Jump to content

விஜய் டிவியில் டிடி இல்லை: வெளியேறினாரா... வெளியேற்றப்பட்டரா?


Recommended Posts

விஜய் டிவியில் டிடி இல்லை: வெளியேறினாரா... வெளியேற்றப்பட்டரா?

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

dhivya%20dharshini.jpg

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்டவர் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் காபி வித் டிடி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், அண்மையில் விஜய் தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியது. இந்த விழாவில் கோபிநாத், திவ்யதர்ஷினி ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்தனர். அப்போது, திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை சொதப்பியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், திவ்யதர்ஷினியை நீக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்ததாகவும், இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டிடி, அதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், டிடிக்கும் இடையே எந்த மனவருத்தமும் இல்லை என்றும், டிடி கர்ப்பமாக இருப்பதால்தான் அவர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=48348

Link to comment
Share on other sites

கனடா மற்றும் ஏனைய நாடுகளை சேர்ந்த சுப்பர் சிங்கர் பாடகர்களும், பாடகிகளும் கூட காரணங்கள் எதுவும் சொல்லாமல் நிகழ்ச்சியால் நீக்கப்பட்டுள்ளார்கள்.(இலண்டனை சேர்ந்த ஒருவரை தவிர), ஈழதமிழர்களை விஜய் தொலைக்காட்சி வேண்டுமென்றே ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிடி அதிக கதை கூடிய பெண் தானே. அதற்காக வேலையை விட்டே எடுக்க வேண்டும் என்று சொல்ல இல்லை..டிடியும் கொஞ்சம் இடம்,பொருள் ,ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பதை மறந்து விடுவார்.


கனேடிய,ஐரோப்பிய பாடகர்களையும்  விரைவில் நிறுத்திக் கொள்வார்கள் என்பது ஜெசிக்காவிற்கு விழுந்த வாக்குகளிலிருந்து புரிந்து கொள்ளப்பட்டது..நிறைய உண்மைகள் அங்கே மறைக்கப்படுகிறது என்பதும் யாவரும் அறிந்தது தானே..இப்படியே விட்டால் ஈழத்தமிழர்கள் படையெடுக்கத் தொடங்கி விடுவார்கள் என்ற எண்ணப்பாடாகக் கூட இருக்கலாம்..அது மட்டுமல்ல பிரதான நடுவர்களாக ஒரு குறிப்பிட்ட சிலரே  இருக்கிறார்கள்.அவர்களை முதலில் நீக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் .கனடா ,ஜெர்மன் உறவுகள் இரண்டாம் கட்டம் தாண்டி போய்கொண்டிருக்கின்றார்கள் .எங்கிருந்து யாழுக்கு இப்படியான செய்திகள் வருகின்றதோ தெரியாது .

டி டி பற்றி சொல்லதேவையில்லை ,டி டி பற்றிய இந்த செய்தியும் அவர்களின் ஒரு வியாபர யுத்தி  என்றே நம்புகின்றேன் .அவர் திரும்ப விஜே டிவிக்கு வருவார் பொறுத்திருந்து பாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,

நீங்கள் சொல்வது வியாபாரரீதியில் தவறானது. விஐய் TV யில் எந்தளவுக்கு நேரடி ஒளிபரப்பை பார்கிறார்களோ, அதிலும் பார்க்க அதிகளவில் யூரியூப்பில் மக்கள் பார்கிறார்கள்.

விளம்பர வருமானம் அதிகமாக வருவதால், தங்களது காப்பிரைட்டை உறுதிப்படுத்தி, வேறுயாரும் தமது நிகழ்வுகளை பதிவேற்றம் செய்யாமல் பார்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த வருமானம் குறித்த விளக்கம் இல்லாததால், யார், யாரோ, பதிவு எற்ற, அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பார்வையாளர் சிதறியதால், விளம்பர வருமானமும் இருக்கவில்லை.

சீமானின் பேச்சுகள் இடையே கூட விளம்பரங்கள் அதிகளவில் எட்டிப் பார்க்கையில், விஜய் எவ்வளவு காசு பார்க்கும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தவகையில், கனடா, லண்டன் காரர்களின் பங்குபற்றுதலும் பார்வையாளரும் வருமான ரீதியில் அவர்களுக்கு முக்கியம்.

