண சபை உறுப்பினர் சயந்தன் சாவகச்சேரி பிரசேசபைத் தலைவர் துரைராசா உட்பட கல்விச் சமூகத்தினர் வரணி மண்ணின் மைந்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

http://www.tamilwin.com/show-RUmtyHTYSUes6I.html

Link to comment
Share on other sites

ஐயா கவனம்.. நீங்கள் வாக்கு வாங்கிறதுக்காக கண்டதையும் பேசிப் போடாதேங்கோ!

பிறகு விடுதலைப் புலிகளையோ ஆயுதம் தூக்கினவையையொ எங்களுக்குப் பிடிக்காது எண்டு சொல்லிக் கொண்டு இதயங்களாலை இணையிற சம்பந்தன் ஐயாவுக்கும் சுமந்திரன் ஐயாவுக்கும் கெட்ட கோவம் வந்திடும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒரு தலைமையின் கீழ் போராடவேண்டும் என்பதற்காக தலைவர் பிரபாகரனை எங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டோம்.  கொண்டகொள்கையிலும் தனிமனித ஒழுக்கத்திலும் உறுதியான மனிதர் அவர். ஆனால் வீரம் என்பது போர்க்களத்தில் எதிரியை நேரடியாகச் சந்திப்பது. பால்ராஜ் அண்ணை, தீபன் அண்ணை, கருணா அம்மான் போன்றவர்கள் கண்ட நேரடிக் கள அனுபவங்களின் முன்னர் தலைவரது முன்கள அனுபவங்கள் குறைவானவையே. திட்டமிடல் தயாரிப்புக்களைத் தலைவர் மேற்பார்வை செய்திருக்கக் கூடும்.  ஆனால் தமிழ் மண்ணை தமது வீரத்தால் அடையாளப்படுத்திய ஒப்பற்ற வீரர்களுக்கு ஓரு குறியீடாகக் கருத முடியுமே தவிர தனித்த அவரின் வீரமாகக் கருத முடியாது. ஈராக்கில் பாதுகாப்பாக இருக்கும் போது சதாம் குசேனும், லிபியாவில் பாதுகாப்பாக இருக்கும்போது முகம்மர் அல் கடாபியும் மாவீரர்களே! படைவீரர்களின் பாதுகாப்பில் இருப்பவர்கள் இருந்தவர்கள் வீரர்களா? அவர்கள் கொள்கையில் வீரர்களாக இருந்திருக்க முடியும். ஆனால் இவர்களின் கொள்கைகளுக்காகவும் பாதுகாப்புக்காவும் பேச்சுக்காகவும் ஆயிரம் ஆயிரம் உண்மையான வீரர்கள் களமாடி வீழ்ந்திருக்கின்றார்கள்!

இவ்வாறான வார்த்தைப் பிரயோகம் செய்யும் போது "நமது மண்ணை மாவீரர்களின் வீரத்தால் தனது கொள்கையில் இருந்து விலகாமல் வழிகாட்டியாக இருந்து அடையாளப்படுத்தினார்" என்பதே சாலவும் பொருந்தும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியாவுக்கு, மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தார்" என்று, இனி யாராவது சொன்னால்....
வாலியின், மேற் கூறிய  கருத்தை வாசித்து, மறுப்பறிக்கை கொடுக்க வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டேலா விடுதலைப் போராட்டத்தால் தன்னை அடையாளப்படுத்தினார். பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார். எனவே மாணவர்களே! நாமும் இந்த உலகத்தில் சாதனையாளர்களாக மாறவேண்டும்.

மாணவர்களை நோக்கிச் சொல்லப்பட வேண்டிய நல்ல கருத்து. அரசியலுக்கு வாக்குக்கு அப்பால் உண்மையை அதுவும் ஆக்கிரமிப்பு நிழலின் கீழ் நின்று பேசுவதற்கு ஓர் உறுதி வேண்டும்.

