Jump to content

மாநாகன் இனமணி 120


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாநாகன் இனமணி 120

https://app.box.com/s/rwnjfkj50s4aiujinqne292emenhg5xy

 

உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி

பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து

அறிவு அழிந்து

வறம் தலை உலகத்து அறம்பாடு சிறக்க (கிறங்க)

சுடர் வழக்கு அற்றுத்

தடுமாறு காலை

ஓர் இள வள ஞாயிறு

தோன்றிய தென்ன நீயோ தோன்றினை!

நின் அடி பணிந்தேன்.....

.......அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை

ஓர் திறப்படற்கு ஏதுவா சேயிழை

செய்தேன்!

(மணிமேகலை - மந்திரம் கொடுத்த காதை-7-9)

பொருள்:-
தமிழர்கள் அறிவு இழந்தால் உலக உயிர்கள் எல்லாம் உணர்வு இழக்கும். தமிழர்களின் அறிவு புதுப்பிக்கப்பட்டால் உலகம் பயன் பெறும். தமிழைத் தூய்மைப்படுத்துவதன் மூலமாகவும், அதன் தூய்மையைக் காப்பாற்றுவதன் மூலமாகவும் கழி பேராண்மைக் கடன் இறுக்கும் பெரும் போராளிகளே அவ்வப்போது உயிர் ஈகம் செய்து தமிழர் மரபறிவை மீட்டுள்ளனர். மணிமேகலை துறவு, முத்துக்குமாரின் உயிர் ஈகம் போன்றவை அத்தகைய திருப்பு முனையை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளே. இயற்கை தன்னைத் தமிழாகச் செதுக்கிக் கொண்டு அவ்வப்போது புதிதாக்கிக் கொள்கிறது.

...மையறு தொல்சீர் உலகம் அறியாமை

நெய் இலாப் பால் சோற்றின் நேர் (நாலடியார் 34-3-34)

பால் சோற்றில் நெய்த்தன்மை இருப்பது இயல்பானது போலவே தமிழர் உணர்வில் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய புரிதல் இருப்பதும் இயல்பானதே! இல்லை என்று தமிழர் கூறினால் அது அறியாமை. இல்லை என்று தமிழர் அல்லாதார் கூறினால் அது மறைப்பு முயற்சி. புரியும்படி விளக்கிச் சொல்ல வேண்டியது தமிழறிஞர்களின் கடமை.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின் உயர் ஆய்வுக்கான மரபு அறிவுச் செல்வத்தை தமிழர்கள் முன் 120 மாநாகன் இனமாணிகள் வழியாகத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு அர்ப்பணித்திருக்கிறோம். அது பற்றிய கருத்தாக்கங்களை உலக தமிழர்களிடமிருந்து, அறிஞர்களிடமிருந்து, வல்லுநர்களிடமிருந்து, பாமரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இதுவரை இது பற்றி எவரும் கருத்துக்களை முன் வைக்க அஞ்சுகிறார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே தற்காலிகமாக இதனை நாங்கள் வெளியிடுவதை மௌனிக்கிறோம். 120 இதழ்களையும் ஒரு நூலாக கோர்க்க ஆசைப்படுகிறோம். மற்றவை உங்கள் பின்னூட்டங்கள் கண்ட பின். அன்புடன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.