யூரியூப் விளம்பர வருமானம், பார்ப்பவர்கள் அதிகரித்தால், தங்கச்சுரங்கம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா முழுகாம இருக்கிறா எண்டு நான் நினைக்கிறன் .....  happy0199.gif

Link to comment
Share on other sites

விஜய் டிவியில இருக்கீங்களா? இல்லையா?... சொல்லுங்க டிடி சொல்லுங்க...
 
l வாய் ஓயாத பேச்சு... அரைமணி நேர நிகழ்ச்சியில் 20 நிமிடம் தானே பேசி சிறப்பு விருந்தினரை பத்து நிமிடம் பேச வைக்கும் பெருமைக்குரிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. இதை நாங்க சொல்லலை. ஓரு காதல் கண்மணி பேட்டியின் போது பங்கேற்ற மணிரத்னம், வைரமுத்து ஆகியோரும் இதையே டிடியிடம் நேரடியாக சொன்னார்கள். விஜய் டிவியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடியை கடந்த மே மாதம் முதலே டிவி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை.
 
விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை சொதப்பலாக தொகுத்து வழங்கியதால் கல்தா கொடுக்கப்பட்டு விட்டதாகவும், இல்லை இல்லை அவர் தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதைவிட முக்கியமாக டிடி கர்ப்பமாக இருப்பதால் சில காலம் ஓய்வில் இருப்பதாகவும் செய்தி வெளியானது. என்னதான் செய்கிறார் டிடி என்பதற்காக அவரை கடந்த வாரம் தொடர்பு கொண்டோம்
 
டிடி: ஹலோ யார் பேசறீங்க?
 
நாம்: டிடி எப்படி இருக்கீங்க? டிவில ஆளை பார்க்க முடியலையே?
 
டிடி: எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.. அதான் ரெஸ்ட்ல இருக்கேன்.
 
நாம்: சின்னதா பேட்டி இப்போ எடுத்துக்கலாமா?
 
டிடி: இப்போதைக்கு எதுவும் சொல்றதுக்கு இல்லை... நானே கூப்பிடுறேனே... பை...
 
இது போன வாரம்..... இந்த வாரம் டிடியின் ராஜினாமா செய்தி வெளியான பின்னர் நாம் மீண்டும் டிடியை தொடர்பு கொண்டோம்.
 
டிடி: நான் வெளியில இருக்கேன்... இப்போதைக்கு பேச முடியாது அப்புறம் கூப்பிடவா?
 
நாம்: உங்களைப் பற்றி ஒரு செய்தி வந்திருக்கே... விஜய் டிவியில இருந்து நீங்க ரிசைன் பண்ணிட்டதா? ... ( நாம் முடிக்கவேயில்லை)
 
டிடி: அப்படியா?... நான் அதை படிக்கவேயில்லையே.... படிச்சிட்டு சொல்றேனே... அப்புறம் கூப்பிடறேன்... பை.
 
என்று கூறி இணைப்பை துண்டித்த டிடி இதுவரைக்கும் கூப்பிடவேயில்லை. டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் கடைதிறப்பு, விளம்பரங்களில் டிடி நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
 
டிடி தற்போது வெளியூர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜினாமா செய்து விட்டதாக வெளியாகும் செய்தி வெறும் வதந்தி என்று டிடி கூறியுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. நீங்க விஜய் டிவியில வருவீங்களா மாட்டீங்களா? சொல்லுங்க டிடி சொல்லுங்க.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vijay-tv-vj-dhivyadarshini-quit-or-not-anchor-post-229573.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ரீ வி லண்டனை சேர்ந்த ஒருவருக்கு

விற்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது

ஆ..

வெளியில சொல்லிப் போட்டங்களா?

ஒருத்தருக்கும் மூச்சு விடக் கூடாது என்று சொல்லி இருந்தேனே...:o

Link to comment
Share on other sites

தொடரும் குழப்பம்... டிடியை தக்க வைக்க மெனக்கெடுகிறது விஜய் டிவி?
 
 
  சென்னை: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. டிடி என்றால் தூர்தர்ஷன் என்ற நிலையை மாற்றி டிடி என்றால் திவ்யதர்ஷினி என்று மக்களின் மனதில் பதியவைத்த பெருமை இவரையே சேரும். விஜய் டிவி என்றாலே திவ்யதர்ஷினி தான் பிரபலமான தொகுப்பாளர் என்று மக்களின் மனதில் பதிய வைத்து, தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.
 