தமிழ்சிறீ அண்ணா... வாலி மாதிரி ஆக்கள்.. உருவாக மில்லியன் கணக்கான பிற விந்துகள் செத்து வீழ்ந்ததற்காக அவர் நாளை தன்னை தானே அழிக்கப் போறார் பொறுத்திருந்து பாருங்க. சும்மா தாங்களும் ஏதோ எழுதனும் என்பதற்காக.. தலைமைத்துவம் என்ற சொல்லாடலின் அர்த்தம் புரியாமல் எழுதித் தள்ளுதுங்க விடுங்க. கருணாவுக்கு புகழ்.. கருணாவின் நிழலில் பிரபா என்பது போல் இவர்கள் வாதம். கருணா என்று பெயர் வைச்சது முதல் சும்மா கிடந்த முரளிதரனை.. அம்மான் என்ற அந்த நிலைக்கு உயர்த்தியதே தேசிய தலைமை.. என்ற அந்தத் தலைமைத்துவம் தான். அது பின் முரளிதரனாகவே காசுக்கு விலை போய் துரோகியானது.. அது பிறந்த பிறப்பின் குணமாக இருக்கலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் - பிரபாகரன் பயங்கரவாதி

சிறிதரன் - பிரபாகரன் வீரன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களை நோக்கிச் சொல்லப்பட வேண்டிய நல்ல கருத்து. அரசியலுக்கு வாக்குக்கு அப்பால் உண்மையை அதுவும் ஆக்கிரமிப்பு நிழலின் கீழ் நின்று பேசுவதற்கு ஓர் உறுதி வேண்டும்.

தமிழ்சிறீ அண்ணா... வாலி மாதிரி ஆக்கள்.. உருவாக மில்லியன் கணக்கான பிற விந்துகள் செத்து வீழ்ந்ததற்காக அவர் நாளை தன்னை தானே அழிக்கப் போறார் பொறுத்திருந்து பாருங்க. சும்மா தாங்களும் ஏதோ எழுதனும் என்பதற்காக.. தலைமைத்துவம் என்ற சொல்லாடலின் அர்த்தம் புரியாமல் எழுதித் தள்ளுதுங்க விடுங்க. கருணாவுக்கு புகழ்.. கருணாவின் நிழலில் பிரபா என்பது போல் இவர்கள் வாதம். கருணா என்று பெயர் வைச்சது முதல் சும்மா கிடந்த முரளிதரனை.. அம்மான் என்ற அந்த நிலைக்கு உயர்த்தியதே தேசிய தலைமை.. என்ற அந்தத் தலைமைத்துவம் தான். அது பின் முரளிதரனாகவே காசுக்கு விலை போய் துரோகியானது.. அது பிறந்த பிறப்பின் குணமாக இருக்கலாம். :lol:

நெடுக்ஸ்..... நான், வாலியின் கருத்துக்களை, சீரியசாக எடுப்பதில்லை.
ஏனென்றால்... அவர் அரசியலில் படிக்க கன பாடங்கள் உள்ளது.
அவரின் அரசியல் எழுத்துக்கள், அருவரி பிள்ளைகள், "சிலேட்டில்" கிறுக்கி விளையாடுவது போல் இருக்கும். 
வாலி,  வேணுமென்றால்... அர்ஜுன் , கோசானிடம்..." ரியூசன்" எடுக்கப் போவது நல்லது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  தேர்தலில் வாக்குக்காக,  மக்களை உசுப்பேத்த, அவர்கள் ஏதோ சொல்ல , எங்கே என்று இருப்பவர்கள் வந்து விட்டார்கள் வரிச்சுக்கொண்டு விளக்கம் கொடுக்க.

Link to comment
Share on other sites

சம்  சும் மாவை இவர்கள் இனி எப்படி பிரச்சாரம் செய்யப்போரர்கள் .. இவரே தலைவரின் வீரத்தை சொல்லி எல்லாருக்கும் முதலாக வாக்கு வாங்க தொடக்கி உள்ளார் .. இனி மற்ற கிழடுகளும் நாக்கு கூசாமல் புகழ் பட தொடங்கப்போரர்கள் ... இதனை விட விபச்சாரம் செய்வது மேல் ... மானம் கெட்டதுகள் ... 

 

Link to comment
Share on other sites

சம்  சும் மாவை இவர்கள் இனி எப்படி பிரச்சாரம் செய்யப்போரர்கள் .. இவரே தலைவரின் வீரத்தை சொல்லி எல்லாருக்கும் முதலாக வாக்கு வாங்க தொடக்கி உள்ளார் .. இனி மற்ற கிழடுகளும் நாக்கு கூசாமல் புகழ் பட தொடங்கப்போரர்கள் ... இதனை விட விபச்சாரம் செய்வது மேல் ... மானம் கெட்டதுகள் ... 

