Jump to content

மஹிந்த ஓர் பாசிசவாதி – விக்ரபாகு கருணாரட்ன


Recommended Posts

மஹிந்த ஓர் பாசிசவாதி – விக்ரபாகு கருணாரட்ன




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஓர் பாசிசவாதி என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சி பீடம் ஏறினால் நாட்டில் பாசிசவாத ஆட்சியே நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இடதுசாரித் தலைவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர மற்றும் திஸ்ஸ வித்தாரண போன்றவர்கள் பாசிசவாதிகளின் காலணிகளை கழுவி வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


நாட்டில் மீண்டும் ஒரு தடவை ஜனநாயகம் சீர்குலைந்து போவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிப்பார் என கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வடக்கில் காணப்படும் பெருமளவு காணிகள் தனியாருக்கு சொந்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.


தனியார் காணில் படையினர் ஹோட்டல்கள் விடுதிகள் அமைத்துள்ளதாகவும் அவற்றின் மெய்யான உரிமை தனியாருக்கே உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனவே உரிமையாளர்கள் விரும்பி யாருக்கேனும் காணிகளை விற்பனை செய்தால் அதனை தடுக்க முடியாது எனவும், அரசாங்கத்திற்கு காணிகளை விற்பனை செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அவ்வாறு அரசாங்கம் காணி விற்பனை செய்ய வேண்டுமாயின் அதற்கு பாராளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தினர் நிர்மானித்த ஹோட்டல்களை அரசாங்கம் புலி ஆதரவாளர்களுக்கு விற்பனை செய்வதாக பொதுபல சேனா சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121569/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.