Jump to content

வடமாகாண சபை நிதியில் கட்டப்பட்ட வைத்தியசாலையை அமைச்சர் ரிஷாத் திறக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம்


Recommended Posts

வடமாகாண சபை நிதியில் கட்டப்பட்ட வைத்தியசாலையை அமைச்சர் ரிஷாத்  திறக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம்!

தாராபுரம் வைத்தியசாலையை அமைச்சர் ரிஷாத் பதியுதீனே திறக்கவேண்டும் என்று கோரி, வடக்கு மாகாண சுதாராத அமைச்சரை வைத்தியசாலைக்குள் நுழையவிடாது இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்கள். 2013ஆம் ஆண்டு வட மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி வழங்கப்பட்டு நிர்மாணப் பணிகள் 2014ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் நிறைவு பெற்றிருந்தாலும் அமைச்சார் ரிஷாத் பதீயுதீனால்தான் திறக்கப்படவேண்டும் என தெரிவித்து நீண்டகாலம் திறக்கப்படாமல் உள்ளது.

இன்று மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலை, பண்டாரவெளி வைத்தியசாலை, எருக்கலம்பிட்டி கிராமிய வைத்தியசாலை, ஆகியவற்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் திறந்துவைத்தார். அத்துடன் நீண்டகாலம் திறக்கப்படாதுள்ள தாராபுரம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலையையும் இன்று அமைச்சர் திறப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் ரிஷாத் பதியுதீனே வைத்தியசாலையைத் திறக்கவேண்டும் என்று கூறி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பதை தவிர்த்து அதனை பார்வையிட வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் சென்றிருந்தனர். எனினும் குறித்த கிராமத்தின் பெண்கள் வீதியை மறித்து வைத்திய சாலைக்குள் அமைச்சரை செல்லவிடாது தடுத்தனர். இதனையடுத்து வடமாகாண அமைச்சர் குழு மக்களுடன் கலந்துரையாடி வைத்தியசாலையைப் பார்வையிட்டுத் திரும்பியது.

mannar%20ffgg44521.jpg

: http://www.malarum.com/article/tam/2015/07/03/10835/வடமாகாண-சபை-நிதியில்-கட்டப்பட்ட-வைத்தியசாலையை-அமைச்சர்-ரிஷாத்-திறக்கவேண்டும்-என்று-ஆர்ப்பாட்டம்-.html#sthash.ndiESV5f.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதவாதம் 

Link to comment
Share on other sites

மக்களைப் பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகள் எமது சமுதாயத்துக்குத் தேவையில்லை 

மக்களைப் பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகள் எமது சமுதாயத்துக்குத் தேவையில்லை!

மக்களை பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகள் எமது சமுதாயத்திற்கு தேவையில்லை என வட மாகாண சுகாதார அமைச்சர் ப .சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மன்னாரில் நடைபெற்ற சுகாதார வைத்தியசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு மூன்று வைத்தியசாலைகளை திறந்து வைத்தார். இதேபோன்று தாராபுரத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார வைத்தியசாலையை திறந்து வைக்கச் சென்ற அமைச்சரை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடித் தடுத்தனர். இதன்போது அவர்கள் அந்த வைத்தியசாலையை அமைச்சர் றிஷாட்டே திறந்து வைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் வைத்தியசாலையைத் திறப்பதைத் தவிர்த்த அரசியல்வாதிகளின் தூண்டுதலிலேயே இது இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

மன்னார் மாவட்டத்தில் வட மாகாண சபையினால் குறித்தொதுக்ப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைகளை இன்று வெள்ளிகிழமை வைபவரீதியாக திறந்து வைத்தோம். இதன் அடிப்படையில் பண்டாரவெளி, உயிலங்குளம், எருக்கலம்பிட்டியில் உள்ள கிராமிய சிகிச்சை நிலையங்களை திறந்துவைத்து பின் தாரபுரத்திலுள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தையும் திறப்பதற்கு சென்றிருந்தோம். ஆனால் தாராபுரம் அரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைப்பதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளினால் தடைகள் ஏற்படுத்தபட்டிருந்தது. குறித்த வைத்தியசாலை 2013 ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு முற்பகுதியில் நிர்மாணப்பணிகள் முற்றுபெற்றிருந்தாலும் பல அரசியல் காரணங்களுக்காக தொடர்ச்சியாக மக்கள் சேவைக்கு வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.