 
இவர் நடத்தி வந்த காபி வித் டிடி நிகழ்ச்சி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி. சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர்ந்து நிகழ்ச்சியை, கலகலப்பாக இவர் நடத்திச் சென்றதில் விஜய் டிவியின் டிஆர்பி எகிறியது. 
 
இவ்வளவு நல்ல தொகுப்பாளரை சமீப காலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவியில் காண முடியவில்லை, பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டாலும் குழப்பமான பதிலையே தருகின்றார் டிடி. விஜய் டிவியில் கேள்வி கேட்டாலும் எந்த ஒரு பதிலையும் சொல்வதில்லை, இதனால் விஜய் டிவியில் டிடி இருக்கிறாரா இல்லையா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
 
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் விஜய் டிவியில் டிடி இருப்பது போல காட்டிக் கொள்கிறது விஜய் டிவி. நேற்று இரவு காபி வித் டிடி நிகழ்ச்சியில் டிடி தொகுத்து வழங்கிய பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, அவர் இங்குதான் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறது விஜய் டிவி.
 
இதற்கிடையில் டிடியின் காலில் ஆக்ஸிடென்ட் ஏற்பட்டு இருக்கிறது, அதனால் அவர் ஓய்வில் இருக்கிறார் என்று ஒரு தகவலும், டிடி தரப்பில் இருந்து கசிந்துள்ளது. இரண்டு தரப்பினருமே தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடி வருகின்றனர், விரைவில் உண்மை வெளியாகிறதா என்று பார்க்கலாம்.

Read more at: http://tamil.filmibeat.com/television/vijay-television-anchor-divyadharshini-working-or-not-035385.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சந்திரமுகி படபிடிப்பிலை சிம்ரன் இடையிலை விட்டுட்டு போனத்துக்கும் உந்த மீடியாக்கள் கோணல் மாணலாய்த்தான் எழுதித்தள்ளினது.....
கடைசியிலை என்ன நடந்த்தது?????? சிம்ரனுக்கும் குவா..குவா :)

Link to comment
Share on other sites

 

ஆ..

வெளியில சொல்லிப் போட்டங்களா?

ஒருத்தருக்கும் மூச்சு விடக் கூடாது என்று சொல்லி இருந்தேனே...:o

அட அது நீங்கள்தானா ?

அப்போ கோடிக்கணக்காக பவுண்ஸ்

கையில புரளுமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரமுகி படபிடிப்பிலை சிம்ரன் இடையிலை விட்டுட்டு போனத்துக்கும் உந்த மீடியாக்கள் கோணல் மாணலாய்த்தான் எழுதித்தள்ளினது.....
கடைசியிலை என்ன நடந்த்தது?????? சிம்ரனுக்கும் குவா..குவா :)

பழைய...  முக்கிய, செய்திகளை எல்லாம்.... 
விரல் நுனியில் வைத்திருக்கும், கு.சா. அண்ணரின் ஞாபக சக்தியை மெச்சுகின்றோம்.:rolleyes::lol:

Link to comment
Share on other sites

சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன் .கனடா ,ஜெர்மன் உறவுகள் இரண்டாம் கட்டம் தாண்டி போய்கொண்டிருக்கின்றார்கள் .எங்கிருந்து யாழுக்கு இப்படியான செய்திகள் வருகின்றதோ தெரியாது .

டி டி பற்றி சொல்லதேவையில்லை ,டி டி பற்றிய இந்த செய்தியும் அவர்களின் ஒரு வியாபர யுத்தி  என்றே நம்புகின்றேன் .அவர் திரும்ப விஜே டிவிக்கு வருவார் பொறுத்திருந்து பாருங்கள் .

 

ரொம்ப நன்றி சார்- டிடி நெகிழ்ச்சி கருத்து

ரொம்ப நன்றி சார்- டிடி நெகிழ்ச்சி கருத்து - Cineulagam

சமீப காலமாக பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் திவ்யதர்ஷினியை பற்றி பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது, இவர் பணியாற்றிய தொலைக்காட்சி இவரின் நிகழ்ச்சி நடத்தும் முறை பிடிக்காமல் நீக்கிவிட்டதாக கூறப்பட்டது.

மேலும், அதெல்லாம் இல்லை இவர் கர்ப்பமாக இருக்கின்றார் எனவும் கூறிவந்த நிலையில், இதற்கெல்லாம் தற்போது ஒரு முற்று புள்ளி வைத்துள்ளார் டிடி.