 

சரியாக சொன்னீர்கள், அண்ணன் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்

தேர்தல் முடிய ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு....

ஆனா மகிந்த வந்தால் எல்லோரும் தப்பியோடிவிடுவார்கள்

நெடுக்ஸ்..... நான், வாலியின் கருத்துக்களை, சீரியசாக எடுப்பதில்லை.
ஏனென்றால்... அவர் அரசியலில் படிக்க கன பாடங்கள் உள்ளது.
அவரின் அரசியல் எழுத்துக்கள், அருவரி பிள்ளைகள், "சிலேட்டில்" கிறுக்கி விளையாடுவது போல் இருக்கும். 
வாலி,  வேணுமென்றால்... அர்ஜுன் , கோசானிடம்..." ரியூசன்" எடுக்கப் போவது நல்லது. :lol:

ரியூசன் எண்டத்தான் ஞாபகம் வருகுது, ரியூசனில் செக்கியா வேலை செய்றவை காலப்போக்கில் ஆசிரியர் ஆவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவை செக்கியா வேலை செய்வதற்கும் "அது" வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சூழ்நிலையில்தான் சுமந்திரனின் நேர்மை தெளிவாக தெரிகிறது.

நாம் ஏற்கிறோம் இல்லை என்பதுக்கு அப்பால் - பிரபாகரனை வைத்து வாக்குப் பொறுக்காமல், நினைவேந்தலில் பங்கெடுக்காமல் தன் அரசியலை மட்டும் முன்னிலைப் படுத்தி அரசியல் செய்ய ஒரு தில் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை சம்பந்தர் சொல்வாரா???சும்சும் செய்யும் அரசியலை விமர்சிக்கத் துணிவில்லை. தேர்தல் நெருங்க புலியளை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டு விட்டீர்கள்.சம்பந்தர் சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடித்தபொழுதும் சும்சும் சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட பொழுதும் வாயை மூடிக்கொண்டிருந்து விட்டு வாக்குப் பொறுக்கி ரெசியல் செய்வது நேர்மையாக இல்லை.

Link to comment
Share on other sites

இதை சம்பந்தர் சொல்வாரா???சும்சும் செய்யும் அரசியலை விமர்சிக்கத் துணிவில்லை. தேர்தல் நெருங்க புலியளை வைத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டு விட்டீர்கள்.சம்பந்தர் சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடித்தபொழுதும் சும்சும் சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட பொழுதும் வாயை மூடிக்கொண்டிருந்து விட்டு வாக்குப் பொறுக்கி ரெசியல் செய்வது நேர்மையாக இல்லை.

புலவர் பெருமானே!

கவிதைக்குப் பொய்யழகு :rolleyes:

அரசியலுக்கும் பொய்தான் அழகு :lol:

கவிதையில் பொய் மக்கள் மனத்தை வாங்கிவிடும் :)

அரசியல் பொய் மக்கள் மானத்தையே விற்றுவிடும். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்! அரசியலுக்குப் பொய்தான் அழகு! அதைத்தான் சிறீதரனும்.......

Link to comment
Share on other sites

என்னத்தை சொல்லுறது? ...  உந்த "புலி" சார்ந்த வீரவசனங்கள் இனி வடகிழக்கில் தேனாக பாயும், மாரி மழை கொட்டியது போல் கொட்டும், சோழகக்காத்து அடிப்பது போல் வீசும்!

ஏனேனில்

இனி இதயங்களால் ஒன்று பட்டதையும், சிங்கக்கொடி அசைத்ததையும் கேட்டா வாக்கு கேட்பார்கள்?

எங்கே, இதுவரை சில மாதங்களாக சம்பந்த சும்சும்கள் கொட்டிய புலி எதிர்ப்பு குப்பைகளுக்கு விசிலடித்த வீரவான்கள், அதே குப்பைகளை கொட்டி வாக்கு கேட்பார்கள்தான் என்று சொல்லட்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் இன்னும் அதே குப்பையை கொட்டித்தான் வாக்குக்குகேக்கிறார்கள். சிறீதரன் யாரால் கைகாட்டப் பட்டவர் தெரியும்தானே ?