இங்கு சமூகங்களிடையே பிரசினைகள் வரக்கூடாது என்று திறப்பு விழாவை பிற்போட்டிருந்தாலும் கடந்த 25 ஆம் திகதி எமது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிசாட் பதியூதீனையும், சுகாதார இராஜங்க அமைச்சராக இருந்த ஹசன் அலியையும் பிரதம விருந்தினர்களாக அழைத்து திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தவிர்க முடியாத காரணத்தால் அந்த திறப்பு விழாவை நடத்த முடியவில்லை. இரண்டு அரசியல்வாதிகளும் குறித்த வைத்தியசாலையை இணைந்து திறப்பதற்கு ஏற்றுகொள்ள முடியாத நிலை இருந்தபடியால் அதனை நாங்கள் பிற்போடவேண்டிய நிலைக்கு தள்ளபட்டோம். இதற்கு பின்னர் வைத்தியசாலைத் திறப்புவிழா தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியூதினின் சகோதரரும் வட மாகாண சபை உறுப்பினருமாகிய றிப்கான் பதீயூதினிடம் பேசி அதன் அடிப்படையில் இணக்கப்பாட்டிற்கு வந்து மன்னார் மாவட்டத்தின் மாகாண சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து அமைச்சராகிய நானும் இணைந்து இன்று தாராபுர ஆரம்ப சுகாதார வைத்தியசாலையைத் திறப்பதற்கு தீர்மானித்து திறந்து வைக்க இருந்தோம்.

எனினும் நாம் தாராபுர வைத்தியசாலைக்கு செற்றபோது அங்கு ஊர் பெண்கள் அமைச்சர் றிசாட் பதியூதீன் இல்லாமல் அந்த வைத்தியசாலையை திறக்க முடியாது என தெரிவித்து தடை செய்தார்கள். குறிப்பாக போருக்குப் பின்னரான சந்தர்ப்பத்தில் மீள்குடியமர்கின்ற மக்கள் தங்களுக்கு வைத்தியசாலை வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் இக் காலத்தில் இங்கு வைத்தியசாலையை திறக்கவேண்டாம் என மூடி வைத்துக்கொண்டு பெரிய வளத்தை திறக்க முடியாமல் தடுத்து வைப்பது என்பது வேடிக்கையாக உள்ளது.

இதன் அர்த்தம் என்ன என்று சொன்னால் இம் மக்கஎளுக்கு அவ்வைத்தியசாலை வேவையில்லை என்பதே. ஏனெனில் சுமார் இரண்டு கிலோ மீற்றருக்குள் வேறு வைத்தியசாலைகள் இருக்கின்றன. ஆகவே உண்மையில் இந்த வைத்தியசாலை வேறு இடத்திற்கு போகவேண்டிய நிலையில் அரசியல்வாதிகளின நடவடிக்கையால் தேவையில்லாத இடத்திற்கு இவ்வைத்தியசாலை வழங்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். எமது வட மாகாணத்தில் அனைவருக்கும் தொடர்ந்து சுகாதார சேவையை வழங்கும் பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் எனக்கு இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் மக்களை பிழையாக வழிநடத்துவதின் ஊடாக மக்களுக்கு வழங்கபோகின்ற சேவையினை தடுத்து நிறுத்துவது மனவருத்தத்திற்குரிய விடயம். இவ்வாறான அரசியல்வாதிகள் எமது சமுதாயத்திற்குத் தேவையில்லை - என்றார்.

 http://www.malarum.com/article/tam/2015/07/03/10837/மக்களைப்-பிழையாக-வழிநடத்தும்-அரசியல்வாதிகள்-எமது-சமுதாயத்துக்குத்-தேவையில்லை-.html#sthash.zt1qVe9O.dpuf

 

Link to comment
Share on other sites

மக்களை பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகள் எமது சமுதாயத்திற்கு தேவையில்லை என வட மாகாண சுகாதார அமைச்சர் ப .சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மன்னாரில் நடைபெற்ற சுகாதார வைத்தியசாலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு மூன்று வைத்தியசாலைகளை திறந்து வைத்தார். இதேபோன்று தாராபுரத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார வைத்தியசாலையை திறந்து வைக்கச் சென்ற அமைச்சரை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடித் தடுத்தனர். இதன்போது அவர்கள் அந்த வைத்தியசாலையை அமைச்சர் றிஷாட்டே திறந்து வைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் வைத்தியசாலையைத் திறப்பதைத் தவிர்த்த அரசியல்வாதிகளின் தூண்டுதலிலேயே இது இடம்பெற்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது என்ன‌ என்றால் பெரிய‌வ‌ரே யாழில் இருக்கும் வாத்தியார் என‌க்கு த‌மிழை ஒழுங்காய் தான் சொல்லி தந்த‌வ‌ர்  வாத்தியார் த‌மிழை சொல்லி த‌ரும் போது என்ர‌ நினைவெல்லாம் ப‌ழைய‌ காத‌லின்ட‌ நினைவாக‌ இருந்த‌ ப‌டியால் , வாத்தியார் சொல்லித் தந்ததை நினைவில் வைத்திருக்கவில்லை இதைப் பார்த்த வாத்தியார் இனிஎன்னை கண்காணிப்பார் ஆன‌ ப‌டியால் இனி தமிழில் எழுதுவதில் முதிர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது😁..................................... @வாத்தியார்
    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
    • வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.  
    • நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை   க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது   க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.