இவர் மீண்டும் அதே தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த வாய்ப்பு வழங்கிய தொலைக்காட்சி உரிமையாளருக்கு நன்றி என டுவிட்டரில் கூறியுள்ளார்.

http://www.cineulagam.com/tamil/news-tamil/celebrities/117184/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அது நீங்கள்தானா ?

அப்போ கோடிக்கணக்காக பவுண்ஸ்

கையில புரளுமே.

 

கையில 5 சேம் 10 சேம் தான் பிரளுது. மிச்சமெல்லாம் சுவிஸ் பாங்கில.:)

நம்ம அக்கௌன்ட் நிரம்பி வழிஞ்சு, அடுத்த அக்கௌன்ட்கும் பாயுதாம்.:unsure:

ஆறு மாதத்துக்கு ஒருக்கா போய், செக்கை கொடுத்து காசை எடுத்து, எண்ணிப் போட்டு, திருப்பி போட்டு விட்டு வருவேன். அவயலை நம்ப ஏலாது தானே.:o

அந்த நேரம் தான் கையில காசு பிரளும். :rolleyes:

Link to comment
Share on other sites

வாவ் வாவ் வாவ்..........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிடியின், குரல் கீச்சுக் குரலாகவும், அவசரக் குடுக்கையாகவும், மூச்சு விடாமல் பேசுவதால்... இவரின் பேச்சு எனக்குப் பிடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே டிடியை பார்த்தே போறடிக்குது. டிடி போய் இன்னும் இளம் ஆக்கள் வாற நேரம் இப்ப. டிடி போகமாட்டன் என்றாலும் அடிச்சு விரட்டி விடுங்க பிளீஸ். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற்குறிப்பு: நாங்க விஜய் ரி வி.. டிடி ரகசிகர்கள்.. விசிறிகள் கிடையாது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே டிடியை பார்த்தே போறடிக்குது. டிடி போய் இன்னும் இளம் ஆக்கள் வாற நேரம் இப்ப. டிடி போகமாட்டன் என்றாலும் அடிச்சு விரட்டி விடுங்க பிளீஸ். :lol:

அண்ணை.... டிடிக்கு அதிக வயசில்லை. பார்த்து  ரசிக்கிற வயசு தான்.
குரல் தான்.... நமக்கு, காதுக்குள்ளை, "சில்வண்டு" கத்தினமாதிரி இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிடிக்கு கல்யாணம் ஆகிடிச்சு. எனி ரசிக்கிறது தப்பு. அதனால கெட் அவுட் சொல்லிடனும். நடிகைகளுக்கு கல்யாணம் ஆனால் என்ன சட்டமோ அதுதான் அங்கருக்கும். :lol:

Link to comment
Share on other sites

 

ரொம்ப நன்றி சார்- டிடி நெகிழ்ச்சி கருத்து

ரொம்ப நன்றி சார்- டிடி நெகிழ்ச்சி கருத்து - Cineulagam

சமீப காலமாக பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் திவ்யதர்ஷினியை பற்றி பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது, இவர் பணியாற்றிய தொலைக்காட்சி இவரின் நிகழ்ச்சி நடத்தும் முறை பிடிக்காமல் நீக்கிவிட்டதாக கூறப்பட்டது.

மேலும், அதெல்லாம் இல்லை இவர் கர்ப்பமாக இருக்கின்றார் எனவும் கூறிவந்த நிலையில், இதற்கெல்லாம் தற்போது ஒரு முற்று புள்ளி வைத்துள்ளார் டிடி.

இவர் மீண்டும் அதே தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த வாய்ப்பு வழங்கிய தொலைக்காட்சி உரிமையாளருக்கு நன்றி என டுவிட்டரில் கூறியுள்ளார்.

http://www.cineulagam.com/tamil/news-tamil/celebrities/117184/ 

அரசியலிலேயே முன் கூட்டி நடக்கப்போவதை அறியும் எமக்கு உதெல்லாம் ஜுஜுப்பி 

Link to comment
Share on other sites

அரசியலிலேயே முன் கூட்டி நடக்கப்போவதை அறியும் எமக்கு உதெல்லாம் ஜுஜுப்பி 

ஆகா கிளம்பிட்டாங்கையா, இந்தவளத்தால திசையை திருப்பி விடுவமெண்டா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.