Link to comment
Share on other sites

சம் சும் இன்னும் அதே குப்பையை கொட்டித்தான் வாக்குக்குகேக்கிறார்கள். 

ம்ம்ம்.. பின்வாசல் வாக்கு கேட்கிறார்? ... கேட்கிறவன் கேணையன் என்ரால் ..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் எப்ப அரசியலுக்கு வந்தவர் என்று சிலருக்கு தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 வல்லாதிக்க அரசுகளின்  ஆசிய பூகோள அரசியல் நடவடிக்கைகள் எமது போராட்டத்தை வீழ்ச்சியடைய செய்திருந்தாலும்....

ஈழத்தமிழருக்கான அடக்குமுறைகளையும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனங்களையும் உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் விடுதலைப்புலிகள்.
தமிழர்களின் வீரத்தையும்...வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என நிரூபித்து உலகிற்கு உணர்த்தியவர்கள் விடுதலைப்புலிகள்.

Link to comment
Share on other sites

 

 வல்லாதிக்க அரசுகளின்  ஆசிய பூகோள அரசியல் நடவடிக்கைகள் எமது போராட்டத்தை வீழ்ச்சியடைய செய்திருந்தாலும்....

ஈழத்தமிழருக்கான அடக்குமுறைகளையும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனங்களையும் உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் விடுதலைப்புலிகள்.
தமிழர்களின் வீரத்தையும்...வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என நிரூபித்து உலகிற்கு உணர்த்தியவர்கள் விடுதலைப்புலிகள்.

உலகிற்கு சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனத்தை  வெளிப்படித்தியவர்கள் என்கின்றீர்கள் பின்னர் இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் அழித்தார்கள் என்றும் சொல்லுகின்றீர்கள் .

எங்கையோ உதைக்கிது 

அப்ப வெளிபடுத்தியபடியால் அழித்தார்களோ ? அப்ப இனி வெளிப்படுத்தாமல் இருப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிற்கு சிங்கள ஏகாதிபத்தியத்தின் அடாவடித்தனத்தை  வெளிப்படித்தியவர்கள் என்கின்றீர்கள் பின்னர் இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் அழித்தார்கள் என்றும் சொல்லுகின்றீர்கள் .

எங்கையோ உதைக்கிது 

அப்ப வெளிபடுத்தியபடியால் அழித்தார்களோ ? அப்ப இனி வெளிப்படுத்தாமல் இருப்பம் .

 தற்பொழுது உலக ஒழுங்கில் , இரண்டாம் உலகபோரின் பின்பு உருவான சில தேசியங்கள்  இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றது போல தெரிகின்றது....சில  தேசியங்களை கடனாளிகளாக்கி அதை பெரும் தேசியங்களுடன் இணைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றதோ தெரியவில்லை.....ஐரோப்பாவுக்கு ஒரே நாணயம்....இந்தியா பிராந்தியத்திற்கும் ஒரே நாணயம் 

Link to comment
Share on other sites

அடாவடிதனத்தை உலகுக்கு உணத்தியவர்கள் புளட். இப்ப உதைக்காது என நினைக்கிறேன்.மற்றது பின்வாசலால் வந்து வீரம் கதைக்கவும் ஒரு தில் வேண்டும் இருக்க வேண்டும் என்பது சரியானது. அரசியலுக்கு பொய அழகு என்பதால் தான் அனந்திக்கு இடம் கொடுக்கப்படவில்லையோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

Link to comment
Share on other sites

அடாவடிதனத்தை உலகுக்கு உணத்தியவர்கள் புளட். இப்ப உதைக்காது என நினைக்கிறேன்.மற்றது பின்வாசலால் வந்து வீரம் கதைக்கவும் ஒரு தில் வேண்டும் இருக்க வேண்டும் என்பது சரியானது. அரசியலுக்கு பொய அழகு என்பதால் தான் அனந்திக்கு இடம் கொடுக்கப்படவில்லையோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அண்ணை நீங்கள்  அறிவு கடல் தொடர்ந்து இப்படியே  நீந்துங்கோ .மறந்து போயும் வெளியில வந்திடாதையுங்கோ 

Link to comment
Share on other sites

நீங்களும் தான். ரொரன்டோவில் வெளிக்கிட்டு வாயை திறந்திடாதேங்கோ.தாழ்மையோடை கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.